இரா-சந்தோஷ் குமார் - சுயவிவரம்

(Profile)



பரிசு பெற்றவர்
இயற்பெயர்:  இரா-சந்தோஷ் குமார்
இடம்:  திருப்பூர் / சென்னை
பிறந்த தேதி :  29-Sep-1978
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Jun-2013
பார்த்தவர்கள்:  15712
புள்ளி:  13514

என்னைப் பற்றி...

“ எழுத்தாளர் இரா.சந்தோஷ் குமார் “ இந்த கம்பீரச் சொற்கள் தலைப்பு செய்தியாக வலம் வர வேண்டும் என்பதற்காக உழைத்துக்கொண்டிருக்கும் தமிழ் ரசிகன்.

”எழுத்தாளன்.”. இந்த ஒற்றைச் சொல்லின் மீது எனக்கு அப்படியொரு ஈர்ப்பு..இந்த சொல்லின் மீது ஒரு மரியாதை.. இந்த சொல்லிற்கு எமை தகுதியாக்கி கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது என்பதே என் பிறப்புக்கு கிடைத்த கெளரவம்.

ஒவ்வொரு பாராட்டும்.. ஒரு படைப்பாளிக்கு உத்வேகம் அளிக்கும் .. !
ஒவ்வொரு பாராட்டும்... பலவீனமான படைப்பாளியை ஆபத்திற்கு உள்ளாக்கும்.. !

நான் பலவீனமாக இருக்க விரும்பவில்லை.

படைப்பாக்கம் என்பது... சாமானிய மக்களுக்கு விழிப்புணர்ச்சித் தூண்டும் ஒரு கருவியாகவும் இருத்தல் வேண்டும். என்பதே எனது படைப்பாக்க கொள்கை.
-------------

வெறும் 350 மி.லி இரத்த தானத்தில் நாம் யாரோ ஒருவரின் உயிரைக் காப்பாற்றி... கடவுளாகி விட முடியும்.

**** எனது இரத்த வகை:" O " + (Positive).


கடைசியாக இரத்த தானம் செய்த நாள் : February 2016. மீண்டும் மே 2016 ஆரம்ப வாரத்தில் இரத்த தானம் வழங்க இயலும்.. வேறு ஏதேனும் இரத்த வகை என்றாலும் தேவைப்படுவோர் எனை தொடர்புக் கொள்ளலாம்.

முடிந்தவரை வருடத்திற்கு நான்கு முறை இரத்தத் தானம் வழங்குவதென்பது என் கடமையாக செய்கிறேன். மற்ற தோழர்களும் செய்யத் தூண்டுகிறேன். .

தொடர்புக்கு : ---
முகநூல்: https://www.facebook.com/santhoshkumar78

மின் -அஞ்சல் : svaras.santhosh@gmail.com

அலைப்பேசி எண்: + 91 96003 21289

என் படைப்புகள்
இரா-சந்தோஷ் குமார் செய்திகள்

  நண்பர்களுக்கு வணக்கம்..! 


கடந்த வருடத்திலிருந்து இனி ஒவ்வொரு ஆண்டும் அய்யா பெரியாரின் பிறந்த தினத்தினை ஒட்டி முழுநாள் நிகழ்வு நடத்தப்படும் என்று #வாசகசாலை முன்னரே அறிவித்திருந்தது. அதன்படி முதலாவது முழுநாள் நிகழ்வு கடந்த 17.09.2017 அன்று ஐந்து அமர்வுகளாக நண்பர்கள் ஆதரவுடன் வெகு சிறப்பாக நடைபெற்றது. 


அந்த வரிசையில் இரண்டாவது முழுநாள் நிகழ்வு வரும் ஞாயிறன்று நடைபெறவுள்ளது. அதற்கு முதல்கட்டமாக ஐந்து அமர்வுகளின் தலைப்புகளை இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். இடம் மற்றும் இதர விபரங்கள் விரைவாக வரும் நாட்களில் வெளியாகும். 

நாம் தற்சமயம் எதிர்கொண்டு வரும் பல்வேறு சூழல்களையும் சமாளிக்க நமக்கு என்றுமே துணை நிற்கப் போவது அய்யாவின் சிந்தனைகளும் எழுத்துக்களும்தான். எனவே அது பற்றிய விரிவான உரையாடல்களுக்கு 
நண்பர்கள் உங்களை தயார் படுத்திக்கொள்ளுங்கள். இந்த முழுநாள் நிகழ்வுக்கு நண்பர்கள் அனைவரையும் வாசகசாலை அன்புடன் வரவேற்கிறது. வரும் ஞாயிறன்று சந்திக்கலாம். நன்றி. மகிழ்ச்சி..!  

மேலும்

மிக்க மகிழ்ச்சி , கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் , பெரியார் பிறந்த நாள் விழாவை , அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் , சிறுவர்களுக்கான பேச்சு போட்டி , ஓவியப்போட்டி நடத்துகிறோம் , வாழ்க பெரியார் , வளர்க சமூக நீதி !!! 10-Sep-2018 9:09 pm

  ஈரோடு மாவட்ட மைய நூலகத்துடன் #வாசகசாலை இணைந்து வழங்கும் "இலக்கிய சந்திப்பு " மாதாந்திர தொடர் கலந்துரையாடல் நிகழ்வுகள் - நான்காம் நிகழ்வுக்கான அழைப்பிதழ் இதோ உங்கள் முன்னால்..! .

இம்முறை நாம் பெண்கள்.. பெண் சார்ந்த அரசியல்..உடை.. குடும்பம்.. காதல்.. கலை என பலவாறு பெண் நிலைகளை அதன் நோக்கினை சிறுகதைகள் மூலம் வெளிப்படுத்தி எழுதிய தமிழ் இலக்கியத்தின் சிறந்த பெண் படைப்பாளிகளில் ஒருவரான எழுத்தாளர் அம்பையின் மூன்று சிறுகதைகளை இந்த மாத நிகழ்வுக்கென தேர்வு செய்யப்பட்டன.

மூன்று சிறுகதைகளை குறித்து மூன்று வாசகர்கள் தங்கள் வாசிப்பு அனுபவத்தை நம்மோடு உரையாற்ற இருக்கிறார்கள். மேலும் அவர்களோடு நாமும் கதைகள் குறித்து விவாதிக்கலாம். 

கதைகளை வாசிக்க... கதைகளுக்கான சுட்டிகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

”வீட்டின் மூலையில் ஒரு சமையலறை” 
https://bit.ly/2L8VbRs

“காட்டில் ஒரு மான்”
https://bit.ly/2L0Ji3b

”வயது”
https://bit.ly/2ztpVLH

வாய்ப்பிருக்கும் நண்பர்கள் அனைவரும் கதைகளை வாசித்து விட்டு, வரும் ஞாயிறு மாலை 5:30 க்கு ஈரோடு மாவட்ட மைய நூலகத்தில் நடைப்பெறும் வாசகசாலை நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

வாசிப்போம்.. உரையாடுவோம்..! நன்றி..!  


தொடர்புக்கு : 9600321289

மேலும்

இரா-சந்தோஷ் குமார் - இரா-சந்தோஷ் குமார் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Jul-2018 7:18 pm

  வணக்கம் நண்பர்களே..!திருப்பூரில் #வாசகசாலை வழங்கும் ‘ இலக்கிய சந்திப்பு’ மாதாந்திர தொடர் கலந்துரையாடல் நிகழ்வுகள். நிகழ்வு 6-க்கான அழைப்பிதழ். 

இம்முறை நாம் கலந்துரையாடலுக்கு எடுத்துக்கொள்ளும் நாவல், தமிழ் இலக்கியத்தில் மிக முக்கிய படைப்பாக வலம் வந்த எழுத்தாளர் ராஜ் கெளதமனின் “சிலுவைராஜ் சரித்திரம் “ஒரு மனிதனின் முதல் இருபத்தைந்து ஆண்டு கால வாழ்க்கை எத்தகைய முக்கியத்துவமானது என்ற பார்வையில் நாவலில் சிலுவை எனும் கதாபாத்திரம் மூலம் எழுத்தாளர் தன் வாழ்க்கையின் கால் நூற்றாண்டு அனுபவ பகிர்வை சுய வரலாற்றுக் குறிப்புகளாக எழுதினாலும் புறச்சமூக குறிப்புகளையும்... அவர் வாழ்ந்த காலக்கட்டத்தில் மக்களிடையே நிலவிய சாதிகளைப்பற்றிய பார்வையையும் திராவிட இயக்கத்தின் மீது ஒளிர்ந்த நம்பிக்கைகளையும் அது மங்கத்தொடங்கிய விசாரணைகளோடும்... பொதுவுடைமை இயக்கத்திற்கு தென்மாவட்டங்களில் கிடைத்த ஆதரவையும் ஆவணப்படுத்துமளவுக்கு எழுதப்பட்ட நாவல் என்பதோடு.. ஆழ்மன இயல்புகளைப்பற்றிய புரிதலின் பின்னணியிலும் சமுகவியலைப்பற்றிய புரிதலின் பின்னணியிலும் அவ்விடைகளை முன்வைத்துப் பரிசீலனை செய்யவும் முடியும். இத்தகு பரிசீலனைகள் வழியாகவே சாதி என்னும் புனைவை உடைத்துப் பார்க்கமுடியும் என்ற கண்ணோட்டத்தோடு . ஜாதிகள் பற்றிய மேலோட்டமான புரிதலை தெளியவைத்து வாசகனுக்கு புரியவைத்த அளவிலும் இந்நாவல் மிக சிறப்பு பெற்ற நாவலாக எழுதியுள்ளார் என்றளவில் தமிழ் இலக்கியத்தில் முக்கியத்துவமான இடத்தை இந்நாவல் பெற்றிருக்கிறது. 

இந்நாவல் குறித்தான கலந்துரையாடல் நிகழ்வில் நாவல் குறித்தான வாசக பார்வையாக தோழர் ர.பாலசுப்பிரமணியனும்.. மற்றொரு வாசக பார்வையாக கிருத்திகா கார்த்திகேயனும் நம்மிடையே தங்கள் வாசிப்பு அனுபவத்தை பகிர இருக்கிறார்கள் தோழர் கவிஞர் மு.ஆனந்தன் அவர்களும் இந்த நாவல் குறித்தான தனது சிறப்புரையை வழங்க இருக்கிறார்கள்.மேலும், ’சிலுவைராஜ் சரித்திரம்’ நாவலை குறித்து பங்கேற்பாளர்களோடு நாம் கலந்துரையாடவும் இருக்கிறோம் தோழர்களே...!

சிலுவைராஜ் சரித்திரம் நாவலை வாசிக்காத நண்பர்கள் உடனே வாசிக்கத் தொடங்குங்கள். வாசித்தவர்கள் நாவல் குறித்தான உங்கள் சிந்தனையோட்டத்தோடு கலந்துரையாடலுக்கு காத்திருங்கள்.சந்திப்போம்.. ஜூலை 22ம் தேதி. திருப்பூர் குமரன் சாலையிலுள்ள நலம் ஹாலில்.. மாலை 5:30 மணிக்கு:)  

தொடர்புக்கு :9600321289

மேலும்

தங்கள் அழைப்பிற்கு நன்றி சென்ற வாரத்தின் சிறந்த படைப்புகளின் தொகுப்பு ஒரு பார்வை - எழுத்து.காம் தங்கள் படைப்பு தேர்ந்தமைக்கு பாராட்டுக்கள் 17-Jul-2018 8:19 pm
நன்றி தோழர் 11-Jul-2018 10:37 pm
நல்ல முயற்சி . நானும் திருப்பூர்தான் , இப்போது அமெரிக்காவில் இருக்கின்றேன் . திருப்பூர் நண்பர்கள் வட்டத்தில் இதனை பகிர்கிறேன் . 09-Jul-2018 9:29 pm

  வணக்கம் நண்பர்களே..!திருப்பூரில் #வாசகசாலை வழங்கும் ‘ இலக்கிய சந்திப்பு’ மாதாந்திர தொடர் கலந்துரையாடல் நிகழ்வுகள். நிகழ்வு 6-க்கான அழைப்பிதழ். 

இம்முறை நாம் கலந்துரையாடலுக்கு எடுத்துக்கொள்ளும் நாவல், தமிழ் இலக்கியத்தில் மிக முக்கிய படைப்பாக வலம் வந்த எழுத்தாளர் ராஜ் கெளதமனின் “சிலுவைராஜ் சரித்திரம் “ஒரு மனிதனின் முதல் இருபத்தைந்து ஆண்டு கால வாழ்க்கை எத்தகைய முக்கியத்துவமானது என்ற பார்வையில் நாவலில் சிலுவை எனும் கதாபாத்திரம் மூலம் எழுத்தாளர் தன் வாழ்க்கையின் கால் நூற்றாண்டு அனுபவ பகிர்வை சுய வரலாற்றுக் குறிப்புகளாக எழுதினாலும் புறச்சமூக குறிப்புகளையும்... அவர் வாழ்ந்த காலக்கட்டத்தில் மக்களிடையே நிலவிய சாதிகளைப்பற்றிய பார்வையையும் திராவிட இயக்கத்தின் மீது ஒளிர்ந்த நம்பிக்கைகளையும் அது மங்கத்தொடங்கிய விசாரணைகளோடும்... பொதுவுடைமை இயக்கத்திற்கு தென்மாவட்டங்களில் கிடைத்த ஆதரவையும் ஆவணப்படுத்துமளவுக்கு எழுதப்பட்ட நாவல் என்பதோடு.. ஆழ்மன இயல்புகளைப்பற்றிய புரிதலின் பின்னணியிலும் சமுகவியலைப்பற்றிய புரிதலின் பின்னணியிலும் அவ்விடைகளை முன்வைத்துப் பரிசீலனை செய்யவும் முடியும். இத்தகு பரிசீலனைகள் வழியாகவே சாதி என்னும் புனைவை உடைத்துப் பார்க்கமுடியும் என்ற கண்ணோட்டத்தோடு . ஜாதிகள் பற்றிய மேலோட்டமான புரிதலை தெளியவைத்து வாசகனுக்கு புரியவைத்த அளவிலும் இந்நாவல் மிக சிறப்பு பெற்ற நாவலாக எழுதியுள்ளார் என்றளவில் தமிழ் இலக்கியத்தில் முக்கியத்துவமான இடத்தை இந்நாவல் பெற்றிருக்கிறது. 

