கருவாச்சி காவியம்
(Tamil Nool / Book Vimarsanam)
கருவாச்சி காவியம் விமர்சனம். Tamil Books Review
துளியும் நவநாகரிகக் கலப்படமற்ற ஆங்கில வாசனை அறியாதொரு குக்கிராமத்தில் தன் வாழ்நாள் முழுவதும் போராடும் ஓர் பெண் போராளியின் கதை.சாதாரணமாக விவசாய குடும்பத்தில் பிறந்த கருவாச்சி தன் வாழ்வில் சந்திக்கும் தடைகளையும் அவளின் மனோபலத்தையும் முழுமையாய் விவரிக்கும் காவியம்.
பெண்ணின் வலிகளையும் மீள்தலையும்
மிக அழகாய் சித்தரித்திருக்கிறார் கவிஞர்.வட்டார மொழி வழக்கில் எழுதப்பட்டிருக்கும் இந்நூல் பெண்மையினை பறைசாற்றும் அரும்பெரும் நூல்.கிராமத்து கைவைத்தியங்கள் குறிப்பிட்டிருத்தல் சிறப்பு.