மறைப்பேன்மன் காமத்தை யானோ - நிறையழிதல்
குறள் - 1253
மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போல் தோன்றி விடும்.
தும்மல்போல் தோன்றி விடும்.
Translation :
I would my love conceal, but like a sneeze
It shows itself, and gives no warning sign.
Explanation :
I would conceal my lust, but alas, it yields not to my will but breaks out like a sneeze.
எழுத்து வாக்கியம் :
யான் காமத்தை என்னுள்ளே மறைக்க முயல்வேன்; ஆனால் அதுவே என் குறிப்பின்படி நிற்காமல் தும்மல் போல் தானே வெளிப்பட்டு விடுகிறது.
நடை வாக்கியம் :
என் காதல் ஆசையை நான் மறைக்கவே எண்ணுவேன்; ஆனால், அது எனக்கும் தெரியாமல் தும்மலைப் போல் வெளிப்பட்டு விடுகிறது.
திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.