கங்கைமணி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கங்கைமணி
இடம்:  மதுரை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Jan-2013
பார்த்தவர்கள்:  1679
புள்ளி:  413

என்னைப் பற்றி...

அன்புடன் வணங்குகிறேன்.
என் தாயவளை வணங்குகிறேன்.இந்தியத்தாய் அவளை வணங்குகிறேன்.கடவுளை வணங்குகிறேன்.எனது கவித்திறனை வணங்குகிறேன்.இப்பக்கங்களை புரட்டும் உமது விரல்களை வணங்குகிறேன்.
நான் எனது தாய் நாட்டின் சுவாசத்தில் வளர்ந்தவன்,வளர்ப்பவன்,வளர்ந்துகொண்டிருப்பவன். எனது நினைவுகளை.கருத்துக்களை.உணர்வுகளை கவிதையாக்குகிறேன்.என்னைப்பொறுத்தவரை பொய்களின் வர்ணனைகளை(உவமைகளை) அணிகலன்களாகக்கொள்வதே கவிதை என்கிறேன்.ஆனால் அதன் கருத்துக்கள் ஒருபோதும் பொய்யாக்கா?!. எனது கவிதைகளில் இயற்கையை இணைப்பதை இயல்பாகக் கொண்டவன். நான் கவிதை எழுதுவது நான் ரசிக்க.எனது ரசனையை பிறர் ரசித்து பாராட்ட மேலும் எனது மன அமைதிக்காக.எனது மனக்கொந்தளிப்புக்களை கவிதை வடிவில் கிறுக்கி தீர்த்துக்கொள்பவன் இந்த கிறுக்கன்.
எனது கருத்துக்கள் அனைத்தும் உண்மை,தவறொன்றும் இல்லை என்று வாதாட நான் ஒன்றும் முற்றும் தெரிந்து துறந்த முனிவனல்ல.இக்கால சூழலில் சுழலவந்த ஒரு சிறுவனே.நான் ஏமார்ந்தது.என்னை மட்டுப்படுத்துவது எனது சோம்பல் தனமே!. அதனாலேயே எனது படைப்புக்களில் எவ்வளவோ மறந்து போயின.,மறைந்தும் போயின.எனது நினைவில் நின்றவர்களை மாத்திரம் இதில் எழுதுகிறேன்.எனது புதிய படைப்புக்களையும் படைக்கிறேன்!... இனி புரட்டட்டும் உமது விரல்கள் எனது பக்கங்களை.
அன்புடன்
-கங்கைமணி

என் படைப்புகள்
கங்கைமணி செய்திகள்
கங்கைமணி - மெய்யன் நடராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Jul-2024 1:53 am

*************
விடுமுறை வழங்கப்பட்ட
பள்ளிக்கூடத்தில்
ஓடித்திரியும் எலிகளைப்போல
சுதந்திரமாயத் திரியும் சாரை
*
படகு சேவைக்குப்
பகிரங்க விடுமுறை
அறிவிப்பு விடும்
*
கொக்குகள்
கருவாடு உண்ணும்
நிலைமைக்குத் தள்ளப்பட்டிருப்பதற்கான
உறுதிப் பத்திரம் வழங்கும்
*
நீர் நின்றத் தடங்கள்
பாறைகளும் பாவாடைக் கட்டியிருந்தன என்பதற்கான
அடையாளம் காட்டும்
*
தூரத்து ஊரொன்றில்
கவிழ்ந்த படகில் மூழ்கி மரித்த
எவரோ ஒருவரின்
இடுப்பு வேட்டித்துண்டைப்
பதுக்கி வைத்திருந்தப்
பாறை மனசு வெளிச்சத்திற்கு
வந்து விடும்
*
விதைநெல்லை விற்று
அரிசிவாங்கும் விவசாயியின்
கண்களில் நதிபாய

மேலும்

அருமை 26-Jul-2024 11:19 pm
கங்கைமணி - மனக்கவிஞன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jul-2024 1:34 pm

மரம்
ஒப்பனை செய்ய
வானிடமும் மண்ணிடமும்
கேட்டது

மரத்தடியில் ஒரு கண்ணாடி சகதி

-மனக்கவிஞன்

மேலும்

நன்றி தோழரே 29-Jul-2024 8:52 pm
அருமை ! வாழ்த்துக்கள் 26-Jul-2024 11:17 pm
கங்கைமணி - C. SHANTHI அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Jul-2024 11:26 am

#அப்பா என்றழைக்கிறது கவிதை..!

கவிதைக்குக் கரு கேட்டேன்
எடுத்துக்கொள் என்றாள்..!

எடுத்தேன்… கொடுத்தாள்
கொடுத்தேன்… எடுத்தாள்..!

கைகால் முளைத்தது
அவளை முட்டி உதைத்தது...
என்னை அப்பா என்றழைக்கிறது
இப்போது கவிதை..!..

#சொ. சாந்தி

மேலும்

ஆஹா !!!! வியந்தேன் ! உண்மையில் மிகசிறந்த படைப்பு ..., நான் இரசித்த இன்றய மிகசிறந்த கவிதை இது வாழ்த்துக்கள் கைகால் முளைத்தது அவளை முட்டி உதைத்தது... என்னை அப்பா என்றழைக்கிறது இப்போது கவிதை..!. அருமையான வரிகள் இது போன்று நிறைய கவிதைகள் படைக்க வாழ்த்துக்கள் 26-Jul-2024 11:11 pm
கங்கைமணி - C. SHANTHI அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Jul-2024 11:26 am

#அப்பா என்றழைக்கிறது கவிதை..!

கவிதைக்குக் கரு கேட்டேன்
எடுத்துக்கொள் என்றாள்..!

எடுத்தேன்… கொடுத்தாள்
கொடுத்தேன்… எடுத்தாள்..!

கைகால் முளைத்தது
அவளை முட்டி உதைத்தது...
என்னை அப்பா என்றழைக்கிறது
இப்போது கவிதை..!..

#சொ. சாந்தி

மேலும்

ஆஹா !!!! வியந்தேன் ! உண்மையில் மிகசிறந்த படைப்பு ..., நான் இரசித்த இன்றய மிகசிறந்த கவிதை இது வாழ்த்துக்கள் கைகால் முளைத்தது அவளை முட்டி உதைத்தது... என்னை அப்பா என்றழைக்கிறது இப்போது கவிதை..!. அருமையான வரிகள் இது போன்று நிறைய கவிதைகள் படைக்க வாழ்த்துக்கள் 26-Jul-2024 11:11 pm
கங்கைமணி - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Jul-2024 4:36 pm

மனக்கத வைத்திறந்து மௌனமாய்நீ வந்தாய்
எனக்குள்ளே வானவில் ஏழு நிறத்தில்
இனந்தெ ரியாஉணர்வு எண்ணத்தில் உந்தன்
நினைவுகளின் சாரல் மழை

மேலும்

கருத்திற்கு மிக்க நன்றி கவிப்பிரிய கங்கைமணி 27-Jul-2024 7:14 am
அருமை ஐயா ! வாழ்த்துக்கள் 26-Jul-2024 11:07 pm
கங்கைமணி - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jul-2024 4:30 pm

அளவில்லா அன்பிற்கு
ஏங்குகிறது உலகம்

தாய் மடி தேடும் குழந்தை
தனைமறந்தனைக்கும் அன்னை
ஈடில்லா இன்பம் இங்கே
இதை தந்த தெய்வம் எங்கே !

மகளென்றும் தெரியாது
மகனென்றும் தெரியாது
தாயென்ற உணர்வுக்கு
அணைக்கத்தான் தெரிகிறது .

படைத்தவனின் விந்தையைப்பார்
பகுத்துவைத்தான் உயிர்களை
பொதுவில் வைத்தான் தாய்மையை

இங்கே ...!
தாயும் சேயும்
ஒன்றாகிப்போனபிறகு
பெற்றோர் யாராகஇருந்தாலென்ன !

தாயன்பின் மகத்துவமிது
உயிர்களின் தனித்துவமிது

பலநேரங்களில் ....,
ஐந்தறிவிடம் ஆறறிவு
அடிபட்டுப்போகிறது .

நோய் தீர்க்கும் மருந்தொன்று
உண்டென்றால் இவ்வுலகில் அது
தாயன்பு மட்டும்தான்

நாம் எத்தனைமுறை
வேண்டுமானாலும

மேலும்

வணக்கம் ஐயா ! நீண்ட இடைவெளிக்கு பிறகு என் கவிதையில் தாங்களின் கருத்தை கண்டு மிகிழ்கிறேன் . மிக்க நன்றி ஐயா 26-Jul-2024 10:41 pm
பகுத்துவைத்தான் உயிர்களை பொதுவில் வைத்தான் தாய்மையை ----அழகிய வரிகள் அருமை படமும் கவிதையும் ஐயறிவு பசுவின் அணைப்பில் குழந்தை அழாமல் சிரித்துக் கொண்டிருக்கிறதே அது இன்னும் அருமை அதிசயம் ! 12-Jul-2024 8:37 pm
கங்கைமணி - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Mar-2024 11:07 pm

உன் எண்ணத்தை
எடுத்தெறிய நினைக்கிறேன் .., முடியவில்லை !

உன் எண்ணம் திடப்பொருளாக இருந்தால் ...,
கரம் கொண்டு பிய்த்து எறிந்துவிடுவேன் .

உன் எண்ணம் எழுத்தாக இருந்தால் ,
எதையாவது ஊற்றி அழித்துவிடுவேன் !

எனக்காக அரும்பாத இதயத்தின் எண்ணம்
எனக்கெதற்கு ?

பார்த்து பார்த்து ரசித்த
உன் பார்வை படுத்தும் பாடு
மிகக்கொடித்து !

விழுப்புண் ஆணுக்கு அழகு !
விழிப்புண் உண்மையில் கொடிது .

நான் ...,
பறக்கநினைக்கும் போதெல்லாம்
பணிவிழுந்து பதத்துப்போகும் சருகாகிப்போகிறேன்
உன் நினைவால் !

நான் உரக்க காத்துக்கிறேன்
ஊருக்கே கேட்கிறது
உனக்குமட்டும் கேட்கவில்லை .

மேலும்

கங்கைமணி - கங்கைமணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Feb-2018 12:38 am

என் காதலி !....
கலையும் கனவினில் வந்து போகிறாள்
கலையாதோர் இன்பக் கவிதை யாகிறாள்
பூமி புத்தகம் திறந்து காட்டிய
புதிய பூவென பிறந்த மகளிவள்.

என் தாயின் சேலையின் தலைப்பை போன்றவள்
பூவை இனத்திலோர் புதிய வரவினல்
கருகூட்டி வளர்ந்திடும் இன்ப காதலால்
உயிரான ஓவியம் போல வாழ்கிறாள்.

மாலைநேரம் என் மனதை ஆள்கிறாள்
மலர்ந்த மனதில் தேன்துளியாய் விழுகிறாள்.
சாலை மலர்களாய் உதிர்ந்து ஓடுமவள்
லீலை நாடகம் நினைவை அள்ளுதே !

அரும்பும் மலர்களில் இருக்கும் தேனென
உருகி உருகி என்னுள்ளே பாய்ந்தவள்,
ஊமை வாயெனை உளற வைக்கிறாள்
உளறும் நவிலவள் நாமம் இசைக்கிறாள்.

தேகம் சமைக்கிறாள் தீண்ட தடுக்கிறா

மேலும்

மணமேடை ஏற்றி உனை மாலை மாற்றி மார்போடு சாய்த்து உன் அழகை அள்ளுவேன். ----அழகிய கவிதை அழகிய சித்திரம் 10-Mar-2023 9:00 am
மிக்க மகிழ்ச்சி.மனம் நிறைந்த நன்றிகள் 04-Feb-2018 10:56 pm
என் கவிதையை படித்து அதை இரசித்து கருத்திட்டமைக்கு, நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பரே ! 04-Feb-2018 10:55 pm
நன்றி நண்பா ! தங்களின் தொடர் ஊக்கம் என்னை உயர்த்துகிறது.மிக்க மகிழ்ச்சி 04-Feb-2018 10:53 pm
கங்கைமணி - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Mar-2019 12:40 am

ஏய் !..சமுதாயமே !
என்ன பார்க்கிறாய் ?!
ஆணும் பெண்ணும்
பழகுவது தவறென்றோ ?.

கேள்....,

அன்னப்பறவையாய்
பகுத்து தவறென்றால் ,
ஆணும் பெண்ணும்
பழகுவது தவறுதான்.

உப்பின் உவர்ப்பின்
உடன்படு தவறென்றால் ,
பெண்ணின் ஆணின்
நட்பது தவறுதான்.

பால்பிரித்து பழகுவதே நட்பென்றால்,
நட்பென ஓன்று இருப்பதே தவறுதான்.

நட்புணர்வு என்னவென்று-
தெரியுமோ உமக்கு.
தெரிந்திருந்தால் அந்நியரை
தடம் பாதிக்க விடுவாயோ?!.

நட்புணர்வே தெரியாத நீ
நட்போரை நகைப்பதும்
பழமையை விதைத்து
பயிராக்க பார்ப்பதும் முறையோ jQuery171026712429258255743_1552677062773?!

-கங்கைமணி

மேலும்

தங்கள் கருத்து மிக அருமை.. ஆண் , பெண் இரண்டுமே பால் பாகுபாடு மட்டுமே நட்பிற்கு இல்லை... 28-Feb-2020 2:53 pm
நவீன விஞ்ஞான உலகச் சிந்தனைக் கருத்துக்கள் பாராட்டுக்கள் தொடரட்டும் தங்கள் இலக்கிய படைப்புகள் 26-Jun-2019 6:19 am
கங்கைமணி - வேலாயுதம் ஆவுடையப்பன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Mar-2019 2:01 pm

....

தாய் பாசம் உள்ளவர்களுக்கு இந்த கவிதை வலி புரியும்....

அம்மா...
நான் பிறந்து
விழுந்த போது...
உன் ( 👉 ) சேலைதான்
ஈரமானது...

நான் உறங்க...
உன் ( 👉 ) சேலைதான்
ஊஞ்சல் ஆனது..
.
நான் பால்
அருந்தும் போது...
உதட்டினை துடைத்தது
உன் (👉)சேலை தான்...

எனக்கு பால்
கொடுக்கும்போது...
உன் (👉)சேலை தான்
எனக்கு திரையானது...

நான் மழையில்
நனையாமல் இருக்க...
உன் (👉)சேலை
தான் குடையானது...

நீச்சல் பழக...
என் இடுப்பில் கட்டியதும்
உன் (👉)சேலை தான்...

மழையில் நனைந்த
என் தலையை...
துவட்டியதும்
உன் (👉)சேலை தான்...

மாம்பழம் தின்று
என் கை துடைத்ததும்
உன் (👉)சேலை தானம்மா...

மேலும்

migavum sirappu ayya. 09-Mar-2019 8:04 pm
அம்மாவின் நீங்காத நினைவலைகளில் வெளிவந்திருக்கிறது இந்த வரிகள்.என் மனதை சற்று வருடிக்கொடுக்கிறது இக்கவிதை.அம்மாவின் சேலை ஒரு அழகான ஆனந்த சோலை.அதற்குள் கண்ணீரும் இருக்கும்,காயமும் இருக்கும்,வியர்வையும் இருக்கும்,விரக்தியும் இருக்கும்.ஆனாலும் அது என்றும் ஆனந்த பூங்காற்றை மட்டுமே நமக்கு வருடக்கொடுக்கும். ஐயா இக்கவிதையில் தாங்கள் அம்மாவோடு வாழ்ந்துவிட்டீர்கள்.வாழ்த்துக்கள் அந்த வரம் பெற்றமைக்கு. 09-Mar-2019 5:54 pm
கங்கைமணி - சொ பாஸ்கரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Aug-2018 4:05 pm

திருநங்கை

ஆணும் பெண்ணும் கலந்த கலவை – இது
ஆண்மை குறைத்த ஆண்டவன் சலவை

முள்ளுள் மலரை மூழ்கச் செய்து - புது
மூன்றாம் பாலாய் செய்தான் கைது

நளினம் மிகுந்த நர்த்தனப் பிறவி - கவி
நயமிகுப் பேச்சால் கவரும் குலவி

கருவறை தானே அவர்க்கும் பிறப்பிடம் – இது
கடவுள் தெரிந்தே செய்த கலப்படம்

கள்ளம் கபடம் இல்லா சிந்தை – இவர்
உள்ளம் எங்கும் கவலையின் மந்தை

முக்கனி மூன்றும் இணைந்த கலப்பு - இது
முன்னாள் தொட்டே தோன்றிய பிறப்பு

பாறையும் பூவும் கலந்த தேகம் - இது
பிரம்மன் செய்த

மேலும்

நன்றி 14-Sep-2018 11:53 am
வார்த்தைகள் , வரிகள் , கவிதை சுமந்த கரு ... அனைத்தும் அருமை . 31-Aug-2018 5:49 pm
அருமை ...அருமை ! மிக அருமை.கவிதை மிக அழகாக அமைந்திருக்கிறது வாழ்த்துக்கள். நான் மிகவும் இரசித்த வரிகள் ..., அல்லும் பகலும் இணைந்தால் அந்தி - இது அள்ளிப் புசித்திட இயலாப் பந்தி கருவறை தானே அவர்க்கும் பிறப்பிடம் – இது கடவுள் தெரிந்தே செய்த கலப்படம் ...சூப்பர் !!! 31-Aug-2018 3:23 am
நன்றி 30-Aug-2018 6:46 pm
கங்கைமணி - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Aug-2018 8:41 am

பிறந்தநாள் வாழ்த்து.


என்ன கேட்டாய் என் நண்பா !
எனைப்பார்த்து கேட்டாய் ஏன் நண்பா !
வாழ்த்துன்னை சொல்ல வயதில்லை என்றோ ?!
வயல்வெளி நீராய் வற்றினேன் என்றோ!?
நான் உனை வாழ்த்தாது தூங்கினள் நன்றோ!
நண்பனின் பிறந்தநாள் மறப்பவர் உண்டோ ?!!

கண்ணொளி மறைப்பது இமையே!...ஆயினும்
காப்பதும் அதுவே ஞாபகம் கொள்.

பொன்னெடுத் துன்னிடம் வரவில்லை யேனும்,
பொருளெடுத் துன்னிடம் தரவில்லை யேனும்,
கண்ணெடுத் துன்னெழில் காணேன் ஆயினும்.

கண்ணினும் மேல்..,கருத்தினும் மேல்..,
என்னுயிரினும் மேல்..,இவ்வுலகினும் மேல் என.,
மூவுலகறிந்தவர் ஆன்றோர் சான்றோர் ..,
ஆயிர யுகங்களாய் போற்றியே புகழ்ந்திட்ட
நற்ப்பெரும்

மேலும்

இன்று மலர்ந்த கோடானுக் கோடி மலர்கள் சார்பாக உன்னை வாழ்த்துகிறேன்.., ******************************************** நம் எழுத்து தள குடும்ப நண்பர்களின் சார்பாகவும் என் குடும்பத்தினர் சார்பாகவும் நல்லாசிகள் தெரிவித்துக் கொள்கிறேன் 31-Aug-2018 4:34 pm
இது வாழ்த்து மடல் அல்ல ,உணர்வுகளின் வார்த்தைக் கோர்வை ,உண்மை உள்ளத்தின் வெளிப்பாடு ,அன்பு அலைகளின் பாய்ச்சல் ,நட்பின் வரிவடிவம் ,வாழ்த்திய கங்கைமணி அவர்களுக்கும் ,வாழ்த்தை பெறுவதற்கு முழுதகுதி பெற்ற அருமை நண்பர் முகமது சர்பான் அவர்களுக்கும் எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் 29-Aug-2018 7:21 am
மனம் நிறைந்த நன்றிகள் 28-Aug-2018 11:17 pm
மிக அருமை ஒரு நண்பனுக்கு இதை விட சிறப்பாக பிறந்த நாள் வாழ்த்துகள் கூற முடியாது ....வாழ்த்துகள் 28-Aug-2018 9:06 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (217)

இளவல்

இளவல்

மணப்பாடு
ஆர் எஸ் கலா

ஆர் எஸ் கலா

மலேசியா
ஜான்

ஜான்

அருப்புக்கோட்டை
வினோ

வினோ

துபாய்

இவர் பின்தொடர்பவர்கள் (217)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
சிவா

சிவா

Malaysia

இவரை பின்தொடர்பவர்கள் (218)

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே