பிரியா - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : பிரியா |
இடம் | : பெங்களூரு |
பிறந்த தேதி | : 20-Jul-1991 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 24-Mar-2018 |
பார்த்தவர்கள் | : 1761 |
புள்ளி | : 246 |
மிகவும் இயல்பான அதே நேரத்தில் மிகவும் நிறைய பேசுபவள் .....ஆனால் உபயோகமா இருக்குமா என்று யோசித்து தான் பேசுவேன்.. புன்னகை என்ற சொத்தை அளவுக்கு மிகுதியாக வைத்திருப்பவள்.....
வாழ்க்கையில் காதல், கற்பனை என்ற இரண்டும் உண்டு ...
கற்பனையில் காதல் செய் தவறில்லை ....
ஆனால், காதலில் கற்பனை செய்யாதே ...
ஏனெனில் காதலுக்கு உயிர் உள்ளது ...
காதல் ஏமாற்றத்தை சந்திக்க தயங்கும் ...
கற்பனைக்கு உயிர் இல்லை ..
அதனால் ....ஏமாற்றம் இல்லை ....
செங்கரும்புச் சாரும்இன் செவ்விள நன்நீரும்
திங்களாடும் பூமுகப் பூவிதழ் மீதோடும்
வங்கக் கடலலை மோதிடும் கூந்தலில்
தங்கியிளைப் பாறும்தென் றல்
பூவாத தோட்டத்தில் பூத்துவந்த யாப்பூவோ
பூவுக்கு வேலிகட்ட பூமணம்தான் நிற்குமோ
பூவாத தோட்டத்தில் பூத்தயாப்பூ வோஇவள்
தாவும்தென் றல்காற்றே பார்
மல்லிகை யின்நிறம் மென்மையான வெண்மைதான்
மல்லிகைவண் ணம்மாறி னும்மணம் மாறா
மலர்ரோஜா வுக்குப்பல் வண்ணம் பொருந்தும்
மலர்மல்லி என்றுமேவெண் மை
கொள்ளையர் என்றே கூறு -- நேரிசை வெண்பா
*******"**********
வெள்ளை உடைதனில் வீறுநடை போடுவர் ;
கள்ளச் சிரிப்பினைக் காட்டுவர் -- வெள்ளைமனங்
கொள்ளாக் கயமை குணத்தர்; இவர்தனைக்
கொள்ளையர் என்றேநீ கூறு!
******
மூளை நினைத்ததை கூற தவிக்கின்றேன் ...
ஏனோ கூற வாய் மறுக்கின்றது....
என்னவாக இருக்கும் என்று மனம் தேடுகிறது ...
மூளைக்கும் மனதிற்கும் என்னஒரு மௌன போராட்டம் ...
என்னசொல்வது மனமே மௌனமே மூளையே முன்னின்று கூறுவாயோ...
காரணம் அறியாஎன் கண்ணீருக்கு பதிலும் அறியா என் கேள்விக்கு ...
வருத்தம் மட்டும் விழிகளில் காட்டாற்று வெள்ளம் போல் வழிந்தோடுகிறது ..
ஏன் வருத்தம் எதற்கு வருத்தம் என்ற காரணம் நான் அறியா ...
மனமே வேறு என்ன தான் அறிவாயோ ....
ஜன்னலை திறந்தேன் காற்று வந்தது ...
மனதை திறந்தேன் நீ வந்தாய் ...
மௌனத்தை கலைத்தேன் மனம் ஒன்றானது ...
மனதை கலைத்தேன் மனம் இரண்டானது ....
மௌனம் மனம் இரண்டையும் கலைத்தேன் ...
""""காதல்"""" என்ற ஒன்று வந்தது ....
மலர் என்பது அவள் பெயர்
மலரும் மலர்விழி அவள்விழி
மல்லிப் போல் அழகு அவள்
மலரும் தாமரையாய் அவள்முகம்
முல்லைபோல் அவள் சிரிப்பு
அல்லித் தண்டனையை அவள் இடை
மனம் என்ற மூன்று எழுத்து இதயம் என்ற நாலெழுத்தில் உள்ளது ..
இதயம் என்ற நாலெழுத்து உடம்பு என்ற நாலெழுத்தில் அடங்குகிறது ...
உடம்பு என்ற நாலெழுத்து உயிர் என்ற மூன்றெழுத்தை சார்ந்துள்ளது ,,..
உயிர் இருப்பதை இதயம் என்ற நாலெழுத்தை கொண்டு அறிவர் ...
மனம் என்ற மூன்றெழுத்து மந்திரம் இதயம் என்ற நாலெழுத்தில் உள்ளது ..
மனம் என்ற மூன்றெழுத்து மந்திரம் என் மனதில் பதிய பல காரணங்கள் உண்டு ..
என் மனம் ஏனோ காயப்பட்டுள்ளது ....
நினைத்தது நடக்கவில்லை என்றா? நினைத்த மாதிரி நடக்கவில்லை என்றா jQuery17109654208717906736_1660988219881?
நினைத்தது நடக்குமா நடக்காதா என்றா ???
எத்தனை கேள்விகள் எனக்குள் ....
இவை அனைத்து
தனிமை வாழ்வின் ஓர் அங்கம்
தனிமை வாழ்வின் ஓர் உணர்வு
தனிமையில் இனிமை ஓர் சுகம்
இனிமையில் தனிமை ஓர் வரம்
ஆனால் இனிமையில் தனிமை
காணமுடியாது ...
அது தான் தனிமையின் தனித்துவம் ...
வாழ்க்கையில் சில மணி நேரம்
தனிமை இனிக்கும் ...
வாழ்க்கையில் பல மணி நேரம்
தனிமை கசக்கும் ...
வாழ்க்கை தத்துவத்தில் வாழ்ந்து
தான் பார்க்க வேண்டும் தனிமையை ..
தனிமையில் சுகம் காண இனிமை தேவை...
தனிமையின் நண்பன் கற்பனை
கற்பனையின் ஊற்று தனிமை ...
இவை இணைபிரியா இரட்டையர்கள் ...
சுமைகளை இறக்கும் இடம் தனிமை ...
இனிமைகளை நினைக்கும் இடம் தனிமை .
தனிமை இல்லையேல் இனிமை இல்லை ....
இனிமை இல்லையேல் தனிமை உண்டு ....
என் கண்களின் கருவிழியே ...
அழகின் திருவுருவே ...
கனவில் கண்டவனே..
காவிய நாயகனே ..
கடல் அலை போல் பொங்கும்
பாசத்தை அளிப்பவனே...
சிரிப்பு என்னும் பொக்கிக்ஷத்தின்
சொந்தக்காரனே ...
கண்ணுக்கினியாளின் கண்ணுக்கினியனே..
என் சோகத்தில் பங்கெடுத்து
பாசத்தில் தோல் கொடுப்பவனே..
சிங்கார வேலரின் தீவிர பக்தனே..
என் உள்ளம் கொண்ட கள்வனே ...
உன்னை அனுதினமும் என்னும்
எண்ணம் எனக்கு தந்தவனே ..
என் அன்பு கணவனே ..
ஆருயிர் செல்வனே ...
என் இனிய மணவாளனே ...
எழுத்தாளர்களின் கவனத்திற்கு ...