Dr.V.K.Kanniappan - சுயவிவரம்
(Profile)


தமிழ் பித்தன்
இயற்பெயர் | : Dr.V.K.Kanniappan |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : 17-Oct-1944 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-Jun-2011 |
பார்த்தவர்கள் | : 11740 |
புள்ளி | : 7941 |
நான் ஒரு அரசாங்க ஒய்வு பெற்ற கண்மருத்துவ பேராசிரியர். மதுரை மாவட்டத்திலுள்ள சோழவந்தான் என் பிறந்த ஊர். நான் \'கீற்று\' வலைத் தளத்தில் பிப்ரவரி, 2011 லிருந்து சுமார் 45 கட்டுரைகள், வெவ்வேறு பொருட்களில் - மருத்துவம், இலக்கியம், வரலாறு - கட்டுரைகள் வெளியிட்டுள்ளேன்.
Mobile number: 98430 70840
http://annam-kanniappan.blogspot.in,
http://www.poemhunter.com/dr-v-k-kanniappan,
http://poetry.com/users/11888-Kanniappan%20%20Kanniappan%20
http://www.lankasripoems.com/index.php?conp=list&poetId=197803 புனைப்பெயர் ‘அன்னம்’
http://www.tamilthottam.in/forum
சந்தக் கலித்துறைi
தேமா. தேமா. கூவிளம் தேமா. புளிமாங்காய்
நன்றே ஆயின் அங்கனம் கொள்வர் அறிஞர்கள்
என்றும். காணா. செய்தவர் நின்றும் வளராரே
இன்றும் கண்டிப் பில்பிடி தாரா. குரங்குண்டு
இன்னும் உண்டிங் கேமுத. லையும் நதிநாடே
குறில் ஒரு மாத்திரை குறிலொற்றுக்கு இரண்டு மாத்திரை
நெடிலுக்கு இரண்டு மாத்திரை என்ற கணக்கில் எழுதியுள்ளது.
நாலு சீர் நாலு மாத்திரை கடைசிசீர் 6 மாத்திரை தவறாது வரும்
சந்தக் கலித்துறையாம் இது
.........
செய்யுளியல்
பாவுக்குரிய அடியும் ஓசையும்
வெண்பா வகவல் கலிப்பா வளவடி வஞ்சியென்னும்
ஒண்பா வடிகுறள் சிந்தென் 1 றுரைப்ப வொலிமுறையே
திண்பா மலிசெப்பல் சீர்சா லகவல்சென் றோங்குதுள்ளல்
நண்பா வமைந்த நலமிகு தூங்க னறுநுதலே. 21 - யாப்பருங்கலக்காரிகை
இப்பாடல் என்ன வகை?
எனக்குத் தெரியும்; புதிதாக மரபுக் கவிதைகள் எழுதுவோர்க்கு...நவமணிக் காரிகை நிகண்டு யார் எழுதியது? எத்தனை பாடல்கள்?
கண்ணப்பனுக்கு வன்னருள்புரி காளகத்தி நாதனே
விண்ணிலவு சடைசூடும் நான்மறை நாயகனே
பெண்ணுக்கு உடல்பாதி அளித்த வள்ளலே
கண்மூன்றால் கலிதீர்த்து அருளாயோ என்னப்பனே !
---நாற்சீர் அல்லது அளவடி நான்குடன் ஒரே எதுகை அமையப் பெற்ற
கண்மூன்றானைப் போற்றும் கலிவிருத்தம் .
==================================================================
கண்ணப்ப னுக்கருள்செய் காளகத்தி நாதனே
விண்ணி லவுசடைசூ டும்மறை நாயகனே
பெண்ணுக்குத் தன்னுடல் பாதிதந்த வள்ளலே
கண்மூன்றால் வெங்கலிதீர்ப் பாய் !
----இப்போது ஒருவிகற்ப இன்னிசை வெண்பா
=================================================================
கண்ணப்ப னுக்கரு
நேரிசை வெண்பா
நீரலைபோல் தோன்றி நிலையாத இவ்வுலகில்
ஓரிரண்(டு) ஒண்குணமே ஓங்கிநிற்கும் - தேரிலவை
வீரம் கொடையாம்; விழைந்திவற்றை மேவாதார்
பேரிழந்தார் ஆவர் பிறழ்ந்து! 812
- கொடை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
கடலில் எழுகின்ற அலைகள் போல் உடல்கள் தோன்றி யாவும் விரைந்து மறைந்து போகிற இந்த உலகத்தில் வீரம், கொடை என்னும் இரண்டு நீர்மைகள்தான் நிலைத்து நிற்கின்றன; இவற்றைத் தழுவி நின்றார் விழுமிய புகழோடு விளங்கி நிற்கின்றார்; தழுவாதவர் வழுவாய் ஒழிந்து போகின்றார் என்கிறார் கவிராஜ பண்டிதர்.
என்றும் நிலையில்லாத இவ்வுலகத்தில் என்றும் நிலையாய் நிலைத்து நிற்பத
நேரிசை வெண்பா
உள்ளம் தளரா(து) உறுதி குலையாது
வெள்ளமென அல்லல் மிடைந்தாலும் - தள்ளரிய
வீரம் உடையான் விறல்வேந்த னாய்நின்று
தீரமே செய்வன் தெளிந்து! 802
- வீரம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
அல்லல் பல அடைந்தாலும் நல்ல வீரமுடையவன் உள்ளம் தளராமல் உறுதி குலையாமல் அரிய காரியங்களை ஆராய்ந்து செய்து யாண்டும் வெற்றி வேந்தனாய் விளங்கி நிற்பான் என்கிறார் கவிராஜ பண்டிதர்.
உயர்ந்த உள்ளத் திண்மை சிறந்த பண்பாடுகளால் அமைந்து வருகிறது. நேர்மை, வாய்மை முதலிய புனித நீர்மைகள் உடையவர் நல்ல மனவுறுதி யுடையராய் மகிமை தோய்ந்து வருகின்றார், கள்ளம், கபடு, கரவு முதலிய இ
புத்திமதி
நேரிசை வெண்பா
வாழ்க்கையில் புத்திமதி அன்றாடம் கொட்டுவர்
ஆழ்ந்துசிந் தித்துப் புரியவேண்டும் -- காழ்ப்பல்ல
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.
.......
.
நேரிசை வெண்பா
வீரம் அரசுக்கு மேலான நீர்மையாய்த்
தீரம் புரிந்து திகழ்தலால் - வீரம்
உடையான் எவையும் உடையான், இலனேல்
அடையான் மகிமை அவன்! 801
- வீரம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
அரிய பல மேன்மைகளை வீரம் ஆற்றியருளுதலால் அரசனுக்கு அது மேலான பான்மையாய் அமைந்துள்ளது; அதனை உரிமையாக வுடையவன் எல்லா நலன்களும் ஒருங்கே யுடையனாய் உயர்ந்து விளங்கி அரிய மகிமைகள் பெறுகின்றான் என்கிறார் கவிராஜ பண்டிதர்.
ஆளும் தலைமையில் வழிமுறையே தொடர்ந்து வருகிற அரச மரபிடம் அரிய பல பெரிய குணங்கள் மருமமாய் மருவி வருகின்றன. அந்நீர்மைகளுள் வீரம் பெருவரவாய்ப் பெருகியுளது. உறுத
நேரிசை வெண்பா
ஈகை இயல்பே இருமையும் இன்பமாய்
வாகை புரிந்து வருதலால் - ஈகையான்
எவ்வழியும் மேன்மையே எய்தி மகிழ்கின்றான்
செவ்வழிநேர் கண்டு தெளிந்து! 811
- கொடை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
ஈகைக் குணம் இம்மையும் மறுமையும் இன்பமாய் நன்மை புரிந்து வருகிறது; ஆகவே ஈகையாளன் எவ்வழியும் செவ்விய மேன்மைகளை அடைந்து சிறந்து மகிழ்ந்து உயர்ந்து திகழ்கின்றான்; இந்த உண்மையை உணர்ந்து உவந்து கொடுத்து உயர்க என்கிறார் கவிராஜ பண்டிதர்.
இனிய இயல்புகள் இனிது அமைந்த போதுதான் மனிதன் தனி மகிமையாய் உயர்ந்து வருகிறான். குண நீர்மைகளுள் ஈகை உயர்தரமுடையது. ஈதல், தருதல்,
குறள் வெண்செந்துறை
ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
நலனுடை மையின் நாணுச் சிறந்தன்று. 6
சிறந்த பத்து, முதுமொழிக் காஞ்சி
பொருளுரை:
நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால், அடாத காரியங்களைச் செய்யக் கூசுந்தன்மை ஒருவன் அழகுடையவனாதலைக் காட்டிலும் மிக்க சிறப்புடையது.
'அணியன்றோ நாணுடைமை சான்றோர்க்கு' (1014 நாண் உடைமை)
ஆதலின், 'நலம் வேண்டின் நாணுடைமை வேண்டும் (960 குடிமை), 'நலஞ்சுடும் நாணின்மை நின்றக்கடை’ (1019 நாண் உடைமை)' ஆதலால் நாணுடைமை நலனுடைமையின் சிறந்ததாம்.
நாணாவது செய்யத் தகாதனவற்றிற்கு உள்ளம் ஒடுங்குதல்.
னேரிசை வெண்பா
கனைகடல் தண்சேர்ப்ப! கற்றறிந்தார் கேண்மை
நுனியின் கரும்புதின் றற்றே1 - நுனிநீக்கித்
தூரின்தின் றன்ன தகைத்தரோ பண்பிலா
ஈரமி லாளர் தொடர்பு. 138 – கல்வி, நாலடியார்
பொருளுரை:
ஒலிக்கும் கடலின் குளிர்ந்த துறையின் தலைவனே!
கற்று மெய்ப் பொருள் அறிந்து ஒழுகுபவர்களின் பண்புடைய நட்பு கரும்பை அதன் நுனியிலிருந்து தின்று சுவைப்பதைப் போன்றது.
நுனிக் கரும்பை வெட்டி எறிந்து விட்டு அடிப்பகுதியிலிருந்து அதனைத் தின்றாற் போன்ற தன்மையை உடையது அக் கல்விப் பண்பும் அன்பும் இல்லாதவரது நட்பு.
கருத்து:
கற்றோர் நட்பு வரவர வளர்ந்து இனிக்கும் தன்மை உடையது.
கலித்துறையின் ஒரு வகை கட்டளைக்கலித்துறை. கட்டளை= எழுத்தின் அளவு. இக்கலித்துறையில் நான்கடிகளிலும் எழுத்தெண்ணிக்கை ஒரே மாதிரியாக வருவதால் இப்பெயர் பெற்றது. காரிகை நூற்பாக்கள் அனைத்தும் கட்டளைக் கலித்துறை யாப்பில் அமைந்தவை. காரிகைக்குப் பின் வந்த இலக்கணங்களில் கட்டளைக்கலித் துறையின் இலக்கணம் சொல்லப்படுகிறது. கோவை எனும் சிற்றிலக்கியம் முழுமையும் கட்டளைக் கலித்துறையால் அமைந்தது.
கட்டளைக் கலித்துறையால் அமையும் நூற்பாவுக்கே காரிகை எனும் பெயர் உண்டு. இதன் இலக்கணத்தைக் காண்போம்.
(1) நெடிலடி நான்காய் வரும்.
(2) ஒவ்வோரடியிலும் முதல் நான்கு சீர்கள் பெரும்பாலும் ஈரசைச் சீர்களாக வரும்; சிறுபான்மை தேமா
இரவோ(டு) இரவாக வாழ்க்கையில் வெற்றி
வருவதில்லை; ஆர்வம் குறிக்கோள் - இரண்டும்
இணைந்து தொடர்முயற்சி மேற்கொண்டால் எங்கும்
துணையாய் வரும்ஒளிம யம்! 1
இரவோ(டு) இரவாக வாழ்க்கையில் வெற்றி
வருவதில்லை; ஆர்வம் குறிக்கோள் - இரண்டும்
இணைந்து தொடர்முயற்சி மேற்கொண்டால் எங்கும்
துணையாய் வருமே ஒளி! 2
தன்னம்பிக் கைவெற்றிக் கேசாவி யாய்ஆகும்
என்றும் அவசர எண்ணமும் - நன்றாம்
முடிவினை எட்டாதே; உன்குறையை நேர்செய்
கிடைக்குமே வெற்றியப்போ து! 3
தன்னம்பிக் கைவெற்றிக் கேதிறவு கோலாகும்
என்றும் அவசர எண்ணமும் - நன்றாம்
முடிவினை எட்டாதே; உன்குறையை நேர்செய்
கிடைக்குமே வெற்றியப்போ து! 3a
நண்பர்கள் (265)

நன்னாடன்
நன்னாடு, விழுப்புரம்

Dr A S KANDHAN
Chennai

Palani Rajan
vellore

பாலா தமிழ் கடவுள்
உங்களின் இதயத்தில்
