கவின் சாரலன் - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  கவின் சாரலன்
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  15-Jul-2011
பார்த்தவர்கள்:  22467
புள்ளி:  17788

என் படைப்புகள்
கவின் சாரலன் செய்திகள்
கவின் சாரலன் - கவின் சாரலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Nov-2023 7:12 pm

குவிந்தபூ மொட்டு குதுகலமாய் பூக்க
சிவந்தசெவ் வானமும் சித்திரம் தீட்ட
தெவிட்டாத தேன்மலர்கள் தென்றலில் ஆட
பவளயிதழ்ப் புன்னகையில் பூவெழிலும் வந்தாய்
கவிபாட நானும்வந் தேன்

-------- ஒரு விகற்ப பஃறொடை வெண்பா

மேலும்

அலகிடப்படாதா வடிவத்தைத் தந்திருக்கிறீர்கள் முதலில் பயில்வோர் பயிற்சிக்காகன புத்தக எடுத்துக்காட்டாக இருக்கலாம் பயில்வோர்க்கு என்று உங்கள் பக்கத்தில் இவ்வாறு பதிவிடுங்கள் இலக்கண இலக்கிய விளக்கமும் கொடுங்கள் யாப்பு விழைவோர் பயன்பெறுவர் 30-Nov-2023 6:17 pm
இப்பொழுது பார்க்கும்படி வேண்டுகிறேன். சீர் ஒழுங்கில் அமைந்திருக்கிறது/ எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் (மா 6 / கூவிளம்) இந்த வோதை யெழிலி யேழு மூழி நாளி டித்தெழும் அந்த வோதை யோவ தன்றி யாழி பொங்கு மோதையோ கந்தன் வானின் மீது தேர்க டாவு கின்ற வோதையோ எந்த வோதை யென்ற யிர்த்த யிர்த்து வஞ்சர் யாவரும்! 114 - நிவாத கவசர் காலகேயர் வதைச் சருக்கம், வில்லி பாரதம் 30-Nov-2023 5:09 pm
இரண்டாம் அடி ஒரு சீர் குறைந்த அடியாகவும் ஏனையவை அறுசீர் அடியாகவும் உள்ளது மூன்றாம் அடி முதற்சீர் நாலசை சீரும் பெற்றுள்ளது அறுசீர் ஆசிரிய விருத்தத்திலும் மாறுபட்ட நாலசைச் சீரும் அனுமதிக்கப் பட்ட துறையின் பாற்படுத்தலாம் ஐஞ்சீரோ அறுசீரோ ஓரடி அல்லது ஈரடி அளவில் குறைந்த பலவாய்ப்பாட்டு ஆசிரியத்துறை எழுதிடலாம் நாலசைச் சீர் அனுமதி உண்டா சொல்லவும் முயல்கிறேன் 30-Nov-2023 8:06 am
ஓசையைப் பற்றிக் காலகேயர் பலவாறு சங்கித்தல்! இந்தவோதை யெழிலி யேழு மூழி நாளி டித்தெழும் அந்தவோதை யோவதன்றி யாழி பொங்கு மோதையோ கந்தன்வானின் மீது தேர்க டாவு கின்ற வோதையோ எந்தவோதை யென்ற யிர்த்த யிர்த்து வஞ்சர் யாவரும்! 114 - நிவாத கவசர் காலகேயர் வதைச் சருக்கம், வில்லி பாரதம் இந்தப் பாடல் என்ன வகையென்றும், இதன் வாய்ப்பாடும் சொல்லுங்களேன். இதையே திரு சக்கரை வாசனார்க்கும், திரு பழனிராசர்க்கும் பகிர்ந்திருக்கிறேன். இந்த வாய்ப்பாட்டில் ஓர் பாடலும் எழுதலாமே! 29-Nov-2023 8:04 pm
கவின் சாரலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Nov-2023 7:12 pm

குவிந்தபூ மொட்டு குதுகலமாய் பூக்க
சிவந்தசெவ் வானமும் சித்திரம் தீட்ட
தெவிட்டாத தேன்மலர்கள் தென்றலில் ஆட
பவளயிதழ்ப் புன்னகையில் பூவெழிலும் வந்தாய்
கவிபாட நானும்வந் தேன்

-------- ஒரு விகற்ப பஃறொடை வெண்பா

மேலும்

அலகிடப்படாதா வடிவத்தைத் தந்திருக்கிறீர்கள் முதலில் பயில்வோர் பயிற்சிக்காகன புத்தக எடுத்துக்காட்டாக இருக்கலாம் பயில்வோர்க்கு என்று உங்கள் பக்கத்தில் இவ்வாறு பதிவிடுங்கள் இலக்கண இலக்கிய விளக்கமும் கொடுங்கள் யாப்பு விழைவோர் பயன்பெறுவர் 30-Nov-2023 6:17 pm
இப்பொழுது பார்க்கும்படி வேண்டுகிறேன். சீர் ஒழுங்கில் அமைந்திருக்கிறது/ எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் (மா 6 / கூவிளம்) இந்த வோதை யெழிலி யேழு மூழி நாளி டித்தெழும் அந்த வோதை யோவ தன்றி யாழி பொங்கு மோதையோ கந்தன் வானின் மீது தேர்க டாவு கின்ற வோதையோ எந்த வோதை யென்ற யிர்த்த யிர்த்து வஞ்சர் யாவரும்! 114 - நிவாத கவசர் காலகேயர் வதைச் சருக்கம், வில்லி பாரதம் 30-Nov-2023 5:09 pm
இரண்டாம் அடி ஒரு சீர் குறைந்த அடியாகவும் ஏனையவை அறுசீர் அடியாகவும் உள்ளது மூன்றாம் அடி முதற்சீர் நாலசை சீரும் பெற்றுள்ளது அறுசீர் ஆசிரிய விருத்தத்திலும் மாறுபட்ட நாலசைச் சீரும் அனுமதிக்கப் பட்ட துறையின் பாற்படுத்தலாம் ஐஞ்சீரோ அறுசீரோ ஓரடி அல்லது ஈரடி அளவில் குறைந்த பலவாய்ப்பாட்டு ஆசிரியத்துறை எழுதிடலாம் நாலசைச் சீர் அனுமதி உண்டா சொல்லவும் முயல்கிறேன் 30-Nov-2023 8:06 am
ஓசையைப் பற்றிக் காலகேயர் பலவாறு சங்கித்தல்! இந்தவோதை யெழிலி யேழு மூழி நாளி டித்தெழும் அந்தவோதை யோவதன்றி யாழி பொங்கு மோதையோ கந்தன்வானின் மீது தேர்க டாவு கின்ற வோதையோ எந்தவோதை யென்ற யிர்த்த யிர்த்து வஞ்சர் யாவரும்! 114 - நிவாத கவசர் காலகேயர் வதைச் சருக்கம், வில்லி பாரதம் இந்தப் பாடல் என்ன வகையென்றும், இதன் வாய்ப்பாடும் சொல்லுங்களேன். இதையே திரு சக்கரை வாசனார்க்கும், திரு பழனிராசர்க்கும் பகிர்ந்திருக்கிறேன். இந்த வாய்ப்பாட்டில் ஓர் பாடலும் எழுதலாமே! 29-Nov-2023 8:04 pm
கவின் சாரலன் - கவின் சாரலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Nov-2023 6:43 pm

செவ்வானம் சித்திரம் போல சிவந்திருக்க
செவ்வித ழைவிரித்து செம்பருத்தி பூத்திட
அவ்வையின் வெண்பா அழகினில் வெண்மலர்கள்
இவ்வெழில் காலையில் எத்தனையோ பூத்திருக்க
செவ்விதழ்நீ எங்குசென் றாய்

-------ஒரு விகற்ப பஃறொடை வெண்பா

மேலும்

கவின் சாரலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Nov-2023 6:43 pm

செவ்வானம் சித்திரம் போல சிவந்திருக்க
செவ்வித ழைவிரித்து செம்பருத்தி பூத்திட
அவ்வையின் வெண்பா அழகினில் வெண்மலர்கள்
இவ்வெழில் காலையில் எத்தனையோ பூத்திருக்க
செவ்விதழ்நீ எங்குசென் றாய்

-------ஒரு விகற்ப பஃறொடை வெண்பா

மேலும்

கவின் சாரலன் - மலர்91 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Nov-2023 11:35 am

அன்புள்ள நமது கட்சியின் வதந்தி வாரிசுகளே அவதூறு அற்புதர்களே!
நமது கட்சியின் தலைமை நிலையம் நமக்கு புனிதமான கோயில் மாதிரி. நம் கட்சியின் முக்கிய கொள்கைகளை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

வதந்தியைப் அவதூறுகள் கட்சி வளர்ச்சிக்கு உதவும் என்பதை நாம் அறிந்தே நமது கட்சியின் அவதூறு அணிக்கு ஒரு மாநிலத் தலைவரையும் வதந்தி அணிக்குத் தனியாக ஒரு மாநிலத் தலைவரையும் நியமித்துள்ளோம். இதெல்லாம் நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.

இனி மாதம்தோறும் மூன்று மாவட்டங்களில் பட்டமளிப்பு விழா நடைபெறும். ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிக வதந்தியைப் பரப்பியவர்க்கு *வதந்தி ராஜா* என்ற பட்டமும் ஒரு இலட்சம் பரிசுத் தொகையும் வழ

மேலும்

சரிதான் கவிஞரே.‌ மிக்க நன்றி. அடுத்து சிறிய கட்சிகளை ஏலத்தில் எடுப்பது பற்றிப் பேசுவோம். 30-Nov-2023 12:33 am
இது எல்லா வற்றையும் ஒருசேரப் பரப்புவரை வதந்தி சக்கரவர்த்தி என்று கௌரவிக்கலாம் கோயாபெல்சின் சிறு சிற்பத்தையும் பரிசளிக்கலாம் 29-Nov-2023 5:06 pm
கவின் சாரலன் - கவின் சாரலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Nov-2023 4:00 pm

தென்றலுக்குத் தேவையொரு தோட்டம் சிலமலர்கள்
புன்னகையில் வந்தவுன் கூந்தல் பரிசினில்
நன்றி நவின்றது நீள்குழலை நீவியது
தென்றல் வருடமகிழ்ந் தாய்
-----இன்னிசை வெண்பா
தென்றலுக்குத் தேவையொரு பூந்தோட்டம் சிலமலர்கள்
புன்னகையில் வந்தவுந்தான் பூங்கூந்தல் பரிசினிலே
நன்றியினை நவின்றதுபின் மென்குழலை நீவியது
தென்றலினின் மென்வருடல் தன்னிலேநீ யும்மகிழ்ந்தாய்

-----கூவிளங்காய் காய் காய் காய் கலிவிருத்தம்

மேலும்

கவின் சாரலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Nov-2023 4:00 pm

தென்றலுக்குத் தேவையொரு தோட்டம் சிலமலர்கள்
புன்னகையில் வந்தவுன் கூந்தல் பரிசினில்
நன்றி நவின்றது நீள்குழலை நீவியது
தென்றல் வருடமகிழ்ந் தாய்
-----இன்னிசை வெண்பா
தென்றலுக்குத் தேவையொரு பூந்தோட்டம் சிலமலர்கள்
புன்னகையில் வந்தவுந்தான் பூங்கூந்தல் பரிசினிலே
நன்றியினை நவின்றதுபின் மென்குழலை நீவியது
தென்றலினின் மென்வருடல் தன்னிலேநீ யும்மகிழ்ந்தாய்

-----கூவிளங்காய் காய் காய் காய் கலிவிருத்தம்

மேலும்

கவின் சாரலன் - கவின் சாரலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Nov-2023 10:03 am

மலரிதழ் மேல்துயிலும் வெண்பனிமுத் துக்கள்
புலர்ந்திடும் காலைக் கதிரில் மறைய
மலரிதழில் தேன்முத்து மின்னவந்து கொய்வாய்
மலரோடென் மென்மனதை யும்
------இன்னிசை வெண்பா

மலரிதழின் மேல்துயிலும் வெண்பனிமுத் துக்கள்
புலர்ந்திடும்மென் காலையினில் கதிர்தன்னில் மறைய
மலரிதழில் தேன்முத்து மின்னவந்து கொய்வாய்
மலர்தனுடன் மனதினையும் பறிக்கின்றாய் ஏனோ

------ கருவிளங்காய் காய் காய் மா கலிவிருத்தம்

மலரிதழின் மேல்துயிலும் வெண்பனிமுத் துக்களும்
புலர்ந்திடும்மெல் லியகாலைக் கதிர்தன்னில் மறைந்துவிட
மலரிதழில் சுவைநறுந்தேன் மினுங்கவந்து கொய்திடுவாய்
மலர்தனுடன் மனதையும் பறிப்பது ஏனோசொல்

மேலும்

கவின் சாரலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Nov-2023 10:03 am

மலரிதழ் மேல்துயிலும் வெண்பனிமுத் துக்கள்
புலர்ந்திடும் காலைக் கதிரில் மறைய
மலரிதழில் தேன்முத்து மின்னவந்து கொய்வாய்
மலரோடென் மென்மனதை யும்
------இன்னிசை வெண்பா

மலரிதழின் மேல்துயிலும் வெண்பனிமுத் துக்கள்
புலர்ந்திடும்மென் காலையினில் கதிர்தன்னில் மறைய
மலரிதழில் தேன்முத்து மின்னவந்து கொய்வாய்
மலர்தனுடன் மனதினையும் பறிக்கின்றாய் ஏனோ

------ கருவிளங்காய் காய் காய் மா கலிவிருத்தம்

மலரிதழின் மேல்துயிலும் வெண்பனிமுத் துக்களும்
புலர்ந்திடும்மெல் லியகாலைக் கதிர்தன்னில் மறைந்துவிட
மலரிதழில் சுவைநறுந்தேன் மினுங்கவந்து கொய்திடுவாய்
மலர்தனுடன் மனதையும் பறிப்பது ஏனோசொல்

மேலும்

கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) Palanirajan59aa43124fd44 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
28-Nov-2023 9:34 am

தோட்டத்துப் பூக்களெல்லாம் தொல்காப் பியம்பேசி
வாட்டமின்றி பூத்திடும் வெண்பா மலர்களாய்
காட்டும் விழியினில் காதல் எழுதிநீ
தீட்டுவாய்வெண் புன்னகைப் பா
------இன்னிசை வெண்பா
---------------------------------------------------------------------------------------------------------------------------
தோட்டத்துப் பூக்களெல்லாம் தொல்காப் பியம்பேசி
வாட்டமின்றி பூக்குதுபார் வெண்பா பூக்களாக
காட்டிடிடும் விழியினிலே காதல் எழுதிநீயும்
தீட்டுவாய்புன் னகைவெண்பா பூந்தேன் செவ்விதழே

-----காய் காய் தேமா காய் வாய்ப்பாடு
இதில் முதற் சீர் தேமாங்காய் பிற முதற் சீர் கூவிளங்காய்
முதற் சீரையு

மேலும்

யாப்புக் கவிதைக்கு யாப்பில் கருத்து மிக்க நன்றி 29-Nov-2023 10:13 am
கவின் சாரலர்க்கு கொச்சகக் கலிப்பா செம்மை தமிழை சிறப்பாய் அறிந்திட வே உம்மை யிகழ உளரோ குவலயத்தில் இம்பர் உலகில் இயம்பு கலியாப்பை தம்பி இதுவும் கொச்சகம் தவறாதே 29-Nov-2023 8:04 am
மகிழ்ந்து பாராட்டிய கருத்தில் மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி கவிப்பிரிய சக்கரை வாசன் 28-Nov-2023 5:00 pm
அருமை அருமை மிகவும் அருமை. கற்பனைகளும் மிக அருமை ஐயா 28-Nov-2023 3:39 pm
கவின் சாரலன் - சக்கரைவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Nov-2023 9:13 am

மாட்சிமை கெட வாழ்ந்தனரே
********
( கூவிளங்காய் நான்கு )
(ஒரேவிதமான காய்ச் சீர்கள் )

வஞ்சி விருத்தம்
*****

ஆட்சிதனைக் கைப்பிடித்து , ஆரவாரக்
காட்சிகளைக் காட்டுகின்ற கட்டமைப்போ ;
நாட்டிலுள மானிடரை நாசமாக்கி ;
மாட்சிமையின் கையொடித்து வாழ்ந்தனரே!
**************

மேலும்

ஓசையைப் பற்றிக் காலகேயர் பலவாறு சங்கித்தல்! இந்தவோதை யெழிலி யேழு மூழி நாளி டித்தெழும் அந்தவோதை யோவதன்றி யாழி பொங்கு மோதையோ கந்தன்வானின் மீது தேர்க டாவு கின்ற வோதையோ எந்தவோதை யென்ற யிர்த்த யிர்த்து வஞ்சர் யாவரும்! 114 - நிவாத கவசர் காலகேயர் வதைச் சருக்கம், வில்லி பாரதம் இந்தப் பாடல் என்ன வகையென்றும், இதன் வாய்ப்பாடும் சொல்லுங்களேன். இதையே திரு கவின் சாரலன், திரு பழனிராசர்க்கும் பகிர்ந்திருக்கிறேன். இந்த வாய்ப்பாட்டில் ஓர் பாடலும் எழுதலாமே! 29-Nov-2023 8:15 pm
ஐயா அவர்கட்கு வணக்கம் தங்களின் வருகைக்கும் பார்வைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா 28-Nov-2023 3:36 pm
வஞ்சிக்காய் விருத்தம் அருமை 28-Nov-2023 2:30 pm
ஐயா அவர்கட்கு காலை வணக்கம் தங்களின் வருகைக்கும் பார்வைக்கும் கருத்துக்கும் ஆலோசனை மற்றும் அறிவுரைக்கும் மிகவும் நன்றி ஐயா 28-Nov-2023 10:33 am
கவின் சாரலன் - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Nov-2023 10:05 am

உதயத்தின் பொற்கதிரில் உயர்கமலம் இதழ்விரிக்க
இதழ்விரியும் புன்னகையில் இளந்தென்றல் நீவந்தாய்
இதயப்பொ ழில்தன்னில் இன்னுமொரு தாமரையாய்
புதுமைப்பூங் கவிதைகள் பூத்தனவா னவில்லைப்போல்

----எழு கலித்தளையால் தரவு கொச்சகக் கலிப்பா ஆனது

உதயத்தின் பொற்கதிரில் உயர்கமலம் இதழ்விரிக்க
இதழ்விரியும் புன்னகையில் இளந்தென்றல் நீவந்தாய்
இதயப்பொ ழில்தன்னில் இன்னுமொரு தாமரையாய்
புதுமைசெய்யும் பூம்பாக்கள் பூத்திடுது வானவில்போல்
------இப்பொழுது காய் நான்கின் கலிவிருத்தம்

உதயக் கதிரில் உயர்கமலம் பூக்க
இதழ்மென் சிரிப்பில் இளந்தென்றல் நீவா
இதயப்பொ ழில்தன்னில் இன்னுமொரு பூவாய்
புதுமையில் பூத்திடும

மேலும்

’இதயப் பொழில்தன்னில்’ என்றும் அமைக்கலாம் சீர் கருதி சொல் பிளவு படலாம் நீங்கள் விரும்பியபடி ஒரே வகை காய் கொண்டு முதற்சீர் அமைந்த கலிவிருத்தம் மேலே 27-Nov-2023 6:29 pm
சரி உங்களுக்காக ----- உதயத்தின் பொற்கதிரில் உயர்கமலப் பூவிரிய இதழ்மீதில் புன்னகையில் இளந்தென்றல் நீவந்தாய் இதயத்தண் பொழிலினிலே இன்னுமொரு தாமரையாய் புதுமைத்தேன் வெண்பாக்கள் பூத்திடுது வானவில்போல் 27-Nov-2023 6:18 pm
காய்ச்சீரில் ஆரம்பிக்கும் விருத்தத்தில் நான்கடிகளிலும் முதல்சீர் ஒரே வகையாக வருதல் சிறப்பு! வெண்பாவில் இதயப்பொ ழில்தன்னில் என்பதை ’இதயப் பொழில்தன்னில்’ என்பதே சரியாகும்! தளையும் சிறக்கும்! 27-Nov-2023 5:30 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (405)

சரவணன் சா உ

சரவணன் சா உ

பட்டாக்குறிச்சி
ஜவ்ஹர்

ஜவ்ஹர்

இலங்கை
user photo

இரமி

வேலூர்

இவர் பின்தொடர்பவர்கள் (406)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (415)

காளியப்பன் எசேக்கியல்

காளியப்பன் எசேக்கியல்

மாடம்பாக்கம்,சென்னை

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே