கௌசல்யா சேகர் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : கௌசல்யா சேகர் |
இடம் | : ஜெயங்கொண்டம் |
பிறந்த தேதி | : 27-Jul-1999 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 27-Feb-2022 |
பார்த்தவர்கள் | : 644 |
புள்ளி | : 44 |
எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குனர்
ஒரு கதையை எழுதும் போது,
நான் பிரம்மன் போல உணர்கிறேன்.
ஆதி முதல் அந்தம் வரை –
எனது ராட்சியம் அது.
பாத்திரங்கள் என் விரலில் பிறக்க,
வழித்தடங்கள் என் எண்ணத்தில் திரும்ப,
பயணங்கள் என வசதிக்கு வளைந்து செல்ல –
அது போன்ற சுதந்திரம் வேறேதாவது இருக்குமா?
ஒரு பெண் – தன் கடைசி ஆசையைத் தேடி பயணிக்கலாம்.
ஒரு சிறுமி – பசியால் சிரிக்கலாம்.
ஒரு நிழல் – ஒரு கனவுக்கு உயிராகலாம்.
எந்த பாவமும் என் அனுமதியின்றி நடக்காது.
கூடுதலாக மன ஓட்டத்துடன்
Spotify-யில் என் கதை உலகத்துக்கும் perfectly match ஆகும் ஒரு BGM ஒலிக்கத் தொடங்கினால்
அந்த நிமிடம் நான் தான்!
இந்த பூமியில் உச்ச பாக்கியசாலி ♥️
- க
முதலில் ஒரு உறுதியான கதை இருக்க வேண்டும்.
இறுதியில் மொரல் இருக்க வேண்டும்.
இதனைத் தாண்டி, பார்வையாளர்களை சிந்திக்க வைக்க, பார்வையை சற்றும் சோர்வில்லாமல் கொண்டு செல்ல non-linear திரைக்கதைப் போக்கில் படம் நகர வேண்டும்.
இல்லையெனில், எதார்த்தமாக, நேர்த்தியான linear திரைக்கதையாக இருந்தாலும், மறைக்கப்பட்ட, வெற்றியடைந்த மற்றும் தோல்வியடைந்த அல்லது பாதிக்கப்பட்ட நபரின் வலியை, குறைந்த அளவு பிக்ஷன் கலந்திருந்தாலும், லாஜிக் மீறல் இன்றி கொண்டு சென்று, மனதிற்குள் நங்கூரம் போல் தாக்கத்தை உண்டுப்பண்ண வேண்டும்.
அந்த தாக்கம் நமக்கு மோட்டிவ் தரலாம் அல்லது இரக்கத்தையும் உண்டுப்பண்ணலாம்.
🖤 சினிமா என்பத
கயிறு அறுந்த காத்தாடியாகவே இருந்தாலும், மரத்தின் கிளைகளில் சிக்குண்டு பறக்கவே விதியாகிறது.
- கௌசல்யா சேகர்
ஆல்கஹால் இல்லாமல் ஆட்டிபடைக்கிறாய்!!
ஒவ்வொரு நொடி இடைவெளியும்
தெளிவுபெற முடியாமல் மூழ்கி மீள்கிறேன்!!
ஆல்கஹாலை தாண்டிய போதை காதலுக்கு உண்டு என உன்னிடம் பேசிய பின் ஒப்புக்கொள்கிறேன்! சற்று ஞானமும் கொள்கிறேன் போதையின் தவிப்பில்....
- கௌசல்யா சேகர்