Dr.V.K.Kanniappan - சுயவிவரம்
(Profile)


தமிழ் பித்தன்
இயற்பெயர் | : Dr.V.K.Kanniappan |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : 17-Oct-1944 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-Jun-2011 |
பார்த்தவர்கள் | : 13569 |
புள்ளி | : 11616 |
நான் ஒரு அரசாங்க ஒய்வு பெற்ற கண்மருத்துவ பேராசிரியர். மதுரை மாவட்டத்திலுள்ள சோழவந்தான் என் பிறந்த ஊர். நான் \'கீற்று\' வலைத் தளத்தில் பிப்ரவரி, 2011 லிருந்து சுமார் 45 கட்டுரைகள், வெவ்வேறு பொருட்களில் - மருத்துவம், இலக்கியம், வரலாறு - கட்டுரைகள் வெளியிட்டுள்ளேன்.
Mobile number: 98430 70840
http://annam-kanniappan.blogspot.in,
http://www.poemhunter.com/dr-v-k-kanniappan,
http://poetry.com/users/11888-Kanniappan%20%20Kanniappan%20
http://www.lankasripoems.com/index.php?conp=list&poetId=197803 புனைப்பெயர் ‘அன்னம்’
http://www.tamilthottam.in/forum
இறையன்பு ஓராண்டு உரைகள்
தொகுதி 1
நூல் ஆசிரியர் : இறையன்பு அவர்கள்
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம்.
சிலருக்கு நன்றாக பேச வரும், சிலருக்கு நன்றாக எழுத வரும், வெகு சிலருக்கு நன்றாகப் பேசவும் ,எழுதவும் வரும். அந்த வெகு சிலரில் சிகரமானவர் மாமனிதர் இறையன்பு அவர்கள். அவரது பல உரைகளை நேரடியாக கேட்டு ரசித்து இருக்கிறேன். ஒருமுறை பேசியதை மறுமுறை பேச மாட்டார். கூறியது கூறல் அவரிடம் எப்போதும் இல்லை.
ஒரு சில பிரபலங்கள் பேச்சை முதல் முறை கேட்டால் டாப். மறுமுறை கேட்டால் டேப். என்றைக்கும் ஒரே பேச்சு, அன்று பேசியதையே பேசுவார்கள்.
முத்தொள்ளாயிரம்
சேரன்
நேரிசை வெண்பா
புன்னாகச் சோலை புனல்தெங்கு சூழ்மாந்தை
நன்னாகம் நின்றலரும் நன்னாடன் – என்னாகம்
கங்குல் ஒருநாள் கனவினுள் தைவந்தான்
என்கொல் இவரறிந்த வாறு? 6
பொருளுரை:
மாந்தை நன்னாடனாகிய சேரன் ஒருநாள் இரவுக் கனாவில் என் மார்பகத்தைத் தடவிக்கொடுத்தான். இது இவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது? கண்டபடி பேசுகிறார்களே!
புன்னாகம், நன்னாகம், தென்னை ஆகியன மலரும் ஊர் மாந்தை நகரம்.
இருவிகற்ப நேரிசை வெண்பா
தமிழே! உனைப்பாடத் தானெண்ணி நானும்
அமுது குடித்தாற்போல் ஆங்கே – அமர்ந்திருக்க
நல்லதெலாம் என்னெஞ்சில் நாலுபக்கம் வந்ததையா;
எல்லையிலா இன்பம் எனக்கு!
- வ.க.கன்னியப்பன்
ஒருவிகற்ப நேரிசை வெண்பா
தொல்லைதரா இல்லாள் துணைக்கிரு ஆண்பிள்ளை
நல்லதோர் பெண்பிள்ளை நான்பெற்றேன் – சொல்லவோ
வெல்லம்போல் நல்லுறவு வேண்டுகின்ற நற்றுணையாய்
எல்லையிலா இன்பம் எனக்கு!
- வ.க.கன்னியப்பன்
மஞ்சள் நிறவான் மனதில் கவியுது
நெஞ்சிலேழு வண்ணத்தை வானவில் தூவுது
வஞ்சமிலா வெண்ணிலா வும்வந்து விட்டதுபார்
வஞ்சிநீ ஏன்வரவில் லை
முத்தொள்ளாயிரம்
சேரன்
நேரிசை வெண்பா
வரைபொரு நீள்மார்பின் வட்கார் வணக்கும்
நிரைபொரு வேல்,மாந்தைக் கோவே – நிரைவளையார்
தங்கோலம் வௌவுதல் ஆமோ அவர்தாய்மார்
செங்கோலன் அல்லன் என! 5
பொருளுரை:
மன்னா! வணங்காதவரை வணங்கச் செய்து அவர்தம் மண்ணைக் கொள்ளலாம். உன் வலையில் விழுந்து கிடக்கும் பெண்ணின் அழகைக் கவரலாமா?
பெண்ணின் தாய்மார் உன்னைச் செங்கோலன் அல்லன் என்று கூறுகிறார்களே! மாந்தை நகர மக்களின் கோ. மலை போல் அகன்ற மார்பினை உடையவன். நிரையாக நின்று வேலால் தாக்குபவர் மாந்தை நகர மக்கள். மகளிர் வரிசையாக வளையல் அணிந்தவர். கையின் வளையல் கோலத்தை வௌவலாமா?
திரும்பிப் பார்க்கிறேன்! நூல் ஆசிரியர் இரா. இரவி !
நூல் மதிப்புரை ;பேரா. ஜி. இராமமூர்த்தி
ஒருங்கிணைப்பாளர் மற்றும்
தலைவர், தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர் கழகம், மதுரை மாவட்டம்.
முதல் பதிப்பு. 2025. வானதி வெளியீடு. 78 பக்கங்கள். ரூ.70/-
அணிந்துரை வழங்கிய ஏர்வாடி S. ராதாகிருஷ்ணன், ரவி, பேரா. ரா. மோகன் மூலம் கிடைத்த இலக்கியப் பரிசு என்கிறார். அவர் கண்ணில் எது பட்டாலும் பாடலாக்கி விடும் திறன் கொண்டவர் என்கிறார். இரவி, தன்னுரையில், இது தனது 33 - ஆவது நூல் என்றும், உண்மை நிகழ்வுகளைக் கட்டுரைகளாக்கி உள்ளார். இந்நூலில் பலர் விடுபட்டுள்ளார்கள், அவர்கள் 2- ஆவது பாகத்தில் வருவர் என்க
செவ்வித ழில்சிவந்து சிந்துநதி பாயுதோ
செவ்வாய் திறந்திடின் சிந்துமோவெண் முத்து
கலைத்திடும் பூங்கூந்தல் காவிரி ஆறோ
சிலைநீஓர் தேவதையோ செப்பு
குறள் வெண்செந்துறை
ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
நலனுடை மையின் நாணுச் சிறந்தன்று. 6
சிறந்த பத்து, முதுமொழிக் காஞ்சி
பொருளுரை:
நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால், அடாத காரியங்களைச் செய்யக் கூசுந்தன்மை ஒருவன் அழகுடையவனாதலைக் காட்டிலும் மிக்க சிறப்புடையது.
'அணியன்றோ நாணுடைமை சான்றோர்க்கு' (1014 நாண் உடைமை)
ஆதலின், 'நலம் வேண்டின் நாணுடைமை வேண்டும் (960 குடிமை), 'நலஞ்சுடும் நாணின்மை நின்றக்கடை’ (1019 நாண் உடைமை)' ஆதலால் நாணுடைமை நலனுடைமையின் சிறந்ததாம்.
நாணாவது செய்யத் தகாதனவற்றிற்கு உள்ளம் ஒடுங்குதல்.
இரவோ(டு) இரவாக வாழ்க்கையில் வெற்றி
வருவதில்லை; ஆர்வம் குறிக்கோள் - இரண்டும்
இணைந்து தொடர்முயற்சி மேற்கொண்டால் எங்கும்
துணையாய் வரும்ஒளிம யம்! 1
இரவோ(டு) இரவாக வாழ்க்கையில் வெற்றி
வருவதில்லை; ஆர்வம் குறிக்கோள் - இரண்டும்
இணைந்து தொடர்முயற்சி மேற்கொண்டால் எங்கும்
துணையாய் வருமே ஒளி! 2
தன்னம்பிக் கைவெற்றிக் கேசாவி யாய்ஆகும்
என்றும் அவசர எண்ணமும் - நன்றாம்
முடிவினை எட்டாதே; உன்குறையை நேர்செய்
கிடைக்குமே வெற்றியப்போ து! 3
தன்னம்பிக் கைவெற்றிக் கேதிறவு கோலாகும்
என்றும் அவசர எண்ணமும் - நன்றாம்
முடிவினை எட்டாதே; உன்குறையை நேர்செய்
கிடைக்குமே வெற்றியப்போ து! 3a
பரிசு பெற்ற நேரிசை வெண்பா
பண்புடையர் ஆதல்; பழகுசொல் பேசுதல்;
நண்பரைப் பேணுதல்; நன்னயமாய் – புண்ணன்ன
வஞ்சகத்தை வேரறுத்து மாண்புறவே நல்லவற்றை
நெஞ்சில் நிறுத்துதம்பி நீ! – எஸ்.பி.இராமையா, புதுப்பாக்கம்
பரிசு பெற்ற நேரிசை வெண்பா
தஞ்ச மெனஉன் தயவுக்காய்க் காத்திருப்பர்;
கொஞ்சிக் குலமென்று கூவிடுவார்; - நஞ்சுடனே,
வஞ்சனையும் சூதும் வழியாகக் கொண்டிருப்பார்;
நெஞ்சில் நிறுத்துதம்பி நீ! – நம்பிக்கை நாகராசன்
நான் அனுப்பிய:
ஒரு விகற்ப நேரிசை வெண்பா
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை செய்வார் இருப்பரே – தஞ்சமென
கொஞ்சமும் அன்னாரை கொள்ளலா காதென்றே
நெஞ்சில் நிறுத்துதம்
நானும், என் மனைவியும் சென்ற 15.08.2016 ல் என் இளைய மகன் குடும்பத்துடன் சென்னை சென்று வேளச்சேரியில் இரண்டு வாரங்கள் தங்கியிருந்தோம். அப்பொழுது 25.08.2016 அன்று ஆவடி vel tech பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும், மாணவர் விடுதியில் உள்ள என் பேரனைப் பார்க்கச் செல்வதற்காக SRP tools பஸ் நிறுத்தம் சென்றேன். நானும், என் மகனும் திருவான்மியூர் ரயில் நிலையம் செல்ல ஷேர் ஆட்டோவில் ஏறினோம்.
என் மகன் ஓட்டுநருடன் முன் இருக்கையில் அமர்ந்தார். நான் ஓட்டுநர்க்குப் பின்னால் உள்ள கீழ் இருக்கையில் அமர்ந்தேன். மேல் இருக்கையில் (IT நிறுவனத்தில் பணி புரிபவர்கள் என்று நினைக்கிறேன்) இள வயதுப் பெண்கள் இருவர்
நண்பர்கள் (267)

நன்னாடன்
நன்னாடு, விழுப்புரம்

Deepan
சென்னை

Dr A S KANDHAN
Chennai

Palani Rajan
vellore
