கயல்விழி மணிவாசன் - சுயவிவரம்

(Profile)



பரிசு பெற்றவர்
இயற்பெயர்:  கயல்விழி மணிவாசன்
இடம்:  இலங்கை
பிறந்த தேதி :  17-Apr-1997
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  20-Oct-2014
பார்த்தவர்கள்:  30487
புள்ளி:  4564

என்னைப் பற்றி...

காக்கை கூட்டில் குயில்


என் படைப்புகள்
கயல்விழி மணிவாசன் செய்திகள்
கயல்விழி மணிவாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Mar-2017 6:09 pm

வணக்கம்

ஊடகம் ..
இந்த ஊடகம் என்றால் என்ன ?

இன்றைய ஊடகத் துறையின் நிலை தான் என்ன?

பொதுவாக ஊடகத் துறை என்றாலே பலரும் முகம் சுழிக்கக் காரணம் என்ன?

இந்த மீடியாக்களால் தான் இவ்வளவு பிரச்சனை ,விபச்சார மீடியாக்கள்.
இப்படி ஊடகங்களை மக்கள் ஏன் வெறுக்கிறார்கள் இது யாருடைய தவறு .?

ஊடகத் துறை என்பது நீங்கள் நினைப்பது போல் பொழுதுபோக்கு மட்டும் அல்ல
பொறுப்பான துறையும் தான் .

தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை எதுவென்றாலும் உங்களை
சிரிக்கவோ சிந்திக்கவோ
வைத்த படி தான் நகர்கிறது .
நீங்கள் தான்
சிந்திக்க வேண்டிய நேரத்தில் சிரித்து
சிரிக்க வேண்டிய நேரத்தில் சிந்திக்கிறீர்கள் .

மேலும்

மிகத்தெளிவான ஊடகங்களை பற்றியும் ஊடகவியலாளர் படும் பாடுகள் பற்றியும் உண்மைச் செய்திகளை வாசகர்கள் மதிப்பதில்லை என்றும் வெளியிட்டிருந்த ஆதங்கம் புரிகிறது ஏதோ இந்த விளம்பர உலகத்தில் மாயைகளை நம்பி விளம்பரங்களை நம்பி அட்டைப்படத்தை நம்பி படிக்கின்ற வாசகர்களின் மத்தியில் உண்மைகள் எப்போதும் உறங்கி தான் இருக்கின்றன நன்றி 11-Jul-2021 6:25 pm
இன்றைய ஊடகங்கள்... பொறுப்பு உடன் செயல்படுகிறது 25-Apr-2019 10:27 pm
உண்மைதான் கயல்விழி நட்பே. மனிதனின் மூளை இருக்கிறதே, அது சமயத்தில் குழம்பிப் போகும்போது இப்படிப்பட்ட தாறுமாறான எண்ணங்கள் அலட்சிய போக்கு தோன்றத் தான் செய்யும். அனால் ஒன்று இவர்களுக்கு புரிவதில்லை, அதே ஊடகங்கள் அவர்களது அன்றாட தினத்தை நடத்துகின்றன.தங்கள் செய்திகளின் மூலமாக. எதையும் ஆராய்ந்து பார்த்து விட்டுத்தான் கருத்துக் கூற வேண்டும். இந்தக் கடமை ஒவ்வொரு மனிதனின் உரிமைக்கு முன்பிலேயே இருக்கிறது. எங்களுக்கும் சேர்த்து நீங்கள் சாடியதற்கு நன்றி. 19-Sep-2018 10:50 pm
நீங்கள் கூறும் அனைத்தும் உண்மையான விஷயங்கள் ...ஆனால் இதை இந்த சமூகம் ...ஏற்க மறுக்கிறதே ...போராட்டம் என்ற ஒன்றை தேடி தான் நாம் அனைத்தும் பெற வேண்டிய கட்டாயம் ..இப்பொழுது ....... 26-Jul-2018 12:43 pm
சிவநாதன் அளித்த படைப்பை (public) jathurshan vasanthakumar மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
17-Apr-2016 1:43 am

உயிர் உள்ள சொற்கள்
தேடி உயிர் விட்டுக்
கொண்டிருந்ததொரு
கவிதை

மனவெளியில்
எண்ணச்
சருகுகள்
அங்கங்கே
சிதறிக் கிடைக்க

தனிமைக் கதவின்
தாழ்ப்பாள் திறந்து
நினைவெனும்
தாழ்வாரங்களில்
நிலையில்லாது வழியும்
ஞாபக மழையில்
நனைந்து கொள்கிறேன்.

கனவெனும்
தட்டாம் பூச்சி
சிறகு வழி வானம்
வரை உயர்கிறேன்.

வான் தொடும்
விருட்சங்கள் எழுதி
முடிக்கா கவிதைகளில்
படிக்க மறந்த
சொற்களை காற்றிடம்
கடன் வாங்கிக்கொள்கிறேன்

ஈரப் புற்களில்
இழையும் துளியில்
ஓவ்வோர் சொற்களையும்
கோர்த்துக் கொள்கிறேன்

உயிர்த்துக் கொள்கிறது
ஒவ்வோர் வரிகளும்
கவிதையாய்..

எங்கிருந்தோ

மேலும்

மிக அருமை கவிஞரே 11-Jul-2021 6:28 pm
எதையும் விடுத்துவிட்டு எடுத்துக்காட்டு (மேற்கொள்) இயலவில்லை, அந்த அளவிற்கு அருமையாய் இருக்கு; சிறப்பு. 23-Nov-2017 2:59 pm
அற்புதக் கற்பனை... அதீத அழகுறும் வார்த்தைகள்...வாழ்த்துக்கள் 18-Jan-2017 3:42 am
அருமை 15-Sep-2016 9:13 am
கயல்விழி மணிவாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Apr-2016 7:15 am

ஊடலும் கூடலும்----கயல்விழி

எத்தனை
மணித்தியாலங்கள்
காத்திருந்து விட்டேன்
ஒவ்வொரு மணி
நேரமும்
வருடங்கள் தரும்
வலியினை
தந்துவிட்டன
ம்ம்
நீ கண்டுகொள்ளவேயில்லை.

காலை தேநீர்
வேளையில்
நீ அனுப்பும்
இதய சின்னமும்
முத்த ஸ்மைலியும்
இன்று காணவேயில்லை.

என் தொலைப்பேசி
சிணுங்கவே இல்லை
நானும் தான்

உன் கொஞ்சல் இன்றி
கோபத்தில்
என்னை போல்
உன் தொலைப்பேசியும்.

போ
இன்று
உன்னுடன்
பேசப்போவதாய் இல்லை
நான்
உன் எந்த வார்த்தைக்கும்
மயங்கவே மாட்டேன்
மன்னிக்கவும் மாட்டேன்.

ஆனால்
தயவு செய்து

"அதிக வேலை குட்டிம்மா
அய் லவ் யு"
என்று மட்டும்
சொல்லிவிடாதே
உன்னை
அண

மேலும்

வாழ்த்துகள் 31-Dec-2021 11:27 am
அருமை கணவன் மனைவி காதலா அல்லது காதலன் காதலியா 30-Nov-2021 3:27 pm
தங்களின் கவிதை சொல்வது நியுட்டனின் மூன்றாம் விதி போல.. வினைக்கும் எதிர்வினைக்குமான பிணைப்பு அதன் வலிமையை பொறுத்ததே... பிரிவு காதலை வலுப்படுத்தும்..உண்மை அன்பை உணர்த்தும்.. மிக அருமையாக பிரிவின் வலியை வரியாக்கி இருந்தீர்கள்... 30-May-2021 7:44 pm
கயல்விழி மணிவாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Apr-2016 3:17 pm

காதல் இப்படியும் இருக்கலாம்

விழி நோக்கா
அவனின்
விழி நோக்க
இந்த கயல் விழி
இதயம்
வழி பார்க்க

நல்ல நேரம் பிறப்பதாய்
குடுகுடுப்பைக் காரனும்

நடக்குமா என்று
நினைக்கையில்
பல்லியும் அதன் பாஷையில்
ஆம் சொல்ல

திறந்த கண்களுக்குள்
கலர் கலர் கனவுகள்
வட்டமிட

தூரத்தே தெரிந்த
வானம் அருகில்
வந்து என்னையும்
அணைத்துக்கொள்ள

அந்த
நட்சத்திரக்கூட்டத்தில்
நானும்
மின்னப்போவதாய்
தோன்றிய எண்ணத்திற்கு
முற்றுப்புள்ளி
வைத்து அப்பாத்தா
சொன்னாள்

அந்த
கிருஷ்ணா பய வந்தா
வீட்டுள்ளுக்கு கூப்பிடாத
அவன் கீழ் ஜாதி.

குனிந்த தலை நிமிராது
இன்றும்
குப்பையை சுமந்து செல்கிறான்
அவன்.

மேலும்

அற்புதமாக சொன்னீர், பெரியார் மண்ணில் இன்றும் இந்த ஏற்ற தாழ்வுகள் இருப்பது தான் வேதனையாக இருக்கிறது. 29-Jun-2020 1:27 pm
அந்த வரிகள் குத்துகிறது ஊசியாய் ... நீ சுமப்பதை கண்டு வருவான் நிச்சயம் ! அருமை ! 21-Dec-2019 8:29 pm
அருமை..... 26-Apr-2018 10:47 am
கயல்விழி மணிவாசன் - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Mar-2016 10:07 pm

மனதில்
பட்டாம்பூச்சிகள்
பறப்பதற்கும்
பின்னணியில்
இளையராஜா இசை
கேட்பதற்கும்
காதல் வர வேண்டுமா
என்ன.?

இதோ இந்த மின்மினிகள்
கண்சிமிட்டும்
போது
அதோ அந்த நிலவை
மறைத்த
மேகம் விலகும் போது

ஆசையாய் வளர்த்த
ரோஜாச்செடி முதல் மலரை
பிரசவித்த போது

அந்த
மரத்தடி பிச்சைகாரி
தலையைதடவி நல்லா
இரும்மா
என்ற போது

நீங்கள் காதலில்
எதிர்ப்பார்த்த
அத்தனை

பட்டாம்பூச்சிகளும்
இளையராஜா இசையும்
என்னை சுற்றி தான்
இருந்தது...!

மேலும்

துடிப்பான பதிவு ! 21-Dec-2019 8:30 pm
உணர்வுப்பூர்வமான வரிகள் .... 26-Aug-2016 12:32 am
அருமையான வரிகள் 16-May-2016 3:57 pm
அழகிய வரிகள் தோழி வாழ்த்துக்கள் 30-Apr-2016 9:08 am
கயல்விழி மணிவாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Mar-2016 10:07 pm

மனதில்
பட்டாம்பூச்சிகள்
பறப்பதற்கும்
பின்னணியில்
இளையராஜா இசை
கேட்பதற்கும்
காதல் வர வேண்டுமா
என்ன.?

இதோ இந்த மின்மினிகள்
கண்சிமிட்டும்
போது
அதோ அந்த நிலவை
மறைத்த
மேகம் விலகும் போது

ஆசையாய் வளர்த்த
ரோஜாச்செடி முதல் மலரை
பிரசவித்த போது

அந்த
மரத்தடி பிச்சைகாரி
தலையைதடவி நல்லா
இரும்மா
என்ற போது

நீங்கள் காதலில்
எதிர்ப்பார்த்த
அத்தனை

பட்டாம்பூச்சிகளும்
இளையராஜா இசையும்
என்னை சுற்றி தான்
இருந்தது...!

மேலும்

துடிப்பான பதிவு ! 21-Dec-2019 8:30 pm
உணர்வுப்பூர்வமான வரிகள் .... 26-Aug-2016 12:32 am
அருமையான வரிகள் 16-May-2016 3:57 pm
அழகிய வரிகள் தோழி வாழ்த்துக்கள் 30-Apr-2016 9:08 am
கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பை (public) jathurshan vasanthakumar மற்றும் 5 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
24-Mar-2016 9:36 pm

மகள்கள் ஜாக்கிரதை(சில அப்பாக்களுக்கு)

காதருகில் உஷ்ண காற்று
அப்பப்பா
பங்குனி வெயிலை மிஞ்சிய
வெப்பம்.

வீட்டு முற்றமாய் நினைத்திருக்கக்கூடும்
கோலம் போட அவசரத்தில் இடம் தேடுகின்ற கரங்கள்.

சில வேளை தீ கிடைக்கும்
என்று
நினைத்திருக்கலாம்
இத்தனை நெரிசலில்
எத்தனை உரசல்.

என் வயதில் இரெண்டு
அல்லது
அதிகமாய் கூட பிள்ளைகள்
இருக்கலாம்

அதனால் என்ன
அற்ப சுகம்
அதுவும்
யாருக்கும் தெரியாமல் தானே
அப்படியும்
நினைத்திருக்கலாம்

ம்ம்ம்

இழிவானவள் என
நீங்கள் முறைப்பது
புரிகிறது
இதோ
பேருந்து நடத்துனரின் இறங்கும்
இடத்திற்கான அழைப்பின்
பின்
அமைதியாய்
அவர் காதில்

மகளை ப

மேலும்

அருமை மிக ததிக நாள்கடந்து அருமையான கவிதையை வாசித்தேன் 31-May-2016 5:08 pm
super 27-Apr-2016 3:47 pm
செம கயல்....கலக்கிட்ட...நடப்பு....பளார் பளார்னு கன்னத்தில் அடித்ததை போன்ற வார்த்தைகள் இறுதியில்.... இதைவிட பெரிய அடி வேறேது ம்ம்ம்....சிறப்பு கயல்....!! 06-Apr-2016 12:54 pm
சொல்ல வார்த்தைகள் இல்லை..உணர்கிறேன் இவ்வரிகளை நானும்..உண்மை தோழி.. 25-Mar-2016 11:58 am
மணி அமரன் அளித்த படைப்பில் (public) Kavi Tamil Nishanth மற்றும் 10 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
17-Mar-2016 1:31 am

மின்னலை வகிடெடுத்து
மேகம் பின்னிய ஒற்றைச் ஐடை
"நடமாடும் நதிகள்"

வாருங்கள் நடமாடும் நதியோடு நடைபோட....

நடமாடும் நதிகள்
★★★★★ ★★★★

மரண பயமில்லை
கயிற்றில் நடக்கிறான்
"பசிக்கு பயந்து"
****
பற்ற வைக்கவில்லை
அணைக்கவும் முடியவில்லை
"பசியில் வயிறு" & "சாதீ"
****
வெறிச்சோடிய வானம்
விட்டபாடில்லை மழை
"ஏழையின் விழிகள்"
****
ஆபாச சுவரொட்டிகள்
அவசர அவசரமாக கிழிக்கப் படுகிறது
"பசியில் மாடு"
****
வறண்ட நிலம்
வளமான அறுவடை
விவசாயிகளின் உயிர்
****
வான்மழை இல்லை
வானுயர வளர்கிறது
விளைநில வீடுகள்
****
விசாலமான பூஜையறை வீடுகளில்
இருந்தும் இடமில்லை தெய்வங்களுக்கு

மேலும்

அருமையான வரிகள் 25-Dec-2019 1:37 pm
தங்கள் இரசனையிலும் கருத்திலும் மகிழ்கிறேன் நண்பரே. மிக்க மகிழ்ச்சி... நன்றிகள் பல 03-Apr-2016 2:36 pm
நன்றி நன்றிகள் பல தோழமை மகிழ்ச்சி 03-Apr-2016 2:34 pm
பத்தும் என் மனதிற்கு போட்டது பத்து" 30-Mar-2016 2:02 am
கயல்விழி மணிவாசன் - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Mar-2016 6:45 pm

உனக்கும் எனக்குமான
இடைவெளியை
அதிகரிகின்றாயா.?
பணியென
என்னை
தனிமையாக்கி
விலகிச் செல்கிறாயா.?

போதும்
உன் திமிரோடு போட்டியிட்டுத் தோற்றுப்போய்
சலித்துவிட்டதாம் என் திமிருக்கும்.

மொக்கை போடாதடி என்று
வார்த்தைகளை மெளனமாக்கிவிட்டு
முத்தத்தால் இதழ்களை
மொழி பெயர்ப்பு செய்பவனே

மகிழ்ச்சிகொள்

இவளின் மொக்கையோ
முணுமுணுப்போ
திட்டல்களோ கொஞ்சல்களோ
எதுவும் இல்லை
துயரம் இவள் அற்ற உலகில்
சுதந்திரமாய் சுற்றித்திரி.

ம்ம்ம்
எனக்கென்ன உன் நினைவுகளில்
துடிக்கும் இதயம் அதே
"சங்கித ஸ்வரங்கள் ஏழே
கணக்கா" வோடு
வாழ்ந்துகொண்டிருக்கும் ..!

மேலும்

உடலுக்கும் உணர்வுக்கும் உறவுகள் தான் பாலமிடுகின்றன. அவை விலகும் போது நாமே நம்மிடம் தோற்றுப் போகிறோம். என் இரவின் ஏகாந்தத்திற்கு சுகமான கவிதை. உம் பிரிவு தேய்ந்து போகட்டும். 16-Mar-2016 10:35 pm
மெய்யன் நடராஜ் அளித்த படைப்பில் (public) CheGuevara Gopi மற்றும் 9 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
08-Mar-2016 2:06 am

தளத்தின் பெண் படைப்பாளிகள் வாசகிகள் மற்றும் எல்லா மகளிருக்கும் இதயம் கனிந்த மகளிர் தின வாழ்த்து.

ஒவ்வொரு பெண்ணின் உள்ளத்துக்குள்ளும் ஊற்றெடுக்கும் சொல்லவொனா துயர அருவிகள் கண்ணீராகி கன்னவெளிகளில் நடமாடும் நதிகளாய் பாயக்கூடும் . இந்த நதிகள் பாய்வதற்கான பாதிப்புகள் சிலவற்றை இங்கே பதிவிடுகிறேன் ..

1)பிறந்தது பெண் குழந்தை.
சுரந்தது காம்பில் பால்.
கள்ளிச்செடிக்கு.
*************************
2)தையல் நிலையத்தில் வேலை
உடுதுணியில் போட்டிருந்தாள்
அதிகமாய் ஒட்டு..

*************************
3)மாதாந்தம் கூடுகிறது சந்தை
இன்னும் விலைபோகவில்லை.
முதிர்கன்னி.
**************************

மேலும்

நன்றி 31-Mar-2016 1:19 am
அத்தனை வரிகளும் அருமை ! 29-Mar-2016 3:47 pm
மிக்க நன்றி 29-Mar-2016 1:31 am
மிக்க நன்றி 29-Mar-2016 1:31 am
கயல்விழி மணிவாசன் - சகா சலீம் கான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Mar-2016 10:41 am

வீட்டில்
அடமானம் வைத்த
விட்டில்களாய்...

உறவெனும்
உரலில் தலை
கொடுத்து...

சமூக வலையில்
மாட்டிய
மீன்களாய்...

புயலில்
சிக்கி மடல்களை
இழந்த பூவின்
காம்பாய் செடியினில்
வளர்ந்து...

வாழ் நாள்
சாதனைக்கு
வாழும் நாளை
சோதனையாக்கி...

முறை வாசல்
முதல்
பிறை வாசல்
வரை...

அடுக்களையில்
ஆரம்பித்து
அணு உலை
வரையிலும்...

அரிசியில் கல்
எடுத்தும்
அரசியலில் கால்
பதித்தும்...

கணவன்
முதல்
கணினி
வரையில்...

வேதனைகளை
சாதனையாக்கி
சங்கடங்களை
சருகாக்கி...

வெற்றிப்படி
ஏறும்...

அன்னையரே...
சகோதரிகளே...
தோழிகளே...

உங்கள் அனைவருக்கும்
சகாவின்
மனம் திறந்த மக

மேலும்

அருமை ,...நன்றிகள் அண்ணா 08-Mar-2016 11:21 am
பெண்ணின் மகிமையை சொல்லும் வரிகள் இனிய மகளிர் தின நல் வாழ்த்துக்கள் 08-Mar-2016 10:48 am
சுஜய் ரகு அளித்த படைப்பில் (public) Kalaracikan Kanna மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
08-Mar-2016 10:20 am

பறவைகளின் கூடுகளை நிலவொளியில்
காட்சிக்கு வைத்திருந்தன கிளைகள்
இலையுதிர் காலத்தில்
ஒரு மரமென மௌனித்திருந்தேன் நானங்கு
நீயோ காற்றாய் விரவி அதகளப் பட்டிருந்தாய்
ஒரு கட்டத்தில் யாசிக்கத் தொடங்கினேன்
அடர்வனப் பாதையின் இருளில்
உருண்டோடும் இலைகளிலிருந்து
என் காதலே மீள்கவென
எப்பொருட்டுமின்றி அமானுஷ்யமிக்க
ஓர் பெரு இரவை என் மடிகிடத்திக்
கடந்து போகிறாய் நீ...!

மேலும்

மடியில் கிடத்திப்போகும் முடிவும் நிலவொளியின் காட்சிப்படுத்தலும் மிக அருமை கவிஞனாய் வாழ்ந்தால்தான் கவிதைகள் வாழும் நீங்கள் கவிஞனாய் வாழ்பவர் 09-Mar-2016 9:23 am
நன்றி நண்பரே !! 08-Mar-2016 5:07 pm
மிக்க நன்றி தோழமை !! 08-Mar-2016 5:07 pm
சிறப்பான சிந்தனை நண்பரே....!! 08-Mar-2016 1:27 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (466)

வாலி ரசிகன்

வாலி ரசிகன்

சென்னை
sanmadhu

sanmadhu

kovai
சிவபாரதி SP

சிவபாரதி SP

திருநெல்வேலி

இவர் பின்தொடர்பவர்கள் (467)

சிவா

சிவா

Malaysia
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
k.saranya

k.saranya

pollachi

இவரை பின்தொடர்பவர்கள் (573)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
ரிப்னாஸ் அஹ்மத்

ரிப்னாஸ் அஹ்மத்

திக்குவல்லை - தென் இலங்கை
கிநரேந்திரன் கருமலைத்தமிழாழன்

கிநரேந்திரன் கருமலைத்தமிழாழன்

ஒசூர், தமிழ்நாடு, இந்தியா

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே