C. SHANTHI - சுயவிவரம்

(Profile)



பரிசு பெற்றவர்
இயற்பெயர்:  C. SHANTHI
இடம்:  CHENNAI
பிறந்த தேதி :  07-Jun-1963
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  10-Oct-2011
பார்த்தவர்கள்:  11918
புள்ளி:  5512

என்னைப் பற்றி...

இலக்கியம் படிக்கவில்லை. இருந்தும் கவிதை எழுதும் ஆசையில் இங்கே என் கிறுக்கல்கள்....

என் படைப்புகள்
C. SHANTHI செய்திகள்
C. SHANTHI - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Oct-2025 7:49 pm

/#அளவடி வெண்கலிப்பா

(பொறுப்பில் துவக்கி வெறுப்பில் முடியுமாறு)

பொறுப்புள்ளார் உலகத்தில் புதுமைகளைப் புகுத்திடுவார்
பொறுமைகள் மிகக்கொண்டு புரிந்திடுவார் பெரும்பணியும்
நறுமணந்தான் அவர்வாழ்வில் நடைபோட்டுத் திரிந்திருக்கும்
விரும்பியுழைப் பவர்க்கில்லை
வெறுப்பு . !

#சொ.சாந்தி

மேலும்

C. SHANTHI - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Oct-2025 7:45 pm

வாழ்தல் இனிது

ஆறாமறிவுடன் மண்ணி லுதித்தோம்
ஆற்றல் கொண்டவர் நாமானோம்
ஏறுமுகத்தில் வாழ்க்கை
என்றால்
இன்பம் சூழ வாழுகின்றோம்..!

இறங்கு முகமெனும்
இருளுமுண்டு
இன்னல் பேய்கள்
எதிர்க்குந் திரண்டு
நிறைத்திடு மனதில்
நம்பிக்கை பலமாய்
நெடிய துன்பத்தை
உடைத்திடும் பொடியாய்..!

முயற்சிக ளிங்கே
ஏணிப் படிகள்
முன்னேறு உழைப்பில்
முற்றத்தில் விடியல்..
இயன்ற வரையில்
வியர்வை சிந்து
இனிய வாழ்க்கை
சூழும் உவந்து..!

நேர்வழி சென்றால்
பாதைகள் முள்ளாம்
நிறைமதி கொண்டு
அவ்வழி வெல்வாய்
பாரினில் நம்மைப்
பலதுயர் வளைக்கும்
பலமுடன் அதைமுறி
நல்லின்பம் நிலைக்கும்..!

பிறப்பினை யறியோம்
இறப்ப

மேலும்

C. SHANTHI - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Oct-2025 9:19 pm

#கவிதை வருமா…? எப்போதெல்லாம்..?

நிலம் நோக்கா நீள் விழியாள்
கணம் நோக்கும் பார்வையிலே
உளம் புகுந்த நொடி தன்னில் - விரல்
பிடித்து வரும் கவிதையடி..!

அழும் மழலை அடக்கிடவே
சேர்த்தணைக்கும் வேளையிலும்
தூளியிலே ஆட்டுகையில்
துள்ளலுடன் தாலினிலே
ஆடிவரும் கவிதையடி..!

ஆண்டவனின் அருள் கோலம்
ஆலயத்தில் கண்டுவிட்டால்
வேண்டுதலை வழி மறித்து - மெய்
சிலிர்க்க வரும் கவிதையடி..!

ஏமாற்றம் துரோகமெல்லாம்
சூழ வரும் வேளையிலே
மையம் கொண்ட புயலைப்போல்
சுழன்று வரும் கவிதையடி..!

நீண்ட வானம் நிலவு காண
கண்சிமிட்டும் மீன்கள் காண
சிந்தையிலே சந்தம் கூட்டி -தாள்
பந்தியிலே படையலிடும் கவிதையடி..!

மேலும்

வணக்கம் சொ.சாந்தி அவர்களே ஆஹா எப்போ வரும் கவிதை தலைப்பே மிகவும் அருமை.. ஒரு கவிஞனுக்கு காட்சிகளை கண்டவுடன் தடையில்லாமல் கற்பனை ஊற்று பிறந்திட பொங்கிவரும் கவிதை... வாழ்த்துகள். வாழ்க நலமுடன்... 30-Oct-2025 1:17 pm
கருணை கொண்ட கவிஞனுக்கு காட்சியெல்லாம் கவிதை தரும்..! ---அழகிய கவிதை கற்பனை கொண்ட கவிஞனுக்கு என்று அமைக்கலாம் 30-Oct-2025 9:25 am
C. SHANTHI - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Oct-2025 11:42 am

கீழடி

தொல்லியலின் மேட்டினடி தொன்மைத்தமிழ் பேசுதே
கல்லொடுமண் தோன்றியநம் தமிழலைதான்ஆஎ வீசுதே
மூத்தகுடி நாகரிகம் கொண்ட தமிழ் நாட்டிலே
மூடிமூடி மறைத்தாலும் முளைத்து விருட்ஷ மாகுமே ..!

சுட்டச்செங்கல் சுண்ணாம்பில் செம்மாந்தக் கட்டடம்
எட்டிஎவர் பிடித்திடுவார் எங்கள்
தொழில்நுட்பமும்
வட்டிலிலும் தமிழெழுதி வாழ்ந்திருந்த கட்டமாம்
வெற்றிக்கொடி ஏற்றிவைக்கும் வல்லத் தமிழ்க் கூட்டமாம்..!

வைகைக்கரை ஓரத்திலே வணிகம் செய்த பேரடா
மைத்தடவி மந்திரத்தால் உண்மை மறைப்பதேனடா
நாகரிகம் நாங்கள் வளர்க்க நவீனங்கள் கீழடி
ஏகபோகத் தமிழன்வாழ்வு வந்ததன்றோ மேலடி..!

பொன்மணியில் அணிகலன்கள் பூண்டிருந்தோம்

மேலும்

C. SHANTHI - C. SHANTHI அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Jul-2025 3:39 pm

#கன்னடத்துப் பைங்கிளிக்குக்
கண்ணீர் அஞ்சலி😢😢😢

கொஞ்சிக் கொஞ்சிப் பேசி னாளே
கொள்ளை யழகுப் பைங்கிளி
வஞ்சம் வைத்துத் தூக்கி னானோ
வானு லக எமனடி..!

அபி நயத்தின் களஞ் சியமே
அவச ரந்தான் ஏனம்மா
சபிக்கி றோமே கூற்று வனை
சயன கதியில் நீயம்மா..!

கன்ன டத்துப் பைங்கி ளியே
கண் திறந்து பாரம்மா
உன்னை எண்ணி கதற விட்டு
உறக்க மின்னும் ஏனம்மா..?

அசைந்து நடக்கும் தேர் நீயே
அசை யாதிருக்கத் தாங்கல
கசை யடிதான் மரணச் செய்தி
காது வலித் தீரல..!

அழகை யுருட்டிச் செய்த சிலை
அழுகை தந்து போவதோ
பிழை செய்த எமனை எவர்
பிடித் திழுத்துக் கொல்வரோ?

நெஞ்சம் திருடிப் போன வளே
நினைவில் நின்று வாழுவாய்

மேலும்

அருமை.. அருமை.. 23-Aug-2025 3:27 pm
#ஆழ்ந்த_இரங்கல் என்னோட அம்மாவின் மனம்கவர்ந்த தோழி #சரோஜாதேவி கன்னடத்து பைங்கிளியே கண்ணிறைந்த வடிவழகே வானேறி சென்றனையோ வண்ணமுகம் தான்துயில கோலமயில் பைங்கிளியை கொஞ்சியதோ தமிழுலகம் மிஞ்சியதோ நின்புகழே மண்ணுலகில் மல்லிகையாய் தேனுடலும் மண்துயில தேவதைநீ சென்றதென்ன? மலர்மாலை தலையணையாய் மண்ணுலகில் நீதுயில காதலினை வடிவழகில் காட்டிவிட்ட தோகைமயில் காதல்செய்யும் இளமைக்கு காட்டிவிட்டாய் திரைதுறையில் சேலையிலே நீநடித்த செந்தமிழ்ப் பூஞ்சோலைகள் ஆடுகின்ற பொம்மையில்லை அழகெடுத்த திருமகள்தான் போராடும் வாழ்வெனக்கு போதுமென சென்றனையோ வானேறி சென்றவுன்னை வணங்குகிறேன் தாயெனவே அழகான வடிவழகும் அமைதியான புன்னகையும் அச்சுதன் அவனடியில் அமைதியுடன் உறங்கிடம்மா 20-Jul-2025 7:26 am
C. SHANTHI - C. SHANTHI அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jul-2025 8:02 am

கண்ணீர்

துன்பங்கள் உலுக்கி எடுக்கையில்
நாசி தொட்டு கன்னம் வருடும்
நேயம் மிக்க தோழன்..!

மகிழ்ச்சியை பறை சாற்றி
விழி விளிம்புகளில்
பட்டுத் தெறித்து
உடைந்து போகும்
கண நேர முத்துக்கள்..!

துன்பங்களின் போதெல்லாம்
கொதித்து வரிக்கோடிட்டும்
இன்பங்கள் போதெல்லாம்
குளிர்ச்சியுடன் சிதறியும்
நிலை மாறும் பச்சோந்தி......!

சிரிப்பிற்கும் அழுகைக்கும்
அரிதாரம் பூசும் வேடதாரி..!

ஆறாத மனக் காயங்களை
ஆற்றுப்படுத்தும்
அற்புத களிம்பு ..!

அவமானச் சின்னமென்று
ஆண் விழிகளில் சிந்த மறுக்கும்
அதிசய அருவி...!

கோழையானவர்களை
மறைவிடம் கூட்டிச்சென்று
குமுற வைக்கும்

மேலும்

மிக்க நன்றி 23-Aug-2025 3:23 pm
வேடதாரி வாழ்க்கையிலே வந்துதித்த நீர்துளிகள் கண்ணீர் 20-Jul-2025 7:32 am
C. SHANTHI - C. SHANTHI அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Jul-2025 11:13 am

#எப்பக்கத்தில் வந்து புகுந்துவிடும் இந்தி

எம்மொழி செம்மொழி
எங்கிலும் எங்கிலும்
எங்கும் நடமிடல் காணீர்
தெம்பினைத் தரும்மொழி
எங்களின் தமிழ்மொழி
என்பதில் பெருமையே கேளீர்..!

எட்டுத் திசைகளில்
இனிதாய் ஒலிக்குது
இடையினில் புகுமோ இந்தி
மெட்டினை இசைக்கும்
மேதினி யில்தமிழ்
வென்றிடும் என்றுமே முந்தி..!

அந்தென பலமொழி
ஆயிரம் வந்தென்ன
ஆயுத மெம்மொழி யேந்தும்
செந்தமிழ்த் தாக்கிட
சிதறும் வடமொழி
சில்லாய் நொறுங்கிய டங்கும்...!

ஆதிக்கம் செய்திடும்
ஆதி காலமொழி
ஆருளர் இதனை மறுக்க
போதி மரத்தமிழ்
பொன்னான நூல்களில்
போற்றுவர் தாமும் சிறக்க..!

வேலிகள் பலவாம்
வித்தகர் பலர

மேலும்

மிக்க நன்றி சார் 23-Aug-2025 3:22 pm
பொருட் சுவை கவிச்சுவை...சுவையோ சுவை. வாழ்த்துக்கள் 21-Jul-2025 4:08 pm
C. SHANTHI - C. SHANTHI அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jul-2025 8:00 am

விதைப் பந்து..!

பிரபஞ்சத்தில் உலகத்தை
விதைத்தவனே கடவுள்
வெடிக்காத விதைக்குள்ளே
விளைபயிராய் பலஉயிர்கள்..!

மனிதவித்தின் மூலம்தான்
ஆதாமும் ஏவாள்
ஏராளம் எண்ணிக்கையில்
மனிதப்பயிர்கள் இந்நாள்..!

தந்தையவர் விதைப்பினில் நாம்
நடமாடும் செடிகள்
வளர்த்திடுதே கர்ப்பத்தில்
அன்னைத்தொப்புள் கொடிகள்..!

விரிந்தவானில் சூரியனை
விதைக்கிறதே வானம்
விளைச்சலில்தான் கிட்டிடுதே
வெளிச்சந்தான் நாளும்..!

சேமிப்பும் விதைப்பந்தே
ஆபத்தில் காக்கும்
சிக்கனதை விதைத்துப்பார்
சங்கடங்கள் தீர்க்கும்..!

சூட்சிகளை விதைத்தாரே
பிணங்கள்தான் விளைச்சல்
சகுனி வளர்த்த விதையினாலே
சகலருக்கும் உளைச்சல்..!

மேலும்

மிக்க நன்றி சார் 23-Aug-2025 3:24 pm
மிக்க நன்றி 20-Jul-2025 1:01 pm
வீரத்தை விளைக்கும் சொற்கள் 20-Jul-2025 7:31 am
C. SHANTHI அளித்த எண்ணத்தை (public) அ வேளாங்கண்ணி மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
14-Mar-2015 3:55 pm

கவி அரங்கில் கவிதை வாசிக்க விருப்பமுள்ளவர்களுக்காக....

"கவி ஓவியா" மாத இதழ் நடத்தும் கவி அரங்கம் நாளை சென்னையில் நடை பெற இருக்கிறது. விருப்பமுள்ள சென்னை வாசிகள் பங்கு பெறலாம். விவரங்கள் பின்வருமாறு.

நாள்--------------------------------------------> 15-03-2015
துவக்க நேரம்------------------------------> காலை 9.30 மணி
முகவரி---------------------------------------> வீரசுவர்கர் மேல்நிலைப் பள்ளி, B.B. ரோடு, பெரம்பூர் நெடுஞ்சாலை,
---------------------------------------------------> சென்னை (...)

மேலும்

C. SHANTHI அளித்த எண்ணத்தை (public) தர்சிகா மற்றும் 3 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
14-Jul-2014 1:01 pm

https://www.youtube.com/watch?v=GV8E90p7xkg



பூக்களோடு ஒரு கைக்குலுக்கல் ....
=================================
(சர்னா கவிதை வாசிப்பு போட்டி - கவிதை )

நவீன உலகில் நவீனங்களின் இடையில்
நாமும் இயந்திரங்களோடு இயந்திரங்களாய்
சிறிதேனும் சிந்திக்க மறந்தவர்களாய்...
நாளும் சிரிப்பை இழந்தவர்களாய்..

பொருள் தேடும் குறிக்கோளே இலக்காகி
உறவுகளை உதறி... திசைக்கு ஒருவராய்
வாழாத வாழ்க்கை நிதமுமாய்....
வாழ்கிறோமா என்பதனை மறந்து!!!

நாளும் தொடரும் மூச்சிறைப்பு ஓட்டங்களில்
உறவுகளையு (...)

மேலும்

நிதர்சனம் நன்று, கைகுலுக்குங்கள் உறவுகளோடும் / நண்பர்களோடும் ...... வாழ்க்கை சுகந்தமாய்... - மு.ரா. 06-Mar-2016 9:54 pm
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழி. 19-Jul-2014 7:12 pm
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அபி சார். இதே தலைப்பில் இன்னுமொரு கவிதை எழுதி இருக்கிறேன். இங்கு பதிய நேரமில்லை. நேரம் கிடைத்தால் பதிகிறேன். 19-Jul-2014 7:12 pm
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சுந்தரேசன். 19-Jul-2014 7:11 pm
C. SHANTHI அளித்த எண்ணத்தை (public) ஜெபகீர்த்தனா மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
22-Jun-2014 12:31 pm

எண்ணங்கள் மீறிய வண்ணம்
தளம் நாளும் மிளிர்ந்திடும் திண்ணம்

உலா வரும் சோலை இது மணக்கும்
உலகத்தில் உள்ளோரை நாளுமே ஈர்க்கும்

"எழுத்தின்" சேவைகளுக்கு நன்றி
தமிழை அதில் ஊன்றி வளர்போர்க்கும் நன்றி!!!

மேலும்

அழகு.. 03-Jan-2015 10:03 am
அருமை !நீங்கள் சொன்னால் தமிழுக்கு பெருமை ! 29-Sep-2014 12:05 am
அருமையாக சொன்னீர்கள் அக்கா 29-Sep-2014 12:02 am
அருமை !!!! 28-Sep-2014 11:31 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (451)

இவர் பின்தொடர்பவர்கள் (453)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
ஆய்க்குடியின் செல்வன்

ஆய்க்குடியின் செல்வன்

ஆய்க்குடி - தென்காசி
பாலமுதன் ஆ

பாலமுதன் ஆ

கொத்தமங்கலம(புதுக்கோட்டை

இவரை பின்தொடர்பவர்கள் (459)

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே