விவேக்பாரதி - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  விவேக்பாரதி
இடம்:  திருச்சி
பிறந்த தேதி :  22-Oct-1998
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-May-2013
பார்த்தவர்கள்:  2627
புள்ளி:  1928

என்னைப் பற்றி...

தாய் :

சேயெனக் கன்னையாய்ச் சேர்ந்தநற் றோழியாய்ச்
சாயெனத் தோள்தரும் சாமியா யாயினாள்!
ஜானகி என்பாள்! சகிக்கும் குணமிக்காள்!
தேனெனப் பேசும் திரு!

தந்தை :

முன்னாள் கடற்படையில் முந்திப் பணிபுரிந்தார்!
இன்னும் பணிகள் இயற்றுகிறார்! மின்னலெனும்
ஸ்ரீனிவாசன் என்பார் சினமும் குணமும்சேர்
வானிடத்து ஜோதி அவர்!

இளவல் :

இளவ லுடையேன் இழிவெதற்கு மஞ்சேன்!
உளமே நிறைந்த உயிராய் விளங்குகிறான்!
ஸ்ரீவத்ஸ் என்கின்ற சீர்பெயரான்! பாட்டாலே
ஆவர்த்த னஞ்செய் அரசு!

நான் :

மீசை முளைத்து மிளிர்வதற்குள் செந்தமிழ்மேல்
ஆசை வளர்த்திட்ட ஆண்பிள்ளை! பேசுபவை
எல்லாம் உமையின் இயல்பினால் என்றுரைப்பேன்!
சொல்கொண்டு வாழ்வேன் சுவைத்து!


புனைப்பெயர் :

தந்தைபேர் தம்பேர்பின் தாரணியோர் சேர்க்கையிலே,
இந்தக் கவிஞனை ஈன்றெடுத்த தந்தையவன்
பாரதிபேர் என்பேரின் பாதியெனச் சேர்த்துவிவேக்
பாரதியென் றானேன் பணிந்து!

அருள்:

நாற்கவி கற்று நயமாய்க் கவியுறைக்கப்
போற்றுவேன் சக்தியவள் பொற்பாதம்! ஆற்றுகிறாள்
என்னு ளிருந்தே எழுதுகிறாள்! வாழ்விதுவோ
அன்னை யளித்த அருள்!

www.facebook.com/vivekbharathi007
www .vivekbharathipage .blogspot .com

என் படைப்புகள்
விவேக்பாரதி செய்திகள்
சுரேஷ்ராஜா ஜெ அளித்த போட்டியில் (public) sureshgandhi மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்

தற்காலத்தில்....
ஒரு அழகியப் பெண்ணை காதலிக்கும் ஒருவன் கம்பரை வேண்டிக்கொள்கிறான்.
அதனால் அந்த அழகியப் பெண்ணைப் பார்த்து கம்பரே நேரில் வந்து வர்ணித்தால் எப்படி இருக்குமோ அதைப் போன்று ஒரு கவிதையை நீங்கள் எழுத வேண்டும்....

மேலும்

உள்ளத்தை மகிழ்வித்து உணர்வுக்கு உயிரூட்டி உலகுக்கு வழிகாட்டி கண்ணுக்கு ஒளியூட்டி மனத்திற்கு மெருகூட்டி வந்தாய்! கற்பனைக்கு மணாளனாய் !! 20-Nov-2018 4:07 pm
துடிப்பு (Ramya CJ5a251576e92e5) 04-Dec-௨௦௧௭ முதல் பரிசு 29-Oct-2018 5:22 pm
எழுத்து.காம் நிர்வாகத்திடம் முறையிடுக 10-Jan-2018 5:51 pm
இனிது சகோ....உங்கள் குரலில் ஒரு கவிதையை நேரில் கேட்டிருக்கிறேன்.. அதே உச்சரிப்புகளில் மனம் அதுவாக படிக்கிறது...வாழ்த்துக்கள்.. 09-Jan-2018 9:08 pm
விவேக்பாரதி - C. SHANTHI அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Dec-2017 11:01 am

#தீராத விளையாட்டு பிள்ளை

மாயக்கண்ணன் ஜாலங்களை
என்ன சொல்வது - முகுந்தனை
என்ன சொல்வது..!

மண்ணில் உதித்த நாள் முதலாய்
சேட்டைகள் பெரிது - கண்ணன்
சேட்டைகள் பெரிது..!

எதனை எடுத்து சொல்வதுவோ
சேட்டையும் அழகு - அவன்
சேட்டையும் அழகு..!

தொட்டிலிட்ட போதுமவன்
உறங்கவுமில்லை - மாலவன்
உறங்கவுமில்லை..!

உதைத்து தொட்டில் கிழிப்பானே
தொல்லையோ தொல்லை - நித்தம்
தொல்லையோ தொல்லை..!

ஆயர்பாடி வீடுகளில்
ஓடியாடுவான் - அஜயன்
ஓடியாடுவான்..!

அயர்ந்திருந்த நேரமதில்
வெண்ணை திருடுவான் - பானை
வெண்ணை திருடுவான்..!

கையும்களவு மாகமாட்டி
கெஞ்சி கொஞ்சுவான் - கள்ளன்
கெஞ்சி கொஞ்ச

மேலும்

மிக்க நன்றி விவேக்..! 01-Jan-2018 6:42 pm
சபாஷ்! நல்ல கவிதை! அருமையான காட்சி அமைப்புகள்! நல்ல ஓசை நயம்! வாழ்த்துகள் 31-Dec-2017 12:30 am
விவேக்பாரதி - மீ மணிகண்டன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Sep-2017 11:37 am

சிரித்திருந்த தவம்
---------------------------------
இருக்கின்ற இடந்தனிலே பசுமை கொண்டாய்
== இளஞ்சிவப்பில் வான்நோக்கும் வதனம் பூண்டாய்
இதழோடு இதழ்சேர்த்துப் பூவாய் ஆனாய்
== இளமிருட்டில் நீநடிக்கும் பாவை ஆனாய்
இறுமாந்த புன்னகையால் அழகி யானாய்
== இடந்தந்து வண்டிற்கும் தாயாய் ஆனாய்
இருந்திருந்தும் ஒற்றைக்கால் தவத்தில் நீயும்
== இளைத்தாலும் ஒருநாள்தான் ஆயுள் கண்டாய் !

...மீ.மணிகண்டன்
#மணிமீ
09/27/2017

மேலும்

நன்றி தங்களின் கவி மலரின் உச்சம் தொடுகிறது.... வாழ்க வளமுடன் 01-Jan-2018 4:54 am
சபாஷ் அண்ணா...உங்கள் கவிதை என்னைக் கிளர்த்தியது...இப்படி.... ஒற்றைக்கால் தவம்செய்து மோட்சம் வாங்கி உவகையுடன் இருக்கின்ற பூக்கள் போலக் கற்றவரும் வாழ்தற்கிங் கிடமுண் டாமோ? கவிஞர்க்கும் புலவர்க்கும் வழியுண் டாமோ? உற்றவரை எண்ணாமல் மனமெண் ணாமல் உறவின்றி பிரிவின்றி இருக்கும் பூக்கள் மற்றவரை மனந்தன்னை எண்ணி எண்ணி மலர்கொள்ளும் நாம்மட்டும் மயங்கு கின்றோம்! ஒருநாளில் ஆயுள்தான் என்ற போதும் ஒருபோதும் மலர்கவலை கொள்வ தில்லை! இருக்கின்ற தொருநாளே என்று வீணாய் இடருக்குள் வீழ்கின்ற எண்ணம் இல்லை வருத்தங்கள் இல்லாமல் வனப்பை மட்டும் வாரிக்கொ டுக்கின்ற தன்மை கொண்டு இருந்தாலும் மலரைப்போல் இருக்க வேண்டும்! இன்பத்தை மட்டும்நான் ரசிக்க வேண்டும்! மலருக்கு வண்டுவந்தால் இன்பம் இல்லை வாராது போனாலோ துன்பம் இல்லை மலருக்கு மாலையாக ஆசை இல்லை மாலையென ஆனாலும் கவலை இல்லை மலருக்குக் கூந்தல்தொட விருப்பம் இல்லை மணம்வீச அதுநேர்ந்தால் கலக்கம் இல்லை உலகத்தில் மலர்போல வாழ வேண்டும் ஒன்றிற்கும் எதிர்பார்க்காத் தன்மை வேண்டும்!! 30-Dec-2017 4:50 pm
நன்றி வாழ்க வளமுடன் 23-Dec-2017 3:50 am
Nandru 15-Dec-2017 12:02 pm
விவேக்பாரதி - மீ மணிகண்டன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Dec-2017 4:11 am

காக்கிப்பை வரவு
--------------------------------
கடல்தாண்டிப் போனவரும் காகிதம் போட்டுக்
== கணக்காகத் திங்களொரு காலம் போச்சு
உடல்தாண்டி இங்கிருக்கு உசிருன் கூட்டில்
== உரசித்தான் வாழ்ந்திருக்கு ஒயிலே என்று
மடல்வாழை அடுக்காக மடல்தோ ருந்தான்
== மல்லிகைப்பூக் கவிதைவரி மையில் வார்ப்பார்
படித்ததனைத் துணையாகப் பக்கம் வைத்துப்
== படுக்கையிலே புரண்டகனா பலநூ ராச்சு

தலையில்நீர்க் கோர்த்திருக்கத் தடுமன் காணத்
== தாங்காமல் மருந்தொன்று தரவே கேட்டார்
விலைகொடுத்த பலமருந்தும் வீணாய்ப் போக
== விருந்தான தமிழ்மருந்தை வேகம் கேட்டார்
தலைவாழை இலையினிலே சாதம் ஏற்பீர்
== தக்காளி சீரகமும் த

மேலும்

நன்றி விவேக்பாரதி தங்களின் வரிகளில் தலைவி தெளிந்துவிட்டாள் :) வாழ்க வளமுடன் 01-Jan-2018 4:52 am
சபாஷ் மணி அண்ணா.... காக்கிப்பை தபால்காரர் தடத்தைப் பார்த்தே காலங்கள் கழிக்காதே அன்பே என்று வாக்கைத்தான் சொல்லிடவே அவரும் வந்து வாழ்வளித்துக் காப்பாரே கவலை வேண்டா! சீக்கான பசலைநோய் இழுக்கும் சேற்றில் செழுமையி ழக்காதே வாலைப் பெண்ணே தாக்கிவரும் தனிமைக்கு முடிவும் உண்டு தலையணையில் புரண்டழுகக் கனவும் உண்டு !! 30-Dec-2017 4:41 pm
விவேக்பாரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Nov-2017 9:53 pm

பைந்தமிழ்ச்சோலைக் கவியரங்கக் கவிதை

தமிழ் வணக்கம்

ஆருயிரி னுள்ளும் அறிவோ டணுவணுவாய்ச்
சீருறவே வீற்றிருக்கும் செந்தமிழே - பாருனக்குச்
சின்னஞ் சிறுகவிஞன் சிந்தும் வணக்கங்கள் !
என்னை இயக்கி எழு !

வழி மறந்த பயணங்கள்

வந்தவழி எந்தவழி செல்லும்வழி என்னவழி
வந்ததுவும் ஏனிந்த ஊரில் - இதன்
வாய்மைநிலை சொல்லுவர்யார் பாரில் - ஒரு
சொந்தவழி ஏதுமிலை சூத்திர மறிந்ததுபோல்
சொந்தபந்தம் சொல்வதெலாம் நாடி - அதைச்
சோதிக்கா தோடுகிறோம் தேடி !

முன்னவரும் சொன்னவழி முற்றிலுமு கந்தவழி
மூளையிலே இந்நினைவைத் தேக்கி - நாம்
முந்துகிறோம் நேரமதைப் போக்கி - அவர்
சொன்னவழி உண்மைதனைக் கண்டுணர வேண்டுமதைச்
சோதன

மேலும்

விவேக்பாரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Oct-2017 12:57 pm

ஈரோடு தமிழ்ச்சங்கப் பேரவையின் கவியரங்கத்தில் பாடியது.

தமிழ் வணக்கம் :

முதல்மாந்தன் நாவிலே முத்தாய்ப் பிறந்தவள் !
முத்தாய்ப்பும் ஆகின்றவள் !
நிதம்நூறு பாஷைகள் வந்தாலும் வீழ்ந்தாலும்
நிற்கின்ற உயரோசையள் !
விதவிதப் பாசொல்லும் வித்தகர் நெஞ்சிலே
வீற்றர சாளும்தமிழின்
பதம்பற்றி இச்சிறுவன் பாசெய்ய வந்தனன்
பைந்தமிழ் என்னைக் காக்க !!

அவை வணக்கம் & அடக்கம்

தன்னே ரில்லாத் தமிழைக் கவிதையைப்
பொன்னாகப் போற்றிப் பொலிவோடு பாடுகின்ற
காரோட்டும் வானம் கமழ்கின்ற செந்தமிழ
ஈரோட்டுப் பாமன்றை இவ்வுலகு வாழ்த்தட்டும் !
சொல்லை எடுத்ததனைச் சொக்கும் கவியாக்க
வல்ல கவிஞர் வரிசையிலே இத்தளிரும்
சொல்லு

மேலும்

அருமை... அருமை! நண்பர் விவேக் பாரதியின் கவி என்றுமே அருமை.வாழ்த்துக்கள் 01-Nov-2017 10:02 am
நான் முகநூலில் உங்கள் பதிவை பார்த்தேன் மனம் மகிழ்ந்தேன் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 31-Oct-2017 11:11 pm
விவேக்பாரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Oct-2017 12:54 pm

வந்துவீழும் சொற்களுக்கு வரையமைக்க முடியுமா ? - அவள்
வாழ்த்துத்தரும் பாடலுக்கு மறுப்புச்சொல்ல இயலுமா ?
சந்தநயம் துள்ளும்நடை கவிதைவந்து கொட்டவே - அதைச்
சற்றுநேரம் கழித்துவரச் சொல்லுவதும் நியாயமா ?

மூக்குவழி சுவாசங்கள் வந்துவந்து சென்றிடும் - அம்
முயற்சியோடு என்கவிதை நிலையைவைத்துப் பார்த்திடில்
வீச்சில்கூட மூச்சுபோல வீரமாக பாயுமே - அது
விளையாடித் தலையாட்டி விந்தைபல ஆக்குமே !

எந்தநேரம் கவிதைவரும் சொல்லுபவர் எங்குளார் ? - அதன்
ஏக்கமென்ன நோக்கமென்ன கண்டவர்கள் எங்குளார்
வந்துபோகும் மின்னல்கீற்றை வகைப்படுத்த முடியுமா - மனம்
வார்த்தைமழை சிந்துகையில் கோத்திடாமல் விடியுமா ?,

யார்கொடுக்க

மேலும்

மரணம் வரை தமிழ் மீது கொண்ட தாகம் தீராது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 31-Oct-2017 11:07 pm
விவேக்பாரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Oct-2017 12:53 pm

வாழ்த்துக்கள் சூழ்கின்ற வாழ்க்கை வேண்டும் ! சக்தி
வாழ்கின்ற நெஞ்சு வேண்டும் !
வாசத்தில் குன்றாத செந்தமிழ்ப் பூ நெஞ்சில்
வந்து பூத்தாட வேண்டும் !
வீழ்கின்ற வேளையில் வந்தென்னைத் தாங்கிடும்
வீரரின் உறவு வேண்டும் !
வீணாக ஒருநாளும் கழியாது பொழுதெலாம்
வித்தகம் செய்ய வேண்டும் !

நீள்கின்ற நாட்களின் நெளிவிலே மூழ்காமல்
நீந்திடும் கல்வி வேண்டும் !
நினைவெலாம் நிறைவெலாம் எந்நாளும் வையத்தின்
நீடுபுகழ் பாட வேண்டும் !
ஆள்கின்ற தெய்வத்தின் அருளாசியாய்க் கவிதை
அகத்திலே கொட்ட வேண்டும் !
அன்பர்க்கும் வம்பர்க்கும் நல்லதே எண்ணிடும்
அற்புதச் சிந்தை வேண்டும் !!

கண்ணிலே காந்தியும் நெஞ்சிலே வீரமும்

மேலும்

நிராசை எல்லாம் வரமாய் அரங்கேறி வசந்தமாய் உங்கள் வாழ்க்கை அமைய நானும் பிரார்த்திக்கிறேன் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 31-Oct-2017 11:06 pm
agan அளித்த படைப்பை (public) உதயகுமார் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
17-Aug-2015 7:07 am

இது வரை பங்களிப்பு அளித்துள்ளோர்:
தோழர்கள்.
முரளி
ராஐன்
வேளாங்கண்ணி இரட்டையர்
உமை
சிவானந்தன்
பழனிகுமார்
சுந்தரேசன் புருசஷோத்தமன்
கருணாநிதி
சுசிந்தரன்
ஆதிநாடா
ஜின்னா
குமரேசன்
கிருபா கணேஷ்


அதிக தொகை அளிப்பதை தவிர்க்கவும்.

அக்டோபரில் சென்னையில் விழா நிகழும் சரியான நாள் இடம் விரைவில் அறிவிக்கப்படும்.

பலருக்கும் பகிரவும்.

மேலும்

கவித்தாசபாபதி அளித்த படைப்பை (public) குமரேசன் கிருஷ்ணன் மற்றும் 8 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
20-May-2015 7:44 pm

எந்நாளும் உன்பேர் சொன்னாலே போதும் என்வாழ்வு மிங்கே எழிலாகும்
---பொன்னாரம் பூண்ட மின்னாடும் மேனி என்வாழ்வைச் சேர்ந்த எழிலாகும்
செந்தாழம் பூவைக் கண்டாடும் கொங்கை கொண்டாளே தாயே உமையாளே
---உன்னாசி அன்றி வேறேது இங்கே என்பாவைக் காக்கும் ஒளியோசொல் !
சிந்தோடு சந்தம் வந்தாடும் வண்ணம் என்னோடு தாராய்த் தமிழாறை
---முன்னோர்கள் போற்ற முன்னேகி நானும் பொன்னான பாக்கள் பலபாடக்
கந்தோனின் கையில் அன்றோர்நாள் தாயே தந்தாயே வேலை அதுபோலே
---உன்சேயா மென்றன் கையோடு நீயும் தந்தாலே போதும் கவிவேலை !


எந்நாளும் செந்தாழம் சிந்தோடு கந்தோனின், பொன்னாரம் உன்னாசி முன்னோர்கள் உன்சேயா , எழிலாகும் எழிலாகும் உமை

மேலும்

மரபு கவி பாடும் நண்பர் விவேக் பாரதி வணக்கத்திற்கு உரியவர், அவரைப் பற்றிய இப்பதிவும் சாலச்சிறந்ததே வாழ்த்துக்கள் தோழர் கவித்தா சபாபதி . 13-Jun-2015 11:57 pm
மரபு மாறாமல் மற்றதை சேராமல் கூறி இருப்பது சிறப்பு... மரபு எப்போதும் மரபு மாறாமல் பேசப் படுவதுதான் சால சிறந்தது... அப்படி என்றால் இதுவும் அந்த வகையில் சேரும்... மிக சிறப்பு தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 29-May-2015 12:44 am
நிச்சயம் செய்கிறேன் ...நேற்று ஏறக்குறைய 7 ,8 பதிவுகள் படித்தேன் ...அருமையாக இருந்தது ...நீங்கள் சொல்லித்தான் இப்படி ஒரு தொடர் இருப்பதே தெரிந்தது நன்றி..நன்றி 24-May-2015 8:55 am
மிக்க நன்றி என் பக்கம் 9 கட்டுரைகள் இருக்கும் yugangal இன் வானில். தோழமைகள் எழுதிய 23 படைப்புகள். நேரம் கிடைக்கும்போது பார்த்து மனதில் படுவதை உரைத்தால் தொடரை செப்பனிட உதவும். 23-May-2015 5:17 pm
பொள்ளாச்சி அபி அளித்த எண்ணத்தை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
30-Apr-2015 3:22 pm

பொள்ளாச்சி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்,கலைஞர்கள் சங்கம் -மாதாந்திர இலக்கிய சந்திப்பு. வாய்ப்பு உள்ளவர்கள் வருக..!

மேலும்

"பொள்ளாச்சி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்,கலைஞர்கள் சங்கம் என்ற எண்ணத்தை manimegalaimani, vivekbharathi, சர்நா, இராஜ்குமார் Ycantu, thaagu, sarabass, Punitha Velanganni ஆகிய 7 உறுப்பினர்கள் பகிர்ந்து கொண்டதற்கு எனது நன்றிகள்.! 02-May-2015 1:10 pm
Shyamala Rajasekar அளித்த படைப்பை (public) ராம் மூர்த்தி மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
13-Apr-2015 5:22 pm

அங்கக் குறைபாடால் அல்லலுற வேண்டாமே
தங்கமகன் காத்திடுவான் தாயுனை - மங்கையே!
பாலகனின் பாசமும் பக்கத் துணையிருக்க
சீலமாய் வாழ்வாய் சிறந்து .

மேலும்

மிக்க நன்றி ! 18-Apr-2015 3:11 pm
மிக்க நன்றி சாந்தி ! 18-Apr-2015 3:10 pm
மிக்க நன்றிம்மா ! 18-Apr-2015 3:09 pm
மிக்க நன்றி ! 18-Apr-2015 3:09 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (141)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அஹமத் நஸீப்

அஹமத் நஸீப்

மாவனெல்லா, ஸ்ரீ Lanka
IswaryaRajagopal

IswaryaRajagopal

Banglore

இவர் பின்தொடர்பவர்கள் (142)

பாலமுதன் ஆ

பாலமுதன் ஆ

கொத்தமங்கலம(புதுக்கோட்டை
எழுத்து

எழுத்து

கோயம்புத்தூர்

இவரை பின்தொடர்பவர்கள் (142)

ஆவாரம் பூ

ஆவாரம் பூ

தமிழ்நாடு
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே