மெய்யன் நடராஜ் - சுயவிவரம்
(Profile)


தமிழ் பித்தன்
இயற்பெயர் | : மெய்யன் நடராஜ் |
இடம் | : punduloya srilanka |
பிறந்த தேதி | : 18-Aug-1963 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Sep-2012 |
பார்த்தவர்கள் | : 9053 |
புள்ளி | : 5701 |
எமது இலங்கை வானொலி பத்திரிகைகள் போன்றவற்றிற்கு நீண்ட காலமாக மெய்யன் நடராஜ் எனும் என் சொந்த பெயரிலேயே கவிதை சிறுகதைகள் எழுதிவருகிறேன் .சமீப காலமாகத்தான் இணைய சஞ்சிகைகளுக்கும் எழுத ஆரம்பித்துள்ளேன். நாடு கடந்து வாழ்ந்துகொண்டு இருந்தாலும் எழுவதை தொடர்ந்து கொண்டிருக்கிறேன். அண்மையில் படிக்கட்டு என்ற எனது முதலாவது கவிதைத்தொகுப்பை வெளியிட்டுள்ளேன்
அறிவின் மேன்மை
*********************
அறியாமைத் தீயில் அகப்பட்ட வாழ்க்கைப்
பறிபோகு முன்பே படிப்பாய் - நெறியறிந்து
கொண்டாரைப் பார்த்துக் குறிப்பெடுத்துக் கொண்டேநீ
பண்புடனே வாழப் பழகு
*
பழகுவா ருள்மனம் பார்த்தன்பு நாட்டும்
உழவனா யுன்னை உயர்த்து - அழகெனக்
காண்பதிலா பத்தும் கலந்திருக்கும் எச்சரிக்கை
வேண்டும் எதிலுமே இங்கு
*
இங்கிருக்குங் காலம் இயற்கை எமையெழிலாய்
தங்கிச் செலவிட்டத் தற்காலம் - அங்குசெல
முன்னுனை ஆட்டிவைக்கும் மோகத்தைக் கொன்றழித்துச்
சென்றுவிட லொன்றே சிறப்பு
*
சிறப்புடன் வாழ்தல் சிறப்பல்ல, உன்னால்
சிறப்பற்றார் வாழ்தல் சிறப்பு - உறவுகள்
இல்லா தவர்க்காய் இ
பாலப் பணியாளர்
================
பள்ளிக்கூடம் விட்டதும்
வகுப்பறைகளில் நுழைந்துக்
காகிதம் சேகரித்து வெளியேறும் சிறுவர்களின்
பை முழுவதும் நிறைந்தே இருக்கிறது
படிக்க வழி இல்லாத ஏக்கம்
*
பணம் படைத்தவன் சமையல் அறையில்
தேய்த்து வெளுக்கும் பாத்திரங்களுக்கு மத்தியில்
தேய்த்தும் வெளுக்காப் பாத்திரமாய் கருத்தே கிடக்கிறது
பல ஏழைச் சிறுமியரின் எதிர்காலம்
*
நகரத்து உணவகங்களில் எவரோ உண்ட
எச்சில் இலை எடுத்துப் போட்டுத்
தண்ணீர் வைக்கும் சிறுவர்களிடம் தீராமல் இருக்கிறது
தன் தம்பியுடன் விளையாடும் தணியாத தாகம்
*
நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தக்
கல் உடைக்கும் சிறுவர்கள் மத்தியில்
வெண்ணிலவு விண்வெளியில் காயும்
விடியும்வரை வெண்முகிலை மேயும்
தண்ணொளியைப் பூமிக்குத்
தந்துவிட்டு வைகறையில்
கண்மயக்கங் கொண்டுதலை சாயும்
பிழையாகும் கனவுகள்
====================
வேலையொன்று வாய்க்கவென்று வேண்டுகின்ற தெய்வமில்லை
வேலையென்று வாய்த்தபின்னே வேலைதன்னில் நாட்டமில்லை
சாலைதன்னில் கொடிபிடித்துச் சத்தமாகக் கோசமிட்டுச்
சம்பளத்தைக் கூட்டுவென்றச் சண்டைமட்டு மோயவில்லை
ஆலையினை இழுத்துமூடி அடைப்பதற்கும் துணிந்திருக்கும்
ஆட்களுள்ள காலமின்று ஆட்டிவைக்கும் பாடுதொல்லை
பாலையொத்த மனசுடனே பார்க்கத்தோன் றுகின்றவர்கள்
பாவியென்றப் பேர்வாங்கிப் பரிதவிக்கச் செய்வரிங்கே!
*
வித்துவொன்றை நாட்டிவைத்து வேரூன்றும் முன்பதிலே
விதவிதமாய்க் கனிகளினை வேண்டுகின்ற மக்களிங்கே
சுத்தமாகத் தொழில்செய்யா சோம்பேறி யாயிருந்தே
சொர்க்கத்
தேவதை
**********
புன்னகை ஓவியம் பூவிதழ் தீட்டிடப்
பொன்னென வேயவள் மின்னுகின்றாள் - ஒரு
கன்னலின் காவியம் கண்வழி யாளிளங்
கண்மணி யானவள் தீட்டுகிறாள் - தன்
மன்னவன் மேலொரு மாமழை யாய்விழ
மன்மதக் கார்முகி லாகுகிறாள் - நடை
அன்னமுந் தோற்றிடும் ஆரணங் கானவள்
அன்பெனும் நாட்டிய மாடுகின்றாள்
*
தண்ணெழில் பூத்திடுந் தாமரை தாங்கிய
தண்டென வேயிடை தானுடையாள் - கரு
வண்டுக ளோவென வாய்மொழி கூறிட
வைத்திடும் தேவதை வாள்விழியாம் - குலப்
பெண்களின் மானமும் பேரெழில் தேகமும்
பின்னிய தேயவள் சீதனமாம் - நற்
பண்புக ளோங்கிய பாதையி லேசெலும்
பண்டையை மாதரின் பாங்குடையாள்
*
மின்னலி னாலொரு மெல்லி
விடிந்திடும் பொழுதுகள்
***************************
இருட்டினில் மூழ்கி இடரியே நாளும்
குருடராய் வாழ்தல் கொடுமை - உருட்டும்
புரட்டும் நிறைந்திடும் பூமியில் கொண்ட
விரக்தியை நீமுதலில் வீழ்த்து
*
விதியினை நொந்து வெறுமையி லுன்றன்
மதியினைத் தாழ்த்தல் மடமை - இதிகாசம்
என்றும் முயன்றாரை ஏற்றிடும் புத்தகத்தில்
உன்பேர் வரவே உழை.
*
உழைப்பதை நெஞ்சில் உறுதியாய்க் கொண்டே
பிழைப்பவர்க் கில்லையே பீடு -
இழப்புகள்
கண்டு கலங்காதே கண்ணீர் வழியவே
வண்டாய்ச் சிறகடித்து வாழ்
*
துயரினைக் கொல்லத் துணிந்தவன் வாழ்வில்
உயர்வினைக் காண்பான் உறுதி - அயராமல்
அல்லும் பகலும் அதற்காகப் பாடுபடு
தொல
பசை
******
தூரிகையில் பற்பசை ஏந்திட
விடியும் பொழுதுகள்
சவரப் பசையுடன்
முகச் செழிப்பாகி
வாசனைப் பசையுடன் மணக்கத் தொடங்குகிறது
ரொட்டியில் அம்மா தடவிக்கொடுக்கும்
சட்னிப் பசையோடு
பசையுள்ளத் தொழிலுக்கான தேடலில்
விண்ணப்பம் சுமக்கும் கூடுகளுக்கு
ஒட்டுப் பசையாகிக் காத்திருக்கும்
அசையாத நம்பிக்கைகள்
நிராகரிப்பு பசைதடவிய எதிர்பார்ப்புப் பலகைகளில்
கால்வைத்துச் சிக்கிக்கொள்ளும்
எலியாகிய வாழ்வியலில் நின்று
வெளியேறப் போராடவென்று
வாங்கியதான பட்டங்கள்
பெயருக்குப் பின்னால் ஒட்டியும்
ஒட்டாமலுமென்று
பசையற்று நிற்கையில்
பார்ப்பவர் கண்களில்
பசையின்றியே ஒட்டிக் கொள்கிறது
சி
காயப் படுத்திவிட்டுக் கற்கண்டு சொற்கொண்டு
நேயப் படுத்திவிடின் நீங்குமோ - சாயம்
வெளுப்பதைக் காட்டிடும் வேசமாம் கோபம்
தளும்பலைச் சற்றே தணி
ஊன்றி எழுந்தே உயர்
நேரிசை வெண்பா
முன்னேறு மெண்ணம் முளைத்திடும் காலத்தில்
பின்தங்கி டாதே! பெரும்பயம் - உன்முன்னே
தோன்றி உடன்படா தோர்நிலைக் குட்படுத்தும்.
ஊன்றி எழுந்தே உயர். - மெய்யன் நடராஜ்
