கௌசல்யா சேகர் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கௌசல்யா சேகர்
இடம்:  ஜெயங்கொண்டம்
பிறந்த தேதி :  27-Jul-1999
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  27-Feb-2022
பார்த்தவர்கள்:  227
புள்ளி:  12

என்னைப் பற்றி...

எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குனர்

என் படைப்புகள்
கௌசல்யா சேகர் செய்திகள்
கௌசல்யா சேகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Mar-2023 4:13 pm

நடுஜாமத்தின் மீது அப்படி என்ன ஒரு பிரியமோ எந்நாளும் கூகைக்கு போட்டியாய் கண்விழித்துகொண்டு திக்கற்ற மனநிலையோடு உலாவுவாள் இந்த அமலா!!! பின்னர் என்ன சிதறிய மழைத்துளிகளோடு ஏகாந்த வாதமிடுவாள் - ஏற்பட்ட வெள்ளத்திற்கு காரணம் சிதறிய உன் மழைத்துளி மட்டும் அல்ல சிதறிய என் கண்ணீர் துளிகளும்தான் என்று !!

- கௌசல்யா சேகர்

மேலும்

கௌசல்யா சேகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Mar-2023 4:00 pm

ஆத்மா கட்டுப்பாட்டிற்குள் நடமாடும் பிண கைதியாய் நான் என்னும் மாயையில் இருந்து விடுபட எத்தனை போரட்டம்.
இலையுதிர் காலம் போல் வாழ்க்கை என்னும் மரத்திலிருந்து உதிரும் எண்ணற்ற போலி முகங்கள் !
சலித்து போன பிம்பமாய் போலி புன்னகை செய்து களைத்துபோகிறேன் - மீண்டும் முதலில் இருந்து.

- கௌசல்யா சேகர்

மேலும்

கௌசல்யா சேகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Mar-2023 12:36 am

ஏகாந்த பொழுதின் மேகம் உடனான உரையாடலில் நிறைய பேசி தெளிவு பெறுகிறேன்.
நாளும் தொடரும் மாய பயணத்தில் எண்ணெற்ற முகங்கள்..
குறைகளை பட்டியலிடும் முகங்கள்
நடை பாவனையை மாற்றிக்கொள்ள பரிந்துரைக்கும் முகங்கள்
கொஞ்சம் வளர்ந்தால் போதும் பழச மறந்து தலைகணத்துல ஆட ஆரமிச்சிடுவ என மெசெஞ்சரில் வாழ்த்து மழையை பொழியும் முகங்கள் என நாளும் பல்வேறு முகங்களை கடந்துதான் செல்கிறேன் .
ஏனோ ஒரு புது தெளிவு நானாகிய நான் என்னும் ஆணவம்.
கடந்து வந்த பயணத்தை சற்று திரும்பி பார்க்கையில் ஓர் கர்வம்.
காதலும் இல்லை பயணத்தில் உறுதுணை என உறவு எவரும் இல்லை வலிகளை தவிர
இருப்பினும் தனியாக போரிட்டு மீட்சி பெற்று வரும் கர்வம் - யார

மேலும்

கௌசல்யா சேகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Mar-2023 10:44 pm

நடுநிசி தொடக்க பொழுதில் பரிமாறி கொண்டிருந்த அம்புலி மேக காதலுக்கு இடையில் ஒரு பாவையின் பார்வையில் பட்ட காகையின் காதலையும் இரவு அவ்வளவு நேர்த்தியாக இஸ்திரி செய்திருந்தது.

- கௌசல்யா சேகர்

மேலும்

கௌசல்யா சேகர் - கௌசல்யா சேகர் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
05-Jun-2022 11:28 pm

என் இனிய தனிமையே ❤️

விடுதி அறையில்
 விடியலை தேடுகிறேன்
பசியோடு தொடரும் இரவுகளில்
 எத்தனை எத்தனை நினைவுகள்
சூரியன் உதிக்கும் வரை 
  திக்கற்ற சிந்தனைகளில் மனம்
உறக்கம் இல்லா இரவுகளில் 
  உறவுகளை நினைத்து பார்க்கிறேன்
தனிமையாய் உணரும் தருவாயில்
 ஆறுதல் சொல்ல ஏதுவாய் 
பேப்பரும் பேனாவும்....
 தொடர்கிறது நாள் தோறும் வலிகள்
நீளுகிறது என் ஏக்கங்களின் வரிகள்
 சம மரியாதை உண்டு என நினைத்து 
சினிமாவின் மீது காதல் 
  வார்த்தைகளால் சொல்லமுடியாது
வரிகளால் எழுத முடியாது 
  உணர்ந்தால் மட்டுமே வலிகள் புரியும் 
உதவி இயக்குனர்கள் என்றாலே 
  பெரும் திண்டாட்டங்கள்தான்.....
அதுவும் பெண் என்றால் ...? 
  கேள்விக்குறிகள் நிறைந்த பயணம்
உறக்கத்தை மறந்து நீளுகிறது இரவு
 எத்தனை கேளிக்கைகள்
அத்தனைக்கும் நடுவில் 
  விருந்தாக்க நினைக்கும் மிருகங்கள்
உதவி எனக்கேட்டால்
 உடம்பை நோக்கும் கூட்டம்
கூட்டத்திற்கு நடுவில் என் போராட்டம்
 மனதில் ஆயிரம் வலிகள்
சிரிக்கிறேன் போலி புன்னகையால்
 செல்லும் பாதையோ கரடு முரடு
அதனை தாண்டுவதே என் இலக்கு
 திண்டாட்டத்துடன் முயற்சிக்கிறேன்
நாளை கொண்டாடுவதற்காக...

 - கௌசல்யா சேகர் -

மேலும்

கௌசல்யா சேகர் - கௌசல்யா சேகர் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
06-Mar-2022 12:27 am

உன் இலக்கை பிறருக்காக நிராகரிக்கும் போது, அதன் மதிப்பு அந்நபர் உங்களை நிராகரிக்கும் போதுதான் புரியும் !!! 
அப்போது நீ இலக்கை மட்டுமல்ல, காலத்தையும் இழந்திருப்பாய்...!!

மேலும்

கௌசல்யா சேகர் - கௌசல்யா சேகர் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
20-Mar-2022 2:22 pm

சோகத்தால் எதுதான் மாறும் கண்ணீர் விட்டால் செடியாய் பூக்கும்.. கடந்து செல் தோழியே!!!

மேலும்

கௌசல்யா சேகர் - கௌசல்யா சேகர் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
05-Jun-2022 11:10 pm

எனது இரவுகள்

கரையை சேர பல குழப்பங்களுக்கு நடுவே அலைமோதும் நிமிடமாகவே செல்கிறது !!

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே