தஞ்சம் தமரல்லர் ஏதிலார் - நெஞ்சொடுபுலத்தல்
குறள் - 1300
தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி.
நெஞ்சம் தமரல் வழி.
Translation :
A trifle is unfriendliness by aliens shown,
When our own heart itself is not our own!
Explanation :
It is hardly possible for strangers to behave like relations, when one's own soul acts like a stranger.
எழுத்து வாக்கியம் :
ஒருவர்க்கு தாம் உரிமையாகப் பெற்ற நெஞ்சமே உறவாகாதபோது அயலார் உறவில்லாதவராக இருப்பது எளிதேயாகும்.
நடை வாக்கியம் :
நமக்குரிய நெஞ்சமே நம்முடன் உறவாக இல்லாத போது, மற்றவர் உறவில்லாதவராக இருத்தல் என்பது எளிதேயாகும்.
திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.