கங்கைமணி - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : கங்கைமணி |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 27-Jan-2013 |
பார்த்தவர்கள் | : 1477 |
புள்ளி | : 429 |
அன்புடன் வணங்குகிறேன்.
என் தாயவளை வணங்குகிறேன்.இந்தியத்தாய் அவளை வணங்குகிறேன்.கடவுளை வணங்குகிறேன்.எனது கவித்திறனை வணங்குகிறேன்.இப்பக்கங்களை புரட்டும் உமது விரல்களை வணங்குகிறேன்.
நான் எனது தாய் நாட்டின் சுவாசத்தில் வளர்ந்தவன்,வளர்ப்பவன்,வளர்ந்துகொண்டிருப்பவன். எனது நினைவுகளை.கருத்துக்களை.உணர்வுகளை கவிதையாக்குகிறேன்.என்னைப்பொறுத்தவரை பொய்களின் வர்ணனைகளை(உவமைகளை) அணிகலன்களாகக்கொள்வதே கவிதை என்கிறேன்.ஆனால் அதன் கருத்துக்கள் ஒருபோதும் பொய்யாக்கா?!. எனது கவிதைகளில் இயற்கையை இணைப்பதை இயல்பாகக் கொண்டவன். நான் கவிதை எழுதுவது நான் ரசிக்க.எனது ரசனையை பிறர் ரசித்து பாராட்ட மேலும் எனது மன அமைதிக்காக.எனது மனக்கொந்தளிப்புக்களை கவிதை வடிவில் கிறுக்கி தீர்த்துக்கொள்பவன் இந்த கிறுக்கன்.
எனது கருத்துக்கள் அனைத்தும் உண்மை,தவறொன்றும் இல்லை என்று வாதாட நான் ஒன்றும் முற்றும் தெரிந்து துறந்த முனிவனல்ல.இக்கால சூழலில் சுழலவந்த ஒரு சிறுவனே.நான் ஏமார்ந்தது.என்னை மட்டுப்படுத்துவது எனது சோம்பல் தனமே!. அதனாலேயே எனது படைப்புக்களில் எவ்வளவோ மறந்து போயின.,மறைந்தும் போயின.எனது நினைவில் நின்றவர்களை மாத்திரம் இதில் எழுதுகிறேன்.எனது புதிய படைப்புக்களையும் படைக்கிறேன்!... இனி புரட்டட்டும் உமது விரல்கள் எனது பக்கங்களை.
அன்புடன்
-கங்கைமணி
சீனாவில் தோன்றிச் சிதறுண் டுலகெங்கும்
தானாய் பரவித் தலைத்தூக்கித் – தேனாய்
இனித்தநல் வாழ்வில் இழப்புகள் கூட்டி
மனிதரை மாய்த்தாய் மறைந்து.
**
பொல்லாக் கிருமிப் புகழோ உயர்வுற
எல்லா வழிகளும் ஈங்கிருக்க – சொல்லாத்
துயரின் விளிம்புகளில் தோய்ந்த மனிதம்
பயத்தி லுழல்வதை பார்.
**
போர்செய்தும் வீழாப் புகழுடம்பு மன்றாடம்
சீர்கெட்டு வீழும் செயல்தன்னை – யார்செய்து
விட்டனரோ பாரீர். விளைந்த பயிரனைத்தும்
பட்டழிந்து போகிறதே பார்,
**
தனித்திருக்க விட்டுத் தவிக்கவைத்திம் மண்ணின்
புனிதத்தின் மீதொரு போராய் – பனிபோல்
படர்ந்தே கொரோனா பரிணாமம் நீட்டித்
தொடர்கிற தின்னும் துணிந்து.
**
மு
அன்பாக பழகினாய்!!
ஆதரவாக இருந்தாய்!!
இனிதாக பழகினாய்!!
ஈர்ப்புடன் இருந்தாய்!!
உயிராக இருந்தாய்!!
ஊன்று கோலாய் தெரிந்தாய்!!
என்னுயிராய் தெரிந்தாய்!!
ஏமாற்றத்தை கொடுத்தாய்!!!!
ஐம்புலனும் திகைத்தது !!!
ஒன்றும் புரியவில்லை!!!!
ஓ என்று கதறவைத்தாய்!!!
ஒள ளவு தான் உன் அன்பு என்று புரியவைத்தாய்!!!.....
மாசு படுத்திகாற் றைவெம்மை யாக்கிடு
ஓசோனில் ஓட்டை இடுஉயிர் காற்றினை
நாசம்செய் ஆசைதீர வாழறிவி யல்மனிதா
மூச்சுமுக்கி யம்மூட னே !
ஏய் !..சமுதாயமே !
என்ன பார்க்கிறாய் ?!
ஆணும் பெண்ணும்
பழகுவது தவறென்றோ ?.
கேள்....,
அன்னப்பறவையாய்
பகுத்து தவறென்றால் ,
ஆணும் பெண்ணும்
பழகுவது தவறுதான்.
உப்பின் உவர்ப்பின்
உடன்படு தவறென்றால் ,
பெண்ணின் ஆணின்
நட்பது தவறுதான்.
பால்பிரித்து பழகுவதே நட்பென்றால்,
நட்பென ஓன்று இருப்பதே தவறுதான்.
நட்புணர்வு என்னவென்று-
தெரியுமோ உமக்கு.
தெரிந்திருந்தால் அந்நியரை
தடம் பாதிக்க விடுவாயோ?!.
நட்புணர்வே தெரியாத நீ
நட்போரை நகைப்பதும்
பழமையை விதைத்து
பயிராக்க பார்ப்பதும் முறையோ jQuery171026712429258255743_1552677062773?!
-கங்கைமணி
என்னுயிரே...
உன்னிடம் நான்
காதலை சொல்ல...
பல நாட்கள் என் வீட்டு கண்ணாடி
முன் ஒத்திகை பார்த்தேன்...
உள்ளத்தில் இருந்து சொன்னேன்
உன்னிடம் என் காதலை...
அன்று ஏற்று கொண்டவள்
இன்று காலம் கடந்து...
ஒற்றை வார்த்தையில்
சொல்லி விட்டாய்...
என்னை
மறந்துவிடு என்று...
உன்னை
சேரவும் முடியாமல்...
உன்னை
மறக்கவும் முடியாமல்...
ஆற்று சுழலில்
சிக்கியவனை போல தவிக்கிறேன்...
ஒவ்வொரு நிமிடமும்
உன்னை மறக்க முடியாமல்...
வார்த்தையால்
என்னை கொன்றவளே...
நிஜத்தில்
கொன்றுவிடடி என்னை.....
முண்டா பனியனோடும்,
மடித்துக் கட்டிய வேஷ்டியோடும்,
அலைந்து திரிந்து,கடைத்தெருவில்
காய்கறிகள் வாங்கி.
தோலில் ஒரு குடம் ,
கையில் மறு குடம் ,
வெறுங்காலில் தார் சாலையில்
நீரெடுக்க நடந்து
அடுப்படியில் திரிந்து
அனலோடு உழன்று ,அன்றாடம்-
விதவிதமாய் சமைத்து.
வேலையெல்லாம் முடித்து
எல்லோரும் உண்டபின்
ஓய்ந்து அமர்ந்து.,
முதல் நாள் சாதத்தை,தட்டில் இட்டு
சாப்பிடும் பொழுது...,
"சமையல்காரய்யா" என்ற
முதலாளியின் சத்தம் கேட்டு ,
எழுந்து ஓடும் என் அப்பாவின்
உழைப்பில் கிடைத்த பணத்தில்
வாங்கிய "சிகரெட்"
ஓர் நாள்..,!
என்னைப்பார்த்து...,
காரி உமிழ்ந்து,
கொதித்து எரிந்து
....
தாய் பாசம் உள்ளவர்களுக்கு இந்த கவிதை வலி புரியும்....
அம்மா...
நான் பிறந்து
விழுந்த போது...
உன் ( 👉 ) சேலைதான்
ஈரமானது...
நான் உறங்க...
உன் ( 👉 ) சேலைதான்
ஊஞ்சல் ஆனது..
.
நான் பால்
அருந்தும் போது...
உதட்டினை துடைத்தது
உன் (👉)சேலை தான்...
எனக்கு பால்
கொடுக்கும்போது...
உன் (👉)சேலை தான்
எனக்கு திரையானது...
நான் மழையில்
நனையாமல் இருக்க...
உன் (👉)சேலை
தான் குடையானது...
நீச்சல் பழக...
என் இடுப்பில் கட்டியதும்
உன் (👉)சேலை தான்...
மழையில் நனைந்த
என் தலையை...
துவட்டியதும்
உன் (👉)சேலை தான்...
மாம்பழம் தின்று
என் கை துடைத்ததும்
உன் (👉)சேலை தானம்மா...
திருநங்கை
ஆணும் பெண்ணும் கலந்த கலவை – இது
ஆண்மை குறைத்த ஆண்டவன் சலவை
முள்ளுள் மலரை மூழ்கச் செய்து - புது
மூன்றாம் பாலாய் செய்தான் கைது
நளினம் மிகுந்த நர்த்தனப் பிறவி - கவி
நயமிகுப் பேச்சால் கவரும் குலவி
கருவறை தானே அவர்க்கும் பிறப்பிடம் – இது
கடவுள் தெரிந்தே செய்த கலப்படம்
கள்ளம் கபடம் இல்லா சிந்தை – இவர்
உள்ளம் எங்கும் கவலையின் மந்தை
முக்கனி மூன்றும் இணைந்த கலப்பு - இது
முன்னாள் தொட்டே தோன்றிய பிறப்பு
பாறையும் பூவும் கலந்த தேகம் - இது
பிரம்மன் செய்த
பிறந்தநாள் வாழ்த்து.
என்ன கேட்டாய் என் நண்பா !
எனைப்பார்த்து கேட்டாய் ஏன் நண்பா !
வாழ்த்துன்னை சொல்ல வயதில்லை என்றோ ?!
வயல்வெளி நீராய் வற்றினேன் என்றோ!?
நான் உனை வாழ்த்தாது தூங்கினள் நன்றோ!
நண்பனின் பிறந்தநாள் மறப்பவர் உண்டோ ?!!
கண்ணொளி மறைப்பது இமையே!...ஆயினும்
காப்பதும் அதுவே ஞாபகம் கொள்.
பொன்னெடுத் துன்னிடம் வரவில்லை யேனும்,
பொருளெடுத் துன்னிடம் தரவில்லை யேனும்,
கண்ணெடுத் துன்னெழில் காணேன் ஆயினும்.
கண்ணினும் மேல்..,கருத்தினும் மேல்..,
என்னுயிரினும் மேல்..,இவ்வுலகினும் மேல் என.,
மூவுலகறிந்தவர் ஆன்றோர் சான்றோர் ..,
ஆயிர யுகங்களாய் போற்றியே புகழ்ந்திட்ட
நற்ப்பெரும்
(கிராமத்தில் நடக்கும் பொங்கல் பண்டிகையைப்பற்றியும் மற்றும் அந்த ஊரின் தெய்வங்களைப்பற்றியும் ,ஊரைப்பற்றியும் சொல்லிவருகிறது இப்பாடல்.எனது நண்பர் ஒருவரின் ஊரில் நடக்கும் திருவிழாவிற்காக எழுதப்பட்டது.இன்னும் சில தினங்களில் இசையோடு வெளிவரவுள்ளது.நமது நண்பர்களின் பார்வைக்காக பதிவிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.இப்பாடலில் உள்ள குறை நிறைகளை எடுத்துரைத்தாள் மகிழ்வேன் நன்றி)
ஊரு கூடி ஒறவு கூடி
ஒத்துமையா பொங்கவைச்சோம்.
இனிமே துயரேது...,
இனி நமக்கு இதுதான் வரலாறு !
தெய்வமருளும் .. முன்னோர்னருளும்
ஒண்ணுசேர்ந்து பொங்கிவருது .,
இனிமே பயமேது ...,
இனி நமக்கு எல்லாம் ஜெயம்பாரு !
(ஊரு கூடி ஒறவு
ஒண்டியும் அண்டியும்
பிழைப்பு நடத்துவது
மனிதர்கள் மட்டுமல்ல ,
இதோ இந்த ஆடுகளும்தான் !
இங்கே மிருகம் யார் ???!
அடைந்து கிடக்கும் ஆடுகளா,இல்லை
அடைத்துவைத்த மனிதனா ?!.
மிருகவதை சட்டம் ,சில
மனிதமிருகங்களுக்கு-
இல்லையோஎன்னவோ?!
மனிதா...!
உணவாகப்போகும் உயிரென்றாலும்,அதற்கும்
உணர்வுண்டு வதைக்காதே!.
மனிதா...!
வாடிய முகத்தை உற்றுப்பார்-
வதைக்கும் உன்னை வைவது தெரியும்.
மனிதா உன்னைவிட,இந்த
மண்சுவர் எவ்வளவோ மேல்.
-கங்கைமணி
தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாள்
எஸ். செல்வராஜ்,
-கோ. சோ. கவியரசு (மேட்டூர்)
முந்தைய தி.மு.க ஆட்சியில் தை முதல் நாள் தமிழ் புத்தாண்டு என அரசாணை பிறப்பிக்கப்பட்டது. தற்போது ஆட்சி செய்யும் அ.தி.மு.க. அரசு மீண்டும் சித்திரை மாதம் முதல் நாள் தமிழ்புத்தாண்டு என மாற்றி விட்ட நிலையில் உண்மையை உரக்க சொல்ல வேண்டு மென்ற நோக்கில் இக்கட்டுரையை பொது அறிவு உலகம் வெளியிடுகிறது.
சனவரி புத்தாண்டு தமிழருக்கு எவ்விதம் அந்நியமோ அதேபோல சித்திரைப் புத்தாண்டும் தமிழருக்கு அந்நியமே! சித்திரை முதல் நாளில் பிறக்கும் மாதங்களின் பெயர்கள் ஒன்றேனும் தமிழாக இல்லை. சித்திரை முதல் நாள் தமிழர்களின