மெய்யன் நடராஜ் - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  மெய்யன் நடராஜ்
இடம்:  punduloya srilanka
பிறந்த தேதி :  18-Aug-1963
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Sep-2012
பார்த்தவர்கள்:  9993
புள்ளி:  5894

என்னைப் பற்றி...

எமது இலங்கை வானொலி பத்திரிகைகள் போன்றவற்றிற்கு நீண்ட காலமாக மெய்யன் நடராஜ் எனும் என் சொந்த பெயரிலேயே கவிதை சிறுகதைகள் எழுதிவருகிறேன் .சமீப காலமாகத்தான் இணைய சஞ்சிகைகளுக்கும் எழுத ஆரம்பித்துள்ளேன். நாடு கடந்து வாழ்ந்துகொண்டு இருந்தாலும் எழுவதை தொடர்ந்து கொண்டிருக்கிறேன். அண்மையில் படிக்கட்டு என்ற எனது முதலாவது கவிதைத்தொகுப்பை வெளியிட்டுள்ளேன்

என் படைப்புகள்
மெய்யன் நடராஜ் செய்திகள்
மெய்யன் நடராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Mar-2024 1:41 am

மூடி
*****
சாடிக்கு மூடிச் சரியா யிலையெனில்
வேடிக்கைக் காட்டும் விதி
*
ஆகாயம் சூழும் அடர்மேக மூடிகள்
நீகாயா தாக்கும் நிலம்
*
வண்டுத்தே ணுண்ண வடிவிதழ் மூடிகள்
கொண்டுள மொக்கே குழகு
*
மூடித் திறக்கும் முழுக்குடி காரர்க்குத்
தேடிவரும் துன்பம் தினம்
*
மூடித் திறக்குமிமை மூடித் திறவாரை
மூடி மறைத்தல் முறை
*
மூடி மறைப்பதிலே முன்நிற்கும் மோசடியைத்
தேடித் தெரிந்தெடுத்தல் தீங்கு
*
வாய்மூடிக் கண்மூடி வாழப் பயின்றிடின்
தாய்நாட்டில் நிற்கத் தகும்
*
உலைவாயை மூடினும் ஊர்வாயை மூடா
நிலைவளர ஊடகங்கள் நீர்
*
அங்கமெனும் பானைக்கு ஆடையெனும் மூடியிட்டுத்
தங்கமெனக் காக்கத் த

மேலும்

மெய்யன் நடராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Mar-2024 1:44 am

******
நீதியை மூடி நினைத்ததைச் சாதிப்பார்
பீதியூட்டும் பொல்லாப் பிணி
*
புத்தகத்துச் சட்டம் புரியாத மாந்தர்க்கு
உத்தமத்தை மாற்றும் உடுக்கு
*
எச்சட்டம் இங்கமுலில் எங்களுக் குள்ளதோ
அச்சட்ட மிங்கெமக்கே ஆப்பு
*
திமிங்கிலம் சிக்கா திருந்திடும் வண்ணம்
அமிழ்த்திடும் சட்டம் அழுக்கு
*
மேல்வர்க்கக் குற்றத்தை மேலோட்ட மாக்கிட
வால்பிடிக்குஞ் சட்ட வரம்பு
*
பணமுடையான் வாங்கவும் பாமர னென்றும்
திணறவும் சட்டத் திமிர்
*
வழக்கறிஞர் வாழ வழிவகுத்தச் சட்டம்
வழக்க றறியா வகுப்பு
*
தொட்டதற் கெல்லாம் துணைக்கழைக்கும் காவலர்
தட்டிவிடும் தேசத் தவறு
*
பகலை இரவாய்ப் பரிமாற்றும் சட்டம்

மேலும்

மெய்யன் நடராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Mar-2024 1:57 am

=================
உல்லாசக் கைவீசி நடக்கும்
சாலை நடுவே நீள்கின்ற
வறுமையின் கரங்கள் பாராமல்
முகம்திருப்பும் கண்களின் வழியே
ஒப்பனை களைந்த இதயத்தின் முகம்
மிகத்தெளிவாக தெரிகிறது .
*
இராமனைக் கணவனாய் அடைந்த
பெருமிதம் அணிந்த சீதையின்
கைப்பிடித்து நடக்கையில் எதிர்படும்
சுந்தரகாண்டத்தை மேய்கின்ற கண்கள்
பாவத்தைச் சேமித்துவைக்க்கும்
நரகத்தின் வங்கியாகவும்
மாறிவிடுகிறது
*
இயற்கையின் எழில்கண்டு
மெய்மறந்து போகின்றத் தன்மைக்கு
வாசற்கதவாய் இருக்கின்ற கண்கள்
நாத்திகனின் இதயத்தின் கோயிலிலும்
கடவுளை கொலுவேற்றுகின்றன.
*
நிகழ்கின்ற சம்பவங்களுக்கு
சாட்சியாவதிலிருந்து தப்பித்

மேலும்

மெய்யன் நடராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Mar-2024 1:59 am

மாமிக்கு நேரே மருமகள் மோதுகையில்
சாமியா ராகிச் சகி
*
தாய்க்கெதிர் நின்றுனது தாரத்தை தூற்றுமன
நோய்க்காளா துன்னைநீ நோக்கு
*
தாய்தா னெனினுமுன் தாரக் குறைகூற
வாய்திற வாதிறவே வை
*
வீட்டுச் சமரெடுத்து வீதியிட்டு நாலுபேர்
கேட்டுமிழச் செய்யாதே கேள்
*
கூட்டுக் குடும்பத்துள் குத்துவெட் டில்லாதே
காட்டும் கலைவளர்த்துக் காட்டு
*
பிள்ளைகள் முன்னே பெரும்பாலும் சண்டையிடும்
முள்ளை விதைக்காமல் மூடு
*
சிறிதுணவே யாயினும் சேர்த்தன்பைக் கூட்டிப்
பறிமாற்றி யுண்பதற்குப் பார்
*
மரியாதை, அன்பு மழலைக்குத் தாய்ப்பால்
பரிவொடு ஊட்டிப் பழக்கு
*
உன்தடம் கண்டெழும் உன்குழந்தை முன்செல்ல

மேலும்

மெய்யன் நடராஜ் - மெய்யன் நடராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Feb-2024 1:47 am

*****************
முடிந்தவரைத் தன்பேரை முன்நிறுத்தப் பார்ப்பார்
முழங்குகின்ற வார்த்தைகளில் முழுப்பொய்யை வார்ப்பார்
இடிவிழுந்த மரப்பூவில் எழில்மாலைக் கோப்பார்
இரவின்மேல் பனித்துளியை இட்டதுதா னென்பார்
வடிந்துவிட்ட வெள்ளத்தில் வள்ளங்கள் ஓட்டி
வகைவகையாய் உதவியதில் வள்ளல்தா னென்பார்
கடிந்துநிற்கும் கேட்போரைக் கண்ணெடுத்தும் பாரார்
கதைமுடிக்கச் சொன்னாலும் காதெடுத்துக் கேளார்.
*
அடுத்தவரின் நேரத்தை அபகரிக்கச் செய்யும்
அடுக்கடுக்காய் பொய்களினால் அரங்கமழை பெய்யும்
எடுத்ததற்கும் குறைகுற்றம் ஏதேனும் நெய்யும்
இருப்போரின் செவியுணர்வை எரிச்சலிட்டுக் கொய்யும்
தடுப்பதற்கு ஆளிலையேல் தன

மேலும்

நன்றி 29-Feb-2024 1:51 am
அருமை.. 25-Feb-2024 10:41 am
மெய்யன் நடராஜ் - மெய்யன் நடராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Feb-2024 1:21 am

பூங்குயிலுக் துத்தேன் குரல்கொடுத்துக் காட்டிலுள்ள
மூங்கிலுக்குள் சங்கீதம் மூடிவைத்து – தீங்கிலாத்
தேனை மலருக்குள் தேக்கிவைத்துப் பார்த்தவனே
பூனைக் கெலிபடைத்தான் பார்.

மேலும்

நன்றி ஐயா 18-Feb-2024 12:10 am
பூனைக் கெலிபடைத்தான் பார்.அருமையான நேரிசை வெண்பா! வாழ்த்துகள். 17-Feb-2024 7:20 am
மெய்யன் நடராஜ் - மெய்யன் நடராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Feb-2024 1:31 am

நாணா திருப்பாளை நாவால் வலைத்திழுக்கும்
ஆணா னவர்தம் அகந்தைக்கோ - ஓணானை
வீணா யிழுத்தெடுத்து வேட்டிக்குள் ளிட்டதுவாய்
வாணா ளுலழுமொரு வாழ்வு

மேலும்

மிக்க நன்றி ஐயா 12-Feb-2024 1:39 am
அருமையான கருத்தும், ஒருவிகற்ப நேரிசை வெண்பாவும் சிறப்பு! 11-Feb-2024 6:30 pm
மெய்யன் நடராஜ் - மெய்யன் நடராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Feb-2024 2:11 am

*******************
பங்கெடுக்க வா! பங்கெடுக்க வா!******************* பங்கெடுக்க வா!*******************வாடிக்கை யாக வருபவளே! வஞ்சியே!வாடிக்'கை யேந்தும் வசதியிலார் - தாடியொடு ஏங்கிக் கிடப்பதுபோல் ஏந்திழை யுன்னன்பிற் கேங்கிக் கிடக்குமனக் கூடு.*கூடும் மணநாளைக் கொண்டாட வென்றிதயக் கூடும் அலைபாய்ந்து கொல்லுதடி - ஊடுறுவி அம்புவிடும் காதலில் அன்புசெய நீயன்றோநம்பிவந் தென்னிதயம் நாடு. *நாடு குறிப்பிடும் நல்வயது கொண்டவளே!நாடுமென் னுள்ளம் நரகத்தே! - வீடு இருள்நீங்க வேண்டி இதயத்தே நீதான் திருவிளக் கேற்றியெனைத் தீட்டு*தீட்டுப் படுமென்றே தீண்டாமல் போகாதே தீட்டுன் விழியாலே தேவதையே! - மாட்டும் திருக்கயிறு ம

மேலும்

மிக்க நன்றி ஐயா 09-Feb-2024 1:11 am
அருமையான அந்தாதி வெண்பாவில் பாராட்டுகள் தம்பி இனியார் இப்படி எழுதுவரோ. படிக்கவாவது செய்யுங்க தமிழர்களே 08-Feb-2024 9:33 am
மெய்யன் நடராஜ் - Dr.V.K.Kanniappan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-May-2021 11:28 am

ஊன்றி எழுந்தே உயர்
நேரிசை வெண்பா

முன்னேறு மெண்ணம் முளைத்திடும் காலத்தில்
பின்தங்கி டாதே! பெரும்பயம் - உன்முன்னே
தோன்றி உடன்படா தோர்நிலைக் குட்படுத்தும்.
ஊன்றி எழுந்தே உயர். - மெய்யன் நடராஜ்

வாழ்த்துகள் மெய்யன் நடராஜ்!

வெண்பாப் புனைய முனைவோர் மேலேயுள்ள பாவினை வாசியுங்கள்.

தகுந்த எதுகையும், பொழிப்பு மோனையும் அமைத்தும், தக்க ஈற்றடியும் அமைத்தும் எழுதியிருக்கிறார்.

எந்த முயற்சியும் எடுக்காமல், தான் எழுதியதே பா என்று விவாதம் செய்யாமல், சீர்களையும், தளைகளையும், புணர்ச்சி விதியையும் அறிந்தும், காய்ச்சீர் வருமிடங்களில் இரு மாச்சீர்களை இணைக்காமலும், விளாங்காய்ச்சீர் வராமலும், கண்டபடி வகையுளி செய

மேலும்

வணக்கம், திரு.வ.க.கன்னியப்பன்! எனது கவிதையை உண்ர்ந்து பாராட்டியதற்கு மிக்க நன்றி! பாவகையைச் சுட்டிக் காட்டி நீங்கள் பதில் எழுதுவது மிகவும் மகிழ்ச்சி தருகிறது! "ஆரம்" வடமொழிச் சொல்லாகிய "ஹாரம்" என்பதன் தமிழ் வடிவம் ஆதலால் அதை விலக்கப் பார்த்தேன். என்றாலும், "தேவாரம்" என் துணைக்கு இருப்பதால் "ஆரம்" இப் பாவின் கழுத்தில் இருந்து திகழலாம் என்று அமைத்தேன். மிக்க நன்றி, வணக்கம்! 20-Oct-2021 1:56 pm
கொச்சகக் கலிப்பாவில் அமைந்த அருமையான பாராட்டுக் கவிதை! அருமை சந்திர மௌலீஸ்வரன் மகி - "செல்வப் ப்ரியா" அவர்களே! 17-Oct-2021 3:41 pm
பாராட்டுக்கள் திரு. மெய்யன் நடராஜ்! "ஊன்றி எழுந்தே உயர்" எனும் தலைப்பில் உங்களால் தொடுக்கப் பட்டுள்ள பாவாரம்-வெண் பாவாரம், மிகவும் நன்றாகத் தொடுக்கப் பட்டுள்ளது! தொடுக்கப் படாத உதிர் மலர்க்குவை போன்ற புதுக் கவிதைக் கூட்டத்தில், யாப்பிலக்கணப்படி உள்ள மெய்க் கவிதையைக் காண மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது! "அழகுதமிழ்க் கவிதையொரு ஆழ்பொருளும் கவிநயமும் அகவழகும் மொழியழகும் ஆரமென அமைந்திங்கு பழகிவர மனமகிழ்வில் பாலாகப் பொங்கிவிழ வழங்குகிறே னும்கரத்தில் வண்டமிழில் பாராட்டு!" மிக்க நன்றி! வணக்கம்! சந்திர மௌலீஸ்வரன் மகி - - "செல்வப் ப்ரியா". 17-Oct-2021 11:19 am
ஆமாம் ஐயா. 25-May-2021 4:21 pm
மெய்யன் நடராஜ் - மெய்யன் நடராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-May-2020 2:47 am

======
இன்றைய உறக்கத்தில்
இந்தக் கனவு வந்தால்
நல்லதென்று யாரும்
எதிர்பார்ப்பதில்லை.
*
எதிர்பாராத கனவு வந்துவிட்டால்
எவரும் அதைப்
போ வராதே என்று
விரட்டியடிப்பதுமில்லை
**
யார் என்ன கனவு
காணவேண்டும் என்பதையும்,
யாருக்கு எப்போது கனவு வரும் என்பதையும்
கண்கள் தீர்மானிப்பதில்லை
**
சில புத்தகங்களை விரிக்கும்போது
வரும் தூக்கத்தைப்போல
கனவுகள் நமக்கு
எளிதாக வந்துவிடுவதில்லை
**
சில அலுவலக மேசைகளைக்
காணும் அதிகாரிகளுக்கு
வரும் தூக்கத்தைபோல
சில அவசியமான ஆசைகளில்
மிதக்கும்போது
கனவுகள் நமக்கு வந்து விடுவதுமில்லை
**
காத்திருக்கும்போது வாராமல்
கண்ட கண்ட நேரங்கள

மேலும்

மிக்க நன்றி 17-May-2020 11:51 pm
அருமை நண்பா... 17-May-2020 3:54 pm
மெய்யன் நடராஜ் - மெய்யன் நடராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Feb-2018 1:41 am

மெய்யன் நடராஜ்

பனித்துளியில் பூக்கள் குளித்திருந்த புதுக் காலைப்பொழுது அது. தைமாதத்தின் தரை தொட்டக்குளிர் பூமி எங்கும் பரவிக் கிடந்தது சிலுசிலுப்பாக. மலை முகடுகளைக் கிழித்துக் கொண்டு வெய்யோன் வரத் தயாராகிக் கொண்டிருந்தான். இன்னும் சில நிமிட நடையில் அக்காவின் வீட்டை அடைந்துவிடலாம் என்னும் முனைப்பில் நடையைத் தொடர்ந்த மகரந்தன் சுமாரான நிறம். பார்ப்பதற்கு சினிமா கதாநாயகன் போலில்லாவிட்டாலும் இரண்டாந்தர நடிகரின் வரிசையில் சேர்க்கலாம். . மனதும் உடலும் தளர்ந்த நடையில் இருந்தவனுக்கு புலரும் பொழுதை ரசிக்கும் மனசு இல்லாத நிலை. ஒரு சாதாரண கட்டமிட்ட சட்டையின் கைகளை மடக்கிவிட்டிருந்தவன் வழக்கம்போல் வேட

மேலும்

மிக்க நன்றிகள் ஐயா 21-Feb-2018 1:35 am
கதை இலக்கியம் சென்ற வார எழுத்து தளம் சிறந்த கதை தங்கள் படைப்பு பாராட்டுக்கள் தமிழ் இலக்கிய அன்னை ஆசிகள் 20-Feb-2018 7:44 am
மிக்க நன்றி 17-Feb-2018 1:47 am
நல்ல கதையும் நடையும். ஒரு ஆலோசனை - மகரந்தனுக்கும் அவனது அக்காவுக்கும் நடக்கும் உரையாடல்களை " அய்யர் வீட்டு நடையிலேயே" எழுதி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். 15-Feb-2018 7:05 pm
மெய்யன் நடராஜ் - கவிஜி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Apr-2014 9:17 pm

இன்னும் ஒரு முறை காதலிக்கத் தூண்டுகிறது..... ஒவ்வொரு முறை படிக்கும் போதும் இன்னும் ஒரு முறை காதலிக்கத் தோன்றுகிறது.....

"காதல் காதல் காதல்...... போயின்....... சாதல் சாதல் சாதல்...."

"அது................... சொல்லாமல்........ ஏங்க ஏங்க.......... அழுகை வந்தது...........................எந்தன் காதல் சொல்லும் போது சொல்லாமல் வந்த அழுகை நின்றது......"

"வானில் இடத்தையெல்லாம் இந்த வெண்ணிலா.................. வந்து தழுவுது பார்......"

காதல்.........ம்ம்ம்ம்ம்............

கவிதைக்குள் நுழைந்து வெளி வராமலே போகும் காதலுக்குள்..... அவள்....
அவளுக்குள் நான்....
எங்களுக்குள் காதல்...
காதலுக

மேலும்

இப்படி என் கவிதைக்கு ஒரு விமர்சனம் தளத்தில் நிகழ்ந்தேறியிருக்கிறது என்பதை இப்போதுதான் நான் கண்ணுற்றேன்.அலசி ஆராய்ந்த அணுகுமுறை ஆச்சரியமூட்டுகிறது கவிஜி . மிக்க நன்றி 14-Feb-2016 9:42 am
படித்து பாராட்டிய சுதாவுக்கு மிக்க நன்றி... 22-May-2014 8:13 pm
அழகு கவியில் விமர்சனம் தந்த கவிஜிக்கு நன்றி 22-May-2014 1:35 pm
மிக்க நன்றி தோழரே.... 22-Apr-2014 2:48 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (204)

இசைப்ரியன்

இசைப்ரியன்

விளந்தை (திருக்கோவிலூர்)
மதனா

மதனா

chennai
மாயா

மாயா

சேலம்
லிமுஹம்மது அலி

லிமுஹம்மது அலி

வாலிநோக்கம்

இவர் பின்தொடர்பவர்கள் (205)

சிவா

சிவா

Malaysia
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (210)

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே