யாதுமறியான் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : யாதுமறியான் |
இடம் | : சேலம் |
பிறந்த தேதி | : 17-Mar-2017 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 03-Feb-2022 |
பார்த்தவர்கள் | : 2183 |
புள்ளி | : 356 |
வரைந்தேனடா...!
25 / 06 / 2025
ஆடி ரசித்திட இவ்வுலகம் பெரியதடா
அடங்கி ஒடுங்கிட ஆறடி போதுமடா
ஆணவக் கொம்பு முளைத்தடா - என்
ஆறறிவும் மயங்கி போனதடா
சாதி சமயங்கள் வெறும் வேஷமடா - நம்
வாழ்வை நாசமாக்கும் பூதமடா
இளமை வாழ்வில் இன்பமடா - அதில்
காதல் வந்திடின் துன்பமடா
முதுமையில் வரும் காதலடா - நம்
வாழ்வினைத் தாங்கிடும் வேரடா
இறுதிவரை காதலிக்க வேண்டுமடா - அது
உறுதியாக நிலைத்திட வேண்டுமடா
நீர்த்துளியாய் வாழ்க்கை மின்னுமடா - அது
ஒருநொடியில் வெடித்து சிதறுமடா
இருக்கும் வரை சிரித்து மகிழ்ந்திடடா
அடுத்த பிறவி நம்கையில் இல்லையடா
பிறப்பொன்று இருந்தால் இறப்பொன்று இருக்கும்
புரி
மறுபடியும் கேள்விதான்.
25 / 06 / 2025
கேள்விகள்?
ஒன்றல்ல.. இரண்டல்ல..
பல கோடி கேள்விகள்
மலைபோல் என் முன்னே..!
விடை தேடி
அலைந்தேன்..அலைகிறேன்..
அலையப் போகிறேன்.
மரணம் வரை..
சில கேள்விகள் தப்பாயிருக்கின்றன
சில கேள்விகள் அபத்தமாயிருக்கின்றன
பல கேள்விகள் அர்த்தமற்றவைகளாயிருக்கின்றன
ஒவ்வொரு கேள்விகளுக்கும்
தனித்தனியே விடைதேடி
அலைகிறேன் மனம் திரிந்து.
விடை கிடைக்குமா?
இந்த கேள்வியைப் பிடித்து கொண்டு
நாளும் தொங்கிக்கொண்டு இருக்கிறேன்.
கேள்... உனக்கு கிடைக்கும்
தட்டு... கதவுகள் திறக்கப்படும்.
கிடைக்குமா?
திறக்குமா?
மறுபடியும் கேள்விதான்.
கடனுக்குக் கவலை இலவசம் !
—
கடனுக்குக் கவலை
கட்டாயம் இலவசமே
உள்ளதுடன் வாழ்ந்தாலே
உண்டாகும் நிம்மதிமே !
கைமாற்றாய்க் கொஞ்சம்
கைநீட்டி வாங்கினாலே
கைப்பற்றும் பழக்கமது
கடைசிவரைத் தொற்றிடுமே !
வீடுநிலம் அடகுவைத்து
விவசாயம் செய்தாலோ
விளங்காதே குடும்பம்தான்
வேதனையில் மூழ்கிடுமே !
தங்கத்தைப் பணயமாக்கித்
தமையனுக்குச் செலவிட்டால்
வங்கிக்காரன் வட்டிக்காக
வாசலிலே கத்துவானே !
வாகணங்கள் அநுபவிக்க
தவணைக்குப் பெற்றதெலாம்
சோகத்தைக் கொடுத்துவிட்டு
நிறுவனத்தில் நிற்குறதே !
கழித்தலெனும் கணக்கினிலே
கற்றதனால் வந்தவினை
காலமெலாம் தொடருதையா
கடப்பதற்கோர் வழியில்லையா !!
1/3- இயேசு கிறித்து மதுவை எதிர்த்தாரா ?
+++++
திருக்குறளில் கள்ளுண்ணாமை, என்ற தலைப்பில், மதுவினை அருந்தக்கூடாது என்று திருவள்ளுவர் ஆணித்தரமாகப் பத்துக் குறட்பாக்களைப் படைத்துள்ளார் . கள் என்ற பதத்தையே அவர் பயன்படுத்தி இருந்தாலும், அது பொதுவாக, போதை தரும் மது வகைகளையே குறிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து
இல்லை .
குறள் எண் 921 இல்
உட்கப் படாஅர் ஒளியிழப்பார் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார் .
அதாவது, கள்ளின் மேல் விருப்பம் கொண்டு நடப்பவர் எக்காலத்திலும் பகைவரால் அஞ்சப்படார். தமக்கு உள்ள புகழையும் இழந்து விடுவார் . எனவே, சான்றோரால் மதிக்கப்பட வேண்டும் என்றால் கள்ளை உண
2/3 — இயேசு மதுவை எதிர்த்தாரா ?
—
இது முதல் இறையாட்சி வரும்வரை, திராட்சைப் பழ இரசத்தைக் குடிப்பதில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.
பின்பு அவர் அப்பத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து, "இது உங்களுக்காகக் கொடுக்கப்படும் எனது உடல். எனது நினைவாக இவ்வாறு செய்யுங்கள்" என்றார்.
அப்படியே உணவு அருந்திய பின்பு அவர் கிண்ணத்தை எடுத்து, "இந்தக் கிண்ணம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற எனது இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை என்றார்.
( லூக்கா 22: 16- 20 )
இங்கேயும் இயேசு தன் சீடர்களுக்குத் திராட்சை இரசத்தைப் பகிர்ந்து உண்ண அளி
௩/௩ - இயேசு மதுவை எதிர்த்தாரா ‘
—
யாதுமறியான்.
—
இயேசு கிறித்து மது அருந்தியதாக பைபிளில் எங்கும் குறிப்பிடப்படவில்லை .
ஆனால் திராட்சை ரசத்தை அவர் பருகி இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. கானாவூர் திருமணத்தின் போதும் சரி, அவரது இரவு உணவின் போதும் சரி, திராட்சை ரசத்தை பிறர் உண்பதற்கு அவர் பகிர்ந்து அளித்துள்ளார் .
மேலும், யூதர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது இயேசு
" எப்படியெனில், யோவான் வந்தபோது அவர் உண்ணவுமில்லை, குடிக்கவுமில்லை. இவர்களோ "அவன் பேய்பிடித்தவன்" என்கிறார்கள்.
( மத்தேயு 11:18 )
மானிட மகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார்; குடிக்கிறார். இவர்களோ, "இம் மனிதன் பெருந்தீனிக்கார
முனகும் வள்ளுவர் !
—
நடைபாதை அமைத்தீர்கள்
நன்றி ! வெயில்மழைக்கு
நிழற்குடை செய்வித்தால்
செப்பிடுவேன் நன்றிகள்
பலகோடி !
-யாதுமறியான்.
#குடியரசு தினம் சிறப்பு கவிதை...
படைப்பு கவிதை ரசிகன்
குமரேசன்
டாக்டர் அம்பேத்கர்
தலைமையில் எழுதப்பட்ட
சட்டப் புத்தகம்
வெளியீட்டு தினத்தையே!
குடியரசு நாளாகக்
கொண்டாடப்படுகிறது.....
உலகிலேயே !
சட்ட புத்தகச் சிகரங்களில்
இந்தியாவின்
சட்ட புத்தகம் தான்
எவரெஸ்ட் சிகரம்.....
சட்டம்
தன் கடமையை
தவறாமல் செய்யும்
லஞ்சம் கொடுக்க விட்டால்....
அரசியல்வாதிகளின்
செல்லப்பிராணிகள்
என் நாட்டு சட்டங்கள்....
காவலர்கள்
சிறையில் வைத்து
பூட்டி இருப்பது
சட்டங்களைத்தான்....
நீதி தேவதையின்
கண்களை
கருப்பு துணியால் மட்டுமல்ல....
காதுகளை
கருப்பு பணத