ஜீவன் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : ஜீவன் |
இடம் | : புதுவை |
பிறந்த தேதி | : 24-Mar-1956 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 31-Jan-2022 |
பார்த்தவர்கள் | : 810 |
புள்ளி | : 253 |
நான் ஒரு மருத்துவர். தமிழின் மேல் உள்ள தணியாத காதலினால் கவிதையாய் சில நேரம்,கட்டுரையாய் சில நேரம்,கதையாய் சில நேரம் கிறுக்கி வைத்திருக்கிறேன்.அவற்றை உங்களோடு பகிர்வதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.உங்கள் கருத்துக்கள் என்னை வளர்த்துக் கொள்ளும் நல் உரமாக வேண்டுமென இந்த இணையத்தில் இணைக்கிறேன்.உங்களின் பாராட்டுதல்கள் இல்லை வசவுகள் இல்லை கைதட்டல்கள் இல்லை தோள் மீது சிறு தட்டல்களுக்காக ஏங்கி நிற்கும் ஒரு ஜீவன். ஓ...! என் புனை பெயரும் "ஜீவன்" தான். இனி என் படைப்புகள் ஜீவனின் " கதம்பத்தில்"இருந்து....
உன்னை பார்க்கும்போது நீ
மண்ணை பார்க்கிறாயே...
கால்விரலால் தரையில்
கோலம் போடுகிறாயே....
கைவிரல் நகம் கடித்து
ரத்தம் கசிகிறதே...
கசியும் ரத்தமென உன்
முகமும் சிவக்கிறதே...
ஜன்னல் ஒர
ஏக்க விழிகளால்
வெறிச்சோடிய தெருவில்
என்னைத் தேடுகிறாயே...
என் கோலம் காண
வாசல் கோலம் போட
தாமரையாய் காலையில்
மலர்கிறாயே...
தெரிந்தோ தெரியாமலேயோ
என் விரல் உன் மீது
பட்டுவிட்டாலோ
'ஐயோ ' என்று மானென
துள்ளி குதித்து ஓடுகின்றாயே....
அருகில் வா
உன் இதழ் தேனை
என் இதழ் கொண்டு உறிய
ஊ..ஊ...என் இதழ் குவிய
சட்டென்று பேய்மழை
கொட்டியது என் மேல்..
'விடிஞ்சி எவ்வளவு நேரமாச்சு
இன்னமும் தூக்கத்தை
விழியில் விழுந்து - என்
இதயம் நுழைந்தாய்.
இதயம் நுழைந்து - பல
மாயம் செய்தாய்.
மாயம் செய்து - மன
காயம் ஆற்றினாய்.
காயம் ஆற்றிய - என்
காலம் கவர்ந்தாய்.
காலம் கவர்ந்தே - என்
வாழ்வில் நிறைந்தாய்.
வாழ்வில் நிறைந்தே - என்
தாழ்வை நீக்கினாய்.
தாழ்வை நீக்கியே - என்
விழிகள் நனைத்தாய்.
விழிகள் நனைத்தே - என்
வழிகள் மாற்றினாய்.
வழிகள் மாற்றியே - என்
விழியில் விழுந்தாய்.
விழியில் விழுந்து - என்
இதயம் நுழைந்தாய்.
சுற்றிக்கொண்டே இருக்கும்
இது ஒரு
இன்பச் சக்கரம்
மெத்தென்ற உன்கரம் பிடித்து
காலம் முழுதும் நடக்க வேண்டுமடி
அத்தைப் பெண்ணே...
சொத்து சுகம் எதுவும் வேண்டாம்
உன்னோடு சேர்ந்து வாழும்
கெத்து ஒன்றே போதுமடி
அத்தைப் பெண்ணே....
பத்துமாதம் சுமந்து பெற்ற
அன்னை சாதிக்காததை
சாதித்து விட்டாயடி
என் கண்ணே...
பாதி வாழ்வை அவள் சுமந்தாள்
மீதி வாழ்வை பங்கிட வந்தாயே
பங்கிட்டு என்
மொத்த வாழ்வையும்
வளம்பெற செய்த உன்
மெத்தென்ற கரம் பிடித்து
காலம் முழுதும் நடக்க வேண்டுமடி
அத்தைப் பெண்ணே ...
💧💧💧💧💧💧💧💧💧💧💧
*துடைப்பத்தின் துயரம்*
படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்
💧💧💧💧💧💧💧💧💧💧💧
அசுத்தம் செய்யும்
கரங்களுக்கு
மோதிரம் போடுவார்கள்
ஆனால்
அதை சுத்தம் செய்யும்
எங்களை
மூளையில் போடுவார்கள்...!!
கூட்டிப் பெருக்கியே!
தேய்ந்து அழிந்தாலும்
யாரும்
எங்களுக்கு
மதிப்பு கூட்டவோ
புகழைப் பெருக்கவோ
முன்வந்தது இல்லை...
பணக்காரன்
எங்களை
அதிக
தொகை கொடுத்து
வாங்கினாலும்
பூசையறையிலா
வைக்கப்போகிறான்..?
என்னதான்
உழைத்து தேய்ந்தாலும்
எங்களுக்கு
எஞ்சி நிற்பது
என்னவோ
அவமானம் மட்டுமே ...!
உழைப்புக் கூட
இடம் பார்த்து தான்
மதிக்கப்படுகிறதோ...?
தூய்மையைக்
அணு அணுவாய் என்
ஒவ்வொரு அணுவிலும்
முழுதாய் கலந்துவிட்ட
என் அணுவே...
உன் இளமை என்ன
' ஹிரோஷிமா ' அணுகுண்டா?
என்னில் இத்தனை சேதங்களை
ஏற்படுத்தி விட்டதே...!
தன்னிச்சையாய்
என்னால் ஏதும் செய்யமுடியாமல்
உன்னை சார்ந்தே எந்தன்
வாழ்க்கைச் சக்கரத்தை
சுழல விட்டுவிட்டதே..
ராமன் பாதம்பட்டு
சாபவிமோசனம் பெற்ற
அகலியாய்...
உன் பாதம் பட
கல்லாய் வாழ்கிறேனடி...
காலம் எப்போது கனியும்?
உன் கடைக்கண் பார்வை
எப்போது என்னில் படரும்?
உன் பூ பாதம்
எப்போது என்மீது பதியும்?
🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴
*செருப்பின் செம கேள்வி*
படைப்பு கவிதை ரசிகன்
குமரேசன்
🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴
மனிதனின்
கால் படாதவரை
நான்
கலங்கமில்லாமல் தான்
இருந்தேன்....!!
மனிதனின் காலிலும்
இத்தனை பாவமா?
நீங்கள்
கவனக்குறைவாக..
சாணியிலும்
சகதியிலும்
சேற்றிலும்
கால் வைத்து விட்டு....
என்னை
கேவலமானது என்று
வெளியே விடுகின்றீர்கள்...!!
நீங்கள் செய்யும்
தவறுகளை
என்மீது போடுவதில்
என்ன நியாயம்.?
என்னை நீங்கள்
கேவலமாக நினைக்கிறீர்கள்..
உங்களிடம்
பலரிடம் இல்லாத.
"ஒருவனுக்கு ஒருத்தி" என்ற
பண்பாடு கூட
என்னிடம் இருக்கிறது
தெரியுமா உங்களுக்கு...?
தினமும்
பாத்திரம் கழுவுகின்றீர
🌺🌷🌺🌷🌺🌷🌺🌷🌺🌷🌺
*கவிதை*
படைப்பு கவிதை ரசிகன்
குமரேசன்
🌷🌺🌷🌺🌷🌺🌷🌺🌷🌺🌷
பெண்ணே!
பிரம்மன்
உன் பார்வையை
மின்னலில் தான்
உருவாகியிருக்க வேண்டும்... இல்லையெனில்
நீ பார்த்த
முதல் பார்வையிலேயே
என் கண்களை
பறித்திருக்க முடியுமா?
💐💐💐💐💐💐💐💐💐💐💐
'காபிக்குச்
சர்க்கரை போட
மறந்துவிட்டேன்
எப்படிடா குடித்தாய்?' என்று
என் தாய்
என்னிடம் கேட்டாள்....
உன்னை
நினைத்துக்கொண்டு
குடித்ததால்.....
காப்பி இனித்தது என்று
என் தாயிடம்
நான் எப்படி சொல்வேன்?
இனியவளே
இப்போதாவது
நீ நம்புகிறாயா
உன் நினைவுகள்
இனிமையானது என்று
நான் சொல்வதை....?
💐💐💐💐💐💐💐💐💐💐💐
ஏய் ப
காதல்
பவித்திரமானது....
தெய்வீகமானது....
காற்றைப்போல்,
கடவுளைப்போல்....
உணரத்தான் முடியும்.
இருவரால் மட்டும்
பகிர்ந்துகொள்ளக்கூடிய
தனிப்பட்ட உறவு.
ஐயகோ...
இப்போதோ
வாழ்வின் ரகசியங்களை
தனிப்பட்ட உணர்வுகளை
'ஸ்டேட்டஸ்' போட்டு
ஊரெல்லாம் பகிர்ந்து
காதல்
பாழாகி கொண்டிருக்கிறதே
பாழாக்கிக்கொண்டிருக்கிறதுதே
இந்த தலைமுறை...
அன்புத் தோழியே...
ஒரு நாள் இடைவெளி....மன்னிக்கவும். முடிந்தவரை தினமும் தொடர்பில் இருக்க முயற்சிக்கிறேன். ஆதிகாலத்திலிருந்து புராண காலத்திற்கு வருவோம். ராமாயணம்...மஹாபாரதம்...இரண்டும் மாபெரும் இதிகாசங்கள். நமக்கு கிடைத்த பொக்கிஷங்கள். ஏனென்றால் அவை இரண்டும் நம் வாழ்க்கையை பேசியது...வாழ்வின் முறைகளை முறைப்படுத்தியது. காதலை சொன்னது..குடும்பத்தை காட்டியது..சொந்த பந்தங்களை அறிமுகப் படுத்தியது. அதில் நிறைந்திருக்கும் அன்பு...பாசம்...சூழ்ச்சி...துரோகம்...எல்லாவற்றையும் வகைப்படுத்தி நமக்கு காட்டிக் கொண்டிருக்கிறது. எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டிருந்தாலும் இன்று
என் ஆஸ்துமாவே...
நீ.....என் நெஞ்சுக்குழலில்
இசைக்கின்ற நாதங்கள்
கேட்பதற்கு என்னவோ
நன்றாகத்தான் இருக்கிறது
உனக்கு சங்கீதமாய்...
மற்றவர்க்கு நாரசமாய்...
எனக்கோ நரகவேதனையாய்.
நீ....என்னிதய மேடையின்
இரவுப் பாடகன்.
சில காலங்களில்
நீயேன் விடியலில் வருகிறாய்?
எனக்கே புரியாத புதிர்தான்.
உன் வருகையை என் இருமலினால்
அறிமுகப்படுத்துகிறாய்.
உன் வீணைக்கு - என்
நரம்புகள்தானா கிடைத்தன?
ஒவ்வொரு முறையும்
உலகமே உன்னை தூற்றும்போது
ஊரெல்லாம் உன்னை கண்டு நடுங்கும்போது
நான் உன்னை பாராட்டுகிறேன்.
கொரோனாவே....
வியப்பாய் இருக்கிறதா?
நீ...நுண்கிருமிதான் - உன்னால்
மரணம் நிச்சயம்தான்.
ஆனாலும் உன்னை கண்டு
ஆச்சரியப்படுகிறேன்.
அவஸ்த்தையும் படுகிறேன்.
உலகையே கட்டி ஆளப்போகிறேன்
நான் சொல்வதுதான்...இனி
என் இஷ்டப்படிதான் எதுவும் இங்கே
உயிர்வளி உருளைகள்.....!
(OXYGEN CYLINDERS)
இயற்கையாய் வளர்ந்து நிற்கும்
உயிர்வளி உருளைகளை
வெட்டிச்சாய்த்துவிட்டு
மரங்களைத்தான் சொல்கிறேன்,
செயற்கையாய் உயிர்வளி உருளைகளைத்