Palani Rajan - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  Palani Rajan
இடம்:  vellore
பிறந்த தேதி :  16-Dec-1946
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Sep-2017
பார்த்தவர்கள்:  13628
புள்ளி:  3114

என்னைப் பற்றி...

நான் ஓய்வு பெற்ற மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர் (உயர் அதிகாரி.) சித்தர் பாடல்களை சுமார் நாற்பதாண்டுகளாகப் படித்து வருகிறேன். கவிதை ஓவியம் முதலியவற்றில் சிறு வயது முதலே ஆர்வமுண்டு.எனக்கு யாப்பிலக்கணம் 10 ம் வகுப்பிலேயே கற்றுத்தரப்பட்டது. புகுமுகவகுப்பில் எங்கள் தமிழ் ஆசான் தமிழ் படிக்க ஊக்குவித்தார்.நான் இளங்கலை பட்டப்படிப்பில் சரித்திரத்தை பாடமாக ஆங்கிலத்தில் படித்தேன். பட்டப்படிப்பில் சரியானதமிழ் போதனை இல்லை, இருப்பினும் கல்லூரி ஆண்டு விழா மலர்களில் வருடம் தோறும் ஒரு தமிழ்க் கவிதை ஒரு ஆங்கிலக்கட்டுரை ஒரு ஓவியம் என சமர்ப்பிபது ஏன் வாடிக்கை. எங்குசென்றாள் என்ற கவிதை நான் இளங்கலை பயிலுங்கால் எழுதியதாகும்..அதை அப்போது பிரசுரிக்க முடியாத காரணத்தால் இங்கு எழுத நேர்ந்தது.. எனது ஆங்கில ஆசான் தமிழில் பி ஓ எல் பட்டம் வாங்கியவர் ஆங்கிலமும் நன்றாய் போதிப்பார். ஆக ஆங்கிலமும் நான் நன்றாய்க் கற்றேன்.rnஎன்னுடைய படைப்புகள்rn1. ஆங்கிலத்தில்அமுத rnகலசம் மற்றும் ௩ சித்தர்கள் யார்ர் ? 3.கருகிய செம்மலர் தமிழ்rnமற்றும் ஆங்கிலம்rn5. தமிழ் காக்கப் புறப்படுrn6. திருவள்ளுவர் சைவமே

என் படைப்புகள்
Palani Rajan செய்திகள்
Palani Rajan - Palani Rajan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Aug-2023 2:19 pm

கலிவிருத்தம்


வெய்யன் விரிபத்ம வெண்பனி நீக்கழகு
பொய்கை மொட்டவிழ புண்டரி அலர்வேளை
மொய்க்கு தேன்வண்டு முண்டகஞ் சூழ்ந்திடும்
செய்ய வள்மேனி சிரஞ்சூட பேரழகே

தாமரை தடாகத்தில் மொட்டுகள் மலரும் விடியர் காலை வேளையில்
செங்கதிரின் உதய வெப்பத்தினால் பனிவிலக தாமரை மலர்தல் அழ்காம்
மலர் மலர வாசம் எப்படியோ கண்டறிந்த தேன் வண்டுகள் சூழ்ந்ததே
அப்படி அழகாக மலர்ந்த தாமரையை செய்யவள் லட்சுமி திருமேனியிலும்
சிரசிலும் சூட்டிட பேரழகாகுமாம்

மேலும்

டாக்டர் பாவலர் பாமணி அவர்களுக்கு வணக்கம் .. நன்றி ஐயா 29-Aug-2023 6:39 pm
கலிவிருத்தம் நன்று ஐயா! 29-Aug-2023 2:51 pm
Palani Rajan - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Aug-2023 2:19 pm

கலிவிருத்தம்


வெய்யன் விரிபத்ம வெண்பனி நீக்கழகு
பொய்கை மொட்டவிழ புண்டரி அலர்வேளை
மொய்க்கு தேன்வண்டு முண்டகஞ் சூழ்ந்திடும்
செய்ய வள்மேனி சிரஞ்சூட பேரழகே

தாமரை தடாகத்தில் மொட்டுகள் மலரும் விடியர் காலை வேளையில்
செங்கதிரின் உதய வெப்பத்தினால் பனிவிலக தாமரை மலர்தல் அழ்காம்
மலர் மலர வாசம் எப்படியோ கண்டறிந்த தேன் வண்டுகள் சூழ்ந்ததே
அப்படி அழகாக மலர்ந்த தாமரையை செய்யவள் லட்சுமி திருமேனியிலும்
சிரசிலும் சூட்டிட பேரழகாகுமாம்

மேலும்

டாக்டர் பாவலர் பாமணி அவர்களுக்கு வணக்கம் .. நன்றி ஐயா 29-Aug-2023 6:39 pm
கலிவிருத்தம் நன்று ஐயா! 29-Aug-2023 2:51 pm
Palani Rajan - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Aug-2023 7:02 am

குறள் வெண்பா

உள்ளத்தில் நல்லநின் உள்ளம் உறங்கா
கொடுக்கும் தொகுத்து கொடு


நல்ல உள்ளங்கள் வாழ வாழ்தும் ஈசனே அல்லாவே கர்த்தாவே

மேலும்

Palani Rajan - பழனி குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Aug-2023 6:34 am

தொடர் ஓட்டத்தில்
ஒரு இடையூறு !
நடக்கையில்
ஓர் சறுக்கல் !
விழவில்லை
அடியேன்
வீழவும் இல்லை !
வழக்கமான ஒன்று
உடல் நலத்தில் ஊறு !

நிலையாய் உழல்கிறது
மனதில் நாளும் எழுத !
வரிசையில் நிற்கிறது
வார்த்தைகள் வரிகள்
கவிதை வடிக்க !
சொற்கள் அணிவகுப்பு
சிந்திக்க வைக்கிறது !

இலக்கியம் இல்லை
இலக்கணம் இல்லை
என் கவிதைகளில் !
நோக்கம் ஒன்று
நெஞ்சில் என்றும் !
வாசிப்பவர் புரிதலே !

கருத்துக்கள்
வேறுபடலாம்
என் உள்ளத்தின்
எதிரொலியே
என் கவிதைகள் !

தேடும் உள்ளங்களே
எனது ஓட்டம்
தொடருமென
நம்பிக்கையுடன் ,

பழனி குமார்

மேலும்

உங்கள் அன்பு என்னை மகிழ செய்தது. நன்றி . 05-Sep-2023 4:35 pm
தங்களுடைய ஆசியும் வாழ்த்தும் எனக்கு மிகுந்த ஊக்கம் அளித்தது . நன்றி 05-Sep-2023 4:33 pm
மிக்க நன்றி 05-Sep-2023 4:32 pm
நன்று 05-Sep-2023 4:17 pm
Palani Rajan - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Aug-2023 6:48 am

ஆசிரியத் தாழிசை

விடுதலை பெற்றபின் வீணர் அரசில்
விடுதலை பெறாசிறை வீட்டிலேயேக் காவல்
மடுபொன் பதுக்கிய மந்திரிமார்க் குத்தோழி



கோனுடை செல்வம் கொடுக்கவாம் நாட்டிற்கு
கோனிகொள் மந்திரியை கொல்

...

மேலும்

Palani Rajan - கௌதமன் நீல்ராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Aug-2023 3:56 pm

கார்குழலி கண்ணசைவில் கவித்துவம் மறந்தேனோ!, இன்று
போர்தொழில் புரிந்திடவே புதுமகனாய்ப் பிறந்தேனோ...!

பெண்ணல்ல அவளொரு பெருங்கொடையாள் எமதகத்தே!, சடுதியில்
மண்ணெல்லாம் பொன்னாக்கும் மதியழகே பெரிதாமோ...!

சிற்றிடையை வட்டமிடும் சிறுவண்டாய் ஆனேனே!, என்று
பற்றிடுவாள் எம்மிடத்தே பஞ்சமுக தவமுடைத்து...?

அத்திமக் காலத்தில் ஆளாகி நின்றவளாய்!, அவள்
அதரங்கள் தொடுத்தனவே அதனடுத்த பொன்மொழிகள்...!

தனையாளும் சீமாட்டி எமையாள வந்தாளோ!, நான்
முனைப்போடு வடிப்பதற்கே இமையிரண்டால் கண்டாளோ...!

வெடித்தோடும் செங்குருதி வியர்வையாய் நனைத்திடவே!, ஒருகணம்
இடியன்றோ முழங்கியது இயல்பல்ல காதல்நிலை...!

#காதல்_கொண்டேன்

மேலும்

நல்ல வளமுள்ள கவிதைகள்.. நான். அவன் போன்ற ஓரசை சொற்களை களைய மரபு கேட்கிறது எந்தவொரு கடவுளுக்கும் படிஅமர்ந்து மடியேந்தி வணங்குபவன் அல்ல... எந்தவொரு அரசியல்வாதிக்கும் சுயம்மறந்து அறம்துறந்து கொடிபிடிப்பவன் அல்ல... எந்தவொரு நடிகனுக்கும் கைதட்டி விசிலடித்து தலைவன் என போற்றுபவன் அல்ல... இதை மற்றவர்க்கு தெரிவித்து என்ன ஆகப் போவது... இருப்பதை சொன்னால் அது செய்தி 28-Aug-2023 8:01 am
Palani Rajan - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Aug-2023 7:42 am

நேரிசை வெண்பா


விடுதலையே வேண்டான் விடுதலை பேப்பர்
விடுத்த பெரியார்தான் வேண்டும் -- கொடுமை
விடுதலைபே சாப்பேசி வேடமிட்ட அண்ணா
படுபாவி யாட்சிவந்தான் பார்

காங்கிரஸ் பணம் கையாடல் செய்யத் துரத்தப்பட்ட பெரியார்
போக்கிடமின்றி PTR பழனிவேல் தியாக ராஜன் ஆரம்பித்த நீதி
கட்சி சேர்ந்தார். அங்கிருந்த பார்ப்பனர் பெரியாரின் கையாடல்
பற்றி கிண்டல் செய்ய நீதிக் கட்சி விலகினார்.. அண்ணா சொன்ன
பொய்த் திராவிடக் கட்சி ஆரம்பித்தார். காங்கிரசையும் காந்தி பற்றியும்
பணக்காரர் களைக் கூட்டி கிண்டல் செய்துவந்தார். சுதந்திரம் வந்ததும்
அடிக்கடி கூட்டம் போட்டு காங்கிரசை கிண்டல் பேசி யாரையும் மரியாதை
யின்றி அவன் இவன் சென்ற

மேலும்

Palani Rajan - Palani Rajan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Aug-2023 1:02 pm

தித்திக்க வந்தாள் கனவில்

பஃறொடை வெண்பா

தினமும் கனவிலே தித்திக்க வந்தாள்
தனலில் எனையும் முனகவிடுத் தாளே
மனமும் கனக்க அனத்தும் சினைமா
வெனநான் அலற இனமே வினவும்
எனையும் தினமும் எதுகை இனமே
பகருவேன் பஃறொடைவெண் பா




,......,

மேலும்

இணை எதுகை பொழிப்பு+ கூழை எதுகை முற்று எதுகை கிழக்கெதுவாய் மேற்கேதுவாய் எதுகைகள் மொத்தமும் உள்ளடக்கிய வெண்பா 27-Aug-2023 10:34 am
Palani Rajan - கவிபாரதீ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Aug-2023 2:18 pm

கார் மேகமே கருங்குழலாய்
சூழகன்னி யவள்மனம் கறுக்க
சோகத்தில் வீற்று இருந்தாள் விண்வெளியில்....

கவிபாரதீ ✍️

மேலும்

என் கோரிக்கையை மதித்து உடன் பதில் கூறியதற்கு மிக்க நன்றி. கூகுளில் தேடி நீங்கள் கூறிய உரையை பதிவிறக்கம் செய்து விட்டேன் ஐயா. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் ஐயா 27-Aug-2023 11:34 am
கவி பாரதி அவர்களுக்கு வணக்கம். உங்களுடைய ஆர்வம் மிகவும் பாராட்டுக்குரியது. நீங்கள் எழுதுவதை எழுதுங்கள். இடையியில் நல்ல யாப்பிலக்கணக் காரிகை நூல் குமாரசாமி புலவரின் உரையை வாங்கி கொஞ்சம் கொஞ்சமாக படியுங்கள். காட்டாயம் உங்கள் முயற்சிக்குக் கைமேல் பலன் கிடைக்கும். உங்களுக்கு வேண்டிய சந்தேகத்தை எழுத்துத் தளத்தில் கேட்க யாரும் பதில் சொல்வார்கள். நான் உங்களின் கேள்வியை பார்க்க நானே உங்களுக்கு பதிலை சொல்லி தெளிவு செய்கிறேன். உங்கள் ஆர்வத்திற்கு மனமுவந்த பாராட்டுக்கள். 27-Aug-2023 10:26 am
ஐயா தாங்கள் நான் எழுதியதை படித்ததற்கு என் மனமார்ந்த நன்றி 🙏. மேலும் எனக்கு குருவாக இருந்து கற்பிக்கும் உங்கள் பரந்த மனதிற்கு என் மனம் திறந்த நன்றி பல. இலக்கணம் எனக்கு பரிச்சயம் இல்லை. முழுவதுமாக கற்றுக் கொள்ள வேண்டும் என்று வெகு ஆசை அத்துடன் நேரம் பற்றாக்குறையும் குடும்பத்தலைவி ஆதலால் கடமையும் முடித்து எஞ்சிய நேரமே எனக்கு சொந்தமானவை. உங்கள் கவிதைகள் வாசித்து இருக்கின்றேன் சில புரியும் பல புரிந்து கொள்ள முடிவதில்லை. அதிகம் படிக்கும் வாய்ப்பு அமையவில்லை. பன்னிரெண்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்து உள்ளேன் அதுவும் அந்தமானில் அங்கு முக்கிய பாடம் ஹிந்தி. தமிழ் ஒரு வகுப்பு மட்டுமே நடக்கும் தேர்ந்த ஆசிரியர்களும் கிடையாது. முறையாக இலக்கணம் பயில ஆசை எதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று தாங்கள் வழி காட்டுவீர்களா ஐயா? 26-Aug-2023 9:12 pm
வூல அல்ல போல 26-Aug-2023 11:44 am
Palani Rajan - Palani Rajan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Aug-2023 10:26 am

கலி விருத்தம்


ஒப்புக் கொண்டவர் ஒழுகார் உடன்படிக்கை
தப்பென் றாயினும் தப்பாது மீறுவர்
ஒப்பந் தம்நிற்கான் மோதி அழிவன்பார்
செப்பம் பொய்யென செய்துமடி அன்றுமே

செப்பம் = நடுநிலை

சமாதான உடன்படிக்கை எல்லாம் பொய்யே, பின்பற்றான்.. ஆகவே
வெற்றி தோல்வி இரண்டினில் ஒன்றை உடனேப் பார்த்துவிடு


.......

மேலும்

Palani Rajan - Palani Rajan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Aug-2023 6:51 pm

ஆசிரியப்பாக்கள்

கிறுக்க மீண்டும் மீண்டும் அதையே
கிறுக்கவும் அரைத்த மாவென் றேன்யான்
அரைத்த மாவை மூடன் மீண்டும்
அரைப்பன் ஆதலின் விடுமே என்றேன்
விட்டா னில்லை விகட வீணர்
மந்தனாய் செப்புநாய் மலையாம் கனியும்
அந்த பூநறும் பூநிழல் நறுநிழலும்
மீறி ஐந்து ஆரசை
கீறினார் எழுத்தில் கிடைக்கும் தேடே


கவியென்பார் கலியிடை யிலுங்கனி புகுத்தும்
பூநறும் பூநிழல் நறுநிழல் அனைத்தும்
மீறி ஐந்து ஆரசை எழுதும்
சுட்டிக் காட்ட குக்கல் குரைக்கும்
கழுதையாய் கடிக்கும் மறைக்கும் பழிக்கும்
அழிக்கும் ஐய்ய கோவென
அழுமே அதைத்திருத் தலும்நம் கடனே

எழுத்தில் கலித்துறை கலிவிருத்ததில் இடையில் கனியும்
பூச்சீர் நறும் பூச்சீ

மேலும்

Palani Rajan - Palani Rajan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Aug-2023 1:13 am

குணநல மில்லாத கோணல் கிறுக்கல்
கணக்கிலா செய்தாரைக் கண்டி - குணத்தின்
பழக்கம் திருத்தா படியா நடிக்கும்
அழகில்லை என்றால் அழும்


.......

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (19)

பானுஜெகதீஷ்

பானுஜெகதீஷ்

கன்யாகுமரி
ஜவ்ஹர்

ஜவ்ஹர்

இலங்கை
THISAI SANKAR

THISAI SANKAR

திருநெல்வேலி
அன்புடன் மித்திரன்

அன்புடன் மித்திரன்

திருநெல்வேலி, தமிழ்நாடு
user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி

இவர் பின்தொடர்பவர்கள் (22)

இவரை பின்தொடர்பவர்கள் (28)

சூர்யா மா

சூர்யா மா

பரங்கிப்பேட்டை,சிங்கை

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே