நா சதீஸ்குமார் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : நா சதீஸ்குமார் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 05-Jun-1986 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Jul-2011 |
பார்த்தவர்கள் | : 1121 |
புள்ளி | : 393 |
அப்பனென்ற எழுதுகோள் கொண்டு...
அன்னை என்ற எழுதுத்தாள் அன்று...
அவசரமாய் எழுதி வீசிய
ஹைக்கூ கவிதை நான்....
"ஹைக்கூ"
------------------
அணு
அணுவாய்
துளைக்கப்படுகிறது
பூமகளின் (பூமி)
நெஞ்சம்..?
"தண்ணீர் பஞ்சம் "
எல்லோரும் உயரலாம்,
எல்லாம் என்னால் என,
எண்ணாமலிருந்தால்....!
-நா.சதீஸ்குமார்
இப்பாரினில் கூற புதிதாய் எதுவுமில்லை
இங்கு நடப்பதை கண்டால் ஊமை போல்
இருக்கவும் என் நெஞ்சு பொறுக்கவில்லை
எத்தனை எத்தனை அநீதிகள் இங்கே
கல்வியால் உரிமையை கற்றுகொடுத்து
நடைமுறையில் அடங்கி போகசொல்லும் கல்விக்கூடங்கள்!
சுதந்திரமாய் பேசு என்று அறிவிப்பு விடுத்து
கழுத்தின் மேல் கத்தி வைக்கும் கொடுமைகள் !
பணத்தால் என் உரிமைகளை விலைக்கு
வாங்கும் கோரர்கள்-பெண்கள் நாட்டின்
கண்கள் எனக் கூறி கண்களாலேயே
உடலை கற்பழிக்கும் காமகர்கள்!
என் நெஞ்சம் கொதிக்கிறது- மக்கள்
குறை தீர்க்கும் நியாயகூடங்கள் கூட
அநியாயர்களுக்கு அடங்கி போகும் அவலங்கள்
பொறுக்கமுடியவில்லை , சகிக்கதெரியவில்லை!
எடுத்து வைக்கும்
ஒவ்வொரு அடியும்
தோற்று போய் விடுகிறதே
என்று சோர்ந்த
நேரங்களில் எல்லாம்
ஒரு வயதில்
என் கை பிடித்து
நடக்க வைத்த
அதே தாய்மை மாறாமல்
என்னை உன் மடியில்
சாய்த்து ஆறுதல்
கூறும் உன்னை
பார்க்கவா பத்து மாதம்
நான் கெடு கேட்டேன்....
உணர்வுகள் ஒன்று கூடி
கனத்து கிடக்கிறது
என் மனது
உன் அன்பு புன்னகையை
கையேந்தி ஏற்கும் போதெல்லாம்....
~~~ பச்சிளம் குழந்தைகள் குப்பைகளில் கண்டே
பாலியல் துன்பங்கள் பள்ளிகளில் கண்டே ~~~
~~~ கல்வி நிறுவனங்களில் கொள்ளைகள் கண்டே
கள்ள உறவுகளில் கலாச்சாரம் கண்டே ~~~
~~~ முத்தப் போராட்டத்தில் முன்னுரை கண்டே
முதியோர் இல்லத்தில் முடிவுரை கண்டே ~~~
~~~ போதைக்கு அடிமையான பேதைகள் கண்டே
போலியான உறவுகளின் போதனைகள் கண்டே ~~~
~~~ சாதிக்க பிறந்தவன் சாதியில் கண்டே
சாட்சிகள் பொய்யான சாதனைகள் கண்டே ~~~
~~~ மண உறவுகள் மடியக் கண்டே
மதம் மாற்றும் மடமைகள் கண்டே ~~~
~~~ காதல் பெயரில் காமம் கண்டே
காற்றில் பெருகும் மாசுகள் கண்டே ~~~
~~~ தவறான கொள்கைகள் தவழக் கண்டே
தரணியில் தருமம் மடியக் கண்டே ~
***தாயின் அன்பு ***
பத்து மாதங்கள்
கருவில் சுமந்தால்
மட்டும் அன்னை அல்ல ....
பெற்றவள் யாரென தெரியாமல்
குப்பை தொட்டிகளையும்
தெருவோர சாலைகளையும்
பிறப்பிடமாக வளரும் குழந்தைகளுக்கும்
தாயாகலாம் ....
ஜாதகத்தில் தோஷமாம் ....
பெண்ணவளுக்கு -மனதில்
சந்தோசத்தின் உச்சத்தில் அவள் மனம்...
கருவில் சுமந்து தாயாகும்
வரம் எனக்கில்லை ...
ஆதரவற்ற ஒரு குழந்தைக்கு
தாயாகும் வரம் எனக்கு உண்டு என்று ...
கருவில் வளர்ந்த அக்குழந்தையை
என் நெஞ்சில் சுமக்கும் பாக்கியம்
உண்டு என்று ஆனந்தம் என்னில்....
ஆம் எல்லையற்ற ஆனந்தம்
கன்னியவள் உள்ளத்தில்....
பிறவிப்பலனை உணர்ந்தால்
அவள
பஞ்சத்தால் அழிய நேரும் என்பதால் தானோ..!
பிரபஞ்சம் என அழைத்தார்கள் நம் முன்னோர்கள்...!
-நா.சதீஸ்குமார்
வேலை நிறுத்தமொன்றை
வேலையற்ற சண்டியர்கள்
ஏவற் பேய் போல் நம்மேல் இழைத்திட...
காலிப் பயல்கள் கடையை உடைத்திட....
அரசு அலுவலகத்தில் ஆயாக்கள் உறங்கிட....
பரிதவிக்கிறோம் இப்பாவ நிலையை நினைத்து....
திரையுலக பாராட்டு விழா...
அரங்கேறும் அரசியல் நாடகம்....
ஆடம்பரமாய் அரசியல்வாதியின்
குடும்ப திருமணம்.....
ஓட்டை குடிசைகளில் ஒழுகி விழும் இடி...
இது தானடா அரசியல் வாதிகளின் மரணப்பிடி...
அரசியல் சாக்கடையென
மூக்கை மூடும் இளைஞர்கள்
ரசிகர் மன்றங்களில் மூழ்கி
நடைபிணமாய் வாழ்கின்றான்....
எல்லோரும் அவர்களாகிட,
எவன் தான் நேர்மையானவன்,
ஒவ்வொரு ஓட்டிற்கும்
இவ்வளவு தான் விலை