ஜீவன் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : ஜீவன் |
இடம் | : புதுவை |
பிறந்த தேதி | : 24-Mar-1956 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 31-Jan-2022 |
பார்த்தவர்கள் | : 2105 |
புள்ளி | : 574 |
நான் ஒரு மருத்துவர். தமிழின் மேல் உள்ள தணியாத காதலினால் கவிதையாய் சில நேரம்,கட்டுரையாய் சில நேரம்,கதையாய் சில நேரம் கிறுக்கி வைத்திருக்கிறேன்.அவற்றை உங்களோடு பகிர்வதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.உங்கள் கருத்துக்கள் என்னை வளர்த்துக் கொள்ளும் நல் உரமாக வேண்டுமென இந்த இணையத்தில் இணைக்கிறேன்.உங்களின் பாராட்டுதல்கள் இல்லை வசவுகள் இல்லை கைதட்டல்கள் இல்லை தோள் மீது சிறு தட்டல்களுக்காக ஏங்கி நிற்கும் ஒரு ஜீவன். ஓ...! என் புனை பெயரும் "ஜீவன்" தான். இனி என் படைப்புகள் ஜீவனின் " கதம்பத்தில்"இருந்து....
எதிர்த்து நில்லடா
06 / 04 / 2025
எது வந்த போதும்
எதிர்த்து நில்லடா
சூது வாது கபடம்
மிதித்து செல்லடா
மாது மது இரண்டையும்
விலக்கி வையடா
புது பாதை போட்டு
நடையை கட்டடா
நெஞ்சை நிமிர்த்தி வாழ்வில்
நிலைத்து நில்லடா
கூழை கும்பிடு போடும்
நிலையை மாற்றடா
உண்மை நேர்மை இரண்டையும்
கண்ணாய் போற்றடா
திறமை உனக்குள் இருக்கு
சிறகை விரியடா
வானும் மண்ணும் உன்கையில்
வாகை சூடடா
ஆணிவேர்
06 / 04 / 2025
ஏ..அவநம்பிக்கையே
உன் மரணத்தில்தான்
என் வாழ்வும் வளமும்
துளிர்த்து.. முகிழ்க்கப் போகிறது.
ஏ..தெய்வமே
நீ நின்று கொல்லும்வரை
ஏ தர்மமே
நீ வென்று வாகைசூடும்வரை
நான் பூப்பறித்து
நாளும் பூசை செய்யவேண்டுமோ?
என் துன்பங்களும் துயரங்களும்
உதாசீனங்களும் அவமானங்களும்தான்
உங்கள் வெற்றியின்
அஸ்திவாரம்
என் நம்பிக்கைதான்
அதன் ஆணிவேர்
ஏ..அவநம்பிக்கையே
உன் மரணத்தில்தான்
என் வாழ்வும் வளமும்
துளிர்த்து.. முகிழ்க்கப் போகிறது.
வாடி நிற்கின்றேன்...
06 / 04 / 2025
ஏ..பட்டாம்பூச்சியே !
உன் வண்ணம் கண்டு
என் எண்ணம் கலங்கி
மனம் மயங்கி
மதியிழந்து
உனை நம்பி
மலர்ந்து நின்றேன்.
உன்னை ரசித்துத்தான்
என் இதழ் விரித்தேன்.
என்னை ருசித்த பின்
நீ மலர் தாவினாயோ?
ஐயகோ...
மலருக்கு மலர் தாவும்
உன் குணத்தை காணாது
இருந்துவிட்டேன்.
இப்போது
இதழ் இழந்து
நிலைகுலைந்து
வாடி நிற்கின்றேன்.
அழைக்கிறேன்...
04 / 04 / 2025
கையிலும் பையிலும் காசு இல்லாதவரை
தானமும் தர்மமும் தாராளமாய் செய்யவரும்
கையிலும் பையிலும் காசு சேர்ந்துவிட்டால்
மானமும் மரியாதையும் இல்லாமல் போகும்.
காசு இல்லாதவரை ஏழை பாழை
மனிதநேயம் என்று பேசும்
காசு சேர்ந்துவிட்டாலோ
கால்மேல் கால்போட்டு
கவுரதையை காட்டும்.
காசுதான் இங்கு கர்ப்பகிரகத்தில்
இருக்கிறது
படைக்கிறது..
காக்கிறது..
அழிக்கிறது..
காசே உன்னை வணங்குகிறேன்
உன்னைத் தேடித்தான் அலைகிறேன்
என்வாழ்வில் நிறைந்திட அழைக்கிறேன்.
பூப்போன்ற மகளே
பொன்வண்ணச் சிலையே
தேன்போல இனிக்கும்
தெம்மாங்கு பாட்டே
விழியோரம் நான் கண்ட கனவு - அதன்
விடையாக நீ வந்த வரவு.
மொழியெல்லாம் தமிழ்போல இனிப்பு - எந்தன்
வழியெல்லாம் நிறையும் உன் நினைப்பு.
கண்ணே நீ கண்மூடி தூங்கு - எந்தன்
தோள்மீது தலை சாய்த்து தூங்கு
தாயாக எனை மாற்றும் பெண்ணே - எந்தன்
தாயாக உனை காப்பேன் கண்ணே
வெறியன்
கத்தி எடு
கடவுளை வெட்ட !
கருணை அற்ற இந்த
கடவுள்களை எல்லாம் வெட்ட கத்தியை எடு
கயவர்கள் (உலகம்) எல்லாம்
ஒன்று கூடி
கொத்து கொத்தாய்
எங்களை கொன்ற
போது!
நல்லூர் கந்தன்
எங்கு போனான்?
மருதடி பிள்ளையானும்
எங்கு போனான்?
இல்லை
வயல் ஓரம் எல்லாம்
அமர்ந்திருக்கும்
அம்மனும் காளியும்
தான் எங்கு போனாள்?
இப்போ Gazza !
தினம் தினம்
கொல்கிறானே(West)
எங்கு போனான் Allah?
கத்தியை எடு,
இந்த நாத்தி அற்ற
கடவுள்களை எல்லாம்
வெட்டி வீழ்த்திட!
அந்த பாளை சீவும் கத்தியை கொடுடா.
சண்டியூர் பாலன்.
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
*சுடுகாடு சொல்கிறேன்*
படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
நான்
திறந்திருக்கும் புத்தகம்
ஒதுங்கிப் போகாதே !
ஒரு முறையேனும்
வாசித்து விட்டுப் போ....!
என்னைக் கண்டு பயப்படாதே !
நான் ஒரு கோவில்....
இங்கு
ஈசன் தியானம் செய்கிறான்...
என்னை வெறுக்காதே !
உன் தாய் கூட
பத்து மாதம் தான்
கருவறையில்
உன்னை சுமப்பாள்
நான் உன்னை
காலமெல்லாம்
கல்லறையில் சுமப்பேன்.....!
நீ காலில் போனாலும்
காரில் போனாலும்
ஒரு நாள்
பாடையில்
இங்கு கண்டிப்பாக
வருவாய்.....
புண்ணியம்
செய்கின்றவனே !
ஒரு நாள்
இங்கு வந்து தான்
ஆக வேண்
நிம்மதி நிலைக்குமே..!
07 / 04 /2024
தூரத்தில் இருக்கும்போது உன்
நேர்மறைகள் என்னை ஈர்க்குதே
அருகில் இருக்கும்போது உன்
எதிர்மறைகள் என்னை தாக்குதே
நேர்மறை எதிர்மறையின் கலவைதான்
வாழ்க்கை என உணர்த்துதே
இருபாலருக்கும் சமம் இந்த
முடுச்சு என உறைக்குதே
ஏற்றத் தாழ்வுடன் பயணம்
மாற்றம் இல்லாமல் நிகழுமே
சமரசம் செய்து வாழ்ந்துவிட்டால்
வாழ்வில் நிம்மதி நிலைக்குமே..!
இன்று உன் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள ஆயிரம் பேர் இருக்கலாம்..
ஆனால் அன்று உன் துயரத்தை பகிர்ந்து கொள்ள நான் மட்டுமே இருந்தேன்..
அன்று உனக்கு ஆறுதல் கூறி உயர்ந்து எழ ஊன்று கோலாய் இருந்தேன்...
இன்று தேவையற்ற கோலாய் தூக்கி எறியப்பட்டேன்..
அந்த ஆயிரம் நபர்களும் உனக்கு பாராட்டு
தெரிவித்து இருக்கலாம்..
நீயும் இன்று அதில் மூழ்கி போகலாம் ...
மீண்டும் எழுந்து ஓட தொடங்கி விடு...
காரணம் ..உன்னை ஓட சொல்ல உன் அருகில் நான் இல்லை.. இருப்பினும்
நான் உன்னை விட்டு கடந்து செல்வதாய் இல்லை..
நீ விட்டு சென்ற இடத்தில் நின்று கொண்டு..
உன்னை ரகசியமாய் தொடர்ந்து கொண்டு ..
உன் முன்னேற்றத்தை ரசித்து கொண்ட
கண்ணீர் சிந்தும் போது
துடைக்க யாரும் வருவதில்லை..
கவலை கொள்ளும் போது
சிரிக்க வைக்க எவரும்
வருவதில்லை.. அறியாமல்
ஒரு தவறு செய்து பார்..
உன்னை விமர்சிக்க
இந்த உலகமே கூடி வரும்..!
நம்மை பற்றி கவலை
படாதவர்களுக்கு நாம்
சிந்தும் கண்ணீர்
அர்த்தமற்றது..!
உன்னை வெறுப்பவர்களை
நினைத்து கவலை கொள்ளாதே..
அவர்களுக்கு உன் அன்பை
பெற தகுதி இல்லை என
நினைத்துக்கொள்..!
கவலைகளின் அளவு
கையளவாக இருக்கும்
வரை தான் கண்ணீருக்கும்
வேலை.. கவலை
மலையளவு ஆகும் போது
மனமும் மரத்துப் போகும்..!
கடலளவு கண்ணீரை வடித்தாலும்…
நம் மனம் விரும்பாமல் எந்த
கவலைகளையும்
சரி செய்ய முடியாது..!
கவலையை மறைக
கண்கள் மூடும்போது
கனவு மறைவதில்லை.
இரவு தூங்கும்போது
எண்ணம் தூங்கவில்லை
தினம் தினம் கூத்துதான்
புதுவயல் நாத்துதான்.
நான்கு விழிகள் பேசும்
ஒரு கவிதையானது
நாடிநரம்பில் நுழைந்து
எந்தன் உதிரமானது.
நான் உனை பார்த்தது
பூர்வ ஜென்ம புண்ணியம்.
நீ எனை சேர்ந்தது
நான் செய்த பாக்கியம்
வா அருகே...நான் உருக
வாழ்வோம் வா பெண்ணே..
நீயும் நானும் சேர்ந்த
இந்த வாழ்க்கையானது
நீல வானம் போல
மிக நீளமானது
உன் மடி தேடினேன்
ஒரு சேயாகவே
நீ எனை தேற்றினாய்
ஒரு தாயாகவே
வா அழகே... நான் பழக...
சேர்வோம் வா பெண்ணே.
அன்புத் தோழியே...
ஒரு நாள் இடைவெளி....மன்னிக்கவும். முடிந்தவரை தினமும் தொடர்பில் இருக்க முயற்சிக்கிறேன். ஆதிகாலத்திலிருந்து புராண காலத்திற்கு வருவோம். ராமாயணம்...மஹாபாரதம்...இரண்டும் மாபெரும் இதிகாசங்கள். நமக்கு கிடைத்த பொக்கிஷங்கள். ஏனென்றால் அவை இரண்டும் நம் வாழ்க்கையை பேசியது...வாழ்வின் முறைகளை முறைப்படுத்தியது. காதலை சொன்னது..குடும்பத்தை காட்டியது..சொந்த பந்தங்களை அறிமுகப் படுத்தியது. அதில் நிறைந்திருக்கும் அன்பு...பாசம்...சூழ்ச்சி...துரோகம்...எல்லாவற்றையும் வகைப்படுத்தி நமக்கு காட்டிக் கொண்டிருக்கிறது. எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டிருந்தாலும் இன்று