Mariselvam - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Mariselvam
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  11-Feb-2019
பார்த்தவர்கள்:  83
புள்ளி:  43

என் படைப்புகள்
Mariselvam செய்திகள்
Mariselvam - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Oct-2022 2:49 pm

அந்தி சாய்ந்து கொண்டிருக்கிறது
தன்னிரு பெருங் கரு விழிகளைச்
சுழற்றிச் சுழற்றிப் பார்த்தபடி
மாலைச் சூரியனின் மங்கும்
கதிர்கள் விழும்
சாலையைக் கடக்கிறாள்
சுழன்ற விழிகள்
நொடிப் பொழுது
நொடிப் பொழுதே தான்
என்மீது விழுந்தன
விழுந்ததில் எழுந்தது எனது
சூரியன்
நான் மெல்லிய புன்னகையோடு
அவள் வதனத்தைப் பார்த்தேன்
சிவந்த கன்னங்கள்
மிரண்டு திரண்டிருந்தன
பாதி தூரம் கடந்தபின்
கசிகிறதொரு சிறு நகை
பத்திரமாய் எடுத்து சட்டைப் பையில்
போட்டுக் கொண்டேன்
சாலையில் கண்டெடுத்த காசை
தொட்டுத் தொட்டுப் பார்க்கும்
சின்னஞ்சிறு சிறுவன் போல
தொட்டுப் பார்க்கிறேன்
கணந்தோறும்
அச்சிறு நகையை

மேலும்

Mariselvam - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Oct-2022 2:46 pm

பிரகாரம் காலியாய்க் கிடக்க
ஓடியோடி விளையாடுகிறது
பிள்ளை
கருங்கல்லில் தப் தப் என்று
சத்தமெழ ஓடும் அவளை
ஐந்தெழுத்து மனனம் செய்து கொண்டிருந்த
கிழவன் விழியுயர்த்திப் பார்க்கிறான்
நெஞ்சுருக கோபுரம் பார்த்தவள்
கண் நிறையப் பார்க்கிறாள்
தூர தூரமாய் அமர்ந்தவர்கள்
பார்க்கிறார்கள்
அபிஷேகப் பாலுக்காகக் காத்திருக்கும்
பூனைகளும் பசித்த கண்களில்
பார்க்க
பிள்ளை ஓடி விளையாடுகிறது
கவனம் கலைந்த ஈசன்
கர்ப்பம் விட்டிறங்கி
வந்து நிற்க
பின்னால் வந்த
கொடியிடை உமையாள்
பிள்ளைக்கு காலிடறிடப் போகிறது
என்கிறாள்
அபிஷேகம் அபிஷேகம் என்று யாரோ அழைக்க
ஜடாமுடியைத் தூக்கிக் கொண்டோடும் ஈசன்
சத்தம் வராமல் அ

மேலும்

Mariselvam - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Apr-2021 1:51 pm

யார் குறித்தும்
எவை குறித்தும்
எந்த வருத்தமுமில்லை

என் வருத்தமெல்லாம்
இவ்வளவு சீக்கிரம்
எல்லாவற்றையும்
எப்பொழுதும்
இழப்பது குறித்துத் தான்

மேலும்

Mariselvam - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Apr-2021 1:50 pm

நாம் நம்மைக்
கைவிட்ட கணம்
கண்ணாடியில் மோதிச்
சிதைந்த பட்டாம்பூச்சியின்
நிறத்தை ஒத்திருக்கிறது

எதைக் குறித்தும்
ப்ரக்ஞை இன்றிக் கமழ்கிறது
மலரொன்று

புன்முறுவலோடு தலையசைக்கிறாய்
விடைபெறுதலின் நேர்த்தியோடு
விடைபெறுதலின் கடைசிக் கனத்தோடு

எந்த வலியும் உணராமல்
உணர்த்தாமல்
விடைகொடுக்கிறேன்
குறுநகையோடு

யார் யாரைக் கைவிட்டதோ
கடைசியாக நீட்டிய கையைப்
பற்றிக் கொண்டிருந்திருக்கலாம்
நீ எனினும்

மேலும்

Mariselvam - Mariselvam அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Mar-2019 10:47 am

கூடலின் சொற்களை மருந்துக்கும்
எடுத்துக் கொள்ளாத நீ
ஊடலின் பொருட்டு நான் வீசி எறியும்
சொற்களை மட்டும் பொறுக்கி எடுத்து
வைத்துக் கொள்வதேனோ

அவை கனம் மிக்கவை
அவை சுடுபவை
அவை கூர்மையானவை
அவை பகடியானவை
அவை நரியைப் போன்றவை
அவை மொத்தத்தில் என்னைப் போன்றவை

ஏதோ சினத்தில் வீசியதை எல்லாம்
பொறுக்காதே
விட்டுவிடு சிறிது நேரத்தில் வந்து அவையே
என் கழுத்தை அறுக்கும்
நான் பார்த்துக் கொள்கிறேன்
புரிகிறதா உனக்கு

மேலும்

நன்றி 06-Mar-2019 7:26 pm
நன்றி 06-Mar-2019 7:24 pm
சூழ்நிலையை அழகாக உங்கள் கவிதையில் கூறியுள்ளீர்கள். 06-Mar-2019 7:11 pm
miga alagu 06-Mar-2019 5:37 pm
மேலும்...
கருத்துகள்

மேலே