மெய்யன் நடராஜ் - சுயவிவரம்
(Profile)


தமிழ் பித்தன்
இயற்பெயர் | : மெய்யன் நடராஜ் |
இடம் | : punduloya srilanka |
பிறந்த தேதி | : 18-Aug-1963 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Sep-2012 |
பார்த்தவர்கள் | : 10307 |
புள்ளி | : 5957 |
எமது இலங்கை வானொலி பத்திரிகைகள் போன்றவற்றிற்கு நீண்ட காலமாக மெய்யன் நடராஜ் எனும் என் சொந்த பெயரிலேயே கவிதை சிறுகதைகள் எழுதிவருகிறேன் .சமீப காலமாகத்தான் இணைய சஞ்சிகைகளுக்கும் எழுத ஆரம்பித்துள்ளேன். நாடு கடந்து வாழ்ந்துகொண்டு இருந்தாலும் எழுவதை தொடர்ந்து கொண்டிருக்கிறேன். அண்மையில் படிக்கட்டு என்ற எனது முதலாவது கவிதைத்தொகுப்பை வெளியிட்டுள்ளேன் இரண்டாயிரத்து இருபத்தியிரண்டில் மூச்சுவிடும் காதுகள் என்னும் ஹைக்கூ தொகுப்பும் காதலியின் கல்யாணம் என்னும் சிறுகதை தொகுப்பும் வெளியிட்டுள்ளேன்
******************
முயன்றுழைத்து வாணாளில் முன்னேறு வாரை
முதுகினிலே குத்துவதை முடிவாக்கிக் கொள்ளும்
வியக்குவகை செய்தொருவன் விண்தொட்டு விட்டால்
வேதனையை அவனிடத்தில் விருப்புடனே கொட்டும்
உயர்ந்தவனின் நெஞ்சமது உலைச்சலுற வேண்டி
உமிழ்ந்துவிடும் வார்த்தைவழி உயர்விசத்தைப் பீய்ச்சும்
தயக்கமின்றிச் சாதனைகள் தான்செய்யா போதும்
தான்றோன்றித் தனமாயே தரந்தாழ்த்திப் பேசும்
*
முன்னேற்றப் பாதையதன் முதற்படியில் அன்று
முடியாமல் கிடந்தவனின் முகம்பாரா தோரே
பின்நாளில் அவனுயர்ந்து பெரியவனா யானால்
பிழையாகச் சித்தரித்துப் பேசிமகிழ் வாரே
தன்னாலே ஆனதெலாம் தான்செய்த தாகத்
தற்பெருமை கொள்ளுவதில்
நிலவோடு விளையாடி நிசிவானில் உறவாடி
நிசமான கதைபேச வேண்டும்
புலர்காலை பொழுதோடு புகழ்பாடும் ஒளிக்காதில்
புதிதான இசையாக வேண்டும்
மலரோடு மலராக மலர்கின்ற பனியோடு
மனம்தோய்த்து மணம்வீச வேண்டும்
சிலநேரம் அலைசெய்து சிரிக்கின்றக் குமிழாகிச்
சிறுகாற்றில் உடைந்தோட வேண்டும்
*
குறையேது மில்லாத குயில்பாடும் கவியாகிக்
குளிர்காலம் பொழிவிக்க வேண்டும்
முறையான எழிலூற்றும் முகிலாகி வயலோடு
முளைக்கின்ற வேர்க்கூட்ட வேண்டும்
உறைகின்ற பனியோடு உறைந்தொன்றி வெயில்பட்டு
ஒழுகுகிறத் துளியாக வேண்டும்
பிறைநிலவு வளர்ந்தோங்கிப் பெரிதான தொருநாளின்
பிரகாச மெனவாக வேண்டும்
*
கரையோர நண்டோடு கலந்தாடும்
நிலவோடு விளையாடி நிசிவானில் உறவாடி
நிசமான கதைபேச வேண்டும்
புலர்காலை பொழுதோடு புகழ்பாடும் ஒளிக்காதில்
புதிதான இசையாக வேண்டும்
மலரோடு மலராக மலர்கின்ற பனியோடு
மனம்தோய்த்து மணம்வீச வேண்டும்
சிலநேரம் அலைசெய்து சிரிக்கின்றக் குமிழாகிச்
சிறுகாற்றில் உடைந்தோட வேண்டும்
*
குறையேது மில்லாத குயில்பாடும் கவியாகிக்
குளிர்காலம் பொழிவிக்க வேண்டும்
முறையான எழிலூற்றும் முகிலாகி வயலோடு
முளைக்கின்ற வேர்க்கூட்ட வேண்டும்
உறைகின்ற பனியோடு உறைந்தொன்றி வெயில்பட்டு
ஒழுகுகிறத் துளியாக வேண்டும்
பிறைநிலவு வளர்ந்தோங்கிப் பெரிதான தொருநாளின்
பிரகாச மெனவாக வேண்டும்
*
கரையோர நண்டோடு கலந்தாடும்
****""*"****"********""""**""""""""
மண்டலம் காற்று விற்கக்
கடை போட்டிருந்து
இலை பைகளைக்
கிளைக்கரங்களேந்தி
மர மனிதர்கள் வரக்கூடுமென
அது காத்திருந்தது
அழுத்த மைதானத்துள்
புழுக்கம் தாளாமல்
ஒதுங்கியிருந்த சருகு சிறுவர்களிடம்
சற்று இலவசமாய்ச் சுற்றிக் கொடுத்துத் தூதனுப்பிப் பார்த்தது
யாரும் வருவதாய் தெரியவில்லை
வியாபாரம் நடக்காத வேட்கையில்
தாகித்தக் காற்று
கொஞ்சம் நீரருந்தி வரவேண்டி
நதிக்கரை தேடிப் பார்த்தது
கண்ணுக்கெட்டிய தூரத்தில்
நதியோடிய தடயங்களே
இல்லாமல் ஏமாற்றத்துடன்
திரும்பி வந்து
மறுபடியும் எட்டிப் பார்த்தது
தூரத்தில்
தண்ணீர் குப்பிகளுடன்
சிலர் கோட
****""*"****"********""""**""""""""
மண்டலம் காற்று விற்கக்
கடை போட்டிருந்து
இலை பைகளைக்
கிளைக்கரங்களேந்தி
மர மனிதர்கள் வரக்கூடுமென
அது காத்திருந்தது
அழுத்த மைதானத்துள்
புழுக்கம் தாளாமல்
ஒதுங்கியிருந்த சருகு சிறுவர்களிடம்
சற்று இலவசமாய்ச் சுற்றிக் கொடுத்துத் தூதனுப்பிப் பார்த்தது
யாரும் வருவதாய் தெரியவில்லை
வியாபாரம் நடக்காத வேட்கையில்
தாகித்தக் காற்று
கொஞ்சம் நீரருந்தி வரவேண்டி
நதிக்கரை தேடிப் பார்த்தது
கண்ணுக்கெட்டிய தூரத்தில்
நதியோடிய தடயங்களே
இல்லாமல் ஏமாற்றத்துடன்
திரும்பி வந்து
மறுபடியும் எட்டிப் பார்த்தது
தூரத்தில்
தண்ணீர் குப்பிகளுடன்
சிலர் கோட
காடுவெட்டி வீடமைத்துக் கச்சிதமாய் வாழ்வதற்குப்
பாடுபடும் மானுடம் பாரினிலே - ஓடும்
நதிமேனி ஊரில் நலியவிட்டப் பின்னால்
பதியமிட நாற்றுண்டோ பார்
*
பார்க்குமெழில் யாவும் பசுமைப் புரட்சியாய்
ஈர்க்குமதற் கேதும் இணையுண்டோ - நீர்க்குடித்து
நின்றாடும் பூந்தோப்பை நீயெடுக்கும் கோடரி
கொன்றழிக்க கூடுமோ கூறு
*
கூறுகெட்ட வாறு குவலயக் காடுகளை
தாறுமாறாய் வீழ்த்தித் தவிப்பதேன் - ஆறுவளம்
காண அடர்வனம் காத்துக் கரைகளில்
நாணலாடச் செய்தல் நன்று
*
நன்றென் றறிந்துமதை நாடா திருந்துவிட்டு
அன்றாடத் தேவைக் கலைவதுமேன் - கன்றொன்று
நாட்டக் கருதிவிடு நன்நீர்க் குறைபோக்கக்
காட்டுக்குன் பேரன்பைக் க
புன்னகை ஆறே பொன்னெழி லாளே
புந்தியி லேதோ தகராறே
உன்னெழி லோடே ஒன்றிய தேதோ
உன்னத மாகா துறலாமா
*
முன்னுரை காணா முன்னணி யேடா (ய்)
முன்வரு வாயே முகநூலா
மின்மினி யாளே மென்னிடை யூடே
மின்னலை ஏனோ வரை(ந்)தாயோ
*
கன்னலி னூரே கண்ணகி யாளே
கண்களி னாலே கதைபேசா
கன்னியு(ன்) னாலே கண்ணிமை ஏதோ
கண்டது தானே கனவாயே
*
மன்மத னோதா மந்திர(ப்) பூவே
மன்னவ னோடே வருவாயா
அன்பொடு நாமே இன்புற லாமே
அந்நிய மாகா தழகேவா!
*
கூரை திருத்தப்பட்டதும்
கச்சேரியை நிறுத்திவிடுகின்றன
சமையல் பாத்திரங்கள்
ஊன்றி எழுந்தே உயர்
நேரிசை வெண்பா
முன்னேறு மெண்ணம் முளைத்திடும் காலத்தில்
பின்தங்கி டாதே! பெரும்பயம் - உன்முன்னே
தோன்றி உடன்படா தோர்நிலைக் குட்படுத்தும்.
ஊன்றி எழுந்தே உயர். - மெய்யன் நடராஜ்
வாழ்த்துகள் மெய்யன் நடராஜ்!
வெண்பாப் புனைய முனைவோர் மேலேயுள்ள பாவினை வாசியுங்கள்.
தகுந்த எதுகையும், பொழிப்பு மோனையும் அமைத்தும், தக்க ஈற்றடியும் அமைத்தும் எழுதியிருக்கிறார்.
எந்த முயற்சியும் எடுக்காமல், தான் எழுதியதே பா என்று விவாதம் செய்யாமல், சீர்களையும், தளைகளையும், புணர்ச்சி விதியையும் அறிந்தும், காய்ச்சீர் வருமிடங்களில் இரு மாச்சீர்களை இணைக்காமலும், விளாங்காய்ச்சீர் வராமலும், கண்டபடி வகையுளி செய
======
இன்றைய உறக்கத்தில்
இந்தக் கனவு வந்தால்
நல்லதென்று யாரும்
எதிர்பார்ப்பதில்லை.
*
எதிர்பாராத கனவு வந்துவிட்டால்
எவரும் அதைப்
போ வராதே என்று
விரட்டியடிப்பதுமில்லை
**
யார் என்ன கனவு
காணவேண்டும் என்பதையும்,
யாருக்கு எப்போது கனவு வரும் என்பதையும்
கண்கள் தீர்மானிப்பதில்லை
**
சில புத்தகங்களை விரிக்கும்போது
வரும் தூக்கத்தைப்போல
கனவுகள் நமக்கு
எளிதாக வந்துவிடுவதில்லை
**
சில அலுவலக மேசைகளைக்
காணும் அதிகாரிகளுக்கு
வரும் தூக்கத்தைபோல
சில அவசியமான ஆசைகளில்
மிதக்கும்போது
கனவுகள் நமக்கு வந்து விடுவதுமில்லை
**
காத்திருக்கும்போது வாராமல்
கண்ட கண்ட நேரங்கள
மெய்யன் நடராஜ்
பனித்துளியில் பூக்கள் குளித்திருந்த புதுக் காலைப்பொழுது அது. தைமாதத்தின் தரை தொட்டக்குளிர் பூமி எங்கும் பரவிக் கிடந்தது சிலுசிலுப்பாக. மலை முகடுகளைக் கிழித்துக் கொண்டு வெய்யோன் வரத் தயாராகிக் கொண்டிருந்தான். இன்னும் சில நிமிட நடையில் அக்காவின் வீட்டை அடைந்துவிடலாம் என்னும் முனைப்பில் நடையைத் தொடர்ந்த மகரந்தன் சுமாரான நிறம். பார்ப்பதற்கு சினிமா கதாநாயகன் போலில்லாவிட்டாலும் இரண்டாந்தர நடிகரின் வரிசையில் சேர்க்கலாம். . மனதும் உடலும் தளர்ந்த நடையில் இருந்தவனுக்கு புலரும் பொழுதை ரசிக்கும் மனசு இல்லாத நிலை. ஒரு சாதாரண கட்டமிட்ட சட்டையின் கைகளை மடக்கிவிட்டிருந்தவன் வழக்கம்போல் வேட
இன்னும் ஒரு முறை காதலிக்கத் தூண்டுகிறது..... ஒவ்வொரு முறை படிக்கும் போதும் இன்னும் ஒரு முறை காதலிக்கத் தோன்றுகிறது.....
"காதல் காதல் காதல்...... போயின்....... சாதல் சாதல் சாதல்...."
"அது................... சொல்லாமல்........ ஏங்க ஏங்க.......... அழுகை வந்தது...........................எந்தன் காதல் சொல்லும் போது சொல்லாமல் வந்த அழுகை நின்றது......"
"வானில் இடத்தையெல்லாம் இந்த வெண்ணிலா.................. வந்து தழுவுது பார்......"
காதல்.........ம்ம்ம்ம்ம்............
கவிதைக்குள் நுழைந்து வெளி வராமலே போகும் காதலுக்குள்..... அவள்....
அவளுக்குள் நான்....
எங்களுக்குள் காதல்...
காதலுக
நண்பர்கள் (204)

இசைப்ரியன்
விளந்தை (திருக்கோவிலூர்)

மதனா
chennai

மாயா
சேலம்

லிமுஹம்மது அலி
வாலிநோக்கம்
