சிறோஜன் பிருந்தா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சிறோஜன் பிருந்தா
இடம்:  மட்டக்களப்பு, இலங்கை
பிறந்த தேதி :  24-Feb-1995
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  17-Aug-2016
பார்த்தவர்கள்:  595
புள்ளி:  317

என்னைப் பற்றி...

ஈழத் தமிழினத்தை சேர்ந்தவள் நான்.கவிதை என் உயிர்;தமிழ் என் மூச்சு.ஈழத்தில் தமிழர் பட்ட இப்பொழுது படும் துன்பங்களை கவிமூலம் வெளிக்கொணரக் கவி எழுத தொடங்கினேன். இதைத் தவிர வேறு என்ன தான் என்னால் செய்ய முடியும்......?

நான் கல்வி பொது உயர்தரம் கற்கும் போது கவிதை எழுத தொடங்கினேன்.
என் முதல் கவிதை மாற்றுத்திறனாளிகளை பற்றியது ஆகும்.முதலிடம் பெற்றேன்.உதய சூரியன் பத்திரிகையிலும் கவிதை எழுதி அனுப்பிய அவை அப்போது பத்திரிகையில் பிரசுரிக்கபட்டன்.கல்வி கற்று முடித்த பின் கவிதை எழுத சந்தர்ப்பம் எனக்கு கிடைக்கவில்லை..
தற்பொழுது எழுத்து தளம் மூலம் எழுத வாய்ப்பு கிடைத்தது.அதனை நழுவ விட என் மனம் இடம் தரவில்லை அதனால் தொடர்கிறேன் என் எழுத்து பயணத்தை எழுத்து தளத்தின் மூலம்.

என் படைப்புகள்
சிறோஜன் பிருந்தா செய்திகள்
சிறோஜன் பிருந்தா - சிறோஜன் பிருந்தா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Nov-2016 12:25 am

அறியாத வயதினிலே
அன்னையின் கையைப் பிடித்தபடி இரசித்தோம் ஓடிச்செல்லும் மனிதர்களை பார்த்து
நாமும் ஓடிய படியே...!

தொலைதூரம் சென்றவர்களாய் குடியேறினோம் வன்னியில்....
நீண்ட வருட அமைதி.....
மீண்டும் தொடங்கியது ஈழப்போர்
குண்டு வீச்சில் தகர்ந்தன
எம் வீட்டுக் கூரைகள்
இழந்தோம் உறவுகளை...!

ஓடிஓடியே சோர்ந்து போனோம்
கால்களோ தேய்ந்து போய்விட்டன
இழந்தோம் நம்பிக்கையை....
இருந்தும் வாழ வேண்டிய கட்டாயம்
வாழ்ந்தோம் உயிரற்ற மனிதர்களாய்.!

போரின் தாக்கம் அதிகரிக்க
மனதிலே குடி கொண்டது பயம்
உடமைகளை இழந்த நாம்
உயிரை கையில் பிடித்து
கப்பல் ஏறினோம் மகிழ்வுடன்
கடல் கடந்து யாழ்ப்பாணம் வர....!

கப்பலில் இருந்

மேலும்

உண்மை தான் நண்பா 16-Nov-2016 7:53 pm
அடிமை வாழ்க்கை மண்ணில் மிகவும் கொடுமையானது..சொந்த நாட்டில் உரிமையிழந்தவர்கள் நிலை அதை வீட்டா பரிதாபமானது 14-Nov-2016 9:16 am
சிறோஜன் பிருந்தா - சிறோஜன் பிருந்தா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Nov-2016 1:12 am

ஞாபகமிருக்கிறதா தோழி..?
கல்லூரி நாட்களில் கல்லூரியில்
நாம் செய்த குறும்புகளை.....!

காலையிலே வகுப்பிற்கு செல்லாது நூலகத்தில் ஒளிந்து கதைபுத்தகங்கள் வாசித்து மகிழ்ந்த நாட்கள்....!

வகுப்பிலே ஆசிரியர் வந்தது தெரியாது கடைசி வரிசையில் அமர்ந்து நித்திரை தூங்கி அடி வாங்கி அழுத தருணங்கள்.....!

கல்லூரியிலே காதலிக்கும் நண்பிகளை நக்கலடித்து அவர்களிடம் திட்டு வாங்கி வாயை சுழித்துவிட்டு ஓடிச்சென்ற நிமிடங்கள்....!

வரலாற்றுப் பாடத்தில் முதல் புள்ளிகளைப் பெற்று மற்றவர்களிடம் பெருமையடித்துத் திரிந்த தருணங்கள்......!

தோழியின் எழுது கோல் உடைந்ததும் எனது எழுது கோலை கொடுத்து விட்டு பாடத்தை எழுதாமல் கடலை சா

மேலும்

அப்படியா...? மிக்க மகிழ்ச்சி 16-Nov-2016 7:52 pm
என்னையும் ஆள்கிறது இந்நிகழ்வுகள் 14-Nov-2016 9:19 am
சிறோஜன் பிருந்தா - சிறோஜன் பிருந்தா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Oct-2016 10:01 am

பரந்த ஒளிக்கதிர்களை
மேற்கு வானில் அடக்கி.....
சூரியன் மறைகின்ற நேரமதில்
இருளோ மெதுவாய் மூடிக்கொள்கிறது பூமியை.....!

நானோ உன் கைகளைக் கோர்க்க
நீயோ என்னை அணைக்க
நீண்டதூரம் நடந்தோம் நம்மை மறந்தவர்களாய்...!

எங்கு நோக்கினும் இருளே.....
நடு வானிலே சிரித்துக் கொண்டிருந்தாள் வட்ட வடிவுள்ள
வெண்நிற தேவதை நிலா.....!

என்னவனோ காதல்
விளையாட்டை ஆரம்பிக்க......
நானோ வெட்கத்தில் நெளிய இணைந்தோம் வெகுநேரம் நாம்
இடைவெளிகள் அற்றவர்களாய்.......!

இளந்தென்றல் இனிமையாக வீசவும்....
விழித்தெழுந்தோம் நாம் நிறைந்த மகிழ்ச்சியுடனே.....!

யாருமற்ற அரங்கில் அரங்கேறியது நம் காதல் லீலைகள்.....
அங்கிருந்தது நீயும் ந

மேலும்

இதயம் கனிந்த நன்றிகள் நண்பா 14-Nov-2016 1:01 am
இரு மனங்கள் எழுதும் உணர்வுகளின் பக்கத்தில் நிலவும் ஒரு முற்றுப் புள்ளி இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 31-Oct-2016 7:29 am
சிறோஜன் பிருந்தா அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
13-Nov-2016 7:52 am

இறைவன் மரணத்தை வகுத்தான் பாரபட்சமின்றி ..!
எத்தனையோ முறை
மரணித்தை தழுவினேன்......
நம்பிக்கை துரோகிகளால்.....!

தோல்வியால் பேச்சிழந்து
துரோகத்தின் வலியால்
நம்பிக்கை இழந்த நாட்களில்
என்னை உயிர்தெழச்செய்து
வாழ்வில் உயர வைத்தவன்
என் உயிரில் கலந்த பாச நண்பனே...!

மேலும்

உங்கள் கருத்தாலும் வருகையாலும் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். மிக்க நன்றிகள் 14-Nov-2016 12:56 am
உங்கள் வருகையாலும் கருத்தாலும் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.மிக்க நன்றிகள் 14-Nov-2016 12:55 am
உண்மைதான்..நண்பனின்றி மண்ணில் எவருமில்லை 13-Nov-2016 9:57 am
நண்பன் பாதியில் வந்து கடைசிவரை நிலைக்கும் ஒரு பந்தம்... அருமையான சிந்தை... வாழ்த்துக்கள். 13-Nov-2016 8:23 am
உதயசகி அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
05-Oct-2016 8:55 pm

என் செல்ல தங்கை தியாவிற்கு........

புன்னகை வாசம் செய்யும் அவள் முகத்தில்
பூமணம் சுவாசம் செய்யும் அவள் அகத்தில்
சொல்லிடவோ வார்த்தையில்லை என்னிடத்தில்
அவள் போல் தங்கை கண்டதில்லை நானும் இவ்வுலகில்...

பூங்குழல் முன்விட்டு பூலோகம் மயக்கிடுவாள்
தெத்திப்பல் சிரிப்பாலே தேவலோகம் ஆண்டிடுவாள்...
தெவிட்டாத மொழியிலே தெம்மாங்கும் பாடிடுவாள்...
திகட்டாத மொழியாலே எனை திகைப்படைய செய்திடுவாள்....

துயர் கொண்டு நானும் தவிக்கையிலே மடி சாய்த்து
என் தாயாக அவளும் மாறிடுவாள்....
விழி கலங்கி நானும் நிற்கையிலே தன் தோள் சாய்த்து
என் உயிர்த்தோழியாய் அவளும் நின்றிடுவாள்...

காலம் முழுதும் அவள் அன்பொன

மேலும்

கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்.....என் இனிய நன்றிகள்.... 02-Nov-2016 3:00 pm
கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்.....என் இனிய நன்றிகள்... 02-Nov-2016 3:00 pm
கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்.....என் இனிய நன்றிகள்.... 02-Nov-2016 3:00 pm
கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்.....என் இனிய நன்றிகள்.... 02-Nov-2016 3:00 pm
உதயசகி அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
04-Oct-2016 4:20 pm

விழுந்தாலும் விதையாகிவிடு...

தரையெங்கும் இரத்த ஆறு வெள்ளமாய்
பெருக்கெடுக்க...
மனித தலைகள் மலை போலே குவிந்து
கிடக்க....
மனமெங்கும் உயிர் போகும் அச்சம்
உறைந்திருக்க...
கனன்று கொண்டிருந்த ஆயுதங்களில்
சிக்கி...
மண்ணுக்குள் புதைந்து போனது
பல உயிர்கள்....

விழிமூடி துயில் கொள்ள நேரமில்லை
கண்முன்னே உயிரொன்று துடித்தாலும்
அவன் உயிர் காக்க வழியில்லை...
தன் விழிநீர் மண்ணை அடையும் முன்
அவனோடு துணைபோகவே
முடிந்தது விண்ணகம் வரை...

அனைத்திற்கும் விடியாத முடிவு
வந்தது ஒரு நாள்...
அன்றோடு உறங்கிப்போனது
உரிமைப்போராட்டங்கள்....
பதுங்கு குழிகளுக்குள் புதையுண்டு
மறைக்கப்பட்டது பல

மேலும்

என்றாவது ஒருநாள் விடியும் என்ற நம்பிக்கை மட்டும் விதையாகி இருக்கிறது, என்றாவது ஒரு நாள் நிச்சயம் விருட்சமாகும் தோழி. 06-Oct-2016 7:49 pm
சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை தோழியே....நம்மவர்கள் போரில் மட்டுமா நசுக்கப்பட்டார்கள்...இன்னமும் பல விதங்களில் நசுக்கப்பட்டுக் கொண்டு தான் உள்ளார்கள்...மீண்டும் நாம் எழ வேண்டும்...அப்பொழுது தான் நமக்காக உயிரை தியாகம் செய்த ஆயிரம் ஆயிரம் தமிழர்கள் சாந்தி அடைவார்கள்... 05-Oct-2016 12:45 am
யுத்தங்கள் முடியவில்லை நாளும் தொடர்கிறது ஆனால் கோணம் மட்டும் மாறி இருக்கிறது.. 04-Oct-2016 11:28 pm
அருமை தோழியே .... 04-Oct-2016 4:29 pm
சிறோஜன் பிருந்தா - செல்வமணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Oct-2016 11:39 pm

“ நீ மட்டும் இல்லை முருகா… இந்தியாவுல இருக்கிற குறிப்பா தமிழகத்துல இருக்கிற 6.5 கோடி மக்கள்ல, 5 கோடி மக்கள் சூரியகாந்தி எண்ணெய்தான் பயன்படுத்திட்டு வர்றாங்க, அவர்களை காப்பாற்று 🌹முருகா

“ஒரு நாளைக்கு தமிழ் நாட்டுல பயன்படுத்தக்கூடிய சூரியகாந்தி எண்ணெய்யின் அளவு (வீடு மற்றும் ஹோட்டல் மூலமாக) 1 கோடி லிட்டருக்கு மேல்.”

“நல்ல விஷயம்தானண்ணே… சூரியகாந்தி எண்ணெய் உடம்புக்கு நல்லதுன்னு நான் இணையத்துல கூட படிச்சிருக்கேண்ணே..”

“உன்னோட மேதாவித்தனத்துல தீய வைக்க… சூரிய காந்தி எண்ணெய் உடம்புக்கு நல்லதுன்னு படிச்ச நீ, சூரியகாந்தியோட உற்பத்தி அளவை என்னிக்காவது படிச்சிருக்கியா…”

“உலகத்துல ஒரு சில நா

மேலும்

சிறோஜன் பிருந்தா - செல்வமணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Oct-2016 12:03 am

கடவுளிடம் ஒரு விவசாயி கடுமையாகச் சண்டைக்குப் போனான்.

”உனக்குப் பயிர்களைப் பற்றி என்ன
தெரியும்? நீ நினைத்தபோது மழையை
அனுப்புகிறாய். தப்பான சமயத்தில் காற்றை
வீசுகிறாய். உன்னால் பெரிய தொந்தரவாக இருக்கிறது.

பேசாமல்,
இந்த வேலைகளை விவசாயி ஒருத்தனிடம் ஒப்படைத்துவிடேன்!”
என்றான்.

கடவுள் உடனே,
“ அப்படியா? சரி. இனிமேல் வெளிச்சம், மழை, காற்று எல்லாம் உன் கட்டுப்பாட்டிலேயே இருக்கட்டும்” என்று வரம் அருளிவிட்டுப்
போய்விட்டார்.

விவசாயிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.

அடுத்த விதைப்பிற்கான பருவம் வந்தது.

”மழையே பெய்” என்றான்.

பெய்தது.

நிறுத்தச் சொன்னபோது,
மழை நின்றது.

ஈரமான நிலத்த

மேலும்

சிறோஜன் பிருந்தா - கேள்வி (public) கேட்டுள்ளார்
30-Sep-2016 1:13 am

☆ஒருவர் வீட்டில் இருந்து கோயிலுக்கு செல்கிறார். செல்லும் போது கொஞ்ச பூக்களை கோயிலுக்காக கொண்டு செல்கிறார்.
ஆனால் அடுத்தடுத்து மூன்று கோயில்கள் உள்ளன.
☆அவர் மூன்று கோயில்களுக்கும் செல்ல வேண்டும்.மூன்று கோயில்களுக்கு முன் பகுதியிலும் மூன்று குளங்கள் உள்ளன.
☆அவர் கொண்டு வந்த பூக்களை கோயில்களுக்கு முன் பக்கத்தில் உள்ள குளங்களில் கட்டாயம் கழுவ வேண்டும்.
☆அவ்வாறு கழுவினால் அப்பூக்கள் இருமடங்காகும்.
☆அவ்வாறு சென்று முதல் குளத்தில் கழுவ வேண்டும்.அப்பூக்கள் இருமடங்காகும்.அதிலே ஒரு தொகை பூக்களை அக்கோயிலுக்கு வைக்க வேண்டும்.
☆அவ்வாறு வைத்த பின்னர் எஞ்சியுள்ள பூக்களை அடுத்த கோவிலுக்கு சென்று

மேலும்

அருமை தோழரே! சரியான பதிலை கூறிவிட்டீர்கள்.என்றும் நீங்கள் அறிவில் சிறந்து விளங்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 04-Oct-2016 7:10 pm
7பூக்கள் கொண்டு வந்தார். 8பூக்கள் வைத்தார் 04-Oct-2016 2:02 pm
சிறோஜன் பிருந்தா - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Sep-2016 4:26 am

தியாகத்தின் அருஞ்சுடரே....!
இதயத்தின் மொழிகளையும்
இலக்குகளின் திசையையும்
அறிமுகப்படுத்திய ஆசிரியர் நீ !

தமிழுக்கு உயிர் கொடுத்தவனே..!
கடலாழம் கொண்ட மொழிப்பற்றும்
சிகரம் தொட்ட தமிழ் தேசியமும்
நம் நாட்டின் அந்நியர் ஆதிக்கமும்
நிழலாய் உன்னை தொடர்ந்தன.

தமிழரின் உரிமையைப் பெற
உன் வாழ்வை தியாகம் செய்தவனே..!
உன் வாழ்வின் முடிவு தான்
நம் தேசத்தின் விடிவு என்று வீறுகொண்டு எழுந்தவனே...!

உனது தியாகம் ஒரு தேசத்தின்
தமிழ் இனத்தின் அடையாளமடா..! உனது இறுதி மூச்சே தமிழ் தான்
என்று நிரூபித்து விட்டாயே...!

இவ்வுலக தமிழினமே
உன் தியாகத்தை பார்த்து
கண்ணீர் சிந்துகின்றனரே..!
நீ தமி

மேலும்

உண்மையில் தான் தோழமையே.....! 29-Sep-2016 3:01 am
தமிழகத்தில் அரசியல் கருத்து வேறுபாடுகளைக் களைந்துவிட்டு, தமிழ் இனம் என்ற உணர்வோடு அனைவரும் ஒரே மையத்தில் இணைய வேண்டும் தமிழகமே எழுக” வாழ்வதற்கு சாதியோ, மதமோ, கடவுளோ அவசியமில்லை. , மொழி மட்டும் தான் அவசியங்கிறது தெரியவரும். 28-Sep-2016 7:50 pm
தோழமையே உங்கள் கருத்தாலும் வருகையாலும் மிக்க மனமகிழ்ந்தேன் என் மனமார்ந்த நன்றிகள். 28-Sep-2016 5:05 pm
போற்றுதற்குரிய தமிழ் விழிப்பு உணர்வுப் படைப்பு. கவிதை நயமும் ஓவியமும் பாராட்டுக்குரியவை, தொடரட்டும் தங்கள் இலக்கிய பயணம் தமிழ் அன்னை ஆசிகள் 20-Sep-2016 2:26 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (69)

கௌதமன் நீல்ராஜ்

கௌதமன் நீல்ராஜ்

பெரம்பலூர்
இராகுல் கலையரசன்

இராகுல் கலையரசன்

பட்டுக்கோட்டை
பிரகாஷ் வ

பிரகாஷ் வ

நாமக்கல்
செல்வமுத்து மன்னார்ராஜ்

செல்வமுத்து மன்னார்ராஜ்

கோலார் தங்கவயல் - KGF

இவர் பின்தொடர்பவர்கள் (69)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (69)

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image
மேலே