போதிதர்மர் - இன்னொரு கௌதமபுத்தர்

(Tamil Nool / Book Vimarsanam)

போதிதர்மர் - இன்னொரு கௌதமபுத்தர்

போதிதர்மர் - இன்னொரு கௌதமபுத்தர் விமர்சனம். Tamil Books Review
ஜென்தத்துவச் சிந்தனை மேதை.
போதிதர்மர்
ஓஷோ
தமிழில் சுவாமி சியாமனந்த்.

உறுத்துகிறது.

வெகு சில ஆண்டுகளாகப் புத்தகங்களுக்கு மதிப்புரை எழுதுவது என்பது குறிப்பிட்ட அந்தப் புத்தக்கத்தைப் படித்து விட்டேன் ,எனக்குப் புரிந்து விட்டது என்ற லேசான அலட்டலின் உதிர் இலைகளாய் மனதின் உள்ளே ஒரு தீராக் கேள்வி நிழலாடிக்கொண்டே இருந்தது . படிப்பதைக் கருத்துச்சொல்ல மீண்டும் வாசிப்பதுவும் ,குறிப்பெடுப்பதும் பல நல்ல கருத்துக்கள் ஆழப்பதிந்து அது பேசும்போது மேலெழுந்துப் பேச்சில் ஒரு கூர்மைப் பலப்படுவதுவும் இதன் பலனாய் புரிந்து கொள்ள முடிந்தது என்னவோ உண்மைதான் .ஆனால் முட்டாள் தனமாய் ஒரு திரைப்படத்தைப் பார்த்துவிட்டு அதற்குப் பின்னால் இருக்கும் ஒரு உழைப்பைக்கூடப் புரிந்து கொள்ள முயலாமல் இது ஒரு வாரம் கூடத் தாங்காது என்று வாட்ஸப்பில் தியேட்டர் ஸ்டாண்டிலிருந்து வண்டியை எடுக்கும் முன் பகிர்ந்து கொள்வது போல இது கேளித்தனமானதல்ல புத்தகம் படித்துக் கருத்துச் சொல்வது .

ஒவ்வொரு புத்தகம் தெரிந்த மொழியில் பேசினாலும் தெரியாத விசயங்களில் அதன் ஜீவனும் எழுதுபவனின் ஆளுமையை ஒளித்து வைத்து இருக்கிறது என்பது மெல்ல புரிந்து கொள்ள வைத்து இருக்கிறது . அதிலும் ஆன்மீகப் புத்தகங்கள் படித்து அதை விட ஒரு படி மேலே நின்று யோசித்து எழுதுவது இன்னும் பழக்கப்பட வேண்டும் .அப்படி ஆன்மீகத்தில் நின்று அனுபவித்து எழுதப்படாத புத்தங்களைக் கூடப் பொறுத்துக்கொள்ளலாம் அதற்கு விமர்சனம் எழுதுவது அது புரிந்துவிட்டது போல நடிப்பது உறுத்துகிறது . அப்படி ஒரு மன உறுத்தலுடன்தான் இந்தப் புத்தக்கமும் ஆரம்பிக்கிறது...

இன்னொரு கௌதமபுத்தர் !

போதிதர்மர் இந்தப் பெயரைக் கேட்டவுடன் தமிழ் சமூகத்தின் அடையாளமாக இருப்பது இப்போதைக்கு ஏழாம் அறிவு சடைமுடித் தாடி சூர்யா மட்டுமே.ஆனால் கூகுள் காட்டும் போதிதர்மர் மிக முரட்டுத்தனமான முகத்துடன் தெரிகிறார்.ஆனால் ஓஷோ காஞ்சிபுரத்தில் பல்லவ மன்னனின் மூன்றாம் மகனாகப் பிறந்த போதி தர்மன் பல்லவ இளவரசன்.அவர் அழகியவனாக இருக்க வேண்டும் என்கிறார் .அதனால் நாம் நமக்குத்தெரிந்த சூர்யா முகத்தையே போதிதர்மருக்கு விட்டுக்கொடுத்து விட்டு அடுத்தக் கட்டத்துக் நகர்வோம்.

புத்தர் மறைந்த 600 ஆண்டுகளுக்குப் பின் சீனாவில் முப்பதாயிரம் புத்தக்கோவில்கள் தோன்றிப் புத்தமதம் செழித்து நின்றது .மொத்த அன்றைய மக்கள் தொகையில் ஐந்து சதவிகித மக்கள் அதாவது இரண்டு லட்சம் புத்த துறவிகள் அங்கு இருந்தனர் .ஆனால் அதில் ஒருவர்கூட மெய்ஞானம் பெற்றவரில்லை .இதுதான் அங்குப் பிரச்சனை.அதைத்தீர்க்கவே போதிதர்மருடைய குருவான பெண் மெய்ஞானிப் பிரயக்தாராஅவரைச் சீனாவுக்கு இன்னொரு கௌளதமபுத்தர் தேவை என்று அனுப்பி வைத்து இருக்கிறார்.

ஓஷோவின் போராட்டம் !

அங்குப் போன போதிதர்மர் சுமார் முப்பது வருடம் கற்றுக்கொள்ளவேண்டிய சீன மொழியை மூன்று வருடத்திற்குள் கற்றுத்தெளிந்து அந்த மொழியில் புத்தரின் சூத்திரங்கள் வடிவ போதனைகளை விளக்கி மக்களை வழிப்படுத்த முயன்றார் . அவ்வாறு அவர் போதித்த வார்த்தைகளை ,விளக்கங்களை அவரின் சீடர்களில் நாழ்வரில் ஒருவரால் எழுதப்பட்டு இருக்க வேண்டும் என்கிறார் ஓஷோ.ஆனால் அப்படி எழுதிய அந்தச் சீடர் ஒரு ஞானமடையாதவர் .காரணம் போதிதர்மரால் ஒத்துக்கொள்ளப்பட்ட அவர் சீடர்களில் ஒருவர் ஹூய்கோ மட்டும்தான் மற்ற மூவர்களில் யாரோ ஒருவரால்தான், இந்தியாவுக்குப் போதிதர்மர் திரும்ப நினைத்த கடசி நாள் இரவு தங்கியபோது உணவில் விசம் வைத்துக் கொல்லப்பட்டார்.அப்படிபட்ட மெய்ஞானம் பெறாத ஒரு சீடனின் மூன்று போதனைகள் தொகுப்புகளின் குறிப்புகளில் போதிதர்மர் சொல்லாத வார்தைகள் கலந்து இருப்பதாக ஓஷோ அறுதியிட்டுச் சொல்கிறார். இது ஒரு முதல் கோணல் .

இரண்டாவது புத்தர் தன் காலத்தில் அவர் வேதாந்திகள் , பண்டிதர்கள் ,பிரமாணர்களை,மதபோதகர்களை மக்களைச் சுரண்டிப் பிழைப்பவர்கள் என்று ஒதுக்கியதன் விளைவால் புத்தரின் மறைவுக்குப் பின் அதுவரை ஒளிந்து இருந்தவர்களால் இந்தச் சூத்திரங்களின் போதனைகள் மாற்றப்பட்டு இருக்கலாம் என்றும் சந்தேகப்படுகிறார்.இது மஹாயானம் பின்பற்றிய சீனாவில் மட்டுமல்ல ஹினயாணம் பின்பற்றிய இலங்கையிலும் இது நடந்து இருக்கிறது என்கிறார் .இது புத்தரின் போதனைக்குக் கிடைத்த இரண்டாவது கோணல் அல்லது சோதனை .

மூன்றாவது முக்கியமான கோணல் மஹாயானம், ஹீனயானம் இரண்டு பெரும்பிரிவில் போதிதர்மர் மஹாயானத்தை மட்டுமே போதித்தார் .ஹீனயான வழிகளையும் அதன் மூலம் மெய்ஞானம் பெறுபவர்களை வெறுத்தார் .என்ன போதிதர்மர் ஒரு மெய்ஞானியாச்சே எப்படிக் கோபப்பட்டார் .கோபம் மெய்ஞானியின் குணமல்லவே என்று சந்தேகப்படலாம் .ஆனால் அப்படிச் சில சறுக்கல்கள்தான் இந்தப்புத்தக்கத்தின் முக்கிய இடங்கள். அதாவது போதிதர்மரின் வார்த்தைகள் தாய்மொழியில் போதிக்கப்பட்டவையல்ல என்பதுவும் ,மெய்ஞானம் பெறாத ஒரு சீடனின் குறிப்புகள் என்பதுவும், புத்தரின் மறைவுக்குப் பின் அந்தந்த புத்தரல் புறக்கணிக்கப்பட்ட மக்களின் இடைச்செருகளாலும் கடைசியாக ஹீனயான மெய்ஞானிகள் மீதானப் போதிதர்மரின் கோபம் இப்படிப் பல விசயங்களுக்குள் புத்தரின் சூத்திரங்களில் போதிதர்மரின் சரியான விளக்கங்களைத் தேடும் ஓஷோவின் முயற்சியே இந்த முழுப்புத்தக்கத்தின் 705 (720) பக்கங்களின் போராட்டம் என்பதே சரியான வார்த்தை.


ஓஷோவின் பார்வை

இதுதான் ஓஷோவின் முப்பதி ஐந்து வருட உரைகளால் எழுதப்பட்டு வரும் நூல்களை வாசிக்கும் போது ஏற்படும் சவால் .அதாவது ஓஷோவின் பார்வை பேசும் விசயத்தின் அஸ்திவாரத்தை ஆழமாக ஊடுறுவும் பார்வை .அங்கு எதுவும் தப்ப முடியாது .அவர் எதையும் கொச்சைப்படுத்துவதும் இல்லை நியாப்படுத்தவும் இல்லை.இத்தனைக்கும் போதிதர்மரை ஓஷோவுக்கு மிகவும் பிடிக்கும் .அவரின் வார்த்தைகளை ஓஷோ ரசிக்கிறார் ,ஆராதிக்கிறார்.அதிலும் புத்தரை விடவும் ஒரு படி மேலே போதிதர்மரை விரும்புகிறார் ஓஷோ .காரணம் புத்தர் அவர் காலத்தில் (நேபாளம் லும்பினியில் உள்ள மாயாதேவி கோவில் யுனெஸ்கோவால் உலகப் பாரம்பரிய இடமாக அறிவிக்கப்பட்டுள்ள அகழ்வாராய்ச்சிப் படி அப்போது செங்கற்களால் கட்டப்பட்ட புத்த விஹாரைகளின் காலத்தைக் கணிக்கும் போது) கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்பதாக அறிகிறோம் .அந்தங்காலத்தில் வேதங்கள் ஆட்சி புரிந்த காலங்கள் அப்போது வேதங்களைக் குப்பை என்று வர்ணித்தவர் புத்தர்.அது மட்டுமல்ல கடவுள் அவதாரங்களை முற்றிலுமாக ஒதுக்கியவர் புத்தர்.எல்லா கோவில்கள் , சிலைகள் ,வேதங்கள் மக்களைச் சுரண்டும் வஞ்சகம் நிறைந்த குருக்களால் உருவாக்கப்பட்டவை என்று புறம் தள்ளியவர் அவர்.ஆனால் அப்படிப்பட்ட புத்தர் பெண்களுக்குத் தீட்சை கொடுக்கத் தயங்கினார் .ஆனால் போதிதர்மரோ பிரயக்தாரா என்ற பெண் மெய்ஞானியால் தீட்சைபெற்றுப் பெண்மையை முன்னிறுத்துவதன் மூலம் ஓஷோ மனதைப் புத்தரை விடப் போதிதர்மர் ஒரு படி மேலே நின்றார்.

இந்த நூல் முழுக்க முழுக்கப் போதிதர்மரின் காலமாகப் புரிந்து கொள்ளப்பட்ட கி.பி.475-550க்குள் அவர் புத்தரின் சூத்திரங்களின் விளக்கங்கள் மட்டுமே இந்த நூல் முழுதும் ஓஷோவின் கண்கள் வழியே நாம் பிராயாணிக்கிறோம் .பொதுவாகவே அவரின் நூல்களில் அவரின் சமகாலத்தில் நடந்த வரலாற்றுப் பதிவுகள் ,அரசியல் சூல்நிலைகள் பிரதிபலிக்கும்.அதனூடே அவரின் கதைகள் ,குலுங்க குலுங்க நம்மைச் சிரிப்பில் சிறைவைக்கும் அனுபவங்களுக்கு எப்போது பஞ்சம் இருப்பதில்லை .இது அல்லாமல் அந்த விசய்ங்களுக்கு ஊடே சொல்லும் ஆன்மீக விளக்கங்கள் மிக முக்கியமானவை .குறிப்பாக குரு என்பவர் யார் ? ஆசிரியர்,அத்யாபக்,உபாத்தியார்,ஆச்சாரியார் என்பவர்கள் பணி என்ன ? செயல்கள் எப்படிச் சுவர்க்கத்தையும் நரகத்தயும் உருவாக்குகிறது என்பதைப் பேசுவதோடு ,நீங்களும் புத்தர்தான் என்ற ஆன்மீக நிலைப்பாடு ஒவ்வொருவருக்கும் சாத்தியம் என்பதை மிக அழகாக விவரிக்கிறார் ஓஷோ.இதோடு சமஸ்கிருத மொழியின் மகத்துவம் மற்றும் முக்கியத்துவம் பற்றியும் ,தியானத்தின் அவசியம் ,புத்தரின் மூன்று உடல்களான 1.உருமற்ற உடல் 2. வெகுமதி உடல் 3. உண்மை உடல் விளக்கம் ஆன்மீகத்தில் வேதாத்ரியத்தின் 1. Physical Body - பால் உணர்வு சக்தித் திணிவு மையம் 2. Astral Body - உயிர் துகளின் திணிவு மையம் 3. Bio Magnetic Body - ஜீவகாந்த ஆற்றலின் திணிவு மையம் பற்றி வெகு அருகில் நின்று பேசுகிறது .

சேர்த்தவர் : krishnamoorthys
நாள் : 11-Oct-16, 7:05 pm

போதிதர்மர் - இன்னொரு கௌதமபுத்தர் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே