N.valarmathi. - சுயவிவரம்

(Profile)



பரிசு பெற்றவர்
இயற்பெயர்:  N.valarmathi.
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  08-Mar-2011
பார்த்தவர்கள்:  3009
புள்ளி:  977

என் படைப்புகள்
N.valarmathi. செய்திகள்
கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) sankaran ayya மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
25-Sep-2017 8:19 am

விட்டெறிந்தாலும்
வீணை நாதமே பேசும் !
விட்டெறிந்தாலும்
புத்தகத்தில் கவிதை
பக்கங்களே திரும்பும் !
விட்டெறிந்தாலும்
மலர் மேனியை
மென்மையாகவே தொடும் !
நீ விட்டெறிந்தாலும்
என் மனம்
உன்னையே பாடும் !

மேலும்

ஷுக்கிறியா கவிப்பிரிய வே ஆ 28-May-2018 2:43 pm
ஷுக்கிறியா கவிப்பிரிய சர்பான் 28-May-2018 2:43 pm
போற்றுதற்குரிய கவிதை பாராட்டுக்கள் ------------------- அறுசுவை இலக்கியம் ! விரிவாக அனைத்து உங்கள் படைப்புகளை படிக்க ஆவல் மலரும் இலக்கிய நினைவலைகள் 28-May-2018 5:53 am
ஷுக்கிறியா valarmathi 25-Sep-2017 3:27 pm
கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) sankaran ayya மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
24-Sep-2017 4:01 pm

விரல் தொட்டால்
வீணையில் ராகம்
மலர் தொட்டால்
தென்றலில் ராகம்
மௌனமே !
உன் விழி தொட்டால்
நெஞ்சினில் ராகம்

மேலும்

சுகமான ராகங்கள் சுரங்கள் சுமந்து வந்த பாடல் பல்லக்குகள் நன்றி valarmathi 27-Sep-2017 8:19 am
அருமை இறந்த என் கற்பனைகளும் சிறகு விரித்தன உயிர் பெற்று உறவே உயிரே உன் நினைவின் வருடலில் 27-Sep-2017 8:09 am
சுகமான ராகங்கள் 25-Sep-2017 9:55 am
அவள் சிரித்தாள் போதும் இறந்து போன என் கற்பனைகள் உயிர்பெறும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 24-Sep-2017 7:09 pm
கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) sankaran ayya மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
15-Sep-2017 8:44 am

பார்ப்போர் இல்லா
பூக்களும்
படிப்போர் இல்லா
கவிதைதையும்
பூத்தும் யாத்தும்
பயனிலை !

மேலும்

நீண்ட நாட்களுக்கு பின் மீண்டும்......... உண்மை சொன்னதால்.... வருகைக்கு நன்றி வளர்மதி 24-Sep-2017 3:22 pm
நன்றி சர்பான் 24-Sep-2017 3:16 pm
உண்மை, 24-Sep-2017 9:29 am
கவிதை பூக்கள் என்னை வெறுக்கிறது நான் சருகு என்பதால்.. இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 16-Sep-2017 1:00 am
கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) sankaran ayya மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
22-Sep-2017 8:10 am

ஆதவன் கதிர் விரித்தான் அந்தி மாலையில்
மாதவன் சிரித்தான் மாதவியும் சிரித்தாள்
போதுமா போகட்டுமா என்றான் ஆதவன்
போதாது நில் என்றாள் மாதவி !

மேலும்

போதுமா போகட்டுமா, என்று கேட்டதால் ஆதவனுக்கு ரசனை கொஞ்சம் கம்மிதான், ஆதவன் இருந்தாலும் இல்லாமல் போனாலும் ஒரே நிலை மாதவனுக்கு, அதனால்தான் மாதவி பதில் சொல்வதுபோல் இருக்கிறது, அதனால் உங்களுக்கும் மாதவிக்கும் மட்டும்தான் ரசனை அதிகம். 25-Sep-2017 9:47 am
நன்றி கவிப்பிரிய வளர்மதி மாதவனுக்கும் ஆதவனுக்கும் ஏன் இல்லை நன்றி ? 24-Sep-2017 3:32 pm
ரசனையான ரசனை, எழுதியவருக்கும், மாதவிக்கும். 24-Sep-2017 9:26 am
மிக்க நன்றி 22-Sep-2017 2:26 pm
N.valarmathi. - N.valarmathi. அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Mar-2011 1:20 pm


வெள்ளை நிலாவை
முத்தமிட்டுச் சென்றன மேகங்கள்!
பணித்துளியோடு
உறவாடிக் கொண்டிருந்தன மலர்கள்!
தென்றலின்
தீண்டலில் சிலிர்த்துக்கொடிருந்தன மரங்கள்!
அன்பே.............
நீ என் பக்கத்தில் இருந்திருந்தால்
இயற்கையை வென்றிருப்போம் நாம் இருவரும்!!!!
நீ இல்லாத இந்த இரவு
நீண்டு கொண்டிருப்பது ஏனடி......... ?

மேலும்

அருமை குறுகிய வரிகளில் யதார்த்தமான எண்ணங்கள் வாழ்த்துக்கள் 06-Jun-2016 10:06 am
நீங்கள் இயற்கையை வெல்ல வாழ்த்துகிறேன் போற்றுதற்குரிய கவிதைநயம் . பாராட்டுக்கள் தொடரட்டும் தமிழ் இலக்கியப் பயணம் தமிழ் அன்னை ஆசிகள் நன்றி .. . . 06-Jun-2016 12:45 am
பிரிவால் 06-Jun-2016 12:19 am
ஹரிஹரன் சொல்ல வார்த்தைகளே இல்லை, பிரியமுடன் மதி... 01-Nov-2011 1:57 pm
N.valarmathi. - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Feb-2015 9:19 am

நீரோடையின் சலசலப்பில்
நமது கலகலப்பான பேச்சுக்கள்
எத்துனை சுகம்!

சந்தோசமான குயிலோசையின் நடுவில்
சருகுகளின் சத்தத்தோடு துள்ளி விளையாடியதை
மறக்க முடியவில்லை நட்பே!

மயிலின் மகிழ்ந்த அகவளில்
கிடைத்த தோகையினால்
கிச்சி கிச்சி மூட்டிய தருணம் இன்பத்தின் எல்லை!

மலைமீது சிரித்தது அருவியோசை
மனதில் இழையோடியது நீ இல்லா தனிமை
தினம் தினம் மங்கலமான விடியல் என்றாலும்
என் நட்பே நீ இல்லாதது ஒரு சின்ன சோகம்தான்....!

மேலும்

16.02.15 ல் தோழி படைத்த படைப்பு 17.02.16 ல் என் பார்வையில் படுகிறது...! நினைவுகளின் சங்கமத்தில் இடைவெளித் தனிமை கூட இனிமையான கவிதைதான் என உணர்த்திய இப்படைப்பு மதியை குளிர்விக்கும் மதியின் வெளிச்சம் - இனிமை 17-Feb-2016 10:51 pm
N.valarmathi. - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Feb-2015 12:05 am

சகியே நீ கொஞ்சம் சகித்துப் போயிருந்தால்
சந்ததிகளோடு சந்தோசமாய் வாழ்ந்திருப்போம்!

மகனே நீ கொஞ்சம் சகித்துப் போயிருந்தால்
மகத்தான வாழ்கையை வாழ்ந்திருப்போம்!

மருமகளே நீ கொஞ்சம் சகித்துப் போயிருந்தால்
மரு மகளாக வானவில்லை ரசித்திருப்போம்!

நானும் கொஞ்சம் சகித்துப் போயிருந்தால்
நலமுடன் நல்லதொரு வாழ்கையை வாழ்ந்திருப்போம்!

முதியோர் இல்லத்தில்
முடங்கிக் கிடக்கும் நெஞ்சத்தில்
நிறைந்து கிடப்பது சகிப்புத்தன்மை மட்டுமே.......!

மேலும்

N.valarmathi. - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jan-2014 12:48 pm

மடிப்பு களையாத சட்டைக்குள்
என்னவளின் களையாத நினைவுகள்
அப்படியே ஆனந்தமாய் இருந்தன!

அது ஒரு நிலாக்காலமா ?
கனாக்காலமா? வசந்தகாலமா ?
அது ஒரு இனிமையான காலம்!

தலைநிறைய பூவோடு
தாவணியில் அவளைப் பார்த்தேன்
தடுக்கி விழுந்தது என் இதயம்!

சிநேகமாய் எனைப் பார்த்துச் சிரிப்பாள்
என்னுள் காதல் வாசம் வீசும்
ஆனாலும் சிறு புன்னகையை மட்டுமே காட்டுவேன்!

அவள் முகம் பார்க்கவே
அவளின் இல்லத்திற்கே செல்வேன்
அவளின் அண்ணன் என் நண்பன்!

அதனால்த்தானோ என்னவோ
என் காதலை அவளிடம்
சொல்லாமல் இருந்துவிட்டேன்!

அவள் எதேட்சையாக எனைத் தொட்டாள்
அவள் ஸ்பரிசம் பட்ட சட்டையை
அப்படியே இன்னும் எ

மேலும்

ம்........ சொல்லலாமே..... வேற ஒரு கவிதையில் சொல்கிறேனே சரியா? படித்ததற்கு ரொம்ப நன்றி.... பிரியமுடன் மதி..... 15-Jan-2014 4:52 pm
இன்னும் கொஞ்சம் சொல்லுங்களேன் . கவிதை அருமை . 14-Jan-2014 6:56 pm
அது அவர் சுவாசம் உள்ளவரையாம்..... 10-Jan-2014 7:18 pm
எத்தனை நாளைக்கு இப்படியே இருப்பார் இந்த விரும்பினர். 10-Jan-2014 7:04 pm
N.valarmathi. - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Dec-2013 10:49 am

ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க....
சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க.....
நீரில் மிதந்திடும் கண்களும் காய்க....
நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க.....

ஜனமும் பூமியில் புதியது இல்லை....
மரணத்தைப் போலொரு பழையதும் இல்லை...
இரண்டும் இல்லாவிடில் இயற்கையும் இல்லை...
இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை....

பாசம் உலாவிய கண்களும் எங்கே....
பாய்ந்து துளாவிய கைகளும் எங்கே....
தேசம் அளாவிய கால்களும் எங்கே....
தீ உண்டது என்றது சாம்பலுமிங்கே.....

கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக....
மண்ணில் பிறந்தது மண்ணுடன் சேர்க்க....
எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக....
எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க....

மேலும்

ரொம்ப நன்றி பானு, பிழையை சுட்டிக் காட்டியதற்கும் ரொம்ப நன்றி.. பிரியமுடன் மதி.... 30-Dec-2013 4:25 pm
பார்வைக்கு பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள் ..... பாய்ந்து து (ளா) லாவிய கைகளும் எங்கே.... 29-Dec-2013 7:51 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (124)

மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
தீனா

தீனா

மதுரை
தேகதாஸ்

தேகதாஸ்

இலங்கை (மட்டக்களப்பு )

இவர் பின்தொடர்பவர்கள் (124)

இவரை பின்தொடர்பவர்கள் (125)

மேலே