நோய் நாடி நோய் முதல் நாடி -உணவு ஓர் உயிர்வேதியியல் கண்ணோட்டம்
(Tamil Nool / Book Vimarsanam)
நோய் நாடி நோய் முதல் நாடி -உணவு ஓர் உயிர்வேதியியல் கண்ணோட்டம் விமர்சனம். Tamil Books Review
‘
உணவே மருந்து’ என்ற ஹிப்போகிரேட்ஸ் கூற்றுக்கு ஏற்ப எவ்வகை உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொண்டால் நோயற்ற வாழ்வு வாழலாம் என்பதைத் துல்லியமாக தெரிந்துகொள்வது அவசியம். உணவுகளில் நமக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைத் தவிர பல்வேறு தாவரவேதியங்களும் (Phytochemicals) உள்ளன. இவ்வகை வேதியங்கள் பலநோய்களைக் கட்டுப்படுத்தும் அல்லது தடுக்கும் ஆற்றல் கொண்டது என்பதை உணர்ந்து அதற்கு ஏற்றமுறையில் உணவு வகைகளைத் தேர்ந்தெடுத்து உண்ணவேண்டும். இக்கருத்துக்களை முன்னிருத்தி இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. இப்புத்தகத்தைப் படிப்பதன் மூலம் நாம் உட்கொள்ளும் உணவுப்பொருட்களில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துகள் மற்றும் நோய் காக்கும் வேதியங்கள் பற்றி அறிந்து பயனடைவீர்கள் என்பது 'உள்ளங்கை நெல்லிக்கனி’. இப்புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்கள் 2016 வரை ஆய்வு ஏடுகளிலும், தொகுப்புக் கட்டுரைகளிலும் வெளி வந்த ஆராய்ச்சி முடிவுகளை வைத்து எழுதப்பட்டவையாகும். முடிந்தவரை மனிதர்கள், பிராணிகளை வைத்து நடத்திய ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டதாகும்.
வெளியீட்டார்கள் :நோஷன் பிரஸ் ,சென்னை
பக்கங்கள் :302
விலை :320 ரூபாய்