பிரியா - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : பிரியா |
இடம் | : பெங்களூரு |
பிறந்த தேதி | : 20-Jul-1991 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 24-Mar-2018 |
பார்த்தவர்கள் | : 1667 |
புள்ளி | : 243 |
மிகவும் இயல்பான அதே நேரத்தில் மிகவும் நிறைய பேசுபவள் .....ஆனால் உபயோகமா இருக்குமா என்று யோசித்து தான் பேசுவேன்.. புன்னகை என்ற சொத்தை அளவுக்கு மிகுதியாக வைத்திருப்பவள்.....
பொதிகைத் தமிழில் சொல்லெடுத்து
புதுநிலவு பொழிவில் எழிலெடுத்து
பளிங்கில் ஒரு சிலை இவளை வடித்தால்
அஜந்தா சிற்பமும் அசந்து நிற்கும்
கட்டளையிட கடைவிழிகள் காதல் மொழிபேச நீலவானின்
வட்டநிலா அங்குமிங்கும் உலவிவர நிலவும் மெல்லியகாற்றும்
திட்டமிட்டு கைகோர்த்து நடந்திடும் மாலை வேளைதன்னில்
கட்டான என்தோளில் சாய்ந்துவரும் நீலக்குழல் நிலவே
கட்டளையிட கடைவிழிகள் காதல் பேச
வட்டநிலா அங்குமிங்கும் உலவிவர நிலவுகாற்று
திட்டமிட்டு கைகோர்த்து நடந்திடும் மாலையில்
கட்டான என்தோளில் சாய்ந்துவரும் எழிலே
கட்டளைகள் இட்டிட கண்ணிரண்டும் காதலில்
வட்டநிலா வானில்மென் தென்றல்காற் றோடுசேர்ந்து
திட்டமிட்டு கைகோர்த்து சென்றிடும் மாலையில்நீ
கட்டான என்தோள்மீ தில்
மூன்று வடிவில் தோளில்----
ஜன்னலை திறந்தேன் காற்று வந்தது ...
மனதை திறந்தேன் நீ வந்தாய் ...
மௌனத்தை கலைத்தேன் மனம் ஒன்றானது ...
மனதை கலைத்தேன் மனம் இரண்டானது ....
மௌனம் மனம் இரண்டையும் கலைத்தேன் ...
""""காதல்"""" என்ற ஒன்று வந்தது ....
கல்லைச் செதுக்கி உன்னை சிலை செய்பவன் சிலைக்கலைஞன்
கல்லை உடைத்து சாலை சமைப்பவன் சாலைக் கலைஞன்
கல்சாலையில் மாலையில் நடக்கும் நீ சோலைக்கிளி
சொல்லில் சோலைக்கிளியை செதுக்குபவன் கவிதைக்கலைஞன்
மலர் என்பது அவள் பெயர்
மலரும் மலர்விழி அவள்விழி
மல்லிப் போல் அழகு அவள்
மலரும் தாமரையாய் அவள்முகம்
முல்லைபோல் அவள் சிரிப்பு
அல்லித் தண்டனையை அவள் இடை
மனம் என்ற மூன்று எழுத்து இதயம் என்ற நாலெழுத்தில் உள்ளது ..
இதயம் என்ற நாலெழுத்து உடம்பு என்ற நாலெழுத்தில் அடங்குகிறது ...
உடம்பு என்ற நாலெழுத்து உயிர் என்ற மூன்றெழுத்தை சார்ந்துள்ளது ,,..
உயிர் இருப்பதை இதயம் என்ற நாலெழுத்தை கொண்டு அறிவர் ...
மனம் என்ற மூன்றெழுத்து மந்திரம் இதயம் என்ற நாலெழுத்தில் உள்ளது ..
மனம் என்ற மூன்றெழுத்து மந்திரம் என் மனதில் பதிய பல காரணங்கள் உண்டு ..
என் மனம் ஏனோ காயப்பட்டுள்ளது ....
நினைத்தது நடக்கவில்லை என்றா? நினைத்த மாதிரி நடக்கவில்லை என்றா jQuery17109654208717906736_1660988219881?
நினைத்தது நடக்குமா நடக்காதா என்றா ???
எத்தனை கேள்விகள் எனக்குள் ....
இவை அனைத்து
ரோஜாவில் இருக்கும் முட்கள் ரோஜாவிற்கு பாரமில்லை...
அது ரோஜாப்பூவை காக்கும் அரண் ..
எவரும் அதை தீண்டாமல் இருக்க அரணாக உள்ளது
அதுபோல் தான் நீயும்..
என்னையும் காக்கும் அரணாக இருக்கிறாய்
ரோஜாவின் முள் போல் பார்ப்பதற்கு
கரடு முரடாய் இருப்பாய்...
ஆனால், எனக்கு மட்டும் தான் தெரியும் அது என் மேல் வைத்திருக்கும் அன்பின் வெளிப்பாடு ..
காதல் என்ற ஒன்று மட்டும் தான் என் கண்ணுக்கு தெரியும் ....
ரோஜாவின் வாசத்தை விட உன் காதலின் வாசமே பெரியது என்னை பொருத்த வரை ....
என்னை அறியா மனதில் வந்தன எதிர்மறை எண்ணங்கள் ...
வந்ததும் தெரியவில்லை போனதும் தெரியவில்லை ....
ஆனால், ஏதோ ஒன்று என்னை பின்தொடர்ந்து வருகிறது ....
என்னசெய்ய என்னுள் இருக்கும் மனதை கேட்க தான் செய்தேன் ....
மனமோ ஏதும் கூறவில்லை ....
என்ன செய்வது என்று அறியா பேதையாய் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் இவ்வுலகில் ....
என்ன செய்ய என்று யாரிடம் கரணம் கேட்டாலும் யாரும் கூறஇயலாது ...
என் வலி என் மனதில் மட்டுமே
தனிமை வாழ்வின் ஓர் அங்கம்
தனிமை வாழ்வின் ஓர் உணர்வு
தனிமையில் இனிமை ஓர் சுகம்
இனிமையில் தனிமை ஓர் வரம்
ஆனால் இனிமையில் தனிமை
காணமுடியாது ...
அது தான் தனிமையின் தனித்துவம் ...
வாழ்க்கையில் சில மணி நேரம்
தனிமை இனிக்கும் ...
வாழ்க்கையில் பல மணி நேரம்
தனிமை கசக்கும் ...
வாழ்க்கை தத்துவத்தில் வாழ்ந்து
தான் பார்க்க வேண்டும் தனிமையை ..
தனிமையில் சுகம் காண இனிமை தேவை...
தனிமையின் நண்பன் கற்பனை
கற்பனையின் ஊற்று தனிமை ...
இவை இணைபிரியா இரட்டையர்கள் ...
சுமைகளை இறக்கும் இடம் தனிமை ...
இனிமைகளை நினைக்கும் இடம் தனிமை .
தனிமை இல்லையேல் இனிமை இல்லை ....
இனிமை இல்லையேல் தனிமை உண்டு ....
என் கண்களின் கருவிழியே ...
அழகின் திருவுருவே ...
கனவில் கண்டவனே..
காவிய நாயகனே ..
கடல் அலை போல் பொங்கும்
பாசத்தை அளிப்பவனே...
சிரிப்பு என்னும் பொக்கிக்ஷத்தின்
சொந்தக்காரனே ...
கண்ணுக்கினியாளின் கண்ணுக்கினியனே..
என் சோகத்தில் பங்கெடுத்து
பாசத்தில் தோல் கொடுப்பவனே..
சிங்கார வேலரின் தீவிர பக்தனே..
என் உள்ளம் கொண்ட கள்வனே ...
உன்னை அனுதினமும் என்னும்
எண்ணம் எனக்கு தந்தவனே ..
என் அன்பு கணவனே ..
ஆருயிர் செல்வனே ...
என் இனிய மணவாளனே ...
எழுத்தாளர்களின் கவனத்திற்கு ...