இந்நாவல் குறித்தான கலந்துரையாடல் நிகழ்வில் நாவல் குறித்தான வாசக பார்வையாக தோழர் ர.பாலசுப்பிரமணியனும்.. மற்றொரு வாசக பார்வையாக கிருத்திகா கார்த்திகேயனும் நம்மிடையே தங்கள் வாசிப்பு அனுபவத்தை பகிர இருக்கிறார்கள் தோழர் கவிஞர் மு.ஆனந்தன் அவர்களும் இந்த நாவல் குறித்தான தனது சிறப்புரையை வழங்க இருக்கிறார்கள்.மேலும், ’சிலுவைராஜ் சரித்திரம்’ நாவலை குறித்து பங்கேற்பாளர்களோடு நாம் கலந்துரையாடவும் இருக்கிறோம் தோழர்களே...!

சிலுவைராஜ் சரித்திரம் நாவலை வாசிக்காத நண்பர்கள் உடனே வாசிக்கத் தொடங்குங்கள். வாசித்தவர்கள் நாவல் குறித்தான உங்கள் சிந்தனையோட்டத்தோடு கலந்துரையாடலுக்கு காத்திருங்கள்.சந்திப்போம்.. ஜூலை 22ம் தேதி. திருப்பூர் குமரன் சாலையிலுள்ள நலம் ஹாலில்.. மாலை 5:30 மணிக்கு:)  

தொடர்புக்கு :9600321289

மேலும்

தங்கள் அழைப்பிற்கு நன்றி சென்ற வாரத்தின் சிறந்த படைப்புகளின் தொகுப்பு ஒரு பார்வை - எழுத்து.காம் தங்கள் படைப்பு தேர்ந்தமைக்கு பாராட்டுக்கள் 17-Jul-2018 8:19 pm
நன்றி தோழர் 11-Jul-2018 10:37 pm
நல்ல முயற்சி . நானும் திருப்பூர்தான் , இப்போது அமெரிக்காவில் இருக்கின்றேன் . திருப்பூர் நண்பர்கள் வட்டத்தில் இதனை பகிர்கிறேன் . 09-Jul-2018 9:29 pm
Zia Madhu அளித்த படைப்பை (public) Zia Madhu மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
05-Jul-2018 10:36 pm

பாரதியை சபிக்கிறேன்!

ஏன் மூட்டினாய்
இவ் வேள்வித் தீயை?

கனன்று கொண்டிருக்கும்
எங்கள் ஏக்கங்களில்
ஏன் தெளித்தாய்
உன் சத்தியத்தை?

மறத்துப் போன
எங்கள் உடல்
என்ன தீங்கிழைத்தது உனக்கு?

சமையலறை தான்
சர்வமும் என்றால்
அங்கனமே மடிந்திருப்போமே!

கனவுகள் மட்டுமே
சாத்தியம் என்றால்
சளைக்காமல் கண்டிருப்போமே!

விலங்கினை உடைத்து
சிறகுகள் விரித்தால்
சிகரம் எட்டலாமென
பொய்யுரைத்தீரோ?

தத்திப் பறக்க முயலும்
சிட்டுக் குருவி
எப்படியும் ஒருநாள்
நத்தைபோல் ஓட்டுக்குள்
சுருண்டு விடப் போகிறதெனில்

ஏட்டுச் சுரைக்காயா
நீர் சமைத்த அறம்?

பெருங்கனவு பொசுங்கிவிட்ட

மேலும்

மன்னித்து விடு மௌனித்து விடுகிறேன்! இனி அவள் இல்லத்தரசி! ம்ம் ...நன்று நன்று 23-Jul-2018 10:02 am
மிக்க நன்றி தோழி :-) ஒவ்வொரு உயிரின் உணர்வுகளையும் பிசகின்றி வெளிப்படுத்த கலைகள் ஒரு கருவியாக செயல்படுகின்றது. இதில் ஒவ்வொரு கவிஞனுக்கும் பெருமிதம் இருக்க வேண்டும். 09-Jul-2018 11:46 am
மிகவும் அருமை தோழியே. ஒவ்வொரு இல்லத்தறசியின் மனத்துக்குள் இருப்பதை அழகாக வெளிப்படுத்தியது உங்கள் கவிதை. 08-Jul-2018 3:03 pm
தொடர்ந்து பயணிப்போம் தோழர் 08-Jul-2018 2:02 pm
Zia Madhu அளித்த படைப்பில் (public) முதல்பூ மற்றும் 9 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
05-Jul-2018 10:36 pm

பாரதியை சபிக்கிறேன்!

ஏன் மூட்டினாய்
இவ் வேள்வித் தீயை?

கனன்று கொண்டிருக்கும்
எங்கள் ஏக்கங்களில்
ஏன் தெளித்தாய்
உன் சத்தியத்தை?

மறத்துப் போன
எங்கள் உடல்
என்ன தீங்கிழைத்தது உனக்கு?

சமையலறை தான்
சர்வமும் என்றால்
அங்கனமே மடிந்திருப்போமே!

கனவுகள் மட்டுமே
சாத்தியம் என்றால்
சளைக்காமல் கண்டிருப்போமே!

விலங்கினை உடைத்து
சிறகுகள் விரித்தால்
சிகரம் எட்டலாமென
பொய்யுரைத்தீரோ?

தத்திப் பறக்க முயலும்
சிட்டுக் குருவி
எப்படியும் ஒருநாள்
நத்தைபோல் ஓட்டுக்குள்
சுருண்டு விடப் போகிறதெனில்

ஏட்டுச் சுரைக்காயா
நீர் சமைத்த அறம்?

பெருங்கனவு பொசுங்கிவிட்ட

மேலும்

மன்னித்து விடு மௌனித்து விடுகிறேன்! இனி அவள் இல்லத்தரசி! ம்ம் ...நன்று நன்று 23-Jul-2018 10:02 am
மிக்க நன்றி தோழி :-) ஒவ்வொரு உயிரின் உணர்வுகளையும் பிசகின்றி வெளிப்படுத்த கலைகள் ஒரு கருவியாக செயல்படுகின்றது. இதில் ஒவ்வொரு கவிஞனுக்கும் பெருமிதம் இருக்க வேண்டும். 09-Jul-2018 11:46 am
மிகவும் அருமை தோழியே. ஒவ்வொரு இல்லத்தறசியின் மனத்துக்குள் இருப்பதை அழகாக வெளிப்படுத்தியது உங்கள் கவிதை. 08-Jul-2018 3:03 pm
தொடர்ந்து பயணிப்போம் தோழர் 08-Jul-2018 2:02 pm

வாசகசாலை இலக்கிய சந்திப்பு - திருப்பூர் மாநகரில்- 


  எப்போதும் ஒரு விதமான எச்சரிக்கை உணர்வுடன் இருக்க நிர்பந்திக்கப்படுவது என்பது தாங்க முடியாத சுமை !. அப்படிப்பட்ட மக்கள் இவரின் கதை முழுக்க விரவிக் கிடக்கிறார்கள். அதிலும் கூட, ஆண்களுக்கு தங்களை நிரூபித்துக் கொள்வது மட்டுமே சோதனை. ஆனால், பெண்களுக்கோ தங்களை தற்காத்துக் கொள்ளவே பெரும் பாடு என்பதையும் விட்டு வைக்கவில்லை இவர்.இந்த மக்களை அடிமையாக்கிய புராணங்களை நம்பிக்கொண்டு வசதியாக நீங்கள் உட்கார விரும்புவீர்களானால் ...உட்காரும் இடத்தில் ஊசி வைக்கும் இவரிடம் உங்கள் மனசாட்சி தப்பவே முடியாது .
எளிமையான, ஆனால் ஆழமான எழுத்துக்கள் கொண்டு தன் அரசியலைப் பேசும் கலைஞர் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா. 
இவ்வாறான வீரியமிக்க இலக்கிய உலகில் மிக முக்கிய எழுத்தாளரின் சிறுகதைத் தொகுப்பை குறித்து கலந்துரையாடல் நிகழ்வாக திருப்பூரில் முன்னெடுக்கிறது வாசகசாலை.
வரும் ஞாயிறு மாலை 5:30 மணிக்கு swaad Restaraunt ல் வாசகசாலை “ இலக்கிய சந்திப்பு “ கலந்துரையாடல் நிகழ்வில் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா அவர்களின் சிறுகதைத் தொகுப்பு குறித்த கலந்துரையாடல். அனைவரும் வருக..!  

மேலும்

இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பில் (public) PANIMALAR மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
15-Nov-2017 7:38 am

ஏதேனும் ஒரு ரணத்தை
சுமந்தலையும்
மனதோடு...
யாரேனும் ஒருவர் வீட்டிற்கு
செல்கிறேன்.

புன்னகையோடு வரவேற்கிறார்.
அந்த யாரேனும் ஒருவர்.
புன்னகையோடு இருக்கை திசை நோக்கி
அவர் கைகளை நீட்டி
அமரச் சொல்கிறார்.
புன்னகையோடு தேநீர் தயாரிக்கிறார்.
புன்னகையோடு தேநீர் கோப்பையில்
தேநீர் ஊற்றி..
புன்னகையோடு அருந்த தருகிறார்.
நானும் கூட
புன்னகையோடு மகிழ்ந்து பெற்று
அருந்தி மகிழ்கிறேன்.
புன்னகையோடு உரையாடிவிட்டு
புன்னகையோடு வழியனுப்பி வைக்கிறார்
அந்த யாரேனும் ஒருவர்.

வெளியில் வருகிறேன்...
வெயிலில் நிற்கிறேன்.
சூரியன் புன்னகை ஒளி சிந்துகிறது.
வாகனச் சத்தம் புன்னகை ஒலி எழுப்புகிறது.
சூழல் த

மேலும்

அற்புதமான வரிகள் 24-Apr-2018 1:40 pm
நன்றி அம்மா 16-Nov-2017 9:55 am
ஓஹோ.. அப்படியா தோழா 16-Nov-2017 9:55 am
நல்ல அழகிய தேடலில் மனம் , வாழ்த்துக்கள் சந்தோஷ் 15-Nov-2017 9:32 pm
பழனி குமார் அளித்த எண்ணத்தில் (public) பழனி குமார் மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
11-Oct-2017 9:53 pm

அகவை அறுபதில் அடிவைக்கிறேன் உங்கள் அனைவரின் ஆசியுடனும் அன்புடனும் வாழ்த்துக்களுடன் 


பழனி குமார் 

மேலும்

அருமையான பதிவு ......உள்ளத்தை தொட்ட வார்த்தைகள் ......அனுபவித்து வந்த வார்த்தைகள் .......வணங்குகிறேன் .....வாழ்த்துகிறேன் 20-Jan-2018 11:50 am
மிகவும் நன்றி வேலாயுதம் தங்களின் வாழ்த்திற்கு 13-Oct-2017 6:54 am
பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன் மலைமகள் அலைமகள் கலைமகள் அருளோடு வாழ எழுத்து தளம் குடும்பத்தினர் சார்பாக வாழ்த்துகிறோம் 13-Oct-2017 4:14 am
மிகவும் நன்றி புனிதா 12-Oct-2017 10:57 pm
இரா-சந்தோஷ் குமார் - விவேக்பாரதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-May-2017 5:05 pm

நொண்டிச் சிந்து

பாடலில் கூத்தாடுவாள் - சக்தி
. பவனிவந் தென்னுளே ஆர்த்தாடுவாள் !
வாடிடா மலர்க்கூந்தலாள் - சொல்லும்
. வார்த்தைக்கு ளேவந்து பூத்தாடுவாள் !
ஆடலைக் கண்டகண்கள் - அண்ட
. மாயிரங் கண்டதாய்ப் பாட்டிசைக்கும்
பாடுமென் நாவினுக்குள் - அந்த
. பரசக்தி நின்றென்னை ஆட்டுகின்றாள் !

மின்னலின் ஒளியாகுவாள் - கண்ணில்
. மின்னிடும் இன்னொரு ரவியாகுவாள்
கன்னலின் சுவையாகுவாள் - காளி
. கவிதையின் வடிவிலே கனியாகுவாள்
இன்னலில் சுடராகுவாள் - நெஞ்ச
. எந்திரத் தில்படரும் கொடியாகுவாள்
என்னென்ன செய்திடினும் - என்னை
. ஏற்றும் விசையென வந்திருப்பாள் !

காற்றினிற் பேசுகின்றாள் - அன்னை
. காவிய மா

மேலும்

நொண்டிச் சிந்து இலக்கணம் சார் கவிதையே என்றாலும் அந்த இலக்கணம் நம் இயற்பாக்களுக்குக் காட்டும் இலக்கணமாய் அல்லாது இசைப்பாக்களுக்கே உரிய ஓசை நயத்தை இலக்கணமாகக் கொண்டு திகழுவது. இதனைக் குறித்த இருவேறு கருத்து இசைப்பாக்களைப் பற்றிய கட்டுரைகளில் இருந்து வருகின்றது. ஒன்று ஓசை நயங்கருதி வகுத்த "உயிர்" எனச் சொல்லப்படும் ஓசை இலக்கணம் (இரா.திருமுருகன் ஐயாவுடையது) மற்றொன்று இயல்பாகவே இவ்வகைப் பாக்களில் வெண்டளை பிறழாமல் வருவதால் வெண்டளை மட்டுமே போதுமென்று ஒரு இலக்கண விதிமுறையும் உள்ளது (புலவர் குழந்தையைத் துவங்கி பலர்) ஆனால் இரண்டுமே ஓரளவிற்குப் படித்த பாலகன் பாரதியின் பாஞ்சாலி சபதம் படித்த போதையிலிருந்து இன்னும் தெளியாத சிறியன் எழுதும் போதேஉரக்கப் படித்துக் காதுகளில் விழும் ஓசையை வைத்து எழுதுகிறேன் ! எல்லாம் அப்பன் பாரதியிடமிருந்து பெற்றதே ! நாள்தோறும் என்பது நாடோறும் என்று புணர்வதாகப் படித்துள்ளேன் ! அதே விதி தான் இந்த இடைக்குறைக்கும் என்று நினைத்து நாடொறும் என்றிட்டேன் சரியான விளக்கம் கேட்டு மீண்டும் எழுதுகிறேன். மிக்க நன்றி கவின் சாரலன் ஐயா ! 04-Jun-2017 2:14 pm
பாரதியின் கவிதையோ என ஆச்சரியப் படுத்தும் விவேக்பாரதியின் அற்புதக் கவிதை . நொண்டிச் சிந்து பாரதியில் படித்திருக்கிறேன் . நொண்டிச் சிந்து இலக்கணம் சார் கவிதையா ? ஓசை தரும் பாடல் வரிகளா ? பாடுமென் நாவினுக்குள் - அந்த . பரசக்தி நின்றென்னை ஆட்டுகின்றாள் ! -----பாரதி முத்திரைகள் . நான் ரசித்துப் படித்த ******மிக உயரிய கவிதை நாள்தொறும் ---நாள்தொறும் என்று இயல்பில் புணருமா ?அல்லது நாடொறும் என்று ஆகுமா ? சிறிது ஐயம் புதுக் கவிதை வீதியில் வீசும் இளந் தென்றல் காற்று சக்தியவள் மூச்சில் பிறந்த பொதிகைத் தமிழ் பாட்டு ! வாழ்த்துக்கள் அன்புடன்,கவின் சாரலன் 16-May-2017 9:05 am
நன்றி அண்ணா ! 15-May-2017 6:08 pm
நெல்லிக்கனியை தேனில் நனைத்து உண்ட திருப்தி.. தம்பி..! 15-May-2017 5:09 pm
இரா-சந்தோஷ் குமார் - தமிழ் ப்ரியா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Mar-2017 3:55 pm

ஆதலால் என் காதல் பாடட்டும் :

அன்பிற்கு காதல் என பொருள் என்றால்
என் காதலை சொல்கிறேன் கேள்,

பிறை கண்டு உள்ளம் உலறல்கள் கொண்டதால் இயற்கையில் காதல் கொண்டேன்,
என் அன்பிற்கு வித்தான நிலவும் என்னோடு கவிப் பாடட்டும்.

நதியோடு என் கொலுசு சினிங்கி சிரித்ததால் நீரோடு காதல் கொண்டேன்,
ஓசையில் வண்ண மீன்களும் என்னோடு கவிப் பாடட்டும்.

எம் பாரதி வரிகளை தேடி திளைத்தேன்
எழுத்தில் நிதமும் உலாவி களித்தேன்
தமிழின் ரசத்தோடு என் உயிரும்
கவிப் பாடட்டும்.

