ஏய் சமுதாயமே
ஏய் !..சமுதாயமே !
என்ன பார்க்கிறாய் ?!
ஆணும் பெண்ணும்
பழகுவது தவறென்றோ ?.
கேள்....,
அன்னப்பறவையாய்
பகுத்து தவறென்றால் ,
ஆணும் பெண்ணும்
பழகுவது தவறுதான்.
உப்பின் உவர்ப்பின்
உடன்படு தவறென்றால் ,
பெண்ணின் ஆணின்
நட்பது தவறுதான்.
பால்பிரித்து பழகுவதே நட்பென்றால்,
நட்பென ஓன்று இருப்பதே தவறுதான்.
நட்புணர்வு என்னவென்று-
தெரியுமோ உமக்கு.
தெரிந்திருந்தால் அந்நியரை
தடம் பாதிக்க விடுவாயோ?!.
நட்புணர்வே தெரியாத நீ
நட்போரை நகைப்பதும்
பழமையை விதைத்து
பயிராக்க பார்ப்பதும் முறையோ jQuery171026712429258255743_1552677062773?!
-கங்கைமணி