ஜீவன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ஜீவன்
இடம்:  புதுவை
பிறந்த தேதி :  24-Mar-1956
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  31-Jan-2022
பார்த்தவர்கள்:  1861
புள்ளி:  507

என்னைப் பற்றி...

நான் ஒரு மருத்துவர். தமிழின் மேல் உள்ள தணியாத காதலினால் கவிதையாய் சில நேரம்,கட்டுரையாய் சில நேரம்,கதையாய் சில நேரம் கிறுக்கி வைத்திருக்கிறேன்.அவற்றை உங்களோடு பகிர்வதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.உங்கள் கருத்துக்கள் என்னை வளர்த்துக் கொள்ளும் நல் உரமாக வேண்டுமென இந்த இணையத்தில் இணைக்கிறேன்.உங்களின் பாராட்டுதல்கள் இல்லை வசவுகள் இல்லை கைதட்டல்கள் இல்லை தோள் மீது சிறு தட்டல்களுக்காக ஏங்கி நிற்கும் ஒரு ஜீவன். ஓ...! என் புனை பெயரும் "ஜீவன்" தான். இனி என் படைப்புகள் ஜீவனின் " கதம்பத்தில்"இருந்து....

என் படைப்புகள்
ஜீவன் செய்திகள்
ஜீவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Aug-2024 6:48 pm

திருவருளே....!
30 / 08 / 2024
பாத்துப் பாத்து படைத்து வைத்த
பரம்பொருளே - உன்
பாதம் பற்றி சரணடைந்தேன்
திருவருளே....!
என்ன வேண்டும்? எனக்கு
என்ன வேண்டும்? என்று
நீ கணித்தாய் - நான்
பிறக்கும் முன்னே
படைத்து வைத்து
அகமகிழ்ந்தாய்
அனுபவிக்க உடலும் உயிரும்
எனக்கு தந்தாய் - நான்
பகுத்தறிந்து முன்னேற
பாதையும் விரித்தாய்.
பாதையிலே பயணிக்க
துணையாய் வந்தாய் - என்
பாவங்களை மன்னித்து
தாயாய் நின்றாய்.
உள்ளிருந்து எங்குமெனை
நடத்தி வந்தாய் - என்
பாதை நிறைந்திங்கு
வெளிச்சமும் ஆனாய்.
தடுமாறி வீழ்கையில்
ஊன்றுகோல் ஆனாய் - நான்
திசைமாறி போகையில்
நல் மாலுமி ஆனாய்.

மேலும்

ஜீவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Aug-2024 10:03 pm

போய் கொண்டே இருந்தது.....!
22 / 08 /2024.

ஏன் இந்த பிறவி?
எதற்காக இந்த பிறவி?
பிறப்பின் ரகசியம்தான் என்ன?
விடை சொல்லு என்று கேட்டேன்.
எழுந்து நடந்து விடு...
அதுதான் உன்பிறப்பின் சாதனை
என்றொரு அசரீரி சொன்னது.
எழுந்தேன்...நடந்தேன்...
குழப்பம் தீரவில்லை
ஏனென்னை சோதிக்கிறாய்?
நடந்துவிட்டேன். இன்னும் என்ன?
இல்லையில்லை...வரும் சோதனைகள்
வென்றிட நீ பயிலவேண்டும்
என்றது சொன்னது.
பயின்றேன்..வெற்றியும்..பதக்கங்களும்
பல வென்றேன்.
படிப்பு மட்டும் போதுமா?
உழைக்க வேண்டாமா?
என உந்தி தள்ளியது.
மாடு போல் உழைத்தேன்.
மாலைகளும்...பதவிகளும்..
பேரும்...புகழும்
வென்று அடைந்தேன்.
என் க

மேலும்

ஜீவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Aug-2024 6:15 pm

கரைந்து போனேன்.....!
22 / 08 / 2024

கண் மூடிக் கிடந்தேன்...
பெண்மையின் வாசம்
மென்மையாய் எனைத் தாக்கியது.
மெல்ல கண் திறந்தேன்.
என் முகத்துக்குள் முகமாய்
உன் முகம்
என் மூக்கும் உன் மூக்கும்
ஒன்றோடொன்று உரசிக் கொண்டிருந்தது.
உன் கண்களோ
பாதி மூடியும் மூடாமலும்
சொரிகிக் கிடந்தது.
உன் ஈர உதடுகளோ
என் உதடுகளை
தொட்டும் தொடாமலும்
துடித்துக் கொண்டிருந்தது.
தாகத்தினால் உன் மேனி
குளிர்ந்து கிடந்தது.
மோகத்தினால் என் மேனி
சூடேறி தகித்தது.
அனிச்சையாய் என் கைகள்
உனை வளைத்து
என்னோடு இறுக்கியது.
மார்பின் இடைவெளி
காற்று புகாமல்
இறுகிக் கிடந்தது.
வாய் பேச்சு மரணித்து

மேலும்

ஜீவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Aug-2024 8:11 pm

காதல் கவிதை...

காதல் கவிதை எழுதிட
பேப்பரும் பேனாவோடு அமர்ந்திருந்தேன்.
கண்ணைப் பொத்தி விளையாடினாய்.
எண்ணத்தில் கம்பன் வந்தான்….
கண்ணதாசன் வந்தான்….
வாலியும் வாலிப முறுக்கோடு நின்றான்.
வைரமுத்தோ வைர வரிகளோடு வரிசையில் நின்றான்.
கண்ணே...
நீயே கவிதையாய் என்னருகே இருக்கும்போது
மற்ற கவிதைகளில் காதல் இல்லாமல் போனது.
நம் காதல் மட்டும்...
கவிதையாய் பொங்கி பெருகியதே...!

மேலும்

ஜீவன் - கவிஞர் கவிதை ரசிகன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Jul-2024 8:12 pm

♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️

*சுடுகாடு சொல்கிறேன்*


படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️

நான்
திறந்திருக்கும் புத்தகம்
ஒதுங்கிப் போகாதே !
ஒரு முறையேனும்
வாசித்து விட்டுப் போ....!

என்னைக் கண்டு பயப்படாதே !
நான் ஒரு கோவில்....
இங்கு
ஈசன் தியானம் செய்கிறான்...

என்னை வெறுக்காதே !
உன் தாய் கூட
பத்து மாதம் தான்
கருவறையில்
உன்னை சுமப்பாள்
நான் உன்னை
காலமெல்லாம்
கல்லறையில் சுமப்பேன்.....!

நீ காலில் போனாலும்
காரில் போனாலும்
ஒரு நாள்
பாடையில்
இங்கு கண்டிப்பாக
வருவாய்.....

புண்ணியம்
செய்கின்றவனே !
ஒரு நாள்
இங்கு வந்து தான்
ஆக வேண்

மேலும்

அன்பு கவிதை ரசிகனே... கல்லறை காவியம் படைத்து விட்டீர்கள். சுடுகாட்டிற்கு வரும்போதுதான் எல்லோருக்கும் ஞானம் பிறக்கும். திரும்பி போகும்போது ஒட்டிய மண்ணை தட்டி விட்டு போய்விடுகிறோம். நீ இந்த பிணத்திற்கு பின்னால் வரும் நாளைய பிணம். சுடுகாடு சொல்லிக் கொடுக்கும் வாழ்வின் எதார்த்த...பசுமரத்து ஆணியாய் நெஞ்சைத்தாக்கும் நிர்வாண உண்மை.வாழ்த்துகள். 23-Jul-2024 6:24 pm
ஜீவன் - ஜீவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Apr-2024 9:07 am

நிம்மதி நிலைக்குமே..!
07 / 04 /2024

தூரத்தில் இருக்கும்போது உன்
நேர்மறைகள் என்னை ஈர்க்குதே
அருகில் இருக்கும்போது உன்
எதிர்மறைகள் என்னை தாக்குதே
நேர்மறை எதிர்மறையின் கலவைதான்
வாழ்க்கை என உணர்த்துதே
இருபாலருக்கும் சமம் இந்த
முடுச்சு என உறைக்குதே
ஏற்றத் தாழ்வுடன் பயணம்
மாற்றம் இல்லாமல் நிகழுமே
சமரசம் செய்து வாழ்ந்துவிட்டால்
வாழ்வில் நிம்மதி நிலைக்குமே..!

மேலும்

வணக்கம் சுபா ...உங்களின் கருத்துக்கு நன்றி. நீங்கள் சொன்னது போல் மேடுபள்ளங்கள் இருந்தால்தான் பயணம் சுகமாக இருக்குமோ என்னவோ தெரியவில்லை. ஆனால் சவாலாக இருக்கும். சவால்கள்தான் வாழ்வின் சுவையை கூட்டும். சமீபகாலமாக குறைவான ரத்த இழப்புடன் கூடிய அறுவை சிகிச்சைக்குத்தான் முயலுகிறோம்.. ரத்த இழப்பே இல்லாத அறுவை சிகிச்சைக்கு சாத்தியமே இல்லை. இதையெல்லாம் உணர்ந்து சமரசம் செய்து கொண்டால் வாழ்வில் சிறிதளவாது நிம்மதி கிட்டும் என்பது என்னுடைய தாழமையான கருத்து. மீண்டும் நன்றி நண்பரே..இப்படி கருத்துக்களை பரிமாறுங்கள். என்னை செதுக்கி கொள்ள ஏதுவாக இருக்கும். நன்றி 07-Apr-2024 8:59 pm
வணக்கம் ஜீவன் அவர்களே...நலம் தானே? ஒரு டாக்டரிடம் கேட்கும் கேள்வியா? என்று எண்ண வேண்டாம். நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று உங்கள் கவிதையை வாசித்தேன். மேடு பள்ளங்கள் இருந்தால்tதான் பயணம் சுகமாக இருக்கும். வாழ்க்கைப் பயணத்தில் சமரசமாக வாழலாம். ஆனால்.. உப்பு காரமில்லா ஊறுகாய் போல் இருக்கும். இரத்தம் கசியாமல் அறுவை சிகிச்சை சாத்தியமா? வாழ்த்துகள்... வாழ்க நலமுடன்..!! 07-Apr-2024 11:40 am
ஜீவன் - பாக்யராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Mar-2024 9:06 am

விதியெழுதும் வீதிகள்
++++++++++++++++++++++

வனத்தை அழித்தோம் /
வீதி அமைத்தோம்/
வீதியெல்லாம் விலங்கினம்/
வீட்டுக்குள்ள மனிதன்/

அனைத்தையும் அடக்கியவன் / அடங்கியது உயிர்ப்பயம்/
இயற்கையுடன் வாழ/
இயன்றவரை முயல்வோம் /

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

மேலும்

வனத்தை அழித்தோம். வீதி சமைத்தோம். வீதியெல்லாம் விலங்கினம். வீட்டிற்குள் மனித இனம். அருமை. எதார்த்த உண்மை. தொடருங்கள் தோழரே...வாழ்த்துகள். 30-Mar-2024 10:26 pm
ஜீவன் - vpasupathi rengan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Mar-2024 7:37 pm

அன்றுவந்த வெண்ணிலா தந்துபோன கனவு
வென்றுவிட்ட என்மனதில் வெந்துவிடும் நினைவு
ஒன்றுபட்டு ஒத்தறியா விந்தையான உறவு
என்றுவரும் என்கிறேங்கி இறங்கவில்லை உணவு

பால்நிலா தினமும்வந்து பருவராகம் பாடும்
வேல்விழி யில்விண்மீன் கள்ஓடிவிளை யாடும்
நூலிடை யில்நூறுமுறை நூலவிழ்த்து நாளும்
காலயர்ந்து கையயர்ந்து கன்னிமடி வீழும்

கோவைப்பழக் கோதையிதழ் போதைக்கொள்ளச் செய்யும்
பாவைமடி மீதுதினம் பருவமழை பெய்யும்
தேவையவள

மேலும்

நன்றி திரு வாசுதேவன். உங்கள் ரசனைக்கு மேலும் வரும் 19-Mar-2024 7:18 pm
நன்றி ஜீவன் 19-Mar-2024 7:16 pm
அன்பு நண்பா... நல்ல கவிதை. தொடர்ந்து எழுதவும் 13-Mar-2024 7:00 pm
அவள் அழகை சொல்லும் கவிதையும் அழகே திரை உலகிற்கு கவிதைப் புனையலாமோ ? உயர்ச்சித்தீரா > இல்லையேல் முயன்று பாருங்கள் விரும்பினால் நான் மிக ரசித்தேன் ......வாழ்த்துக்கள் 13-Mar-2024 6:58 pm
ஜீவன் - கலைச்செல்வி கி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Dec-2022 4:54 pm

இன்று உன் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள ஆயிரம் பேர் இருக்கலாம்..
ஆனால் அன்று உன் துயரத்தை பகிர்ந்து கொள்ள நான் மட்டுமே இருந்தேன்..
அன்று உனக்கு ஆறுதல் கூறி உயர்ந்து எழ ஊன்று கோலாய் இருந்தேன்...
இன்று தேவையற்ற கோலாய் தூக்கி எறியப்பட்டேன்..
அந்த ஆயிரம் நபர்களும் உனக்கு பாராட்டு
தெரிவித்து இருக்கலாம்..
நீயும் இன்று அதில் மூழ்கி போகலாம் ...
மீண்டும் எழுந்து ஓட தொடங்கி விடு...
காரணம் ..உன்னை ஓட சொல்ல உன் அருகில் நான் இல்லை.. இருப்பினும்
நான் உன்னை விட்டு கடந்து செல்வதாய் இல்லை..
நீ விட்டு சென்ற இடத்தில் நின்று கொண்டு..
உன்னை ரகசியமாய் தொடர்ந்து கொண்டு ..
உன் முன்னேற்றத்தை ரசித்து கொண்ட

மேலும்

ஜீவன் - மன்னை சுரேஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Nov-2022 2:36 pm

கண்ணீர் சிந்தும் போது
துடைக்க யாரும் வருவதில்லை..
கவலை கொள்ளும் போது
சிரிக்க வைக்க எவரும்
வருவதில்லை.. அறியாமல்
ஒரு தவறு செய்து பார்..
உன்னை விமர்சிக்க
இந்த உலகமே கூடி வரும்..!

நம்மை பற்றி கவலை
படாதவர்களுக்கு நாம்
சிந்தும் கண்ணீர்
அர்த்தமற்றது..!

உன்னை வெறுப்பவர்களை
நினைத்து கவலை கொள்ளாதே..
அவர்களுக்கு உன் அன்பை
பெற தகுதி இல்லை என
நினைத்துக்கொள்..!

கவலைகளின் அளவு
கையளவாக இருக்கும்
வரை தான் கண்ணீருக்கும்
வேலை.. கவலை
மலையளவு ஆகும் போது
மனமும் மரத்துப் போகும்..!

கடலளவு கண்ணீரை வடித்தாலும்…
நம் மனம் விரும்பாமல் எந்த
கவலைகளையும்
சரி செய்ய முடியாது..!

கவலையை மறைக

மேலும்

ஜீவன் - ஜீவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Nov-2022 9:36 pm

கண்கள் மூடும்போது
கனவு மறைவதில்லை.
இரவு தூங்கும்போது
எண்ணம் தூங்கவில்லை
தினம் தினம் கூத்துதான்
புதுவயல் நாத்துதான்.

நான்கு விழிகள் பேசும்
ஒரு கவிதையானது
நாடிநரம்பில் நுழைந்து
எந்தன் உதிரமானது.
நான் உனை பார்த்தது
பூர்வ ஜென்ம புண்ணியம்.
நீ எனை சேர்ந்தது
நான் செய்த பாக்கியம்
வா அருகே...நான் உருக
வாழ்வோம் வா பெண்ணே..

நீயும் நானும் சேர்ந்த
இந்த வாழ்க்கையானது
நீல வானம் போல
மிக நீளமானது
உன் மடி தேடினேன்
ஒரு சேயாகவே
நீ எனை தேற்றினாய்
ஒரு தாயாகவே
வா அழகே... நான் பழக...
சேர்வோம் வா பெண்ணே.

மேலும்

நன்றி கவின்...விமர்சனங்கள்தான் எண்ணங்களுக்கு உரமாவது. விமர்சனங்களை வரவேற்கிறேன். தொடரவும். 29-Nov-2022 6:53 pm
நான்கு விழிகள் பேசும் ஒரு கவிதையானது நாடிநரம்பில் நுழைந்து எந்தன் உதிரமானது. ----அருமை அழகிய வரிகள் 28-Nov-2022 8:29 pm
ஜீவன் - ஜீவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Apr-2022 10:03 pm

அன்புத் தோழியே...
ஒரு நாள் இடைவெளி....மன்னிக்கவும். முடிந்தவரை தினமும் தொடர்பில் இருக்க முயற்சிக்கிறேன். ஆதிகாலத்திலிருந்து புராண காலத்திற்கு வருவோம். ராமாயணம்...மஹாபாரதம்...இரண்டும் மாபெரும் இதிகாசங்கள். நமக்கு கிடைத்த பொக்கிஷங்கள். ஏனென்றால் அவை இரண்டும் நம் வாழ்க்கையை பேசியது...வாழ்வின் முறைகளை முறைப்படுத்தியது. காதலை சொன்னது..குடும்பத்தை காட்டியது..சொந்த பந்தங்களை அறிமுகப் படுத்தியது. அதில் நிறைந்திருக்கும் அன்பு...பாசம்...சூழ்ச்சி...துரோகம்...எல்லாவற்றையும் வகைப்படுத்தி நமக்கு காட்டிக் கொண்டிருக்கிறது. எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டிருந்தாலும் இன்று

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே