ஜீவன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ஜீவன்
இடம்:  புதுவை
பிறந்த தேதி :  24-Mar-1956
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  31-Jan-2022
பார்த்தவர்கள்:  2059
புள்ளி:  554

என்னைப் பற்றி...

நான் ஒரு மருத்துவர். தமிழின் மேல் உள்ள தணியாத காதலினால் கவிதையாய் சில நேரம்,கட்டுரையாய் சில நேரம்,கதையாய் சில நேரம் கிறுக்கி வைத்திருக்கிறேன்.அவற்றை உங்களோடு பகிர்வதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.உங்கள் கருத்துக்கள் என்னை வளர்த்துக் கொள்ளும் நல் உரமாக வேண்டுமென இந்த இணையத்தில் இணைக்கிறேன்.உங்களின் பாராட்டுதல்கள் இல்லை வசவுகள் இல்லை கைதட்டல்கள் இல்லை தோள் மீது சிறு தட்டல்களுக்காக ஏங்கி நிற்கும் ஒரு ஜீவன். ஓ...! என் புனை பெயரும் "ஜீவன்" தான். இனி என் படைப்புகள் ஜீவனின் " கதம்பத்தில்"இருந்து....

என் படைப்புகள்
ஜீவன் செய்திகள்
ஜீவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Feb-2025 9:16 pm

உங்களுக்காக ஒரு கடிதம் - 46
02 / 02 / 2025

அன்பு வாசக நண்பர்களே,
நலம். எல்லோரும் நலமுடன் இருக்க என்னுடைய பிராத்தனைகள். என் காதுகளையும் ,மனதையும் உறுத்தும், பாதித்து மனஉளைச்சலை கொடுக்கும் ஒரு நிலையைத்தான் இன்று உங்களோடு எழுதி பகிரப் போகிறேன். இது சமுதாய குறிப்பாக இளைய சமுதாயத்தின் சீர்கேட்டின் எடுத்துக்காட்டாக நான் கருதுவதால் இதோ எழுதிக் கொண்டிருக்கிறேன் இதில் சொல்லுவதற்கு..எழுதுவதற்கு நிறைய இருக்கிறது. ஆனால் இப்போது ஒன்றைமட்டும் விலாவாரியாக எழுதலாம் என்று இருக்கிறேன்.
நாம் அன்றாடம் நம் வீட்டிலும் சரி.. அக்கம்பக்கத்திலும் சரி ந

மேலும்

ஜீவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jan-2025 8:12 pm

முடியுதடி
30 / 01 / 2025

காகிதத்தில் எழுதியதெல்லாம் காற்றோடு பறந்ததடி
வாக்கிலே சொன்னதெல்லாம் வழக்காகிப் போனதடி
சத்தியங்கள் கட்டம் மாறி சதுரங்கம் ஆடுதடி
ராஜாவை வீழ்த்திவிட்டு எகத்தாளம் பேசுதடி
கனவாக நம்வாழ்க்கை கரைந்தேதான் போகுதடி
நினைவாக உன்முகமோ நிலவொளியில் ஜொலிக்குதடி
உணவாக உன்நினைவுகள் உள்ளத்தை நிறப்புதடி
பிணமாக நடைதளர்ந்து என்வாழ்கை முடியுதடி

மேலும்

ஜீவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jan-2025 9:09 pm

உங்களுக்காக ஒரு கடிதம் - 45
29 / 01 / 2025

அன்பு வாசகர்களே..இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டில் யாவரும் பிரச்சனைகளின்றி வாழ எனது பிராத்தனைகள். ஓ...பிரச்சனை என்றவுடன் என் மனதில் தோன்றிய சில எண்ணங்களை உங்களோடு பகிர்வதில் என் மன பாரம் கொஞ்சம் குறையும். என் பிரச்சனையை பங்கிடுவதில் என் மனப் பிரச்சனை கொஞ்சம் குறையும் என்றெண்ணி இதோ எழுதிக்கொண்டிருக்கிறேன்.
"பிரச்சனைகளைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம். வீண் சண்டைச் சச்சரவுகள் எதுக்கு?" என்று ஆளுக்குஆள் கூறுகிறோம். ஏதோ நாமெல்லாம் உத்தமர் போல் போகிறப் போக்கில் சொல்லிவிட்டு போவது சகஜமாகிவிட்டது. " நெஞ்சி

மேலும்

ஜீவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jan-2025 7:37 pm

கண்ணைத் திறந்தது..!
10 / 01 / 2025

மரணமே...
நீ என்னைத் தழுவுமுன்
என்னைவிட்டு
என் நினைவு நழுவுமுன்
நான் எழுதத் துடிக்கும்
சில எண்ணத் துளிகள்..
அப்பா...
நாளை முதல் வேலைக்குப் போகவேண்டாம்.
கடன்காரன் முகத்தில் இனிமுழிக்க வேண்டாம்.
உடன்பிறந்தவர்கள் வாயில் விழவேண்டாம்.
சொந்தபந்தங்களின் வீண் அலப்பறைகள் தாங்க வேண்டாம்.
பொண்டாட்டி புள்ளைகளின் அதிகாரங்களை வாங்க வேண்டாம்.
உலகில் நடக்கும் அக்கிரம அவலங்களை காணவேண்டாம்.
விடுதலை..விடுதலை..விடுதலை ..
எல்லாவற்றிலும் இருந்து விடுதலை
யாரையும் பார்க்கவும் வேண்டாம்.
யாருக்கும் பதில் சொல்லவும் வேண்டாம்.
அப்பா..
நிரந்தர நிம்மதி.
சிம

மேலும்

ஜீவன் - இ க ஜெயபாலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Sep-2024 10:30 am

வெறியன்

கத்தி எடு
கடவுளை வெட்ட !
கருணை அற்ற இந்த
கடவுள்களை எல்லாம் வெட்ட கத்தியை எடு

கயவர்கள் (உலகம்) எல்லாம்
ஒன்று கூடி
கொத்து கொத்தாய்
எங்களை கொன்ற
போது!
நல்லூர் கந்தன்
எங்கு போனான்?
மருதடி பிள்ளையானும்
எங்கு போனான்?
இல்லை
வயல் ஓரம் எல்லாம்
அமர்ந்திருக்கும்
அம்மனும் காளியும்
தான் எங்கு போனாள்?

இப்போ Gazza !
தினம் தினம்
கொல்கிறானே(West)
எங்கு போனான் Allah?

கத்தியை எடு,
இந்த நாத்தி அற்ற
கடவுள்களை எல்லாம்
வெட்டி வீழ்த்திட!
அந்த பாளை சீவும் கத்தியை கொடுடா.

சண்டியூர் பாலன்.

மேலும்

சகோதரர் ஜீவன் நீங்கள் கூறுவதுபோல் உலகில் நடக்கும் அநியாயங்கள் எல்லாவற்றிற்கும் மனிதர்களே காரணம். கடவுள் இல்லையோ இருக்கிறாரா அது எனக்கு தெரியாது. இந்த கவிதையில் நான் மறைமுகமாக சொல்லவருவது கோவில்கள் கட்டுவதாலோ சடங்குகளாலோ இறைவன் எங்களை காப்பாற்றமாட்டான். மனிதநேயமும் ஒற்றுமையுமே இந்த உலகில் காப்பாற்றும். நான் ஒரு ஆழந்த இறைபக்தன். ஆனால் எந்த சடங்குகளையோ கோவிலுக்கோ போவதில்லை. மனதால் தினம் அன்னையை வழிபடுவேன் 14-Sep-2024 9:30 am
நியாமான கோபம் தோழரே... ஆனால் இந்த கோளாரெல்லாம் தெய்வத்தால் வந்ததோ இல்லை பிசாசினால் வந்ததோ தெரியாது. நான் அறிந்தவரை மனித மிருகங்களினால் வந்தது என்று ஆணித்தரமாக சொல்லுவேன். கண்ணில் தெரியும் சக மனித உயிரை கொல்லும் உரிமை யார் கொடுத்தது? ஏற்றத் தாழ்வுகள் யார் படைத்தது? இப்படி ஒரேயடியாய் தெய்வத்தை குறை கூறமுடியாது. இதில் நம் பங்குதான் அதிகம் என்பது என் கருத்து. இதே கோபம் எனக்கும் இருக்கிறது. தெய்வம் இருக்கிறதா? இல்லையா?.தெரியவில்லை. புரியவில்லை. அன்புடன் சுப.மகேந்திரன். 13-Sep-2024 8:37 pm
ஜீவன் - கவிஞர் கவிதை ரசிகன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Jul-2024 8:12 pm

♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️

*சுடுகாடு சொல்கிறேன்*


படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️

நான்
திறந்திருக்கும் புத்தகம்
ஒதுங்கிப் போகாதே !
ஒரு முறையேனும்
வாசித்து விட்டுப் போ....!

என்னைக் கண்டு பயப்படாதே !
நான் ஒரு கோவில்....
இங்கு
ஈசன் தியானம் செய்கிறான்...

என்னை வெறுக்காதே !
உன் தாய் கூட
பத்து மாதம் தான்
கருவறையில்
உன்னை சுமப்பாள்
நான் உன்னை
காலமெல்லாம்
கல்லறையில் சுமப்பேன்.....!

நீ காலில் போனாலும்
காரில் போனாலும்
ஒரு நாள்
பாடையில்
இங்கு கண்டிப்பாக
வருவாய்.....

புண்ணியம்
செய்கின்றவனே !
ஒரு நாள்
இங்கு வந்து தான்
ஆக வேண்

மேலும்

அன்பு கவிதை ரசிகனே... கல்லறை காவியம் படைத்து விட்டீர்கள். சுடுகாட்டிற்கு வரும்போதுதான் எல்லோருக்கும் ஞானம் பிறக்கும். திரும்பி போகும்போது ஒட்டிய மண்ணை தட்டி விட்டு போய்விடுகிறோம். நீ இந்த பிணத்திற்கு பின்னால் வரும் நாளைய பிணம். சுடுகாடு சொல்லிக் கொடுக்கும் வாழ்வின் எதார்த்த...பசுமரத்து ஆணியாய் நெஞ்சைத்தாக்கும் நிர்வாண உண்மை.வாழ்த்துகள். 23-Jul-2024 6:24 pm
ஜீவன் - ஜீவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Apr-2024 9:07 am

நிம்மதி நிலைக்குமே..!
07 / 04 /2024

தூரத்தில் இருக்கும்போது உன்
நேர்மறைகள் என்னை ஈர்க்குதே
அருகில் இருக்கும்போது உன்
எதிர்மறைகள் என்னை தாக்குதே
நேர்மறை எதிர்மறையின் கலவைதான்
வாழ்க்கை என உணர்த்துதே
இருபாலருக்கும் சமம் இந்த
முடுச்சு என உறைக்குதே
ஏற்றத் தாழ்வுடன் பயணம்
மாற்றம் இல்லாமல் நிகழுமே
சமரசம் செய்து வாழ்ந்துவிட்டால்
வாழ்வில் நிம்மதி நிலைக்குமே..!

மேலும்

வணக்கம் சுபா ...உங்களின் கருத்துக்கு நன்றி. நீங்கள் சொன்னது போல் மேடுபள்ளங்கள் இருந்தால்தான் பயணம் சுகமாக இருக்குமோ என்னவோ தெரியவில்லை. ஆனால் சவாலாக இருக்கும். சவால்கள்தான் வாழ்வின் சுவையை கூட்டும். சமீபகாலமாக குறைவான ரத்த இழப்புடன் கூடிய அறுவை சிகிச்சைக்குத்தான் முயலுகிறோம்.. ரத்த இழப்பே இல்லாத அறுவை சிகிச்சைக்கு சாத்தியமே இல்லை. இதையெல்லாம் உணர்ந்து சமரசம் செய்து கொண்டால் வாழ்வில் சிறிதளவாது நிம்மதி கிட்டும் என்பது என்னுடைய தாழமையான கருத்து. மீண்டும் நன்றி நண்பரே..இப்படி கருத்துக்களை பரிமாறுங்கள். என்னை செதுக்கி கொள்ள ஏதுவாக இருக்கும். நன்றி 07-Apr-2024 8:59 pm
வணக்கம் ஜீவன் அவர்களே...நலம் தானே? ஒரு டாக்டரிடம் கேட்கும் கேள்வியா? என்று எண்ண வேண்டாம். நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று உங்கள் கவிதையை வாசித்தேன். மேடு பள்ளங்கள் இருந்தால்tதான் பயணம் சுகமாக இருக்கும். வாழ்க்கைப் பயணத்தில் சமரசமாக வாழலாம். ஆனால்.. உப்பு காரமில்லா ஊறுகாய் போல் இருக்கும். இரத்தம் கசியாமல் அறுவை சிகிச்சை சாத்தியமா? வாழ்த்துகள்... வாழ்க நலமுடன்..!! 07-Apr-2024 11:40 am
ஜீவன் - பாக்யராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Mar-2024 9:06 am

விதியெழுதும் வீதிகள்
++++++++++++++++++++++

வனத்தை அழித்தோம் /
வீதி அமைத்தோம்/
வீதியெல்லாம் விலங்கினம்/
வீட்டுக்குள்ள மனிதன்/

அனைத்தையும் அடக்கியவன் / அடங்கியது உயிர்ப்பயம்/
இயற்கையுடன் வாழ/
இயன்றவரை முயல்வோம் /

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

மேலும்

வனத்தை அழித்தோம். வீதி சமைத்தோம். வீதியெல்லாம் விலங்கினம். வீட்டிற்குள் மனித இனம். அருமை. எதார்த்த உண்மை. தொடருங்கள் தோழரே...வாழ்த்துகள். 30-Mar-2024 10:26 pm
ஜீவன் - கலைச்செல்வி கி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Dec-2022 4:54 pm

இன்று உன் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள ஆயிரம் பேர் இருக்கலாம்..
ஆனால் அன்று உன் துயரத்தை பகிர்ந்து கொள்ள நான் மட்டுமே இருந்தேன்..
அன்று உனக்கு ஆறுதல் கூறி உயர்ந்து எழ ஊன்று கோலாய் இருந்தேன்...
இன்று தேவையற்ற கோலாய் தூக்கி எறியப்பட்டேன்..
அந்த ஆயிரம் நபர்களும் உனக்கு பாராட்டு
தெரிவித்து இருக்கலாம்..
நீயும் இன்று அதில் மூழ்கி போகலாம் ...
மீண்டும் எழுந்து ஓட தொடங்கி விடு...
காரணம் ..உன்னை ஓட சொல்ல உன் அருகில் நான் இல்லை.. இருப்பினும்
நான் உன்னை விட்டு கடந்து செல்வதாய் இல்லை..
நீ விட்டு சென்ற இடத்தில் நின்று கொண்டு..
உன்னை ரகசியமாய் தொடர்ந்து கொண்டு ..
உன் முன்னேற்றத்தை ரசித்து கொண்ட

மேலும்

ஜீவன் - மன்னை சுரேஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Nov-2022 2:36 pm

கண்ணீர் சிந்தும் போது
துடைக்க யாரும் வருவதில்லை..
கவலை கொள்ளும் போது
சிரிக்க வைக்க எவரும்
வருவதில்லை.. அறியாமல்
ஒரு தவறு செய்து பார்..
உன்னை விமர்சிக்க
இந்த உலகமே கூடி வரும்..!

நம்மை பற்றி கவலை
படாதவர்களுக்கு நாம்
சிந்தும் கண்ணீர்
அர்த்தமற்றது..!

உன்னை வெறுப்பவர்களை
நினைத்து கவலை கொள்ளாதே..
அவர்களுக்கு உன் அன்பை
பெற தகுதி இல்லை என
நினைத்துக்கொள்..!

கவலைகளின் அளவு
கையளவாக இருக்கும்
வரை தான் கண்ணீருக்கும்
வேலை.. கவலை
மலையளவு ஆகும் போது
மனமும் மரத்துப் போகும்..!

கடலளவு கண்ணீரை வடித்தாலும்…
நம் மனம் விரும்பாமல் எந்த
கவலைகளையும்
சரி செய்ய முடியாது..!

கவலையை மறைக

மேலும்

ஜீவன் - ஜீவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Nov-2022 9:36 pm

கண்கள் மூடும்போது
கனவு மறைவதில்லை.
இரவு தூங்கும்போது
எண்ணம் தூங்கவில்லை
தினம் தினம் கூத்துதான்
புதுவயல் நாத்துதான்.

நான்கு விழிகள் பேசும்
ஒரு கவிதையானது
நாடிநரம்பில் நுழைந்து
எந்தன் உதிரமானது.
நான் உனை பார்த்தது
பூர்வ ஜென்ம புண்ணியம்.
நீ எனை சேர்ந்தது
நான் செய்த பாக்கியம்
வா அருகே...நான் உருக
வாழ்வோம் வா பெண்ணே..

நீயும் நானும் சேர்ந்த
இந்த வாழ்க்கையானது
நீல வானம் போல
மிக நீளமானது
உன் மடி தேடினேன்
ஒரு சேயாகவே
நீ எனை தேற்றினாய்
ஒரு தாயாகவே
வா அழகே... நான் பழக...
சேர்வோம் வா பெண்ணே.

மேலும்

நன்றி கவின்...விமர்சனங்கள்தான் எண்ணங்களுக்கு உரமாவது. விமர்சனங்களை வரவேற்கிறேன். தொடரவும். 29-Nov-2022 6:53 pm
நான்கு விழிகள் பேசும் ஒரு கவிதையானது நாடிநரம்பில் நுழைந்து எந்தன் உதிரமானது. ----அருமை அழகிய வரிகள் 28-Nov-2022 8:29 pm
ஜீவன் - ஜீவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Apr-2022 10:03 pm

அன்புத் தோழியே...
ஒரு நாள் இடைவெளி....மன்னிக்கவும். முடிந்தவரை தினமும் தொடர்பில் இருக்க முயற்சிக்கிறேன். ஆதிகாலத்திலிருந்து புராண காலத்திற்கு வருவோம். ராமாயணம்...மஹாபாரதம்...இரண்டும் மாபெரும் இதிகாசங்கள். நமக்கு கிடைத்த பொக்கிஷங்கள். ஏனென்றால் அவை இரண்டும் நம் வாழ்க்கையை பேசியது...வாழ்வின் முறைகளை முறைப்படுத்தியது. காதலை சொன்னது..குடும்பத்தை காட்டியது..சொந்த பந்தங்களை அறிமுகப் படுத்தியது. அதில் நிறைந்திருக்கும் அன்பு...பாசம்...சூழ்ச்சி...துரோகம்...எல்லாவற்றையும் வகைப்படுத்தி நமக்கு காட்டிக் கொண்டிருக்கிறது. எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டிருந்தாலும் இன்று

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே