கருத்து நீக்கப்பட்டது ஏன் ?

எனது “கயல் விழி “ என்ற சிறுகதை (146770)படைப்பில் தோழர் கே.எஸ். கலை அவர்கள் (08/10/2013)கருத்து ஒன்றை பதிவு செய்திருந்தார்.. அதற்கு நானும் பதில் கருத்து பதிவு செய்திருந்தேன். ஆனால் இப்போது அந்த நான்கு கருத்து பதிவும் நீக்கப்பட்டிருக்கிறது. ஏன் ?

எழுத்து நிர்வாகத்திற்கு அந்த கருத்து பதிவுகளை பற்றி நான் எந்த ஆட்சேபணை அல்லது புகார் அளிக்கவில்லை.. அப்படி உள்ளப்போது அந்த படைப்பின் பதிவிற்கு உரிமையுள்ள எனக்கு தெரிவிக்காமல் கருத்துக்களை நீக்கியது ஏன் ?

இந்த படைப்பில் உள்ள கருத்திற்கு வேறு யார் புகார் அளித்தார்கள். ? அவர்கள் யார் என்று நான் அறியலாமா? அப்படி புகார் அளித்து இருந்தால் படைப்பின் உரிமையுள்ள எனக்கு ஏன் தெரியப்படுத்தவில்லை ??

எழுத்து தளத்தில் விதிகளுக்கு உட்பட்டு பதிவு செய்யும் கருத்துக்களுக்கு உத்திரவாதம் ஏதும் இல்லையா... ? உறுப்பினர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களின் அனுமதி இல்லாமல் நீக்க முடியுமா ?

எழுத்து நிர்வாகம் எனது இந்த கேள்விகளுக்கு பதலளிக்க வேண்டுகிறேன்.



நாள் : 10-Oct-13, 9:45 pm
0


மேலே