கனித்தோட்டம் ரமேஷ் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கனித்தோட்டம் ரமேஷ்
இடம்:  சென்னை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  31-Aug-2015
பார்த்தவர்கள்:  269
புள்ளி:  113

என்னைப் பற்றி...

முதுநிலைப் பொறியியல் கல்வி முடித்து 43 ஆண்டுகள் பணி செய்து சென்ற வருடம் ஒய்வு பெற்றேன். இந்த வருடம் ( 2015) முதல் தமிழ் எழுதும் முயற்சியில் இறங்கி இருக்கிறேன். kanithottam.blogspot.com என்ற எனது பதிவில் இரண்டு மாதங்களாக கவிதைகளைப் பதித்து வருகிறேன்.ezhuthu.com மூலம் தமிழ்ப் படைப்பாளிகள் பலர் படைப்புகளை படித்து ரசிக்க ஆவல்.
ப்லாக்ஸ்பாட்-இல் கனித்தோட்டம் என்ற முகவரியின் கீழ் படைப்புகளை வெளியிட்டு வருகிறேன்.

என் படைப்புகள்
கனித்தோட்டம் ரமேஷ் செய்திகள்
கனித்தோட்டம் ரமேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Oct-2018 3:10 pm

இரண்டு மாதம் கோடை விடுப்பில்

-----வந்தாள் அமெரிக்கப் பேத்தி.

தமிழில் பேசக் கற்றுக் கொடுக்க

-----முயன்றாள் நம்மூர்ப் பாட்டி

இரண்டு மாதம் ஆனபின்னே

-----பேத்தி திரும்பிப் போச்சு.

பாட்டி இப்போ அமெரிக்கன் இங்கிலீஷில்

-----பொளந்து தள்ளல் ஆச்சு!

மேலும்

கனித்தோட்டம் ரமேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Oct-2018 2:50 pm

நித்தம்நித்தம் நீர்பாச்சி
நான்வளத்த தென்னமரம்
பக்கத்து வீட்டுப்பக்கம்
தலைசாச்சு குலபோட
குலபோட்ட காயையெல்லாம்
களவு செஞ்சானே !- அதை
போனாப்போ கட்டுமின்னு
வுட்டுப் புட்டேனே

மாங்கன்னை நான்நட்டு
மல்கோவா மரம் வளத்தேன்.
மதில்தாண்டி மரக் கிளைகள்
அவன்வீட்டு மாடியிலே
பழமாக பழுத்துத் தொங்க
பரிச்சு தின்னானே - அதயும்
போனாப்போ கட்டுமின்னு
வுட்டுப் புட்டேனே

வேலிக்குப் பக்கம் நட்ட
எலுமிச்சஞ் செடியினிலே
பச்சமஞ்ச நிறமாக
காச்சிருந்த பழமெதையும்
மிச்சம்மீதி வெக்காமல்
பறிச்சுக் கொண்டானே - அதயும்
போனாப்போ கட்டுமின்னு
வுட்டுப் புட்டேனே

மேலும்

உமர் அளித்த கருத்துக் கணிப்பில் (public) aro... மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
09-Sep-2018 5:03 pm

தளத்தில் முன்புபோல் இல்லாமல் எல்லோருடைய பதிவுகளுக்கும் மிகவும் குறைந்த கருத்துக்கள் வரக் காரணம்?

மேலும்

எல்லாருக்கும் வணக்கம், இது ஒரு முக்கியமான கேள்வி தான், நமது தளத்தின் மேம்பாட்டு பிழை மற்றும் நிர்வாகமும் இதற்கு முக்கியமான காரணம். ஒரு கருத்தை பதிவு செய்வதற்கு வெகுநேரம் பிடிக்கிறது, அப்படியிருக்க எப்படி எல்லோருக்கும் பொறுமை இருக்கும் நான் இதைப்பற்றி வெகு நாட்களுக்கு முன்பே தளத்தின் நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளேன் அப்படி இருந்தும் அவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று எனக்கு தோன்றுகிறது இந்த பிரச்சனை கடந்த நான்கு மாதங்களாகவே இருக்கிறது தனக்கு நிர்வாகம் என்ன செய்து கொண்டிருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. இது ஒரு புறம் இருக்கட்டும் தளத்தில் பதிவு செய்யும் எழுத்தாளர்கள் பலர் நல்ல தரமான படைப்புகளை பதிவதில் குறை வைக்கிறார்கள். அதனால் சில நல்ல எழுத்தாளர்களின் படைப்புகளையும் நாம் தவறிவிடுகிறோம்; எனவே அனைத்து பதிவாளர்களும் மற்றவர்களின் படைப்புகளை படித்து விட்டு கருத்து பதிந்து விட்டு பின்பு உங்களின் படைப்புகளை படைக்க துவங்குங்கள். குறிப்பாக கவிதை என்று எழுதுபவர்களுக்கு நான் எனது கருத்தாக சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான் உங்களை மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் தயவுசெய்து கவிதைகளை எழுதத் தெரிந்த பின்பு எழுதுங்கள் திரைப்படங்களில் வரும் பஞ்ச் வசனங்களை கவிதைகள் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் இன்னும் பல பேர் நம் தளத்தில் உள்ளவர்கள் அவ்வாறு எழுதப்படுவது கவிதை அல்ல ஒரு அடுக்குமொழி வசனமாக இருக்கலாம் எனவே தயவு செய்து மீண்டும் இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன்; இனிமேலும் கவிதை எழுதுவதற்கு முன்பு கவிதைகளை வாசித்து சுவைக்க பழகுங்கள். அதுவே உங்களுக்கு ஏது நல்ல கவிதை என்று சொல்லித்தரும் அதன் பின்பு கவிதை எழுதுங்கள். என்கருத்து உங்களில் யாரையேனும் புண் படுத்தியிருந்தால் அதற்காக நான் வருத்தம் தெரிவிக்க போவதில்லை, எதற்காக புண்பட்டோம் என்று சிந்தித்து பாருங்கள்.... தானாகவே தளம் நல்ல நிலைமைக்கு வந்துவிடும்... நன்றி.... தளம் சிறப்பாக செயல்பட என் வாழ்த்துக்கள். 17-Nov-2018 1:03 pm
காதல் கவிதைகள் என்ற பெயரில் வரும் கவிதைகள் பலவும் மிகச் சாதாரணமாக உள்ளன. 30-Sep-2018 5:08 pm
சரியாகச் சொன்னீர்கள் தோழரே...! விமர்சனத்தின் குறைபாடும், தள மேம்பாட்டின் குறைபாடும், எழுத்து தளத்தின் தரத்தினை குறைக்கும் வகையில் உள்ளதாக எண்ணுகிறேன். உதாரணமாக :- கருத்து வழங்குவதாக இருந்தால்... மீண்டும் லாகின் செய்ய வேண்டியுள்ளது...பத்து படைப்புகளுக்கு கருத்து வழங்க நினைத்து எழுதினால்... இரண்டிற்கு பூர்த்தியாவதற்குள்ளாகவே போதும்..போதும் எனும் அளவுக்கு எரிச்சலாகி விடுகிறது. அடுத்ததாக... படைப்புகளின் தரங்களை எழுத்து குழுமம் சிறிது கவனம் செலுத்தினால் மிகவும் நன்றாக இருக்கும்.ஏனெனில், நீங்கள் சொன்னதைப்போல.... சிறந்த கவிதைகள்,சிறந்த நகைச்சுவைகள் என்ற பட்டியலில் சராமாரியாக அனைத்து படைப்புகளும் இடம்பெறுவதால்.... "சிறந்த" எனும் வார்த்தைக்கே அர்த்தமில்லாமல் போய்விடுகிறது. ஆவலோடு நாம் அந்த படைப்புகளை சென்று படிக்கும்போது அழுவதா...?சிரிப்பதா..?எனத் தெரியவில்லை...! "நீ...நான்..காதல்..அருமை.." சமீபத்தில் தளத்தில் படித்த கவிதை...!! நொந்துதான் போனேன்..! அதற்காக படைப்பாளியையோ.. அல்லது படைத்த படைப்புகளையோ குறைசொல்வதாக எண்ண வேண்டாம். எல்லோருக்கும், அவரவர்க்கு தோன்றும் கற்பனைகளை எழுத முழு உரிமை உண்டு.அது ஒரு எழுத்தாக இருந்தாலும்..ஒரு வரியாக இருந்தாலும் சரியே...! இருப்பினும் அது சிறந்ததா...? மிகச்சிறந்ததா..? என்று தரம்பிரித்து வாசகர்களுக்கு வழங்க வேண்டியது.. எழுத்து குழுமத்தின் கனிவான, கொஞ்சம் சிரமமான சேவையே என்பதில் ஐயமில்லை. இவ்வாறு செய்யும் பட்சத்தில், எத்தனை தளங்கள் இருந்தாலும்.. அத்தனையையும் எழுத்துதளம் நிச்சயம் முந்திவிடும். இக்கருத்து எழுத்துதள நிர்வாகிகளும், எழுத்துகுழுமமும் கவனித்து மேல்நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்.! கருத்திற்கு மிக்க நன்றி தோழரே..! 26-Sep-2018 8:49 pm
ஒருவர் படைப்பை வாழ்த்தி கொண்டே இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும் விமரிசனம் என்பது முக்கியம். இங்கு அது குறைவு . மேலும் ஒரு படைப்பு வாயிலாக படைப்பாளி கேள்விக்கு ஆளாகவேண்டிய நிர்பந்தம் கொண்டவர். பதில் அளிக்க கடமை பட்டவர். காதல் என்ற சொறி கவிதைகளை அள்ளி விட்டு கொண்டு இருந்தால் என்ன செய்வது . சிலர் பெயர் சில தலைப்பு பார்த்ததும் எழுதும் ஆவல் போய் விடுகிறது . தளத்தார் மிகுந்த பொறுப்புடன் அணுக வேண்டிய நேரம் இது . தளம் தீவிர சிந்தனை கொண்டவர்களை தவற விட கூடாது . இணைய உலகில் நிறைய தளம் உண்டு. சிட்டு போல பலர் பறந்து விட்டனர் . இனி அவர்களே எழுதி அவர்களே படித்து கொள்ளட்டும் என்று .... 24-Sep-2018 10:39 am
கனித்தோட்டம் ரமேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Sep-2018 4:51 pm

பேத்திகளுக்குப் புரிவதில்லை


பேத்திகளுக்குப் புரிவதில்லை

கவிதை எழுதுகிறேன் என்ற பெயரில்

வெள்ளைத் தாள்களில் கிறுக்கிக் கிறுக்கிக் கிழித்துப் போடும் தாத்தாவைத் திட்டாத அம்மா

தான் செய்தால் மட்டும் ஏன் திட்டுகிறாள் என்று !

மேலும்

ஹுமேரா பர்வீன் அளித்த படைப்பில் (public) deepika59be6c07ad717 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
09-Aug-2018 4:47 pm

வாழ்க்கையின் பக்கங்கள் ...
மிகவும் குழப்பமானவை .
எது நல்லது எது கெட்டது
என தெரியாக்கோணங்களில்

வாழ்க்கையின் பக்கங்கள் ...
மிகவும் பயங்கரமானவை .
தவறென்றே தெரியாமல் செய்த தவறுக்கு
தண்டனை வலுப்பெறும் வேளைகளில்

வாழ்க்கையின் பக்கங்கள் ...
மிகவும் ஆபத்தானவை .
கூடா நட்பு கொண்டு
குறிக்கோள் இழந்து வாழத்தூண்டுகையில்

வாழ்க்கையின் பக்கங்கள் ...
மிகவும் இலேசானவை
கவலைகள் கோடி இருந்தாலும்
அதை மறந்து
மனம் சிரிக்கும் மனிதர்களுக்கு

வாழ்க்கையின் பக்கங்கள் ...
மிகவும் மகிழ்ச்சியானவை
இளமை தடுமாறும் சூழலில்
தடம் மாறாமல் போகும் பாதைகளில்

வாழ்க்கையின் பக்கங்கள்...
மிகவும் ர

மேலும்

karuthukku nanri 27-Aug-2018 12:50 pm
Vazhkai entrum matrangalai kondathu anal matrangalai than ezhukkolla manam marukkirathu vazhthukkal 15-Aug-2018 12:48 pm
karuthuku nanri sir 14-Aug-2018 3:36 pm
karuthuku mikka nanri sir ... 14-Aug-2018 3:35 pm
கனித்தோட்டம் ரமேஷ் - கனித்தோட்டம் ரமேஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Aug-2018 10:42 am

ரசவாதம்

காலையில் விழிக்கும்போதே கனத்த மனத்துடன் எழுகின்றேன்!

இன்னொரு நாளைக் கடக்க வேண்டுமே என்ற சோர்வோடும்,
எப்படிக் கடக்கப்போகிறேன் என்ற கலக்கத்தோடும் !

நேற்றுச் செய்யத் தவறிய கடமைகள்
கழுத்தில் கட்டிய கல்போல் சுமக்கின்றன.

செய்தாகவேண்டும் என்ற புரிதலுக்கும்
செய்யாதே எனத்தூண்டும்
மனத்தின் மறுதலிப்புக்கும்
இடையே நடக்கும் போராட்டமாக
நாள் ஊர்ந்து நகர்கிறது.

நிமிடங்களாக நீளத் தயங்கும் நொடிகளையும்
மணிகளாய் மாற மறுக்கும் நிமிடங்களையும்

எப்படியோ தாண்டி

ஓரு நாளைக் கடந்து
மீண்டும் இரவில் போர்வைக்குள் புகுந்துகொள்கிறேன்.

ஒவ்வொருநாளும் இப்படி நகர மறுக்கின்றபோதும்,

மேலும்

என் மனமார்ந்த நன்றிகள் , நண்பரே! 10-Aug-2018 4:33 pm
கலக்கல் அருமை,, அற்புதம்..... இப்படி என்னவெல்லாம் சொல்லி பாராட்ட முடியுமோ...?! அப்படியெல்லாம் பாராட்டலாம். அவ்வளவு அருமையாக உள்ளது.... வாழ்த்துக்கள். 10-Aug-2018 10:57 am
கனித்தோட்டம் ரமேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Aug-2018 10:42 am

ரசவாதம்

காலையில் விழிக்கும்போதே கனத்த மனத்துடன் எழுகின்றேன்!

இன்னொரு நாளைக் கடக்க வேண்டுமே என்ற சோர்வோடும்,
எப்படிக் கடக்கப்போகிறேன் என்ற கலக்கத்தோடும் !

நேற்றுச் செய்யத் தவறிய கடமைகள்
கழுத்தில் கட்டிய கல்போல் சுமக்கின்றன.

செய்தாகவேண்டும் என்ற புரிதலுக்கும்
செய்யாதே எனத்தூண்டும்
மனத்தின் மறுதலிப்புக்கும்
இடையே நடக்கும் போராட்டமாக
நாள் ஊர்ந்து நகர்கிறது.

நிமிடங்களாக நீளத் தயங்கும் நொடிகளையும்
மணிகளாய் மாற மறுக்கும் நிமிடங்களையும்

எப்படியோ தாண்டி

ஓரு நாளைக் கடந்து
மீண்டும் இரவில் போர்வைக்குள் புகுந்துகொள்கிறேன்.

ஒவ்வொருநாளும் இப்படி நகர மறுக்கின்றபோதும்,

மேலும்

என் மனமார்ந்த நன்றிகள் , நண்பரே! 10-Aug-2018 4:33 pm
கலக்கல் அருமை,, அற்புதம்..... இப்படி என்னவெல்லாம் சொல்லி பாராட்ட முடியுமோ...?! அப்படியெல்லாம் பாராட்டலாம். அவ்வளவு அருமையாக உள்ளது.... வாழ்த்துக்கள். 10-Aug-2018 10:57 am

தோல்வியை ஒப்புக் கொள்வாய்
+++துவண்டுநீ போக மாட்டாய்!
சால்வையாய்ச் சங்க டத்தைச்
+++ சற்றது மூடி வைக்கும்;
மேலும்நீ எடுக்க வுள்ள
+++முயற்சிகள் உனக்குள் தோன்றும்;
பாலமில் லாத போதும்
+++பயிற்சிகள் முயற்சி கூட்டும்!

அயர்ச்சியை விலக்கி வைக்க
+++அனுதினம் பழகிக் கொள்க!
முயற்சிக்குக் கைகொ டுப்பார்
+++முன்வைத்துச் செயல்கள் செய்க!
துயர்ச்சிறை விலகிப் போகும்
+++ துன்பமும் உதவி யாகும்!
பெயர்ச்சியால் தீர்வு கிட்டும்
+++பேதமை எண்ணம் நீக்கு!
===== +++++ ==========

மேலும்

அறுசீர் விருத்தங்கள் கருத்துடன் இனிமை. 24-Apr-2018 8:18 pm
கனித்தோட்டம் ரமேஷ் - மெய்யன் நடராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Apr-2018 2:21 am

காற்றுக் குழந்தை
===================
மூங்கில் முளைப்பதற்கு
முன்னதாகவே பிறந்திருந்தது
நாம் புல்லாங்குழல் செய்வோம்
என்று அறிந்திராத காற்று.
**
நம் சங்கீத ஸ்வரங்களுக்கு
முன்னதாகவே அவை
பாடியிருந்தன பாட்டு.
*
தென்றலாய் புயலாய் பல்வேறு
வடிவங்களில் பெயர்மாறி ஓரிடத்தில்
நில்லாதலைந்து திரியும்..
*
ஒரு கைதியைப்போல
அடைந்துகிடாக்காத காற்றை
வாடகைக்கு வாங்கிய நாம்
சொந்தமாக வைத்துக்கொள்ள
நினைக்கும் சுயநல பேராசைக்கு அது
அடிபணியாமல் தன்போக்கில்
தன் சுதந்திர பாதையில் போய்விட முடிவில்
நாம் மரணத்தின் வண்டியில் ஏறி
வேற்றுலகு செல்கிறோம்
*
கல்யாணம் கட்டிக் கைகழுவும்
காரிய

மேலும்

"மூங்கில் முளைப்பதற்கு முன்னதாகவே பிறந்திருந்தது நாம் புல்லாங்குழல் செய்வோம் என்று அறிந்திராத காற்று." அருமையான வரிகள்! பாராட்டுக்கள் ! 28-Apr-2018 8:51 am
கனித்தோட்டம் ரமேஷ் - மெய்யன் நடராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Feb-2017 2:06 am

வாக்குகேட்கும் காலங்களில் வாசலெங்கும் சென்று
=வணக்கங்கள் போட்டிட்ட வக்கற்றக் கொள்கை
வாக்காளன் கரங்கூப்பி வணக்கமிடும் நேரத்திலே
=வக்கணையாய் பார்த்தொதுங்கும் வசதியுள்ளக் கொள்கை
மூக்கற்ற வேளையிலே முதுகினிலே கழிவுகளின்
=மூடைகளை சுமக்கையிலே முடையறியாக் கொள்கை
நாக்கற்ற முதலைகளாய் நாட்டுக்குள் நடமாடி
=நமையிங்கு ஏப்பமிட நடித்தடிக்கும் கொள்ளை.

பார்வைக்கு அழகானப் பாசமெனும் வேலியிலே
=பதுங்கிப்பல நிறமெடுக்கும் பச்சோந்திக் கொள்கைப
போர்வைதனை போர்த்தியிங்கு புறப்பட்ட பலபேரில்
=புகழ்பூத்து வாழுதன்றோ பொல்லாத கொள்கை
கார்காலம் வெளிவந்து கத்துகின்றத் தவளைகளாய்
=கத்துமொரு காலம்வரக் காத

மேலும்

கனித்தோட்டம் ரமேஷ் - Shyamala Rajasekar அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Oct-2016 10:32 pm

ஆற்றோரப் பாதையெல்லாம் அடர்ந்தமரம் பூச்சொரியும்
காற்றோடு நாணலதும் காதலுடன் வீசிவிடும்
சேற்றோடு விராலுடனே சேல்கெண்டை போட்டியிடும்
ஊற்றெடுக்கும் நினைவுகளில் உள்ளமதும் உடன்செல்லும் !

இணைபிரியா அன்னங்கள் இன்பமுடன் நீந்திவரும்
பிணையுடனே கலைமானும் பிரியமுடன் நீர்குடிக்கும்
துணையிருக்கும் வான்நிலவும் துயிலாமல் விழித்திருக்கும்
அணைபோட்டுத் தடுத்தாலும் அடங்கிடுமோ நதியோ(யா)சை ?

ஒற்றைக்கால் கொக்குகளும் உணவுக்காய் தவமிருக்கும்
நிற்காமல் தவழ்கின்ற நீரலையில் நுரைபூக்கும்
பொற்கிரணக் கதிர்விரிய புதுவெள்ளம் புன்னகைக்கும்
சுற்றிவரும் வழியெங்கும் சுகராகம் மீட்டிடுமே !

மேலும்

இறைவன் அளித்த இசையின் பிறப்பிடம்- நதி நதிக்கரை ஞாபகங்கள் நதியினிசை போன்று அழகாயிருக்கிறது. வாழ்த்துக்கள் தாயே 22-Oct-2016 9:47 pm
நதிக்கரை ஞாபகங்கள் மனதில் சங்கதி மீட்டி உறங்குகிறது 22-Oct-2016 9:42 am
அருமை அருமை மிக இனிமையான கவிதை இந்த மாதிரி கவிதையெல்லாம் யாரு இங்கே எழுதுகிறார்கள் .இளைஞர்கள் அவர்கள் உலகமே தனி .மானஸீகக் காதலிக்கு மனதின் மடல் எழுதியே முடியவில்லை.வயசு அப்படி. ஏற்றார் போல் படம் எங்கிருந்து எடுக்கிறீர்கள் வாழ்த்துக்கள் அன்புடன்,கவின் சாரலன் 21-Oct-2016 10:57 pm

கனவிலே பெண்ணொன்று இன்றிங்கு கண்டேன்
இணையிலா அவளழகைக் கண்டே வியந்தேன்!
முற்றும் அதை சொல்லுரைக்க முடியாது எனினும்
சற்றேனும் சொல்லியோர் கவிதை படிப்பேன்.

கருங்குழல் கரையிட்ட பிறை நுதல் நெற்றியோ?
மருங்கினிரு மந்தார இலையொத்த மடல்களோ?
மருளும் மான் விழிபழிக்கும் கருநீலக் கண்களோ?
மருவற்ற முகம் நடுவில் விரிந்த நீள் நாசியோ?

சிருங்கார ரசம் சிந்தும் சிந்தூரச் செவ்விதழ்கள்
விருந்துண்ண வாவென்று வரவேற்கும் கனியோ?
மின்னலென இதழ்.இடையில் மின்னும் ஒளிக்கீற்று
புன்னகையோ , கோத்தெடுத்த நல்முத்துச் சரமோ

கன்னக் கதுப்புமாங் கனிதந்த மொய்யோ ?
எண்ணரும் எழில் முகம்., இது என்ன மெய்யோ?
ஒளிர்

மேலும்

கனவை நினைவில் தேடுதல் என்பதே கடினம் அதில் காதலை என்றால் ஆயுளும் அதோடு தான் போரிடும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Apr-2016 8:06 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (17)

ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
user photo

Kavinjan

Thoothukudi

இவர் பின்தொடர்பவர்கள் (19)

Dr.V.K.Kanniappan

Dr.V.K.Kanniappan

மதுரை
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (17)

லக்ஷ்மி

லக்ஷ்மி

தமிழ் நாடு
மேலே