Dr.V.K.Kanniappan - சுயவிவரம்
(Profile)


தமிழ் பித்தன்
இயற்பெயர் | : Dr.V.K.Kanniappan |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : 17-Oct-1944 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-Jun-2011 |
பார்த்தவர்கள் | : 13665 |
புள்ளி | : 11743 |
நான் ஒரு அரசாங்க ஒய்வு பெற்ற கண்மருத்துவ பேராசிரியர். மதுரை மாவட்டத்திலுள்ள சோழவந்தான் என் பிறந்த ஊர். நான் \'கீற்று\' வலைத் தளத்தில் பிப்ரவரி, 2011 லிருந்து சுமார் 45 கட்டுரைகள், வெவ்வேறு பொருட்களில் - மருத்துவம், இலக்கியம், வரலாறு - கட்டுரைகள் வெளியிட்டுள்ளேன்.
Mobile number: 98430 70840
http://annam-kanniappan.blogspot.in,
http://www.poemhunter.com/dr-v-k-kanniappan,
http://poetry.com/users/11888-Kanniappan%20%20Kanniappan%20
http://www.lankasripoems.com/index.php?conp=list&poetId=197803 புனைப்பெயர் ‘அன்னம்’
http://www.tamilthottam.in/forum
இன்னிசை சிந்தியல் வெண்பா
இருகையால் தண்ணீர் பருகா ரொருகையாற்
கொள்ளார் கொடாஅர் குரவர்க் கிருகை
சொறியா ருடம்பு மடுத்து! 28
- ஆசாரக் கோவை
பொருளுரை:
இரண்டு கைகளாலும் அள்ளித் தண்ணீர் குடிக்கக் கூடாது.
பெரியோர் கொடுக்கும் பொருளை ஒரு கையினால் வாங்கக் கூடாது.
பெரியோர்க்கு எப்பொருளையும் ஒரு கையால் கொடுக்கக் கூடாது.
இரண்டு கைகளையும் வைத்து உடம்பில் சொறியக் கூடாது.
கருத்துரை:
தண்ணீரை இரு கையாலும் குடிக்கலாகாது. பெரியோரிடம் ஒன்றைப் பெறும் பொழுதும், கொடுக்கும் பொழுதும் இரு கையாலேயே வாங்கவும் கொடுக்கவும் வேண்டும். உடம்பை இரு கைகளாலும் சொறியலாகாது.
நேரிசை வெண்பா
ஆசைக்கு அடியான் அகிலலோ கத்தினுக்கும்
ஆசற்ற நல்லடியான் ஆவானே - ஆசை
தனையடிமை கொண்டவனே தப்பாது உலகம்
தனையடிமை கொண்டவனே தான். 12
- நீதி வெண்பா
பொருளுரை:
ஆசைக்கு அடிமைப்பட்டவனே எல்லா உலகங்களுக்கும் குற்றமற்ற நல்ல அடிமையாவான். ஆசைதனைத் தனக்கு அடிமையாய்க் கொண்டவனே தவறாமல் உலகத்தைத் தனக்கு அடிமையாக்கிக் கொண்டவன் ஆவான்.
கருத்து:
ஆசையில்லாதவனுக்கு உலகம் வசப்படும்.
நேரிசை வெண்பா
கற்பிளவோ டொப்பர் கயவர் கடுஞ்சினத்துப்
பொற்பிளவோ(டு) ஒப்பாரும் போல்வாரே - விற்பிடித்து
நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே
சீரொழுகு சான்றோர் சினம். 23
- மூதுரை
பொருளுரை:
கீழ்மையான குணமுடையவர்கள் கடும் கோபம் கொண்டு வேறுபட்டால், கல்லில் ஏற்பட்ட பிளவு போல் திரும்பச் சேர மாட்டார்கள்.
அப்படி வேறுபட்ட போது சிலர் பொன்னின் பிளவுக்கு ஒப்பானவர்கள், ஒருவர் சமாதானம் செய்தால் சேர்ந்து கொள்வார்கள்.
சிறந்த குணத்தைக் கடைப்பிடிக்கும் சான்றோர்களுடைய கோபம் வில் கொண்டு அம்பினால் நீர் பிளக்க எய்த பிளவுபோல மனக்காயம் அப்போதே நீங்கும்.
கருத்து:
கோபத்தினால் வேறுபட்ட பொழுது மிக்க குண
நேரிசை வெண்பா
(’ய்’ ‘ல்’ இடையின எதுகை)
பொய்யாமை நன்று பொருணன் றுயிர்நோவக்
கொல்லாமை நன்று கொழிக்குங்காற் - பல்லார்முற்
பேணாமை பேணுந் தகைய சிறிதெனினு
மாணாமை மாண்டார் மனம்! 38
- சிறுபஞ்ச மூலம்
பொருளுரை:
பொய்சொல்லாதிருப்பது நன்மையாகும்.
தன் உழைப்பால் வரும்பொருள் நன்மையாகும்;
மற்றொரு உயிர் வருந்த கொல்லாதிருப்பது நன்மையாகும்;
ஆராயுமிடத்து, விரும்பத் தகாதவற்றை பலரறிய விரும்பாமை நன்மையாகும்;
மாட்சிமைப் பட்டவர்களுடைய மனம் சிறிதே என்றாலும் குடும்ப பந்தத்தில் தீவிர விருப்பப்படாமல் இருப்பது நன்மையாகும்;
(மாட்சிமைப் பட்டவர்களுடைய மனம் கொஞ்சமாவது பெருமையடையாமல் இருத்தல
முதுமையின் வருகைக்கு வெள்ளை கொடி காட்டியது தலைமுடி
அதன் கையில் கருப்புக் கொடி கொடுத்தேன் நான்.
முல்லை மலர்த்தேனை மூழ்கிப் பருகியே
சில்லென்ற காற்றில் சிறகுவிரிக் கும்வண்டே
மெல்லியலாள் மௌன விழியினள் மெல்லிதழ்ச்
சொல்லியல்த் தேனும் பருகு
அளவறியா நல்லமுதும் நஞ்சு அதுபோல்
உளமறியா மல்செலுத்தும் அன்பு
மாற்/றமதின் ஆற்றல் அழியாது என்றுமதை
ஏற்றால் எளிதாகும் வாழ்வு
குறள் வெண்செந்துறை
ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
நலனுடை மையின் நாணுச் சிறந்தன்று. 6
சிறந்த பத்து, முதுமொழிக் காஞ்சி
பொருளுரை:
நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால், அடாத காரியங்களைச் செய்யக் கூசுந்தன்மை ஒருவன் அழகுடையவனாதலைக் காட்டிலும் மிக்க சிறப்புடையது.
'அணியன்றோ நாணுடைமை சான்றோர்க்கு' (1014 நாண் உடைமை)
ஆதலின், 'நலம் வேண்டின் நாணுடைமை வேண்டும் (960 குடிமை), 'நலஞ்சுடும் நாணின்மை நின்றக்கடை’ (1019 நாண் உடைமை)' ஆதலால் நாணுடைமை நலனுடைமையின் சிறந்ததாம்.
நாணாவது செய்யத் தகாதனவற்றிற்கு உள்ளம் ஒடுங்குதல்.
இரவோ(டு) இரவாக வாழ்க்கையில் வெற்றி
வருவதில்லை; ஆர்வம் குறிக்கோள் - இரண்டும்
இணைந்து தொடர்முயற்சி மேற்கொண்டால் எங்கும்
துணையாய் வரும்ஒளிம யம்! 1
இரவோ(டு) இரவாக வாழ்க்கையில் வெற்றி
வருவதில்லை; ஆர்வம் குறிக்கோள் - இரண்டும்
இணைந்து தொடர்முயற்சி மேற்கொண்டால் எங்கும்
துணையாய் வருமே ஒளி! 2
தன்னம்பிக் கைவெற்றிக் கேசாவி யாய்ஆகும்
என்றும் அவசர எண்ணமும் - நன்றாம்
முடிவினை எட்டாதே; உன்குறையை நேர்செய்
கிடைக்குமே வெற்றியப்போ து! 3
தன்னம்பிக் கைவெற்றிக் கேதிறவு கோலாகும்
என்றும் அவசர எண்ணமும் - நன்றாம்
முடிவினை எட்டாதே; உன்குறையை நேர்செய்
கிடைக்குமே வெற்றியப்போ து! 3a
பரிசு பெற்ற நேரிசை வெண்பா
பண்புடையர் ஆதல்; பழகுசொல் பேசுதல்;
நண்பரைப் பேணுதல்; நன்னயமாய் – புண்ணன்ன
வஞ்சகத்தை வேரறுத்து மாண்புறவே நல்லவற்றை
நெஞ்சில் நிறுத்துதம்பி நீ! – எஸ்.பி.இராமையா, புதுப்பாக்கம்
பரிசு பெற்ற நேரிசை வெண்பா
தஞ்ச மெனஉன் தயவுக்காய்க் காத்திருப்பர்;
கொஞ்சிக் குலமென்று கூவிடுவார்; - நஞ்சுடனே,
வஞ்சனையும் சூதும் வழியாகக் கொண்டிருப்பார்;
நெஞ்சில் நிறுத்துதம்பி நீ! – நம்பிக்கை நாகராசன்
நான் அனுப்பிய:
ஒரு விகற்ப நேரிசை வெண்பா
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை செய்வார் இருப்பரே – தஞ்சமென
கொஞ்சமும் அன்னாரை கொள்ளலா காதென்றே
நெஞ்சில் நிறுத்துதம்
நானும், என் மனைவியும் சென்ற 15.08.2016 ல் என் இளைய மகன் குடும்பத்துடன் சென்னை சென்று வேளச்சேரியில் இரண்டு வாரங்கள் தங்கியிருந்தோம். அப்பொழுது 25.08.2016 அன்று ஆவடி vel tech பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும், மாணவர் விடுதியில் உள்ள என் பேரனைப் பார்க்கச் செல்வதற்காக SRP tools பஸ் நிறுத்தம் சென்றேன். நானும், என் மகனும் திருவான்மியூர் ரயில் நிலையம் செல்ல ஷேர் ஆட்டோவில் ஏறினோம்.
என் மகன் ஓட்டுநருடன் முன் இருக்கையில் அமர்ந்தார். நான் ஓட்டுநர்க்குப் பின்னால் உள்ள கீழ் இருக்கையில் அமர்ந்தேன். மேல் இருக்கையில் (IT நிறுவனத்தில் பணி புரிபவர்கள் என்று நினைக்கிறேன்) இள வயதுப் பெண்கள் இருவர்
நண்பர்கள் (267)

நன்னாடன்
நன்னாடு, விழுப்புரம்

Deepan
சென்னை

Dr A S KANDHAN
Chennai

Palani Rajan
vellore
