மெய்யன் நடராஜ் - சுயவிவரம்
(Profile)


தமிழ் பித்தன்
இயற்பெயர் | : மெய்யன் நடராஜ் |
இடம் | : punduloya srilanka |
பிறந்த தேதி | : 18-Aug-1963 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Sep-2012 |
பார்த்தவர்கள் | : 7227 |
புள்ளி | : 5288 |
எமது இலங்கை வானொலி பத்திரிகைகள் போன்றவற்றிற்கு நீண்ட காலமாக மெய்யன் நடராஜ் எனும் என் சொந்த பெயரிலேயே கவிதை சிறுகதைகள் எழுதிவருகிறேன் .சமீப காலமாகத்தான் இணைய சஞ்சிகைகளுக்கும் எழுத ஆரம்பித்துள்ளேன். நாடு கடந்து வாழ்ந்துகொண்டு இருந்தாலும் எழுவதை தொடர்ந்து கொண்டிருக்கிறேன். அண்மையில் படிக்கட்டு என்ற எனது முதலாவது கவிதைத்தொகுப்பை வெளியிட்டுள்ளேன்
கெட்டிமேளம் கொட்டுமுன்பே கெட்டியாகக் கட்டவெண்ணிக்
கெட்டமேளம் கொட்டுகின்றக் கெட்டவர்கள். – கட்டிலின்பம்
தொட்டிலாக முற்றிவந்து தட்டுகையில் வெட்கமின்றிக்
கட்டுங் கயிறுமொரு காப்பு
பிரிந்த பின்பே
பேச வழிவிடுகின்றன
ஒட்டிய உதடுகள்
கண்ணாலே ஈர்ப்பாள் கணிகையவ ளென்போம்
மண்பார்த்தே வந்தாலும் மாத்திமிரே என்போம்
பெண்ணென்றால் பேயென்றும் பேதையென்றும் சொல்லியே
பெருமைக்கு உரியாளைப் பேணாமல் விட்டோமே
நெல்விளையுங் காட்டை நினைத்தபடித் துண்டாக்கிக்
கல்லடுக்கி வீடுகட்டிக் கொள்கின்ற எல்லோரும்
புல்லைப் பசிக்காய் புசிப்பதில்லை. சோறுபோடும்
நல்லநிலம் காப்பீரே நன்று
பருந்தெனக் கொத்திப் பறிக்குமுன் பார்வை படையெடுத்தே
மருந்திலா நோயாய் மனத்தினை வாட்டு மதைத்தடுத்தே
விருந்தென வுன்னை விளம்பென வென்றே வினவிடுதே
வருந்துமென் னுள்ள வதையினைப் போக்க வரங்கொடுவே!
===================================
பரவுகின்ற நோயென்ப தாலே
-பதைக்கின்ற நெஞ்சோடு நாமே
வரவேண்டாம் வாசலிலே நில்லு
-வாய்திறந்து சொல்லுகிறோம் சொல்லு
உரமூட்டி வளர்த்தெடுக்கும் நெல்லாய்
-உள்மனத்தில் விளைந்திருக்கும் சொல்லு
தரமற்ற தென்கின்ற போதும்
-தன்னலங்காத் திடச்சொல்வோ மின்றே!
**
உன்வீட்டில் நான்நுழைந்தால் குற்றம்
-உயர்சாதி என்கின்ற சீற்றம்.
என்வீட்டில் நீநுழைத லாகா
-எளியவனா யிருக்கின்றாய் போபோ.
தன்மானப் பிரச்சினைகள் கொண்டு
-தரம்தாழ்ந்த நிலைமாற்றத் தானே
உன்வீட்டில் நீநுழையைக் கூட
-உருவாகி விட்டதிந்த நோயே!
**
சுற்றங்கள் இருந்திட்டப் போதும்
-சுடலைக்கு அநாதைபோல் போகு
பட்டினிச் சாவின் பரிதாபக் கோலத்தைத்
தொட்டிட விட்டதித் தொற்றுநோய் – பெட்டியிற்
பாம்பாய் நெளியும் பெருங்குட லுட்பசியால்
தேம்பியழத் தெய்வமிட்டத் தீர்ப்பு.
சீனாவில் தோன்றிச் சிதறுண் டுலகெங்கும்
தானாய் பரவித் தலைத்தூக்கித் – தேனாய்
இனித்தநல் வாழ்வில் இழப்புகள் கூட்டி
மனிதரை மாய்த்தாய் மறைந்து.
**
பொல்லாக் கிருமிப் புகழோ உயர்வுற
எல்லா வழிகளும் ஈங்கிருக்க – சொல்லாத்
துயரின் விளிம்புகளில் தோய்ந்த மனிதம்
பயத்தி லுழல்வதை பார்.
**
போர்செய்தும் வீழாப் புகழுடம்பு மன்றாடம்
சீர்கெட்டு வீழும் செயல்தன்னை – யார்செய்து
விட்டனரோ பாரீர். விளைந்த பயிரனைத்தும்
பட்டழிந்து போகிறதே பார்,
**
தனித்திருக்க விட்டுத் தவிக்கவைத்திம் மண்ணின்
புனிதத்தின் மீதொரு போராய் – பனிபோல்
படர்ந்தே கொரோனா பரிணாமம் நீட்டித்
தொடர்கிற தின்னும் துணிந்து.
**
மு
======
இன்றைய உறக்கத்தில்
இந்தக் கனவு வந்தால்
நல்லதென்று யாரும்
எதிர்பார்ப்பதில்லை.
*
எதிர்பாராத கனவு வந்துவிட்டால்
எவரும் அதைப்
போ வராதே என்று
விரட்டியடிப்பதுமில்லை
**
யார் என்ன கனவு
காணவேண்டும் என்பதையும்,
யாருக்கு எப்போது கனவு வரும் என்பதையும்
கண்கள் தீர்மானிப்பதில்லை
**
சில புத்தகங்களை விரிக்கும்போது
வரும் தூக்கத்தைப்போல
கனவுகள் நமக்கு
எளிதாக வந்துவிடுவதில்லை
**
சில அலுவலக மேசைகளைக்
காணும் அதிகாரிகளுக்கு
வரும் தூக்கத்தைபோல
சில அவசியமான ஆசைகளில்
மிதக்கும்போது
கனவுகள் நமக்கு வந்து விடுவதுமில்லை
**
காத்திருக்கும்போது வாராமல்
கண்ட கண்ட நேரங்கள
மெய்யன் நடராஜ்
பனித்துளியில் பூக்கள் குளித்திருந்த புதுக் காலைப்பொழுது அது. தைமாதத்தின் தரை தொட்டக்குளிர் பூமி எங்கும் பரவிக் கிடந்தது சிலுசிலுப்பாக. மலை முகடுகளைக் கிழித்துக் கொண்டு வெய்யோன் வரத் தயாராகிக் கொண்டிருந்தான். இன்னும் சில நிமிட நடையில் அக்காவின் வீட்டை அடைந்துவிடலாம் என்னும் முனைப்பில் நடையைத் தொடர்ந்த மகரந்தன் சுமாரான நிறம். பார்ப்பதற்கு சினிமா கதாநாயகன் போலில்லாவிட்டாலும் இரண்டாந்தர நடிகரின் வரிசையில் சேர்க்கலாம். . மனதும் உடலும் தளர்ந்த நடையில் இருந்தவனுக்கு புலரும் பொழுதை ரசிக்கும் மனசு இல்லாத நிலை. ஒரு சாதாரண கட்டமிட்ட சட்டையின் கைகளை மடக்கிவிட்டிருந்தவன் வழக்கம்போல் வேட
இன்னும் ஒரு முறை காதலிக்கத் தூண்டுகிறது..... ஒவ்வொரு முறை படிக்கும் போதும் இன்னும் ஒரு முறை காதலிக்கத் தோன்றுகிறது.....
"காதல் காதல் காதல்...... போயின்....... சாதல் சாதல் சாதல்...."
"அது................... சொல்லாமல்........ ஏங்க ஏங்க.......... அழுகை வந்தது...........................எந்தன் காதல் சொல்லும் போது சொல்லாமல் வந்த அழுகை நின்றது......"
"வானில் இடத்தையெல்லாம் இந்த வெண்ணிலா.................. வந்து தழுவுது பார்......"
காதல்.........ம்ம்ம்ம்ம்............
கவிதைக்குள் நுழைந்து வெளி வராமலே போகும் காதலுக்குள்..... அவள்....
அவளுக்குள் நான்....
எங்களுக்குள் காதல்...
காதலுக
ஹைக்கூ தொடர் - அறிவிப்பு 2
எழுத்து தள தோழர் தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்...
வரும் சனிக்கிழமை (06-FEB-2016) அன்று உதயமாக போகிறது...
- ஹைக்கூ இலக்கணம் மீறாமல் இருக்க வேண்டும்...
- ஹைக்கூ இலக்கணம் இல்லாமல் எழுதும் எந்த படைப்பும் அடுத்த கட்ட நகர்த்தலுக்கு எடுத்துக் கொள்ள மாட்டாது...
- மூன்று வரிகள் என்ற கோட்பாட்டிற்குள் ஹைக்கூ இருத்தல் வேண்டும் மற்றும் தொடரின் பெயரை தவிர வேறு பெயர்கள் தங்கள் படைப்பில் பதிவிட கூடாது.
- 30 வரிகளுக்கு மேல் கவிதை இருத்தல் கூடாது. ஒவ்வொரு பத்தியும் மூன்று வரிகளுக்கு மேல் இருக்கவும் கூடாது.
- அவரவர்களுக்கு கொடுத்த தேதியில் பதிய வேண்டும். தேதியை தவற விடுபவர்களுக்கு வேறு தேதி ஒதுக்கப் பட மாட்டாது.
- ஒருவேளை பதிவிட முடியாதவர்கள் இரு நாளைக்கு முன்னமே எனக்கு மின்னஞ்சலில் தெரிவித்து விட வேண்டும். அப்படி முறை படி தெரிவிக்காதவர்கள் அடுத்தடுத்த தொடர்களில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்.
- படைப்பை பதிவிடுபவர்கள் கண்டிப்பாக அந்த தேதியில் காலை 9 மணிக்கு முன் பதிவிட வேண்டும்.
- படைப்பு தங்களின் சொந்த படைப்பாக இருக்க வேண்டும்.
- மொழி பெயர்ப்பு /பிறர் கவிதைகளின் தழுவலோ இருக்க கூடாது.
- ஒன்றிற்கு மேல் எழுதும் வாய்ப்பு யாருக்கும் வழங்க பட மாட்டாது. அதே போல இந்த தொடரில் எழுதும் படைப்பாளிகள் இதே தொடர் பெயரில் வேறு படைப்புகளை பதிவிட கூடாது...
நண்பர்கள் (204)

இசைப்ரியன்
விளந்தை (திருக்கோவிலூர்)

மதனா
chennai

மாயா
சேலம்

லிமுஹம்மது அலி
வாலிநோக்கம்
