முஹம்மது பர்ஸான் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  முஹம்மது பர்ஸான்
இடம்:  சம்மாந்துறை, இலங்கை.
பிறந்த தேதி :  02-Feb-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Feb-2016
பார்த்தவர்கள்:  687
புள்ளி:  126

என்னைப் பற்றி...

விடியாத என் இரவுகளில் கவிதைகள் விளக்கேற்றும்.

என் படைப்புகள்
முஹம்மது பர்ஸான் செய்திகள்
அப்துல் பாசித் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
22-Sep-2016 8:39 am

கண்ணுபட்டு போனதம்மா - என்
தே மதுர தமிழுக்கு
கண்ணு வெச்சதாரம்மா
போர்க்கொடியை காட்டிடும்மா...

செம்மொழி என் தமிழ் மொழி
என்னை வாழ வைத்த தாய் மொழி
முது மொழி அது பழம் மொழி
ஆதியை ஆட்டிப்படைத்த வன் மொழி...

சங்கத் தமிழ் நாட்டில் உதிர்த்தெழுந்து
சிந்து நாகரீகத்தை வளர்த்தெடுத்து
சரித்திரத்தில் தனக்கொரு இடம் வரைந்து
வீராப்புடன் வீர நடை போடும் உண்ணத மொழி...

என் தங்க மொழியின் வல்லமை கூற
பாமரத்துப் பா நாட்டார் ஒன்றே போதுமம்மா
அச்சர சுத்தமாய் நாட்டுப் பா பாடி
உலகெங்கும் தமிழ் மணம் வீசிடவேயம்மா...

தமிழோடு வாழ்ந்திடும்மா
தமிழுக்கு பணி செய்திடும்மா
தமிழை வளர்த்திடும்மா
நீத

மேலும்

அருமை 12-Mar-2017 1:17 pm
அருமை 03-Oct-2016 2:11 pm
நன்றி கவிஞரே.... 22-Sep-2016 2:13 pm
நிச்சயமாக... 22-Sep-2016 2:12 pm
அப்துல் பாசித் அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
22-Sep-2016 8:39 am

கண்ணுபட்டு போனதம்மா - என்
தே மதுர தமிழுக்கு
கண்ணு வெச்சதாரம்மா
போர்க்கொடியை காட்டிடும்மா...

செம்மொழி என் தமிழ் மொழி
என்னை வாழ வைத்த தாய் மொழி
முது மொழி அது பழம் மொழி
ஆதியை ஆட்டிப்படைத்த வன் மொழி...

சங்கத் தமிழ் நாட்டில் உதிர்த்தெழுந்து
சிந்து நாகரீகத்தை வளர்த்தெடுத்து
சரித்திரத்தில் தனக்கொரு இடம் வரைந்து
வீராப்புடன் வீர நடை போடும் உண்ணத மொழி...

என் தங்க மொழியின் வல்லமை கூற
பாமரத்துப் பா நாட்டார் ஒன்றே போதுமம்மா
அச்சர சுத்தமாய் நாட்டுப் பா பாடி
உலகெங்கும் தமிழ் மணம் வீசிடவேயம்மா...

தமிழோடு வாழ்ந்திடும்மா
தமிழுக்கு பணி செய்திடும்மா
தமிழை வளர்த்திடும்மா
நீத

மேலும்

அருமை 12-Mar-2017 1:17 pm
அருமை 03-Oct-2016 2:11 pm
நன்றி கவிஞரே.... 22-Sep-2016 2:13 pm
நிச்சயமாக... 22-Sep-2016 2:12 pm
பாத்திமா அஸ்க்கியா முபாறக் அளித்த படைப்பை (public) உதயசகி மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
21-Nov-2016 7:41 am

நடைபினமாய் நட மாறும்
நடுநிலையைத் தந்தவனே
நந்தவனம் எரிந்த கதை
நந்த குமாரா நீ அறிவாயா,..?

உணர்வுகள் மறந்த உடலொன்று
உறக்கம் கொள்ளும் பகலையும்
உவா சுமந்த ஞாபகங்கள்
உறங்காமல் விழித்திருக்கும் இராவையும்
உணர்ந்தாயா....?

கட்டழகு கன்னிகை
கச்சிதமா கண்டு வெச்ச
கனா கணப்பில் வெந்து சாம்பலாய்
ககனம் புகுந்த கதை
கயவன் நீ அறிந்தாயா...?

மண வானில் குடையின்றி
மங்கையிவள் நினைவுத் தீயில் நனைய
மகக் குழை மேனி வெந்தெரிந்து
மனையறம் மரித்த நிஜம்
மள்ளன் நீ கேள்விப்பட்டாயா...?

இராகம் நிறைந்தவள்
இதயம் நின்று போன சேதி
இயவன் நீ அறிந்தாயா...?
இயன் மகள் இரங்கலில்
இரியல் தான் கொண்டாயா..?

மேலும்

எத்தனை கேள்வி அவனிடம் பாவம் பய்யன். அருமையான கேள்விகள்... பதில்கள் வித்தியாசமாய் அமையலாம். வாழ்த்துக்கள் பெறுபேறுகளுக்கு... 22-Nov-2016 11:04 pm
"தோற்கருவி யாளன், கீழ்மகன்" என்று பொருள் படும். 22-Nov-2016 8:48 pm
இயவன் என்பதன் கருத்து என்ன தோழி... 21-Nov-2016 10:20 pm
உதயசகி அளித்த படைப்பை (public) பாத்திமா அஸ்க்கியா முபாறக் மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
21-Nov-2016 7:06 pm

பேனா முனையில் பெண்மையின் துளிகள்.....

துளி....07...

காதல் மணவாழ்வு அவளுக்கு
தந்திடவில்லை மனமகிழ்வை
காலம் முழுதும் கரம் பிடித்தே
வருவேன் என்றவன்...
கடல் தாண்டும் முன்னே கரையோடே
கைகழுவிச் சென்றான்...
காதல் எனும் பெயரில் அவன்
காம லீலைகள் முடிந்ததும் இடையிலேயே
இடை விலகிச்சென்றான்....

அவனின் காதல் வலையில் சிக்கிய பேதை
இவளும் அகிலம் மறந்து அனைத்தும் அவனென ஆகிப்போனாள்....
அவனோ தன் தேவை முடிந்ததும்
அநாதரவாய் இவளை நடு வீதியில் விட்டே
புயலென மறைந்து போனான்.....

உலகம் அறியா வயதில் முளைத்த காதல்
ஊண் உறக்கம் மறந்திட வைத்தது...
உறவுகளை துறந்து அவனை நம்பி
அவன் பின்னே சென்றிட வைத்தத

மேலும்

கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்.....என் இனிய நன்றிகள்.... 25-Nov-2016 2:45 pm
கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்.....என் இனிய நன்றிகள்.... 25-Nov-2016 2:44 pm
கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்.....என் இனிய நன்றிகள்.... 25-Nov-2016 2:44 pm
கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்.....என் இனிய நன்றிகள்.... 25-Nov-2016 2:44 pm

***விலைமகள்***
_____________________

இராப் பகலுக்கு புரியாத
பொழுதொன்று போர்த்திக் கொண்ட
போக்கத்தவள்
இரவின் மடியிலும்
பகலின் பகட்டிலும்
பதுங்கிக் கொண்டவள்

விலை பேசி விற்கப்பட்ட
பொருளொன்றாய்
வீதியிலும் விடுதியிலும்
காமுகனின் விளையாட்டு
பொம்மையானாள்
பெண்மை பறி போனது
அறிந்தே தான் தொலைந்தாள்.

நேரத்திற்கு விருந்துண்டு
நேரகாலமின்றி விருந்தானாள்
விரும்பாமலே வந்து மாட்டிக் கொண்டாளோ...?
விலை மகளாய் விரும்பியே தான்
வதைகிறாளோ..?

விதியும் நொந்து கொள்ள
சதியும் சூழ்ந்து கொள்ள
பத்தினித் தன்மை இழந்தாள்
பணம் தான் காரணமோ..?
பசிதான் வயிற்றை நிரப்பியதுவோ...?
பாவையின் பதில் தான் எ

மேலும்

கண்களிலிருந்து சிந்துகின்ற கண்ணீரின் நிறம் உதிரமாகிறது மங்கை அனுமதியின்றி கற்பிழக்கும் நேரம்..,நிகழ்கால யுகத்தில் இச்சைகள் நிறைந்த பாவங்கள் ஏராளம் அதிலிருந்து தப்பித்துக் கொள்ள நித்தம் நித்தம் போர் தொடுகிறாள் புதுமைப் பெண்..பணம் இடம் நிலை என்ற சந்தர்ப்பத்தில் சிலரது உயிர் வெறும் ஜடமானாலும் பலரது ஆன்மா கொடுமையின் முடியில் சிக்குண்ட வெறும் சாபத்தால் மட்டுமே பழிதீர்த்து சுவாசமிழக்கிறது 31-Jan-2017 1:03 am
முஹம்மது பர்ஸான் - வித்யா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Feb-2017 10:13 pm

சிந்து நதிக் கரைகளில்- சில
நாகரீகம் வளர்த்த வரலாறுண்டு.;
கதிர் விளைந்த காடுகளில்- பல
காலங்கள் வாழ்ந்த பழமையுண்டு;
வண்டல் மண் படிவுகளில்-பொன்
வார்த்து மகிழ்ந்த மழலையுண்டு;
தேனாறும் பாலாறும் போகும் பாதையில்
வேற்றுமையில் ஒற்றுமை படித்ததுண்டு;

திங்களோடு தவழயிலே கன்னிநதி;
மஞ்சள் குழைத்து போகையிலே மங்கை நதி;
பொன்னை வார்த்த சாயலிலே பெண்ணின் நதி;
தென்றலோடு நினைவுகள் தவழ்ந்ததுண்டு;

நதிக்கரைகளின் வளைவுகளில்
கார்முகில்களின் நெளிவுகளில்
இருஉருவங்கள் பார்த்த மோகமுண்டு;

விவசாயம் பொய்க்கும் காலங்களில்-விழும்
பண்பாட்டின் சாயல் நீரிலுண்டு;
மருதம் வளர்த்த மங்கையின் மேனியில்
இரசாயன விழுப்

மேலும்

இதுக்கு கிடைக்காம போச்சா... நல்ல இருக்கன்... நீங்க எப்படி? 06-Mar-2017 1:37 pm
அங்கு படைத்ததுதான் நண்பரே...Heavy காம்பெடிஷன் How r u 21-Feb-2017 9:05 pm
நீண்ட இடைவேளையின் பின் உமது கவியை நுகருகிறேன். அடடா அருமை. முகப் புத்தகத்தில் ஒரு போட்டி நடந்தது தலைப்பு "நதிக் கரை ஞாபகங்கள்". இக்கவியை அங்கு டைத்திருந்தால். வெற்றி உமக்கல்லவா... 21-Feb-2017 4:23 pm
மதிவதனன் அளித்த படைப்பில் (public) Mathi Maddy மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
22-Nov-2016 8:53 am

தாயை கண்ட சேயின் உள்ளம் போல்
இந்த வெயிலைக் கண்டு குதூகலிக்கின்றது...

மேலும்

இயற்கையை நன்றாகவே புரிந்து வைத்துள்ளீர் தோழரே. மாறுபட்ட சிந்தனை. 22-Nov-2016 11:09 pm
தங்களது ஆசி தோழா 22-Nov-2016 2:48 pm
நன்று..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Nov-2016 9:56 am
முஹம்மது பர்ஸான் - மதிவதனன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Nov-2016 2:50 pm

என்னவளின் கண்ணத்தில் பட்டாம்பூச்சி மோதியதால் காயமடைந்தது அவளது கண்ணம்...

மேலும்

அழகிய ரசனை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Nov-2016 7:24 am
வாழ்த்துக்கள் கவிஞரே... 22-Nov-2016 11:07 pm
முஹம்மது பர்ஸான் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Sep-2016 3:51 pm

அய்யய்யோ என் மகளே
நான் பெத்த ரத்தினமே
ஓயாத சிற்றலையே
ஓய்ந்ததென்ன என் அழகே

தாமரைப் பூ போன்றவளே
என் தாய் போல பிறந்தவளே
வற்றாத பாற்கடலே
வற்றிவிட்ட மாயமென்ன

என் செல்வம் கூடுமென்று
மாயாண்டி ரேகை பார்த்து
ரகசியமாய்ச் சொன்னானே
என் சொத்து பாழ்கிணற்றில் பொணமாக மிதந்ததென்ன

பச்சரிசி கஞ்சி வெச்சு
நேத்துதான் கேட்டாயே
உன் நாவுக்கு விருந்து வைக்க
இப்பாவி மறந்ததென்ன

என் வயிற்றில் பிறந்தவளே
என் மடியில் தவழ்ந்தவளே
பாழ் கிணற்றில் மிதக்கத்தான்
பாலூட்டி வளர்த்தேனா

உன் பருவம் திறந்ததுமே
ஊர்க்கூட்டி விருந்து விருந்து வைக்க
பெருங்கணக்கு போட்டோமே
அத்தணையும் இன்னக்கி
மண்மடிஞ்சு போவதர

மேலும்

உண்மை தான் 12-Mar-2017 1:05 pm
கவிஞனின் கற்பனையில் வலி நிறைந்த வரிகள் 💐💐💐💐💐💐 10-Mar-2017 8:05 pm
மிக்க நன்றி ஐயா... 03-Oct-2016 5:52 am
நன்றி ஐயா.... 03-Oct-2016 5:50 am
முஹம்மது பர்ஸான் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jul-2016 12:07 pm

தினமொரு பாட்டு
நானெழுத
திருமுகமே உன்
திரை திறவாய்

முன்பொரு நாளில்
பின்னிரவில்
உன் முகம் காண
நான் விரைந்தேன்
உன்னிரு விழி மட்டும்
நீ திறந்தாய்
பொன் விழியொழி கண்டு
நான் வியந்தேன்

காத்திரு என்று
நீ உரைத்தாய்
காத்திருப்பை கவிதைகளால்
நான் நிறைத்தேன்

என் கவிதைகளில்
நீ பூத்திருப்பாய்
புன்னகையால்
நான் பூப்பறிப்பேன்

நீ மலையாக
நான் உளியாகி
சிற்பம் காண்பது எப்போது

காகிதமே உன் மீது
நான் மையாகி
காவியம் படைப்பது எப்போது

ஜாதி காண்பது
ஜனங்களின் மரபு
காதல் ஜோதியே
இரு மனங்களின் தெரிவு

இன்னொரு முறை நான்
பிறப்பதாய் இல்லை
எனக்கென பிறந்தவள் உனை
இழப்பதாய் இல்லை

மேலும்

நன்றி நிலாத் தோழி 12-Mar-2017 1:03 pm
நன்றி நண்பரே 12-Mar-2017 1:01 pm
👍🏻👌🏻👌🏻👌🏻 10-Mar-2017 8:08 pm
அருமை படைப்பு 21-Nov-2016 1:00 pm
முஹம்மது பர்ஸான் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jun-2016 1:53 pm

உனக்கும் எனக்கும்
பிரச்சனை என்றால்
எதற்காக மலர்களை
மூட்டி விடுகிறாய்...

புன்னகைக்க வேண்டிய
மலர்கள் எனைப் பார்த்து
புறுபுறுக்கின்றன...
***

- முஹம்மது பர்ஸான்.

மேலும்

மிக்க நன்றி ஐயா... 13-Oct-2016 7:29 am
மங்கையும் மலரும் ஒரே இனமாகிட்டே... மிக்க நன்றி 13-Oct-2016 7:28 am
மலர்களுக்கும் மனித குணத்தை கற்பிப்பது அருமையான வரிகளில். 10-Oct-2016 10:14 pm
மலர் விடு தூது ! கற்பனை நயம் அருமை . 15-Jun-2016 3:18 pm
முஹம்மது பர்ஸான் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jun-2016 1:38 pm

கட்டிப்பிடிக்க வேண்டாம்...
எட்டித்தொடவும் முடியாது
தூர மாகிறாள்!

உச்சித்தவம் கொண்டு
உருகப் போகிறேன் - கண்டு
விட்டிலாய்
விரைவாளோ தெரியவில்லை...
***

-முஹம்மது பர்ஸான்.

மேலும்

நன்றி சகி. 02-Aug-2016 10:35 pm
அருமையான கவி.... 02-Aug-2016 7:15 pm
நன்றி நண்பரே... 07-Jun-2016 11:37 am
அருமை நண்பரே வாழ்த்துகள் 07-Jun-2016 6:39 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (50)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
மதிவதனன்

மதிவதனன்

வீரமுனை
சிறோஜன் பிருந்தா

சிறோஜன் பிருந்தா

மட்டக்களப்பு, இலங்கை
குமரிப்பையன்

குமரிப்பையன்

குமரி மாவட்டம்

இவர் பின்தொடர்பவர்கள் (51)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (50)

மேலே