செரிப் - சுயவிவரம்
(Profile)


பரிசு பெற்றவர்
இயற்பெயர் | : செரிப் |
இடம் | : |
பிறந்த தேதி | : 24-Jun-1982 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 3927 |
புள்ளி | : 1600 |
என்றோ ஒரு நாள்...
எழுத்திலே விழுந்தேன்
எழுத்திலே கலர்ந்தேன்
எழுத்தாலே எழுந்தேன்...
என்றோ ஓர் நாள்..
எழுத்தை துறந்தேன்
என்னையே மறந்தேன்
எங்கெங்கோ போனேன்..
என்றாலும்..
என்னுள்ளே எழுத்து
எங்கோ துயிலில்
என் பார்வையை விட்டு..
இன்று..
துயில் துறந்து..
தூரிகை பிடித்து
பதிவுகள் பல
படிப்படியாய் வர
வரம்வேண்டும்.. உங்கள்
கரம் வேண்டும்
எழுத்து நட்புக்களே..
எழுத்து நல் பூக்களே...!
நட்புடன்
குமரி பையன்..
தரை தொடமுனைந்த மழைத்துளியை தடுத்த அடர்இலைபடர்ந்த மரம்
ஒளிக்கு திரைபோட்டு தழைத்தோங்கி நின்ற விருட்சம்
நிழல் மட்டுமே அதன் அடியில் நிரந்தரம்
காற்றிடை நடந்த ஊடலில் ஊ வென்றது
உதிர்ந்த சருகுகள்
தென்றலின் தலையாட்ட வைக்கும் முயற்சி தோற்றுப்போனது கிளைகளின் நெருக்கத்தால்
திக்கி திணறி நுழைந்த தென்றல்
தாங்கி சென்றது இலையோடு உரசிய இசையை மட்டுமே
தப்பித்தவறி நுழைந்த ஒரு மழைத்துளி
இடைவெளி நுழைந்து அடி வரை அமைத்தது ஒரு வெளிர் கோடு
அந்த வெள்ளத்தைக்கண்டு விலகி
ஓடியது எறும்புக்கூட்டம்
கிளையில் புலர்ந்த பூக்களோ
ஒரு துளி கிழித்தை கோட்டினில் முகம்
பார்த்து வெட்கிச்சிரித்தது
வெட்கச்சத்தம்
ஆட்சியும் மாறும்
காட்சியும் மாறும்.
அரச பீடமும் மாறும்.
எதிரும் புதிருமாக
இருந்தவர்கள்
இணைந்து நாடாளும்
காலங்களும் மாறும்.
ஏறி மிதித்தவனும்
மிதி பட்டவனும்.
கையோடு கை குலுக்கி
தோளோடு தோள் தழுவி
பாராளுமன்றம்
நுழையும்
காலமும் மாறும்.
கண்டிப்போம்
தண்டுப்போம்
என்று நாக்கு வலித்திட
வாக்குக் கொடுத்தோர்
எல்லோரும் வாக்கு வழுக்கி
சுயநலமாய் மாறும் காலமும் கூடும்.
மாற்றம் காணாமல்
ஏற்றம் இல்லாமல்
தோற்றுப் போய்
இருளோடு இருளாக
மறைவோடு மறைவாக
வறுமை என்னும் ஓடத்திலே
துயரம் என்ற கண்ணீரிலே
ஏழையின் வாழ்வு ஓடும்.
"ஏன்டா....என்னாச்சு....பாஸ் ஏன் மரத்துல தலைகீழா தொங்கிக்கிட்டு இருக்காரு...."
"ம்ம்ம்...அவரு...தலைவலிக்கு மாத்திரை சாப்பிட்டு இருக்காராம். அது வயித்துக்குள்ள போயிடக்கூடாது...தலைக்கு போகனும்னு இப்படி தொங்கியிருக்காரு.."
"?!?!?!?!"
மெல்ல மெல்ல என்னிடத்தில்
கள்ள மில்லா பெண்ணொருத்தி
வஞ்சமில்லா வார்த்தைகளை
வாரி வீசுகிறாளே....!!! பலவாறாய்
ஏசுகிறாளே...!!!
அத்தனையும் என்காதில்
அமிர்தமாய் மாறுவதேன்...
உன் உதட்டில் பட்டதனால்
சுவையாகிவிட்டதோ..... எனக்கது
சுகமாகிவிட்டதே..!!!
அத்தை மகனே
*****************
அத்தை பெத்த மகனே
உன் வரவு எப்போ?
சித்திரைப் பாவை நான்
சத்தமாய் ஓர் செய்தி உன்
காதில் உரைப்பதுதான் எப்போ?
சிந்தும் காதலோடு நீ
முந்தானை தொடுவது எப்போ?
சந்தையிலே வாங்கி மாட்டிய
கண்ணாடி வளையல்
உடைவது தான் எப்போ?
மல்லிகை அமர்ந்த கூந்தலதை
உன் விரல் கோதுவது எப்போ?
மஞ்சள் இட்ட கன்னத்திலே
முத்தங்கள் பதிப்பது தான் எப்போ?
மகிழம் பூ மேனி
நுகர்வது எப்போ?
என் செவ்விதழ்
சுவைப்பவை தான் எப்போ?
செங்கரும்பு வெள்ளக்கட்டி
செல்லக் குட்டி சின்னக் கண்ணா
என்று அழைத்திடவே தொட்டில்
ஒன்று இடுவதுதான் எப்போ?
பட்டு மெத்தை காத்திருக்க.
பவள மங்கை பூத்திருக்க.
இருண்ட வானம் நீர் தெளி
நீண்ட இடைவெளி நமக்குள்
நீங்க மறுக்கும் சடைவுகள்
நீதமில்லா நிலைமைகள்..!
இடைகாலம் விட்ட குறைகளை உன்
இடைதொட்டு நீக்கிட விழைகிறேன்.!!
விடைபெற்று பேசாமல் விலகியது உன் விரல்தொட்டு ஆரம்பம் செய்கிறது..!!!
தடைநீங்கி தங்கடம் தெறித்தோடவே
நாம் எடைகூட்டி அன்பினை அழகாக்குவோம்..!!!
கட்டிலுக்கு கால்வலியாம்...
நீயும் நானும் படுத்ததிலே...!
கருத்த மச்சான் கனவுகண்டேன்...!
பருத்திவிதை வெடிக்கக்கண்டேன்..!
இப்போ...
நீயில்லாம படுத்ததிலே...
நெஞ்சுக்குள்ள..நெருஞ்சிமுள்ளே..!
புடிச்சுவந்த விட்டிலிடம்...
வெளிச்சமில்லை..என்ன சொல்ல..!
ஒத்தையில இருக்கேனே...
தூக்கணாங்குருவி நானே...!!!
கன்னமிரண்டின் உரசலுக்கு
*************************************************************************
வண்ணவண்ண வண்டினங்கள் பறந்துலவி சேர்க்கையிட
புன்னகைப் பூக்களதும் வாய்திறந்து தேனவிழ்க்க
பெண்மோகம் தூண்ட ஆணுணர்வு விஞ்சிநிற்க
சன்னலோரப் பார்வையில் என்னையிழுத்துச் சாய்த்தவளே
எண்ணங்கள் ஆயிரமாய் என்மனதை வாட்டுதடி
கன்னமிரண்டின் உரசலுக்கு உணர்ச்சிகள் கூடுகையில்
பின்னமோ உன்மனது முழுமைதான் எப்போ
வாலிப வண்ணத்தின் ஓவியமே நீ
மானிட எண்ணத்தின் காவியமே நீ
ஜானிடை மெல்லியதின் தங்கமே னி
வானடை மழைதன்னின் மேகமே னி
காலத்தின் வேகத்தில் நொடிமுள்ளே நீ
காதலின் மோகத்தில் பனைகள்ளே நீ
பேரிடர் மோதலின் பனிப்பூவே நீ
கோரிடும் வறியோர்க்கு செல்வமே நீ
வந்திடுவாயோ...மணம் தந்திடுவாயோ...மனம்
வென்றிடுவாயோ...வனம்
மாற்றிடுவாயோ...சுமை
போக்கிடுவாயோ..சுகம்
கூட்டிடுவாயோ.. எமைச்
சேர்ந்திடுவாயோ...!!
.........................................................
கருத்திலே கள்ளூற்றி கவிதைகள்
நீ பாடி
பொருத்தவா பார்க்கிறாய் பொய்களை நீ கூட்டி...!
சிக்கமாட்டேன் சிங்காரி நான்...
சிப்பாயின் வழிமகள் நான்...!
வார்த்தைக்குள் வசப்படாத என்
வரலாற்றின் வத்திக்குச்சியே...!
உன் போதையில் என் பாதை
மறந்துவிட்டேன்...!
உன் கண்ஜாடையில் என் காலம் கடத்திவிட்டேன்..!
உன் கைத்தாங்கலில் நான் இமயம்
அடைந்துவிட்டேன்..!
மண் பொருளாய் இருந்த என்னை
மென்பொருள் போல் ஆக்கிவிட்டாய்
பொன் பொருளாய் மாற்றிவிட்டாய்.!
மந்திரமொழி மங்கையே...!மயக்கும்
எந்திரனின் தங்கையே..! மன்னவனின் மடிமீது உடல் கிடத்தி
ஒட்டியிருந்தாலும்.... தூரம் எங்கு
சென்றாயோ....உயிர்பிரிந்தே....!
சொல்வாயோ....சொல்லாமல் எனைக் கொல்வாயோ...!
"உங்க மனைவிக்கு கோவம் வந்தா என்ன நடக்கும்..?"
"ம்ம்ம்...மூஞ்சில ஓங்கி ஒரு அறை..."
"சூப்பர்...ஆம்பளை சார் நீங்க..."
"யோவ்... எனக்கு விழும்யா..."
"அப்போ...உங்களுக்கு கோபம் வந்தா...?"
"ம்ம்ம்...அவளுக்கு மட்டுந்தான் அறைய தெரியுமா.....நம்மளும் அறைவோம்ல..."
"சூப்பர்..பதிலுக்கு பதிலா சார்..."
(பெருமூச்சுடன்...)"ம்ஹும்....அதான் இல்லை...அவ அறையுறதுக்கு முன்னாடி நானே... என்னை அறைஞ்சுக்குவேன்ல...எப்பிடி....?"
"ம்ம்ம்....இதெல்லாம் ஒரு பொழைப்பு....!?!?!?"