Dr.V.K.Kanniappan - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  Dr.V.K.Kanniappan
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  17-Oct-1944
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Jun-2011
பார்த்தவர்கள்:  13314
புள்ளி:  11423

என்னைப் பற்றி...

நான் ஒரு அரசாங்க ஒய்வு பெற்ற கண்மருத்துவ பேராசிரியர். மதுரை மாவட்டத்திலுள்ள சோழவந்தான் என் பிறந்த ஊர். நான் \'கீற்று\' வலைத் தளத்தில் பிப்ரவரி, 2011 லிருந்து சுமார் 45 கட்டுரைகள், வெவ்வேறு பொருட்களில் - மருத்துவம், இலக்கியம், வரலாறு - கட்டுரைகள் வெளியிட்டுள்ளேன்.
Mobile number: 98430 70840
http://annam-kanniappan.blogspot.in,
http://www.poemhunter.com/dr-v-k-kanniappan,
http://poetry.com/users/11888-Kanniappan%20%20Kanniappan%20
http://www.lankasripoems.com/index.php?conp=list&poetId=197803 புனைப்பெயர் ‘அன்னம்’
http://www.tamilthottam.in/forum

என் படைப்புகள்
Dr.V.K.Kanniappan செய்திகள்
Dr.V.K.Kanniappan - படைப்பு (public) அளித்துள்ளார்
09-May-2024 9:36 am

அருணாசலக் கவிராயர் எழுதிய குலோத்துங்க சோழன் கோவை
நூல்.

அஃதாவது - மூன்றாநாள் தோழனாற்கூடுங் கூட்டம்; அது: சாரிதல் கேட்டல் சாற்றல் எதிர்மறை நேர்தல் கூடல் பாங்கிற் கூட்டலென ஏழுவகைப்படும்; அவ்வேழுந் தலைவன் பாங்கனைச் சார்தல் முதல் பாங்கிற் கூட்டலீறாகிய இருபத்துநான்கு விரிகளையுடையன; அவை வருமாறு:-

தலைவன் பாங்கனைச் சார்தல்.

பாங்கன் தலைவனை யுற்றது வினாவல்

தலைவ னுற்ற துரைத்தல்.

(இ-ள்) அங்ஙனங் கேட்ட பாங்கனுக்குத் தலைவன் றனக்குற்ற வேறுபாட்டின் காரணத்தைக் கூறுதல்
.
கட்டளைக் கலித்துறை

கானாகத் தார்புனை தோணண்ப னேயுட் கலையனைத்துந்
தானாகச் சோர்ந்து தளரச்செய் தேதரை யேழுமொரு
கோனாகக் காக்குங்

மேலும்

Dr.V.K.Kanniappan - படைப்பு (public) அளித்துள்ளார்
05-May-2024 6:19 pm

அருணாசலக் கவிராயர் எழுதிய குலோத்துங்க சோழன் கோவை
நூல்.

அஃதாவது - மூன்றாநாள் தோழனாற்கூடுங் கூட்டம்; அது: சாரிதல் கேட்டல் சாற்றல் எதிர்மறை நேர்தல் கூடல் பாங்கிற் கூட்டலென ஏழுவகைப்படும்; அவ்வேழுந் தலைவன் பாங்கனைச் சார்தல் முதல் பாங்கிற் கூட்டலீறாகிய இருபத்துநான்கு விரிகளையுடையன; அவை வருமாறு:-

தலைவன் பாங்கனைச் சார்தல்.

பாங்கன் தலைவனை யுற்றது வினாவல்

(இ-ள்) பாங்கன் தலைவனது மனமும் புயமும் வாடிய வேறுபாடு கண்டு இவ்வேறுபாடு வந்ததற்குக் காரண மென்னை யென்று கேட்டல்.

* மௌவல் வாணகையென்றும் பாடம்.

கட்டளைக் கலித்துறை

தீதோரை மாற்றித் திசைகாத்த தோசெஞ்சொ லேழிசையிற்
போதோடு பட்ட புலர்ச்சிகொ

மேலும்

Dr.V.K.Kanniappan - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Apr-2024 6:44 pm

எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா

இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்

நூல்
நேரிசை வெண்பா

அன்புகுன்றா நாளி லருங்குறைசற் றேனுமெண்ணா(து)
அன்புகுன் றத்தொடங்கு மற்றைமுதல் - இன்புடன்செய்
நற்றொழிலி லுந்தீய நாடுதல்காண் நன்மதியே
குற்றமுறுங் கீழோர் குணம்! 37

மேலும்

Dr.V.K.Kanniappan - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Apr-2024 3:36 pm

அருணாசலக் கவிராயர் எழுதிய குலோத்துங்க சோழன் கோவை
நூல்.

அஃதாவது - மூன்றாநாள் தோழனாற்கூடுங் கூட்டம்; அது: சாரிதல் கேட்டல் சாற்றல் எதிர்மறை நேர்தல் கூடல் பாங்கிற் கூட்டலென ஏழுவகைப்படும்; அவ்வேழுந் தலைவன் பாங்கனைச் சார்தல் முதல் பாங்கிற் கூட்டலீறாகிய இருபத்துநான்கு விரிகளையுடையன; அவை வருமாறு:-

தலைவன் பாங்கனைச் சார்தல்.

(இ-ள்) தலைவன் தலைவியால் வந்த ஆசைநோய் தோழனா லன்றித் தீராதென்றெண்ணி அவனைச் சார்தல்.

கட்டளைக் கலித்துறை

வெயிற்கே நிழலும் பசிக்கே யமுதும் வினைக்கறமும்
பயிர்க்கே புனலுமுண் டாயது போற்பண்டு வாரியுண்ட
தயிர்க்கேகட் டுண்ட திருமால் குலோத்துங்கன் றஞ்சைவெற்பில்
உயிர்கேத நீக்க

மேலும்

Dr.V.K.Kanniappan - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Apr-2024 10:06 am

நானா எழுதுகிறேன் நின்னை நிலவெழிலே
பேனா எழுதுது பெண்ணேநின் பேரழகை
மானே மயிலினி மௌனமென் புன்னகையே
தேனாகச் சொட்டுது செந்தமிழ்ச் சொல்லமுது
நானா எழுதுகிறேன் நற்றமிழ் பூங்கவிதை
பேனாவில் பாயும் புனல்

----ஒரு விகற்ப பஃறொடை வெண்பா

எதுகை நானா பேனா மானே தேனா நானா பேனா

மோனா 1 3 ஆம் சீரில் ந நீ பே பெ ம மெ தே செ நா ந பெ பு

மேலும்

இது மேற்கேதுவாய் மோனை எண்வகை மோனையில் இதுவொன்று 1 3 ல் மோனை --பொழிப்பு மோனை அமைய எழுதுவது அளவடிச் செய்யுளில் பழைய நூல்களின் பழக்கம் ஆதலால் 1 3 ஐ காட்டியிருக்கிறேன் பேனாவே போற்றுது பெண்ணேநின் பேரழகை --- என்றமைத்தால் 2 லும் மோனை இப்பொழுது முற்று மோனை ஆனால் பொருள் அவ்வளவு நன்றாக இல்லை இக்கவிதையில் வேறு மோனைகளும் அமைந்துள்ளன : தேனாகச் சொட்டுது செந்தமிழ்ச் சொல்லமுது ----அனைத்து சீரிலும் மோனை இது முற்று மோனை சொ செ சொ வர்க்கம் தே ---இனம் மென்பொருளில் போடுங்கள் அடையாளம் காட்டும் 11-Apr-2024 4:10 pm
பே னா எழுதுது பெ ண்ணேநின் பே ரழகை - 1, 3, 4 சீர்களில் மோனை - என்ன பெயர் சொல்வது? 2 ல் மோனை இல்லை! 11-Apr-2024 2:25 pm
Dr.V.K.Kanniappan - Dr B Chandramouli அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Apr-2024 9:19 am

நேரிசை வெண்பா
---------
இயற்கை வளமதனை யின்று தொலைத்தே
செயற்கைப் பொருளதனைச் செய்யீர் நயமுடன்
நல்லு லகம்வா ழவழிகாட்டும் என்பாக்கள்
எல்லா உயிர்க்கும் சிறப்பு

மேலும்

இருவிகற்ப நேரிசை வெண்பா (ஒழுகிசைச் செப்பல் ஓசை) இயற்கை வளமதனை யின்று தொலைத்தே செயற்கைப் பொருளதனைச் செய்யீர் - நயமுடன் நல்லுலகம் வாழ வழிகாட்டும் என்பாக்கள் எல்லா உயிர்க்கும் இனிது! 02-Apr-2024 5:36 pm
Dr.V.K.Kanniappan - சக்கரைவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Mar-2024 7:39 am

யாப்பு அலங்காரம் -- பலவகைப் பாக்கள்
**********
1) கலிவிருத்தம் ( மா விளம் விளம் மா)

வெள்ளை உடைதனில் வீரமாய் உலவி
கள்ளச் சிரிப்பினைக் காந்தமாய்ப் பரப்பி
உள்ள மணலையும் ஊரினில் கடத்திக்
கொள்ளை யடித்திடும் கூற்றினைத் துரத்து!

( ஒரே அடி எதுகை 1. மற்றும் 3.ல் பொழிப்பு மோனை )

2.) நேரிசை வெண்பா
வெள்ளை உடைதனில் வீறுநடை போடுவர் ;
கள்ளச் சிரிப்பினைக் காட்டுவர் -- வெள்ளைமனங்
கொள்ளாக் கயமை குணத்தர்; இவர்தனை,
கொள்ளையர் என்றுநீ கூறு!
( ஒரே அடி எதுகை 1. மற்றும் 3.ல் பொழிப்பு மோனை)

3.) நேரிசை ஆசிரியப்பா

வெள்ளை அங்கியில் வெளிவரும

மேலும்

ஐயா அவர்கட்கு வணக்கம். தங்களின் வருகைக்கும் பார்வைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா 07-Apr-2024 1:49 pm
ஒரே கவிதை யாப்பின் பல் வடிவங்களில் மிக மிக அருமை பாராட்டுக்கள் பகிர்ந்தளித்தேன் ***** 07-Apr-2024 9:21 am
ஐயா, தங்களின் வருகைக்கும் பார்வைக்கும் கருத்துக்கும் திருத்தம் செய்து காண்பித்தமைக்கும் மிகவும் நன்றி ஐயா 31-Mar-2024 9:04 am
அனைத்துப் பாக்களும் சிறப்பு! கட்டளைக் கலித்துறை வெள்ளை உடையில் அலையும் அரசியல் வித்தகரை கள்ளச் சிரிப்பும் உதிர வலம்வரும் காதகரை உள்ள கனிமம் முழுதும் களவாடும் உத்தமரை கொள்ளை யரென்றே கருதி ஒதுக்கிடு ஓர(த்)திலே! ஓர(த்)திலே என வரலாம்; த் ஒலி குன்றி கூவிளங்காய் என்றே கொள்ள வேண்டும். வாழ்த்துகள். 31-Mar-2024 7:59 am
Dr.V.K.Kanniappan - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Mar-2024 10:12 am

பூவினில் சிந்திடும் தேனை இதழேந்தி
நாவில் உலவிடும் நற்றமிழ் பாடலுடன்
கோவில் சிலைகளுக்குப் போட்டியாக வந்தாயோ
தேவதைநீ ஆலயத் தில்

மேலும்

முயலுங்கள் பாலுண் கடைவாய் படுமுன்னே --பாலுன் என்று இருக்கவேண்டும் மேவிழுந்தே ----என்றால் காலன் ----மேவிழுந்தே தனிச் சொல் எதுகை ஒன்றவில்லையே குற்றாலத் தானையே கூறு ---குற்றாலத் தானேயே பாடு என்ற பொருளில் கூறு என்று வைத்தாரா ? அந்திமவேளையில் ஒரு புலவர் கடைவாயில் உறவினர் பாலைத் துணியால் பிழியும் போது புலவர் முகம் சுளித்தாராம் பால் கசக்கிறதா என்று கேட்டாராம் உறவினர் பாலும் கசக்கவில்லை பிழிந்த துணியும் கசக்கவில்லை என்றாராம் புலவர் அழகியல் கவிதையில் பட்டினத்தாரின் மேற்கோள் ஏன் ? சரி பட்டாடை யில்வந்தாள் பொற்பாவை ஆலயம் தட்டினில் பூவும் தவழ்ந்திடும் புன்னகையில் தொட்டு வருடுகிற தேநெஞ்சை என்செய்வேன் பட்டினத் தாரேநீ கூறு 29-Mar-2024 2:52 pm
நேரிசை வெண்பா (1, 3 சீர்களில் மோனை) காலன் வருமுன்னே கண்பஞ் சடைமுன்னே பாலுண் கடைவாய் படுமுன்னே - மேவிழுந்தே உற்றார் அழுமுன்னே ஊரார் சுடுமுன்னே குற்றாலத் தானையே கூறு. - பட்டினத்தார் குற்றாலத் தானையே கூறு! என்ற ஈற்றடிக்குப் பாட்டெழுத முயற்சிக்கிறேன். 29-Mar-2024 12:24 pm
Dr.V.K.Kanniappan - Dr.V.K.Kanniappan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Jan-2018 12:35 pm

குறள் வெண்செந்துறை

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
நலனுடை மையின் நாணுச் சிறந்தன்று. 6

சிறந்த பத்து, முதுமொழிக் காஞ்சி

பொருளுரை:

நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால், அடாத காரியங்களைச் செய்யக் கூசுந்தன்மை ஒருவன் அழகுடையவனாதலைக் காட்டிலும் மிக்க சிறப்புடையது.

'அணியன்றோ நாணுடைமை சான்றோர்க்கு' (1014 நாண் உடைமை)

ஆதலின், 'நலம் வேண்டின் நாணுடைமை வேண்டும் (960 குடிமை), 'நலஞ்சுடும் நாணின்மை நின்றக்கடை’ (1019 நாண் உடைமை)' ஆதலால் நாணுடைமை நலனுடைமையின் சிறந்ததாம்.

நாணாவது செய்யத் தகாதனவற்றிற்கு உள்ளம் ஒடுங்குதல்.

மேலும்

பாவர் டாக்டர் அவர்களுக்கு வணக்கம். நாணுதல் பெண்ணின் உரிச்சொல் என்றாலும் ஆணும் பெண்ணும் நாணும் சந்தர்ப்பங்களை விளக்கியமைக்கு மிக்க நன்றி ஐயா. 28-Jul-2021 7:18 am
Dr.V.K.Kanniappan - Dr.V.K.Kanniappan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-May-2015 9:58 pm

இரவோ(டு) இரவாக வாழ்க்கையில் வெற்றி
வருவதில்லை; ஆர்வம் குறிக்கோள் - இரண்டும்
இணைந்து தொடர்முயற்சி மேற்கொண்டால் எங்கும்
துணையாய் வரும்ஒளிம யம்! 1

இரவோ(டு) இரவாக வாழ்க்கையில் வெற்றி
வருவதில்லை; ஆர்வம் குறிக்கோள் - இரண்டும்
இணைந்து தொடர்முயற்சி மேற்கொண்டால் எங்கும்
துணையாய் வருமே ஒளி! 2

தன்னம்பிக் கைவெற்றிக் கேசாவி யாய்ஆகும்
என்றும் அவசர எண்ணமும் - நன்றாம்
முடிவினை எட்டாதே; உன்குறையை நேர்செய்
கிடைக்குமே வெற்றியப்போ து! 3

தன்னம்பிக் கைவெற்றிக் கேதிறவு கோலாகும்
என்றும் அவசர எண்ணமும் - நன்றாம்
முடிவினை எட்டாதே; உன்குறையை நேர்செய்
கிடைக்குமே வெற்றியப்போ து! 3a

மேலும்

Sonnet: For Success In Life Success in life does come not overnight; An ambition and aim begin the try; A sustained labor makes the future bright; At times, despair could make you even cry. Self-confidence is key to success prime; A hasty mind can’t make foray at all; Correct your deficiencies all the time; In others’ court always, you keep the ball. But emulate the good achieved by next; The road you take is not the same always; The problems cropping up can keep you vexed; But you maintain that principled a base. The grace of God dictates the things on earth; God gave each one a purpose in the birth. Copyright by Dr John Celes 20-05-2015 Dr. A.Celestine Raj Manohar M.D., 13-Jun-2017 12:08 pm
எழுதியவர் டாக்டர்.ஜான் செலிஸ் மனோஹர் எம்.டி, முன்னாள் டீன் மற்றும் மருத்துவப் பேராசிரியர், பெருந்துறை மருத்துவக் கல்லூரி ----மூலக் கவிதையை பதிவு செய்யவும் 13-Jun-2017 11:38 am
கருத்திற்கு நன்றி, சேயோன். மூலக் கவிதையையும் வாசித்துப் பாருங்கள். எழுதியவர் டாக்டர்.ஜான் செலிஸ் மனோஹர் எம்.டி, முன்னாள் டீன் மற்றும் மருத்துவப் பேராசிரியர், பெருந்துறை மருத்துவக் கல்லூரி. 23-Sep-2015 11:35 am
சிறந்த வெண்பாக்கள். சிறப்பான மொழிபெயர்ப்பு. 26-May-2015 8:02 pm
Dr.V.K.Kanniappan - Dr.V.K.Kanniappan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Sep-2016 12:53 pm

பரிசு பெற்ற நேரிசை வெண்பா

பண்புடையர் ஆதல்; பழகுசொல் பேசுதல்;
நண்பரைப் பேணுதல்; நன்னயமாய் – புண்ணன்ன
வஞ்சகத்தை வேரறுத்து மாண்புறவே நல்லவற்றை
நெஞ்சில் நிறுத்துதம்பி நீ! – எஸ்.பி.இராமையா, புதுப்பாக்கம்

பரிசு பெற்ற நேரிசை வெண்பா

தஞ்ச மெனஉன் தயவுக்காய்க் காத்திருப்பர்;
கொஞ்சிக் குலமென்று கூவிடுவார்; - நஞ்சுடனே,
வஞ்சனையும் சூதும் வழியாகக் கொண்டிருப்பார்;
நெஞ்சில் நிறுத்துதம்பி நீ! – நம்பிக்கை நாகராசன்

நான் அனுப்பிய:
ஒரு விகற்ப நேரிசை வெண்பா

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை செய்வார் இருப்பரே – தஞ்சமென
கொஞ்சமும் அன்னாரை கொள்ளலா காதென்றே
நெஞ்சில் நிறுத்துதம்

மேலும்

தங்கள் கருத்திற்கு நன்றி. 19-Sep-2016 7:08 pm
போற்றுதற்குரிய கவிதை (வெண்பாக்கள்) பாராட்டுக்கள் தொடரட்டும் தங்கள் இலக்கிய படைப்புகள் தமிழ் அன்னை ஆசிகள் 19-Sep-2016 5:19 pm
தங்கள் தெளிவான கருத்திற்கு நன்றி. 15-Sep-2016 2:44 pm
நல்ல கருத்துக்களுடைய வெண்பாக்கள்தான் எழுதியிருக்கிறீர்கள்; பரிசு கிடைத்திருக்கலாம்.. மற்றவர்களுடைய வெண்பாக்களையும் கொடுத்துள்ளதைப் பாராட்டுகின்றேன்.. அவற்றிற்கும் தங்களுடையதற்கு இடையே காணப்படும் ஆற்றொழுக்கு நடையினை அறிந்துகொண்டிருப்பீர்கள் என்று நம்புகின்றேன். 15-Sep-2016 1:40 pm
Dr.V.K.Kanniappan - Dr.V.K.Kanniappan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Sep-2016 10:25 pm

நானும், என் மனைவியும் சென்ற 15.08.2016 ல் என் இளைய மகன் குடும்பத்துடன் சென்னை சென்று வேளச்சேரியில் இரண்டு வாரங்கள் தங்கியிருந்தோம். அப்பொழுது 25.08.2016 அன்று ஆவடி vel tech பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும், மாணவர் விடுதியில் உள்ள என் பேரனைப் பார்க்கச் செல்வதற்காக SRP tools பஸ் நிறுத்தம் சென்றேன். நானும், என் மகனும் திருவான்மியூர் ரயில் நிலையம் செல்ல ஷேர் ஆட்டோவில் ஏறினோம்.

என் மகன் ஓட்டுநருடன் முன் இருக்கையில் அமர்ந்தார். நான் ஓட்டுநர்க்குப் பின்னால் உள்ள கீழ் இருக்கையில் அமர்ந்தேன். மேல் இருக்கையில் (IT நிறுவனத்தில் பணி புரிபவர்கள் என்று நினைக்கிறேன்) இள வயதுப் பெண்கள் இருவர்

மேலும்

கருத்திற்கு நன்றி. 09-Sep-2016 10:57 pm
உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி சொல்லி விட்டீர்கள். கருத்திற்கு நன்றி. 09-Sep-2016 10:56 pm
கருத்திற்கு நன்றி. 09-Sep-2016 10:54 pm
தரமற்ற பொருட்கள் விற்பனையும், பாதுகாப்பற்ற உணவு விற்பனையும் விற்று நம்மை கொள்ளையடிக்கும் உணவு விடுதிகளை பற்றி புகார் செய்தாலும் பயனில்லை பயணக் கட்டுரைகள்' : உலகம் சுற்றிய மணியன் போல் எழுதினால் சிறப்பாக இருக்கும் ஷேர் ஆட்டோவில் ,மின்சார ரயிலில் பயண அனுபவங்கள் சுகாதாரமான கழிப்பிட விமர்சனங்கள் போற்றுதற்குரிய படைப்பு 09-Sep-2016 7:33 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (267)

நன்னாடன்

நன்னாடன்

நன்னாடு, விழுப்புரம்
Deepan

Deepan

சென்னை
Dr A S KANDHAN

Dr A S KANDHAN

Chennai
Palani Rajan

Palani Rajan

vellore
பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்

இவர் பின்தொடர்பவர்கள் (268)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
Kavitha V

Kavitha V

Bangalore

இவரை பின்தொடர்பவர்கள் (292)

தம்பு

தம்பு

ஐக்கிய இராச்சியம்.
user photo

மேலே