பிரியா - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : பிரியா |
இடம் | : பெங்களூரு |
பிறந்த தேதி | : 20-Jul-1991 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 24-Mar-2018 |
பார்த்தவர்கள் | : 1538 |
புள்ளி | : 231 |
மிகவும் இயல்பான அதே நேரத்தில் மிகவும் நிறைய பேசுபவள் .....ஆனால் உபயோகமா இருக்குமா என்று யோசித்து தான் பேசுவேன்.. புன்னகை என்ற சொத்தை அளவுக்கு மிகுதியாக வைத்திருப்பவள்.....
ரோஜாவில் இருக்கும் முட்கள் ரோஜாவிற்கு பாரமில்லை...
அது ரோஜாப்பூவை காக்கும் அரண் ..
எவரும் அதை தீண்டாமல் இருக்க அரணாக உள்ளது
அதுபோல் தான் நீயும்..
என்னையும் காக்கும் அரணாக இருக்கிறாய்
ரோஜாவின் முள் போல் பார்ப்பதற்கு
கரடு முரடாய் இருப்பாய்...
ஆனால், எனக்கு மட்டும் தான் தெரியும் அது என் மேல் வைத்திருக்கும் அன்பின் வெளிப்பாடு ..
காதல் என்ற ஒன்று மட்டும் தான் என் கண்ணுக்கு தெரியும் ....
ரோஜாவின் வாசத்தை விட உன் காதலின் வாசமே பெரியது என்னை பொருத்த வரை ....
வெளி விருத்தமே (பிறவகை)
நாட்டில் அவரவர் தெய்வம் -- தொழ
நாமும் சுபிட்சமாய் வாழ்ந்தோம் -- வெளி
தேச முகமதி யர்வர. --- நமது
தேச கலாசா ரமுழுதும் -- மதமும்
வாளின் முனையிலே மாற்றினார் -- அன்று
மாறிய இந்து துருக்கர் -- இன்று
ஏனோ எதிரியாய் மாறியவர் - நம்மை
வீணே விரோதியாய் பார்த்தாரே
நேர்சை வெண்பா
தாஜ்மகால் மாற்றி பலமசூதி கட்டியவர்
ராஜபோக மாகவே வாழ்ந்தனர் -- போஜனாய்
வாழ்ந்து குதுப்மினார் கட்டி மதம்மாற்றி
தாழ்ந்தார் பரங்கியரி டம்
வெளிவிருத்தம்
பின்னே வியாபா ரிவெள்ளையன் -- வந்து
பீரங் கியால்மல பாரைசுட் டானே -- நுழைந்த
போர்ச்சு வணிகரும் வெற்றியாம் -- பின்னே
ஊரே கிருத்துவர் ஆனாரே
மெல்ல அசையும் இடைமேலைத் தென்றல்
தவழ்ந்திடும் பூங்கூந்தல் தேன்சிந்தும் மெல்லிதழில்
புன்னகை ஏந்தி வரவில்லை இன்னும்நீ
வான்நிலா கேட்குதேமா னே !
தலைஉயர்த்தி வானத்தைப் பார்த்து கற்பனையில் கவிதை எழுதவில்லை
கலையெழில் தவழும் கயல்துள்ளும் கவின்கரு விழிகள் இரண்டிலும்
கலைந்தாடும் நீல வண்ணப் பூங்குழல் தவழ்ந்திடும் அழகிலும்
சிலையென அசையும் உன்செந்தளிர் மேனியெழிலிலும் எழுதுகிறேன் எனைமறந்து
ஒன்றோடு ஒன்று சேர இரண்டு
உயிர் உயிரில் சேர
ஒன்றானது
என்னை அறியா மனதில் வந்தன எதிர்மறை எண்ணங்கள் ...
வந்ததும் தெரியவில்லை போனதும் தெரியவில்லை ....
ஆனால், ஏதோ ஒன்று என்னை பின்தொடர்ந்து வருகிறது ....
என்னசெய்ய என்னுள் இருக்கும் மனதை கேட்க தான் செய்தேன் ....
மனமோ ஏதும் கூறவில்லை ....
என்ன செய்வது என்று அறியா பேதையாய் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் இவ்வுலகில் ....
என்ன செய்ய என்று யாரிடம் கரணம் கேட்டாலும் யாரும் கூறஇயலாது ...
என் வலி என் மனதில் மட்டுமே
வானில் ஒரு கருமேகக்கூட்டம் ....
அன்னாந்து பாக்கையிலே....
துளி துளியாய் விழுந்தன முத்துக்கள் ….
அவை வெறும் முத்துக்கள் அல்ல ….
வான்மேகத்தின் செல்ல பிள்ளைகள்….
அப் பிள்ளைகளின் பெயர் தான் மழை….
பிள்ளையை பூமி தாயிடம் வர விடாமல் தடுக்கிறான் இடி என்ற எதிரி ....
பூமி தாயிடம் வர விடாமல் தடுக்க காற்று கூட சதி செய்யும் …
அதையும் மீறி அப் பிள்ளை வரும் ….
தாயின் மனதில் உள்ள காயத்தை ஆறாத ரணத்தை ஆற்றவும் ...
மனதையே குளிர வைக்கவும் மழை என்ற பிள்ளையாய்....
எவ்வளவு வழிகள் இருந்தாலும் வாழ, பெண்கள் மட்டும் ஏனோ அந்த திருமணம் பந்தத்தில் தான் வாழ்க்கை முழுமை பெரும் என்று நினைக்கிறோம் ...அதனால் தான் வளரும்போதே கனவுகளில் மிதக்கிறோம் .ஆனால் சிலரின் கனவு கனவாகவே போய்விடுகிறது ..இன்னோரு பக்கம் பெண்களை எப்போதும் காட்சி பொருளாகவே பார்க்கும் மனனிலை உள்ள ஆண்சமூகம் ...என்று மாறும் இந்நிலை அன்று தான் நம் நாடு பெரும் தன்னிலை ..
தனிமை வாழ்வின் ஓர் அங்கம்
தனிமை வாழ்வின் ஓர் உணர்வு
தனிமையில் இனிமை ஓர் சுகம்
இனிமையில் தனிமை ஓர் வரம்
ஆனால் இனிமையில் தனிமை
காணமுடியாது ...
அது தான் தனிமையின் தனித்துவம் ...
வாழ்க்கையில் சில மணி நேரம்
தனிமை இனிக்கும் ...
வாழ்க்கையில் பல மணி நேரம்
தனிமை கசக்கும் ...
வாழ்க்கை தத்துவத்தில் வாழ்ந்து
தான் பார்க்க வேண்டும் தனிமையை ..
தனிமையில் சுகம் காண இனிமை தேவை...
தனிமையின் நண்பன் கற்பனை
கற்பனையின் ஊற்று தனிமை ...
இவை இணைபிரியா இரட்டையர்கள் ...
சுமைகளை இறக்கும் இடம் தனிமை ...
இனிமைகளை நினைக்கும் இடம் தனிமை .
தனிமை இல்லையேல் இனிமை இல்லை ....
இனிமை இல்லையேல் தனிமை உண்டு ....
என் கண்களின் கருவிழியே ...
அழகின் திருவுருவே ...
கனவில் கண்டவனே..
காவிய நாயகனே ..
கடல் அலை போல் பொங்கும்
பாசத்தை அளிப்பவனே...
சிரிப்பு என்னும் பொக்கிக்ஷத்தின்
சொந்தக்காரனே ...
கண்ணுக்கினியாளின் கண்ணுக்கினியனே..
என் சோகத்தில் பங்கெடுத்து
பாசத்தில் தோல் கொடுப்பவனே..
சிங்கார வேலரின் தீவிர பக்தனே..
என் உள்ளம் கொண்ட கள்வனே ...
உன்னை அனுதினமும் என்னும்
எண்ணம் எனக்கு தந்தவனே ..
என் அன்பு கணவனே ..
ஆருயிர் செல்வனே ...
என் இனிய மணவாளனே ...
எழுத்தாளர்களின் கவனத்திற்கு ...
நான் சமீபத்தில் ஒரு பிரபலமான மேடைபேச்சாளர் ஒருவர் பேசியதை எனது இணையத்தளம் வழியாக கேட்டேன் ...மிகவும் அருமையாக பேசினார் ..அதில் எந்த ஐயமும் இல்லை..அவர் கூறியதில் நான் மிகவும் கிரகித்து கொண்டது என்னவெனில் ..ஒரு சுவரில் எழுதியதாக அவர் ஒரு வாக்கியம் சொன்னார் ...எனக்கு அதில் தான்ஐயம் ...
அவர் கூறிய வாக்கியம் இதோ "கோவம் என்பது அடுத்தவர்கள் செய்யும் தவறுக்கு நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் தண்டனை " என்றார்..
எனக்கு புரிந்தது ..ஆனால் சிறுது யோசிக்கிறேன்...யோசிக்கிறேன் என்றால் புரியவில்லை ஏதோ ஒன்று என்று தான் அர்த்தம் ..நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கூறுங்கள் ??
நண்பர்கள் (51)

பிரதாப்
சென்னை(திருவண்ணாமைலை)

Sam Saravanan
Bangalore

வீரா
சேலம்

டேவிட்
விழுப்புரம்
