Dr.V.K.Kanniappan - சுயவிவரம்
(Profile)
தமிழ் பித்தன்
இயற்பெயர் | : Dr.V.K.Kanniappan |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : 17-Oct-1944 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-Jun-2011 |
பார்த்தவர்கள் | : 13279 |
புள்ளி | : 11403 |
நான் ஒரு அரசாங்க ஒய்வு பெற்ற கண்மருத்துவ பேராசிரியர். மதுரை மாவட்டத்திலுள்ள சோழவந்தான் என் பிறந்த ஊர். நான் \'கீற்று\' வலைத் தளத்தில் பிப்ரவரி, 2011 லிருந்து சுமார் 45 கட்டுரைகள், வெவ்வேறு பொருட்களில் - மருத்துவம், இலக்கியம், வரலாறு - கட்டுரைகள் வெளியிட்டுள்ளேன்.
Mobile number: 98430 70840
http://annam-kanniappan.blogspot.in,
http://www.poemhunter.com/dr-v-k-kanniappan,
http://poetry.com/users/11888-Kanniappan%20%20Kanniappan%20
http://www.lankasripoems.com/index.php?conp=list&poetId=197803 புனைப்பெயர் ‘அன்னம்’
http://www.tamilthottam.in/forum
கட்டளைக் கலித்துறை
ஆணுக்குப் பெண்ணும் அடங்கி யிருந்தா
..லதிசயந்தான்;
பூணாரம் போட்டவப் பெண்ணின் பொறுமை
..யதிசயந்தான்!
காணிக்கை தந்தேனின் பெண்ணே,நீ காட்டுன்
..னதிசயந்தான்;
வாணீசன் நற்றுணை யுங்கொண்டால் வாழ்வு
..மதிசயமே!
- வ.க.கன்னியப்பன்
வாணீசன்: பிரமன்
கலித்துறை
தேமா +புளிமா +புளிமாங்காய் +புளிமா +புளிமா
அன்பும் அறிவும் இணைந்தங்கே அமைந்த அணங்கு
துன்பம் வரினும் துடைத்தங்கே நிலைக்கும் சிறப்பால்
என்றும் இருக்கும் துணையாக வருவாள் பொறையால்
என்றும் எனது மனக்கண்ணில் நிலைக்கும் இனியாள்!
நீதிவெண்பா [1] தமிழ் நீதி நூல். வெண்பாக்களால் ஆன இந்நூலின் ஆசிரியர் யாரெனத் தெரியவில்லை. இந்நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல்:
இருவிகற்ப நேரிசை வெண்பா
மூதுணர்ந்தோர் ஓதுசில மூதுரையைப் பேதையேன்
நீதிவெண்பா வாக நிகழ்ந்துவேன் - ஆதிபரன்
வாமான் கருணை மணிஉதரம் பூத்தமுதல்
கோமான் பெருங்கருணை கொண்டு!
கடவுள் வாழ்த்துப்பாடலைத் தவிர்த்து இதில் மொத்தம் 100 பாக்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலும் ஒரு நீதியைச் சொல்கிறது.
இதன் காலம் 12 ஆம் நூற்றாண்டு
நேரிசை வெண்பா
காந்தனில் லாத கனங்குழலாள் பொற்(பு)அவமாம்
சாந்தகுணம் இல்லார் தவமவமாம் – ஏந்திழையே!
அன்னையில்லாப் பிள்ளை இருப்ப(து) அவம்;அவமே
துன்னெயிறில் லார்ஊண் சுவை. 6
- நீதி வெண்பா
பொருளுரை:
ஏந்திய ஆபரணங்களையுடைய பெண்ணே!
கணவனில்லாத சிறப்பு மிக்க கூந்தலையுடைய பெண்ணின் அழகு வீணாம்;
சாந்தமாகிய பொறுமைக் குணமில்லாதவரின் தவம் வீணாம்;
கவனிப்பார் இல்லாத தாயில்லாப் பிள்ளை இருப்பதும் வீணாம்;
நெருங்கிய பற்களில்லாதவர்க்கு உணவின் சுவையும் வீணாம்.
கணவனில்லாத பெண்களுக்கும், பொறுமையில்லாத தவஞ் செய்வோர்க்கும், தாயில்லாத கவனிப்பாரற்ற பிள்ளைகளுக்கும், நெருக்கமாகப் பற்களில்லாதவர்க்கு
நேரிசை வெண்பா
பகைசேரும் எண்ணான்கு பல்கொண்டே நல்நா
வகைசேர் சுவைஅருந்து மாபோல் - தொகைசேர்
பகைவரிடம் மெய்யன்பு பாவித்(து) அவரால்
சுகமுறுதல் நல்லோர் தொழில். 5
- நீதி வெண்பா
பொருளுரை:
நல்ல நாக்கானது பகைமையைச் சேர்த்தே தரும் முப்பத்ரெண்டு பற்களையும் துணையாகக் கொண்டே பலவகை சுவைகளையுடைய உணவை உண்ணுந் தன்மை போல,
நற்குணமுடையோர், செய்யும் செயலால் மிகுந்த துன்பத்தைச் சேர்த்தளிக்கும் பகைவரிடத்திலும் உண்மையான அன்பு கொண்டு அவர்களால் இன்பம் அடைவார்கள் என்பதாகும்..
கருத்து:
நல்லோர்கள் பகைவர்களிடத்தும் அன்பு பாராட்டி அவர்களிடம் நன்மையடைந்து சுகம் பெறுவார்கள்.
குறள் வெண்பா
தந்தைக் குமகனாற்று நன்றி அவர்நினைவே
முந்தி இருப்பச் செயல்
முக்திக் கவனே முகுந்தன் மாலவன்
பக்தியால் தொழுவார்க்கு பரமன்
வல்வினைப் போக்கி பேரானந்தம் அருள்வானே
( மாச்சீர், விளச்சீர் மற்றும் காய்ச்சீர்
கொண்டு.....ஆசிரியத்தளைகள் பெற்று .....ஈற்றயலடி முச்சீரால் .....ஈற்றடி ஏகாரத்தில் முடிவு)
குறள் வெண்செந்துறை
ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
நலனுடை மையின் நாணுச் சிறந்தன்று. 6
சிறந்த பத்து, முதுமொழிக் காஞ்சி
பொருளுரை:
நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால், அடாத காரியங்களைச் செய்யக் கூசுந்தன்மை ஒருவன் அழகுடையவனாதலைக் காட்டிலும் மிக்க சிறப்புடையது.
'அணியன்றோ நாணுடைமை சான்றோர்க்கு' (1014 நாண் உடைமை)
ஆதலின், 'நலம் வேண்டின் நாணுடைமை வேண்டும் (960 குடிமை), 'நலஞ்சுடும் நாணின்மை நின்றக்கடை’ (1019 நாண் உடைமை)' ஆதலால் நாணுடைமை நலனுடைமையின் சிறந்ததாம்.
நாணாவது செய்யத் தகாதனவற்றிற்கு உள்ளம் ஒடுங்குதல்.
இரவோ(டு) இரவாக வாழ்க்கையில் வெற்றி
வருவதில்லை; ஆர்வம் குறிக்கோள் - இரண்டும்
இணைந்து தொடர்முயற்சி மேற்கொண்டால் எங்கும்
துணையாய் வரும்ஒளிம யம்! 1
இரவோ(டு) இரவாக வாழ்க்கையில் வெற்றி
வருவதில்லை; ஆர்வம் குறிக்கோள் - இரண்டும்
இணைந்து தொடர்முயற்சி மேற்கொண்டால் எங்கும்
துணையாய் வருமே ஒளி! 2
தன்னம்பிக் கைவெற்றிக் கேசாவி யாய்ஆகும்
என்றும் அவசர எண்ணமும் - நன்றாம்
முடிவினை எட்டாதே; உன்குறையை நேர்செய்
கிடைக்குமே வெற்றியப்போ து! 3
தன்னம்பிக் கைவெற்றிக் கேதிறவு கோலாகும்
என்றும் அவசர எண்ணமும் - நன்றாம்
முடிவினை எட்டாதே; உன்குறையை நேர்செய்
கிடைக்குமே வெற்றியப்போ து! 3a
பரிசு பெற்ற நேரிசை வெண்பா
பண்புடையர் ஆதல்; பழகுசொல் பேசுதல்;
நண்பரைப் பேணுதல்; நன்னயமாய் – புண்ணன்ன
வஞ்சகத்தை வேரறுத்து மாண்புறவே நல்லவற்றை
நெஞ்சில் நிறுத்துதம்பி நீ! – எஸ்.பி.இராமையா, புதுப்பாக்கம்
பரிசு பெற்ற நேரிசை வெண்பா
தஞ்ச மெனஉன் தயவுக்காய்க் காத்திருப்பர்;
கொஞ்சிக் குலமென்று கூவிடுவார்; - நஞ்சுடனே,
வஞ்சனையும் சூதும் வழியாகக் கொண்டிருப்பார்;
நெஞ்சில் நிறுத்துதம்பி நீ! – நம்பிக்கை நாகராசன்
நான் அனுப்பிய:
ஒரு விகற்ப நேரிசை வெண்பா
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை செய்வார் இருப்பரே – தஞ்சமென
கொஞ்சமும் அன்னாரை கொள்ளலா காதென்றே
நெஞ்சில் நிறுத்துதம்
நானும், என் மனைவியும் சென்ற 15.08.2016 ல் என் இளைய மகன் குடும்பத்துடன் சென்னை சென்று வேளச்சேரியில் இரண்டு வாரங்கள் தங்கியிருந்தோம். அப்பொழுது 25.08.2016 அன்று ஆவடி vel tech பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும், மாணவர் விடுதியில் உள்ள என் பேரனைப் பார்க்கச் செல்வதற்காக SRP tools பஸ் நிறுத்தம் சென்றேன். நானும், என் மகனும் திருவான்மியூர் ரயில் நிலையம் செல்ல ஷேர் ஆட்டோவில் ஏறினோம்.
என் மகன் ஓட்டுநருடன் முன் இருக்கையில் அமர்ந்தார். நான் ஓட்டுநர்க்குப் பின்னால் உள்ள கீழ் இருக்கையில் அமர்ந்தேன். மேல் இருக்கையில் (IT நிறுவனத்தில் பணி புரிபவர்கள் என்று நினைக்கிறேன்) இள வயதுப் பெண்கள் இருவர்