யாதுமறியான் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : யாதுமறியான் |
இடம் | : சேலம் |
பிறந்த தேதி | : 17-Mar-2017 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 03-Feb-2022 |
பார்த்தவர்கள் | : 2193 |
புள்ளி | : 358 |
கன்னங்கள் கவி பாடுமோ !
—
கன்னங்கள் கவிபாடுமோ
கண்விழிகள் எனைத்தேடுமோ
புன்னகைப் பூப்பூக்குமோ
புரியாத மொழிபேசுமோ
மன்னவனின் மார்பினிலே
மயங்கிடவே துடித்திடுமோ
சின்னவளும் சிரித்திடவே
சிந்தையெலாம் சிலிர்த்திடுமோ
விண்வெளியில் வாகனத்தில்
விரிகடலில் நாவாயில்
மண்ணகத்தில் மகிழ்வுந்தில்
மகிழ்வுடனே பயணிப்போம்
மாறுகின்ற சூழ்நிலைகள்
மிரட்டுகின்ற சுற்றத்தினர்
வாரிவிடும் நட்புகளை
வாகாக எதிர்கொள்வோம்
திரும்பாத பிறவியிது
திறம்படவே வாழ்ந்திடுவோம்
கரும்பெனவே இனித்திடுவோம்
களித்திடுவோம் காலமெல்லாம் !!
-யாதுமறியான்.
கலங்காதே தோழி !
—
கலங்காதே தோழி
காதலொரு சூதாட்டம்
மயங்காதே நீயும்
மனதிலென்ன போராட்டம் /!
இளவயதின் நட்புகளோ
ஏமாற்றம் தந்திடலாம்
இளகாது சிந்தித்தால்
ஏற்றவழி தென்படுமே !
உளம்வெதும்பி தஙறான
முடிவுகளைத் தேடாதே
களம்உனதே கண்டிப்பாய்க்
கண்டிடுவாய் வெற்றிகளே !
ஒருவனையே மணந்தேநீ
உவகையுடன் வாழ்ந்திடலாம்
திருமணமும் புரிந்தேதான்
குடும்பமெனத் திகழ்ந்திடலாம் !
- யாதுமறியான் .
காப்பேன் அறம்பாடி..!
01 / 07 / 2025
பாட்டன் முப்பாட்டன் பேசிய தமிழே
தொல்காப்பியன் இலக்கணம் வகுத்த தமிழே
வள்ளுவன் கம்பன் போற்றிய இயற்றமிழே
பாணர்கள் பாடி வளர்த்த உயர் தமிழே
தமிழே..தமிழே.. நீ வாழி
தமிழே ..தமிழே..உன்புகழ் பாடி
தமிழே..தமிழே..என் உயிர் நாடி
தமிழே.. தமிழே..காப்பேன் அறம்பாடி
ஏட்டில் எழுதிய கடுந் தமிழை
எளிதாய் எளியோர்க்கும் புரிந்திடவே
இலக்கண விலங்கை உடைத்தே நாளும்
இயல்பாய் எழுத்தில் பதித்தானே
முறுக்கு மீசை முண்டாசும்
சிவந்து ஒளிர்ந்த கண்களுமாய்
சுதந்திர தீயை வளர்த்தானே
சிவந்த ஆங்கில அதிகாரத்தை
தமிழால் அடக்கி ஓடவிட்டானே
பாரதம் காத்த பாரதி
பாடி
வரைந்தேனடா...!
25 / 06 / 2025
ஆடி ரசித்திட இவ்வுலகம் பெரியதடா
அடங்கி ஒடுங்கிட ஆறடி போதுமடா
ஆணவக் கொம்பு முளைத்தடா - என்
ஆறறிவும் மயங்கி போனதடா
சாதி சமயங்கள் வெறும் வேஷமடா - நம்
வாழ்வை நாசமாக்கும் பூதமடா
இளமை வாழ்வில் இன்பமடா - அதில்
காதல் வந்திடின் துன்பமடா
முதுமையில் வரும் காதலடா - நம்
வாழ்வினைத் தாங்கிடும் வேரடா
இறுதிவரை காதலிக்க வேண்டுமடா - அது
உறுதியாக நிலைத்திட வேண்டுமடா
நீர்த்துளியாய் வாழ்க்கை மின்னுமடா - அது
ஒருநொடியில் வெடித்து சிதறுமடா
இருக்கும் வரை சிரித்து மகிழ்ந்திடடா
அடுத்த பிறவி நம்கையில் இல்லையடா
பிறப்பொன்று இருந்தால் இறப்பொன்று இருக்கும்
புரி
மறுபடியும் கேள்விதான்.
25 / 06 / 2025
கேள்விகள்?
ஒன்றல்ல.. இரண்டல்ல..
பல கோடி கேள்விகள்
மலைபோல் என் முன்னே..!
விடை தேடி
அலைந்தேன்..அலைகிறேன்..
அலையப் போகிறேன்.
மரணம் வரை..
சில கேள்விகள் தப்பாயிருக்கின்றன
சில கேள்விகள் அபத்தமாயிருக்கின்றன
பல கேள்விகள் அர்த்தமற்றவைகளாயிருக்கின்றன
ஒவ்வொரு கேள்விகளுக்கும்
தனித்தனியே விடைதேடி
அலைகிறேன் மனம் திரிந்து.
விடை கிடைக்குமா?
இந்த கேள்வியைப் பிடித்து கொண்டு
நாளும் தொங்கிக்கொண்டு இருக்கிறேன்.
கேள்... உனக்கு கிடைக்கும்
தட்டு... கதவுகள் திறக்கப்படும்.
கிடைக்குமா?
திறக்குமா?
மறுபடியும் கேள்விதான்.
கடனுக்குக் கவலை இலவசம் !
—
கடனுக்குக் கவலை
கட்டாயம் இலவசமே
உள்ளதுடன் வாழ்ந்தாலே
உண்டாகும் நிம்மதிமே !
கைமாற்றாய்க் கொஞ்சம்
கைநீட்டி வாங்கினாலே
கைப்பற்றும் பழக்கமது
கடைசிவரைத் தொற்றிடுமே !
வீடுநிலம் அடகுவைத்து
விவசாயம் செய்தாலோ
விளங்காதே குடும்பம்தான்
வேதனையில் மூழ்கிடுமே !
தங்கத்தைப் பணயமாக்கித்
தமையனுக்குச் செலவிட்டால்
வங்கிக்காரன் வட்டிக்காக
வாசலிலே கத்துவானே !
வாகணங்கள் அநுபவிக்க
தவணைக்குப் பெற்றதெலாம்
சோகத்தைக் கொடுத்துவிட்டு
நிறுவனத்தில் நிற்குறதே !
கழித்தலெனும் கணக்கினிலே
கற்றதனால் வந்தவினை
காலமெலாம் தொடருதையா
கடப்பதற்கோர் வழியில்லையா !!
1/3- இயேசு கிறித்து மதுவை எதிர்த்தாரா ?
+++++
திருக்குறளில் கள்ளுண்ணாமை, என்ற தலைப்பில், மதுவினை அருந்தக்கூடாது என்று திருவள்ளுவர் ஆணித்தரமாகப் பத்துக் குறட்பாக்களைப் படைத்துள்ளார் . கள் என்ற பதத்தையே அவர் பயன்படுத்தி இருந்தாலும், அது பொதுவாக, போதை தரும் மது வகைகளையே குறிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து
இல்லை .
குறள் எண் 921 இல்
உட்கப் படாஅர் ஒளியிழப்பார் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார் .
அதாவது, கள்ளின் மேல் விருப்பம் கொண்டு நடப்பவர் எக்காலத்திலும் பகைவரால் அஞ்சப்படார். தமக்கு உள்ள புகழையும் இழந்து விடுவார் . எனவே, சான்றோரால் மதிக்கப்பட வேண்டும் என்றால் கள்ளை உண
முனகும் வள்ளுவர் !
—
நடைபாதை அமைத்தீர்கள்
நன்றி ! வெயில்மழைக்கு
நிழற்குடை செய்வித்தால்
செப்பிடுவேன் நன்றிகள்
பலகோடி !
-யாதுமறியான்.