ஜீவன் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : ஜீவன் |
இடம் | : புதுவை |
பிறந்த தேதி | : 24-Mar-1956 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 31-Jan-2022 |
பார்த்தவர்கள் | : 1458 |
புள்ளி | : 315 |
நான் ஒரு மருத்துவர். தமிழின் மேல் உள்ள தணியாத காதலினால் கவிதையாய் சில நேரம்,கட்டுரையாய் சில நேரம்,கதையாய் சில நேரம் கிறுக்கி வைத்திருக்கிறேன்.அவற்றை உங்களோடு பகிர்வதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.உங்கள் கருத்துக்கள் என்னை வளர்த்துக் கொள்ளும் நல் உரமாக வேண்டுமென இந்த இணையத்தில் இணைக்கிறேன்.உங்களின் பாராட்டுதல்கள் இல்லை வசவுகள் இல்லை கைதட்டல்கள் இல்லை தோள் மீது சிறு தட்டல்களுக்காக ஏங்கி நிற்கும் ஒரு ஜீவன். ஓ...! என் புனை பெயரும் "ஜீவன்" தான். இனி என் படைப்புகள் ஜீவனின் " கதம்பத்தில்"இருந்து....
முள்ளில்லா கடிகாரம்
இருந்தாலும்...ஓடினாலும்
யாருக்கும் பிரயோஜனமில்லை.
முயற்சி இல்லா வாழ்க்கையும்
அப்படித்தான்.
இருந்தாலும் வாழ்ந்தாலும்
யாருக்கும் பிரயோஜனமில்லை.
கொடுத்து வாழவேண்டும்
18 / 09 23
கொடுத்து வாழவேண்டும் - பிறரை
கெடுத்து வாழ்ந்திடாதே
குணத்தில் வாழவேண்டும் - பிறரின்
பணத்தில் வாழ்ந்திடாதே
வாழ்வில் நூறு தடைகள் இருக்கும்
பாதை தன்னை தடுக்கும்.
மனதில் கொஞ்சம் சலனம் இருந்தால்
வாழ்க்கை முழுதும் கலக்கம்.
பொன்னில் இன்பம் பெண்ணில் இன்பம்
என்றே மாயை மயக்கும்
உன்னை நீயே உணர்ந்துகொண்டால்
உலகம் உன்னை வியக்கும்.
மண்ணில் நீயும் வாழும் வரையில்
புண்கள்தானே கிடைக்கும்.
விண்ணில் நீயும் பறந்திடத்தானே
சிறகுகள் அங்கே கிடக்கும்.
உன்னைத் தேடி போகப்போக
விடைகள் அங்கே இருக்கும்
தன்னைத்தானே அறிந்துகொண்டால்
தடைகள் தானே விலகும்
மனிதநேயம் போற்றுவோம்.
17 / 09 / 23
பயணத்தை தொடங்கிட தனியாக வந்தோம்
பயணத்தின் இடையினில் உறவோடு கலந்தோம்
பயணத்தின் சுகங்களை தனியாக சுவைத்தோம்
பயணத்தின் முடிவினால் தனியாக போவோம்.
பிறக்கும்போது வெறுங் கையோடு பிறந்தோம்
பிறந்தபின் உலகில் உள்ளதை அனுபவித்தோம்
தற்காலிக அரசனாய் கோலோச்சி ஆண்டோம்
இறந்தபின் வெறுங் கையோடுதான் போவோம்.
கொண்டுவந்ததும் ஒன்றுமில்லை கொண்டுபோவதும் ஒன்றுமில்லை
ஆண்டு அனுபவித்ததும் நிரந்தரமில்லை
தொண்டு கிழவனானபின் உணர்வதில்லை பிரயோஜனமில்லை
உண்டு உறங்கியது போதும் மனிதநேயம் போற்றுவோம்.
ஆண்டவா....
எனக்கு குழந்தை வரம் வேண்டும்.
குழந்தைக்கு நல்ல பள்ளியில் இடம் கிடைக்க வேண்டும்.
அவர்கள் படிக்க பணம் காசு அதிகம் வேண்டும்,
பணம் காசு சேர நல்ல வேலை வேண்டும்
வேலையில் வேலை உயர்வு உடனே வேண்டும்.
சேத்த பணம் பத்திரமாய் பல்கி பெருகிட வேண்டும்.
சொத்துக்களை பிடுங்காத உறவுகள் வேண்டும்.
போகுமிடம் எங்கும் மங்காத புகழ் வேண்டும்.
நோய்நொடி இல்லா ஆரோக்யம் வேண்டும்.
எத்தனைதான் இருந்தாலும் நிம்மதி என்றும் வேண்டும்.
என்னை மட்டும் காப்பாத்து ஆண்டவா...
ஆண்டவன் .
குழம்பி போனான்.
படைக்கும்போது
பார்த்துப் பார்த்துதானே படைத்தோம்.
இவர்களுக்கு என்னனென்ன தேவையோ அத்தனையையும்
பார்த்துப்
பூத்திடத் தாமரைக்கு
கை கொடுத்தான் கதிரவன்
பொய் கொடுத்தேன் நான்
கதிரவன் கையில் மலர்ந்த தாமரை
என் கவிதைப் பொய்யில் நாணிச் சிவந்தது
விழித்தேன் கண்டு நானும் விழித்தேன்
குழைந்தேன் குலைந்தேன் வாழ்வினைத் தொலைத்தேன்
காமனனின் மலர் அம்பு துளைத்ததால்
பொல்லாத காதலில் நானும் விழுந்தேன்.
இதழ்தேன் சுவைத்திட அருகினில் அழைத்தேன்
மலைத்தேன் அது சுவை குன்றிட மலைத்தேன்
அலைந்தேன் கலைந்தேன் தேனுண்ட வண்டாய்
மருகினேன் உருகினேன் மடியினில் மயங்கினேன் .
புரண்டேன் புகைந்தேன் மார்பினில் புதைந்தேன்
அரண்டேன் அணைத்தேன் அழகினில் மிரண்டேன்
புகைத்தேன் தவித்தேன் உயிரினில் புதைத்தேன்
கலைத்தேன் களைந்தேன் உறவினில் களைத்தேன்...
எழுந்தேன் புகழ்ந்தேன் ஏங்கியே தவித்தேன்
தமிழில் எழுதி என்னிதய ஏட்டில் பதித்தேன்
காவியமாய் படைத்தேன் க
அடியே கருவாச்சி—-
❣️❣️❣️❣️❣️❣️❣️
அடியே கருவாச்சி
எல்லாம் மறந்தாச்சி /
விடியா குடிசையிலே
வெளக்கா புகுந்தாச்சி /
நெஞ்சம் நெறைஞ்சாச்சு
நெறமும் ஒருகேடா/
தஞ்சம் நீயென்றே
தலைசாய்ச்சிப் படுத்தாச்சு /
ஊரும் ஒறவுகளும்
ஒதுங்கித்தான் போனாலும் /
போராட வந்தாலும்
புறமுதுகு காட்டேண்டி /
படையும் நடுங்காதோ
பார்வை விழுந்தாலே/
தடையும் வருமோடி
தங்கமே இளிமேலே!
சாமி தந்தவொன்ன
சரசரக்கும் சேலையிலே /
பூமி உள்ளமட்டும்
பொட்டுவச்சிப் பாப்பேண்டி//
-யாதுமறியான்.
உன் கண்ணில் என்னை வைத்து
என் கண்ணில் உன்னை தைத்து
நாள் முழுதும் உன்னை எண்ணி
வாழ்ந்திடுவேன்
உன் நெஞ்சில் என்னை வைத்து
என் நெஞ்சில் உன்னை தைத்து
நான் உந்தன் அருகில் இருந்து
வாழ்ந்திடுவேன்.
பருவம் வந்து பூத்த முல்லை
கொஞ்சி கொஞ்சி பேசும் கிள்ளை
அஞ்சி அஞ்சி அருகில் வர
வெட்கமென்னவோ?
பார்வையால் என்னை வென்று
கோர்வையாய் என்னை கொன்று
சேர்க்கையில் மட்டும் இந்த
நாணம் என்னவோ?
நிமிர்ந்து நிற்கும் முரட்டு காளை
வெடித்து சிரிக்கும் தென்னம் பாளை
துடித்து என்னை அணைக்கவந்தால்
மேனி தாங்குமா?
கண்களால் என்னை தாக்கி
கைகளால் என்னை தாங்கி
பொய்களால் என்னை வாழ்த்த
நாணம் போகுமா
இன்று உன் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள ஆயிரம் பேர் இருக்கலாம்..
ஆனால் அன்று உன் துயரத்தை பகிர்ந்து கொள்ள நான் மட்டுமே இருந்தேன்..
அன்று உனக்கு ஆறுதல் கூறி உயர்ந்து எழ ஊன்று கோலாய் இருந்தேன்...
இன்று தேவையற்ற கோலாய் தூக்கி எறியப்பட்டேன்..
அந்த ஆயிரம் நபர்களும் உனக்கு பாராட்டு
தெரிவித்து இருக்கலாம்..
நீயும் இன்று அதில் மூழ்கி போகலாம் ...
மீண்டும் எழுந்து ஓட தொடங்கி விடு...
காரணம் ..உன்னை ஓட சொல்ல உன் அருகில் நான் இல்லை.. இருப்பினும்
நான் உன்னை விட்டு கடந்து செல்வதாய் இல்லை..
நீ விட்டு சென்ற இடத்தில் நின்று கொண்டு..
உன்னை ரகசியமாய் தொடர்ந்து கொண்டு ..
உன் முன்னேற்றத்தை ரசித்து கொண்ட
கண்ணீர் சிந்தும் போது
துடைக்க யாரும் வருவதில்லை..
கவலை கொள்ளும் போது
சிரிக்க வைக்க எவரும்
வருவதில்லை.. அறியாமல்
ஒரு தவறு செய்து பார்..
உன்னை விமர்சிக்க
இந்த உலகமே கூடி வரும்..!
நம்மை பற்றி கவலை
படாதவர்களுக்கு நாம்
சிந்தும் கண்ணீர்
அர்த்தமற்றது..!
உன்னை வெறுப்பவர்களை
நினைத்து கவலை கொள்ளாதே..
அவர்களுக்கு உன் அன்பை
பெற தகுதி இல்லை என
நினைத்துக்கொள்..!
கவலைகளின் அளவு
கையளவாக இருக்கும்
வரை தான் கண்ணீருக்கும்
வேலை.. கவலை
மலையளவு ஆகும் போது
மனமும் மரத்துப் போகும்..!
கடலளவு கண்ணீரை வடித்தாலும்…
நம் மனம் விரும்பாமல் எந்த
கவலைகளையும்
சரி செய்ய முடியாது..!
கவலையை மறைக
கண்கள் மூடும்போது
கனவு மறைவதில்லை.
இரவு தூங்கும்போது
எண்ணம் தூங்கவில்லை
தினம் தினம் கூத்துதான்
புதுவயல் நாத்துதான்.
நான்கு விழிகள் பேசும்
ஒரு கவிதையானது
நாடிநரம்பில் நுழைந்து
எந்தன் உதிரமானது.
நான் உனை பார்த்தது
பூர்வ ஜென்ம புண்ணியம்.
நீ எனை சேர்ந்தது
நான் செய்த பாக்கியம்
வா அருகே...நான் உருக
வாழ்வோம் வா பெண்ணே..
நீயும் நானும் சேர்ந்த
இந்த வாழ்க்கையானது
நீல வானம் போல
மிக நீளமானது
உன் மடி தேடினேன்
ஒரு சேயாகவே
நீ எனை தேற்றினாய்
ஒரு தாயாகவே
வா அழகே... நான் பழக...
சேர்வோம் வா பெண்ணே.
அன்புத் தோழியே...
ஒரு நாள் இடைவெளி....மன்னிக்கவும். முடிந்தவரை தினமும் தொடர்பில் இருக்க முயற்சிக்கிறேன். ஆதிகாலத்திலிருந்து புராண காலத்திற்கு வருவோம். ராமாயணம்...மஹாபாரதம்...இரண்டும் மாபெரும் இதிகாசங்கள். நமக்கு கிடைத்த பொக்கிஷங்கள். ஏனென்றால் அவை இரண்டும் நம் வாழ்க்கையை பேசியது...வாழ்வின் முறைகளை முறைப்படுத்தியது. காதலை சொன்னது..குடும்பத்தை காட்டியது..சொந்த பந்தங்களை அறிமுகப் படுத்தியது. அதில் நிறைந்திருக்கும் அன்பு...பாசம்...சூழ்ச்சி...துரோகம்...எல்லாவற்றையும் வகைப்படுத்தி நமக்கு காட்டிக் கொண்டிருக்கிறது. எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டிருந்தாலும் இன்று