எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥

*இரவின் முணு முணுப்பு - 13*

இதில் தான்
ஒரு நெருப்பை
இன்னொரு
நெருப்பினால் அணைக்கும்
அதிசயம் நிகழ்கிறது...!

- *கவிதை ரசிகன்*
குமரேசன்


❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥

மேலும்

முளைவிடும் ஒவ்வொரு தளிரும் மரமாகாது;
அரும்பிடும் ஒவ்வொரு மொட்டும் மலராகாது;
ததும்பிடும் ஒவ்வொரு கனவும் கை சேராது;
உதிக்கும் ஒவ்வொரு எண்ணமும் செயல் வடிவமாகாது;

செலவிடும் ஒவ்வொரு நொடியும் திரும்பி வராது;
திறவாத ஒவ்வொரு மனமும் காயம் படாது;
தளர்வு தரும் ஒவ்வொரு துன்பமும் நீடிக்காது;
பயணம் எங்கோ இருக்க, பாதங்கள் இங்கே நின்று விடக்கூடாது...  

மேலும்

எவ்வளவு முடியுமோ 

அவ்வளவுள் வாழ்வோம் 
இதயம் இன்ப மயமாகும் 

மேலும்

முடிந்தவரை ஆசையற்று 

வாழலாம் என்றால் இல்வாழ்க்கை 
இயக்கமற்று போகிறது 

மேலும்

பழைய கடன் அடைக்க 

புது கடன் கேட்டேன் 

வட்டி எட்டி பார்க்க எத்தநித்து 
இதயத்தை ரணமாக்கி விட்டது 

மேலும்

பல நாள் பிரச்சனைகள் 

ஒரே நாளில் கூட தீர்வு கிடைத்து விடுகிறது 


மேலும்

கட கடவென 

செயல் வேண்டி நின்றேன் 

தட தடவென 
தடுமாற்ற சூழலில் வாழ்க்கை 

மேலும்

      நான் பூ
  --------------------
அந்திக்கு முந்திடுவேன் - முதலில்
அகிலத்தைப் பார்த்திடுவேன்
திசை  நிரம்ப மனம் பரப்பி
உங்கள் சிந்தை கவர்ந்திடுவேன்
சுற்றத்தோடு வாழும் கலை
கற்றுக் கொடுத்துடுவேன்.
உங்கள் விழிகளுக்கு விருந்தாக
வழியெங்கும் பூத்திடுவேன்
உதிர்ந்தே விழுந்தாலும்
உங்கள் பாதம் தாங்கிடுவேன்.
இறைவன் தோளில் உறைந்திடுவேன்
பூவையர் குழலில் நிறைந்திடுவேன்
தலை மீதேறி அமர்ந்தாலும்
தலைக்கனம் இன்றி வாழ்ந்திடுவேன்
பூத்தாலும் மலராய்ப் பூத்திடுவேன்
புதைந்தாலும் விதையாய்  முளைத்திடுவேன்
அமைதிக்கும் அழகுக்கும்
அகிலம் சொல்லும் பொருளாவேன்.
காலை மலர்ந்து மாலை உதிரும்
ஒருநாள் வாழ்வெனினும்
மறுநாளும் பூத்திடுவேன் பூவாகவே.
மதித்தாலும் மிதித்தாலும்
மனம்தளரா குணத்துடனே
மறுபடியும் பிறந்திடுவேன் மலராகவே!!!

அரும்பாய் மொட்டாய்  மொக்குள நனையாய்
முகையாய் போதுவாய் முகிழாய் மகிழ்வாய்
மலராய் அலராய் அதனுள் மணமாய்
வருவாய் வெற்றியைத் தருவாய் தினமே!!!



மேலும்

மௌனமாய்ப்  பூக்கின்ற
மலர்களாய்  - நாங்கள்
நித்தம் நித்தம்
புத்தம் புதிதாய் மலருகின்றோம்.
அவை
தன்னலம் கருதாமல்
திசை நிரப்புகின்ற
நறுமணம் போல
நாங்களும்
சுயநலம் விடுத்து
பொதுநலம் பேணுகின்றோம்.
பூக்கள் மலர்ந்து
புன்னகை பூப்பதற்க்காய்
நிலவும் கதிரும்
இரவு பகலாய்
உதவி செய்வதை போல
நல்லோரின் துணையால்
நலம் பேணி வாழுகின்றோம்
ஒரு மலர் மாலையில்
விதம் விதமாய்
பல மலர்கள்
இருப்பதை போல
எங்கள் மனமலர்கள்
பல கொண்டு - இந்த
நூல் மலரை தொடுத்து - உங்கள்
கால் மலரில் வைக்கின்றோம்..
வாசித்து மகிழ்ந்திடுவீர் !!!







மேலும்

நீண்ட இடைவெளிக்குப் பின் எல்லோரையும் சந்திக்க வந்துள்ளேன் அனைவருக்கும் வணக்கம் 🙏 

இழப்பின் வலியால் எனக்குள்ளே வேலியிட்டு வாழ்ந்தேன் சற்று வெளியாகி உள்ளேன் நன்றி 😥

மேலும்

மேலும்...

மேலே