Dr.V.K.Kanniappan - சுயவிவரம்
(Profile)


தமிழ் பித்தன்
இயற்பெயர் | : Dr.V.K.Kanniappan |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : 17-Oct-1944 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-Jun-2011 |
பார்த்தவர்கள் | : 13577 |
புள்ளி | : 11624 |
நான் ஒரு அரசாங்க ஒய்வு பெற்ற கண்மருத்துவ பேராசிரியர். மதுரை மாவட்டத்திலுள்ள சோழவந்தான் என் பிறந்த ஊர். நான் \'கீற்று\' வலைத் தளத்தில் பிப்ரவரி, 2011 லிருந்து சுமார் 45 கட்டுரைகள், வெவ்வேறு பொருட்களில் - மருத்துவம், இலக்கியம், வரலாறு - கட்டுரைகள் வெளியிட்டுள்ளேன்.
Mobile number: 98430 70840
http://annam-kanniappan.blogspot.in,
http://www.poemhunter.com/dr-v-k-kanniappan,
http://poetry.com/users/11888-Kanniappan%20%20Kanniappan%20
http://www.lankasripoems.com/index.php?conp=list&poetId=197803 புனைப்பெயர் ‘அன்னம்’
http://www.tamilthottam.in/forum
முத்தொள்ளாயிரம்
சேரன்
இன்னிசை வெண்பா
ஆய்மணிப் பைம்பூண் அலங்குதார்க் கோதையைக்
காணிய சென்று கதவடைத்தேன் – நாணிப்
பெருஞ்செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் போல
வருஞ்செல்லும் பேருமென் நெஞ்சு! 8
பொருளுரை
கோதை உலா வந்தான். அவனைக் காணவேண்டும் என்று சென்றேன். நாணம் வந்து விட்டது. உடனே நானே கதவை அடைத்து விட்டேன்.
வறுமையில் வாடுபவர் பெருஞ் செல்வம் படைத்தவர் இல்லத்துக்குச் செல்வார்கள். பின் திரும்புவார்கள். மீண்டும் செல்வார்கள். இப்படித்தான் என் நெஞ்சும் கோதை அரசனை காணப் போய் வந்து கொண்டிருக்கிறது.
நேரிசை வெண்பா
எத்தனையோ மோனை எதுகையொடு வைத்தாலும்
அத்தனையும் ஒன்றுக்கொன் றாகுமோ? – பித்தாசொல்
தேனினிய பாக்களிலே தித்திப்பாய்ச் சொல்லிடவே
ஆனைக்கு மோனையோ ஆடு!
- வ.க.கன்னியப்பன்
நேரிசை வெண்பா
ஒத்த வொழுக்கங் கொலைபொய் புலால்களவோ(டு)
ஒத்த விவையல வோர்நாலிட்(டு) - ஒத்த
உறுபஞ்ச மூலந்தீர் மாரிபோற் கூறீர்
சிறுபஞ்ச மூலஞ் சிறந்து 1
– சிறுபஞ்ச மூலம்
பொருளுரை:
பொருந்திய நன்னடக்கை, கொல்லுதல், இல்லது கூறல், புலால் உண்ணுதல், திருட்டு ஆகிய இவற்றுடனே பொருந்திய இவற்றுக்கு எதிரிடையாகிய கொல்லாமை, பொய் கூறாமை, புலாலுண்ணாமை, கள்ளாமை என்னும் நான்கையுஞ் சேர்த்து ஒரு நூலில் கட்டி உலகிற் பொருந்திய மிகுதியாகிய சிறுவிலைக் காலத்தின் காரணத்தை அகற்றுகின்ற மழையைப் போல (நோய்களை யகற்றும்) சிறு பஞ்சமூலங்களைப் போன்று இந்நூலை சிறப்புற்று (கல்வியறிவாளரே!) நீங்கள் மக்கள் தீய குணங்களை நீக்கி
கடவுள் வாழ்த்து - நேரிசை வெண்பா
முழுதுணர்ந்து மூன்றொழித்து மூவாதான் பாதம்
பழுதின்றி யாற்றப் பணிந்து - முழுதேத்தி
மண்பாய ஞாலத்து மாந்தர்க் குறுதியா
வெண்பா வுரைப்பன் சில!
பொருளுரை:
எல்லாவற்றையும் அறிந்து, காமம், வெகுளி, மயக்கம் என்னும் முக்குற்றங்களையும் நீக்கி மூப்பில்லாதவனாகிய கடவுளின் திருவடிகளை குற்றம் இல்லாமல் மிகுதியாக வணங்கி (அவனுடைய மங்கள குணங்கள்) முழுவதும் போற்றி மண்ணானது பரவியிருக்கின்ற இப்பூமியிலுள்ள மக்கட்கு நன்மை யுண்டாகுமாறு சில வெண்பாச் செய்யுட்களால் ஆகிய சிறுபஞ்சமூலம் என்னும் இந்நூலை யான் சொல்வேன்!
கருத்துரை: நிலைபெற்ற கடவுளின் அடிகளை வணங்கிப் போற்றி இந்நிலவுலகி
மோனைமூன் றாம்சீரின் மேல்வர நன்றாம்பா
ஆனை அமர அழகுநின்றா லும்சிறப்பு
சேனையில் ஆனை சிதறும் பகைப்படை
ஆனைக்கு மோனையோ ஆடு ?
-- மோ மே ஆ அ சே சி ஆ ஆ
1 3 ஆம் சீரில் பொழிப்பு மோனை
ஆனைக்கு மோனையோ ஆடு ? என்று
ஆட்டிடம் கேட்டால் ஆம் என்றுதான் சொல்லும்
அதையே ஆனையிடம் கேட்டால்
ஆனையின்மோ னைமா அரி அதாவது அரிமா -சிங்கம் என்று
போடு என்று சொல்லும்
நிழல் என்று நினைத்தேன்
நிஜமாய் என் எதிரில் வந்து நின்றாய்
தோற்ற போனேன் உன் அழகிய
போக்கை வாய் சிரிப்பில்
உன் அழகிய பிஞ்சு விரலால்
என் கன்னத்தில் அடித்து விளையாடினாய்
தோற்ற போனேன் உன் அழகிய
உன் மழலை மொழி தன்னில்
என்னை அழைத்த விதத்தில்
நான் சொக்கித்தான் போனேன்
உன்னை வரி அனைத்து பொது
நீ கொஞ்சி பேசிய வார்த்தை - என் இதயம்
ஒரு நிமிடம் நின்று தான் போனது
மலர்விரியும் போதில் மழைச்சாரல் தூவ
புலர்காலை ஆதவன் பொன்னொளி வீச
இலைபூ அசைய இதழ்முத் தொளிர
மலர்பறிக் கும்மௌன மான்
இறையன்பு ஓராண்டு உரைகள்
தொகுதி 1
நூல் ஆசிரியர் : இறையன்பு அவர்கள்
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம்.
சிலருக்கு நன்றாக பேச வரும், சிலருக்கு நன்றாக எழுத வரும், வெகு சிலருக்கு நன்றாகப் பேசவும் ,எழுதவும் வரும். அந்த வெகு சிலரில் சிகரமானவர் மாமனிதர் இறையன்பு அவர்கள். அவரது பல உரைகளை நேரடியாக கேட்டு ரசித்து இருக்கிறேன். ஒருமுறை பேசியதை மறுமுறை பேச மாட்டார். கூறியது கூறல் அவரிடம் எப்போதும் இல்லை.
ஒரு சில பிரபலங்கள் பேச்சை முதல் முறை கேட்டால் டாப். மறுமுறை கேட்டால் டேப். என்றைக்கும் ஒரே பேச்சு, அன்று பேசியதையே பேசுவார்கள்.
குறள் வெண்செந்துறை
ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
நலனுடை மையின் நாணுச் சிறந்தன்று. 6
சிறந்த பத்து, முதுமொழிக் காஞ்சி
பொருளுரை:
நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால், அடாத காரியங்களைச் செய்யக் கூசுந்தன்மை ஒருவன் அழகுடையவனாதலைக் காட்டிலும் மிக்க சிறப்புடையது.
'அணியன்றோ நாணுடைமை சான்றோர்க்கு' (1014 நாண் உடைமை)
ஆதலின், 'நலம் வேண்டின் நாணுடைமை வேண்டும் (960 குடிமை), 'நலஞ்சுடும் நாணின்மை நின்றக்கடை’ (1019 நாண் உடைமை)' ஆதலால் நாணுடைமை நலனுடைமையின் சிறந்ததாம்.
நாணாவது செய்யத் தகாதனவற்றிற்கு உள்ளம் ஒடுங்குதல்.
இரவோ(டு) இரவாக வாழ்க்கையில் வெற்றி
வருவதில்லை; ஆர்வம் குறிக்கோள் - இரண்டும்
இணைந்து தொடர்முயற்சி மேற்கொண்டால் எங்கும்
துணையாய் வரும்ஒளிம யம்! 1
இரவோ(டு) இரவாக வாழ்க்கையில் வெற்றி
வருவதில்லை; ஆர்வம் குறிக்கோள் - இரண்டும்
இணைந்து தொடர்முயற்சி மேற்கொண்டால் எங்கும்
துணையாய் வருமே ஒளி! 2
தன்னம்பிக் கைவெற்றிக் கேசாவி யாய்ஆகும்
என்றும் அவசர எண்ணமும் - நன்றாம்
முடிவினை எட்டாதே; உன்குறையை நேர்செய்
கிடைக்குமே வெற்றியப்போ து! 3
தன்னம்பிக் கைவெற்றிக் கேதிறவு கோலாகும்
என்றும் அவசர எண்ணமும் - நன்றாம்
முடிவினை எட்டாதே; உன்குறையை நேர்செய்
கிடைக்குமே வெற்றியப்போ து! 3a
பரிசு பெற்ற நேரிசை வெண்பா
பண்புடையர் ஆதல்; பழகுசொல் பேசுதல்;
நண்பரைப் பேணுதல்; நன்னயமாய் – புண்ணன்ன
வஞ்சகத்தை வேரறுத்து மாண்புறவே நல்லவற்றை
நெஞ்சில் நிறுத்துதம்பி நீ! – எஸ்.பி.இராமையா, புதுப்பாக்கம்
பரிசு பெற்ற நேரிசை வெண்பா
தஞ்ச மெனஉன் தயவுக்காய்க் காத்திருப்பர்;
கொஞ்சிக் குலமென்று கூவிடுவார்; - நஞ்சுடனே,
வஞ்சனையும் சூதும் வழியாகக் கொண்டிருப்பார்;
நெஞ்சில் நிறுத்துதம்பி நீ! – நம்பிக்கை நாகராசன்
நான் அனுப்பிய:
ஒரு விகற்ப நேரிசை வெண்பா
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை செய்வார் இருப்பரே – தஞ்சமென
கொஞ்சமும் அன்னாரை கொள்ளலா காதென்றே
நெஞ்சில் நிறுத்துதம்
நானும், என் மனைவியும் சென்ற 15.08.2016 ல் என் இளைய மகன் குடும்பத்துடன் சென்னை சென்று வேளச்சேரியில் இரண்டு வாரங்கள் தங்கியிருந்தோம். அப்பொழுது 25.08.2016 அன்று ஆவடி vel tech பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும், மாணவர் விடுதியில் உள்ள என் பேரனைப் பார்க்கச் செல்வதற்காக SRP tools பஸ் நிறுத்தம் சென்றேன். நானும், என் மகனும் திருவான்மியூர் ரயில் நிலையம் செல்ல ஷேர் ஆட்டோவில் ஏறினோம்.
என் மகன் ஓட்டுநருடன் முன் இருக்கையில் அமர்ந்தார். நான் ஓட்டுநர்க்குப் பின்னால் உள்ள கீழ் இருக்கையில் அமர்ந்தேன். மேல் இருக்கையில் (IT நிறுவனத்தில் பணி புரிபவர்கள் என்று நினைக்கிறேன்) இள வயதுப் பெண்கள் இருவர்
நண்பர்கள் (267)

நன்னாடன்
நன்னாடு, விழுப்புரம்

Deepan
சென்னை

Dr A S KANDHAN
Chennai

Palani Rajan
vellore