திமிரோடு நேர்மையின்பால் நேசம் கொண்டேன்
ஆக எதிர்மறை வாதிகளின் முதுகெலும்பு உடைத்து என் வார்த்தைகள் பாடட்டும்.

எவன் ஒருவன் என் உள்ளத

மேலும்

கருத்தில் மனம் மகிழ்ந்தேன், நன்றி சகோதரரே... 30-Mar-2017 3:43 pm
காதலின் மரத்தில் உணர்வுகள் தான் ஆயிரம் கிளைகள் அந்த கிளைகளிலும் லட்சம் நினைவுகள் சருகுகள் 29-Mar-2017 11:53 pm
உணர்வுகள் ஒன்றி எழுதிய கவிவரிகள்.ஓடையில் ஒழுகிஓடும் ஊற்று நீரைப்போல் வெளிவந்த கவித்துவம் மனதை ஒன்றவைத்தது.உதாரணம் பின்வரும் வரிகள்..., எம் பாரதி வரிகளை தேடி திளைத்தேன் எழுத்தில் நிதமும் உலாவி களித்தேன் தமிழின் ரசத்தோடு என் உயிரும் கவிப் பாடட்டும். பிறை கண்டு உள்ளம் உலறல்கள் கொண்டதால் இயற்கையில் காதல் கொண்டேன், என் அன்பிற்கு வித்தான நிலவும் என்னோடு கவிப் பாடட்டும். வாழ்த்துக்கள் சகோதரி தொடர்ந்து எழுதுங்கள்.நன்றி ! 10-Mar-2017 8:59 pm
சுடர்விழி ரா அளித்த படைப்பை (public) ப்ரியா மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
22-Mar-2017 10:26 am

கங்கையும் காவிரியையும்
ஈன்றெடுத்தவளை -இன்று ,
கருணைக்கொலை செய்துவிட்டோம்..

முப்போக விளைச்சலும்
மும்மாரி பொழிந்தவளை-இன்று ,
மூச்சடக்கி மடித்துவிட்டோம்..

சிக்காமல் பறந்த
சிட்டுக்குருவிகளையும் ,
சிட்டாய் சிறகடித்த தும்பிகளையும் -இன்று,
அழித்துவிட்டோம்..

கடல் நீரே குடிநீராய் அதுவும்
கானல் நீராய் போனததற்கான
காரணத்தை -இன்று ,
மறந்துவிட்டோம்...

கனல்வீசும் கோடையும்,
புனல்வீசும் அருவிகளையும்,
தென்றல்வீசும் சோலைகளையும் - ஏனோ - இன்று, இழந்துவிட்டோம்..

சாலையோர மரங்களையும் ,சந்தம்
பாடும் குயில்களையும் மறந்தோம் . பசுமை சரித்திரம்
மறந்த சந்ததிகளுமாய் -இன்று,
ஏனோ

மேலும்

நன்றி பிரியா ... 25-Mar-2017 12:29 am
மிக்க நன்றிகள் ஐயா ... தவறை சுட்டிக்காட்டியமைக்கு... திருத்தி விடுகிறேன்...... . தங்களின் வரவிலும் மகிழ்ச்சி . 25-Mar-2017 12:28 am
படைப்பு எங்கோ அழைத்து செல்கிறது....நிதர்சனம் தோழியே...!! 23-Mar-2017 12:00 pm
மன ஆதங்கத்தைச் சொல்லும் அழகிய கவிதை . சாலையோர மரங்களையும் ,சந்தம் பாடும் குயில்களையும்- சரித்திரம் மறந்த சந்ததிகளுமாய் -இன்று, ஏனோ மாறிவிட்டோம்... ---இதில் பொருள் அல்லது வரி நெருடுகிறதே ? சாலையோர மரங்களையும் ,சந்தம் பாடும் குயில்களையும் மறந்தோம் பசுமை சரித்திரம் மறந்த சந்ததிகளுமாய் இன்று, ஏனோ மாறிவிட்டோம்... ----இப்படி அமைந்தால் பொருள் தரும் மற்றபடி கவிதை மிகச் சிறப்பு. வாழ்த்துக்கள் அன்புடன்,கவின் சாரலன் 23-Mar-2017 9:48 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (718)

த-சுரேஷ்

த-சுரேஷ்

திருவில்லிபுத்தூர்
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவர் பின்தொடர்பவர்கள் (722)

Rajesh Kumar

Rajesh Kumar

கோயம்புத்தூர்
கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
user photo

மா.உ.ஞானசூரி

யாழ்ப்பாணம், தமிழீழம்

இவரை பின்தொடர்பவர்கள் (726)

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே