யாதுமறியான் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : யாதுமறியான் |
இடம் | : சேலம் |
பிறந்த தேதி | : 17-Mar-2017 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 03-Feb-2022 |
பார்த்தவர்கள் | : 1211 |
புள்ளி | : 225 |
விழிகளின் தீப்பொறி...
காய்ந்த மூங்கில்களின்
கடைசலில்
கனல் தெரித்துவிடுகின்றது !
சிக்கிமுக்கிக் கற்களின்
உரசல்களோ
தீயைக் கக்கிவிடுகின்றன !
மோதும் வாள்களும்
தீப்பொறி சிந்துகின்றன!
விரியும்
விழிகளின் வீச்சிலோ
சில
விபரீதங்களே நடந்துவிடுகன்றன !
-யாதுமறியான்.
-யாதுமறியான்.
கனவான காதல்..
-----------------
கனிவான உள்ளத்தில் கனிந்திட்ட பாசம் /
இனிதான துவக்கத்தின்
இயல்பான நேசம் /
இரவில்லைப் பகலில்லை
எப்போதும் உன்னை /
வரவென்று வைத்தேனே
வாழ்வெல்லாம் என்னில்/
துயரங்கள் மிகுந்தாலும்
துறப்பேனோ நின்னை /
உயரங்கள் சென்றாலும்
உதிர்ப்பேனோ உயிரே/
இதயங்கள் இணைவதோ
இயற்கையின் கடமை/
உதயங்கள் ஒவ்வொன்றும்
உனக்கானப் பெருமை/
கனவான நம்காதல்
நனவாகும் போது /
கனலான
எதிர்ப்பெல்லாம்
கானலாய்ப் போகுமே!
-யாதுமறியான்.
ஆண்டவனுக்கே...
🌹🌹🌹
அந்த காலத்திலே ஓர்
ஆண்டவன் இருந்தாராம்!
அவரது தோட்டத்தின்
நன்மைதீமை அறியும் மரத்தின்
கனியை புசிக்கக் கூடாதெனக்
கட்டளை இட்டாராம் !
அரவத்தின் அறிவுரைப்படி
அம் மரத்துக்
கனி ஒன்றைப் பறித்துப் புசித்த பெண்
அது சுவையானதானதால்
தன்
கணவனுக்கும் கொடுக்க
அவனும் புசித்து மகிழ்கிறான்.
ஆத்திரம் கொண்ட
ஆண்டவன்
அந்த ஒற்றைக் கனியைப்
பறித்தமைக்கே
சாகுமாறு சாபம் இடுகிறார்!
பாவம் அவர் !
மக்களைப் பெற்ற மனிதர்கள்
கோடானு கோடி பழங்களைப்
பறித்துப் பறித்து தின்று
பசியாறுகிறார்கள்!!
திகைத்துத் தடுமாறுகிறார் ஆண்டவன்!!
-யாதுமறியான்.
இதயங்கள் இணைந்தால்...
🌺🌺🌺
தொடுவானம் தாண்டி
தொலை தூரம் கடந்தாலும்
மெலிதாக செவி வீழும் - நின்
சிறு பெயரும் சிலிர்க்கச் செய்யும் ;
ஓயாத கடலலையாய் - நின்
நினைவலைகள் நெஞ்சகச் சுவர்தாக்கும் ;
நிலைகுத்தி நிற்கின்ற
விழியிரண்டில்
நெடிதுயரும் - நின்
சிற்றுருவம் வானம் வரை ;
எண்ணங்கள் ஒன்றாகி
இதயங்கள் இணைந்தாலே
தூரங்கள் இல்லாத
காலங்கள் விடிந்திடுமே!!
-யாதுமறியான்.
கண்ணோரம் கசியும் மௌனம் !!
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
கண்ணோரம் கசியும்
மௌனம் காதலோ /
விண்ணோடு நீந்தும்
மேகம் தூதனோ /
உயிரோடு சேர்ந்த
பின்னும் ஊடலோ /
பயிராகி வளர்ந்த
எண்ணம் வாடுமோ /
சுழலும் உலகம்
நின்று போகலாம் /
அழகின் சிரிப்பு
அகன்று போகுமோ /
இதய அறைகள்
நான்கின் உள்ளும் /
புதிய வரவாய்
நிறைந்த வெள்ளமோ/
மாற்றம் ஒன்றே
மாறா தென்பார் /
நேற்றும் என்றும்
நேசம் மாறாதே !!
-யாதுமறியான்.
தூரிகை வரைந்த காரிகையே !!
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
தூரிகை வரைந்த காரிகையே பேரெழிலே /
பேரெழிலே இந்தப் பேருலகின் அதிசயமே /
அதிசயமே கொஞ்சும் அழகியலே புதியவளே /
புதியவளே நெஞ்சில் புகுந்தவளே தேவதையே /
தேவதையே விண்ணின் மின்மினியே பூமகளே /
பூமகளே புகழும் பொன்மகளே தமிழணங்கே /
தமிழணங்கே என்றும் தழைப்பவளே நிறைமதியே /
நிறைமதியே ஓவியமாய் நிலைப்பாயே தூரிகையால் //
-யாதுமறியான்.
எத்தனை முறை பார்த்தாலும்
அலுக்காத உன் இளமை...
ஒவ்வொருமுறை பார்க்கும்போதும்
வற்றாத உன் வளமை..
உன் முகம் என்ன பூத்த தாமரையா?
இல்லையடி பெண்ணே
உன்னை கண்டபின்புதான்
பூக்குமே என் முகத்தாமரை.
நீ துள்ளி குதித்துப் போகும்போது
ஒவ்வொருமுறையும்
என்னுள்ளே
பூகம்பம் வெடிக்குதடி.
கன்னி வெடியே
உன்னைத் தழுவிவிட்டேன்
எங்கே விட்டுவிட்டால்
நான் சிதறிப் போய்விடுவேனோ...
தெரியவில்லை.
ஒன்றுமட்டும் நிச்சயம்
சிதறினாலும்
ஒவ்வொரு சிதறலிலும்
உன்னோடு சேர்ந்தே இருப்பேனே.
நீ எந்தன் வரமா? சாபமா?
எதுவாயிருந்தாலும்
நீ எந்தன் வாழ்வல்லவா?
ஸ்டேட்டஸ் காதல்
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
தொடர்பில்லா தொடர்பாகத்
தொடர்ந்துவரும் விந்தை !
திறவாதக் கதவுகளுள்
புகுந்துவிடும் விந்தை !
மறைவான எண்ணங்களை
மந்தையிலே கூட்டும் !
திரைமறைவின் சிந்தையெலாம்
தெருவினிலே காட்டும் !
இனம்தாண்டி மொழிதாண்டி
எவ்விடமும் உலவும் /
இதயத்தைத் திறந்து வைத்தால்
உன்னிடமும் நெருங்கும் !
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்!!
-யாதுமறியான்.