எழுத்துத் தளத்தின் மேன்மை காப்பீர்

சுய விருப்பு வெறுப்பு படைப்புகள் தளத்தில் சமர்ப்பிக்கபடுவது தவிர்ப்பீர்களா தோழமைகளே?
உங்கள் கற்பனையை நல்ல விடயத்துக்கு கூட்டிச் செல்லுங்கள். ஏதோ தோழமை ஒருவர் புதிதாக படைப்பு வைத்திருக்கிறார் என்று கவிதை திறந்து படிக்கவோ மனம் திறந்து கருத்திடவோ மனம் வராமல் திரும்புவது வேதனை அளிக்கிறது. சொல்லப் போனால் படைப்புகளை திறந்து பார்க்கவே பயமாக இருக்கிறது. மனசாட்சியைக் கொன்று கருத்தளிக்க மனம் தடுக்கிறது. தயவு செய்து புதிய படைப்பாளிக்கு முன் உதாரணமாக இருங்கள். உங்கள் கருத்தை படைப்பு என்ற பெயரில் தளத்தில் திணிக்க முயலாதீர்கள். இப்படி கேள்வி கேட்பதால் தளத்தை விட்டு வெளியேறி விடுவேன் என்று எண்ணி விடாதீர்கள்.தளத்தில் உயிருள்ளவரை தொடருவேன். நன்றி.



நாள் : 2-Apr-14, 2:27 am
0


மேலே