யாதுமறியான் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : யாதுமறியான் |
இடம் | : சேலம் |
பிறந்த தேதி | : 17-Mar-2017 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 03-Feb-2022 |
பார்த்தவர்கள் | : 1550 |
புள்ளி | : 225 |
வாடா மலரே !
———-
சூடிடும் பூவெலாம்
சுருங்கிடும் மறுநாள் /
வாடிடா மலருன்னை
வரித்தேன் துணையென /
ஆண்டுகள் சருகென
அகன்றிட்ட போதிலும் /
திகட்டிடா அன்பிற்கு
தினந்தினம் சரங்களே /
வயதென்ன செய்திடும்
வாலிபம் நெஞ்சிலே /
மயங்காத நேசம்தான்
மானுடர் வாழ்க்கையே !!
-யாதுமறியான்.
பண்பினை வளர்த்திடு !
❣️❣️❣️
செல்வமும் கல்வியும்
சேர்த்திடு இளமையில்
பல்லுயிர் போற்றிடும்
பண்பினை வளர்த்திடு
செயல்களும் வீரமும்
செருக்கென மதித்திடு
அயலவர் பகைவரை
அணைத்திடப் பழகிடு
பிறரது பொருட்களால்
பிழைத்திட எண்ணாதே
அறத்தினை மீறிடும்
அகந்தைக் கொள்ளாதே
உலகினில் வாழ்வது
ஒருமுறை உணர்ந்திடு
செலவிடும் காலத்தைச்
சிறப்பொடு அளந்திடு
-யாதுமறியான்.
தடைகளைத் தகர்த்திடு
💪💪💪💪💪💪💪💪💪
தயக்கம் வேண்டாம் தடைகளை
உடைத்திடு /
உடைத்திடு பழைமையின் உளுத்த
விதிகளை /
விதிகளை மாற்றிடு விந்தைகள்
பிறந்திடும்/
பிறந்திடும் நாட்டினில் பேணிடு
சமத்துவம் /
சமத்துவம் சுதந்திரம் சகோதரத்துவம்
ஓங்கட்டும் /
ஓங்கட்டும் உயர்ந்ததோர் ஒப்பில்லா
சமுதாயம் /
சமுதாயம் உம்மையே சரணென்று
பணிந்ததே /
பணிந்ததே காத்திடு தயக்கம்
வேண்டாம் /
-யாதுமறியான் .
புதுமையின் நாயகனே !!
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
அச்சம் அழித்தொழித்த
அஞ்சா பெருங்கவியே /
துச்சம் என்றுயிரைத்
துடைத்து எறிந்தவனே /
ஞாயிறே மறையாத
ஆங்கிலப் பேரரசை /
விடுதலைக் கவிதைகளால்
வீரமொடு எதிர்த்தாயே /
பாப்பா பாட்டோடு
பாஞ்சாலி சபதமும் /
எப்போதும் இனித்திடுமே
கண்ணன் குயில்பாட்டும் /
மதுரகவி படைத்த
புதுமையின் நாயகனே /
அமுதத் தமிழினிலே
தினம்பாடி வாழ்த்துவொமே !!
-யாதுமறியான்.
கண்கள் பேசும் கதைகள் யாவும்
காவியமாய் என் நெஞ்சில் நிறையும்
தென்றல் வீசி கலையும் கூந்தல்
ஓவியமாய் என் கனவில் விரியும்
அசையா உதட்டின் மௌன மொழிகள்
அசைத்துப் போடும் என்னிதய கதவை
பசையாய் வந்து ஒட்டிக் கொண்டு
இசையாய் மீட்டும் என்னுயிரின் பாட்டை..
காதில் ஆடும் ஜிமிக்கி இரண்டும்
காதோடு பேசும் காதல் சுவரங்கள்
காலத்தால் அழியாது நிலைத்து நிற்கும்
கோலத்தை மாற்றிடும் இயற்கை வரங்கள்
இலக்கண வரம்புகள் இதற்கு இல்லை
இலக்கிய வரம்புகள் முடிவதும் இல்லை
துலக்கிய குத்து விளக்காய் மின்னும்
அழகியே..அன்பே...ஆருயிரே...
என்னுடன் என்றும் இணைந்தே நீயும்
வந்திட வேண்டும் வாழ்நாள் முழுது
மண்ணிலே புறப்பட்டு
விண்ணிலே கோலமிடச்
சென்ற சந்திராயனே 3 யே
சிம்ம முகம் கொண்ட நான்முக
பாரத இலட்சனையை பாதத் தடமாக
பாட்டி வடை சுட்ட நிலாவில் நீ பதி
விக்ரம் என்றால் வெற்றி
இந்தியா என்றால் அமைதி
சாப்ட் லேண்டிங் இல் சாதனை
செய்து புதுச் செய்தி தருவாயாக
புன்னகையால் பூவுலகிற்கு.
காத்துக் கிடைக்கிறோம்
காணொளியில் காண நீ காற்றில்லா
சந்திரனில் தந்திரமாக தரை இறங்குவதைக் காண
அடேய் சந்திராயன் 3 எனும் எம் மந்திரமே ...
நீ இதுவரை சாதித்தது ஏராளம்
நீ இனி சாதிக்க இருப்பது தாராளம்
உனை மகனாக பெற்ற இஸ்ரோ
தாயும் இந்தியா எனும் தந்தையும்
உளம்மகிழ உன்னதம் கொள்வாயா
கண்ணோரம் கசியும் மௌனம் !!
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
கண்ணோரம் கசியும்
மௌனம் காதலோ /
விண்ணோடு நீந்தும்
மேகம் தூதனோ /
உயிரோடு சேர்ந்த
பின்னும் ஊடலோ /
பயிராகி வளர்ந்த
எண்ணம் வாடுமோ /
சுழலும் உலகம்
நின்று போகலாம் /
அழகின் சிரிப்பு
அகன்று போகுமோ /
இதய அறைகள்
நான்கின் உள்ளும் /
புதிய வரவாய்
நிறைந்த வெள்ளமோ/
மாற்றம் ஒன்றே
மாறா தென்பார் /
நேற்றும் என்றும்
நேசம் மாறாதே !!
-யாதுமறியான்.
தூரிகை வரைந்த காரிகையே !!
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
தூரிகை வரைந்த காரிகையே பேரெழிலே /
பேரெழிலே இந்தப் பேருலகின் அதிசயமே /
அதிசயமே கொஞ்சும் அழகியலே புதியவளே /
புதியவளே நெஞ்சில் புகுந்தவளே தேவதையே /
தேவதையே விண்ணின் மின்மினியே பூமகளே /
பூமகளே புகழும் பொன்மகளே தமிழணங்கே /
தமிழணங்கே என்றும் தழைப்பவளே நிறைமதியே /
நிறைமதியே ஓவியமாய் நிலைப்பாயே தூரிகையால் //
-யாதுமறியான்.