C. SHANTHI - சுயவிவரம்

(Profile)



பரிசு பெற்றவர்
இயற்பெயர்:  C. SHANTHI
இடம்:  CHENNAI
பிறந்த தேதி :  07-Jun-1963
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  10-Oct-2011
பார்த்தவர்கள்:  11711
புள்ளி:  5445

என்னைப் பற்றி...

இலக்கியம் படிக்கவில்லை. இருந்தும் கவிதை எழுதும் ஆசையில் இங்கே என் கிறுக்கல்கள்....

என் படைப்புகள்
C. SHANTHI செய்திகள்
C. SHANTHI - படைப்பு (public) அளித்துள்ளார்
19-May-2025 9:54 pm

கட்டை விரல்

குட்டை விரலென எண்ணாதீர்
கூட்டு விரலுக்குப் பிடிமானம்
பட்டையைக் கிளப்பும்
பலவழியில்
பாட்டுக்குத் துணையாம் இசைவழியில்..!

அசைக்க வியலா
தெனஅசையும்
அதுவே வெற்றியில் தலைநிமிரும்
இசைந்து சாயும் நால்விரலில்
இணக்கம் ஆகும் கூட்டுறவில்..!

எழுத்தே அறியா பேர்களுக்கு
இட்டு வைக்கும் கையொப்பம்
கழுத்தை நெறிக்கும் கள்வனுக்கு
கருணை மறந்து கைகொடுக்கும்..!

ஏக லைவன் கதையறிவோம்
ஈந்தான் பெருவிரல்
துரோணர்க்கு
சோகம் கூட்டும் அநியாயம்
துரோக மிழைத்தார் வீரனுக்கு..!

கண்ணில் கண்ணீர் மல்கிட
காணிக்கை யானது கட்டைவிரல்
மண்ணில் வீரன் திறமழிக்க
மடியச் செய்தார்
கட்டைவிரல்..!

மேலும்

C. SHANTHI - படைப்பு (public) அளித்துள்ளார்
19-May-2025 9:51 pm

#கொஞ்சுவது சினம்

கொஞ்சும் சினத்தில்
மிஞ்சிடும் அன்பும்
ஊடல் பின்னலில்
காரியம் ஆற்றிடும்
நங்கையின் சினமெல்லாம்
அன்பினில் கரைந்திடும்..!

கால்கள் நடமிடும்
கைகள் பறக்கும்
அடம் பிடித்தலில்அடக்கம்
மழலையின் சினமும்..!

குழந்தை சினத்தில்
கொஞ்சல் அதிகம்
வேண்டும் பொருள் அது
கை சேரும்பொழுதுதினில்
மழலை சினமெல்லாம்
மாறிடும் கணத்தில்..!

புரிதல் பிழையாய்
போகின்ற நாளில்
துளிர்த்திடும் பிணக்கும்
வளர்த்திடும் சினமும்..!

பிணக்குகள் ஊடே
ஒட்டிய சினமும்
மௌன நீட்டலில்
நர்த்தனம் ஆடிடும் ..!

நர்த்தன சினத்தினை
நயமாய் தணித்திடும்
ஆற்றல் படைத்தது
கொஞ்சல்.. கெஞ்சல்..

மேலும்

C. SHANTHI - படைப்பு (public) அளித்துள்ளார்
19-May-2025 9:43 pm

#செவி கொடுங்கள்..
மரம் பேசுகிறேன்

விதைகள் தருவேன் நானே
விதைத்தால் நன்மை தானே..!
வதைத்தால் வம்பில் வீழ்வீர்
வானம் பொய்க்கும் பாரீர்..!

குடிக்கத் தண்ணீர் வேணும்
கும்பிக்குச் சோறும் வேணும்
செடியும் மரமாய் நாங்கள்
செழித்தால் பசிக்கு வரங்கள்..!

வேரொடு சாய்க்கும் எண்ணம்
வைத்தால் பஞ்சம் திண்ணம்
பாரினில் மழையின் தூதர்
எம்
பசுமையில் நீங்கும் பேரிடர்..!

வைப வங்கள் தோறும்
வழங்கு கன்றாய்ப் பரிசும்
பையச் செழிக்குமென் குடும்பம் - கண்டு
பசியொடு பஞ்சம் நடுங்கும்..!

மழலைக்கு எடுத்துக் கூறு
மரங்களின் மகத்துவம் நூறு
உழவைப் பெருக்கும் வழிதான்
உரமாய் அறிவுரைத் தேன்தான்..!

மேலும்

C. SHANTHI - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Apr-2025 11:48 am

பழச்சாறு..!
==========

சித்திரையும் கத்திரியும் சினம் கொண்டு பார்க்கும்
தணல் தனித்து போகுமந்த கனிரசங்கள் கேட்கும்
கடவுள் தந்த வரமாக வகை வகையாய் கனிகள்
கோடையிலே விளையும்கனி இனிப்பில் தேன் சுவைகள்..!

காந்த அலை வீசினாலும் கவலை என்பதில்லை
கனிரசத்தில் மிதந்திருக்க கோடை சுடுவதில்லை
செம்முத்து மாதுளையின் சாறெடுத்துக் குடிப்போம்
செங்கரும்பு சாறுண்டு மகிழ்ச்சியிலே திளைப்போம்..!

முலாம் கிருணி தர்பூசணி சந்தையெங்கும் சிரிக்கும்
சர்க்கரையின் சங்கமிப்பில் சத்துணவும் கிடைக்கும்
முப்பொழுதும் கோடையிலே இவ்வுணவே விருப்பம்
எப்பொழுதும் கிடைப்பதில்லை என்பதிலே வருத்தம்..!

கோடையிலே இறை

மேலும்

C. SHANTHI - C. SHANTHI அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-May-2022 12:04 pm

#விலைக்குறைப்பு..
கண்துடைப்பு.!

போராட்டம் விலைகுறைக்க
நடத்தினாலும்
பொல்லாத அரசாங்கக்.. .
குள்ளநரி
நாருரிக்கக் கல்தானே
நாமறிவோம்
நாணயந்தான் காணவில்லை
நரியிடத்தில்..!

பத்து ரூபாய் விலையேற்றி
பதைக்கச்செய்து
பாவிகள் குறைத் திடுவார்
ஒன்றிரண்டு
கத்தித்தான் ஓய்ந்து விட்டோம்
காலங்காலம்
கயவர்கள் மாறவில்லை
கள்ளம்மேலும்..!

மக்களின் உழைப்பினைச்
சுரண்டிநித்தம்
மாபணந்தான் சேர்த்துவிட்டார்
கார்ப்பரேட்டும்
சிக்கலில் உழலும் மக்கள்
விடுபட்டுத்தான்
சிறப்புடனே வாழும்நாள்
வந்திடனும்..!

பாதிவிலை மீதிவரி
பகற் கொள்ளையாய்
பாவிகளின் ஆட்சிதரு
அதிகாரத்தில்
மோதித்தான் பார்த்திடலாம்

மேலும்

வணக்கம் சார். நலமாக இருக்கிறேன். தாங்கள் நலமா..? நானும் வெகு நாட்களுக்குப் பின் இங்கு பதிவிடுகிறேன். விசாரிப்பிற்கு மிக்க நன்றி இப்படி நிறைய எழுதி இருக்கிறேன். இங்கு பதிவிட வேண்டும் 23-May-2022 3:16 pm
கருத்திற்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சார்.. 23-May-2022 3:14 pm
வணக்கம் சாந்தி அவர்களே... வரி கொடுமையை அடுக்கி விட்டீர்கள்.. உண்ண வரி... உடுக்க வரி.. சற்று அயர்ந்தால்... உறக்கத்திற்கும் வரி போடுவார்கள்... கலிகாலம் என்பது இதுதானோ.... மேலும் எழுதுவதற்கு அச்சமாக இருக்கு... எழுத்து வரிகளுக்கு அபராதம் போட்டு விடுவார்களோயென்று...?? வாழ்த்துக்கள்... வாழ்க நலமுடன்...!! 23-May-2022 1:45 pm
வணக்கம்.. நலமா..? நீண்ட இடைவெளிக்கு பின் தளத்தில் வந்தேன்.. உங்கள் பதிவு கண்ணில் பட்டது..! உங்கள் நடை இன்னும் மாறவே இல்லை..! 23-May-2022 1:28 pm
C. SHANTHI - C. SHANTHI அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Aug-2020 7:00 pm

#சிந்து வகைப் பாடல்
#(கிளிக்கண்ணி)

கண்ணில் நிறைந்தவளே காட்சியெலாம்
நீயானாய்
மண்ணும் மறையுதடி - கிளியே
மையல் பெருகுதடி..!

