கௌசல்யா சேகர் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : கௌசல்யா சேகர் |
இடம் | : ஜெயங்கொண்டம் |
பிறந்த தேதி | : 27-Jul-1999 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 27-Feb-2022 |
பார்த்தவர்கள் | : 227 |
புள்ளி | : 12 |
எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குனர்
நடுஜாமத்தின் மீது அப்படி என்ன ஒரு பிரியமோ எந்நாளும் கூகைக்கு போட்டியாய் கண்விழித்துகொண்டு திக்கற்ற மனநிலையோடு உலாவுவாள் இந்த அமலா!!! பின்னர் என்ன சிதறிய மழைத்துளிகளோடு ஏகாந்த வாதமிடுவாள் - ஏற்பட்ட வெள்ளத்திற்கு காரணம் சிதறிய உன் மழைத்துளி மட்டும் அல்ல சிதறிய என் கண்ணீர் துளிகளும்தான் என்று !!
- கௌசல்யா சேகர்
ஆத்மா கட்டுப்பாட்டிற்குள் நடமாடும் பிண கைதியாய் நான் என்னும் மாயையில் இருந்து விடுபட எத்தனை போரட்டம்.
இலையுதிர் காலம் போல் வாழ்க்கை என்னும் மரத்திலிருந்து உதிரும் எண்ணற்ற போலி முகங்கள் !
சலித்து போன பிம்பமாய் போலி புன்னகை செய்து களைத்துபோகிறேன் - மீண்டும் முதலில் இருந்து.
- கௌசல்யா சேகர்
ஏகாந்த பொழுதின் மேகம் உடனான உரையாடலில் நிறைய பேசி தெளிவு பெறுகிறேன்.
நாளும் தொடரும் மாய பயணத்தில் எண்ணெற்ற முகங்கள்..
குறைகளை பட்டியலிடும் முகங்கள்
நடை பாவனையை மாற்றிக்கொள்ள பரிந்துரைக்கும் முகங்கள்
கொஞ்சம் வளர்ந்தால் போதும் பழச மறந்து தலைகணத்துல ஆட ஆரமிச்சிடுவ என மெசெஞ்சரில் வாழ்த்து மழையை பொழியும் முகங்கள் என நாளும் பல்வேறு முகங்களை கடந்துதான் செல்கிறேன் .
ஏனோ ஒரு புது தெளிவு நானாகிய நான் என்னும் ஆணவம்.
கடந்து வந்த பயணத்தை சற்று திரும்பி பார்க்கையில் ஓர் கர்வம்.
காதலும் இல்லை பயணத்தில் உறுதுணை என உறவு எவரும் இல்லை வலிகளை தவிர
இருப்பினும் தனியாக போரிட்டு மீட்சி பெற்று வரும் கர்வம் - யார
நடுநிசி தொடக்க பொழுதில் பரிமாறி கொண்டிருந்த அம்புலி மேக காதலுக்கு இடையில் ஒரு பாவையின் பார்வையில் பட்ட காகையின் காதலையும் இரவு அவ்வளவு நேர்த்தியாக இஸ்திரி செய்திருந்தது.
- கௌசல்யா சேகர்
உன் இலக்கை பிறருக்காக நிராகரிக்கும் போது, அதன் மதிப்பு அந்நபர் உங்களை நிராகரிக்கும் போதுதான் புரியும் !!!
அப்போது நீ இலக்கை மட்டுமல்ல, காலத்தையும் இழந்திருப்பாய்...!!
சோகத்தால் எதுதான் மாறும் கண்ணீர் விட்டால் செடியாய் பூக்கும்.. கடந்து செல் தோழியே!!!