வாழ்த்துகள் மெய்யன் நடராஜ்!
வெண்பாப் புனைய முனைவோர் மேலேயுள்ள பாவினை வாசியுங்கள்.
தகுந்த எதுகையும், பொழிப்பு மோனையும் அமைத்தும், தக்க ஈற்றடியும் அமைத்தும் எழுதியிருக்கிறார்.
எந்த முயற்சியும் எடுக்காமல், தான் எழுதியதே பா என்று விவாதம் செய்யாமல், சீர்களையும், தளைகளையும், புணர்ச்சி விதியையும் அறிந்தும், காய்ச்சீர் வருமிடங்களில் இரு மாச்சீர்களை இணைக்காமலும், விளாங்காய்ச்சீர் வராமலும், கண்டபடி வகையுளி செய
======
இன்றைய உறக்கத்தில்
இந்தக் கனவு வந்தால்
நல்லதென்று யாரும்
எதிர்பார்ப்பதில்லை.
*
எதிர்பாராத கனவு வந்துவிட்டால்
எவரும் அதைப்
போ வராதே என்று
விரட்டியடிப்பதுமில்லை
**
யார் என்ன கனவு
காணவேண்டும் என்பதையும்,
யாருக்கு எப்போது கனவு வரும் என்பதையும்
கண்கள் தீர்மானிப்பதில்லை
**
சில புத்தகங்களை விரிக்கும்போது
வரும் தூக்கத்தைப்போல
கனவுகள் நமக்கு
எளிதாக வந்துவிடுவதில்லை
**
சில அலுவலக மேசைகளைக்
காணும் அதிகாரிகளுக்கு
வரும் தூக்கத்தைபோல
சில அவசியமான ஆசைகளில்
மிதக்கும்போது
கனவுகள் நமக்கு வந்து விடுவதுமில்லை
**
காத்திருக்கும்போது வாராமல்
கண்ட கண்ட நேரங்கள
மெய்யன் நடராஜ்
பனித்துளியில் பூக்கள் குளித்திருந்த புதுக் காலைப்பொழுது அது. தைமாதத்தின் தரை தொட்டக்குளிர் பூமி எங்கும் பரவிக் கிடந்தது சிலுசிலுப்பாக. மலை முகடுகளைக் கிழித்துக் கொண்டு வெய்யோன் வரத் தயாராகிக் கொண்டிருந்தான். இன்னும் சில நிமிட நடையில் அக்காவின் வீட்டை அடைந்துவிடலாம் என்னும் முனைப்பில் நடையைத் தொடர்ந்த மகரந்தன் சுமாரான நிறம். பார்ப்பதற்கு சினிமா கதாநாயகன் போலில்லாவிட்டாலும் இரண்டாந்தர நடிகரின் வரிசையில் சேர்க்கலாம். . மனதும் உடலும் தளர்ந்த நடையில் இருந்தவனுக்கு புலரும் பொழுதை ரசிக்கும் மனசு இல்லாத நிலை. ஒரு சாதாரண கட்டமிட்ட சட்டையின் கைகளை மடக்கிவிட்டிருந்தவன் வழக்கம்போல் வேட
இன்னும் ஒரு முறை காதலிக்கத் தூண்டுகிறது..... ஒவ்வொரு முறை படிக்கும் போதும் இன்னும் ஒரு முறை காதலிக்கத் தோன்றுகிறது.....
"காதல் காதல் காதல்...... போயின்....... சாதல் சாதல் சாதல்...."
"அது................... சொல்லாமல்........ ஏங்க ஏங்க.......... அழுகை வந்தது...........................எந்தன் காதல் சொல்லும் போது சொல்லாமல் வந்த அழுகை நின்றது......"
"வானில் இடத்தையெல்லாம் இந்த வெண்ணிலா.................. வந்து தழுவுது பார்......"
காதல்.........ம்ம்ம்ம்ம்............
கவிதைக்குள் நுழைந்து வெளி வராமலே போகும் காதலுக்குள்..... அவள்....
அவளுக்குள் நான்....
எங்களுக்குள் காதல்...
காதலுக
நண்பர்கள் (204)

இசைப்ரியன்
விளந்தை (திருக்கோவிலூர்)

மதனா
chennai

மாயா
சேலம்

லிமுஹம்மது அலி
வாலிநோக்கம்
