C. SHANTHI - சுயவிவரம்
(Profile)


பரிசு பெற்றவர்
இயற்பெயர் | : C. SHANTHI |
இடம் | : CHENNAI |
பிறந்த தேதி | : 07-Jun-1963 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 10-Oct-2011 |
பார்த்தவர்கள் | : 11096 |
புள்ளி | : 5390 |
இலக்கியம் படிக்கவில்லை. இருந்தும் கவிதை எழுதும் ஆசையில் இங்கே என் கிறுக்கல்கள்....
#உதவாதினி ஒரு தாமதம்
கண்ணைக் கட்டிய உரியடிதானே
காலங் காலமாய் தேர்தல்கள்
வெண்ணைத் திரட்டி
நெய்யு முருக்கி
விட்டார் ஏப்பம் தலைவர்கள்..!
மண்ணைக் கவ்வி மண்ணைக் கவ்வி
மட்டையானார் வேட்பாளர்..!
விண்ணைத் தொட்டபின்
வேர்கள்மிதித்து
வேதனையளித்தார் வாக்காளர்..!
கனிமம் கொழுத்த
மாநிலம்தேடி
காலடி பதித்தார் காவிகள்
இனியென்னத் தாமதம்
எடுகொடுவாளை
இரண்டென வாகட்டும் பாவிகள்..!
ஒன்றாம் நாடு ஒன்றே மொழியாம்
உதவாக் கரைகளின் சூளுரைகள்
நன்றா சொல்வீர் முதல்வ ரழித்து
நரிகள் ஆளவே சூழ்ச்சிகள்..!
கரையான் கூட்டம் காவி யுடையில்
கச்சிதமாக அரிக்குது பார்
நுரையைத் தள்ளி மாளும் முன்னே
நுதலை
#தீபத் திருநாள் வாழ்த்து
🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
நரகாசுரன் இறப்பினிலே
நன்மை… நன்மை
இறப்பு நாளும் சிறப்புதானே
உண்மை.. உண்மை..,!🪔
அழித்தபோது விதைத்தாரே
அரிய வணிகம்
உழைப்பவர்கள் பிழைப்பதற்கு
உரிய வழியும்..!🪔
புத்தாடைப் பட்டாசு
பொன்னா பரணம்
பொட்டுப்பூ விற்பனை
பொழுதும் பொழுதும்..!🪔
நுண்பிணியால் வந்தது
நட்டம் நட்டம்
நோயொழித்துக் காண்கின்றார்
துட்டும்.. துட்டும்..!🪔
வறுமைகள் தீரத்தான்
காலம்… காலம்..
வந்ததுபார் பண்டிகை
வாழ்ந்து பாரும்..,!🪔
ஏற்றிய தீபஒளி
நேர்வினைக் கூட்டும்
என்றுமது நம்குடிலில்
இன்பத்தை நாட்டும்..!🪔
மத்தாப்புப் புன்னகை
இதழ்கள் ஏந்தி
மகிழ்ந்தேதான் கொண்டாடு
#மதுவை ஒழிப்போம்.. மாற்றுத் தொழில் படைப்போம்
கதிரவன் மலர்ந்த பின்பும்
காரிருளில் பல குடும்பம்
விதித் தொலைத்து வாழ்வதெல்லாம்
வீணான மதுவினாலே பாரும் பாரும்..!
மதி கெட்டு மதுக் குடித்து
மாற்றுத்துணி யற்ற ஏழை
சதிவலையில் நாளும் வீழும்
தரித்திரத்தை மாற்றிடலாம் வாரும் வாரும்..!
கட்டியவள் கண்ணீர்க் கடலில்
கவலைகள் கழுத்து நெரிக்கப்
பொட்டும்பூவு மிழக்கு முன்னே
பொட்டிக்கட்ட வைப்போம் மது பானம் பானம்..!
கெட்டுக்குடி வீழும் முன்னே
கீழ்த் தரமாம் குடிப் பழக்கம்
எட்டி ஓடச் செய்து செய்து
இன்னல் களைக் களையத்தான் வேணும் வேணும்..!
சிந்தை தன்னில் நிறுத்துவீரே
செம்மை ஆட்சி நாயகரே
இந்த ந
பழையன மறப்போம் .. புதியன படைப்போம்…!
எண் சீர் விருத்தம்
அம்மிக்கல் ஆட்டுரலில் அரைத்தக் காலம்
அடியோடு மறந்தேதான் போனோம் நாமும்
தெம்பானோம் மின்னியக்கி
பொருளுங் கண்டு
தேவைக்கு வாங்கித்தான் நிறைத்தோம் வீட்டை
வம்பாய்த்தான் போனதின்று வகையாய் நோய்கள்
வாட்டித்தான் வதைக்குதன்றோ
வலிகள் கூட்டி
நம்கரத்தால் வேலைகளும் புரிய
வேண்டும்
நாளுந்தான் உடல்சிறந்து விளங்க வேண்டும்…!
கணினிமொழி தொழில்நுட்பம்
கலியு கத்தில்
கடும்பணியை எளிதாக்கக் கண்டோ
மின்பம்
பிணிப்பிடித்து ஆட்டுவித்தப் போது மன்றோ
பெருமைதான் அலுவலகம் வீட்டில் வைத்தோம்
பணியாட்கள் பலகுறைக்கும் வலைத ளங்கள்
பலவணிகம் புரிகிறது
#விலைக்குறைப்பு..
கண்துடைப்பு.!
போராட்டம் விலைகுறைக்க
நடத்தினாலும்
பொல்லாத அரசாங்கக்.. .
குள்ளநரி
நாருரிக்கக் கல்தானே
நாமறிவோம்
நாணயந்தான் காணவில்லை
நரியிடத்தில்..!
பத்து ரூபாய் விலையேற்றி
பதைக்கச்செய்து
பாவிகள் குறைத் திடுவார்
ஒன்றிரண்டு
கத்தித்தான் ஓய்ந்து விட்டோம்
காலங்காலம்
கயவர்கள் மாறவில்லை
கள்ளம்மேலும்..!
மக்களின் உழைப்பினைச்
சுரண்டிநித்தம்
மாபணந்தான் சேர்த்துவிட்டார்
கார்ப்பரேட்டும்
சிக்கலில் உழலும் மக்கள்
விடுபட்டுத்தான்
சிறப்புடனே வாழும்நாள்
வந்திடனும்..!
பாதிவிலை மீதிவரி
பகற் கொள்ளையாய்
பாவிகளின் ஆட்சிதரு
அதிகாரத்தில்
மோதித்தான் பார்த்திடலாம்
#சிந்து வகைப் பாடல்
#(கிளிக்கண்ணி)
கண்ணில் நிறைந்தவளே காட்சியெலாம்
நீயானாய்
மண்ணும் மறையுதடி - கிளியே
மையல் பெருகுதடி..!
காதல் பழுத்திருக்கக் காத்திருக்கேன் தாமதமேன்
நோதல் நொறுக்குதடி - கிளியே
நோய்க்கூடிக் கொல்லுதடி..!
சித்திரம் போலுன்னை சிந்தைதனில் வைத்தேன்
கத்திக் கதறுதடி - ,கிளியே
கண்முன்னே தோன்றிடடி..!
சாதியினால் கொல்லி சதியினால் கொல்லி
பாதிஉயிர் போனதடி - கிளியே
பட்டமரம் ஆவதோடி..!
செங்குருதி விழிதனிலே சேர்ந்திருந்து ஊற்றாகி
பொங்கி வழியுதடி - கிளியே
புத்தி பிசகுதடி..!
மென்தென்றல் நிலைமாறி மேனிதனைத் தீண்டிடுதே
என்னில்தீ பரவுதடி - கிளியே
எரிதழல் ஆவேனோடி..!
#தமிழே தவமெமக்கு….!
இந்தியைத்தான் கந்தலாக்கும்
எங்கள் தமிழ்க்கூட்டம்
மந்தியிங்கு ஆட்டமிட்டால்
நையத்தானே புடைக்கும்..!
வெந்தமொழி வேற்றுமொழி
வேட்டையாடி யழிப்போம்
நிந்தனைகள் செய்யுமென்றால்
நெற்றிப்பொட்டில் அடிப்போம்..!
சந்தனத்தின் வாசமிகு
செந்தமிழைப் படிப்போம்
இந்தித்தலை நீட்டுமென்றால்
எட்டியெட்டி உதைப்போம்..!
செங்கரும்பு சாறிருக்க
சித்தங்குளிரக் குடிப்போம்
சிங்கமொழி எங்கள்தமிழ்
எந்நாளும் கர்ஜிப்போம்..!
வடமொழியும் முடமொழியும்
தொடைநடுங்க வைப்போம்
திடத்தமிழை தேன்தமிழை
திகட்டத்திகட்டப் படைப்போம்..!
இற்றுப்போன இந்தியெதற்கு
இடுகாட்டுப் பிணமே
பற்றுடனே வணங்கிடுவோம்
ப
#அத்தை
தந்தையுடன் பிறந்தவளைத் தாய்தான் என்பேன்
சந்திரனாய் எங்கள்வான் சுந்தர
மென்பேன்
வள்ளியென்பார் பலருக்கும் அவளே
அத்தை
வழங்கிட்டார் கடவுளந்த அன்புச்
சொத்தை.
அல்லும்பகல் உறங்காது காத்து நிற்பாள்
ஆராரோ பாடித்தான் தூங்க வைப்பாள்
தொட்டிலிலே ஆட்டிடுவாள் சுகமாய் அத்தை
கட்டிலென ஆக்கிடுவாள் மடியும் மெத்தை
முனிக்கதைகள் கூறிடுவாள் முகமும் சுருக்கி
மூங்கில் காட்டில் கண்டதுவாய்
பயமும் பெருக்கி
விழிப்பிதுங்கக் கேட்போமே வெடவெ டத்து
கழித்திடுவோம் காலமதைக் கிறுகி றுத்து. !
வக்கணையாய் சமைப்பாளே வாசந் தூக்கும்
வஞ்சிரமும் நண்டுஇறால் வாளை ருசிக்கும்
கைகளுக்குள் பக்குவந்
கவி அரங்கில் கவிதை வாசிக்க விருப்பமுள்ளவர்களுக்காக....
"கவி ஓவியா" மாத இதழ் நடத்தும் கவி அரங்கம் நாளை சென்னையில் நடை பெற இருக்கிறது. விருப்பமுள்ள சென்னை வாசிகள் பங்கு பெறலாம். விவரங்கள் பின்வருமாறு.
நாள்--------------------------------------------> 15-03-2015
துவக்க நேரம்------------------------------> காலை 9.30 மணி
முகவரி---------------------------------------> வீரசுவர்கர் மேல்நிலைப் பள்ளி, B.B. ரோடு, பெரம்பூர் நெடுஞ்சாலை,
---------------------------------------------------> சென்னை (...)
https://www.youtube.com/watch?v=GV8E90p7xkg
பூக்களோடு ஒரு கைக்குலுக்கல் ....
=================================
(சர்னா கவிதை வாசிப்பு போட்டி - கவிதை )
நவீன உலகில் நவீனங்களின் இடையில்
நாமும் இயந்திரங்களோடு இயந்திரங்களாய்
சிறிதேனும் சிந்திக்க மறந்தவர்களாய்...
நாளும் சிரிப்பை இழந்தவர்களாய்..
பொருள் தேடும் குறிக்கோளே இலக்காகி
உறவுகளை உதறி... திசைக்கு ஒருவராய்
வாழாத வாழ்க்கை நிதமுமாய்....
வாழ்கிறோமா என்பதனை மறந்து!!!
நாளும் தொடரும் மூச்சிறைப்பு ஓட்டங்களில்
உறவுகளையு (...)
எண்ணங்கள் மீறிய வண்ணம்
தளம் நாளும் மிளிர்ந்திடும் திண்ணம்
உலா வரும் சோலை இது மணக்கும்
உலகத்தில் உள்ளோரை நாளுமே ஈர்க்கும்
"எழுத்தின்" சேவைகளுக்கு நன்றி
தமிழை அதில் ஊன்றி வளர்போர்க்கும் நன்றி!!!