யாதுமறியான் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : யாதுமறியான் |
இடம் | : சேலம் |
பிறந்த தேதி | : 17-Mar-2017 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 03-Feb-2022 |
பார்த்தவர்கள் | : 1738 |
புள்ளி | : 315 |
உயிரோடு உயிராக !!
———/
உயிரோடு உயிராக
இணைந்தேனே /
உறவோடு உறவாகக்
கலந்தேனே /
மலைத்தேனே உன்னாலே
மதிமயங்கி /
கலைந்ததுவோ கன்னிமனம்
கதிகலங்கி /
ஊரொடும் யாரோடும்
ஒன்றாகி /
தேரோடும் சிலையோடும்
வருவாயே /
தேன்சிந்தும் இதழோடு
மகிழ்வோடு /
மான்போல மருண்டோடி
விளையாட /
உனக்கான உள்ளமிது
உறங்காது /
எனக்கான இதயத்தினை
இழக்காது /
எழுபிறவி எடுத்தாலும்
சலிக்காது /
முழுவுலகும் எதிர்த்தாலும்
அடங்காது /
படைத்தவனே பாங்குடனே
சேர்த்தானே /
தடையில்லைக் களிப்புடனே
வாழ்வோமே !!
-யாதுமறியான்.
பெண்மை வாழட்டும் !!
———-
பெண்மை வாழட்டும்
பேருலகம் போற்றட்டும்/
போற்றட்டும் மகளிரின்
புத்தாக்கச் செயல்களையே /
செயல்களையே அளவீடாய்
செய்திடுவோம் நாட்டினிலே /
நாட்டினிலே இருபாலர்
சமவாய்ப்பை ஏற்றிடுவோம் /
ஏற்றிடுவோம் உள்ளத்திலும்
இல்லத்திலும் தீபங்களை /
தீபங்களைப் பற்றவைத்து
தீயவற்றைத் தடுத்திடுவோம் /
தடுத்திடுவோம் சிசுக்கொலை
தாரணியில் எவ்விடமும் /
எவ்விடமும் எந்நாளும்
பெண்மை வாழட்டும் !!
-யாதுமறியான்.
அன்புள்ள காதலனே !!
———
அன்புள்ள காதலனே
ஆசையின் நாயகனே /
கன்னலாய் இனிப்பவனே
கன்னியை ஈர்த்தவனே /
எண்ணத்தில் இருப்பவனே
இதயத்தில் துடிப்பவனே /
மண்ணிலே முளைப்பவனே
மனதிலே நடிப்பவனே /
கள்ளர்கள் மத்தியிலே
கனிவாய் நடப்பவனே /
உள்ளத்தில் பதிந்தவனே
உருவத்தில் உயர்ந்தவனே /
எனக்காய்ப் பிறந்தவனே
இயலிசை வல்லவனே /
தனக்காய் வாழாமல்
துணைக்காய்த் தொடர்பவனே /
மாறிடா மாமகனே
மங்கையின் மன்மதனே /
வேறிடம் இல்லையடா
விரைவினில் வந்திடடா !!
-யாதுமறியான்.
சிந்தை எல்லாம் நீயே !
————-
சிந்தை எல்லாம்
நீயே மானே /
நிந்தை இல்லா
நித்திலப் பூவே /
தென்றல் காற்றின்
தீண்டலுன் பார்வை /
வென்றுநான் வாகை
சூடிட ஆசை /
விழிகளில் நுழைந்தாய்
விரல்வரை நிறைந்தாய் /
பழிகளை எரித்தாய்
பஞ்சணை விரித்தாய் /
பார்த்திடும் பொருட்களில்
பாவையே தெரிந்தாய் /
கார்த்திகைத் தீபமாய்
கனவிலும் ஒளிர்ந்தாய் /
இதயம் முழுவதும்
இருப்பவள் துடிப்பவள் /
உதிக்கும் எண்ணமாய்
உதிரத்தில் கலந்தவள் !!
-யாதுமறியான்.
#குடியரசு தினம் சிறப்பு கவிதை...
படைப்பு கவிதை ரசிகன்
குமரேசன்
டாக்டர் அம்பேத்கர்
தலைமையில் எழுதப்பட்ட
சட்டப் புத்தகம்
வெளியீட்டு தினத்தையே!
குடியரசு நாளாகக்
கொண்டாடப்படுகிறது.....
உலகிலேயே !
சட்ட புத்தகச் சிகரங்களில்
இந்தியாவின்
சட்ட புத்தகம் தான்
எவரெஸ்ட் சிகரம்.....
சட்டம்
தன் கடமையை
தவறாமல் செய்யும்
லஞ்சம் கொடுக்க விட்டால்....
அரசியல்வாதிகளின்
செல்லப்பிராணிகள்
என் நாட்டு சட்டங்கள்....
காவலர்கள்
சிறையில் வைத்து
பூட்டி இருப்பது
சட்டங்களைத்தான்....
நீதி தேவதையின்
கண்களை
கருப்பு துணியால் மட்டுமல்ல....
காதுகளை
கருப்பு பணத
வாடா மலரே !
———-
சூடிடும் பூவெலாம்
சுருங்கிடும் மறுநாள் /
வாடிடா மலருன்னை
வரித்தேன் துணையென /
ஆண்டுகள் சருகென
அகன்றிட்ட போதிலும் /
திகட்டிடா அன்பிற்கு
தினந்தினம் சரங்களே /
வயதென்ன செய்திடும்
வாலிபம் நெஞ்சிலே /
மயங்காத நேசம்தான்
மானுடர் வாழ்க்கையே !!
-யாதுமறியான்.
கண்கள் பேசும் கதைகள் யாவும்
காவியமாய் என் நெஞ்சில் நிறையும்
தென்றல் வீசி கலையும் கூந்தல்
ஓவியமாய் என் கனவில் விரியும்
அசையா உதட்டின் மௌன மொழிகள்
அசைத்துப் போடும் என்னிதய கதவை
பசையாய் வந்து ஒட்டிக் கொண்டு
இசையாய் மீட்டும் என்னுயிரின் பாட்டை..
காதில் ஆடும் ஜிமிக்கி இரண்டும்
காதோடு பேசும் காதல் சுவரங்கள்
காலத்தால் அழியாது நிலைத்து நிற்கும்
கோலத்தை மாற்றிடும் இயற்கை வரங்கள்
இலக்கண வரம்புகள் இதற்கு இல்லை
இலக்கிய வரம்புகள் முடிவதும் இல்லை
துலக்கிய குத்து விளக்காய் மின்னும்
அழகியே..அன்பே...ஆருயிரே...
என்னுடன் என்றும் இணைந்தே நீயும்
வந்திட வேண்டும் வாழ்நாள் முழுது
மண்ணிலே புறப்பட்டு
விண்ணிலே கோலமிடச்
சென்ற சந்திராயனே 3 யே
சிம்ம முகம் கொண்ட நான்முக
பாரத இலட்சனையை பாதத் தடமாக
பாட்டி வடை சுட்ட நிலாவில் நீ பதி
விக்ரம் என்றால் வெற்றி
இந்தியா என்றால் அமைதி
சாப்ட் லேண்டிங் இல் சாதனை
செய்து புதுச் செய்தி தருவாயாக
புன்னகையால் பூவுலகிற்கு.
காத்துக் கிடைக்கிறோம்
காணொளியில் காண நீ காற்றில்லா
சந்திரனில் தந்திரமாக தரை இறங்குவதைக் காண
அடேய் சந்திராயன் 3 எனும் எம் மந்திரமே ...
நீ இதுவரை சாதித்தது ஏராளம்
நீ இனி சாதிக்க இருப்பது தாராளம்
உனை மகனாக பெற்ற இஸ்ரோ
தாயும் இந்தியா எனும் தந்தையும்
உளம்மகிழ உன்னதம் கொள்வாயா