மெய்யன் நடராஜ் - சுயவிவரம்
(Profile)


தமிழ் பித்தன்
இயற்பெயர் | : மெய்யன் நடராஜ் |
இடம் | : punduloya srilanka |
பிறந்த தேதி | : 18-Aug-1963 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Sep-2012 |
பார்த்தவர்கள் | : 7419 |
புள்ளி | : 5331 |
எமது இலங்கை வானொலி பத்திரிகைகள் போன்றவற்றிற்கு நீண்ட காலமாக மெய்யன் நடராஜ் எனும் என் சொந்த பெயரிலேயே கவிதை சிறுகதைகள் எழுதிவருகிறேன் .சமீப காலமாகத்தான் இணைய சஞ்சிகைகளுக்கும் எழுத ஆரம்பித்துள்ளேன். நாடு கடந்து வாழ்ந்துகொண்டு இருந்தாலும் எழுவதை தொடர்ந்து கொண்டிருக்கிறேன். அண்மையில் படிக்கட்டு என்ற எனது முதலாவது கவிதைத்தொகுப்பை வெளியிட்டுள்ளேன்
சிரித்திடச் சூழும் சிறப்பு
=======================
சுமையிருள் நீங்கச் சுகமதி தோன்றின்
சுடர்விடும் வாழ்க்கைத் தோட்டம்
இமைவெளி நடுவே இடைவெளி பூணா
திருந்திடு மென்றும் தூக்கம்
நமைதினந் தாக்கி நலிவுறச் செய்து
நசுக்குவ தில்லை ஏக்கம்
அமைவதைக் கொண்டு அழகுற வாழ்வை
அமைப்பதி லுண்டு ஏற்றம்
**
அறிவுனக் கென்று அளித்தவன் காட்டும்
அறவழி யொன்றே விளக்கு
குறிதவ றாதக் கொள்கையைக் கொண்டக்
கொக்குக ளாய்க்காண் கிழக்கு
வறியவர் கோடி வசிக்கிற பூமி
வரமென வாய்த்தப் பிறப்பு
சிறியதைக் கேட்டுச் செழிப்புடன் வாங்கிச்
சிரித்திடச் சூழும் சிறப்பு
**
*மெய்யன் நடராஜ்
தரமுடன் வாழலாம்
======================
சின்னதாய்க் காயப் பட்டால்
செகமதே வெறுத்துப் போகும்
புன்னகை செய்யக் கூடப்
பூவிதழ் மறுப்புக் காட்டும்
என்னடா வாழ்க்கை யென்று
எப்பவும் சலிப்புத் தோன்றும்
மன்னரா யிருந்து விட்டால்
மகிழலா மென்று தோன்றும்
**
மன்னரா யிருந்து பார்த்தால்
மாபெரும் கவலை சூழும்
தன்னல மில்லாத் தலைமை
தாங்களின் சுமைகள் நீளும்
பொன்னென நாட்டைக் காக்கும்
பொறுப்புகள் அமைதி கொல்லும்
சின்னதாய் வாழும் வாழ்வே
சிறப்பென எண்ணம் தோன்றும்.
**
அக்கரைப் பச்சை கண்டு
ஆசையில் மிதக்கும் மாடாய்
துக்கமே கொள்ளப் பழகி
தூக்கமும் தொலைக்க லாமோ
இக்கண மிருப்ப வற்றில்
நீட்சி
======
ஆண்டுக்கோர் தேர்தல் வந்து
ஆட்சிகள் மாறி னாலும்
தூண்டுகோ லின்றி மக்கள்
துயர்படும் வாழ்வில் மாற்றம்
தீண்டவோர் வழியு மில்லை
தினசரி வறுமைத் தொல்லை
ஆண்டவன் வந்து நாட்டை
ஆண்டாலும் கடனே எல்லை.
**
சின்னதாய் இருக்கும் கடனைச்
சீக்கிரம் அடைப்ப தாக
பென்னம் பெரிதாய் கடனைப்
பெற்றுமே அடைத்து விட்டு
என்னவோ சாதனை செய்து
இமயத்தி லேறிய தாக
தன்னையே புகழும் ஆட்சித்
தன்மையே பித்த லாட்டம்
**
ஆள்பவர் சுரண்டி நாட்டை
அடுத்ததோர் நாட்டில் சேர்த்து
நீள்கிற சந்ததி யோடு
நிம்மதி யாக வாழ
தோள்கொடுக் கின்ற ஆட்சி
தொலைந்துதான் போகு மட்டும்
வாள்தனை கழுத்தில் தாங்கி
வாழ
தொட்டவரைச் சுற்றிச் சுடலைக் கிழுக்கின்றப்
புட்டிதனை விட்டுவிடப் போற்றிப் புகழுலகு
கற்றுத் தருமொரு கற்கை நெறிதனைக்
கற்றுக் கொளுவதே கா.
சர்வதேச கவிதை தினம் இன்று
கவிதை
========
மலையினிலும் நதியினிலும் மதியதனின் ஒளியினிலும்
மறைந்திருக்கும் அழகழகாய் கவிதை
அலையினிலும் கடலினிலும் அலைமோதும் படகினிலும்
அடுக்கடுக்காய் புதைந்திருக்கும் கவிதை
சிலையினிலும் செதுக்குகின்றச் சிற்பியவன் மனத்தினிலும்
சிரித்திருக்கும் சிறப்பானக் கவிதை.
இலைகளிலும் மரங்களிலும் இயற்கைதரும் கனிகளிலும்
இனித்திருக்கும் இன்னமுதக் கவிதை
**
உலையினிலே விதைநெல்லை உணவாக்கும் உழவனுக்குள்
உதிரமெனக் கொட்டுமுயிர்க் கவிதை
தலையினிலே பூச்சூடத் தலைவனுக்குக் காத்திருக்கும்
தங்கையர்க்குத் தனிமைதுயர் கவிதை
வலையினிலே மீன்சிக்கும் வரைகாத்துப் போராடும்
வ
வரவேற்க ஆளில்லா வாச லென்றும்
வழிகாட்ட யாருமில்லா வனந்தா னென்றும்
தரமற்ற தானவிடந் தானஃ தென்றும்
தனியாக செலவியலா தென்றும் கூறி
வரமாட்டே னெனச்சொல்லா வியலா தந்த
வனந்தேடி செலவேதான் வாழ்க்கை யன்றோ
வரமாகக் கேளாமல் வாய்க்கு மிந்த
வாசலிலே தானெவர்க்கும் வாழ்வின் முற்று.
*
ஒடிகிற நிலையவ ளுடலொடு வளைவது
ஒருசிறு வளவுள இடையாமே!
கொடிநிக ரதுவிரு குறுமலை சுமையொடு
குழைவது மதுரச மடையாமே!
அடிதொடை பொருளொடு அமைகிற கவியென
அசைவது வதிசய நடையாமே!
முடிகிற கயிறது முடிவுறு வரைவர
மதுதர விடுமது தடையாமே!
கன்று நாட்டியதும்
கொட்டத் தொடங்குகிறது
கடலில் மழை.
======
இன்றைய உறக்கத்தில்
இந்தக் கனவு வந்தால்
நல்லதென்று யாரும்
எதிர்பார்ப்பதில்லை.
*
எதிர்பாராத கனவு வந்துவிட்டால்
எவரும் அதைப்
போ வராதே என்று
விரட்டியடிப்பதுமில்லை
**
யார் என்ன கனவு
காணவேண்டும் என்பதையும்,
யாருக்கு எப்போது கனவு வரும் என்பதையும்
கண்கள் தீர்மானிப்பதில்லை
**
சில புத்தகங்களை விரிக்கும்போது
வரும் தூக்கத்தைப்போல
கனவுகள் நமக்கு
எளிதாக வந்துவிடுவதில்லை
**
சில அலுவலக மேசைகளைக்
காணும் அதிகாரிகளுக்கு
வரும் தூக்கத்தைபோல
சில அவசியமான ஆசைகளில்
மிதக்கும்போது
கனவுகள் நமக்கு வந்து விடுவதுமில்லை
**
காத்திருக்கும்போது வாராமல்
கண்ட கண்ட நேரங்கள
மெய்யன் நடராஜ்
பனித்துளியில் பூக்கள் குளித்திருந்த புதுக் காலைப்பொழுது அது. தைமாதத்தின் தரை தொட்டக்குளிர் பூமி எங்கும் பரவிக் கிடந்தது சிலுசிலுப்பாக. மலை முகடுகளைக் கிழித்துக் கொண்டு வெய்யோன் வரத் தயாராகிக் கொண்டிருந்தான். இன்னும் சில நிமிட நடையில் அக்காவின் வீட்டை அடைந்துவிடலாம் என்னும் முனைப்பில் நடையைத் தொடர்ந்த மகரந்தன் சுமாரான நிறம். பார்ப்பதற்கு சினிமா கதாநாயகன் போலில்லாவிட்டாலும் இரண்டாந்தர நடிகரின் வரிசையில் சேர்க்கலாம். . மனதும் உடலும் தளர்ந்த நடையில் இருந்தவனுக்கு புலரும் பொழுதை ரசிக்கும் மனசு இல்லாத நிலை. ஒரு சாதாரண கட்டமிட்ட சட்டையின் கைகளை மடக்கிவிட்டிருந்தவன் வழக்கம்போல் வேட
இன்னும் ஒரு முறை காதலிக்கத் தூண்டுகிறது..... ஒவ்வொரு முறை படிக்கும் போதும் இன்னும் ஒரு முறை காதலிக்கத் தோன்றுகிறது.....
"காதல் காதல் காதல்...... போயின்....... சாதல் சாதல் சாதல்...."
"அது................... சொல்லாமல்........ ஏங்க ஏங்க.......... அழுகை வந்தது...........................எந்தன் காதல் சொல்லும் போது சொல்லாமல் வந்த அழுகை நின்றது......"
"வானில் இடத்தையெல்லாம் இந்த வெண்ணிலா.................. வந்து தழுவுது பார்......"
காதல்.........ம்ம்ம்ம்ம்............
கவிதைக்குள் நுழைந்து வெளி வராமலே போகும் காதலுக்குள்..... அவள்....
அவளுக்குள் நான்....
எங்களுக்குள் காதல்...
காதலுக
ஹைக்கூ தொடர் - அறிவிப்பு 2
எழுத்து தள தோழர் தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்...
வரும் சனிக்கிழமை (06-FEB-2016) அன்று உதயமாக போகிறது...
- ஹைக்கூ இலக்கணம் மீறாமல் இருக்க வேண்டும்...
- ஹைக்கூ இலக்கணம் இல்லாமல் எழுதும் எந்த படைப்பும் அடுத்த கட்ட நகர்த்தலுக்கு எடுத்துக் கொள்ள மாட்டாது...
- மூன்று வரிகள் என்ற கோட்பாட்டிற்குள் ஹைக்கூ இருத்தல் வேண்டும் மற்றும் தொடரின் பெயரை தவிர வேறு பெயர்கள் தங்கள் படைப்பில் பதிவிட கூடாது.
- 30 வரிகளுக்கு மேல் கவிதை இருத்தல் கூடாது. ஒவ்வொரு பத்தியும் மூன்று வரிகளுக்கு மேல் இருக்கவும் கூடாது.
- அவரவர்களுக்கு கொடுத்த தேதியில் பதிய வேண்டும். தேதியை தவற விடுபவர்களுக்கு வேறு தேதி ஒதுக்கப் பட மாட்டாது.
- ஒருவேளை பதிவிட முடியாதவர்கள் இரு நாளைக்கு முன்னமே எனக்கு மின்னஞ்சலில் தெரிவித்து விட வேண்டும். அப்படி முறை படி தெரிவிக்காதவர்கள் அடுத்தடுத்த தொடர்களில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்.
- படைப்பை பதிவிடுபவர்கள் கண்டிப்பாக அந்த தேதியில் காலை 9 மணிக்கு முன் பதிவிட வேண்டும்.
- படைப்பு தங்களின் சொந்த படைப்பாக இருக்க வேண்டும்.
- மொழி பெயர்ப்பு /பிறர் கவிதைகளின் தழுவலோ இருக்க கூடாது.
- ஒன்றிற்கு மேல் எழுதும் வாய்ப்பு யாருக்கும் வழங்க பட மாட்டாது. அதே போல இந்த தொடரில் எழுதும் படைப்பாளிகள் இதே தொடர் பெயரில் வேறு படைப்புகளை பதிவிட கூடாது...
நண்பர்கள் (204)

இசைப்ரியன்
விளந்தை (திருக்கோவிலூர்)

மதனா
chennai

மாயா
சேலம்

லிமுஹம்மது அலி
வாலிநோக்கம்
