ஜீவன் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : ஜீவன் |
இடம் | : புதுவை |
பிறந்த தேதி | : 24-Mar-1956 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 31-Jan-2022 |
பார்த்தவர்கள் | : 2155 |
புள்ளி | : 584 |
நான் ஒரு மருத்துவர். தமிழின் மேல் உள்ள தணியாத காதலினால் கவிதையாய் சில நேரம்,கட்டுரையாய் சில நேரம்,கதையாய் சில நேரம் கிறுக்கி வைத்திருக்கிறேன்.அவற்றை உங்களோடு பகிர்வதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.உங்கள் கருத்துக்கள் என்னை வளர்த்துக் கொள்ளும் நல் உரமாக வேண்டுமென இந்த இணையத்தில் இணைக்கிறேன்.உங்களின் பாராட்டுதல்கள் இல்லை வசவுகள் இல்லை கைதட்டல்கள் இல்லை தோள் மீது சிறு தட்டல்களுக்காக ஏங்கி நிற்கும் ஒரு ஜீவன். ஓ...! என் புனை பெயரும் "ஜீவன்" தான். இனி என் படைப்புகள் ஜீவனின் " கதம்பத்தில்"இருந்து....
பொம்மலாட்டம்...!
18 / 05 / 2025
வாழ்க்கை ஒரு பொம்மலாட்டம்
அதில் தினம் ஆட்டப்படும்
உயிர் பொம்மை நான்.
என் தலையை சுற்றிய
கயறு என்மனைவியின் கையில்
அவள் இழுப்பதுபோல்தான்
என் தலை ஆடவேண்டும் .
என் வலக்கை சுற்றிய
கயறு என் தாயின் கையில்
அவள் ஆட்டுவிப்பதுபோல்தான்
என் கை ஆடவேண்டும்.
என் இடக்கையின் கயறு
சகோதர சகோதரியின் கைகளில்
இஷ்டம்போல் ஆட்டுகிறார்கள்.
என் வலது காலின் கயறு
என் தந்தையின் கைகளில்
அவர் வகுத்த பாதையில்தான்
நான் நடக்க வேண்டும்
என் இடது காலின் கயறு
சொந்த பந்தங்களின் கைகளில்
அவர்களை மீறி நடக்கக்கூடாது
என் இதயத்தின் கயறு மட்டும்
என் நண்பர்களின் கைகள
நானே எடைக்கல்..!
16 / 05 / 2025
யாரும் என்னை வெல்ல முடியாது
யாரும் எனக்கு கெடுதல் செய்ய முடியாது
யாரும் என்னை கட்டுப்படுத்த முடியாது
யாரும் என்னை சிறைப்படுத்தவும் முடியாது
என் வெற்றியும் என்னால்தான்
என் தோல்வியும் என்னால்தான்
என் தொல்லையும் என்னால்தான்
என் பாவமும் என்னால்தான்
எல்லாம் என்னால்தான்.
நான் என்கின்ற கர்வம்தான்
ஏற்றமும் இறக்கமும் என்னால்தான்
வாழ்வெனும் தராசில்
நானே பண்டம்
நானே எடைக்கல்
ஓ..சிவனே !
16 / 05 / 2025
ஓ..சிவனே !
நீ கொடுத்த கண் கொண்டு
எதையுமே பார்க்க முடிவதில்லை
அழுவதை தவிர...
நீ கொடுத்த கை கொண்டு
எதையுமே தடுக்க முடிவதில்லை
கைகட்டிக்கொண்டு
இருப்பதை தவிர...
நீ கொடுத்த கால் கொண்டு
எதையும் உதைக்க முடிவதில்லை
கால் கடுக்க
நிற்பதை தவிர..
பாழும் உலகை கெடுக்கும்
பேதங்களை பொசுக்கிட
இந்த ஊனக்கண்கள் வேண்டாம்
உன் நெற்றிக்கண்ணை கொடுத்திடு
எரித்து சாம்பலாக்கிட
லஞ்சலாவங்களை போக்கிட
சூம்பிப்போன கைகள் வேண்டாம்
இருக்கைகளில் உன்
சூலாயுதத்தை கொடுத்திடு
குத்தி கிழித்திட..
மனித நேயமற்ற மிருகங்களை
கண்டு நடுங்கும் கால்கள் வேண்டாம்
இரு கால்களில்
நான் சாகிறேன்.
04 / 05 / 2025
உன்பாடலை நான் பாடியே
உயிர்வாழ்கிறேன் உனக்காகவே
என்ஜீவனை தினம் தேடியே
உன்கண்களில் நான் காண்கிறேன்
எண்ணங்களில் உன்நினைவுகள்
வண்ணங்களாய் நிறம் கூட்டுதே
கண்ணாடியில் என்முகம் பார்க்கவே
கண்ணடித்து உன்முகம் காட்டுதே
பூங்காற்றாய் எனை அணைக்கையில்
பூகம்பமாய் நான் வெடிக்கிறேன்
கரைதேடியே வரும் அலையென
உனை தேடியே நான் அலைகிறேன்
விழிமூடியே நான் கிடக்கிறேன்
வழிமாறியே நான் தவிக்கிறேன்
நீபோனபின் என்வாழ்விலே
இருள் சூழ்ந்திட இருட்டானத்தே
விதி போட்டிடும் சதுரங்கத்தின்
புதிர் தேடியே நான் சாகிறேன்.
( "மேரே நாம் ஜோக்கர்" இந்தி
படத்தில் வரும் ' ஜீனா யஹா
பூப்போன்ற மகளே
பொன்வண்ணச் சிலையே
தேன்போல இனிக்கும்
தெம்மாங்கு பாட்டே
விழியோரம் நான் கண்ட கனவு - அதன்
விடையாக நீ வந்த வரவு.
மொழியெல்லாம் தமிழ்போல இனிப்பு - எந்தன்
வழியெல்லாம் நிறையும் உன் நினைப்பு.
கண்ணே நீ கண்மூடி தூங்கு - எந்தன்
தோள்மீது தலை சாய்த்து தூங்கு
தாயாக எனை மாற்றும் பெண்ணே - எந்தன்
தாயாக உனை காப்பேன் கண்ணே
வெறியன்
கத்தி எடு
கடவுளை வெட்ட !
கருணை அற்ற இந்த
கடவுள்களை எல்லாம் வெட்ட கத்தியை எடு
கயவர்கள் (உலகம்) எல்லாம்
ஒன்று கூடி
கொத்து கொத்தாய்
எங்களை கொன்ற
போது!
நல்லூர் கந்தன்
எங்கு போனான்?
மருதடி பிள்ளையானும்
எங்கு போனான்?
இல்லை
வயல் ஓரம் எல்லாம்
அமர்ந்திருக்கும்
அம்மனும் காளியும்
தான் எங்கு போனாள்?
இப்போ Gazza !
தினம் தினம்
கொல்கிறானே(West)
எங்கு போனான் Allah?
கத்தியை எடு,
இந்த நாத்தி அற்ற
கடவுள்களை எல்லாம்
வெட்டி வீழ்த்திட!
அந்த பாளை சீவும் கத்தியை கொடுடா.
சண்டியூர் பாலன்.
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
*சுடுகாடு சொல்கிறேன்*
படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
நான்
திறந்திருக்கும் புத்தகம்
ஒதுங்கிப் போகாதே !
ஒரு முறையேனும்
வாசித்து விட்டுப் போ....!
என்னைக் கண்டு பயப்படாதே !
நான் ஒரு கோவில்....
இங்கு
ஈசன் தியானம் செய்கிறான்...
என்னை வெறுக்காதே !
உன் தாய் கூட
பத்து மாதம் தான்
கருவறையில்
உன்னை சுமப்பாள்
நான் உன்னை
காலமெல்லாம்
கல்லறையில் சுமப்பேன்.....!
நீ காலில் போனாலும்
காரில் போனாலும்
ஒரு நாள்
பாடையில்
இங்கு கண்டிப்பாக
வருவாய்.....
புண்ணியம்
செய்கின்றவனே !
ஒரு நாள்
இங்கு வந்து தான்
ஆக வேண்
நிம்மதி நிலைக்குமே..!
07 / 04 /2024
தூரத்தில் இருக்கும்போது உன்
நேர்மறைகள் என்னை ஈர்க்குதே
அருகில் இருக்கும்போது உன்
எதிர்மறைகள் என்னை தாக்குதே
நேர்மறை எதிர்மறையின் கலவைதான்
வாழ்க்கை என உணர்த்துதே
இருபாலருக்கும் சமம் இந்த
முடுச்சு என உறைக்குதே
ஏற்றத் தாழ்வுடன் பயணம்
மாற்றம் இல்லாமல் நிகழுமே
சமரசம் செய்து வாழ்ந்துவிட்டால்
வாழ்வில் நிம்மதி நிலைக்குமே..!
இன்று உன் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள ஆயிரம் பேர் இருக்கலாம்..
ஆனால் அன்று உன் துயரத்தை பகிர்ந்து கொள்ள நான் மட்டுமே இருந்தேன்..
அன்று உனக்கு ஆறுதல் கூறி உயர்ந்து எழ ஊன்று கோலாய் இருந்தேன்...
இன்று தேவையற்ற கோலாய் தூக்கி எறியப்பட்டேன்..
அந்த ஆயிரம் நபர்களும் உனக்கு பாராட்டு
தெரிவித்து இருக்கலாம்..
நீயும் இன்று அதில் மூழ்கி போகலாம் ...
மீண்டும் எழுந்து ஓட தொடங்கி விடு...
காரணம் ..உன்னை ஓட சொல்ல உன் அருகில் நான் இல்லை.. இருப்பினும்
நான் உன்னை விட்டு கடந்து செல்வதாய் இல்லை..
நீ விட்டு சென்ற இடத்தில் நின்று கொண்டு..
உன்னை ரகசியமாய் தொடர்ந்து கொண்டு ..
உன் முன்னேற்றத்தை ரசித்து கொண்ட
கண்ணீர் சிந்தும் போது
துடைக்க யாரும் வருவதில்லை..
கவலை கொள்ளும் போது
சிரிக்க வைக்க எவரும்
வருவதில்லை.. அறியாமல்
ஒரு தவறு செய்து பார்..
உன்னை விமர்சிக்க
இந்த உலகமே கூடி வரும்..!
நம்மை பற்றி கவலை
படாதவர்களுக்கு நாம்
சிந்தும் கண்ணீர்
அர்த்தமற்றது..!
உன்னை வெறுப்பவர்களை
நினைத்து கவலை கொள்ளாதே..
அவர்களுக்கு உன் அன்பை
பெற தகுதி இல்லை என
நினைத்துக்கொள்..!
கவலைகளின் அளவு
கையளவாக இருக்கும்
வரை தான் கண்ணீருக்கும்
வேலை.. கவலை
மலையளவு ஆகும் போது
மனமும் மரத்துப் போகும்..!
கடலளவு கண்ணீரை வடித்தாலும்…
நம் மனம் விரும்பாமல் எந்த
கவலைகளையும்
சரி செய்ய முடியாது..!
கவலையை மறைக
கண்கள் மூடும்போது
கனவு மறைவதில்லை.
இரவு தூங்கும்போது
எண்ணம் தூங்கவில்லை
தினம் தினம் கூத்துதான்
புதுவயல் நாத்துதான்.
நான்கு விழிகள் பேசும்
ஒரு கவிதையானது
நாடிநரம்பில் நுழைந்து
எந்தன் உதிரமானது.
நான் உனை பார்த்தது
பூர்வ ஜென்ம புண்ணியம்.
நீ எனை சேர்ந்தது
நான் செய்த பாக்கியம்
வா அருகே...நான் உருக
வாழ்வோம் வா பெண்ணே..
நீயும் நானும் சேர்ந்த
இந்த வாழ்க்கையானது
நீல வானம் போல
மிக நீளமானது
உன் மடி தேடினேன்
ஒரு சேயாகவே
நீ எனை தேற்றினாய்
ஒரு தாயாகவே
வா அழகே... நான் பழக...
சேர்வோம் வா பெண்ணே.
அன்புத் தோழியே...
ஒரு நாள் இடைவெளி....மன்னிக்கவும். முடிந்தவரை தினமும் தொடர்பில் இருக்க முயற்சிக்கிறேன். ஆதிகாலத்திலிருந்து புராண காலத்திற்கு வருவோம். ராமாயணம்...மஹாபாரதம்...இரண்டும் மாபெரும் இதிகாசங்கள். நமக்கு கிடைத்த பொக்கிஷங்கள். ஏனென்றால் அவை இரண்டும் நம் வாழ்க்கையை பேசியது...வாழ்வின் முறைகளை முறைப்படுத்தியது. காதலை சொன்னது..குடும்பத்தை காட்டியது..சொந்த பந்தங்களை அறிமுகப் படுத்தியது. அதில் நிறைந்திருக்கும் அன்பு...பாசம்...சூழ்ச்சி...துரோகம்...எல்லாவற்றையும் வகைப்படுத்தி நமக்கு காட்டிக் கொண்டிருக்கிறது. எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டிருந்தாலும் இன்று