யாதுமறியான் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : யாதுமறியான் |
இடம் | : சேலம் |
பிறந்த தேதி | : 17-Mar-2017 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 03-Feb-2022 |
பார்த்தவர்கள் | : 2174 |
புள்ளி | : 345 |
முடிவில்லாத கற்பனைகள் !
-
முடிவில்லாத கற்பனைகள்
மூடர்களின் சாத்திரங்கள் !
அடியோடு மாற்றுங்கள்
செயலூக்கும் சூத்திரங்கள் /!
முயற்சியும் உழைப்பும்
முன்னேற்றும் நிச்சயம் !
வியர்வைக்கு என்றுமே
விலையுண்டு சத்தியம் !
-யாதுமறியான்.
அம்மா!
-
கனவுகளைக் கருவாக்கி
என்னைத் தந்தாள்
மனமெங்கும் கோட்டைகட்டி
மகனை வைத்தாள் !
பள்ளிக்கு அனுப்பியவள்
பெருமை கொண்டாள்
பலர்புகழும் வேளையிலே
தலையும் குனிந்தாள் !
கல்லூரி வாசலையான்
மிதித்த போது !
கர்வத்தால் தலைநிமிர்ந்து
நடக்க லானாள் !
அரசுப்பணி ஏற்றேநான்
அமர்ந்த நாளில்
அமைதியினை ஆடையென
உடுத்திக் கொண்டாள் !
பதவிகளில் புகழ்மழையில்
நானும் நனைய
பாசமிகு பெண்ணொருத்தி
மனைவி யானாள் !
வாழுகின்ற நாட்கலெல்லாம்
எனக்காய் வாழ்ந்த
வணங்கத்தகு தெய்வத்திற்கு
யாது செய்வேன் !
-யாதுமறியான்.
போர் வேண்டாம் !
—
எல்லையில் துப்பாக்கிச்
சண்டை - ஐயகோ !
தொல்லையாம் போர்வந்து
கொல்லுமே ஆளை !
அப்பாவி மக்களைக்
கொன்று - அந்தத் !
தப்பான கூட்டமும்
போடுமே ஆட்டம் !
மதச்சண்டை இனச்சண்டை
நிலச்சண்டை - இன்னும்
எதெற்கென்று தெரியாது
இருநாட்டுப் பகைமை !
குற்றமுமே அறியாத
மக்களை - எதிரியின்
ஏவு கணைகளும்
தாக்கியே கொல்லுமே !
என்னதான் பாவங்கள்
செய்தாரோ - இந்த
எளியோரின் உயிருக்கு
மதிப்பேதும் இல்லையோ !
போதுமே போரெல்லாம்
வேண்டாம் - இனியேனும்
புத்தரின் காந்தியின்
பொற்காலம் போதுமே !
-யாதுமறியான்.
இயேசு கிறித்து அருளற்றவரா ? ௩/௧
—
இயேசு கிறித்து தன்னுடைய நற்செய்தி பணிக் காலத்தில், தன்னிடம் வந்த ஏராளமான மக்களுக்கு, அவர்களது பசியைத் தணிக்க மீனையும் , அப்பத்தையும் உண்பதற்கு அளித்தார் என நற்செய்தி நூல்கள் கூறுகின்றன .
" மக்களைப் புல்தரையில் அமருமாறு ஆணையிட்டார். அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, கடவுளைப் போற்றி, அப்பங்களைப் பிட்டுச் சீடர்களிடம் கொடுத்தார். சீடர்களும் மக்களுக்குக் கொடுத்தார்கள்.
அனைவரும் வயிறார உண்டனர். எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர். "
( மத்தேயு 14: 19- 20 )
சிறு மீன்கள் சிலவும் அ
முனகும் வள்ளுவர் !
—
நடைபாதை அமைத்தீர்கள்
நன்றி ! வெயில்மழைக்கு
நிழற்குடை செய்வித்தால்
செப்பிடுவேன் நன்றிகள்
பலகோடி !
-யாதுமறியான்.
#குடியரசு தினம் சிறப்பு கவிதை...
படைப்பு கவிதை ரசிகன்
குமரேசன்
டாக்டர் அம்பேத்கர்
தலைமையில் எழுதப்பட்ட
சட்டப் புத்தகம்
வெளியீட்டு தினத்தையே!
குடியரசு நாளாகக்
கொண்டாடப்படுகிறது.....
உலகிலேயே !
சட்ட புத்தகச் சிகரங்களில்
இந்தியாவின்
சட்ட புத்தகம் தான்
எவரெஸ்ட் சிகரம்.....
சட்டம்
தன் கடமையை
தவறாமல் செய்யும்
லஞ்சம் கொடுக்க விட்டால்....
அரசியல்வாதிகளின்
செல்லப்பிராணிகள்
என் நாட்டு சட்டங்கள்....
காவலர்கள்
சிறையில் வைத்து
பூட்டி இருப்பது
சட்டங்களைத்தான்....
நீதி தேவதையின்
கண்களை
கருப்பு துணியால் மட்டுமல்ல....
காதுகளை
கருப்பு பணத
வாடா மலரே !
———-
சூடிடும் பூவெலாம்
சுருங்கிடும் மறுநாள் /
வாடிடா மலருன்னை
வரித்தேன் துணையென /
ஆண்டுகள் சருகென
அகன்றிட்ட போதிலும் /
திகட்டிடா அன்பிற்கு
தினந்தினம் சரங்களே /
வயதென்ன செய்திடும்
வாலிபம் நெஞ்சிலே /
மயங்காத நேசம்தான்
மானுடர் வாழ்க்கையே !!
-யாதுமறியான்.
கண்கள் பேசும் கதைகள் யாவும்
காவியமாய் என் நெஞ்சில் நிறையும்
தென்றல் வீசி கலையும் கூந்தல்
ஓவியமாய் என் கனவில் விரியும்
அசையா உதட்டின் மௌன மொழிகள்
அசைத்துப் போடும் என்னிதய கதவை
பசையாய் வந்து ஒட்டிக் கொண்டு
இசையாய் மீட்டும் என்னுயிரின் பாட்டை..
காதில் ஆடும் ஜிமிக்கி இரண்டும்
காதோடு பேசும் காதல் சுவரங்கள்
காலத்தால் அழியாது நிலைத்து நிற்கும்
கோலத்தை மாற்றிடும் இயற்கை வரங்கள்
இலக்கண வரம்புகள் இதற்கு இல்லை
இலக்கிய வரம்புகள் முடிவதும் இல்லை
துலக்கிய குத்து விளக்காய் மின்னும்
அழகியே..அன்பே...ஆருயிரே...
என்னுடன் என்றும் இணைந்தே நீயும்
வந்திட வேண்டும் வாழ்நாள் முழுது