கவின் சாரலன்- கருத்துகள்

கவிதைப்பிரிவில் கீழ் கட்டத்தில் வெண்பா விருத்தம் என்பவற்றை
யாப்பெழில் தோட்டம் என்பதில் காட்டுகிறேன்
புதுக்கவிதையானால் புதுக்கவிதைப் பூந்தோட்டம் என்று காட்டுகிறேன்

தங்கள் அழகிய கருத்தில் மிக்க மகிழ்ச்சி
மிக்க நன்றி கவிப்பிரிய டாக்டர் VKK

ஏவுகணை ---நவீன போராயுதம் துல்லியமாகத் தாக்கும் ஆற்றல் பெற்றவை
புதுமையை அடையாளம் கண்டு கருத்துரைத்ததில் மிக்க மகிழ்ச்சி
மிக்க நன்றி கவிப்பிரிய டாக்டர் மலர்

தாவணி போட்டு வந்த ஏவுகணையோ
தாக்கினால் என்ன ஆகுமோ !
---கருத்திற்கு போனஸ் கவிதை

வேடிக்கையாக சொன்னேன் தவறு ஒன்றும் இல்லை

ஆம் கடை விழி விழியின் கடைசி

ஹா ஹா
மயில் மான் எல்லாம் போயிடுச்சா ?

அருமை
கடை ---கடைசியா ?

கவிஞன் என்பவன் மேலே படத்திலிருக்கும் கவியரசர் கண்ணதாசன்
வள்ளுவன் கம்பன் புகழேந்தி பட்டுக்கோட்டை கண்ணதாசன் வாலி நீங்கள் நான் என்று எழுத்திச் சென்றால்
பட்டியல் நீளும்
கணினி வலை யுகத்தில் யார் கவிஞன் இல்லை ?

கவிதை என்பது எது? -----எழுதுவதெல்லாம் கவிதைதான்
உள்ளத்தை எது கவர்ந்து இழுக்குதோ அது உண்மைக் கவிதை
கவிதையின் பெரும் பிரிவு தற்போது யாப்பு சார் இலக்கண கவிதை யாப்பு சாரா புதுக்கவிதை அல்லது உரைக்கவிதை பாரதியின் வசன கவிதையிலிருந்து பிறப்பெடுத்தது
இதன் தோற்றம் வளர்ச்சியை வல்லிக்கண்ணன் ஆய்ந்து நூல் வடிவில் தந்திருக்கிறார்

யாப்புக் கவிதை பா பாவினம் என்று இருவகைப்படும்
பா ---ஆசிரிப்பா வெண்பா வஞ்சிப்பா கலிப்பா
இந்நான்கு பா க்கள் ஒவ்வொற்றிற்கும் பல பாவினங்கள் உண்டு
பா விதிகள் தளர்த்தப்பட்டு மாற்றி அமைக்கப்பட்டவை பாவினங்கள் .
தொல்காப்பியம் இவை பற்றி கூறும் நூல்

ஆம் இங்கே சக பயணிகள் அதிகம் இல்லை
தங்களைப்போல் படித்தோர் கருத்து நல்குவது
மகிழ்ச்சி தருகிறது

ஃ பிராய்டின் கூற்றுக்கு கவிதை வடிவில் விளக்கம்
அருமை பாராட்டுக்கள்

அழகிய விளக்கம்
நிராசைகள் கனவுகளாக நிறைவேறுவது போல் வெளிப்படும்
என்று செக்மன்ட் ஃ பிராய்டு சொல்வார்

ஆழ்ந்த உறக்கத்தில் கனவு வெளிப்படுவதில்லை -----உண்மை

மகளுக்கு எழுதிய பாசக் கவிதை அருமை

நீ -செய்யும் குறும்புகள்

குற்றால நீர்வீழ்ச்சியாய் உள்ளத்தில்
-----அழகிய வரிகள்

மெய்யாக வேகிடைக்கும் மேனியிலே ---எது ?

அய்யப்பன் பாட்டை அனுதினமும் கேட்டுவர
மெய்யும் சிலிர்த்திடும் மெய்யப்பா - பொய்யில்லை
அம்பாள்நல் அங்கயலாள் அய்யப் பனும்நல்க
நிம்மதி வாழ்வில் நினை!
-----எதுகை மோனை அழகு மிளிர பொருள் தெற்றனத் துலங்க
மாற்றி அமைத்திருக்கிறேன் பிடித்திருக்கிறதா பாருங்கள்
இரு விகற்ப நேரிசை வெண்பா

நீங்கள்தான் தலைப்பிலே போடுகிறீர்கள்
அதுபோல் நானும் போட்டிருக்கிறேன்

அருமை அழகிய இலக்கிய விளக்கம்
நளவெண்பாவின் தாக்கத்தில் வந்த கவிதை
தங்கள் பாராட்டில் மிக்க மகிழ்ச்சி
மிக்க நன்றி டாக்டர் மலர்

சன்ன லிடை,சொல் சரி! ---அருமை சன்னல் பூ சொல்வாளா ?

பழைய பழக்க வழக்கங்களை எப்போதும் பின்பற்றுவதற்கில்லை
ஏட்டுச்சுசடி காலத்தில் ஈற்றடி வெண்பா என்று சுட்டிவிடும்
அதற்காகக அப்படி ஒரு முறையை நியதியாக அமைத்திருக்கலாம்

சோலைக் குளிர்நீலப் ---முதலில் அப்படித்தான் அமைத்தேன்
பின் வேறுவிதமாக கற்பனை வந்தபோது இப்படி அமைந்துவிட்டது
இரண்டும் சரியே தளை தட்டவில்லை
கவிதையில் சொல்லப்படுவதை தலைப்பில் சுட்டவேண்டும் என்றே நீளத்
தலைப்பை அமைத்தேன்

சுரதாவின் சுப்புரத்தின தாசனின் (பாரதி தாசனின் இயற்பெயர் சுப்பு ரத்தினம் }
திரைப்பாடலில் எனக்குப் பிடித்தது

அமுதும் தேனும் எதற்கு
நீ அருகினில் இருக்கையிலே எனக்கு

என் கல்லூரித் தமிழாசிரியர் அவரை
உவமைக் கவிஞர் சுரதா என்று குறிப்பிட்டுச் சொல்வார்

கோவை வந்திருக்கிறேன் brief stay
இன்னொருமுறை நம்ம கோவைக்கு வரும்போது சந்திப்போம்
அழைப்புக்கு மிக்க நன்றி கவிப்பிரிய கோவை சுபா


கவின் சாரலன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே