பிரியா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பிரியா
இடம்:  பெங்களூரு
பிறந்த தேதி :  20-Jul-1991
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  24-Mar-2018
பார்த்தவர்கள்:  1705
புள்ளி:  243

என்னைப் பற்றி...

மிகவும் இயல்பான அதே நேரத்தில் மிகவும் நிறைய பேசுபவள் .....ஆனால் உபயோகமா இருக்குமா என்று யோசித்து தான் பேசுவேன்.. புன்னகை என்ற சொத்தை அளவுக்கு மிகுதியாக வைத்திருப்பவள்.....

என் படைப்புகள்
பிரியா செய்திகள்
பிரியா - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jun-2023 10:38 am

மூளை நினைத்ததை கூற தவிக்கின்றேன் ...
ஏனோ கூற வாய் மறுக்கின்றது....
என்னவாக இருக்கும் என்று மனம் தேடுகிறது ...
மூளைக்கும் மனதிற்கும் என்னஒரு மௌன போராட்டம் ...
என்னசொல்வது மனமே மௌனமே மூளையே முன்னின்று கூறுவாயோ...
காரணம் அறியாஎன் கண்ணீருக்கு பதிலும் அறியா என் கேள்விக்கு ...
வருத்தம் மட்டும் விழிகளில் காட்டாற்று வெள்ளம் போல் வழிந்தோடுகிறது ..
ஏன் வருத்தம் எதற்கு வருத்தம் என்ற காரணம் நான் அறியா ...
மனமே வேறு என்ன தான் அறிவாயோ ....

மேலும்

கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) sankaran ayya மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
21-Jun-2023 9:23 am

மயில்உலாவும் மலர்பூங்கா
குயில்கூவும் பூஞ்சோலை
வெயிலிலா நந்தவனம்
பயில்கிறாயோ நடைபூவே

மேலும்

மிக்க நன்றி கவிப்பிரிய பிரியா 22-Jun-2023 12:45 pm
அருமை கவின் அவர்களே 22-Jun-2023 10:16 am
அழகிய கருத்து மிக்க நன்றி கவிப்பிரிய வாசவன் 22-Jun-2023 8:33 am
அழகோ அழகு கவி காட்டும் அவள் நடை கவிநடையும் பாவும் 22-Jun-2023 7:51 am
பிரியா - ஹரிணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-May-2015 10:03 pm

உங்களை பத்தி பத்து விஷயம் சொல்லட்டா?
**************************************

1. இந்த நிமிஷம் இதை படிச்சுகிட்டிருக்கீங்க.

2. உங்களுக்கு தமிழ் தெரியும்.

3. உதடு பிரிக்காம “ப”னு சொல்ல முடியாது.

4. சொல்லி பார்த்துகிட்டீங்க.

6. உங்களை நெனச்சு நீங்களே சிரிச்சுக்கறீங்க.

7. சிரிச்ச சிரிப்புல அஞ்சாம்நம்பர் மிஸ் ஆனத கவனிக்காம விட்டுட்டீங்க.

8. நம்பர் 5 இருக்கா? னு செக் பண்ணி அடடே இல்லையேனு ச்சூ கொட்டறீங்க.

9. இன்னும் வாய் விட்டு சிரிக்கறீங்க… ஏன்னா உங்களுக்கு நகைச்சுவை உணர்வு சாஸ்தி.

10. அடுத்தவங்களுக்கும் கூப்ட்டு படிச்சு காட்டுவீங்க இல்லேன்னா இருக்கவே இருக்கு ”பகிர்”.

#அந

மேலும்

அருமை .. அருமை 14-Jun-2023 2:00 pm
ஹ ஹ ஹா அருமையா இருக்கு. மிக்க நன்றி. 16-Sep-2021 2:53 pm
அருமை தோழியே...வாழ்த்துக்கள் 09-Sep-2015 12:13 pm
வாழ்த்துக்கள்... 29-Jul-2015 12:17 pm
பிரியா - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Apr-2023 9:56 am

வாடிக் கிடந்தது
----மல்லிகை மொட்டு
தேடிவந்த தென்றல்
---முகத்தைவருடி முத்தமிட்டது
வாடிய மல்லிகை
----வாட்டம் தீர்ந்தது
வீடியோ நாயகியாய்
-----புன்னகை பூத்தது
சூடிட வந்தாள்
-----சுந்தரிப் பொண்ணு
பாடிவந்து தென்றல்
-----நன்றி நவின்றது

மேலும்

மிக்க நன்றி கவிப்பிரிய பிரியா 19-Apr-2023 4:15 pm
அருமை 19-Apr-2023 3:36 pm
பிரியா - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Jan-2023 4:35 pm

பொதிகைத் தமிழில் சொல்லெடுத்து
புதுநிலவு பொழிவில் எழிலெடுத்து
பளிங்கில் ஒரு சிலை இவளை வடித்தால்
அஜந்தா சிற்பமும் அசந்து நிற்கும்

மேலும்

Thank you Priya 21-Jan-2023 3:10 pm
Well discribed Kavin.. 21-Jan-2023 3:07 pm
பிரியா - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Dec-2022 5:33 pm

ஜன்னலை திறந்தேன் காற்று வந்தது ...
மனதை திறந்தேன் நீ வந்தாய் ...
மௌனத்தை கலைத்தேன் மனம் ஒன்றானது ...
மனதை கலைத்தேன் மனம் இரண்டானது ....
மௌனம் மனம் இரண்டையும் கலைத்தேன் ...
""""காதல்"""" என்ற ஒன்று வந்தது ....

மேலும்

மலர் என்பது அவள் பெயர்
மலரும் மலர்விழி அவள்விழி
மல்லிப் போல் அழகு அவள்
மலரும் தாமரையாய் அவள்முகம்
முல்லைபோல் அவள் சிரிப்பு
அல்லித் தண்டனையை அவள் இடை

மேலும்

கருத்தில் மகிழ்ந்தேன் சகோதரி ப்ரியா நன்றி 28-Jul-2022 1:17 pm
அருமையான வருணனை .. 28-Jul-2022 12:29 pm
பிரியா - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jul-2022 5:04 pm

மனம் என்ற மூன்று எழுத்து இதயம் என்ற நாலெழுத்தில் உள்ளது ..
இதயம் என்ற நாலெழுத்து உடம்பு என்ற நாலெழுத்தில் அடங்குகிறது ...
உடம்பு என்ற நாலெழுத்து உயிர் என்ற மூன்றெழுத்தை சார்ந்துள்ளது ,,..
உயிர் இருப்பதை இதயம் என்ற நாலெழுத்தை கொண்டு அறிவர் ...
மனம் என்ற மூன்றெழுத்து மந்திரம் இதயம் என்ற நாலெழுத்தில் உள்ளது ..
மனம் என்ற மூன்றெழுத்து மந்திரம் என் மனதில் பதிய பல காரணங்கள் உண்டு ..
என் மனம் ஏனோ காயப்பட்டுள்ளது ....
நினைத்தது நடக்கவில்லை என்றா? நினைத்த மாதிரி நடக்கவில்லை என்றா jQuery17109654208717906736_1660988219881?
நினைத்தது நடக்குமா நடக்காதா என்றா ???
எத்தனை கேள்விகள் எனக்குள் ....
இவை அனைத்து

மேலும்

True.. 02-Aug-2022 5:31 am
அருமை என்ற ம்மூன்றெழுத்து எல்லாம் சரியாகும் வலி என்ற இரண்டெழுத்தே வாழ்க்கை இல்லை .. 01-Aug-2022 10:34 am
ஆம்...அதை தவிர வேற மருந்து இல்லை இந்த உலகில் 29-Jul-2022 11:39 am
மனதில் உள்ள ரணத்தை தனிமை, அமைதி என்ற மூன்றெழுத்துக்களே ஆறுதல் தந்து ரணத்தை நலமாக்கும். 29-Jul-2022 9:47 am
பிரியா - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jul-2022 2:05 pm

ரோஜாவில் இருக்கும் முட்கள் ரோஜாவிற்கு பாரமில்லை...
அது ரோஜாப்பூவை காக்கும் அரண் ..
எவரும் அதை தீண்டாமல் இருக்க அரணாக உள்ளது
அதுபோல் தான் நீயும்..
என்னையும் காக்கும் அரணாக இருக்கிறாய்
ரோஜாவின் முள் போல் பார்ப்பதற்கு
கரடு முரடாய் இருப்பாய்...
ஆனால், எனக்கு மட்டும் தான் தெரியும் அது என் மேல் வைத்திருக்கும் அன்பின் வெளிப்பாடு ..
காதல் என்ற ஒன்று மட்டும் தான் என் கண்ணுக்கு தெரியும் ....
ரோஜாவின் வாசத்தை விட உன் காதலின் வாசமே பெரியது என்னை பொருத்த வரை ....

மேலும்

Yes...tnx 01-Aug-2022 6:59 pm
ம்ம் காதல் அரண் 01-Aug-2022 10:48 am
தங்கள் கருத்திற்கு மிக்கநன்றி 29-Jul-2022 11:33 am
கூந்தலுக்கு வாசம் உள்ளதா என்பது பற்றி தமிழ்ச் சங்கத்தில் விவாதம் நடந்ததாகச் சொல்லப்படுகிறது. நீங்கள் காதலின் வாசத்தை கவிதையில் நுகிர்கிறீர் விவாதமின்றி. 29-Jul-2022 9:51 am
பிரியா - பிரியா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Apr-2019 3:36 pm

தனிமை வாழ்வின் ஓர் அங்கம்
தனிமை வாழ்வின் ஓர் உணர்வு
தனிமையில் இனிமை ஓர் சுகம்
இனிமையில் தனிமை ஓர் வரம்

ஆனால் இனிமையில் தனிமை
காணமுடியாது ...
அது தான் தனிமையின் தனித்துவம் ...
வாழ்க்கையில் சில மணி நேரம்
தனிமை இனிக்கும் ...
வாழ்க்கையில் பல மணி நேரம்
தனிமை கசக்கும் ...

வாழ்க்கை தத்துவத்தில் வாழ்ந்து
தான் பார்க்க வேண்டும் தனிமையை ..
தனிமையில் சுகம் காண இனிமை தேவை...

தனிமையின் நண்பன் கற்பனை
கற்பனையின் ஊற்று தனிமை ...
இவை இணைபிரியா இரட்டையர்கள் ...

சுமைகளை இறக்கும் இடம் தனிமை ...
இனிமைகளை நினைக்கும் இடம் தனிமை .
தனிமை இல்லையேல் இனிமை இல்லை ....
இனிமை இல்லையேல் தனிமை உண்டு ....

மேலும்

தனிமை மேல் உங்களுக்கு அப்படி ஒரு இனிமை நல்ல இருக்கு 01-Sep-2020 4:25 pm
மிக்க நன்றி ... 02-Jun-2019 4:22 pm
மிக அழகானபடைப்பு .......... 27-May-2019 10:10 am
தங்கள் பார்வைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ..... 17-Apr-2019 10:48 am
பிரியா - பிரியா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Mar-2019 2:48 pm

என் கண்களின் கருவிழியே ...
அழகின் திருவுருவே ...
கனவில் கண்டவனே..
காவிய நாயகனே ..
கடல் அலை போல் பொங்கும்
பாசத்தை அளிப்பவனே...
சிரிப்பு என்னும் பொக்கிக்ஷத்தின்
சொந்தக்காரனே ...
கண்ணுக்கினியாளின் கண்ணுக்கினியனே..
என் சோகத்தில் பங்கெடுத்து
பாசத்தில் தோல் கொடுப்பவனே..
சிங்கார வேலரின் தீவிர பக்தனே..
என் உள்ளம் கொண்ட கள்வனே ...
உன்னை அனுதினமும் என்னும்
எண்ணம் எனக்கு தந்தவனே ..
என் அன்பு கணவனே ..
ஆருயிர் செல்வனே ...
என் இனிய மணவாளனே ...

மேலும்

மிக்க நன்றி ... 20-Mar-2019 10:11 am
நண்பர் வாசவன் பாராட்டும் தங்கள் கவிதை படைப்பும் அழகிய வண்ண ஓவியமும் இலக்கிய அமுது தமிழ் அன்னை ஆசிகள் வாழ்த்துக்கள் நம் இலக்கிய நட்புக் கவிதை பயணம் தொடரட்டும் 19-Mar-2019 2:51 pm
காரடையான் நோன்பு ..எங்களுக்கு இல்லை ...நோன்பு என்றால் தான் புருஷ கானம் வருமா ?/ஹஹ்ஹ ... 16-Mar-2019 9:52 am
எங்கே அடைத்தேன் ...நானும் பெண் தான்...அடைபட்டிருந்தால் என் எண்ணத்தை வெளிப்படுத்திருக்கமாட்டேன் கவின் ....நான் நினைப்பதை வரியாக தந்துள்ளேன் ... 16-Mar-2019 9:51 am
பிரியா - பிரியா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
18-Feb-2019 2:52 pm

எழுத்தாளர்களின் கவனத்திற்கு ...



  .நான் ஒன்றை பதிவிட விரும்புகிறேன் ..நான் இந்த தளத்தில் சிறந்த வாசகியாக முதலில் இருக்க விரும்புகிறேன் ,அதனால் தான் நான் இதையே கூறுகிறேன்.எழுத்தாளர்களாகிய நீங்கள்  முதலில் ஒரு படைப்பு அல்லது கேள்வி கேட்கும்போது படைப்பை பதிவிடும் போது தட்டச்சு பிழை இருக்கிறதா என்று பாருங்கள் ..ஏனெனில் வாசகர்களுக்கு நீங்கள் அளிக்கும் படைப்பை படிக்கஆர்வம் குறைவது எழுத்துப்பிழை உள்ளபோது தான் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து,நீங்கள் சரிபார்த்து கொள்ளவும்,நானும் சிலசமயம் எழுத்துப்பிழை அறியாமலே பதிவிட்டுவிடுகிறேன், நானும் இதனை திருத்தி கொள்கிறேன்   ....ஆனால் மற்றவர்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இங்கே பதிவிடுகிறேன் ..  
இது என்னுடைய தனிப்பட்ட கருத்து ஏற்பார்கள் என்று தான் பதிவிட்டுளேன் .

மேலும்

நன்றி.. 15-Mar-2019 2:53 pm
நீங்கள் சொல்வது சரிதான்...அப்படியே செய்கிறேன்... 23-Feb-2019 8:35 am
கண்டிப்பாக உள்ளோம் ...நன்றி 21-Feb-2019 11:10 am
நன்றி ... 21-Feb-2019 11:09 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (56)

மலர்91

மலர்91

தமிழகம்
பிரதாப்

பிரதாப்

சென்னை(திருவண்ணாமைலை)

இவர் பின்தொடர்பவர்கள் (56)

இவரை பின்தொடர்பவர்கள் (59)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
சேகர்

சேகர்

Pollachi / Denmark
பேரரசன்

பேரரசன்

தமிழ்நாடு

என் படங்கள் (4)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே