நிஜாம் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : நிஜாம் |
இடம் | : |
பிறந்த தேதி | : 24-Mar-1982 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 25-Oct-2015 |
பார்த்தவர்கள் | : 169 |
புள்ளி | : 46 |
நெறி தவறும்
நெஞ்சம்
கொண்டோர்
முறை தவறி
ஆற்றும்
செயல் இன்று !
தாய்மொழி
வழிக்கல்வி
தவறென்று
சிறுமதியார்
தீண்டுகிறார்
சீண்டுகிறார் !
அகவை
ஈராயிரம்
கடந்த மொழி
அகிலத்தின்
மூத்த மொழி
எங்கள் மொழி !
வளைந்து
நெளிந்து
வழி தேடுகிறார்
அறியாத
மொழியை
திணித்திடவே !
எதிரிகளல்ல
எம்மொழிக்கும்
என்றென்றும்
தமிழரென்பது
தரணி அறிந்த
தகவல் அன்றோ !
தம்மொழி
காத்திட
செம்மொழி
தமிழ் மொழியை
சாய்க்க நினைப்பது
வஞ்சகம் அன்றோ !
அதிகாரம்
உள்ளதென்று
ஆதிக்கம்
செலுத்துவது
மமதையின்
உச்சமன்றோ !
இருமொழிக்
கொள்கையை
இருட்டடிப்பு
செய்வோரே
இரட்டைவேடம்
தரிப்பதேனோ !
அவரவர்
தாய்மொழி
அவரவர்க்கு
முதன்மை எனில்
எங்கள் மொழியை
தூற்றுவது ஏ
தோல்வி
=============
கருகி, கரை படிந்து
கிடைக்கும் நெஞ்சை
சுட்ட வெண்சங்காய்
மாற்றும் சூத்திரம்.
தோல்வி
=============
கருகி, கரை படிந்து
கிடைக்கும் நெஞ்சை
சுட்ட வெண்சங்காய்
மாற்றும் சூத்திரம்.
இலக்கியா கூறியபடி ஆறு நாட்கள் கழித்து பெரியவர் ஹனிபா அவர்கள் காலையில் ஒரு பழக்கூடையுடன் வந்தார் பாரியை காண்பதற்கு . அவரை வரவேற்று பாரி உள்ள அறைக்கு அழைத்து சென்றாள் இலக்கியா . இவருக்காகவே காத்திருந்த பாரி அவரைக் கண்டதும் எழுந்திருக்க முயன்றான் . உடன் ஹனிபா அவனை சைகை மூலம் அமர சொல்லிவிட்டு அருகிலேயே தானும் அமர்ந்தார் . பாரி அவரின் கையை பிடித்து கண்ணீர் மல்க நன்றி கூறினான் . உங்கள் உதவியை என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது ஐயா , என்றும் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டவன் நான் என்றான் தழுதழுத்த குரலில். அதுமட்டுமன்றி , உங்கள் பணத்தை எப்படியாவது விரைவில் தந்துவிடுவேன் . ஆபிசில் அந்த ஒரு கணிசமான தொகையை
வாய்ப்பு
=========
இருள் சூழ்ந்த
வாழ்வில்
உள்ளம் தேடும்
உதயம்.
லட்சியம் சுமந்து
கனத்த இதயத்தின்
கலங்கரை விளக்கு .
வாய்ப்பு
=========
இருள் சூழ்ந்த
வாழ்வில்
உள்ளம் தேடும்
உதயம்.
லட்சியம் சுமந்து
கனத்த இதயத்தின்
கலங்கரை விளக்கு .
பசித்தவனின் பிணி
நீங்க நீ வருவாயோ!
உழைப்பனின் உள்ளம்
நிறைய நீ வருவாயோ!
நொடிந்தவர்களின் நோய்
தீர நீ வருவாயோ!
கடன் பட்டவர்களின் துயர்
துடைக்க நீ வருவாயோ!
இல்லாமையில் கல்லாமல்
வாடும் இளைஞர்களின்!
கண்ணீர் துடைக்க
நீ வருவாயோ !
உண்மையாக உழைக்கும்
மானுடர் நெஞ்சம் நிறைய
நீ வருவாயோ !
நித்தம் நீ சேரும் இடம் பல
இவர்களிடமும் சற்று
வந்து போ, இவர்களும்
கொஞ்சம் துயர் நீங்கி
சிரிக்கட்டும்.
காதலியே !
குவியத் தொலைவில்
என் குடும்பத்தின்
அங்கமே ...
எதிர்வுகூறினால்
என் எதிர்காலமே !
எதிர்முனையில்
என்னை எண்ணி
வருந்தும் உன் குமுறல் ..
என் இதயத் திரையில்
அரங்கேறி செல்கிறது.
எதிரும் புதிருமாய்
எண்ணங்கள் ஏக்கங்கள்
இண்டு இடுக்கெல்லாம்
சென்றெனை கொல்கிறது..
என்னவளே !
இடைவெளி வந்து
தளிர்விடும் முன் - நாம்
எதிர் எதிர் திசைகளில்
புறப்படும் முன் .
உள்கொண்ட விசனம்
பரிமாறிக்கொள்வோம்
உள்ளபடியே
பரிகாரம் காண்போம் .
மூவிரு திங்கள் கடந்த
பின்பும் ..உன் மூளையில்
கனக்கும் எண்ணம் ஏனோ ?
நாம் கலந்து பேசி
கரையென
கண்டது என்ன
கானல் நீரோ ?
பல ஆயிரம் மண
மயில்தோகைப் பொன்னுடல் மயக்கும் கருவிழி
குயில்கூவும் தேன்மொழி குழல்மேகப் பூங்கனி
சிவந்த கொவ்வையே எழில்வனப் பூவையே
புவனத்தில் காண்போமா சொர்க்கம்
அஷ்றப் அலி
பசித்தவனின் பிணி
நீங்க நீ வருவாயோ!
உழைப்பனின் உள்ளம்
நிறைய நீ வருவாயோ!
நொடிந்தவர்களின் நோய்
தீர நீ வருவாயோ!
கடன் பட்டவர்களின் துயர்
துடைக்க நீ வருவாயோ!
இல்லாமையில் கல்லாமல்
வாடும் இளைஞர்களின்!
கண்ணீர் துடைக்க
நீ வருவாயோ !
உண்மையாக உழைக்கும்
மானுடர் நெஞ்சம் நிறைய
நீ வருவாயோ !
நித்தம் நீ சேரும் இடம் பல
இவர்களிடமும் சற்று
வந்து போ, இவர்களும்
கொஞ்சம் துயர் நீங்கி
சிரிக்கட்டும்.
என்னை ஈன்ற தாயே உன் மடி
தவழ்கயிலே அன்பை உணர்ந்தேன்
என் தந்தையின் மார்பினிலே
வாழ்வின் தடம் உணர்ந்தேன்
என் பிறப்புகளோடு கூடி
திரிகையில் பாசம் உணர்ந்தேன்
என் நட்பின் அரவணைப்பில்
பற்றுதல் உணர்ந்தேன்
துணைவி உன்னை சேர்ந்த பின்னே
வழித்துணை உணர்ந்தேன்
என் தாய் மண் உன்னை தீண்டயிலே
என் உரிமை உணர்ந்தேன்
என் அன்னை தமிழே உன்னை
மொழிகையிலே தீஞ்சுவை உணர்ந்தேன்
என்னை வடித்த இறைவா உன்னை
தொழுகையிலே ஈருலகம் உணர்ந்தேன்
இத்துணை உணர்வுகள் கிடைக்கபெற்றதாலே
உணர்வுகள் இன்றி உயிரும் இல்லை
உயர்வுமில்லை என நான் உணர்ந்தேன்.
நண்பர்கள் (25)
இவர் பின்தொடர்பவர்கள் (49)
இவரை பின்தொடர்பவர்கள் (25)

விக்னேஷ்
திருப்பூர் மாவட்டம் பல்ல

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
