இது தவறா?

எனக்கு நடந்த கொடுமையில் நான் கேட்ட கேள்விக்கு பலர் எனக்கு பதிலளித்து இருந்தீர்கள்.. மிக்க நன்றி.. மேலும் நான் என்ன தவறு செய்தேன் என்பதை இப்போது குறிப்பிடுகிறேன்... வகுப்பறையில் மூன்று மாணவர்கள் கூச்சல் இட்டுக்கொண்டு வகுப்பை நடத்தவிடாமல் இடையூறு செய்து வந்தனர்.. நான் ஏன் என்று கேட்டேன்.. அதற்காக என்னை அடித்தார்கள் பொறுத்துக்கொண்டேன்.. ஏன் அடித்தீர்கள் என்று கேட்ட என் நண்பனையும் அடித்தார்கள்.. அதைதான் என்னால் பொறுக்க முடியவில்லை.. பிறகு அவர்களை நானும் என் நண்பனும் சேர்ந்து அடித்துவிட்டோம்.. நாங்கள் தாக்கியதில் ஒருவனுடைய சட்டை கிழிந்துவிட்டு. அவன் PRINCIPALயிடம் முறையிட்டான்.. அவர் எங்களிடம் எந்த விசாரனையும் நடத்தாமல் இரத்தம் வரும் அளவுக்கு அடித்துவிட்டார்.. சுமார் ஒவ்வொருவரும் 30க்கும் குறையாமல் அடி விழுந்து இருக்கும்.



கேட்டவர் : கார்த்திக்
நாள் : 25-Feb-14, 9:52 pm
0


மேலே