மனோபாரதி - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : மனோபாரதி |
இடம் | : Thiruvanmiyur |
பிறந்த தேதி | : 10-Feb-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Nov-2015 |
பார்த்தவர்கள் | : 181 |
புள்ளி | : 1 |
மனோபாரதியாகிய நான் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் தொலைத் தொடர்புத் துறையில் முதுகலை பட்டம் பெற்று இப்பொழுது ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன்.தமிழ் மீது கொண்ட பற்றினால் தொடர்ந்து முகநூலில் எழுதி வருகிறேன். நண்பர்களின் தொடர் ஊக்கத்தினால் சென்ற பிப்ரவரி மாதம் என் முதல் புத்தகமான \'எழுத்துப்பிழை\' வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் எனது இரண்டாம் புத்தகமான \'விகடகவி - எழுத்துப்பிழை 2.0\' வெளிவந்தது.
நான் ஒரு
நாடோடி...
கிழிந்த ஆடையும்
கொடூர மிருகத்தை
ஒத்த தோற்றமும்
என் அடையாளம்..
குழந்தைகள் என்னை
கண்டு அஞ்சி ஓடும்..
உலகம் என்னை பார்த்தாலே
உமிழ்நீரைத் துப்பும்..
பார்த்தவுடனே என்னை
பைத்தியம் என்றும் , முட்டாள் என்றும்
பகுத்துவிடுவர்...
கடவுளை நான் கண்டதுமில்லை..
“கடவுளால் படைக்கப்பட்டது” என்ற பட்டியலில் என் பெயரும் இல்லை..
பசி என் தினசரி சாப்பாடு- நடு
நிசி நான் சுற்றித்திரியும் சுதந்திர நேரம்..
அப்பனும் அறியாது
அம்மாவும் தெரியாது..
விளக்குகள் குறைவாக உள்ள
விலைமாதர் கொட்டகையில்
விந்து மட்டுமே பீய்ச்சத் தெரிந்த
ஈனப் பிறவிக்கு பிறந்த