Dr.V.K.Kanniappan - சுயவிவரம்
(Profile)

தமிழ் பித்தன்
| இயற்பெயர் | : Dr.V.K.Kanniappan |
| இடம் | : மதுரை |
| பிறந்த தேதி | : 17-Oct-1944 |
| பாலினம் | : ஆண் |
| சேர்ந்த நாள் | : 18-Jun-2011 |
| பார்த்தவர்கள் | : 13673 |
| புள்ளி | : 11783 |
நான் ஒரு அரசாங்க ஒய்வு பெற்ற கண்மருத்துவ பேராசிரியர். மதுரை மாவட்டத்திலுள்ள சோழவந்தான் என் பிறந்த ஊர். நான் \'கீற்று\' வலைத் தளத்தில் பிப்ரவரி, 2011 லிருந்து சுமார் 45 கட்டுரைகள், வெவ்வேறு பொருட்களில் - மருத்துவம், இலக்கியம், வரலாறு - கட்டுரைகள் வெளியிட்டுள்ளேன்.
Mobile number: 98430 70840
http://annam-kanniappan.blogspot.in,
http://www.poemhunter.com/dr-v-k-kanniappan,
http://poetry.com/users/11888-Kanniappan%20%20Kanniappan%20
http://www.lankasripoems.com/index.php?conp=list&poetId=197803 புனைப்பெயர் ‘அன்னம்’
http://www.tamilthottam.in/forum
நேரிசை வெண்பா
மன்னுயிர் காதல் தனதான அவ்வுயிருள்
என்னுயிரும் எண்ணப் படுமாயின் – என்னுயிர்க்கே
சீரொழுகு செங்கோற் செழியற்கே தக்கதோ
நீரொழுகப் பாலொழுகா வாறு! 63
- முத்தொள்ளாயிரம்
பொருளுரை:
செழியன் நிலைபெற்ற உயிரினம் எல்லாவற்றின் மீதும் காதலன்பு கொண்டவன்! அந்த உயிரினங்களில் என் உயிரும் ஒன்றாக எண்ணப்படுமாயின், என்மேல் செங்கோல் ஆட்சி செய்யவில்லையே! இதுவா அவன் சீர்மை? * பச்சைமண் பாண்டத்தில் பாலை ஊற்றிவைத்தால் அதில் உள்ள நீர் கசிந்து ஒழுகுகிறது; பால் கசிந்து ஒழுகவில்லை. இது என்ன விந்தை!
அவன் நீர்மை எல்லா உயிரினங்கள் மாட்டும் பாய்கிறது. அவன் பாலுணர்வு அப்படிப் பாயவில்லையே!
இன்னிசை வெண்பா
வந்தன செய்குறி; வாரார் அவரென்று
நொந்த ஒருத்திக்கு நோய்தீர் மருந்தாகி,
இந்தின் கருவண்ணம் கொண்டன்று, எழில்வானம்;
நந்தும்மென் பேதை; நுதல்! 40 -
- கார் நாற்பது
பொருளுரை:
மெல்லிய பேதையே! தலைவர் செய்த குறிகள் வந்துவிட்டன; தலைவர் வருகின்றிலர் என்று நோதலுற்ற ஒருத்தியாகிய நினக்கு நோயைத் தீர்க்கும் மருந்தாகி அழகிய முகில் ஈந்தின் கனியினிறம்போலும் கருநிறத்தை கொண்டது; நினது நுதல் இனி ஒளிவரப்பெறும்!
இச்செய்யுளைத் தலைவர் மீண்டனரென்று தோழி மகிழ்ந்து தன் நெஞ்சிற்குக் கூறியதாகக் கொண்டு, என் பேதை எனப்பிரித்துப் படர்க்கையாக உரைப்பாரும் உளர்; ஈந்து இந்தெனக் குறுகியது! ஈந்து - ஈ
நேரிசை வெண்பா
தலைமயிரும் கூருகிரும் வெண்பல்லும் தந்தம்
நிலையுடைய மானவரும் நிற்கும் - நிலைதவறாத்
தானத்தில் பூச்சியமே சாரும் நிலைதவறும்
தானத்தில் பூச்சியமோ தான். 28
- நீதி வெண்பா
பொருளுரை:
தலைமயிரும் கூர்மையான நகமும், வெண்மையாகிய பற்களும் தங்கள் தங்கள் நிலை தவறாத மானிகளும் நிற்க வேண்டிய நிலைமை தவறாத இடத்தில் பூசிக்கப்படுவனவே! பொருந்திய நிலைமை தவறுமிடத்திற் பூசிக்கப்படுவனவோ? (அல்ல)
கருத்து:
தத்தம் நிலையினின்று தவறுவோர் அவமதிக்கப்படுவர்.
இன்னிசை இருநூறு 24 - மூன்றாவது அதிகாரம் – இல்வாழ்க்கை 4
இன்னிசை வெண்பா
துய்யபுகழ்க் கற்பால் தொழப்படுவாள் மெய்ஞ்ஞானம்
எய்தும் அருந்தவத்தோர் தேவ ரெவரானுந்
தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை!.24
நேரிசை வெண்பா
நேரிசை வெண்பாவும் நெஞ்சினிக்கச் செய்திடுதே
பூரிப்பு மென்மனத்தில் பொங்கிடுதே – பேரின்பம்
அய்யப்பன் தான்பாடும் அற்புதப் பாட்டுக்கு
மெய்யாக வேறில்லை மேல்!
- வ.க.கன்னியப்பன்
கனவில் நடந்ததுன் காதலின் வண்ணம்
அனைத்துமே நீதந்த அந்திஅன் புப்பரிசு
நெஞ்சை வருடிடும் நீல விழிச்சலனம்
அஞ்சாத பார்வை அழகு
வெற்றியை பற்றும்முன் யாவரும் தோல்வியை
கற்றுப் புரிதலே நன்று
போதையில் கெட்டபாதை செல்லுமது வெற்றிநற்
பாதையில் கற்கசெய்யும் தோல்வி
நேரிசை வெண்பா
அன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர்கடிதம்;
இன்பமொ டோர்பொழுதை ஏற்றமுடன் - உன்னுடனே
சல்லாப மாய்க்கழிக்கச் சங்கடம் இன்றியே
நில்நில்சற் றென்முன்னே நில்!
- வ.க.கன்னியப்பன்
குறள் வெண்செந்துறை
ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
நலனுடை மையின் நாணுச் சிறந்தன்று. 6
சிறந்த பத்து, முதுமொழிக் காஞ்சி
பொருளுரை:
நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால், அடாத காரியங்களைச் செய்யக் கூசுந்தன்மை ஒருவன் அழகுடையவனாதலைக் காட்டிலும் மிக்க சிறப்புடையது.
'அணியன்றோ நாணுடைமை சான்றோர்க்கு' (1014 நாண் உடைமை)
ஆதலின், 'நலம் வேண்டின் நாணுடைமை வேண்டும் (960 குடிமை), 'நலஞ்சுடும் நாணின்மை நின்றக்கடை’ (1019 நாண் உடைமை)' ஆதலால் நாணுடைமை நலனுடைமையின் சிறந்ததாம்.
நாணாவது செய்யத் தகாதனவற்றிற்கு உள்ளம் ஒடுங்குதல்.
இரவோ(டு) இரவாக வாழ்க்கையில் வெற்றி
வருவதில்லை; ஆர்வம் குறிக்கோள் - இரண்டும்
இணைந்து தொடர்முயற்சி மேற்கொண்டால் எங்கும்
துணையாய் வரும்ஒளிம யம்! 1
இரவோ(டு) இரவாக வாழ்க்கையில் வெற்றி
வருவதில்லை; ஆர்வம் குறிக்கோள் - இரண்டும்
இணைந்து தொடர்முயற்சி மேற்கொண்டால் எங்கும்
துணையாய் வருமே ஒளி! 2
தன்னம்பிக் கைவெற்றிக் கேசாவி யாய்ஆகும்
என்றும் அவசர எண்ணமும் - நன்றாம்
முடிவினை எட்டாதே; உன்குறையை நேர்செய்
கிடைக்குமே வெற்றியப்போ து! 3
தன்னம்பிக் கைவெற்றிக் கேதிறவு கோலாகும்
என்றும் அவசர எண்ணமும் - நன்றாம்
முடிவினை எட்டாதே; உன்குறையை நேர்செய்
கிடைக்குமே வெற்றியப்போ து! 3a
பரிசு பெற்ற நேரிசை வெண்பா
பண்புடையர் ஆதல்; பழகுசொல் பேசுதல்;
நண்பரைப் பேணுதல்; நன்னயமாய் – புண்ணன்ன
வஞ்சகத்தை வேரறுத்து மாண்புறவே நல்லவற்றை
நெஞ்சில் நிறுத்துதம்பி நீ! – எஸ்.பி.இராமையா, புதுப்பாக்கம்
பரிசு பெற்ற நேரிசை வெண்பா
தஞ்ச மெனஉன் தயவுக்காய்க் காத்திருப்பர்;
கொஞ்சிக் குலமென்று கூவிடுவார்; - நஞ்சுடனே,
வஞ்சனையும் சூதும் வழியாகக் கொண்டிருப்பார்;
நெஞ்சில் நிறுத்துதம்பி நீ! – நம்பிக்கை நாகராசன்
நான் அனுப்பிய:
ஒரு விகற்ப நேரிசை வெண்பா
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை செய்வார் இருப்பரே – தஞ்சமென
கொஞ்சமும் அன்னாரை கொள்ளலா காதென்றே
நெஞ்சில் நிறுத்துதம்
நானும், என் மனைவியும் சென்ற 15.08.2016 ல் என் இளைய மகன் குடும்பத்துடன் சென்னை சென்று வேளச்சேரியில் இரண்டு வாரங்கள் தங்கியிருந்தோம். அப்பொழுது 25.08.2016 அன்று ஆவடி vel tech பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும், மாணவர் விடுதியில் உள்ள என் பேரனைப் பார்க்கச் செல்வதற்காக SRP tools பஸ் நிறுத்தம் சென்றேன். நானும், என் மகனும் திருவான்மியூர் ரயில் நிலையம் செல்ல ஷேர் ஆட்டோவில் ஏறினோம்.
என் மகன் ஓட்டுநருடன் முன் இருக்கையில் அமர்ந்தார். நான் ஓட்டுநர்க்குப் பின்னால் உள்ள கீழ் இருக்கையில் அமர்ந்தேன். மேல் இருக்கையில் (IT நிறுவனத்தில் பணி புரிபவர்கள் என்று நினைக்கிறேன்) இள வயதுப் பெண்கள் இருவர்