எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
உன் பறந்த பார்வை சாரலில் என்னை நனைத்து சென்ற பெண்மானே இடைவெளி எதற்கு நெருங்கி வா மீண்டும் துள்ளி குதிக்க...
https://youtu.be/wCgjWgRENOYபள்ளிக்கூட நாட்கள்பள்ளிக்கூட நினைவுகள் பாடம் கற்ற தருணங்கள் பரவசம்... (சாந்தீஸ்வரி ராஜாங்கம்)
04-Jul-2022 10:08 am
https://youtu.be/wCgjWgRENOY
பள்ளிக்கூட நாட்கள்
பள்ளிக்கூட நினைவுகள்
பாடம் கற்ற தருணங்கள்
பரவசம் தரும் உணர்வுகள்
வார்த்தையில் அடங்காத வரிகளாக
வர்ணிக்க முடியாத வார்த்தைகளாக
வசந்த கால நிகழ்வுகளாக
என்றும் நம் உள்ளத்தில்
நீங்காத நினைவலைகளாக.....
சூரியனின் வெப்பம் மறந்து
சுடு மண்ணில் சுகம் கண்டோம்...
பகலவனின் பரிகாசத்தில்
பட்டாம்பூச்சியாய் பறந்திருந்தோம்...
பல வீட்டு சமபந்தி விருந்தில்
பகிர்ந்து உண்ணும் கலை அறிந்தோம்....
ஆலமரத்தின் விழுதுகள் ஏறி
ஆகாயம் தொட முயற்சி செய்தோம்...
ஒற்றை கீத்து மாங்காயில் ஒற்றுமையை உணர்த்திட்டோம்...
உயர்வு தாழ்வு நிலையற்று
உன்னதமாய் உறவு கொண்டோம்....
வகுப்பறையில் அரட்டையடித்து
வாத்தியாரை அலற வைத்தோம்...
வெட்கங்களை துறந்து விட்டு
வேடிக்கையாய் கதை படித்தோம்...
வான் மழையின் தூறல்களில்
வண்ண மயிலாய் வட்டமடித்தோம்....
புத்தகப்பையின் சுமை மறந்து புயல் காற்றுடன் பந்தயம் வைத்தோம்....
மணிக்கணக்கில் கதை பேசி
மனக்கணக்கை காற்றில் விட்டோம்....
சிரிப்பலைகளின் சிதறல்களில்
சித்தம் கலங்கி களித்திருந்தோம்....
பூவா தலையா போட்டுப்பார்த்து
புதிருக்கான விடை கண்டோம்...
பேனா தந்தால் பிரிவு வருமென
பேதமையில் திளைந்திருந்தோம்...
அலைபேசி இல்லா காலத்திலும்
ஆழ்மனதில் முகவரி சேமித்தோம்....
மதிப்பெண்களை மறந்து விட்டு
மகிழ்ச்சியாக கல்வி கற்றோம்...
பரீட்சைகளை தவற விட்டு
பகுத்தறிவில் தேர்ச்சி பெற்றோம்...
கற்பித்த ஆசிரியரை
காலத்திற்கும் நினைத்திருந்தோம்.....
உணர்வுகளின் உள்ளக்கிடங்காக...
நினைவுகளின் நெஞ்சக்குவியலாக...
மறக்க முடியாத மகிழ்வுப்பெட்டகமாக...
மரணம் வரை உயிர்த்துடிப்பாக...
நம் வாழ்வின் நீங்கா நினைவலைகளாக...
நம் பள்ளிக்கூட நாட்கள்......
-சாந்தீஸ்வரி ராஜாங்கம்
எல்லையில்லாக் கல்வி !!!-----------------------------------------கல்வி கரையில ...மன்னைத் தோண்டிமரம் வளர்த்த... (முத்துகிருஷ்ணன்கண்ணன்)
02-Jul-2022 3:50 pm
எல்லையில்லாக் கல்வி !!!
-----------------------------------------
கல்வி கரையில ...
மன்னைத் தோண்டி
மரம் வளர்த்த மனிதன்
விண்ணைத் தாண்டி
விந்தை செய்தது
கல்வியால் மட்டுமே !
காட்டுக்குள் விலங்கோடு
வாழ்ந்து வந்த மனிதன்
நாட்டை ஏற்படுத்தி
நலமுடன் வாழ்ந்தது
கல்வியால் மட்டுமே !
அரிவாள் ஏந்தி அதிக
கொலை செய்த மனிதன்
தன் அறிவால் நிறைய
சாதிக்கத் துணிந்தது
கல்வியால் மட்டுமே!
மண்ணிலும் கல்லிலும்
புதைந்து கிடந்த மனிதன்
எண்ணையும் எழுத்தையும்
ஏற்றி பிடித்தது
கல்வியால் மட்டுமே !
மனிதன்
வில்நயம் மறந்து
சொல்நயம் காத்தததும் ...
விஜ்ஞானம் மெய்ஞானம்
இரண்டும் தழைத்ததும் ...
மாக்களாய் இருந்தோர்
மக்களாய் ஆனதும் ..
சென்ற இடமெல்லாம்
சிறப்பு பெற்றதும்...
எல்லையில்லாத இந்த
கல்வியால் மட்டுமே !
கல்வி என்பது
கொடுப்பினும் குறையாதது !
எடுப்பினும் எதிர்க்காதது !
கெடுப்பினும் திரியாதது !
தடுப்பினும் நிற்காதது !
ஏனெனில்
கல்வி எல்லையே இல்லாதது !!!
மாமுகி
கருவாய் சுமந்துஉருவாய் தந்துஉறவாய் நிலைத்து-என்உலகமாய் ஆனவள். -அம்மா... (David Babu)
02-Jul-2022 12:22 am
நான் அழைத்துநீ பதில்அளிக்கும் நிலையிலேநாம் உறவு முறிந்திருக்கலாம்...!!!எப்போது வேண்டுமானாலும்உன்னிடம்... (Sathyapireyan)
29-Jun-2022 12:33 pm
நான் அழைத்து
நீ பதில்
அளிக்கும்
நிலையிலே
நாம் உறவு
முறிந்திருக்கலாம்...!!!
எப்போது வேண்டுமானாலும்
உன்னிடம்
என் சோகங்களை
சந்தோஷங்களை
வெற்றி தோல்விகளை
பகிர்ந்துகொள்ளலாம்
என்ற
நம்பிக்கையில்
வாழ்ந்திருப்பேன்....!!!!
அது காதலாகவோ
நட்பாகவோ
எதோ தெரிந்த ஒருவனாகவோ
எங்கேயோ பார்த்த ஒருவனாகவோ
ஓர் ஓரமாய்
உன் நினைவில்
நான்
இருந்திருப்பேன்...!!!
அந்தப் பெருங்கடல்
காதலினை
என் கவிதைத்துளிகளில்
உணர்த்தி
அப்பப்போது மகிழ்ந்திருப்பேன்...!!!
உன் தூரம் உணரும்
போதெல்லாம்
உயிர் துடிக்கும்
வலிகளை
உணராமல் இருந்திருப்பேன்...!!!
இதுதான்
இறுதி வார்த்தையென்று
அறியாமலே
கனத்த மொழிகளை
பரிசளித்தேன்...!!!
காதலை உணர்த்தும்
படலத்தில்
காயங்கள் தான்
அளித்தேன்...!!
மீண்டும் ஒருமுறை
வாய்க்கப்பெற்றால்
கவிதைகளில்
பதிலளிப்பேன்....!!!
மீண்டும் ஒருமுறை...!!
உண்மையான வரிகள் மனதின் எண்ணஓட்டங்கள் உங்களின் எழுத்தில் ...அருமை 04-Jul-2022 12:16 pm
பலமான கிளைகளில்மட்டும் பறவைகள் வந்துஅமர்ந்து செல்கின்றனபறவைகள் அறியும்இந்த கிளை... (Sathyapireyan)
29-Jun-2022 12:32 pm
பலமான கிளைகளில்
மட்டும்
பறவைகள் வந்து
அமர்ந்து செல்கின்றன
பறவைகள் அறியும்
இந்த கிளை தான்
பாரம் தாங்கும் என்று
கிளைகள் அறியும்
இந்த பறவை நீங்கிச்
செல்லுமென்று...!!!
இருப்பினும்
ஏதோ ஒரு பறவை
என்றோ ஒருநாள்
கிளையோடு கூடமைத்துக்
குடியேறுகின்றன...!!
அதற்காக
அந்த கிளைகள்
பறவைகளின் அசைவுகளுக்கெல்லாம்
தலையசைத்துக்
காத்திருக்கின்றன...!!
என் உலகம் ஒன்றும்அவ்வளவு பெரிதல்லஇதோஎன் காலடியில் கிடக்குதே ஒரு... (Sathyapireyan)
29-Jun-2022 12:30 pm
என் உலகம் ஒன்றும்
அவ்வளவு பெரிதல்ல
இதோ
என் காலடியில் கிடக்குதே
ஒரு சிறிய பந்தை போல
அவ்வளவு தான்
அதில்
எத்தனை இரவுகள்
எத்தனை பகல்கள்
கோடை வெயில்
மழைக் குளிர்
மார்கழி பனி
இடைக்கிடை
பூகம்பங்களும்
புயல்களும்
அத்தனையும்
இந்த சிறிய
கோளத்தில்....!!!
எல்லாவற்றையும்
ஏற்றுத்தான்
வாழ்கின்றேன்
எதையும்
மாற்ற எண்ணவில்லை
மாறும் என்ற
நம்பிக்கை மாத்திரம்
அடிமனதில் எங்கையோ
வேர் இட்டுள்ளது....!!!
மாறாவிட்டாலும்
நான் வாழ்ந்து முடித்துவிடுவேன்
இதில் என்ன
அவ்வளவு கஷ்டம்....!!
அப்பப்போது வரும்
கண்ணீர்களை மட்டும்
யாருக்கும் தெரியாமல்
தலையனைக்குள்
புதைத்துக் கொள்வேன்
அடுதவர் பரிதாபங்கள்
மாத்திரம்
என் மனதை ஏனோ
அவ்வளவு பாதிக்கும்...!!!!
கடந்ததை உடனுக்குடன்
மறக்கும்
திறமையெல்லாம்
ஏனோ எனக்கு
கிடைக்கப் பெறவில்லை
ஆனால்
காலங்கள் மறதி என்னும்
மருந்தளித்து
என்னை மெருகேற்றுகின்றது....!!!
ஆம்!
நான் நேற்றைக் காட்டிலும்
இன்று
பலத்துடன்தான் இருக்கின்றேன்
நேற்றைய பிரச்சனைகள்
எல்லாம்
இன்று என்னை அதிகளவில்
பாதிப்பதில்லை
அத்துடன்
பிரச்சனைகளை கண்டு
நான் அஞ்சுவதும் இல்லை...!!!
அதற்காக எதற்கும் துணிந்தவன்
என்று என்னை நானே
சொல்லிக் கொள்ளமாட்டேன்
எதையும்
சமாளிக்கும் சாமர்த்தியம்
மாத்திரம் எனக்கு
ஏதே கிடைக்கப்பெற்ற வரம்...!!!
இது போதுமே
இந்த சின்ன உலகில்
சிறகடுக்க...!!❤
SathyaPireyan VijayaMaran
பெண்ணே !வான்வெளிக்குச் நீ சென்றால் வான் நிலவும் வாய்பிளந்து... (இரா பிரமோத் முத்துராம்)
27-Jun-2022 12:39 am
பெண்ணே !
வான்வெளிக்குச்
நீ சென்றால்
வான் நிலவும்
வாய்பிளந்து பார்க்குமடி....
சுவிட் கடைக்கு
நீ
சென்றால்
சுவிட்களுக்கும்
எச்சில் ஊறுமடி....!
வெதுவெதுப்பான நீரில்
உன் கைப்பட்டால்
அது பனிக்கட்டியாக
உறையுமடி ....
கசப்பானது
உன் இதழ் பட்டாலும்
கற்கண்டாய் இனிக்குமடி...!
பூங்காவிற்குள்
நீ புகுந்தால்
பூக்களும்
உன் அழகில் மயங்குமடி....!
புயல் காற்று
உன்னை தீண்டினால்
பூங்காற்றாய் மாறி வீசும்படி... |
கடற்கரைக்கு
நீ சென்றால்
அலைகளும்
உனக்கு பாதபூஜை
செய்யுமடி......
வான் மழையில்
நீ நனைந்தால்
மழைக்கும்
குளிர் எடுக்குமடி .....!
பனித்துளி மீது
உன் பார்வை விழுந்தால்
அதற்கும் வேற்குமடி....
தென்றல்
உன்னை தீண்டினால்
அதற்கும்
காய்ச்சல் வருமடி..
சராசரி மனிதன்
நான் என்ன செய்வேன்..
எப்படி சொல்வேன்????
இரா. பிரமோத் முத்துராம்
குயில்கூவும் சோலையிலே கோதையவள் போகையிலே மயிலாடும் தாவணியும் மன்மதனைத்... (Selvam)
23-Jun-2022 11:42 am
குயில்கூவும் சோலையிலே
கோதையவள் போகையிலே
மயிலாடும் தாவணியும்
மன்மதனைத் தாக்குதடி
(குயில்கூவும்)
வானோர ஊஞ்சலிலே
வந்தமர்ந்த வெண்ணிலவு
மின்வண்ணத் தோகைவிரித்து
மேதினியில் ஆடியதே
(குயில்கூவும்)
செஞ்சாலி வயற்காடாய்
செம்போத்தும் கொஞ்சுகின்ற
கோலமயில் துணைகூவும்
கோதையவள் எழில்மேவும்
(குயில் கூவும்)
வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி
வஞ்சியவள் பேரழகை
செந்தமிழில் தூரிகையிட்டேன்
சிரிக்கின்றாள் கவிதனிலே
(குயில் கூவும்)
மழை . . .சிலுசிலுவென இருக்கிறது,சில்லரையாய் பொழிகின்றாய் !உன்னால்... (Srinivasan)
16-Jun-2022 8:53 am
மழை . . .
சிலுசிலுவென இருக்கிறது,
சில்லரையாய் பொழிகின்றாய் !
உன்னால் குளிர்ந்தது மண் மட்டுமல்ல,
விவசாயின் மனமும்தான் !
வானிற்கு வண்ணமிட்டு வானவில்லாய்,
வையகத்திற்கு உன்னையிட்டு உயிரைவிட்டாய் !
ஏன் வந்தாய் எங்கு சென்றாய் தெரியவில்லை,
மயங்கி நின்றேன் உன் மழைத்துளியில் !
மேகம் கட்டிய முத்துமணியிலிருந்து சிதறிய முத்துக்களே !
உன்னை அள்ளிக்கோர்த்தேன் என் கவிதைகளால் . . .
மேலும்...