காதல் பழுத்திருக்கக் காத்திருக்கேன் தாமதமேன்
நோதல் நொறுக்குதடி - கிளியே
நோய்க்கூடிக் கொல்லுதடி..!

சித்திரம் போலுன்னை சிந்தைதனில் வைத்தேன்
கத்திக் கதறுதடி - ,கிளியே
கண்முன்னே தோன்றிடடி..!

சாதியினால் கொல்லி சதியினால் கொல்லி
பாதிஉயிர் போனதடி - கிளியே
பட்டமரம் ஆவதோடி..!

செங்குருதி விழிதனிலே சேர்ந்திருந்து ஊற்றாகி
பொங்கி வழியுதடி - கிளியே
புத்தி பிசகுதடி..!

மென்தென்றல் நிலைமாறி மேனிதனைத் தீண்டிடுதே
என்னில்தீ பரவுதடி - கிளியே
எரிதழல் ஆவேனோடி..!

மேலும்

மிக்க நன்றி 20-Feb-2021 10:05 pm
மனதைத் தொடும் ரம்மியமான பாடல் . வாழ்த்துக்கள் ./ 03-Aug-2020 11:26 pm
C. SHANTHI - C. SHANTHI அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Sep-2020 10:26 pm

#தமிழே தவமெமக்கு….!

இந்தியைத்தான் கந்தலாக்கும்
எங்கள் தமிழ்க்கூட்டம்
மந்தியிங்கு ஆட்டமிட்டால்
நையத்தானே புடைக்கும்..!

வெந்தமொழி வேற்றுமொழி
வேட்டையாடி யழிப்போம்
நிந்தனைகள் செய்யுமென்றால்
நெற்றிப்பொட்டில் அடிப்போம்..!

சந்தனத்தின் வாசமிகு
செந்தமிழைப் படிப்போம்
இந்தித்தலை நீட்டுமென்றால்
எட்டியெட்டி உதைப்போம்..!

செங்கரும்பு சாறிருக்க
சித்தங்குளிரக் குடிப்போம்
சிங்கமொழி எங்கள்தமிழ்
எந்நாளும் கர்ஜிப்போம்..!

வடமொழியும் முடமொழியும்
தொடைநடுங்க வைப்போம்
திடத்தமிழை தேன்தமிழை
திகட்டத்திகட்டப் படைப்போம்..!

இற்றுப்போன இந்தியெதற்கு
இடுகாட்டுப் பிணமே
பற்றுடனே வணங்கிடுவோம்

மேலும்

மிக்க நன்றி சார் 08-Nov-2021 12:17 pm
மிக்க நன்றி ஐயா 20-Feb-2021 10:04 pm
அழகான தமிழ் மொழிப் போற்றல் புனைவு - வட எழுத்து சேர்க்காதிருத்தல் நலமே. 09-Feb-2021 10:48 am
C. SHANTHI - C. SHANTHI அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Feb-2021 9:11 pm

#அத்தை

தந்தையுடன் பிறந்தவளைத் தாய்தான் என்பேன்
சந்திரனாய் எங்கள்வான் சுந்தர
மென்பேன்
வள்ளியென்பார் பலருக்கும் அவளே
அத்தை
வழங்கிட்டார் கடவுளந்த அன்புச்
சொத்தை.

அல்லும்பகல் உறங்காது காத்து நிற்பாள்
ஆராரோ பாடித்தான் தூங்க வைப்பாள்
தொட்டிலிலே ஆட்டிடுவாள் சுகமாய் அத்தை
கட்டிலென ஆக்கிடுவாள் மடியும் மெத்தை

முனிக்கதைகள் கூறிடுவாள் முகமும் சுருக்கி
மூங்கில் காட்டில் கண்டதுவாய்
பயமும் பெருக்கி
விழிப்பிதுங்கக் கேட்போமே வெடவெ டத்து
கழித்திடுவோம் காலமதைக் கிறுகி றுத்து. !

