பழனி குமார் - சுயவிவரம்
(Profile)


தமிழ் பித்தன்
இயற்பெயர் | : பழனி குமார் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 12-Oct-1958 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 07-Aug-2012 |
பார்த்தவர்கள் | : 16350 |
புள்ளி | : 10738 |
என்றும் மனதில் பட்டதை , உள்ளத்தில் எழுவதை , மறைக்காமல் சொல்பவன் , எழுதுபவன். எனக்கு இல்லகிய இலக்கணம் எல்லாம் தெரியாது. அந்த அளவுக்கு தேர்ச்சிப் பெற்றவன் அல்ல எனபதை ஒப்புக் கொள்கிறேன் . சமுதாயம் பற்றிய கவலையும் , அதன் முன்னேற்றமும் , சமூக ஒற்றுமையுமே முக்கியம் எனக்கு.
கடந்த 12.10.2014 அன்று சென்னையில் என் முதல் கவிதை தொகுப்பு
" உணர்வலைகள் "
என்னும் வண்ணமிகு நூல் வெளிடப்பட்டது . .
கடந்த 18.10.2015 அன்று நடைபெற்ற மகாகவி தமிழன்பன் அவர்களின் 81 வது பிறந்தநாள் விழா அன்று எனது இரண்டாவது கவிதை தொகுப்பு
" நிலவோடு ஓர் உரையாடல் "
எனும் நூல் வெளிடப்பட்டது அனைவரின் ஆசியுடனும் ஆதரவுடனும்..
எனது மூன்றாவது கவிதை தொகுப்பு நூல் " மனம் தேடும் மனிதம் " கடந்த 21 .08 .2018 அன்று இனமான காவலர் , மாண்புமிகு பேராசிரியர் க அன்பழகன் அவர்களால் வெளியிடப்பட்டது .
என் தனிப்பட்ட இணையதளத்தின் முகவரி.
http://www.tamilrasiganpalanikumar.com
நீங்கள் சென்று பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்திட வேண்டும். ஆலோசனையும் வழங்கிட வேண்டுகிறேன் .
உணவு விடுதியில்
அடுத்த வேளைக்கு
உணவு விடுதியில்
அடுத்த வேளைக்கு
மனங்கள் பேசும் மொழி
மௌனம் அதனின் பெயர் !
கருவறை சிசுவும் பேசும்
மௌன மொழியில் தாயிடம் !
உருவாகும் உணர்வின் உச்சம்
உள்ளத்தில் நிலவும் மௌனம் !
கூடும் சோகத்தின் விளிம்பு
ஒலியற்ற மௌனத்தின் எல்லை !
சுகத்தை உணர்ந்திடும் உள்ளம்
உரைக்கும் மௌன மொழியில் !
நெருங்கிய காதலரின் மனங்கள்
நிகழ்த்திடும் மௌன யுத்தம் !
உருக்கிடும் காணும் உள்ளத்தை
வறியோனின் மௌனப் புன்னகை !
உருவாகும் பனிப்போர் உள்ளத்தில்
உருமாறும் மௌனப் புரட்சியாக !
மௌனம் காப்பதே மருந்தாகும்
வருந்தும் மனதிற்கு விருந்தாகும் !
கற்றிடுக மௌனமெனும் மொழியை
பயணிக்க வாழ்வெனும் பாதையில் !
நிலைத்திட வாழ்வில் அமைதியை
காத்திடுக உள்ளத்தி
ராஜேஷ் தனது இருசக்கர வாகனத்தை வேகமாக வந்து நிறுத்தி விட்டு தனது லேப்டாப் மற்றும் மதிய உணவு பையையும் எடுத்துக் கொண்டான் . கலைந்த தனது தலைமுடியை சரி செய்து கொண்டான். அவனிடம் ஒரு அவசரம் தெரிந்தது . படபடப்புடன் காணப்பட்டான் . அப்போது அவனது அலுவலக காவலாளி ஓடிவந்து விரைப்புடன் குட் மார்னிங் சார் என்றான் . ராஜேஷ் பதிலுக்கு கையசைத்து மாடிப்படிகளில் ஏறினான் . அலுவலகத்தில் நுழைந்து தனது இருக்கையில் அமர்ந்து கம்ப்யூட்டரை இயக்கி வேலையைத் துவங்கினான் . அப்போது, என்னடா ராஜேஷ் இவ்வளவு சீக்கிரம் வந்துவிட்டாய் என்று கேட்டான் திவாகர் . ஆச்சரியமாக உள்ளது என்று கேலியாக சிரித்தான். நேற்று மாலை எனக்கு ஒரே தலைவலிய
உலகெனும் கோளத்தில் மனிதராய் பிறந்தவர்
எவரும் அறிவர் வந்தநாளை நிச்சயமாய்!
வாழ்கின்ற காலமும் இறுதிநாள் தெரியாது
காலன் அழைக்கும் காலநேரம் அறியாது!
வருடங்கள் கடந்தாலும் வளர்ச்சியை நினையாது
வகுத்திடுக வாழ்வைப் பகுத்தறிந்துப் பாதையை!
முகிழ்ந்த மலர்போல் மணமுடன் வாழ்க
முறையாக வாழ்ந்தால் மகிழ்வே மண்ணில்
பூத்திடும் புதுமலரும் வாடும் புவியிலே
வீசிடும் வாசமும் குறைவது இயற்கையே !
கடந்திடும் காலம் ஊர்தியல்ல காத்திருக்க
நேற்றுள்ள உயிர்கள் இன்றில்லை இவ்வுலகில் !
செல்லுபடி ஆகாது செல்லரித்தப் பணமும்
ஆணை பிறப்பித்தால் கைக்காசும் வீணே
காத்திராது நமக்காக நமது திட்டங்களும்
காலாவதியான ஒப்பந்தம் நிலை போல
கடந்து செல்கிறது 2021
உடன் அழைத்து செல்கிறது
முடிந்த நிகழ்வுகளை !
நிலைக்கிறது சில நெஞ்சில்
மறக்கிறது மனம் பலவற்றை
வாழ்வில் நிதர்சனம் இது !
பலரின் இழப்பைத்
தாங்குது இதயம் ,
சிலரின் மறைவால்
வலிக்கிறது உள்ளம் ,
உடைந்து சிதறுகிறது
உருமாறுது சிந்தை
சில நிகழ்வுகளால் !
நலிவடைந்த 2020
நலம்பெற்று வருகையில்
நலிவுறுமோ என்று
நினைக்கிறது மனம்
நல்லதே நடக்குமென
நினைத்து வரவேற்போம்
வருகின்ற 2022ஐ !
கொடூர கொரானாவும்
ஒமைக்ரானும் ஒழியட்டும்
நலமும் மகிழ்ச்சியும்
நிலைத்து ஓங்கட்டும் !
சீரடைந்த தாயகம்
வளமான தமிழகம்
உருவாகட்டும் !
மலரவுள்ள புத்தாண்டில்
ஏற்றங்கள் நிகழட்டும் !
சாதிமத பேதங்கள்
மண்ணில் மறைய
கடந்து செல்கிறது 2021
உடன் அழைத்து செல்கிறது
முடிந்த நிகழ்வுகளை !
நிலைக்கிறது சில நெஞ்சில்
மறக்கிறது மனம் பலவற்றை
வாழ்வில் நிதர்சனம் இது !
பலரின் இழப்பைத்
தாங்குது இதயம் ,
சிலரின் மறைவால்
வலிக்கிறது உள்ளம் ,
உடைந்து சிதறுகிறது
உருமாறுது சிந்தை
சில நிகழ்வுகளால் !
நலிவடைந்த 2020
நலம்பெற்று வருகையில்
நலிவுறுமோ என்று
நினைக்கிறது மனம்
நல்லதே நடக்குமென
நினைத்து வரவேற்போம்
வருகின்ற 2022ஐ !
கொடூர கொரானாவும்
ஒமைக்ரானும் ஒழியட்டும்
நலமும் மகிழ்ச்சியும்
நிலைத்து ஓங்கட்டும் !
சீரடைந்த தாயகம்
வளமான தமிழகம்
உருவாகட்டும் !
மலரவுள்ள புத்தாண்டில்
ஏற்றங்கள் நிகழட்டும் !
சாதிமத பேதங்கள்
மண்ணில் மறைய
உலகெனும் கோளத்தில் மனிதராய் பிறந்தவர்
எவரும் அறிவர் வந்தநாளை நிச்சயமாய்!
வாழ்கின்ற காலமும் இறுதிநாள் தெரியாது
காலன் அழைக்கும் காலநேரம் அறியாது!
வருடங்கள் கடந்தாலும் வளர்ச்சியை நினையாது
வகுத்திடுக வாழ்வைப் பகுத்தறிந்துப் பாதையை!
முகிழ்ந்த மலர்போல் மணமுடன் வாழ்க
முறையாக வாழ்ந்தால் மகிழ்வே மண்ணில்
பூத்திடும் புதுமலரும் வாடும் புவியிலே
வீசிடும் வாசமும் குறைவது இயற்கையே !
கடந்திடும் காலம் ஊர்தியல்ல காத்திருக்க
நேற்றுள்ள உயிர்கள் இன்றில்லை இவ்வுலகில் !
செல்லுபடி ஆகாது செல்லரித்தப் பணமும்
ஆணை பிறப்பித்தால் கைக்காசும் வீணே
காத்திராது நமக்காக நமது திட்டங்களும்
காலாவதியான ஒப்பந்தம் நிலை போல
மனதின் எதிரொலி - 4
மனதின் எதிரொலி - 3
----------------------------------------
பொதுவாக ஒருவருக்கு சில நேரங்களில் அவசியம் என்று நினைக்கும் போது , மற்றவருக்கு அறிவுரை கூறுவார்கள் , ஆலோசனை வழங்குவார்கள் . இது அவருக்கு கிடைத்த அனுபவத்தால் , ஆற்றலால் , பெற்ற அறிவால் , அதனை அடுத்தவருக்கு சொல்வது இயற்கை. அதிலும் சிலர் ஏற்பார்கள் என்ற நம்பிக்கையுடன் கூறுவது வழக்கமான ஒன்று, அது தவறில்லை .
இந்த செயல் ஆண்டாண்டு காலமாக நடந்தாலும் , ஒருசிலர் அடுத்தவர் தனக்கு அவ்வாறு அறிவுரை கூறினால் கோபம் வரும் . ஏற்க மறுப்பார்கள் .ஒருசிலர் தம்மை மாற்றியும் கொள்வார்கள் . நாம் யாரையும் கட்டுப்படுத்த முடியாது , கட்டாயப்படுத்த முடியாது . இதனால் தேவையற்ற பிரச்சினைகள் நாம் எதிர்கொள்ள வேண்டி இருக்கும் . அதனால் விரோதம் உருவாகும் வாய்ப்பு உண்டு .
மேலும் இது அவர்களின் தனிப்பட்ட முடிவு என்பதால் அவரே என்றாவது ஒருநாள் வருந்துவதோடு, கேட்காமல் விட்டது பெரிய தவறு என்று உணர்கின்ற வகையில் ஒரு நிகழ்வு நடக்கும் என்பது இயற்கை. இதை நாம் பல நேரங்களில் கண்டு இருக்கிறோம் .
அப்படி ஏதாவது உங்களுக்கு ஆலோசனையோ அறிவுரையோ வழங்கினால் பொறுமையாக கேளுங்கள் . பிறகு நீங்கள் தனியாக உள்ளபோது ஆழ்ந்து சிந்த்தித்து ஒரு முடிவு எடுங்கள் . பொறுமை காத்தலும் , அமைதியாக இருத்தலும் மிக அவசியம் . அள்ளித் தெளித்த கோலம் போல நாம் எடுக்கும் அவசர முடிவுகள் தான் நம்மை தவறான முடிவுக்கு வழி வகுக்கும் .
பழனி குமார்
வாழ்க்கை எனும் பயணத்தில்
பழனி குமார்
காலம் கடந்து செல்கிறது
எதையும் பொருட்படுத்தாமல் !
இயற்கை கற்பிக்கிறது நமக்கு
இதன் மூலம் ஒரு பாடம் !
மனிதா எதற்கும் அஞ்சாதே
தடைகளைக் கண்டு துவளாதே !
நடைபோடு நிற்காமல் என்றும்
போராடு நெஞ்சில் துணிவுடன் !
உறுதி வேண்டும் உள்ளத்தில்
மாற்றம் வந்திடும் வாழ்வில் !
நம்பிக்கைத் தேவை அவசியம்
வெற்றி ஒருநாள் நிச்சயம் !
பழனி குமார்
19.11.2021