கௌசல்யா சேகர் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கௌசல்யா சேகர்
இடம்:  ஜெயங்கொண்டம்
பிறந்த தேதி :  27-Jul-1999
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  27-Feb-2022
பார்த்தவர்கள்:  660
புள்ளி:  44

என்னைப் பற்றி...

எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குனர்

என் படைப்புகள்
கௌசல்யா சேகர் செய்திகள்
கௌசல்யா சேகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jun-2025 3:26 am

ஒரு கதையை எழுதும் போது,
நான் பிரம்மன் போல உணர்கிறேன்.
ஆதி முதல் அந்தம் வரை –
எனது ராட்சியம் அது.
பாத்திரங்கள் என் விரலில் பிறக்க,
வழித்தடங்கள் என் எண்ணத்தில் திரும்ப,
பயணங்கள் என வசதிக்கு வளைந்து செல்ல –
அது போன்ற சுதந்திரம் வேறேதாவது இருக்குமா?

ஒரு பெண் – தன் கடைசி ஆசையைத் தேடி பயணிக்கலாம்.
ஒரு சிறுமி – பசியால் சிரிக்கலாம்.
ஒரு நிழல் – ஒரு கனவுக்கு உயிராகலாம்.

எந்த பாவமும் என் அனுமதியின்றி நடக்காது.

கூடுதலாக மன ஓட்டத்துடன்
Spotify-யில் என் கதை உலகத்துக்கும் perfectly match ஆகும் ஒரு BGM ஒலிக்கத் தொடங்கினால்
அந்த நிமிடம் நான் தான்!
இந்த பூமியில் உச்ச பாக்கியசாலி ♥️

- க

மேலும்

கௌசல்யா சேகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jun-2025 3:18 am
கௌசல்யா சேகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jun-2025 11:29 am

முதலில் ஒரு உறுதியான கதை இருக்க வேண்டும்.
இறுதியில் மொரல் இருக்க வேண்டும்.
இதனைத் தாண்டி, பார்வையாளர்களை சிந்திக்க வைக்க, பார்வையை சற்றும் சோர்வில்லாமல் கொண்டு செல்ல non-linear திரைக்கதைப் போக்கில் படம் நகர வேண்டும்.

இல்லையெனில், எதார்த்தமாக, நேர்த்தியான linear திரைக்கதையாக இருந்தாலும், மறைக்கப்பட்ட, வெற்றியடைந்த மற்றும் தோல்வியடைந்த அல்லது பாதிக்கப்பட்ட நபரின் வலியை, குறைந்த அளவு பிக்ஷன் கலந்திருந்தாலும், லாஜிக் மீறல் இன்றி கொண்டு சென்று, மனதிற்குள் நங்கூரம் போல் தாக்கத்தை உண்டுப்பண்ண வேண்டும்.

அந்த தாக்கம் நமக்கு மோட்டிவ் தரலாம் அல்லது இரக்கத்தையும் உண்டுப்பண்ணலாம்.

🖤 சினிமா என்பத

மேலும்

கௌசல்யா சேகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Jan-2025 8:00 pm

கயிறு அறுந்த காத்தாடியாகவே இருந்தாலும், மரத்தின் கிளைகளில் சிக்குண்டு பறக்கவே விதியாகிறது.

- கௌசல்யா சேகர்

மேலும்

கௌசல்யா சேகர் - கௌசல்யா சேகர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-May-2023 4:01 am

ஆல்கஹால் இல்லாமல் ஆட்டிபடைக்கிறாய்!!
ஒவ்வொரு நொடி இடைவெளியும்
தெளிவுபெற முடியாமல் மூழ்கி மீள்கிறேன்!!
ஆல்கஹாலை தாண்டிய போதை காதலுக்கு உண்டு என உன்னிடம் பேசிய பின் ஒப்புக்கொள்கிறேன்! சற்று ஞானமும் கொள்கிறேன் போதையின் தவிப்பில்....

- கௌசல்யா சேகர்

மேலும்

கண்டிப்பாக ... மேலும் நன்றிகள் அது வெறும் வரிகளே போதையில் ஏற்கனவே சிக்கி மிண்டவள் எனவே கவனமாகதான் இருப்பேன்.. 18-May-2023 2:03 am
வணக்கம் கௌசல்யா சேகர் அவர்களே தங்களின் கவி வரிகள் முற்றிலும் உண்மையே. காதலையும்... அன்பையும் யாராலும் அளவிட இயலாது. ஆனால் அதே சமயம் போதையை எல்லை மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வாழ்த்துக்கள்.. வாழ்க நலமுடன்...!! 09-May-2023 6:42 am
கௌசல்யா சேகர் - கௌசல்யா சேகர் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
05-Jun-2022 11:28 pm

என் இனிய தனிமையே ❤️

விடுதி அறையில்
 விடியலை தேடுகிறேன்
பசியோடு தொடரும் இரவுகளில்
 எத்தனை எத்தனை நினைவுகள்
சூரியன் உதிக்கும் வரை 
  திக்கற்ற சிந்தனைகளில் மனம்
உறக்கம் இல்லா இரவுகளில் 
  உறவுகளை நினைத்து பார்க்கிறேன்
தனிமையாய் உணரும் தருவாயில்
 ஆறுதல் சொல்ல ஏதுவாய் 
பேப்பரும் பேனாவும்....
 தொடர்கிறது நாள் தோறும் வலிகள்
நீளுகிறது என் ஏக்கங்களின் வரிகள்
 சம மரியாதை உண்டு என நினைத்து 
சினிமாவின் மீது காதல் 
  வார்த்தைகளால் சொல்லமுடியாது
வரிகளால் எழுத முடியாது 
  உணர்ந்தால் மட்டுமே வலிகள் புரியும் 
உதவி இயக்குனர்கள் என்றாலே 
  பெரும் திண்டாட்டங்கள்தான்.....
அதுவும் பெண் என்றால் ...? 
  கேள்விக்குறிகள் நிறைந்த பயணம்
உறக்கத்தை மறந்து நீளுகிறது இரவு
 எத்தனை கேளிக்கைகள்
அத்தனைக்கும் நடுவில் 
  விருந்தாக்க நினைக்கும் மிருகங்கள்
உதவி எனக்கேட்டால்
 உடம்பை நோக்கும் கூட்டம்
கூட்டத்திற்கு நடுவில் என் போராட்டம்
 மனதில் ஆயிரம் வலிகள்
சிரிக்கிறேன் போலி புன்னகையால்
 செல்லும் பாதையோ கரடு முரடு
அதனை தாண்டுவதே என் இலக்கு
 திண்டாட்டத்துடன் முயற்சிக்கிறேன்
நாளை கொண்டாடுவதற்காக...

 - கௌசல்யா சேகர் -

மேலும்

முயற்சி நிச்சயம் உங்களுக்கு வெற்றி தான் 07-Dec-2023 4:25 am
கௌசல்யா சேகர் - கௌசல்யா சேகர் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
06-Mar-2022 12:27 am

உன் இலக்கை பிறருக்காக நிராகரிக்கும் போது, அதன் மதிப்பு அந்நபர் உங்களை நிராகரிக்கும் போதுதான் புரியும் !!! 
அப்போது நீ இலக்கை மட்டுமல்ல, காலத்தையும் இழந்திருப்பாய்...!!

மேலும்

கௌசல்யா சேகர் - கௌசல்யா சேகர் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
05-Jun-2022 11:10 pm

எனது இரவுகள்

கரையை சேர பல குழப்பங்களுக்கு நடுவே அலைமோதும் நிமிடமாகவே செல்கிறது !!

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே