Dr.V.K.Kanniappan - சுயவிவரம்
(Profile)


தமிழ் பித்தன்
இயற்பெயர் | : Dr.V.K.Kanniappan |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : 17-Oct-1944 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-Jun-2011 |
பார்த்தவர்கள் | : 12596 |
புள்ளி | : 10040 |
நான் ஒரு அரசாங்க ஒய்வு பெற்ற கண்மருத்துவ பேராசிரியர். மதுரை மாவட்டத்திலுள்ள சோழவந்தான் என் பிறந்த ஊர். நான் \'கீற்று\' வலைத் தளத்தில் பிப்ரவரி, 2011 லிருந்து சுமார் 45 கட்டுரைகள், வெவ்வேறு பொருட்களில் - மருத்துவம், இலக்கியம், வரலாறு - கட்டுரைகள் வெளியிட்டுள்ளேன்.
Mobile number: 98430 70840
http://annam-kanniappan.blogspot.in,
http://www.poemhunter.com/dr-v-k-kanniappan,
http://poetry.com/users/11888-Kanniappan%20%20Kanniappan%20
http://www.lankasripoems.com/index.php?conp=list&poetId=197803 புனைப்பெயர் ‘அன்னம்’
http://www.tamilthottam.in/forum
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(1, 4 சீர்களில் மோனை)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் அருகி வரலாம்)
தலையினை உயர்த்தி வானம்
..தான்பார்த்துக் கவிதை சொன்னேன்,
கலையெழில் கயல்கள் துள்ளும்
..கவின்கரு விழிகள் ரெண்டு;
கலைந்தாடும் கரிய வண்ணக்
..கார்குழல் புரளும் போழ்து
சிலையென அசையும் உன்றன்
..செந்தளிர் மேனி கண்டேன்!
– வ.க.கன்னியப்பன்
நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர் தேவாரம் - திருவதிகை வீரட்டானம்
திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள பழமையான சிவன்கோவில் ஆகும். இது பண்ருட்டியில் இருந்து 2 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் தமிழ்நாட்டில் உள்ள எட்டு வீர சைவக் கோவில்களுள் ஒன்று.
அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவராலும் பாடல் பெற்ற தலமாகும். இது தென் ஆற்காடு மாவட்டத்தில் அமைந்துள்ளது.
இறைவன் சம்பந்தருக்குத் திருநடனம் காட்டியதும், அப்பரின் சூலைநோய் நீங்கப் பெற்றதும், திலகவதியார் தொண்டாற்றியதும், மனவாசகங் கடந்தார் அவதரித்ததும், திரிபுரத்தை எரித்ததும் நடந்த தலம் இதுவென்பது தொன்மநம
நேரிசை வெண்பா
பேய்ப்பாற் சொரியதுதான் பேதிமுதல் வெப்பகற்றும்
வாய்ப்பார் கடுப்புதிரம் மாற்றுங்காண் - போய்ப்பாய்ந்
துருவாமல் உள்ளலைக்கும் ஓங்கயிற்கண் மாதே
பொருவார் பயித்தியம்போக் கும்
- பதார்த்த குண சிந்தாமணி
இதனால் பேதி முதலான வெப்ப நோய்கள், இரத்தக்கடுப்பு, பித்ததோடம் ஆகியவை நீங்கும்
நேரிசை வெண்பா
நாவுக ளார்மார்பு நாபிமூ லங்களிலுட்
டாவி வருமிரணஞ் சாத்தியமாங் - கூவுலிடு
மெய்யழலு மோதணியு மேகமறும் வீரியமாம்
உய்யவெனில் நற்றாளி உண்
- பதார்த்த குண சிந்தாமணி
நறுந்தாளிக்கொடி தொண்டை, மார்பு, வயிறு, மூலம் இவற்றில் ஏற்படும் புண்கள், உடல் வெப்பம், பிரமேகம் இவற்றை நீக்கும்
இரு விகற்ப நேரிசை வெண்பா
போக்கெல்லாம் பாலை புணர்தல் நறுங்குறிஞ்சி
ஆக்கமளி ஊடல் அணிமருதம் – நோக்கொன்றி
இல்லிருத்தல் முல்லை இரங்கியபோக் கேர் நெய்தல்
புல்லும் கலிமுறைக் கோப்பு. ....கலித்தொகை (௨)
கபிலர் பரணர் போன்றோர் தொல்காப்பியர்கு முன்னமே வாழ்ந்தவர்கள்
என்றுதமிழ் வல்லுனர் கூறுவதிலிருந்து கலித்தொகை நேரிசை
வெண்பாக்கள் வெண்பா பயிலுவோர் முன்னுதாரணப் பாடல்களாக
ஏற்று பயில வேண்டும்.
இப்பாடலில் ஐந்து திணைக்கும் உரியக் பொருளை எடுத்துரைப்பதைக்
காணுங்கள்
பாலை. c. =. புணர்தல்
குறிஞ்சி. =ஆக்கமளி
மருதம் = ஊடல் அணி
முல்லை. == நோக்கமிலா இல்லிருத்தல்
நெய்தல். = இரங்கிய ப
***உன் விரல் பிடித்து பேச வேண்டும் 555 ***
என்னுயிரே...
நீ என்னோடு
பேசும் போதும்...
மெளனமாக சிரிக்கும்
போதும் ரசிக்கிறேன்...
உன் மௌன புன்னகையில்
மெல்ல மெல்ல இழக்கிறேன்...
என்னை உன் காதல்
என்னும் விலங்கால்...
கைது செய்துவிட்டாய்
உன் இதயத்தில்...
பூ உனக்கு
பூமாலை சூட ஆசை...
நான்
உன்னை நேசிக்கிறேன்...
நான் மறைந்தாலும் என்
எழுத்துக்களும் உன்னை நேசிக்கும்...
நடக்கையில் உன்னை
அணைத்தபடி நடக்க வேண்டும்...
உன் விரல் பிடித்து பேச வேண்டும்...
நீ உதடு
சுழிக்கும் போதெல்லாம்...
உன் இதழ்களை
கடிக்க ஆசைதான்...
உன் உதட்டின் ரேகைகளோ
வேண்டாம் என்று கெஞ்சுகிறது...
மிஞ்சி
கட
நேரிசை வெண்பா
மாலைப் பொழுதெழுதும் மாசிலா ஓவியம்
மேலை இளந்தென்றல் மென்குண - வாலையவள்
நீலவிழிக் காரியிவள் நெஞ்சினில் நிற்பவளே
சாலச் சிறந்தவன்னை சாற்று!
– வ.க.கன்னியப்பன்
குறிப்பு:
ஆதியந்தம் வாலையவள் இருந்த வீடே
ஆச்சரியம் மெத்தமெத்த அதுதான் பாரு! - கருவூர் சித்தர்
9 வயதில் இருந்து பூப்பெய்தாத சிறுமி வயது ரூபமே வாலைக்குமரி!
வாலைக்குமரியாக பருவம் எய்தாத குழந்தை / குமரி - பருவப் பெண்ணாக சித்தர்களுக்கு சக்தியாக இருந்து தமிழ் ஞானம் ஊட்டியவளே தமிழன்னை!
சுட சுட மீன் வறுவல் இங்கு கிடைக்கும்
ஓடும் நீரில்
வெள்ளி காசுகளாய்
சூரிய வெளிச்சத்தில்
மின்னி மறைந்து
செல்கின்றன மீன்கள்
கூட்டம்
அதனை அள்ளி
செல்ல
வலையை வீசி
காத்திருக்கும்
மீனவர்கள்
“சுட சுட மீன் வறுவல்”
இங்கு கிடைக்கும்
தப்பும் தவறுமாய்
எழுத்து பிழைகளுடன்
சுவரொட்டி
அருகருகே வரிசையாய்
அடுப்புகள் எரிய
அடுப்பின் மேல்
வாணலியில்
கொதிக்கும்
எண்ணெயில்
இரத்த சிவப்பாய்
பூசி மெழுகிய
மீன்களை
அள்ளி போட்டு
எடுத்து கொடுத்து
கொண்டிருக்கும்
பெண்கள்
சப்பு கொட்டி
புசித்து கொண்டும்
எதிர்பார்த்தும்
இலையுடன்
காத்து நிற்கிறது
மக்கள் கூட்டம்
குறள் வெண்செந்துறை
ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
நலனுடை மையின் நாணுச் சிறந்தன்று. 6
சிறந்த பத்து, முதுமொழிக் காஞ்சி
பொருளுரை:
நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால், அடாத காரியங்களைச் செய்யக் கூசுந்தன்மை ஒருவன் அழகுடையவனாதலைக் காட்டிலும் மிக்க சிறப்புடையது.
'அணியன்றோ நாணுடைமை சான்றோர்க்கு' (1014 நாண் உடைமை)
ஆதலின், 'நலம் வேண்டின் நாணுடைமை வேண்டும் (960 குடிமை), 'நலஞ்சுடும் நாணின்மை நின்றக்கடை’ (1019 நாண் உடைமை)' ஆதலால் நாணுடைமை நலனுடைமையின் சிறந்ததாம்.
நாணாவது செய்யத் தகாதனவற்றிற்கு உள்ளம் ஒடுங்குதல்.
கலித்துறையின் ஒரு வகை கட்டளைக்கலித்துறை. கட்டளை= எழுத்தின் அளவு. இக்கலித்துறையில் நான்கடிகளிலும் எழுத்தெண்ணிக்கை ஒரே மாதிரியாக வருவதால் இப்பெயர் பெற்றது. காரிகை நூற்பாக்கள் அனைத்தும் கட்டளைக் கலித்துறை யாப்பில் அமைந்தவை. காரிகைக்குப் பின் வந்த இலக்கணங்களில் கட்டளைக்கலித் துறையின் இலக்கணம் சொல்லப்படுகிறது. கோவை எனும் சிற்றிலக்கியம் முழுமையும் கட்டளைக் கலித்துறையால் அமைந்தது.
கட்டளைக் கலித்துறையால் அமையும் நூற்பாவுக்கே காரிகை எனும் பெயர் உண்டு. இதன் இலக்கணத்தைக் காண்போம்.
(1) நெடிலடி நான்காய் வரும்.
(2) ஒவ்வோரடியிலும் முதல் நான்கு சீர்கள் பெரும்பாலும் ஈரசைச் சீர்களாக வரும்; சிறுபான்மை தேமா
இரவோ(டு) இரவாக வாழ்க்கையில் வெற்றி
வருவதில்லை; ஆர்வம் குறிக்கோள் - இரண்டும்
இணைந்து தொடர்முயற்சி மேற்கொண்டால் எங்கும்
துணையாய் வரும்ஒளிம யம்! 1
இரவோ(டு) இரவாக வாழ்க்கையில் வெற்றி
வருவதில்லை; ஆர்வம் குறிக்கோள் - இரண்டும்
இணைந்து தொடர்முயற்சி மேற்கொண்டால் எங்கும்
துணையாய் வருமே ஒளி! 2
தன்னம்பிக் கைவெற்றிக் கேசாவி யாய்ஆகும்
என்றும் அவசர எண்ணமும் - நன்றாம்
முடிவினை எட்டாதே; உன்குறையை நேர்செய்
கிடைக்குமே வெற்றியப்போ து! 3
தன்னம்பிக் கைவெற்றிக் கேதிறவு கோலாகும்
என்றும் அவசர எண்ணமும் - நன்றாம்
முடிவினை எட்டாதே; உன்குறையை நேர்செய்
கிடைக்குமே வெற்றியப்போ து! 3a
பரிசு பெற்ற நேரிசை வெண்பா
பண்புடையர் ஆதல்; பழகுசொல் பேசுதல்;
நண்பரைப் பேணுதல்; நன்னயமாய் – புண்ணன்ன
வஞ்சகத்தை வேரறுத்து மாண்புறவே நல்லவற்றை
நெஞ்சில் நிறுத்துதம்பி நீ! – எஸ்.பி.இராமையா, புதுப்பாக்கம்
பரிசு பெற்ற நேரிசை வெண்பா
தஞ்ச மெனஉன் தயவுக்காய்க் காத்திருப்பர்;
கொஞ்சிக் குலமென்று கூவிடுவார்; - நஞ்சுடனே,
வஞ்சனையும் சூதும் வழியாகக் கொண்டிருப்பார்;
நெஞ்சில் நிறுத்துதம்பி நீ! – நம்பிக்கை நாகராசன்
நான் அனுப்பிய:
ஒரு விகற்ப நேரிசை வெண்பா
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை செய்வார் இருப்பரே – தஞ்சமென
கொஞ்சமும் அன்னாரை கொள்ளலா காதென்றே
நெஞ்சில் நிறுத்துதம்
நண்பர்கள் (267)

நன்னாடன்
நன்னாடு, விழுப்புரம்

Deepan
சென்னை

Dr A S KANDHAN
Chennai

Palani Rajan
vellore
