Dr.V.K.Kanniappan - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  Dr.V.K.Kanniappan
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  17-Oct-1944
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Jun-2011
பார்த்தவர்கள்:  12918
புள்ளி:  10616

என்னைப் பற்றி...

நான் ஒரு அரசாங்க ஒய்வு பெற்ற கண்மருத்துவ பேராசிரியர். மதுரை மாவட்டத்திலுள்ள சோழவந்தான் என் பிறந்த ஊர். நான் \'கீற்று\' வலைத் தளத்தில் பிப்ரவரி, 2011 லிருந்து சுமார் 45 கட்டுரைகள், வெவ்வேறு பொருட்களில் - மருத்துவம், இலக்கியம், வரலாறு - கட்டுரைகள் வெளியிட்டுள்ளேன்.
Mobile number: 98430 70840
http://annam-kanniappan.blogspot.in,
http://www.poemhunter.com/dr-v-k-kanniappan,
http://poetry.com/users/11888-Kanniappan%20%20Kanniappan%20
http://www.lankasripoems.com/index.php?conp=list&poetId=197803 புனைப்பெயர் ‘அன்னம்’
http://www.tamilthottam.in/forum

என் படைப்புகள்
Dr.V.K.Kanniappan செய்திகள்
Dr.V.K.Kanniappan - Palani Rajan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Mar-2023 9:39 am

நேரிசை வெண்பா

காய்ச்சீர் அறியானாம் காதல் கிறுக்கலை
பேய்போல் அலைந்து எழுதுவனாம் -- தாயாம்
தமிழின் இலக்கணம் கற்கமறுப் பாரும்
தமிழராவா ரோவாகார் நம்பு

தன்னைத்தானே கவிஞர் என்றும் பெயரில் கவிஞர் என்று ஒட்டிக்கொண்டு காதல் காதல் என்று குப்பைகளையும் அரைத்த மாவையே மீண்டும் அரைத்துத் தள்ளும் மிஷின் கள் பலதும்
இலக்கணம் கற்றுக்கொள்ள ட்டும் என்ற நோக்கில் அடிப்படை
எழுத திறந்துர் கூட பார்க்க மறுக்கிறான். இவனெல்லாம்
தமிழனா அல்லது தமிழை வந்து அலைந்து கெடுக்கின்றானாட் என்று அறிய முடியவில்லை. . எழுத்துக்கு கூடிய சீக்கிரம் மூடு விழா நடைபெறும் என்பதில் சந்தேகம் இல்லை.

மேலும்

டாக்டர் பாவலர் பா மணி அவர்களுக்கு வணக்கம் எழுத்துவனாம் என்பதைத் எழுதுவனாம் என்று திருத்திக் கொண்டேன் ஐயா தங்கள் பார்வைக்கும் பாராட்டுக்கும் நன்றிர் ஐயா 21-Mar-2023 12:02 pm
அருமையான நேரிசை வெண்பா (தா’யா’ம் - ய் மேல் உயிரெழுத்து ’ஆ’ ஏறி யா உயிரெதுகை ஆயிற்று) காய்ச்சீர் அறியானாம் காதல் கிறுக்கலை பேய்போல் அலைந்தே எழுத்துவனாம் -- தாயாம் தமிழின் இலக்கணம் கற்கமறுப் பாரும் தமிழராவா ரோவாகார் நம்பு! வாழ்த்துகள் ஐயா! 21-Mar-2023 11:32 am
Dr.V.K.Kanniappan - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Mar-2023 4:47 pm

நன்மொழி மேல்வைப்பு இன்னிசை வெண்பா

சலதோடங் கொண்டேன்நான் சங்கடமாய்த் தும்ம
பலமுறை கேட்டதும் பார்த்து - நலமே
வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று!

- வ.க.கன்னியப்பன்

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று! ௧௩௧௭

- புலவி நுணுக்கம், கற்பியல், காமத்துப்பால், திருக்குறள்

மேலும்

Dr.V.K.Kanniappan - Palani Rajan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Mar-2023 7:04 am

நேரிசை வெண்பா

நேரதன் பின்னே நிரைசேர்க் கவும்வரும்
பாரதுவே கூவிளமாம் யாப்பிது -- நீரதன்பின்
பாரும் கருத்தோடு நல்ல நிரையிரண்டு
சேரு கருவிளமா மே

உதாரணங்கள்

கூவிளம். :- கூவிளம்,கல்லினை காலினை வேலதால் போன்றவை

கருவிளம்:- கருவிளம்,பகையென பகையெலாம் உதாரணம், பலதுமே வருமது

மேலும்

டாக்டர் பாவலர் பா மணி அவர்களுக்கு வணக்கம் உங்கள் பராட்டில் மிக்க மகிழ்ச்சி ஐயா 20-Mar-2023 10:43 am
அருமையான உதாரணங்களோடு சொன்னீர்கள் நேரிசை வெண்பாவில் கூவிளமும் கருவிளமும்! மிக நன்று; வாழ்த்துகள் ஐயா! 20-Mar-2023 8:18 am
Dr.V.K.Kanniappan - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Mar-2023 8:03 am

நேரிசை வெண்பா
(1, 3 சீர்களில் மோனை)

கண்மணி யென்றே களித்திருந்தேன் காண்கையில்
விண்மதி போலவே வீற்றிருந்தாள் - பெண்ணாளும்
மென்னகையில் சாய்ந்தனள் மேலே பரவசமாய்ப்
புன்னகையில் தோள்சாய்ந்தாள் போற்று!

- வ.க.கன்னியப்பன்

மேலும்

Dr.V.K.Kanniappan - Palani Rajan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Mar-2023 4:14 pm

இருநேர் அசைகளும் சேரவரும் தேமா
ஒருநிரையில் நேரசை கூட்டு -- வருமாம்
புளிமாச்சீர் மாச்சீர் முடிவது நேரில்
களிப்பாய் இரண்டதையுங் காண்

தேமாச்சீர் உதாரணங்கள்

நல்ல, நாலு, நாளாம், நல்லா, நாளும். நாடார் கள்ளர் ( நே ரசையில் முடியும்)

புளிமாச்சீர் உதாரணம்
மடையன் , தினவு முடிக்க முடிக்கா விதையில் தடாகம். விடாதார்



........

மேலும்

டாக்டர் பாவலர் பா மணி அவர்களுக்கு வணக்கம் உங்கள் பராட்டில் மிக்க மகிழ்ச்சி ஐயா 20-Mar-2023 12:51 am
அருமையான விளக்கமும், வெண்பாவும்; இனிய பாராட்டுகள் ஐயா! 19-Mar-2023 5:50 pm
Dr.V.K.Kanniappan - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Mar-2023 8:47 am

எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 3, மா அரையடிக்கு)

ஒருதருமற் றொருதருவி னுதவியின்றிக் காய்க்கும்
..உயராண்பெண் சேர்க்கையின்றி யொருமகவுண் டாமோ
இருமையின்றி யிருவருமே நம்மனைநம் பொருணம்
..இகுளைநஞ்சேய் எனப்பொதுவி னியம்புரிமை யாலும்
உருவமொன்றா லாண்பெண்ணை யமைத்தனன்முன் பரனென்(று)
..உயர்ந்தோர்சொல் வதுநிசமா முரியோனில் லென்னும்
இருவ’ர்’கள்தம் நயந்துயரம் ஏகமெனக் கருதி
..இட்டமொடு பெட்டமரிற் கட்டமவர்க் குளதோ. 48

- கணவன் மனைவியர் இயல்பு
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”ஒரு மரத்திலே ஆண் பெண் பூக்கள் அமைந்திருப்பதால், அம்மரம் வேறு ஒரு மரத்தின் உதவியில்லாமல் காய்க்கும்.

மேலும்

Dr.V.K.Kanniappan - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Mar-2023 8:43 am

தரவு கொச்சகக் கலிப்பா

ஈண்டிவண் வருவலெனும் இறைவருகி லரவரைத்
தீண்டிய கிரணமதால் தீண்டுதி யெனைவெயிலே
தாண்டிய வளியவர்மெய் தடவியென் னுடல்படர்வாய்
மீண்டில ரிடமெனது மெலிவினை யுரைமுகிலே. 47

- கணவன் மனைவியர் இயல்பு
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”இப்பொழுது இங்கு வருவேன் என்று கூறிச் சென்ற தலைவர் இன்னும் வரவில்லை. அவரைத் தீண்டிய கதிரால் என்னையும் தீண்டுகின்றாய் ஞாயிறே! அவர்மேல் தழுவி தாண்டி வரும் காற்றே! நீ என்மேலும் படர்கின்றாய்.

மேகமே! கூறியபடி, மீண்டும் வராத தலைவரிடம் எனது உடல் மெலிவினை, நீ போய் அவரிடம் சொல்” என்று காதலரைக் காணாது தன் உடல் மெலிவதனைக் காதலனிடம் தெரிவிக்கு

மேலும்

Dr.V.K.Kanniappan - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Mar-2023 10:15 am

தென்றல் உறங்கினால் தேன்மலர்கள் இதழ்கள் விரிக்குமா
தென்னங் கீற்றும் மகிழ்ந்து மெல்ல அசையுமா
கன்னக் குழிவில் கவிதை ஏந்திநீ வராவிடின்
என்னுள்ளே சந்தக் கவிதை மலர்ந்து வருமா ?

மேலும்

நான் வினாவில் விளித்திருக்கும் பாவம் ( bhavam ) உங்கள் வாய்ப்பாட்டு அமைதி மாற்று வடிவில் இருக்கிறதா ? இலக்கண விதிகளை வைத்து எழுதினால் அர்த்தமும் பாவமும் மாறிவிடும் பல வருடங்களுக்கு முன் நான் வெண்பாவை இன்னிசையில் எழுதினால் நேரிசையில் கருத்தில் எழுதினீர்கள் கவிதைக்கு பிடித்தால் கருத்தை மட்டும் எழுதுங்கள் என்று சொன்னேன் ஆனாலும் எழுதினீர்கள் ஏதோ பயில்கிறார் போலும் என்று விட்டுவிட்டேன் ஏதோ சிலர் எழுதிய புத்தகங்களை படித்துவிட்டு கருத்து சொல்கிறீர்கள் மறுபடியும் ஆரம்பித்துவிட்டீர்கள் இந்தமாதிரி கருத்துரைகளைத் தவிர்க்கவும் உங்கள் சுய கற்பனையில் உங்கள் சொந்த பக்கத்தில் எழுதுங்கள் சிலருக்கு அது வழிகாட்டியாய் அமையும் கவிதைக்கு பிடித்தால் இலக்கியம் கருதி இரண்டு வரி எழுதுங்கள் இந்த மாற்று வேலையெல்லாம் எதற்கு ? இந்த நேரத்தில் உங்கள் சுய கவிதையில் நாலு பதியலாமே ! 18-Mar-2023 4:32 pm
பாவினத்திற்கு தளை விதிகள் இல்லை , ஒரே எதுகையும் கற்பனைக்கேற்ப சீரமைக்கிறேன் இந்த வகையில் அமைத்து எழுகிறேன் நீங்கள் சொல்லும் வழியிலும் எழுதலாம் அடிவரை இன்றி யளவொத்து மந்தடி நீண்டிசப்பிற் கடிதலில் லாக்கலித் தாழிசை யாகுங் கலித்துறையே நெடிலடி நான்காய் நிகழ்வது நேரடி யீரிரண்டாய் விடினது வாகும் விருத்தந் தீர்த்தகு மெல்லியலே ------குணசாகரின் யாப்பருங் கலக்காரிகை சூத்திரம் இதற்கு கலித்துறைக்கு மட்டும் ந மு வே நாட்டாரின் உரையைத்தருகிறேன் கலித்துறையே நெடிலடி நான்காய் நிகழ்வது என்பது ஐஞ்சீரடி நான்காய் வருவது கலித்துறை . இந்த இலக்கண அமைதி இருக்கிறதா இல்லையா ? நீங்கள் சொல்லும் சீரொழுங்கெல்லாம் பலர் உருவவாக்கியிருக்கலாம் பாவின் கட்டுக்கோப்பான தளை விதிகள் இலக்கண விதிகளைத் தளர்த்தி ஒரு பாவிற்கு பல பாவினங்களை உருவாக்கினர் ஏன் நாமும் உருவாக்கலாம். ஏன் ஐந்து சீர் வெண்பா போல் இருவிகற்பத்தில் கலிப்பெருந்துறை என்று ஒன்றை உருவாக்கக் கூடாது ? இப்படி உருவானதுதான் உங்கள் சீரொழுங்கு வகை அப்படியும் எழுதிக் காட்டுகிறேன் கவிதைக்கு கற்பனை இலக்கிய வளம் முக்கியம் இலக்கணம் ஒரு அடிப்படை அவ்வளவே 18-Mar-2023 4:00 pm
எளிமையான, கலித்துறை (மா விளம் விளம் விளம் மா) தென்றல் உறங்கிடத் தேன்மலர் இதழ்களும் விரியும் தென்னங் கீற்றுமே தென்றலில் மகிழ்வுடன் அசையும் கன்னக் குழிவினில் கவிதையை ஏந்திநீ வரவே என்னுள் சந்தமும் இனியதோர் கவிதையாய் வருமே! முதல்சீர் தேமா என்றால் நான்கடிகளிலும் தேமா! முதல்சீர் புளிமா என்றால் நான்கடிகளிலும் புளிமா! ஐந்தாம் சீர் தேமாவும், புளிமாவும் வரலாம். 2, 3, 4 சீர்களில் ஒரே விளமாக அமைந்தால் நன்று; வெவ்வேறு விளமாகவும் வரலாம், தவறில்லை. 18-Mar-2023 2:46 pm
கலித்துறைக்கு என்ன சீரொழுங்கும், வாய்பாடும் இருக்கிறது? கலித்துறையின் வகைகளையும், வாய்பாடுகளையும் தெரிந்து எழுத முயற்சியுங்கள்; ஐந்து சீருள்ள நான்கடிகள் மட்டும் கலித்துறை ஆகாது; கி.வா.ஜ வின் கவிபாடலாம் வலைத்தளத்திலும் கிடைக்கிறது. பக்கத்துக்குப் பக்கம் வாசித்துப் புரிந்து கொள்ளலாம்.. 18-Mar-2023 1:43 pm
Dr.V.K.Kanniappan - Dr.V.K.Kanniappan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Jan-2018 12:35 pm

குறள் வெண்செந்துறை

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
நலனுடை மையின் நாணுச் சிறந்தன்று. 6

சிறந்த பத்து, முதுமொழிக் காஞ்சி

பொருளுரை:

நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால், அடாத காரியங்களைச் செய்யக் கூசுந்தன்மை ஒருவன் அழகுடையவனாதலைக் காட்டிலும் மிக்க சிறப்புடையது.

'அணியன்றோ நாணுடைமை சான்றோர்க்கு' (1014 நாண் உடைமை)

ஆதலின், 'நலம் வேண்டின் நாணுடைமை வேண்டும் (960 குடிமை), 'நலஞ்சுடும் நாணின்மை நின்றக்கடை’ (1019 நாண் உடைமை)' ஆதலால் நாணுடைமை நலனுடைமையின் சிறந்ததாம்.

நாணாவது செய்யத் தகாதனவற்றிற்கு உள்ளம் ஒடுங்குதல்.

மேலும்

பாவர் டாக்டர் அவர்களுக்கு வணக்கம். நாணுதல் பெண்ணின் உரிச்சொல் என்றாலும் ஆணும் பெண்ணும் நாணும் சந்தர்ப்பங்களை விளக்கியமைக்கு மிக்க நன்றி ஐயா. 28-Jul-2021 7:18 am
Dr.V.K.Kanniappan - Dr.V.K.Kanniappan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-May-2015 9:58 pm

இரவோ(டு) இரவாக வாழ்க்கையில் வெற்றி
வருவதில்லை; ஆர்வம் குறிக்கோள் - இரண்டும்
இணைந்து தொடர்முயற்சி மேற்கொண்டால் எங்கும்
துணையாய் வரும்ஒளிம யம்! 1

இரவோ(டு) இரவாக வாழ்க்கையில் வெற்றி
வருவதில்லை; ஆர்வம் குறிக்கோள் - இரண்டும்
இணைந்து தொடர்முயற்சி மேற்கொண்டால் எங்கும்
துணையாய் வருமே ஒளி! 2

தன்னம்பிக் கைவெற்றிக் கேசாவி யாய்ஆகும்
என்றும் அவசர எண்ணமும் - நன்றாம்
முடிவினை எட்டாதே; உன்குறையை நேர்செய்
கிடைக்குமே வெற்றியப்போ து! 3

தன்னம்பிக் கைவெற்றிக் கேதிறவு கோலாகும்
என்றும் அவசர எண்ணமும் - நன்றாம்
முடிவினை எட்டாதே; உன்குறையை நேர்செய்
கிடைக்குமே வெற்றியப்போ து! 3a

மேலும்

Sonnet: For Success In Life Success in life does come not overnight; An ambition and aim begin the try; A sustained labor makes the future bright; At times, despair could make you even cry. Self-confidence is key to success prime; A hasty mind can’t make foray at all; Correct your deficiencies all the time; In others’ court always, you keep the ball. But emulate the good achieved by next; The road you take is not the same always; The problems cropping up can keep you vexed; But you maintain that principled a base. The grace of God dictates the things on earth; God gave each one a purpose in the birth. Copyright by Dr John Celes 20-05-2015 Dr. A.Celestine Raj Manohar M.D., 13-Jun-2017 12:08 pm
எழுதியவர் டாக்டர்.ஜான் செலிஸ் மனோஹர் எம்.டி, முன்னாள் டீன் மற்றும் மருத்துவப் பேராசிரியர், பெருந்துறை மருத்துவக் கல்லூரி ----மூலக் கவிதையை பதிவு செய்யவும் 13-Jun-2017 11:38 am
கருத்திற்கு நன்றி, சேயோன். மூலக் கவிதையையும் வாசித்துப் பாருங்கள். எழுதியவர் டாக்டர்.ஜான் செலிஸ் மனோஹர் எம்.டி, முன்னாள் டீன் மற்றும் மருத்துவப் பேராசிரியர், பெருந்துறை மருத்துவக் கல்லூரி. 23-Sep-2015 11:35 am
சிறந்த வெண்பாக்கள். சிறப்பான மொழிபெயர்ப்பு. 26-May-2015 8:02 pm
Dr.V.K.Kanniappan - Dr.V.K.Kanniappan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Sep-2016 12:53 pm

பரிசு பெற்ற நேரிசை வெண்பா

பண்புடையர் ஆதல்; பழகுசொல் பேசுதல்;
நண்பரைப் பேணுதல்; நன்னயமாய் – புண்ணன்ன
வஞ்சகத்தை வேரறுத்து மாண்புறவே நல்லவற்றை
நெஞ்சில் நிறுத்துதம்பி நீ! – எஸ்.பி.இராமையா, புதுப்பாக்கம்

பரிசு பெற்ற நேரிசை வெண்பா

தஞ்ச மெனஉன் தயவுக்காய்க் காத்திருப்பர்;
கொஞ்சிக் குலமென்று கூவிடுவார்; - நஞ்சுடனே,
வஞ்சனையும் சூதும் வழியாகக் கொண்டிருப்பார்;
நெஞ்சில் நிறுத்துதம்பி நீ! – நம்பிக்கை நாகராசன்

நான் அனுப்பிய:
ஒரு விகற்ப நேரிசை வெண்பா

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை செய்வார் இருப்பரே – தஞ்சமென
கொஞ்சமும் அன்னாரை கொள்ளலா காதென்றே
நெஞ்சில் நிறுத்துதம்

மேலும்

தங்கள் கருத்திற்கு நன்றி. 19-Sep-2016 7:08 pm
போற்றுதற்குரிய கவிதை (வெண்பாக்கள்) பாராட்டுக்கள் தொடரட்டும் தங்கள் இலக்கிய படைப்புகள் தமிழ் அன்னை ஆசிகள் 19-Sep-2016 5:19 pm
தங்கள் தெளிவான கருத்திற்கு நன்றி. 15-Sep-2016 2:44 pm
நல்ல கருத்துக்களுடைய வெண்பாக்கள்தான் எழுதியிருக்கிறீர்கள்; பரிசு கிடைத்திருக்கலாம்.. மற்றவர்களுடைய வெண்பாக்களையும் கொடுத்துள்ளதைப் பாராட்டுகின்றேன்.. அவற்றிற்கும் தங்களுடையதற்கு இடையே காணப்படும் ஆற்றொழுக்கு நடையினை அறிந்துகொண்டிருப்பீர்கள் என்று நம்புகின்றேன். 15-Sep-2016 1:40 pm
Dr.V.K.Kanniappan - Dr.V.K.Kanniappan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Sep-2016 10:25 pm

நானும், என் மனைவியும் சென்ற 15.08.2016 ல் என் இளைய மகன் குடும்பத்துடன் சென்னை சென்று வேளச்சேரியில் இரண்டு வாரங்கள் தங்கியிருந்தோம். அப்பொழுது 25.08.2016 அன்று ஆவடி vel tech பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும், மாணவர் விடுதியில் உள்ள என் பேரனைப் பார்க்கச் செல்வதற்காக SRP tools பஸ் நிறுத்தம் சென்றேன். நானும், என் மகனும் திருவான்மியூர் ரயில் நிலையம் செல்ல ஷேர் ஆட்டோவில் ஏறினோம்.

என் மகன் ஓட்டுநருடன் முன் இருக்கையில் அமர்ந்தார். நான் ஓட்டுநர்க்குப் பின்னால் உள்ள கீழ் இருக்கையில் அமர்ந்தேன். மேல் இருக்கையில் (IT நிறுவனத்தில் பணி புரிபவர்கள் என்று நினைக்கிறேன்) இள வயதுப் பெண்கள் இருவர்

மேலும்

கருத்திற்கு நன்றி. 09-Sep-2016 10:57 pm
உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி சொல்லி விட்டீர்கள். கருத்திற்கு நன்றி. 09-Sep-2016 10:56 pm
கருத்திற்கு நன்றி. 09-Sep-2016 10:54 pm
தரமற்ற பொருட்கள் விற்பனையும், பாதுகாப்பற்ற உணவு விற்பனையும் விற்று நம்மை கொள்ளையடிக்கும் உணவு விடுதிகளை பற்றி புகார் செய்தாலும் பயனில்லை பயணக் கட்டுரைகள்' : உலகம் சுற்றிய மணியன் போல் எழுதினால் சிறப்பாக இருக்கும் ஷேர் ஆட்டோவில் ,மின்சார ரயிலில் பயண அனுபவங்கள் சுகாதாரமான கழிப்பிட விமர்சனங்கள் போற்றுதற்குரிய படைப்பு 09-Sep-2016 7:33 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (267)

நன்னாடன்

நன்னாடன்

நன்னாடு, விழுப்புரம்
Deepan

Deepan

சென்னை
Dr A S KANDHAN

Dr A S KANDHAN

Chennai
Palani Rajan

Palani Rajan

vellore
பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்

இவர் பின்தொடர்பவர்கள் (268)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
Kavitha V

Kavitha V

Bangalore

இவரை பின்தொடர்பவர்கள் (291)

தம்பு

தம்பு

ஐக்கிய இராச்சியம்.
user photo

மேலே