கவின் சாரலன் - சுயவிவரம்
(Profile)


தமிழ் பித்தன்
இயற்பெயர் | : கவின் சாரலன் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 15-Jul-2011 |
பார்த்தவர்கள் | : 22467 |
புள்ளி | : 17788 |
குவிந்தபூ மொட்டு குதுகலமாய் பூக்க
சிவந்தசெவ் வானமும் சித்திரம் தீட்ட
தெவிட்டாத தேன்மலர்கள் தென்றலில் ஆட
பவளயிதழ்ப் புன்னகையில் பூவெழிலும் வந்தாய்
கவிபாட நானும்வந் தேன்
-------- ஒரு விகற்ப பஃறொடை வெண்பா
குவிந்தபூ மொட்டு குதுகலமாய் பூக்க
சிவந்தசெவ் வானமும் சித்திரம் தீட்ட
தெவிட்டாத தேன்மலர்கள் தென்றலில் ஆட
பவளயிதழ்ப் புன்னகையில் பூவெழிலும் வந்தாய்
கவிபாட நானும்வந் தேன்
-------- ஒரு விகற்ப பஃறொடை வெண்பா
செவ்வானம் சித்திரம் போல சிவந்திருக்க
செவ்வித ழைவிரித்து செம்பருத்தி பூத்திட
அவ்வையின் வெண்பா அழகினில் வெண்மலர்கள்
இவ்வெழில் காலையில் எத்தனையோ பூத்திருக்க
செவ்விதழ்நீ எங்குசென் றாய்
-------ஒரு விகற்ப பஃறொடை வெண்பா
செவ்வானம் சித்திரம் போல சிவந்திருக்க
செவ்வித ழைவிரித்து செம்பருத்தி பூத்திட
அவ்வையின் வெண்பா அழகினில் வெண்மலர்கள்
இவ்வெழில் காலையில் எத்தனையோ பூத்திருக்க
செவ்விதழ்நீ எங்குசென் றாய்
-------ஒரு விகற்ப பஃறொடை வெண்பா
அன்புள்ள நமது கட்சியின் வதந்தி வாரிசுகளே அவதூறு அற்புதர்களே!
நமது கட்சியின் தலைமை நிலையம் நமக்கு புனிதமான கோயில் மாதிரி. நம் கட்சியின் முக்கிய கொள்கைகளை நீங்கள் நன்கு அறிவீர்கள்.
வதந்தியைப் அவதூறுகள் கட்சி வளர்ச்சிக்கு உதவும் என்பதை நாம் அறிந்தே நமது கட்சியின் அவதூறு அணிக்கு ஒரு மாநிலத் தலைவரையும் வதந்தி அணிக்குத் தனியாக ஒரு மாநிலத் தலைவரையும் நியமித்துள்ளோம். இதெல்லாம் நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.
இனி மாதம்தோறும் மூன்று மாவட்டங்களில் பட்டமளிப்பு விழா நடைபெறும். ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிக வதந்தியைப் பரப்பியவர்க்கு *வதந்தி ராஜா* என்ற பட்டமும் ஒரு இலட்சம் பரிசுத் தொகையும் வழ
தென்றலுக்குத் தேவையொரு தோட்டம் சிலமலர்கள்
புன்னகையில் வந்தவுன் கூந்தல் பரிசினில்
நன்றி நவின்றது நீள்குழலை நீவியது
தென்றல் வருடமகிழ்ந் தாய்
-----இன்னிசை வெண்பா
தென்றலுக்குத் தேவையொரு பூந்தோட்டம் சிலமலர்கள்
புன்னகையில் வந்தவுந்தான் பூங்கூந்தல் பரிசினிலே
நன்றியினை நவின்றதுபின் மென்குழலை நீவியது
தென்றலினின் மென்வருடல் தன்னிலேநீ யும்மகிழ்ந்தாய்
-----கூவிளங்காய் காய் காய் காய் கலிவிருத்தம்
தென்றலுக்குத் தேவையொரு தோட்டம் சிலமலர்கள்
புன்னகையில் வந்தவுன் கூந்தல் பரிசினில்
நன்றி நவின்றது நீள்குழலை நீவியது
தென்றல் வருடமகிழ்ந் தாய்
-----இன்னிசை வெண்பா
தென்றலுக்குத் தேவையொரு பூந்தோட்டம் சிலமலர்கள்
புன்னகையில் வந்தவுந்தான் பூங்கூந்தல் பரிசினிலே
நன்றியினை நவின்றதுபின் மென்குழலை நீவியது
தென்றலினின் மென்வருடல் தன்னிலேநீ யும்மகிழ்ந்தாய்
-----கூவிளங்காய் காய் காய் காய் கலிவிருத்தம்
மலரிதழ் மேல்துயிலும் வெண்பனிமுத் துக்கள்
புலர்ந்திடும் காலைக் கதிரில் மறைய
மலரிதழில் தேன்முத்து மின்னவந்து கொய்வாய்
மலரோடென் மென்மனதை யும்
------இன்னிசை வெண்பா
மலரிதழின் மேல்துயிலும் வெண்பனிமுத் துக்கள்
புலர்ந்திடும்மென் காலையினில் கதிர்தன்னில் மறைய
மலரிதழில் தேன்முத்து மின்னவந்து கொய்வாய்
மலர்தனுடன் மனதினையும் பறிக்கின்றாய் ஏனோ
------ கருவிளங்காய் காய் காய் மா கலிவிருத்தம்
மலரிதழின் மேல்துயிலும் வெண்பனிமுத் துக்களும்
புலர்ந்திடும்மெல் லியகாலைக் கதிர்தன்னில் மறைந்துவிட
மலரிதழில் சுவைநறுந்தேன் மினுங்கவந்து கொய்திடுவாய்
மலர்தனுடன் மனதையும் பறிப்பது ஏனோசொல்
மலரிதழ் மேல்துயிலும் வெண்பனிமுத் துக்கள்
புலர்ந்திடும் காலைக் கதிரில் மறைய
மலரிதழில் தேன்முத்து மின்னவந்து கொய்வாய்
மலரோடென் மென்மனதை யும்
------இன்னிசை வெண்பா
மலரிதழின் மேல்துயிலும் வெண்பனிமுத் துக்கள்
புலர்ந்திடும்மென் காலையினில் கதிர்தன்னில் மறைய
மலரிதழில் தேன்முத்து மின்னவந்து கொய்வாய்
மலர்தனுடன் மனதினையும் பறிக்கின்றாய் ஏனோ
------ கருவிளங்காய் காய் காய் மா கலிவிருத்தம்
மலரிதழின் மேல்துயிலும் வெண்பனிமுத் துக்களும்
புலர்ந்திடும்மெல் லியகாலைக் கதிர்தன்னில் மறைந்துவிட
மலரிதழில் சுவைநறுந்தேன் மினுங்கவந்து கொய்திடுவாய்
மலர்தனுடன் மனதையும் பறிப்பது ஏனோசொல்
தோட்டத்துப் பூக்களெல்லாம் தொல்காப் பியம்பேசி
வாட்டமின்றி பூத்திடும் வெண்பா மலர்களாய்
காட்டும் விழியினில் காதல் எழுதிநீ
தீட்டுவாய்வெண் புன்னகைப் பா
------இன்னிசை வெண்பா
---------------------------------------------------------------------------------------------------------------------------
தோட்டத்துப் பூக்களெல்லாம் தொல்காப் பியம்பேசி
வாட்டமின்றி பூக்குதுபார் வெண்பா பூக்களாக
காட்டிடிடும் விழியினிலே காதல் எழுதிநீயும்
தீட்டுவாய்புன் னகைவெண்பா பூந்தேன் செவ்விதழே
-----காய் காய் தேமா காய் வாய்ப்பாடு
இதில் முதற் சீர் தேமாங்காய் பிற முதற் சீர் கூவிளங்காய்
முதற் சீரையு
மாட்சிமை கெட வாழ்ந்தனரே
********
( கூவிளங்காய் நான்கு )
(ஒரேவிதமான காய்ச் சீர்கள் )
வஞ்சி விருத்தம்
*****
ஆட்சிதனைக் கைப்பிடித்து , ஆரவாரக்
காட்சிகளைக் காட்டுகின்ற கட்டமைப்போ ;
நாட்டிலுள மானிடரை நாசமாக்கி ;
மாட்சிமையின் கையொடித்து வாழ்ந்தனரே!
**************
உதயத்தின் பொற்கதிரில் உயர்கமலம் இதழ்விரிக்க
இதழ்விரியும் புன்னகையில் இளந்தென்றல் நீவந்தாய்
இதயப்பொ ழில்தன்னில் இன்னுமொரு தாமரையாய்
புதுமைப்பூங் கவிதைகள் பூத்தனவா னவில்லைப்போல்
----எழு கலித்தளையால் தரவு கொச்சகக் கலிப்பா ஆனது
உதயத்தின் பொற்கதிரில் உயர்கமலம் இதழ்விரிக்க
இதழ்விரியும் புன்னகையில் இளந்தென்றல் நீவந்தாய்
இதயப்பொ ழில்தன்னில் இன்னுமொரு தாமரையாய்
புதுமைசெய்யும் பூம்பாக்கள் பூத்திடுது வானவில்போல்
------இப்பொழுது காய் நான்கின் கலிவிருத்தம்
உதயக் கதிரில் உயர்கமலம் பூக்க
இதழ்மென் சிரிப்பில் இளந்தென்றல் நீவா
இதயப்பொ ழில்தன்னில் இன்னுமொரு பூவாய்
புதுமையில் பூத்திடும