Dr.V.K.Kanniappan - சுயவிவரம்
(Profile)


தமிழ் பித்தன்
இயற்பெயர் | : Dr.V.K.Kanniappan |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : 17-Oct-1944 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-Jun-2011 |
பார்த்தவர்கள் | : 12918 |
புள்ளி | : 10616 |
நான் ஒரு அரசாங்க ஒய்வு பெற்ற கண்மருத்துவ பேராசிரியர். மதுரை மாவட்டத்திலுள்ள சோழவந்தான் என் பிறந்த ஊர். நான் \'கீற்று\' வலைத் தளத்தில் பிப்ரவரி, 2011 லிருந்து சுமார் 45 கட்டுரைகள், வெவ்வேறு பொருட்களில் - மருத்துவம், இலக்கியம், வரலாறு - கட்டுரைகள் வெளியிட்டுள்ளேன்.
Mobile number: 98430 70840
http://annam-kanniappan.blogspot.in,
http://www.poemhunter.com/dr-v-k-kanniappan,
http://poetry.com/users/11888-Kanniappan%20%20Kanniappan%20
http://www.lankasripoems.com/index.php?conp=list&poetId=197803 புனைப்பெயர் ‘அன்னம்’
http://www.tamilthottam.in/forum
நேரிசை வெண்பா
காய்ச்சீர் அறியானாம் காதல் கிறுக்கலை
பேய்போல் அலைந்து எழுதுவனாம் -- தாயாம்
தமிழின் இலக்கணம் கற்கமறுப் பாரும்
தமிழராவா ரோவாகார் நம்பு
தன்னைத்தானே கவிஞர் என்றும் பெயரில் கவிஞர் என்று ஒட்டிக்கொண்டு காதல் காதல் என்று குப்பைகளையும் அரைத்த மாவையே மீண்டும் அரைத்துத் தள்ளும் மிஷின் கள் பலதும்
இலக்கணம் கற்றுக்கொள்ள ட்டும் என்ற நோக்கில் அடிப்படை
எழுத திறந்துர் கூட பார்க்க மறுக்கிறான். இவனெல்லாம்
தமிழனா அல்லது தமிழை வந்து அலைந்து கெடுக்கின்றானாட் என்று அறிய முடியவில்லை. . எழுத்துக்கு கூடிய சீக்கிரம் மூடு விழா நடைபெறும் என்பதில் சந்தேகம் இல்லை.
நன்மொழி மேல்வைப்பு இன்னிசை வெண்பா
சலதோடங் கொண்டேன்நான் சங்கடமாய்த் தும்ம
பலமுறை கேட்டதும் பார்த்து - நலமே
வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று!
- வ.க.கன்னியப்பன்
வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று! ௧௩௧௭
- புலவி நுணுக்கம், கற்பியல், காமத்துப்பால், திருக்குறள்
நேரிசை வெண்பா
நேரதன் பின்னே நிரைசேர்க் கவும்வரும்
பாரதுவே கூவிளமாம் யாப்பிது -- நீரதன்பின்
பாரும் கருத்தோடு நல்ல நிரையிரண்டு
சேரு கருவிளமா மே
உதாரணங்கள்
கூவிளம். :- கூவிளம்,கல்லினை காலினை வேலதால் போன்றவை
கருவிளம்:- கருவிளம்,பகையென பகையெலாம் உதாரணம், பலதுமே வருமது
நேரிசை வெண்பா
(1, 3 சீர்களில் மோனை)
கண்மணி யென்றே களித்திருந்தேன் காண்கையில்
விண்மதி போலவே வீற்றிருந்தாள் - பெண்ணாளும்
மென்னகையில் சாய்ந்தனள் மேலே பரவசமாய்ப்
புன்னகையில் தோள்சாய்ந்தாள் போற்று!
- வ.க.கன்னியப்பன்
இருநேர் அசைகளும் சேரவரும் தேமா
ஒருநிரையில் நேரசை கூட்டு -- வருமாம்
புளிமாச்சீர் மாச்சீர் முடிவது நேரில்
களிப்பாய் இரண்டதையுங் காண்
தேமாச்சீர் உதாரணங்கள்
நல்ல, நாலு, நாளாம், நல்லா, நாளும். நாடார் கள்ளர் ( நே ரசையில் முடியும்)
புளிமாச்சீர் உதாரணம்
மடையன் , தினவு முடிக்க முடிக்கா விதையில் தடாகம். விடாதார்
........
எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 3, மா அரையடிக்கு)
ஒருதருமற் றொருதருவி னுதவியின்றிக் காய்க்கும்
..உயராண்பெண் சேர்க்கையின்றி யொருமகவுண் டாமோ
இருமையின்றி யிருவருமே நம்மனைநம் பொருணம்
..இகுளைநஞ்சேய் எனப்பொதுவி னியம்புரிமை யாலும்
உருவமொன்றா லாண்பெண்ணை யமைத்தனன்முன் பரனென்(று)
..உயர்ந்தோர்சொல் வதுநிசமா முரியோனில் லென்னும்
இருவ’ர்’கள்தம் நயந்துயரம் ஏகமெனக் கருதி
..இட்டமொடு பெட்டமரிற் கட்டமவர்க் குளதோ. 48
- கணவன் மனைவியர் இயல்பு
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”ஒரு மரத்திலே ஆண் பெண் பூக்கள் அமைந்திருப்பதால், அம்மரம் வேறு ஒரு மரத்தின் உதவியில்லாமல் காய்க்கும்.
தரவு கொச்சகக் கலிப்பா
ஈண்டிவண் வருவலெனும் இறைவருகி லரவரைத்
தீண்டிய கிரணமதால் தீண்டுதி யெனைவெயிலே
தாண்டிய வளியவர்மெய் தடவியென் னுடல்படர்வாய்
மீண்டில ரிடமெனது மெலிவினை யுரைமுகிலே. 47
- கணவன் மனைவியர் இயல்பு
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”இப்பொழுது இங்கு வருவேன் என்று கூறிச் சென்ற தலைவர் இன்னும் வரவில்லை. அவரைத் தீண்டிய கதிரால் என்னையும் தீண்டுகின்றாய் ஞாயிறே! அவர்மேல் தழுவி தாண்டி வரும் காற்றே! நீ என்மேலும் படர்கின்றாய்.
மேகமே! கூறியபடி, மீண்டும் வராத தலைவரிடம் எனது உடல் மெலிவினை, நீ போய் அவரிடம் சொல்” என்று காதலரைக் காணாது தன் உடல் மெலிவதனைக் காதலனிடம் தெரிவிக்கு
தென்றல் உறங்கினால் தேன்மலர்கள் இதழ்கள் விரிக்குமா
தென்னங் கீற்றும் மகிழ்ந்து மெல்ல அசையுமா
கன்னக் குழிவில் கவிதை ஏந்திநீ வராவிடின்
என்னுள்ளே சந்தக் கவிதை மலர்ந்து வருமா ?
குறள் வெண்செந்துறை
ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
நலனுடை மையின் நாணுச் சிறந்தன்று. 6
சிறந்த பத்து, முதுமொழிக் காஞ்சி
பொருளுரை:
நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால், அடாத காரியங்களைச் செய்யக் கூசுந்தன்மை ஒருவன் அழகுடையவனாதலைக் காட்டிலும் மிக்க சிறப்புடையது.
'அணியன்றோ நாணுடைமை சான்றோர்க்கு' (1014 நாண் உடைமை)
ஆதலின், 'நலம் வேண்டின் நாணுடைமை வேண்டும் (960 குடிமை), 'நலஞ்சுடும் நாணின்மை நின்றக்கடை’ (1019 நாண் உடைமை)' ஆதலால் நாணுடைமை நலனுடைமையின் சிறந்ததாம்.
நாணாவது செய்யத் தகாதனவற்றிற்கு உள்ளம் ஒடுங்குதல்.
இரவோ(டு) இரவாக வாழ்க்கையில் வெற்றி
வருவதில்லை; ஆர்வம் குறிக்கோள் - இரண்டும்
இணைந்து தொடர்முயற்சி மேற்கொண்டால் எங்கும்
துணையாய் வரும்ஒளிம யம்! 1
இரவோ(டு) இரவாக வாழ்க்கையில் வெற்றி
வருவதில்லை; ஆர்வம் குறிக்கோள் - இரண்டும்
இணைந்து தொடர்முயற்சி மேற்கொண்டால் எங்கும்
துணையாய் வருமே ஒளி! 2
தன்னம்பிக் கைவெற்றிக் கேசாவி யாய்ஆகும்
என்றும் அவசர எண்ணமும் - நன்றாம்
முடிவினை எட்டாதே; உன்குறையை நேர்செய்
கிடைக்குமே வெற்றியப்போ து! 3
தன்னம்பிக் கைவெற்றிக் கேதிறவு கோலாகும்
என்றும் அவசர எண்ணமும் - நன்றாம்
முடிவினை எட்டாதே; உன்குறையை நேர்செய்
கிடைக்குமே வெற்றியப்போ து! 3a
பரிசு பெற்ற நேரிசை வெண்பா
பண்புடையர் ஆதல்; பழகுசொல் பேசுதல்;
நண்பரைப் பேணுதல்; நன்னயமாய் – புண்ணன்ன
வஞ்சகத்தை வேரறுத்து மாண்புறவே நல்லவற்றை
நெஞ்சில் நிறுத்துதம்பி நீ! – எஸ்.பி.இராமையா, புதுப்பாக்கம்
பரிசு பெற்ற நேரிசை வெண்பா
தஞ்ச மெனஉன் தயவுக்காய்க் காத்திருப்பர்;
கொஞ்சிக் குலமென்று கூவிடுவார்; - நஞ்சுடனே,
வஞ்சனையும் சூதும் வழியாகக் கொண்டிருப்பார்;
நெஞ்சில் நிறுத்துதம்பி நீ! – நம்பிக்கை நாகராசன்
நான் அனுப்பிய:
ஒரு விகற்ப நேரிசை வெண்பா
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை செய்வார் இருப்பரே – தஞ்சமென
கொஞ்சமும் அன்னாரை கொள்ளலா காதென்றே
நெஞ்சில் நிறுத்துதம்
நானும், என் மனைவியும் சென்ற 15.08.2016 ல் என் இளைய மகன் குடும்பத்துடன் சென்னை சென்று வேளச்சேரியில் இரண்டு வாரங்கள் தங்கியிருந்தோம். அப்பொழுது 25.08.2016 அன்று ஆவடி vel tech பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும், மாணவர் விடுதியில் உள்ள என் பேரனைப் பார்க்கச் செல்வதற்காக SRP tools பஸ் நிறுத்தம் சென்றேன். நானும், என் மகனும் திருவான்மியூர் ரயில் நிலையம் செல்ல ஷேர் ஆட்டோவில் ஏறினோம்.
என் மகன் ஓட்டுநருடன் முன் இருக்கையில் அமர்ந்தார். நான் ஓட்டுநர்க்குப் பின்னால் உள்ள கீழ் இருக்கையில் அமர்ந்தேன். மேல் இருக்கையில் (IT நிறுவனத்தில் பணி புரிபவர்கள் என்று நினைக்கிறேன்) இள வயதுப் பெண்கள் இருவர்
நண்பர்கள் (267)

நன்னாடன்
நன்னாடு, விழுப்புரம்

Deepan
சென்னை

Dr A S KANDHAN
Chennai

Palani Rajan
vellore
