மெய்யன் நடராஜ் - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  மெய்யன் நடராஜ்
இடம்:  punduloya srilanka
பிறந்த தேதி :  18-Aug-1963
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Sep-2012
பார்த்தவர்கள்:  9723
புள்ளி:  5701

என்னைப் பற்றி...

எமது இலங்கை வானொலி பத்திரிகைகள் போன்றவற்றிற்கு நீண்ட காலமாக மெய்யன் நடராஜ் எனும் என் சொந்த பெயரிலேயே கவிதை சிறுகதைகள் எழுதிவருகிறேன் .சமீப காலமாகத்தான் இணைய சஞ்சிகைகளுக்கும் எழுத ஆரம்பித்துள்ளேன். நாடு கடந்து வாழ்ந்துகொண்டு இருந்தாலும் எழுவதை தொடர்ந்து கொண்டிருக்கிறேன். அண்மையில் படிக்கட்டு என்ற எனது முதலாவது கவிதைத்தொகுப்பை வெளியிட்டுள்ளேன்

என் படைப்புகள்
மெய்யன் நடராஜ் செய்திகள்
மெய்யன் நடராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Nov-2023 1:33 am

நாலுகுண மோடுடைய நாணலிடை தானுடைய
நீலவிழி யோடமுத நீரருவி யேயுடைய
கோலமயி லாளினிரு கூனலுள தானபிறை நுதலாமே
*
பாலுமத னோடுபழ பாகுமென தேனருவி
யாளுடைய பூவிதழி லோடிவர வேயழகு
மேலுமொரு காவியமு மேயுருவு மாகுமது புதிதாமே
*
போலியொடு பூவிதழி னூடவளு மேசிறிது
கேலியென வேநகையை கீழுதடு மேலுதடி
னாலிழைய வேவிடுவ தோரெழிழை யேதருவ ததனாலே
*
வேலியென வேயவளை வீரமொடு காவலுற
தாலியிட வேயருமை தாரமென வாகுவதை
ஆழியலை யாகுமன வாசையது பேசுவது புரியாதே
*
மாலையொடு சேருகிற நாருமென நாறிவிட
லீலையுறு வேலைவர வேளைவர வேதினமு
மாலைமுத லாகிவிடி காலைவர லாகுமெனு நிலையோடே
*
மாலையிடு நாயகனை மாரதனி லூடலொடு
சேலைமயி

மேலும்

மெய்யன் நடராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Nov-2023 12:50 am

***************************
இதயத்தில் பூக்கும் இளவேனிற் பூவே
உதயத்தைக் காட்டும் உனக்கு (1)
*
உனக்காகப் பூத்து உளந்தனில் வாசம்
தினம்வீசு மாங்கிலைத் தீங்கு .(2)
*
தீங்கிலா வண்ணம் திசையெட்டும் காற்றலையில்
மூங்கிலாய்ப் பாடும் மகிழ்ந்து (3)
*
மகிழ்ந்திடு முன்னை மனம்வைத்துப் பூட்டும்
சகியொடு வாழ்வாய்ச் சகித்து (4)
*
சகிப்பதற் கில்லாச் சகியவள் தானும்
வகிக்கும் பதவியை வாழ்த்து .(5)
*
வாழ்த்துவ தாலே வசமாகும் பெண்குலம்
ஆழ்த்திடும் பேரின்பம் அன்பு .(6)
*
அன்பிலா பெண்மை அவனியி லில்லையாம்
இன்பமே பெண்ணின் இயல்பு (7)
*
இயல்பிற்கு மாறாய் இயக்கிட எண்ணின்
புயலாகும் பெண்மை புரி (8)
*

மேலும்

மெய்யன் நடராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Oct-2023 2:00 am

யுத்தம்
*******
ஆயுதம் விற்கும் அவசிய யுத்தத்தில்
மாயு முயிர்கள் மலிந்து
*
துப்பாக்கித் தூக்கித் துளையிடும் வன்மத்தில்
எப்பாக் கியம்கிட்டு மிங்கு
*
சமாதா னமுறவே சண்டையிடு வாரால்
அமாவாசை யன்றோ அடர்ந்து
*
எல்லா வுயிரும் இறந்தபின் னிவ்வையம்
நல்லா யிருமா நமக்கு
*
பச்சைக் குழந்தையின் பால்மேனி ரத்தத்திற்
கிச்சை யுறலோ இலக்கு
*
போரடித்தால் பொங்கப் புழுங்கல் அரிசிவரும்
போர்செய்யின் கண்ணில் புனல்
*
வன்முறையைக் கட்டவிழ்த்து வாழ்விழக்க வைக்கின்ற
தன்னல யுத்தம் தகாது
*
மரணம் விதைக்கும் மரபுச் சமரில்
உரமா யிடவோ உயிர்
*
மோதும் இருதரப்பின் முன்பகை மாறுமெனில்
போதும்

மேலும்

மெய்யன் நடராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Oct-2023 1:19 am

கட்டுகள்
*********
கட்டுகிறக் கட்டெலாம் கட்டன்று மஞ்சலிட்டுக்
கட்டுமொரு கட்டொன்றே கட்டு
*
இக்கட்டுக் கென்றே இடுங்கட்டு கால்கட்டு
அக்கட்'டில் வாழ்க்கை' அறம்
*
கட்டுமொரு கட்டுதனில் கட்டுண்டு விட்டார்க்கு
கட்டுதற் காயிரம் கட்டு
*
கூடுகட்டிச் சின்னக் குருவி இணைதல்போல்
வீடுகட்டிக் கொண்டில்வாழ் வீறு
*
ஒருகட்டுக் கட்டி உயர்வாதல் நன்று
இருகட்டென் றென்றும் இடர்
*
கடன்பட்டுக் கல்யாணங் கட்டுவ தென்று
உடன்பட்டுக் கொள்ளல் உதறு
*
கட்டுக்கட் டாய்தினம் கட்டிவைத் தாருயிர்
கட்டிவைக் காதிந்தக் காசு
*
கட்டுப் பணங்கட்டி கட்சிக் கொடிகட்டும்
திட்டம் வகுத்தார்க்கே தெம்பு
*

மேலும்

மெய்யன் நடராஜ் - மெய்யன் நடராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Oct-2023 1:08 am

காதல்
*******
பெற்றோர் பேச்சைக் கேட்காதல்
பிழையா சரியா பார்க்காதல்
கற்றோர் வழிநின் றொழுகாதல்
கற்கச் சொன்னால் பிடிக்காதல்
உற்றார் உறவை மதிக்காதல்
உயரும் எண்ணம் வளர்க்காதல்
முற்றும் திருந்த நினைக்காதல்
முடிவாய் எதையும் ஏற்காதல்
*
கூடா நண்பர் தவிர்க்காதல்
குடியும் புகையும் மறக்காதல்
ஆடா திருக்க ஆகாதல்
அவமா னத்தை துடைக்காதல்
காடாம் தாடி மழிக்காதல்
கவனக் குறைவை தடுக்காதல்
தேடாத் தீமை வெறுக்காதல்
திமிராய்த் திரிய மறுக்காதல்
*
நகத்தைக் கூட நறுக்காதல்
நாளைக் கென்று ஒதுக்காதல்
முகநூல் மூடி வைக்காதல்
முடியை அளவாய் குறைக்காதல்
அகந்தை தன்னை நீக்காதல்
அழுக்குத் த

மேலும்

மிக்க நன்றி, திரு. பழனி ராஜன்! உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. """மூன்றுபதின் மூன்றுமுறை காதல் காதல், முத்தாய்ப்பாய் ஒருமுறைதான் பாதல்!" - - - - சரிதான் என்று நம்புகிறேன் நண்பரே! அப்புறம், """மிகவும் நன்றாக ஒரு முத்துச் சரத்தைப்போலக் கோத்திருக்கிறீர்கள். அமைப்பும் இன்னோசையும் மிகவும் பொருத்தமாக இழைந்துள்ளன. ஈற்றடி முடியச் சற்றும் தொய்வில்லாமல் ஒரே குதியோட்ட நடையில் அமைத்துள்லமை மிகவும் சிறப்பானது""" - - - - இதுவும் கூடச் சரிதான் என்றும் நம்புகிறேன் நண்பரே! அப்புறம், திரு. மெய்யன் நடராஜ் அவர்களின் அறுசீர்க்கழிநெடிலடி ஆரிய விருத்தம் மீது நான் எழுதியது, """ மிகவும் நன்றாக ஒரு முத்துச் சரத்தைப்போலக் கோத்திருக்கிறீர்கள். அமைப்பும் இன்னோசையும் மிகவும் பொருத்தமாக இழைந்துள்ளன. ஈற்றடி முடியச் சற்றும் தொய்வில்லாமல் ஒரே குதியோட்ட நடையில் அமைத்துள்ளமை மிகவும் சிறப்பானது""" - - - என்று, பாராட்டித்தானே எழுதியிருக்கிறேன்? 27-Nov-2023 3:56 pm
நன்று ஐயா 06-Nov-2023 3:33 pm
நானே எண்ணவில்லை . நீங்கள் எண்ணிப்பார்த்திருக்கின்றீர்கள். நீங்கள் எண்ணிப்பார்த்ததை எண்ணிப் பார்க்க எண்ணற்ற மகிழ்ச்சி . மிக்க நன்றி ஐயா 06-Nov-2023 3:33 pm
நன்றி 06-Nov-2023 3:31 pm
மெய்யன் நடராஜ் - மெய்யன் நடராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Sep-2023 1:40 am

கனவின் இனிய நொடி
**************************
கனவு நதியிலொரு கவிதை படகுவர
மனமு மதிலமர மதியி ளொளிபரவ
தினமு மமுதமதை யருளு மினியவெளி திரிவோமே
*
வனமு மருகிலிலை வதன முருகிவிட
கனலு மதிகமிலை கரிய முகிலுமிலை
புனலி லலையுமிலை புதிய
திசையிலுல விடுவோமே
*
இனமு சனமுமென இடர விடவுமென
சினமொ டெவருமிலை சிறிய தவறுமிலை
தனமு பணமுமிலை தனிமை இனிமையென விரிவோமே
*
வினவ மொழியுமிலை விரக நரகமிலை
எனது முனதுமற இதய மிணையுநிலை
முனக லொலியுமிலை முதுமை இளமையிலை யறிவோமே
*
தினவு எதுவுமிலை திருட ருலவலிலை
தனது நிலையிலிரு தலைக ளகலவிலை
சனன மரணமிலை சதியு பதியுமென உறைவோமே
*
உனது விடுமுறையை எனது விழிய

மேலும்

மிக்க நன்றி 20-Sep-2023 2:04 am
ஐயா அவர்கட்கு காலை வணக்கம் . அருமையான சங்கீதத் தாளக் கட்டுக்கு உகந்த புனைவு. அருணகிரியார் திருப்புகழ் தன்னில் இது மாதிரி தாளக் கட்டு கண்டுளேன். நன்றி ஐயா வணக்கம் 18-Sep-2023 9:10 am
மெய்யன் நடராஜ் - மெய்யன் நடராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Sep-2023 2:27 am

உற்றுநோக்கல்
*****************
விண்ணுற்று நோக்குகையில் வெளிச்சத்தோ டிருளும்
வெண்மேகப் புத்தகத்தின் வேறு பக்கம்
கண்ணுற்று கொள்ளென்னும் கற்பனையி னூற்றுக்
கனவென்னும் பள்ளியாகிக் கற்பித்துப் போகும்
மண்ணுற்று நோக்குகையில் மனிதாபி மானம்
மனிதர்க்குள் இல்லையெனும் மந்திரத்தை ஓதும்
புண்பட்டுக் கொள்ளென்னும் புரியாதப் புதிரை
பொல்லாதார் செய்கைவழிப் போட்டுவிட்டு ஓடும்
*
பெண்ணுற்றுப் பார்த்துவிடின் பேரன்பாய் வீழும்
பீரங்கி நெஞ்சத்தைப் பெயர்த்தெடுத்துப் போடும்
பண்ணுற்றுப் பார்த்துவிடப் பலநூறு வண்ணம்
பரிசளிக்கும் சங்கதிகள் பதுங்கிநின்றி னிக்கும்
தண்ணுற்று நோக்குகையில் தாங்குகின்றப்

மேலும்

மிக்க நன்றி ஐயா 16-Sep-2023 1:26 am
தம்பி நடராஜருக்கு வணக்கம் "" ண் " எதுகையில் என்ன என்ன சொற்கள். மூன்று விருத்தங்களும் அருமை 15-Sep-2023 11:40 am
மெய்யன் நடராஜ் - மெய்யன் நடராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Sep-2023 1:47 am

ஆதாரங் காட்டி அநீதிக்காய் வாதாடி
சேதார மாக்குஞ் செயல்வீரர் - பாதாளம்
பாயும் பணத்திற்காய்ப் பந்தாடி னாலும்கண்
சாயுமோ நீதியும் சற்று

மேலும்

மிக்க நன்றி 15-Sep-2023 2:25 am
ஐயா அவர்கட்கு காலை வணக்கம் அருமையான பொருள் பதிந்த நேரிசை வெண்பா. நன்றி ஐயா வணக்கம். 14-Sep-2023 5:54 am
மெய்யன் நடராஜ் - Dr.V.K.Kanniappan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-May-2021 11:28 am

ஊன்றி எழுந்தே உயர்
நேரிசை வெண்பா

முன்னேறு மெண்ணம் முளைத்திடும் காலத்தில்
பின்தங்கி டாதே! பெரும்பயம் - உன்முன்னே
தோன்றி உடன்படா தோர்நிலைக் குட்படுத்தும்.
ஊன்றி எழுந்தே உயர். - மெய்யன் நடராஜ்

வாழ்த்துகள் மெய்யன் நடராஜ்!

வெண்பாப் புனைய முனைவோர் மேலேயுள்ள பாவினை வாசியுங்கள்.

தகுந்த எதுகையும், பொழிப்பு மோனையும் அமைத்தும், தக்க ஈற்றடியும் அமைத்தும் எழுதியிருக்கிறார்.

எந்த முயற்சியும் எடுக்காமல், தான் எழுதியதே பா என்று விவாதம் செய்யாமல், சீர்களையும், தளைகளையும், புணர்ச்சி விதியையும் அறிந்தும், காய்ச்சீர் வருமிடங்களில் இரு மாச்சீர்களை இணைக்காமலும், விளாங்காய்ச்சீர் வராமலும், கண்டபடி வகையுளி செய

மேலும்

வணக்கம், திரு.வ.க.கன்னியப்பன்! எனது கவிதையை உண்ர்ந்து பாராட்டியதற்கு மிக்க நன்றி! பாவகையைச் சுட்டிக் காட்டி நீங்கள் பதில் எழுதுவது மிகவும் மகிழ்ச்சி தருகிறது! "ஆரம்" வடமொழிச் சொல்லாகிய "ஹாரம்" என்பதன் தமிழ் வடிவம் ஆதலால் அதை விலக்கப் பார்த்தேன். என்றாலும், "தேவாரம்" என் துணைக்கு இருப்பதால் "ஆரம்" இப் பாவின் கழுத்தில் இருந்து திகழலாம் என்று அமைத்தேன். மிக்க நன்றி, வணக்கம்! 20-Oct-2021 1:56 pm
கொச்சகக் கலிப்பாவில் அமைந்த அருமையான பாராட்டுக் கவிதை! அருமை சந்திர மௌலீஸ்வரன் மகி - "செல்வப் ப்ரியா" அவர்களே! 17-Oct-2021 3:41 pm
பாராட்டுக்கள் திரு. மெய்யன் நடராஜ்! "ஊன்றி எழுந்தே உயர்" எனும் தலைப்பில் உங்களால் தொடுக்கப் பட்டுள்ள பாவாரம்-வெண் பாவாரம், மிகவும் நன்றாகத் தொடுக்கப் பட்டுள்ளது! தொடுக்கப் படாத உதிர் மலர்க்குவை போன்ற புதுக் கவிதைக் கூட்டத்தில், யாப்பிலக்கணப்படி உள்ள மெய்க் கவிதையைக் காண மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது! "அழகுதமிழ்க் கவிதையொரு ஆழ்பொருளும் கவிநயமும் அகவழகும் மொழியழகும் ஆரமென அமைந்திங்கு பழகிவர மனமகிழ்வில் பாலாகப் பொங்கிவிழ வழங்குகிறே னும்கரத்தில் வண்டமிழில் பாராட்டு!" மிக்க நன்றி! வணக்கம்! சந்திர மௌலீஸ்வரன் மகி - - "செல்வப் ப்ரியா". 17-Oct-2021 11:19 am
ஆமாம் ஐயா. 25-May-2021 4:21 pm
மெய்யன் நடராஜ் - மெய்யன் நடராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-May-2020 2:47 am

======
இன்றைய உறக்கத்தில்
இந்தக் கனவு வந்தால்
நல்லதென்று யாரும்
எதிர்பார்ப்பதில்லை.
*
எதிர்பாராத கனவு வந்துவிட்டால்
எவரும் அதைப்
போ வராதே என்று
விரட்டியடிப்பதுமில்லை
**
யார் என்ன கனவு
காணவேண்டும் என்பதையும்,
யாருக்கு எப்போது கனவு வரும் என்பதையும்
கண்கள் தீர்மானிப்பதில்லை
**
சில புத்தகங்களை விரிக்கும்போது
வரும் தூக்கத்தைப்போல
கனவுகள் நமக்கு
எளிதாக வந்துவிடுவதில்லை
**
சில அலுவலக மேசைகளைக்
காணும் அதிகாரிகளுக்கு
வரும் தூக்கத்தைபோல
சில அவசியமான ஆசைகளில்
மிதக்கும்போது
கனவுகள் நமக்கு வந்து விடுவதுமில்லை
**
காத்திருக்கும்போது வாராமல்
கண்ட கண்ட நேரங்கள

மேலும்

மிக்க நன்றி 17-May-2020 11:51 pm
அருமை நண்பா... 17-May-2020 3:54 pm
மெய்யன் நடராஜ் - மெய்யன் நடராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Feb-2018 1:41 am

மெய்யன் நடராஜ்

பனித்துளியில் பூக்கள் குளித்திருந்த புதுக் காலைப்பொழுது அது. தைமாதத்தின் தரை தொட்டக்குளிர் பூமி எங்கும் பரவிக் கிடந்தது சிலுசிலுப்பாக. மலை முகடுகளைக் கிழித்துக் கொண்டு வெய்யோன் வரத் தயாராகிக் கொண்டிருந்தான். இன்னும் சில நிமிட நடையில் அக்காவின் வீட்டை அடைந்துவிடலாம் என்னும் முனைப்பில் நடையைத் தொடர்ந்த மகரந்தன் சுமாரான நிறம். பார்ப்பதற்கு சினிமா கதாநாயகன் போலில்லாவிட்டாலும் இரண்டாந்தர நடிகரின் வரிசையில் சேர்க்கலாம். . மனதும் உடலும் தளர்ந்த நடையில் இருந்தவனுக்கு புலரும் பொழுதை ரசிக்கும் மனசு இல்லாத நிலை. ஒரு சாதாரண கட்டமிட்ட சட்டையின் கைகளை மடக்கிவிட்டிருந்தவன் வழக்கம்போல் வேட

மேலும்

மிக்க நன்றிகள் ஐயா 21-Feb-2018 1:35 am
கதை இலக்கியம் சென்ற வார எழுத்து தளம் சிறந்த கதை தங்கள் படைப்பு பாராட்டுக்கள் தமிழ் இலக்கிய அன்னை ஆசிகள் 20-Feb-2018 7:44 am
மிக்க நன்றி 17-Feb-2018 1:47 am
நல்ல கதையும் நடையும். ஒரு ஆலோசனை - மகரந்தனுக்கும் அவனது அக்காவுக்கும் நடக்கும் உரையாடல்களை " அய்யர் வீட்டு நடையிலேயே" எழுதி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். 15-Feb-2018 7:05 pm
மெய்யன் நடராஜ் - கவிஜி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Apr-2014 9:17 pm

இன்னும் ஒரு முறை காதலிக்கத் தூண்டுகிறது..... ஒவ்வொரு முறை படிக்கும் போதும் இன்னும் ஒரு முறை காதலிக்கத் தோன்றுகிறது.....

"காதல் காதல் காதல்...... போயின்....... சாதல் சாதல் சாதல்...."

"அது................... சொல்லாமல்........ ஏங்க ஏங்க.......... அழுகை வந்தது...........................எந்தன் காதல் சொல்லும் போது சொல்லாமல் வந்த அழுகை நின்றது......"

"வானில் இடத்தையெல்லாம் இந்த வெண்ணிலா.................. வந்து தழுவுது பார்......"

காதல்.........ம்ம்ம்ம்ம்............

கவிதைக்குள் நுழைந்து வெளி வராமலே போகும் காதலுக்குள்..... அவள்....
அவளுக்குள் நான்....
எங்களுக்குள் காதல்...
காதலுக

மேலும்

இப்படி என் கவிதைக்கு ஒரு விமர்சனம் தளத்தில் நிகழ்ந்தேறியிருக்கிறது என்பதை இப்போதுதான் நான் கண்ணுற்றேன்.அலசி ஆராய்ந்த அணுகுமுறை ஆச்சரியமூட்டுகிறது கவிஜி . மிக்க நன்றி 14-Feb-2016 9:42 am
படித்து பாராட்டிய சுதாவுக்கு மிக்க நன்றி... 22-May-2014 8:13 pm
அழகு கவியில் விமர்சனம் தந்த கவிஜிக்கு நன்றி 22-May-2014 1:35 pm
மிக்க நன்றி தோழரே.... 22-Apr-2014 2:48 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (204)

இசைப்ரியன்

இசைப்ரியன்

விளந்தை (திருக்கோவிலூர்)
மதனா

மதனா

chennai
மாயா

மாயா

சேலம்
லிமுஹம்மது அலி

லிமுஹம்மது அலி

வாலிநோக்கம்

இவர் பின்தொடர்பவர்கள் (205)

சிவா

சிவா

Malaysia
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (210)

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே