ஜீவன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ஜீவன்
இடம்:  புதுவை
பிறந்த தேதி :  24-Mar-1956
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  31-Jan-2022
பார்த்தவர்கள்:  2266
புள்ளி:  619

என்னைப் பற்றி...

நான் ஒரு மருத்துவர். தமிழின் மேல் உள்ள தணியாத காதலினால் கவிதையாய் சில நேரம்,கட்டுரையாய் சில நேரம்,கதையாய் சில நேரம் கிறுக்கி வைத்திருக்கிறேன்.அவற்றை உங்களோடு பகிர்வதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.உங்கள் கருத்துக்கள் என்னை வளர்த்துக் கொள்ளும் நல் உரமாக வேண்டுமென இந்த இணையத்தில் இணைக்கிறேன்.உங்களின் பாராட்டுதல்கள் இல்லை வசவுகள் இல்லை கைதட்டல்கள் இல்லை தோள் மீது சிறு தட்டல்களுக்காக ஏங்கி நிற்கும் ஒரு ஜீவன். ஓ...! என் புனை பெயரும் "ஜீவன்" தான். இனி என் படைப்புகள் ஜீவனின் " கதம்பத்தில்"இருந்து....

என் படைப்புகள்
ஜீவன் செய்திகள்
ஜீவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Sep-2025 8:53 am

கண் சிமிட்டும் நேரம்தான்...
05 / 09 / 2025

விடிந்ததும்
கண் விழித்தால்
புது ஜனனம்
கண் மூடினால்
அது மரணம்.
கண் சிமிட்டும்
நேரமதில்
எதுவும் நடக்கலாம்
எதுவும் கடந்தும்
போகலாம்.
நம் வாழ்வே
கண் சிமிட்டும் நேரம்தான்.
விழித்திருக்கும்
நேரம்தான்
நம் நேரம்
நல்ல நேரம்.
எதை செய்ய வேண்டுமோ
அதை அப்போதே
செய்துவிட வேண்டும்.
விட்டால்
எல்லாம் முடிந்துவிடும்.

மேலும்

ஜீவன் - ஹேமந்தகுமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Aug-2025 8:27 pm

என் முதுமை எனக்கு அறிமுகப்படுத்திய
புதிய நண்பன், மருந்துப் பெட்டி

இவனை விரும்பி நான் ஏற்கவில்லை மாறாக
விருப்பாமல் வீட்டுக்குள் வந்த நட்பு

இவன் என் பிரச்சனைகளை தீர்க்கிறான்
என் வாழ்க்கையில் அமைதியை சேர்க்கிறான்

நாட்கள் செல்ல செல்ல இவன் மீது
என் நாட்டம் அதிகரிக்கிறது.

நான் இவனை மறந்தாலும்
என் பிரச்சனைகள் இவனை நாடவைக்கிறது

எந்தனயோ நண்பர்கள் எனக்கிந்தாலும்
இவன் மட்டும் தான் என் படுக்கை அறை வருகிறான்

அழகானவனோ அறிவானவனோ இல்லை
அமைதியான அவசியமானவன்.

இவன் தோற்றத்தை என்னால் மாற்றமுடியும்
ஆனால் தொலைத்து விட்டு வாழ முடியாது.

பேசவே மாட்டான் ஆனால் மூன்று வேளையும்
அவனைப் ப

மேலும்

நன்றி 30-Aug-2025 10:53 pm
எதார்த்தமான உண்மை நட்பே ..தொடருங்கள் 30-Aug-2025 9:03 pm
ஜீவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Aug-2025 9:00 pm

தலை எழுத்து..
30 / 08 / 2025

தொடங்கும்போது
அழகாய் தொடங்கி
போகிற அவசத்தில்
கிறுக்கலில் முடிந்த
அலங்கோல எழுத்து.

மேலும்

ஜீவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Aug-2025 7:56 pm

வாழ்க்கைத் தத்துவம்..
28 / 08 / 2025

மும்மூர்த்திகள் சொல்லும்
வாழ்க்கைத் தத்துவம்
பிரம்மனைப் போல்
படைக்கும் தொழிலில்
கண்ணாக - செய்யும்
கடமையில் கருத்தாக
வாழ்க்கையை
வாழ்ந்து விட்டால்
மாதவன் போல்
சுகமாக உறங்கி
பிறவி பெருங்கடலை
எளிதாய் கடந்து விடலாம்.
எல்லாம் இழந்து
வாழ்வின் எதார்த்த
உண்மைகள் புரியும்போது
ருத்ரனின் ருத்ர தாண்டவம்
ஆடி சுடுகாட்டில்
பிடி சாம்பலாய்
முடிந்து விடும்
இந்த வாழ்கையதன்
தத்துவம் சொல்லும்
மும்மூர்த்திகளின்
பாதம் பணிவோம்.
பாவம் தொலைப்போம்.

மேலும்

ஜீவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Aug-2025 8:06 pm

அரங்கேற்றம்..!
28 / 08 / 2025

விழிகளில் ஒரு பரவசம்
இதழ்களில் ஒரு பழரசம்
மொழிகளில் ஒரு மதுரசம்
பொழிகிறாளே அவள் தினம்தினம்
நடையினில் ஒரு நாட்டியம்
உடையினில் ஒரு ஒளிமயம்
இடையினில் ஒரு நாடகம்
மேடையில் நடக்குதே அரங்கேற்றம்

மேலும்

ஜீவன் - ஜீவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Jul-2025 8:24 pm

வாகைசூடலாமே..!
15 / 07 / 2025

அது அது அதன்படி நடக்குமாறு
அது அது அதன்படி வகுத்தமாறு
அது அது அதன்படி நடந்தேறுமே
இது இது இதன்படி நடந்துவிடும்
இது இது இதன்படி கடந்துவிடும்
இது இது இதன்படி அமைவதுதான்
இயற்கையோ இறையோ போட்டுவைத்த
இடியாப்ப சிக்கலான வாழ்வதில்
எது எது எதன்படி நடந்தாலும்
எது எது எதன்படி கடந்தாலும்
இதுவோ அதுவோ எதுவோ
பொதுவாய் ஒத்து கொண்டு
சகித்து கொள்ள பழகிவிட்டால்
எதுவான போதும் வாகைசூடலாமே..!

மேலும்

நன்றி நண்பரே...தெடர்ந்து பகிருங்கள். என் முயற்சிக்கு எருவாகும் உங்கள் கருத்துக்கள் 20-Jul-2025 10:34 am
மேலும் முயலுங்கள் 20-Jul-2025 7:28 am
ஜீவன் - ஜீவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Jul-2025 9:01 pm

சேர்ந்திருப்போம்.
05 / 07 / 2025


விழியில் விழுந்து என்
இதயம் நுழைந்தாய் பெண்ணே
இதயம் நுழைந்து என்
உதிரம் கலந்தாய் கண்ணே
பல்லவன் வடித்து வைத்தான்
கற்சிலை
உன்வடிவம் கண்டு நான் ஆனேன்
கற்சிலை
உன் மூச்சு காற்று பட்டவுடன்
உயிரானேன்
உன் பேச்சு காதில் கேட்டவுடன்
கவியானேன்
சித்தன்ன வாசல் ஓவியமே - என்
சித்தம் கவர்ந்த காவியமே
மொத்தமாய் என்னை தந்தேனே - என்
சொத்துசுகம் முழுதும் நீதானே
வா வா பெண்ணே கைகோர்ப்போம்
வாழ்க்கை முழுதும் வாழ்ந்திருப்போம்
வாடிய பயிருக்கு நீர் வார்ப்போம்
வாட்டங்கள் போக்கியே சேர்ந்திருப்போம்.

மேலும்

நன்றி கவின் ..உங்கள் கருத்துக்கள் என்னை செதுக்கும் உளிகள். மீண்டும் நன்றிகள். 06-Jul-2025 1:26 pm
உன் மூச்சு காற்று பட்டவுடன் உயிரானேன் உன் பேச்சு காதில் கேட்டவுடன் கவியானேன் ------இனிமை 06-Jul-2025 10:49 am
ஜீவன் - ஜீவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Apr-2025 8:02 pm

பூப்போன்ற மகளே
பொன்வண்ணச் சிலையே
தேன்போல இனிக்கும்
தெம்மாங்கு பாட்டே

விழியோரம் நான் கண்ட கனவு - அதன்
விடையாக நீ வந்த வரவு.
மொழியெல்லாம் தமிழ்போல இனிப்பு - எந்தன்
வழியெல்லாம் நிறையும் உன் நினைப்பு.

கண்ணே நீ கண்மூடி தூங்கு - எந்தன்
தோள்மீது தலை சாய்த்து தூங்கு
தாயாக எனை மாற்றும் பெண்ணே - எந்தன்
தாயாக உனை காப்பேன் கண்ணே

மேலும்

நன்றி கவின், ஊக்கங்கள்தான் ஆக்கம் தரும். மீண்டும் நன்றி 03-Apr-2025 10:11 pm
தேன்போல இனிக்கும் தெம்மாங்கு பாட்டே ----இனிமை அருமையான தலாலாட்டு 03-Apr-2025 9:37 pm
ஜீவன் - கலைச்செல்வி கி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Dec-2022 4:54 pm

இன்று உன் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள ஆயிரம் பேர் இருக்கலாம்..
ஆனால் அன்று உன் துயரத்தை பகிர்ந்து கொள்ள நான் மட்டுமே இருந்தேன்..
அன்று உனக்கு ஆறுதல் கூறி உயர்ந்து எழ ஊன்று கோலாய் இருந்தேன்...
இன்று தேவையற்ற கோலாய் தூக்கி எறியப்பட்டேன்..
அந்த ஆயிரம் நபர்களும் உனக்கு பாராட்டு
தெரிவித்து இருக்கலாம்..
நீயும் இன்று அதில் மூழ்கி போகலாம் ...
மீண்டும் எழுந்து ஓட தொடங்கி விடு...
காரணம் ..உன்னை ஓட சொல்ல உன் அருகில் நான் இல்லை.. இருப்பினும்
நான் உன்னை விட்டு கடந்து செல்வதாய் இல்லை..
நீ விட்டு சென்ற இடத்தில் நின்று கொண்டு..
உன்னை ரகசியமாய் தொடர்ந்து கொண்டு ..
உன் முன்னேற்றத்தை ரசித்து கொண்ட

மேலும்

ஜீவன் - மன்னை சுரேஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Nov-2022 2:36 pm

கண்ணீர் சிந்தும் போது
துடைக்க யாரும் வருவதில்லை..
கவலை கொள்ளும் போது
சிரிக்க வைக்க எவரும்
வருவதில்லை.. அறியாமல்
ஒரு தவறு செய்து பார்..
உன்னை விமர்சிக்க
இந்த உலகமே கூடி வரும்..!

நம்மை பற்றி கவலை
படாதவர்களுக்கு நாம்
சிந்தும் கண்ணீர்
அர்த்தமற்றது..!

உன்னை வெறுப்பவர்களை
நினைத்து கவலை கொள்ளாதே..
அவர்களுக்கு உன் அன்பை
பெற தகுதி இல்லை என
நினைத்துக்கொள்..!

கவலைகளின் அளவு
கையளவாக இருக்கும்
வரை தான் கண்ணீருக்கும்
வேலை.. கவலை
மலையளவு ஆகும் போது
மனமும் மரத்துப் போகும்..!

கடலளவு கண்ணீரை வடித்தாலும்…
நம் மனம் விரும்பாமல் எந்த
கவலைகளையும்
சரி செய்ய முடியாது..!

கவலையை மறைக

மேலும்

ஜீவன் - ஜீவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Nov-2022 9:36 pm

கண்கள் மூடும்போது
கனவு மறைவதில்லை.
இரவு தூங்கும்போது
எண்ணம் தூங்கவில்லை
தினம் தினம் கூத்துதான்
புதுவயல் நாத்துதான்.

நான்கு விழிகள் பேசும்
ஒரு கவிதையானது
நாடிநரம்பில் நுழைந்து
எந்தன் உதிரமானது.
நான் உனை பார்த்தது
பூர்வ ஜென்ம புண்ணியம்.
நீ எனை சேர்ந்தது
நான் செய்த பாக்கியம்
வா அருகே...நான் உருக
வாழ்வோம் வா பெண்ணே..

நீயும் நானும் சேர்ந்த
இந்த வாழ்க்கையானது
நீல வானம் போல
மிக நீளமானது
உன் மடி தேடினேன்
ஒரு சேயாகவே
நீ எனை தேற்றினாய்
ஒரு தாயாகவே
வா அழகே... நான் பழக...
சேர்வோம் வா பெண்ணே.

மேலும்

நன்றி கவின்...விமர்சனங்கள்தான் எண்ணங்களுக்கு உரமாவது. விமர்சனங்களை வரவேற்கிறேன். தொடரவும். 29-Nov-2022 6:53 pm
நான்கு விழிகள் பேசும் ஒரு கவிதையானது நாடிநரம்பில் நுழைந்து எந்தன் உதிரமானது. ----அருமை அழகிய வரிகள் 28-Nov-2022 8:29 pm
ஜீவன் - ஜீவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Apr-2022 10:03 pm

அன்புத் தோழியே...
ஒரு நாள் இடைவெளி....மன்னிக்கவும். முடிந்தவரை தினமும் தொடர்பில் இருக்க முயற்சிக்கிறேன். ஆதிகாலத்திலிருந்து புராண காலத்திற்கு வருவோம். ராமாயணம்...மஹாபாரதம்...இரண்டும் மாபெரும் இதிகாசங்கள். நமக்கு கிடைத்த பொக்கிஷங்கள். ஏனென்றால் அவை இரண்டும் நம் வாழ்க்கையை பேசியது...வாழ்வின் முறைகளை முறைப்படுத்தியது. காதலை சொன்னது..குடும்பத்தை காட்டியது..சொந்த பந்தங்களை அறிமுகப் படுத்தியது. அதில் நிறைந்திருக்கும் அன்பு...பாசம்...சூழ்ச்சி...துரோகம்...எல்லாவற்றையும் வகைப்படுத்தி நமக்கு காட்டிக் கொண்டிருக்கிறது. எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டிருந்தாலும் இன்று

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே