கவின் சாரலன்- கருத்துகள்

அழகிய இனிய கருத்து
மிக்க நன்றி கவிப்பிரிய பானுஜெகதீஷ்

இது மேற்கேதுவாய் மோனை எண்வகை மோனையில் இதுவொன்று
1 3 ல் மோனை --பொழிப்பு மோனை அமைய எழுதுவது அளவடிச் செய்யுளில் பழைய நூல்களின்
பழக்கம் ஆதலால் 1 3 ஐ காட்டியிருக்கிறேன்
பேனாவே போற்றுது பெண்ணேநின் பேரழகை --- என்றமைத்தால் 2 லும் மோனை
இப்பொழுது முற்று மோனை ஆனால் பொருள் அவ்வளவு நன்றாக இல்லை

இக்கவிதையில் வேறு மோனைகளும் அமைந்துள்ளன :

தேனாகச் சொட்டுது செந்தமிழ்ச் சொல்லமுது ----அனைத்து சீரிலும் மோனை இது முற்று மோனை
சொ செ சொ வர்க்கம் தே ---இனம்
மென்பொருளில் போடுங்கள் அடையாளம் காட்டும்

அருமையான தேர்தல் நேரத்தில் சிந்திக்கத் தூண்டும் கதை
பாராட்டுக்கள்
பகிர்கிறேன் நட்சத்திரம் ஐந்து அளிக்கிறேன்

ஆம் ஆம் யார் மறுக்கமுடியும் !

அமுதும் தேனும் எதற்கு ...நீ அருகினில் இருக்கையிலே எனக்கு
--சுரதா
அழகிய கருத்து
மிக்க நன்றி கவிப்பிரிய கோவை சுபா

ஒரே கவிதை யாப்பின் பல் வடிவங்களில் மிக மிக அருமை
பாராட்டுக்கள்
பகிர்ந்தளித்தேன் *****

பழனி ராஜனின் மறைவு தமிழுக்கும் யாப்பிற்கும் எழுத்துத் தளத்திற்கும்
பேரிழப்பு
அவரது ஆன்மா இறைவனடியில் இளைப்பாறட்டும்

ரசித்துப் படித்து எழுதிய கருத்தில் மிக்க மகிழ்ச்சி
மிக்க நன்றி கவிப்பிரிய வாசவன்

அப்படியா சரி
தென்றல் மலர்களைத் தழுவி விட்டுச் செல்லும்
இவளோ மலர்களை வருடி தழுவி முத்தமிட்டு பின் பறித்துச் செல்வாள்
கவிஞன் இவை அனைத்தையும் எழுதிச் செல்வான்
வாட்டம் நாட்டம் ....ம் ம் தோட்டம் மலர்களின் ஆட்டம் ---இன்னொன்று எழுதலாம்
அழகிய கருத்து
மிக்க நன்றி கவிப்பிரிய பாளை பாண்டி

சந்தியா வேளைதன்னில் --சந்தியாவே ளைதன்னில் -- சீர் கருதி வேளை வே ளை
என்று பிளவு பட்டது --இதை வகையுளி என்பர் யாப்பில்
திருக்குறளில் காணலாம்
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது
--சீர் கருதி வழங்குவது வழங்கு வது என்று பிளவு பட்டது

வரி வரியாய் ரசித்துப் படித்துச் சொன்ன
மனமுவந்த கருத்தில் மிக்க மகிழ்ச்சி
மிக்க நன்றி கவிப்பிரிய பாளை பாண்டி

ரசித்து எழுதிய கருத்தில் மிக்க மகிழ்ச்சி
மிக்க நன்றி கவிப்பிரிய சக்கரை வாசன்

முயலுங்கள்

பாலுண் கடைவாய் படுமுன்னே --பாலுன் என்று இருக்கவேண்டும்
மேவிழுந்தே ----என்றால்
காலன் ----மேவிழுந்தே தனிச் சொல் எதுகை ஒன்றவில்லையே

குற்றாலத் தானையே கூறு ---குற்றாலத் தானேயே பாடு என்ற பொருளில் கூறு என்று
வைத்தாரா ?

அந்திமவேளையில் ஒரு புலவர் கடைவாயில் உறவினர் பாலைத் துணியால் பிழியும்
போது புலவர் முகம் சுளித்தாராம்
பால் கசக்கிறதா என்று கேட்டாராம் உறவினர்

பாலும் கசக்கவில்லை பிழிந்த துணியும் கசக்கவில்லை
என்றாராம் புலவர்
அழகியல் கவிதையில் பட்டினத்தாரின் மேற்கோள் ஏன் ?
சரி
பட்டாடை யில்வந்தாள் பொற்பாவை ஆலயம்
தட்டினில் பூவும் தவழ்ந்திடும் புன்னகையில்
தொட்டு வருடுகிற தேநெஞ்சை என்செய்வேன்
பட்டினத் தாரேநீ கூறு



BRAVO
வளர்ச்சி எங்கள் மக்கள் உடலில்
வயதில் மட்டும் உயர்கிறதே

குறுக்கு வழியில் காசு தேட
கோடி மனங்கள் நினைக்கிறதே
----சிறப்பான சமூகச் சிந்தனைக் கவிதை
பாராட்டுக்கள் . ***** அளித்துப் பகிர்கிறேன்

சிறப்பான கருத்து
மிக்க நன்றி கவிப்பிரிய பிரியா

நற் கருத்து
மிக்க நன்றி கவிப்பிரிய சக்கரைவாசன்

கூட்டணி என்பது கொள்கையற்ற அரசியல் கூட்டு அவியல் என்றும் படிக்கவும்


கவின் சாரலன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே