நண்பன்

இறைவன் மரணத்தை வகுத்தான் பாரபட்சமின்றி ..!
எத்தனையோ முறை
மரணித்தை தழுவினேன்......
நம்பிக்கை துரோகிகளால்.....!
தோல்வியால் பேச்சிழந்து
துரோகத்தின் வலியால்
நம்பிக்கை இழந்த நாட்களில்
என்னை உயிர்தெழச்செய்து
வாழ்வில் உயர வைத்தவன்
என் உயிரில் கலந்த பாச நண்பனே...!