துன்பத்திற்கு யாரே துணையாவார் - நெஞ்சொடுபுலத்தல்
குறள் - 1299
துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி.
நெஞ்சந் துணையல் வழி.
Translation :
And who will aid me in my hour of grief,
If my own heart comes not to my relief?
Explanation :
Who would help me out of one's distress, when one's own soul refuses help to one?
எழுத்து வாக்கியம் :
ஒருவர்க்குத் துன்பம் வந்தபோது, தாம் உரிமையாகப் பெற்றுள்ள நெஞ்சமே துணையாகா விட்டால், வேறு யார் துணையாவார்?
நடை வாக்கியம் :
ஒருவரது துன்பத்திற்குத் தாம் உரிமையாகப் பெற்றிருக்கும் தம் நெஞ்சமே துணையாகாதபோது, வேறு யார் துணையாவார்?
திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.