எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
நான்
............
மழை நின்ற பின் வெயிலும்
வெயில் தாக்கம் போக்கும் மழையும் - நான்
தாமரை இலைக்கும் நீருக்கும்
இடையே உள்ள இடைவெளி இல்லா இடைவெளி நான்
உறவுக்கு பிரிவுக்கும் நடுவில் உள்ள
பிரபஞ்சம் கண்ட மௌனம் நான்.
நான் காணும் யாவும் நீ ஆதலால்
நீ யாகிய நீயும் நான்
எதில் எல்லாம் நான் என்னும் கர்வம் இல்லையோ அவை எல்லாம் நான்
பிறக்காத கனவும்,என்றும் இறக்காத
நினைவும் நான்
நான் என்றும் நான் அல்ல நீயாகிய நானே நான்.
அம்மா
பெண்ணே.........! உன் மீதான என் உலகம் உன்னை மறந்துவிட்டது என்று புரிந்தால் நான் இறந்து விட்டதாக நினைத்து கொள்
💞அவள் ஒரு பூ 💞💞. அதிகாலையில் அடர்ந்த பணிமூட்டம் கதிரவனின் வெப்பம் படாமலே உருகும் பனித்துளி அதில் உறைந்து போகும் பூவாய் நான் அவளை கண்டேன் (...)
என் தவறுகளை. நான் திருத்தி கொள்கிறேன்
#உன்னை போல்.....*
படைப்பு *கவிதை ரசிகன்*
#குமரேசன்
பத்து பேர் நடுவில்
உன்னை
ஒருவர்
கேலி கிண்டல்
செய்யும்போது.....
உன் மனம்
எவ்வளவு
வேதனைப்பட்டது என்பதை
உணர்ந்த பிறகும்
இன்னொருவரை
கேலிக்கிண்டல்
செய்யலாமா....?
ஒருவர்
உன்னிடம்
சொன்னபடி
நடந்து கொள்ளாத போது
உனக்கு
எவ்வளவு
கோபம் வந்தது என்பதை
உணர்ந்த பிறகும் ....
நீ சொன்னபடி
நடந்து கொள்ளாமல்
இருக்கலாமா ....?
ஒருவர்
உன் மீது
பொறாமைப்படுவது
தெரிய வந்தபோது
உனக்கு
எவ்வளவு
வெறுப்பு வந்தது என்பதை
உணர்ந்த பிறகும்....
நீ அடுத்தவர் மீது
பொறாமை படலாமா ?
ஒருவர் உன் மனம்
புண்படும்படி பேசிய போது
உனக்கு (...)