தம்பு - சுயவிவரம்
(Profile)


தமிழ் பித்தன்
இயற்பெயர் | : தம்பு |
இடம் | : ஐக்கிய இராச்சியம். |
பிறந்த தேதி | : 17-Jul-1979 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 11-Jan-2012 |
பார்த்தவர்கள் | : 20890 |
புள்ளி | : 2887 |
வணக்கம் ,
பிறந்த மண்ணில் சுவாசிக்க முடியாமல் அந்நிய தேசத்தில் அகதியென அடைக்கலம் கொண்ட சாதாரண ஒருவன் நான்.உயிரை கையில் பிடித்தபடி அலைந்த ஒரு சில சகாப்த கால வாழ்வில் சிறு புன்னகையை தந்தவை எழுத்தில் நான் எழுதியதை கவியென வாழ்த்திய உள்ளங்களின் உள்ளம்தான்.நன்றி. ஒருசில புத்தகங்களின் ஈர்ப்பினால் எழுத்தும் உயிர் மூச்சே என்றுணர்ந்து என்னால் என்ன எழுத முடியுமோ அதை இங்கே எழுதிட இந்த தளத்தில் விழுந்து பத்தாண்டுகள் ஆகிறது.ஆரம்பத்தில் எழுதிட ஏதோ கொஞ்சம் நேரம் கிடைத்தது.கால ஓட்டத்தில் கண்மூட நேரமின்றி பணிக்குள் திணித்துக்கொண்ட காரணத்தால் வலிகளையும் வரிகளையும் இங்கே விசிறிவிட சிறு இடைவெளியும் என் கண்முன்னே இல்லை.வழிகாட்டியாய் வந்துபோனவர்கள் கூட வலிதந்து என்னை திசைமாற்றி போனதும் உண்டு.இதுவல்ல வாழ்வு என்று சொல்லி கரம்கொடுத்த கனிவான உள்ளங்களும் என் கண்ணில் உண்டு.எதுவானாலும் பதில் சொல்ல என் கண்ணில் நீரும் உண்டு.அழுவது ஆணுக்கு அழகில்லை என்று சொல்லி அமிழ்ந்து போக நான் ஒன்றும் பாறாங்கல் அல்ல. பாசமும் பரிவும் ஒன்றுசேர பிரசவிக்கப்பட்ட சிறு குழந்தை.சோகம்,கோபம்,காதல்,நடப்பு,வேடிக்கைப் பேச்சு என்று எல்லாம் எனக்குள்ளும் உண்டு.இங்கே பதிவிடும் சிறு கிறுக்கல்கள் உங்கள் மனதில் ஒரு வரியேனும் பிடிக்காமல் விட்டுவிடாது.அப்படியே விட்டுவிடாமல் என் பதிவின் கீழே ஏதாவது பதிவிட்டுப் போங்கள்.rnஆங்கில தேசத்தில் ஆங்கிலம் வளர்க்கும் முயற்சி அல்ல இது.என் பிறந்த தேசத்தின் தமிழ் மொழியின் rnவாசம் வாங்கி என் உயிருக்கு {வி}சுவாசம் கொடுக்கும் ஒரு சிறு விருப்பம் மட்டுமே.rnrnநன்றி.rnநட்புடன் rnrnதம்பு.rn
அகிலத்தின் அளவில்
உன் அன்பு
அதைவிட அதிகம்தான்….!!
என்னைச்
சுமந்த
உயிரே…..உன்னையும்
உன்
பாசத்தையும்
உயிருள்ளவரை
சுமப்பேன்…..!!
தலை மகன்
ஆனாலும்
தகாதவன்
ஆனாலும்
உன் அன்பு
தரம் குறைவதில்லை…..!!
பசி
அறியும் பக்குவம்
நோய்
தீர்க்கும் மருத்துவம்
எல்லாமே
உனக்குள்….அறிந்து
வைத்தாய்
ஆதலால்
நீ….தாய்……!!
கண்ணுக்குள்ளே
காதல் தந்து......
நெஞ்சுக்குள்ளே சோகம்
வைத்து......
பெரும் வலியை
தரும்
பேரன்புதான்
இந்த காதல்......!!
இளமையின் இரவுகள்
இனிய
பௌர்ணமி போல
சுகமானது…..!!
தனிமையின்
இரவுகள் அமாவாசை
இருள் போல
கலவரமானது…..!!
காதல்
தரும் வசந்தம்
காலமெல்லாம்
சுகம் தரும்…..!
சொந்தம் கூட
தீண்டும்
அரவமாய்…..தோன்றும்
காதல்
கானல் ஆனால்…..!!
வாசல் தோறும்
நூறு ஆசை
தோன்றும்…..அன்றே
ஈசல் வாழ்வுபோல
சாவு
நிகழும்……!?!?
நினைத்து மகிழ
ஒரு
ஒருவாழ்க்கை…..
நீ தந்து
போனது……உன்
நினைவுகளுடனே
தான்
போகிறது…..!!!
அம்மா !
ஆயிரம் ஆயிரம்
விட்டில் பூச்சியாலும்
அணைக்க முடியாத
அன்பின் மெழுகுவர்த்தி நீ !
காலை காப்பியில்
தொடங்கி
இரவு போர்வை போர்த்துவது வரை
எத்தனை எத்தனை
பணிவிடைகள்
செய்வாய் நீ !
நான் காலையில்
கிளம்பும் போது
உன் பரபரப்பு
பம்பரத்தை போட்டிக்கு அழைக்கும் !
வேண்ணும்மா...............
சொன்னால் போதும் ,
எனக்காய்
பாற்கடலை கூட
பரந்தாமனிடம் கடனாய் கேட்பாய்!
பசிகிதுமா ......,
சொல்லி முடிப்பதற்குள்
பல வகைகளை
பத்து நிமிஷத்தில்
பரிமறுவாய்!
காய்சல் வந்து
நான் படுத்தால்..............!
கஞ்சி கூட உப்பு கரிக்கும்
உன் கண்ணீர் பட்டு !
அம்மா ...,
கடந்து போனது
காலங்கள்
தான்….. உன்
நினைவுகள் அல்ல…..
அழியாத
நினைவுகளால்…..
வலியால்
வாழுகிறேன்…..
நீ
தந்த
அன்பு….நீங்கிப்போக
முடியாம
ஏங்கித்
தவிக்குதடி…..!
வார்த்தைகள்
வந்து
வரியாக்கும்
நேரம் கூட
வாழ்க்கையின்
வேகத்தில்
சருகாகிப்
போகுதடி…..!!
அழகு
விழிகள்
காணாமல்
அழுத என்
விழிகள்….ஆறுதல்
வரிகள்
தேடுதடி…..!!
ஊனத்தை கிண்டல்,
செய்யும்,
ஈன பிறவிகளே,
கடவுளும் ,அவர்களும்,
ஒன்றென்று தெரியுமா ?
எதுவும் செய்ய,
முடியாத,
கடவுளை,
எல்லாம் செய்யுமென்று,
நம்பி,
முடியவில்லை என்றாலும்,
முயற்சி செய்யும்,
அவர்களை,
இழிவுபடுத்தும் கூட்டமே,
நீ அழிந்து போ மொத்தமே,
தூணாய் நாம்,
இருந்தாலே,
அவர்கள் அதில்,
கோபுரமே கட்டுவார்கள்,
நாம்,
துரும்பாக கூட,
இருப்பதில்லை,
அவர்களை வசைபாட,
படைக்கப்பட்ட,
பழமொழி எத்தனை?
அவர்கள் புகழ் பாட,
வந்ததா நமக்கு,
சிந்தனை,
கை இல்லாதவனிடம்,
ஓவியம் வரைய,
கால் போதும் என,
சொல்லி பார்,
அவன் விமானத்தையே,
ஓட்ட முயற்சிப்பான்,
உன்னால் முடியாது,
என சொல்ல,
ஒர
பூட்டிய
நினைவுகளை
தட்டித்
திறந்தது
தென்றல்....
நினைவுகளால்
ஒரு
நீங்காத
ஊர்வலம்.....
தூங்காத
விழிகளோடு
நகரும்
நிமிஷங்கள்......
மழலை
சிரிப்பு
போல.....மனம்
மகிழ்ந்தேன்
அன்று.....மலைபோல
சோகம்
வந்து
மனம்
சுடுதே
இன்று.....
முத்தெடுக்கப்
போன
என்னை.....மூழ்கடிச்சு
தத்தெடுத்த
என்னுயிரே.....
என்னுயிர்
எடுப்பதேனடி.....???
காதல்
என்பது
கல்வெட்டில்
உயில்....
அதை
கல்லெறிந்து
வதைப்பதேனடி.....!???
உதடுகள்
சொல்லும்
உன்
நாமம்
தான்
என்றென்றும்
என்
வேதம்......!!
பேசினால்
தீரும்
என்
பெரும்வலி....
இல்லையேல்
விழியில்
நீரும்
வேதனையும்
என்றே
என் காலங்க
ஏதோ ஒரு
மூலையில் வாழ்கிறேன்
கண்முன்னே
உலகை
ரசிக்காமல்.....
தேடும் கண்கள்
தவிக்க
நீ..... வாழும்
தேசம் தெரியாமல்
என்
வாழும் காலம்
சோகமாய் மாறியதே.....!!
தேடித்
தேடி
தேய்பிறையாய்
தேய்கிறேன்......நம்
காதல்
நினைவுகளோடு
மெல்லச்
சாய்கிறேன்......
உன்நினைவில்.....!!
காதல்
ஏதோ
சொல்லுதடி
காரணம்
புரியாமல்
கொல்லுதடி.....
என் ஜீவன்
உன்னை
மறக்காது
மரணிக்கும்
வரை.....!!
தெய்வங்களும்
வஞ்சித்தே
போனது.....
வாழ்க்கையில்
சோகங்கள்
நம்மை
மிஞ்சுதடி....
என்னுயிரும்
சாவுதனை தொட்டுத்
தொட்டு
திரும்புதடி.....
உன்னோடு
வாழவே
உயிரும்
விரும்புதடி....!!
துன்பங்களை
மட்ட
பீட்டா ஆதரவாளர் ராதாராஜன் மீது நடவடிக்கை எடுக்கும் வரை பகிருங்கள்
ராதாராஜன் கூறியிருக்கும் வார்த்தை தமிழர்களையும் தாண்டி ஒட்டு மொத்த இந்தியர்களையும் களங்கப்படுத்தும் விதமாக உள்ளது
இன்று மெரினாவில் கூடும் அன்பும் பண்பும் நாட்டுப்பற்றும் தேசப்பற்றும் மிக்க ஒரு எழுச்சி சக்தியை இவ்வாறு கூறும் இவர்
நாளை தன் அமைப்பிற்கு ( பீட்டா ) எற்படும் சிக்கலுக்காக நியாயம் கேட்டு அந்த அமைப்பை சார்ந்தவர்கள் ஒன்றுக்கு கூடி ஆர்ப்பாட்டம் செய்தால் அப்போது அவர்களும் இத்தகைய சொல்லிற்கு ஏற்றவர்களா இருப்பார்கள் என்று ராதா அவர்களே கூறுவது போல் உள்ளது
ஆகையால் ஒட்டு மொத்த இந்தியர்களை இழிவுப் படுத்தி பேசியதற
மனமே மனமே
இந்த
மௌனமேன்
உனக்கு....?
உன் மௌனங்கள்
கலைத்திடு.....என்
உயிரில்
சந்தோசம்
கலந்திடு......!
பார்வையால்
தாக்கிப்
போகிறாய்.....
வாழும் காலத்தை
வீணாக்கிப்
போகிறாய்.....
காலங்கள்
கனியுமென்று
நம் காலங்கள்
தொலைகிறதே......!
உன்னில் காமம்
வைச்சு
சுற்றவில்லை....
சாதி மதம்
பார்க்கவில்லை.....
அந்தஸ்து
அந்தப் பக்கம்
போகவே
இல்லை.....சாதாரண
வாழ்க்கையை
சந்தோஷமாய்
உன்னோடு
வாழ......உன்
வாழ்க்கையை
கேட்கிறேன்......
காதலுடன்......!
உன்னோடு
மலர்ந்த
காதல்......
உன்னைச்
சேர்ந்தால்
மட்டுமே
வாசம்
வீசும்.....இல்லையேல்
கருகி விழுந்து
மரத்தடியில்
சருகாகும்.
என் உலகம்
உன் கருவில்....நலம்
தானே
என்னவளே.....?
இவன் மனமும்
பிள்ளை மனம்.....பிள்ளையின்
நினைவுகளில்
மூழ்கி......!!
இப்போதே
ஊஞ்சல்
கட்டி
ஆடுதடி.....கோடி
சந்தோசம்
கூடுதடி......!!
மழலைச்
சிரிப்புக்கள்
மனசில்
இப்போதே
இடம்
கேட்டு....அடம்
பிடிக்குதடி......!!
மருத்துவங்கள்
என்ன
செய்தாலும்....மனம்
நிறைந்த....மகிழ்ச்சி
மனம்
திறந்த
பேச்சில் உண்டாகுமே.....!!
அழகான வாழ்க்கை ஆனந்தமாய் - போட்டி கவிதையில் என் கவிதைக்கு இரண்டாம் பரிசு வந்துள்ளது.
o என் கவிதையை வாசித்து வாழ்த்திய, கருத்து வழங்கிய எல்லா தள தோழமைகளுக்கும் என் உளமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
o வாய்ப்பளித்த தம்பு தோழருக்கும், போட்டி நடத்திய அனைத்து தள தோழமைகளுக்கும், எழுத்து குழுமத்துக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்பு:
எனது பரிசு தொகையை தமிழ் படிக்கும் ஏழை குழந்தைகளுக்கு / தளத்தின் சேவைகளுக்கு அளித்து விடுகிறேன். தயவு செய்து இந்த அன்பளிப்பை என (...)
நண்பர்கள் (271)

ஆரோ
விழுப்புரம்,(சென்னை)

அருணன் கண்ணன்
கிருஷ்ணகிரி

டாக்டர் நாகராணி மதனகோபால்
திருவண்ணாமலை
