எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
*குறுங்கவிதை*
படைப்பு *கவிதை ரசிகன்*
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
செழி்ப்பான பூக்கள்
விற்காமல் இருக்கிறது
விதவை வியாபாரி
🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒
கோவிலில் பூசை
வரிசையாக நிற்கின்றனர்
சுண்டல் வழங்குமிடத்தில்
🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒
மரம் வெட்டியதும்
மரத்தோடு சேர்ந்து விழுந்தது
நிழல்
🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒
நெடுஞ்சாலையில் இறநத நாய்
அடக்கம் செய்கின்றன
காக்கைகள்
🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒
ஏழையின் வயிறு
நிறைந்திருக்கிறது
பசியால்
*கவிதை ரசிகன்*
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
ஆண்டுகள் பல கடந்திடினும் ஆயிரம் உறவுகள் இருந்திடினும் தொலைந்து போன நட்பு மீண்டும் உயிர் பெறும் பார்த்த நொடிதனில் - மனதினுள்
இமைகள் இமைக்க மறந்த நொடி - இமை குடைக்குள் நிறைந்து நின்றவளால் தோன்றியது - நொடி பொழுதும் இனி இமைக்கவே கூடாதென
என் ரசனையின் தொடக்க புள்ளியும், முற்று புள்ளியும் அவள் தான் என்பது, அவளுக்கே தெரியாத பொழுது ரசிக்கும் என்னையா ரசிக்க போகின்றாள்!
கை அடக்க கைபேசியிலும்
மடி அணைக்கும் கணினியிலும்
ஓடி போவதற்கும் முடியவில்லை
தேடி செல்லவும் தெரியவில்லை
அப்படி ஒரு பரிவு
இந்த இயந்திரத்திடம்...!
தெவிட்டா காதல்...