வக்கணையாய் சமைப்பாளே வாசந் தூக்கும்
வஞ்சிரமும் நண்டுஇறால் வாளை ருசிக்கும்
கைகளுக்குள் பக்குவந்

மேலும்

மிக்க நன்றி ஐயா 20-Feb-2021 10:03 pm
" அத்தை பா" - அர்த்தத்துடன் அழகாய் 09-Feb-2021 10:45 am
C. SHANTHI அளித்த எண்ணத்தை (public) அ வேளாங்கண்ணி மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
14-Mar-2015 3:55 pm

கவி அரங்கில் கவிதை வாசிக்க விருப்பமுள்ளவர்களுக்காக....

"கவி ஓவியா" மாத இதழ் நடத்தும் கவி அரங்கம் நாளை சென்னையில் நடை பெற இருக்கிறது. விருப்பமுள்ள சென்னை வாசிகள் பங்கு பெறலாம். விவரங்கள் பின்வருமாறு.

நாள்--------------------------------------------> 15-03-2015
துவக்க நேரம்------------------------------> காலை 9.30 மணி
முகவரி---------------------------------------> வீரசுவர்கர் மேல்நிலைப் பள்ளி, B.B. ரோடு, பெரம்பூர் நெடுஞ்சாலை,
---------------------------------------------------> சென்னை (...)

மேலும்

C. SHANTHI அளித்த எண்ணத்தை (public) தர்சிகா மற்றும் 3 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
14-Jul-2014 1:01 pm

https://www.youtube.com/watch?v=GV8E90p7xkg



பூக்களோடு ஒரு கைக்குலுக்கல் ....
=================================
(சர்னா கவிதை வாசிப்பு போட்டி - கவிதை )

நவீன உலகில் நவீனங்களின் இடையில்
நாமும் இயந்திரங்களோடு இயந்திரங்களாய்
சிறிதேனும் சிந்திக்க மறந்தவர்களாய்...
நாளும் சிரிப்பை இழந்தவர்களாய்..

பொருள் தேடும் குறிக்கோளே இலக்காகி
உறவுகளை உதறி... திசைக்கு ஒருவராய்
வாழாத வாழ்க்கை நிதமுமாய்....
வாழ்கிறோமா என்பதனை மறந்து!!!

நாளும் தொடரும் மூச்சிறைப்பு ஓட்டங்களில்
உறவுகளையு (...)

மேலும்

நிதர்சனம் நன்று, கைகுலுக்குங்கள் உறவுகளோடும் / நண்பர்களோடும் ...... வாழ்க்கை சுகந்தமாய்... - மு.ரா. 06-Mar-2016 9:54 pm
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழி. 19-Jul-2014 7:12 pm
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அபி சார். இதே தலைப்பில் இன்னுமொரு கவிதை எழுதி இருக்கிறேன். இங்கு பதிய நேரமில்லை. நேரம் கிடைத்தால் பதிகிறேன். 19-Jul-2014 7:12 pm
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சுந்தரேசன். 19-Jul-2014 7:11 pm
C. SHANTHI அளித்த எண்ணத்தை (public) ஜெபகீர்த்தனா மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
22-Jun-2014 12:31 pm

எண்ணங்கள் மீறிய வண்ணம்
தளம் நாளும் மிளிர்ந்திடும் திண்ணம்

உலா வரும் சோலை இது மணக்கும்
உலகத்தில் உள்ளோரை நாளுமே ஈர்க்கும்

"எழுத்தின்" சேவைகளுக்கு நன்றி
தமிழை அதில் ஊன்றி வளர்போர்க்கும் நன்றி!!!

மேலும்

அழகு.. 03-Jan-2015 10:03 am
அருமை !நீங்கள் சொன்னால் தமிழுக்கு பெருமை ! 29-Sep-2014 12:05 am
அருமையாக சொன்னீர்கள் அக்கா 29-Sep-2014 12:02 am
அருமை !!!! 28-Sep-2014 11:31 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (451)

இவர் பின்தொடர்பவர்கள் (453)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
ஆய்க்குடியின் செல்வன்

ஆய்க்குடியின் செல்வன்

ஆய்க்குடி - தென்காசி
பாலமுதன் ஆ

பாலமுதன் ஆ

கொத்தமங்கலம(புதுக்கோட்டை

இவரை பின்தொடர்பவர்கள் (459)

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே