ஜீவன் - சுயவிவரம்
(Profile)

எழுத்தாளர்
| இயற்பெயர் | : ஜீவன் |
| இடம் | : புதுவை |
| பிறந்த தேதி | : 24-Mar-1956 |
| பாலினம் | : ஆண் |
| சேர்ந்த நாள் | : 31-Jan-2022 |
| பார்த்தவர்கள் | : 2310 |
| புள்ளி | : 650 |
நான் ஒரு மருத்துவர். தமிழின் மேல் உள்ள தணியாத காதலினால் கவிதையாய் சில நேரம்,கட்டுரையாய் சில நேரம்,கதையாய் சில நேரம் கிறுக்கி வைத்திருக்கிறேன்.அவற்றை உங்களோடு பகிர்வதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.உங்கள் கருத்துக்கள் என்னை வளர்த்துக் கொள்ளும் நல் உரமாக வேண்டுமென இந்த இணையத்தில் இணைக்கிறேன்.உங்களின் பாராட்டுதல்கள் இல்லை வசவுகள் இல்லை கைதட்டல்கள் இல்லை தோள் மீது சிறு தட்டல்களுக்காக ஏங்கி நிற்கும் ஒரு ஜீவன். ஓ...! என் புனை பெயரும் "ஜீவன்" தான். இனி என் படைப்புகள் ஜீவனின் " கதம்பத்தில்"இருந்து....
அணைப்பேனடி பொன்மானே
ஒய்யாரமாய் சாய்ந்து நிற்கும்
ரவிவர்மன் ஓவியமே
பொய்யேதும் இல்லாது நிலைநிற்கும்
மாமல்லன் சிற்பமே
பொங்கும் இளமை ததும்பி
வழியும் தேன்கிண்ணமே
சங்கத் தமிழ் கொஞ்சிப்
பேசும் தங்கபுஷ்பமே
ஏனிந்த ஏக்கம் சொல்லடி
என்னினிய ஏந்திழையே
நீ சாய்ந்ததினால் என்வாழ்வும்
சாய்ந்தே விட்டதடி
விரக தாகம் தீர்க்க
விரைந்தே வருவேனடி
பருவ மோகம் தாக்க
அணைப்பேனடி பொன்மானே
வாகை சூடடா
06 / 04 / 2025
எது வந்த போதும்
எதிர்த்து நில்லடா
சூது வாது கபடம்
மிதித்து செல்லடா
மாது மது இரண்டையும்
விலக்கி வையடா
புது பாதை போட்டு
நடையை கட்டடா
நெஞ்சை நிமிர்த்தி வாழ்வில்
நிலைத்து நில்லடா
கூழை கும்பிடு போடும்
நிலையை மாற்றடா
உண்மை நேர்மை இரண்டையும்
கண்ணாய் போற்றடா
திறமை உனக்குள் இருக்கு
சிறகை விரியடா
வானும் மண்ணும் உன்கையில்
வாகை சூடடா
வீழ்வேன் என நினைத்தாயோ?
வாழ்வே..
வீழ்வேன் என நினைத்தாயோ?
வீழ்த்திடலாம் என கொக்கரித்தாயோ?
விழமாட்டேன்..
வீழ்ந்தாலும் வீறுகொண்டு
எழுவேன். எழுந்து நிற்ப்பேன்.
இந்த அக்கினிக் குஞ்சின்
சிறகுகளை ஒடித்தாலும்
சீறிக்கொண்டு விண்ணில் பறப்பேன்.
என் அடையாளங்களை
எத்தனைமுறை அடைத்து வைத்தாலும்
எத்தனைமுறை அவமதித்து
அலைக்கழித்தாலும்
அதனைமுறையும் தலைசிலிர்த்து
மார்நிமிர்த்தி எழுவேன்.
தஞ்சாவூர் பொம்மையென
எனை நினைத்தாயோ?
நினைத்தபடி ஆட்டுவிக்கலாமென
என கணித்தாயோ?
தலை ஆட்டவும் தெரியும்.
தலைமை ஏற்கவும் தெரியும்.
வலிக்காத ஊசியாய் - வாழ்வை
கொஞ்சம் கொஞ்சமாய் கொல்லும் நஞ்சாய்
வஞ்சக
பாடம் ஒன்றுண்டு....!
03 / 12 / 2024
நிலைக்கண்ணாடியே...
உன்னை நான் ஆராதிக்கிறேன்.
என்னைக்கூட அழகாக
பிரதிபலிக்கிறாயே - அதற்காகவே
உன்னை ஆராதிக்கிறேன்.
உன் முன்னால்
நிர்வாணம் எத்தனை
அழகென்று உணரமுடிகிறது.
ஆனால்
உன்னால் எதையும்
மறைக்க முடியாது.
உள்ளதை உள்ளபடியே
காண்பிப்பதுதான்
உன் தனிச் சிறப்பு.
உன் முன்னால்
அரிதாரம் பூசி
அரசனாய் அரசியாய்
சிறிது நேரம்
கோலோச்சினாலும்
வேடம் களைந்து
உண்மை சொரூபம் காட்டி
எதார்த்த நெருப்பால் சுட்டு
தன்னிலை உணர வைக்கிறாயே...
உடைந்து பாகங்களாய்
துண்டுபட்டாலும்
ஒவ்வொரு துண்டிலும்
உள்ளதையேதான் காண்பிக்கிறாய்.
உண்மையைதான் பிரத
அடிதடியும் ஏதுக்கடா?
01 / 01 / 2025
ஆண்டவன் யாரென்று யாருக்கும் தெரியல
ஒருவன்தான் அவனென்றால் யாருக்கும் புரியல
அல்லாவும் ஏசுவும் ஒன்றென்றால் எதுவும் இங்கு விளங்கல
அரியும் சிவனும் இரண்டல்ல அதுவும் ஒன்றும் புரியல
ஊரெல்லாம் தேடுக்கின்றாய் எங்கேயும் இல்லையடா
உனக்குள்ளே உன்னைத்தேடு உண்மையெல்லாம் விளங்குமடா
காசுபணம் கொட்டினாலும் கிடைக்கமாட்டான் தெரிஞ்சுக்கடா
நேசத்தோடு வாழ்ந்துவிடு உன்னை விடமாட்டாண்டா
இறைவனை நம்பினால் அவனை மனதார வணங்கிடடா
இயற்கையை நம்பினால் அதனை உயிராகப் போற்றிடடா
இயற்கையோ இறைவனோ இரண்டுமே ஒன்றுதானடா
உன்மனதின்படி விரும்பிநீயும் பின்பற்றி வாழ்ந்திடடா
என் முதுமை எனக்கு அறிமுகப்படுத்திய
புதிய நண்பன், மருந்துப் பெட்டி
இவனை விரும்பி நான் ஏற்கவில்லை மாறாக
விருப்பாமல் வீட்டுக்குள் வந்த நட்பு
இவன் என் பிரச்சனைகளை தீர்க்கிறான்
என் வாழ்க்கையில் அமைதியை சேர்க்கிறான்
நாட்கள் செல்ல செல்ல இவன் மீது
என் நாட்டம் அதிகரிக்கிறது.
நான் இவனை மறந்தாலும்
என் பிரச்சனைகள் இவனை நாடவைக்கிறது
எந்தனயோ நண்பர்கள் எனக்கிந்தாலும்
இவன் மட்டும் தான் என் படுக்கை அறை வருகிறான்
அழகானவனோ அறிவானவனோ இல்லை
அமைதியான அவசியமானவன்.
இவன் தோற்றத்தை என்னால் மாற்றமுடியும்
ஆனால் தொலைத்து விட்டு வாழ முடியாது.
பேசவே மாட்டான் ஆனால் மூன்று வேளையும்
அவனைப் ப
வாகைசூடலாமே..!
15 / 07 / 2025
அது அது அதன்படி நடக்குமாறு
அது அது அதன்படி வகுத்தமாறு
அது அது அதன்படி நடந்தேறுமே
இது இது இதன்படி நடந்துவிடும்
இது இது இதன்படி கடந்துவிடும்
இது இது இதன்படி அமைவதுதான்
இயற்கையோ இறையோ போட்டுவைத்த
இடியாப்ப சிக்கலான வாழ்வதில்
எது எது எதன்படி நடந்தாலும்
எது எது எதன்படி கடந்தாலும்
இதுவோ அதுவோ எதுவோ
பொதுவாய் ஒத்து கொண்டு
சகித்து கொள்ள பழகிவிட்டால்
எதுவான போதும் வாகைசூடலாமே..!
சேர்ந்திருப்போம்.
05 / 07 / 2025
விழியில் விழுந்து என்
இதயம் நுழைந்தாய் பெண்ணே
இதயம் நுழைந்து என்
உதிரம் கலந்தாய் கண்ணே
பல்லவன் வடித்து வைத்தான்
கற்சிலை
உன்வடிவம் கண்டு நான் ஆனேன்
கற்சிலை
உன் மூச்சு காற்று பட்டவுடன்
உயிரானேன்
உன் பேச்சு காதில் கேட்டவுடன்
கவியானேன்
சித்தன்ன வாசல் ஓவியமே - என்
சித்தம் கவர்ந்த காவியமே
மொத்தமாய் என்னை தந்தேனே - என்
சொத்துசுகம் முழுதும் நீதானே
வா வா பெண்ணே கைகோர்ப்போம்
வாழ்க்கை முழுதும் வாழ்ந்திருப்போம்
வாடிய பயிருக்கு நீர் வார்ப்போம்
வாட்டங்கள் போக்கியே சேர்ந்திருப்போம்.
இன்று உன் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள ஆயிரம் பேர் இருக்கலாம்..
ஆனால் அன்று உன் துயரத்தை பகிர்ந்து கொள்ள நான் மட்டுமே இருந்தேன்..
அன்று உனக்கு ஆறுதல் கூறி உயர்ந்து எழ ஊன்று கோலாய் இருந்தேன்...
இன்று தேவையற்ற கோலாய் தூக்கி எறியப்பட்டேன்..
அந்த ஆயிரம் நபர்களும் உனக்கு பாராட்டு
தெரிவித்து இருக்கலாம்..
நீயும் இன்று அதில் மூழ்கி போகலாம் ...
மீண்டும் எழுந்து ஓட தொடங்கி விடு...
காரணம் ..உன்னை ஓட சொல்ல உன் அருகில் நான் இல்லை.. இருப்பினும்
நான் உன்னை விட்டு கடந்து செல்வதாய் இல்லை..
நீ விட்டு சென்ற இடத்தில் நின்று கொண்டு..
உன்னை ரகசியமாய் தொடர்ந்து கொண்டு ..
உன் முன்னேற்றத்தை ரசித்து கொண்ட
கண்ணீர் சிந்தும் போது
துடைக்க யாரும் வருவதில்லை..
கவலை கொள்ளும் போது
சிரிக்க வைக்க எவரும்
வருவதில்லை.. அறியாமல்
ஒரு தவறு செய்து பார்..
உன்னை விமர்சிக்க
இந்த உலகமே கூடி வரும்..!
நம்மை பற்றி கவலை
படாதவர்களுக்கு நாம்
சிந்தும் கண்ணீர்
அர்த்தமற்றது..!
உன்னை வெறுப்பவர்களை
நினைத்து கவலை கொள்ளாதே..
அவர்களுக்கு உன் அன்பை
பெற தகுதி இல்லை என
நினைத்துக்கொள்..!
கவலைகளின் அளவு
கையளவாக இருக்கும்
வரை தான் கண்ணீருக்கும்
வேலை.. கவலை
மலையளவு ஆகும் போது
மனமும் மரத்துப் போகும்..!
கடலளவு கண்ணீரை வடித்தாலும்…
நம் மனம் விரும்பாமல் எந்த
கவலைகளையும்
சரி செய்ய முடியாது..!
கவலையை மறைக
கண்கள் மூடும்போது
கனவு மறைவதில்லை.
இரவு தூங்கும்போது
எண்ணம் தூங்கவில்லை
தினம் தினம் கூத்துதான்
புதுவயல் நாத்துதான்.
நான்கு விழிகள் பேசும்
ஒரு கவிதையானது
நாடிநரம்பில் நுழைந்து
எந்தன் உதிரமானது.
நான் உனை பார்த்தது
பூர்வ ஜென்ம புண்ணியம்.
நீ எனை சேர்ந்தது
நான் செய்த பாக்கியம்
வா அருகே...நான் உருக
வாழ்வோம் வா பெண்ணே..
நீயும் நானும் சேர்ந்த
இந்த வாழ்க்கையானது
நீல வானம் போல
மிக நீளமானது
உன் மடி தேடினேன்
ஒரு சேயாகவே
நீ எனை தேற்றினாய்
ஒரு தாயாகவே
வா அழகே... நான் பழக...
சேர்வோம் வா பெண்ணே.
அன்புத் தோழியே...
ஒரு நாள் இடைவெளி....மன்னிக்கவும். முடிந்தவரை தினமும் தொடர்பில் இருக்க முயற்சிக்கிறேன். ஆதிகாலத்திலிருந்து புராண காலத்திற்கு வருவோம். ராமாயணம்...மஹாபாரதம்...இரண்டும் மாபெரும் இதிகாசங்கள். நமக்கு கிடைத்த பொக்கிஷங்கள். ஏனென்றால் அவை இரண்டும் நம் வாழ்க்கையை பேசியது...வாழ்வின் முறைகளை முறைப்படுத்தியது. காதலை சொன்னது..குடும்பத்தை காட்டியது..சொந்த பந்தங்களை அறிமுகப் படுத்தியது. அதில் நிறைந்திருக்கும் அன்பு...பாசம்...சூழ்ச்சி...துரோகம்...எல்லாவற்றையும் வகைப்படுத்தி நமக்கு காட்டிக் கொண்டிருக்கிறது. எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டிருந்தாலும் இன்று