Selvam - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Selvam
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  11-Jun-2022
பார்த்தவர்கள்:  22
புள்ளி:  0

என் படைப்புகள்
Selvam செய்திகள்
Selvam - மதுரைவிசை அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jul-2025 5:38 pm

தினம் தோறும் ஒரு முத்தம் உமிழ் நீர் சுரக்க இளம் சூட்டோடு காமத்தோடு காலை மாலை என இரு சாமத்தோடும் பத்திரமாய் கையில் பாத்திரமாய் உனக்கு மாத்துரமாய்..
நீராய் தேநீராய்….
-மதுரைவிசை(madurai@poet)

மேலும்

தினம் முத்தம் தேனீரோ 20-Jul-2025 7:35 am
Selvam - அஷ்றப் அலி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jul-2025 4:24 pm

இருளருகில் பொன்மேனி
இரண்டறக் கிடக்கிறாய்
ஆசைகளைப் புதைக்கக்
குளியாய் வந்ததேன்
செம்மணி

அஷ்றப் அலி

மேலும்

நன்றி கவிஞரே நன்றீ 20-Jul-2025 11:53 pm
இருளான பொன்மேனி இருளாயி கண்மணியே 20-Jul-2025 7:34 am
Selvam - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jul-2025 10:52 am

வண்ணங்கள் ஏழினில் வானவில்ஓர் ஓவியம்
கண்ணசைவில் நீயொரு காளிதாசன் காவியம்
எண்ணமெ லாம்நீ இலக்கியப் புத்தகம்
கண்ணிலின்று கம்பனோ சொல்

கவி விளக்கம் :

கண்ணில் முதலில் காளிதாசன்

அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்
என்ற காவிய வரி அவளுக்கு நினைவுக்கு வந்ததால்
கண்ணிலின்று கம்பனோ ?

மேலும்

மோனையுடன் வரிகள் அருமை வானவில் தாவணியில் வடிவழகு மின்னுதடி தேனிதழ் சிவப்பினில் தென்பாண்டி முத்தொளிருதடி மானினத்தின் விழிகளில் மாலை மயங்குதடி ----கவிதை தூண்டும் இனிய இலக்கிய வரிகள் பாராட்டுக்கள் கவிப்பிரிய செல்வம் 20-Jul-2025 6:12 pm
வானவில் தாவணியில் வடிவழகு மின்னுதடி 20-Jul-2025 7:33 am
Selvam - C. SHANTHI அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jul-2025 8:02 am

கண்ணீர்

துன்பங்கள் உலுக்கி எடுக்கையில்
நாசி தொட்டு கன்னம் வருடும்
நேயம் மிக்க தோழன்..!

மகிழ்ச்சியை பறை சாற்றி
விழி விளிம்புகளில்
பட்டுத் தெறித்து
உடைந்து போகும்
கண நேர முத்துக்கள்..!

துன்பங்களின் போதெல்லாம்
கொதித்து வரிக்கோடிட்டும்
இன்பங்கள் போதெல்லாம்
குளிர்ச்சியுடன் சிதறியும்
நிலை மாறும் பச்சோந்தி......!

சிரிப்பிற்கும் அழுகைக்கும்
அரிதாரம் பூசும் வேடதாரி..!

ஆறாத மனக் காயங்களை
ஆற்றுப்படுத்தும்
அற்புத களிம்பு ..!

அவமானச் சின்னமென்று
ஆண் விழிகளில் சிந்த மறுக்கும்
அதிசய அருவி...!

கோழையானவர்களை
மறைவிடம் கூட்டிச்சென்று
குமுற வைக்கும்

மேலும்

வேடதாரி வாழ்க்கையிலே வந்துதித்த நீர்துளிகள் கண்ணீர் 20-Jul-2025 7:32 am
Selvam - எண்ணம் (public)
20-Jul-2025 6:59 am

அலங்கார தேகம் கண்டு
ஆடாத மனமும் உண்டோ
சிங்காரம் கொண்ட மங்கை
செவ்விதழ் தேனை சிந்த 

 கொண்டாடும் கண்கள் இரண்டும்
குற்றாலச் சாரல் கொட்டும் 
வாடாத மலரை போலும்
விழிநோக்கும் மங்கை என்பால் 

தேடாத பார்வை நூலால் 
தோகையாள் தேகம் துள்ள 
இதழோரம் சொட்டும் தேனோ 
இதழ்க்காட்டு மங்கை தானோ 

பசுந்தங்கம் மேனி யெல்லாம் 
பருவங்கள்  பொங்கும் வேளை
தேனுண்ட வண்டாய் வாவா
தேவியென் முல்லைப் பூவில் 

உன்மேலே  ஆடும் மங்கை
உறவாடும் இன்ப கங்கை 
தேனாறு பாய்ச்சும் என்பால்
தேரோட்ட வாவா அத்தான்

மேலும்

Selvam - Selvam அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
20-Jul-2025 6:57 am

அழியாத தமிழைக் கொண்டு
அனுதினமும் பாடும் பாட்டு 
உலகெங்கும் தவழ்ந்து செல்ல
 உலகத்தில் திருநாள் ஆகும்
!
ஆடியின் காற்றும் வீச
அழியாத இசையும் கூட 
தமிழேநீ என்னைத் தொட்டு
தலையாட்டு சேயை போலும்
!
விழிகொஞ்சும் வார்த்தை எல்லாம்   வெண்ணிலா அழகை சொல்ல
விடிவெள்ளி அழகை போலும்
வடித்தேனே பாடல் சிற்பம் 

பாலூட்டும் தாயை போலும் 
பண்ணிசை தாயாம் என்பால்
உறங்காத மொழியாள் உன்னை 
உலகெங்கும் உன்னை சொல்வேன்

 தோள்மீதும் உன்னை வைத்து 
தாலாட்டும் தென்றல் ஆவேன் 
மணம்வீசும் வார்த்தை தொட்டு 
மலர்மாலை உன்னில் ஆவேன்

தேன்மொழி நாடோடிப் பாட்டுக்காரி -
தமிழ்த் தோட்ட ஆட்டக்காரி 
கனிமொழி  கதைகள் சொல்ல 
கதையோடு நீயும் ஆட 

என்பாடல் தேனின் சாரல் 
இளநெஞ்சின் ஆசை தூவும் 
ஒளிவீசும் தமிழே உன்னால் 
ஒருகோடி இன்பம் கண்டேன்

மேலும்

Selvam - எண்ணம் (public)
20-Jul-2025 6:57 am

அழியாத தமிழைக் கொண்டு
அனுதினமும் பாடும் பாட்டு 
உலகெங்கும் தவழ்ந்து செல்ல
 உலகத்தில் திருநாள் ஆகும்
!
ஆடியின் காற்றும் வீச
அழியாத இசையும் கூட 
தமிழேநீ என்னைத் தொட்டு
தலையாட்டு சேயை போலும்
!
விழிகொஞ்சும் வார்த்தை எல்லாம்   வெண்ணிலா அழகை சொல்ல
விடிவெள்ளி அழகை போலும்
வடித்தேனே பாடல் சிற்பம் 

பாலூட்டும் தாயை போலும் 
பண்ணிசை தாயாம் என்பால்
உறங்காத மொழியாள் உன்னை 
உலகெங்கும் உன்னை சொல்வேன்

 தோள்மீதும் உன்னை வைத்து 
தாலாட்டும் தென்றல் ஆவேன் 
மணம்வீசும் வார்த்தை தொட்டு 
மலர்மாலை உன்னில் ஆவேன்

தேன்மொழி நாடோடிப் பாட்டுக்காரி -
தமிழ்த் தோட்ட ஆட்டக்காரி 
கனிமொழி  கதைகள் சொல்ல 
கதையோடு நீயும் ஆட 

என்பாடல் தேனின் சாரல் 
இளநெஞ்சின் ஆசை தூவும் 
ஒளிவீசும் தமிழே உன்னால் 
ஒருகோடி இன்பம் கண்டேன்

மேலும்

Selvam - எண்ணம் (public)
20-Jul-2025 6:54 am

காதலை பெற்றேன் நானே,
    கண்விழி இமையாய்க் காத்தேன்!!
கரும்பினில் சாற்றைப் போலக்
  காதலின் இனிமை கண்டேன்!!

காதலை பலவும் கற்க,
 கன்னியின் பின்னே சென்று 
நெருப்பினில் விட்டில் போல 
 நானங்கே வீழ்ந்து போனேன் 

உருவினில் பெண்மை என்னை 
  உணர்வினில் இழுத்து தள்ள 
தருவினை வெட்டும் அந்தத்
  தகவிலாக் கருவி யானேன்

மங்கையின் செய்கை யாலே,
‌‌.  மனதையே வதைத்தார் நித்தம்!!
உருப்படி. யாக வில்லை
  உருக்குலை ஆன துள்ளம்!!

அழகியின் வனத்தி னுள்ளே,
  அலைந்திடும் குருடன் நானே!
அலைந்திடும் மனதில் இன்னல்,
  ஆடியில் அமிலத் தூறல்,

தேகத்தை  நனைக்க என்றன்,
  தூவுதே உன்பார்வை சாரல் 
பேசவும் இயலாக் கண்கள் 
 பேசுதே உந்தன் நெஞ்சில் 

ஆசையென்  மனத்திற் குள்ளே,
  அணைத்திடும் அழகாம் உன்பால்
கடலலை மேலே நீந்தும்
கயல்விழி போலுள் லானேன்

 
ஆடியின்  காற்றில் நீந்தும்,
   அலைகிற  சருகும் நானோ?
கன்னியில்  ஏறும் நெஞ்சம்
  கணினியில் காதல் கொள்ள

தோகையாள் அழகைத் தேடி 
   தேடினேன் கனவில்  எங்கும்!!
காற்றினில் கலக்கும் மூச்சாய்
கற்பனையில் கலந்த தென்ன?

மேலும்

Selvam - Selvam அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
26-Nov-2024 3:44 am

தென்றலிலே தேனெடுத்து
தேரோட்டி வந்தவளின் 
தேனருவி மேனியிலே
திகட்டாமல் குளித்திருந்தேன்

ஆகாச மின்னலென 
அங்கங்கள் நனைத்திருக்க 
பாலாடை பளபளக்கும்
பூவாடை மேனியிலே

                   மேலாடை சரிந்திருக்க   மோகத்தில் சாய்த்திருந்தேன்
பாராத விழியிரண்டால்              பார்த்துவிட்டு தலைகுனிந்தேன் 

வெட்கத்தில் அவளிருக்க
வெடிசிரிப்பில் நானிருக்க 
சிவன்மலை தென்றலவள்
சிரித்துவிட்டு போககண்டேன்

கன்னிப்பூ தோப்பினிலே 
கனியிரண்டை கண்டதிலே 
நான்மறந்தேன் என்றனையே
நாணத்தில் தலைகுனிந்தவளால் 

கண்ணாடி வளையலுந்தான்    கையோடு கலகலக்க 
என்னோட கையிரண்டும்     இழுத்தணைக்க மெய்சிலிர்த்தேன்

கைநிறையப் பூவெடுத்து
கூந்தலிலே சூடிவைத்து                 காற்றான அவளழகை
காதலித்தேன் தென்றலென

மேலும்

Selvam - எண்ணம் (public)
26-Nov-2024 3:44 am

தென்றலிலே தேனெடுத்து
தேரோட்டி வந்தவளின் 
தேனருவி மேனியிலே
திகட்டாமல் குளித்திருந்தேன்

ஆகாச மின்னலென 
அங்கங்கள் நனைத்திருக்க 
பாலாடை பளபளக்கும்
பூவாடை மேனியிலே

                   மேலாடை சரிந்திருக்க   மோகத்தில் சாய்த்திருந்தேன்
பாராத விழியிரண்டால்              பார்த்துவிட்டு தலைகுனிந்தேன் 

வெட்கத்தில் அவளிருக்க
வெடிசிரிப்பில் நானிருக்க 
சிவன்மலை தென்றலவள்
சிரித்துவிட்டு போககண்டேன்

கன்னிப்பூ தோப்பினிலே 
கனியிரண்டை கண்டதிலே 
நான்மறந்தேன் என்றனையே
நாணத்தில் தலைகுனிந்தவளால் 

கண்ணாடி வளையலுந்தான்    கையோடு கலகலக்க 
என்னோட கையிரண்டும்     இழுத்தணைக்க மெய்சிலிர்த்தேன்

கைநிறையப் பூவெடுத்து
கூந்தலிலே சூடிவைத்து                 காற்றான அவளழகை
காதலித்தேன் தென்றலென

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே