priyamudanpriya - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  priyamudanpriya
இடம்:  karaikal
பிறந்த தேதி :  20-Mar-1991
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  09-Oct-2017
பார்த்தவர்கள்:  17
புள்ளி:  0

என்னைப் பற்றி...

வாய்ப்பிற்காக காத்திருக்கும் சராசரி சாமான்யன்

என் படைப்புகள்
priyamudanpriya செய்திகள்
priyamudanpriya - எண்ணம் (public)
09-Oct-2017 2:44 pm

                             அப்பா   சமிபத்திய நீயா நானாவில் ஒரு பெண்ணின் சீர் கேட்கும் விஷயம் மிகவும் பேசப்பட்டு வருகிறது....,அதை எல்லாம் பார்க்கும்போது என் தந்தையிடம் சில சீர்கலை எனக்கு செய்ய வேண்டும் என்று கேட்க மிகவும் ஆசையாய் உள்ளது.......
அப்பா...
உன் ஆயுள் முழுவதும் எனக்காய் உழைத்தாய்.அதற்கு கைமாறு செய்ய எனிடம் எதுவும் இல்லை.எனிடம் இருக்கும் என் ஆயுள் நாட்கலில் பத்து ஆண்டுகளையாவது உனக்கு பரிசளிக்க ஆசை.உன் ஆயுள் முழுதும், பிளஸ் என் ஆயுள் சேர்த்து நீ வாழவண்டும்.....வாழ்வேன் என்ற வாக்கினை எனக்கு சீராய் கொடு பா.....
நான் அம்மாவின் அப்பாவை போட்டோவில் மட்டும் பார்க்க எனக்கு ஆசி வழங்கப்பட்டது.ஆனால் என் குழந்தை தன் அம்மாவின் தந்தையாகிய உன் அன்பை பெற வேண்டும் ..அந்த வரத்தை சீராய் கொடு பா.....
ஆயிரம் பிரச்சினைகள்....கோடி மனிதர்கள் கூடி நின்றாலும் என் மனம் தேடுவது உன்னையும் ...விடும்மா...நான் பாத்துக்குறேன்...என்ற உன் வார்த்தையை மட்டும் தான்.அந்த மனஅமைதி எந்த கோவிலுக்கு சென்றும் எனக்கு கிடைத்ததில்லை....இனி கிடைக்க போவதும் இல்லை.அந்த அமைதி நிலையை நீ என் அருகிலிருந்து என் ஆயுள் முழுவதும் கொடு..இதையும் என் சீர் கணக்கில் சேர்த்துக்கொள்...
நீ கோவில்கள் அதிகம் செல்வாய்..ஆனால் பிராத்தனைகள் என்னவோ எனக்குத்தான்.உன் மனது அதை என் கணவனுக்கு சீராக கொடு பா..
கோவிலுக்கு போம்மா னு நீ சொல்லியும் அதிகம் நான் சென்றதே இல்லை.காரணம் கடவுளே அப்பா என்ற பெயரில் என்னுடன் இருப்பதால்...
எனக்கு காய்ச்சல் வந்தால் அதனை என்னை விட்டு விரட்டியடிக்கும் மருந்து கடைகளில் கிடைக்கும் மாத்திரையாக ஒருபோதும் இருந்ததில்லை..மாறாக என்னாச்சிமா? சாப்பிட்டு தூங்குமா...மழை பெஞ்சிதுல நனஞ்சியா....தலைய தொடைக்க சொன்னா கேட்டாதானே.....போன்ற பாசம் நிறைந்தஉன் வார்த்தைகளை தவிர..இந்த பாசம் எப்போதும் எனக்கு வேணும் ... அதை சீராய் கொடு பா.....
உன்னை அதிகம் காயப்படுத்திய பிறகும் என்னால் அழாமல் எனக்காக ,,,நான் நல்லா வாழணும்னு எனக்காக கடவுளிடம் அழுவாய்..எனக்காய் அழும் உன் கண்ணீர் வேண்டும். சீராய் கொடு பா.....
உன் சோர்ந்து போன முகங்கள் என் மனதை நாலு துண்டுகளாய் உளியின்றி உடைக்கும்..அப்போது ஏற்படும் வலி உடலின் அணைத்து பாகங்களையும் தாக்கும்...மரண வலி என்ன என்பதை அப்போது உணர்வேன்...அப்பா அந்த வலி வேண்டாம் என்னக்கு... நீ வாடாத முகத்துடன் வாழ வேண்டும்..வாழ்வேன் என்ற வாக்குறுதியை சீராய் கொடு பா.....
இப்போது நான் என்ன உனக்கு செய்தலும் ,நீ என்னக்கு செய்தவற்றின் முன் நிற்கக்கூட தகுதியற்றது...என் வாழ்வை வளமாக்க உன் வாழ்வை பாலைவனம் ஆக்கினையே...பாலைவன சப்பாத்திக்கள்ளியாய் உன்னை பலமுறை குத்தியும் நீ என்னக்கு எல்லாம் செய்தாய்....கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது ..உன் பாதம் கழுவ......      

மேலும்

கருத்துகள்

மேலே