C. SHANTHI - சுயவிவரம்
(Profile)


பரிசு பெற்றவர்
இயற்பெயர் | : C. SHANTHI |
இடம் | : CHENNAI |
பிறந்த தேதி | : 07-Jun-1963 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 10-Oct-2011 |
பார்த்தவர்கள் | : 11812 |
புள்ளி | : 5467 |
இலக்கியம் படிக்கவில்லை. இருந்தும் கவிதை எழுதும் ஆசையில் இங்கே என் கிறுக்கல்கள்....
#குறும்பன்.. கரும்பன்..
அம்பாரியாய்க் கிடப்பேன்
அத்தானின் முதுகினிலே
தெம்பாய்த்தான் சவாரி
தேகத்தில் தீ பரவ..!
வம்பளப்பான் குறும்பாக
வாய்முத்தம் ஒன்றுவேண்டி
அம்மம்மா அவன் குறும்பு
அத்தனையும் தேன்கரும்பு..!
கண்சாடை மொழிபேசி
காதல் வலைவிரிப்பான்
வண்ணமாய் வசியஞ்செய்ய
வலைக்குள்ளே நானிருப்பேன்..!
நெஞ்சினில் எனைச்சுமந்தான்
நீள்மார்பி லும்சுமந்தான்
வஞ்சிநான் சுமக்கிறேனே
வாரிசாய் அவன்நகலை..!
வாழ்த்துகிறார் பலருங்கூடி
வாழ்கவென வாய்நிறைய
மூழ்கித்தான் போகிறேனே
மும்மடங்கி லின்பம்பெருகி..!
#சொ.சாந்தி
விதைப் பந்து..!
பிரபஞ்சத்தில் உலகத்தை
விதைத்தவனே கடவுள்
வெடிக்காத விதைக்குள்ளே
விளைபயிராய் பலஉயிர்கள்..!
மனிதவித்தின் மூலம்தான்
ஆதாமும் ஏவாள்
ஏராளம் எண்ணிக்கையில்
மனிதப்பயிர்கள் இந்நாள்..!
தந்தையவர் விதைப்பினில் நாம்
நடமாடும் செடிகள்
வளர்த்திடுதே கர்ப்பத்தில்
அன்னைத்தொப்புள் கொடிகள்..!
விரிந்தவானில் சூரியனை
விதைக்கிறதே வானம்
விளைச்சலில்தான் கிட்டிடுதே
வெளிச்சந்தான் நாளும்..!
சேமிப்பும் விதைப்பந்தே
ஆபத்தில் காக்கும்
சிக்கனதை விதைத்துப்பார்
சங்கடங்கள் தீர்க்கும்..!
சூட்சிகளை விதைத்தாரே
பிணங்கள்தான் விளைச்சல்
சகுனி வளர்த்த விதையினாலே
சகலருக்கும் உளைச்சல்..!
#எப்பக்கத்தில் வந்து புகுந்துவிடும் இந்தி
எம்மொழி செம்மொழி
எங்கிலும் எங்கிலும்
எங்கும் நடமிடல் காணீர்
தெம்பினைத் தரும்மொழி
எங்களின் தமிழ்மொழி
என்பதில் பெருமையே கேளீர்..!
எட்டுத் திசைகளில்
இனிதாய் ஒலிக்குது
இடையினில் புகுமோ இந்தி
மெட்டினை இசைக்கும்
மேதினி யில்தமிழ்
வென்றிடும் என்றுமே முந்தி..!
அந்தென பலமொழி
ஆயிரம் வந்தென்ன
ஆயுத மெம்மொழி யேந்தும்
செந்தமிழ்த் தாக்கிட
சிதறும் வடமொழி
சில்லாய் நொறுங்கிய டங்கும்...!
ஆதிக்கம் செய்திடும்
ஆதி காலமொழி
ஆருளர் இதனை மறுக்க
போதி மரத்தமிழ்
பொன்னான நூல்களில்
போற்றுவர் தாமும் சிறக்க..!
வேலிகள் பலவாம்
வித்தகர் பலர
அச்சம் தவிர்.
அச்சமென்ன அச்சமென்ன அச்சமென்ன சொல்லடா
இச்செகத்தை வெற்றி கொள்ள அச்சந்தன்னைக் கொல்லடா..!
அச்சமென்ற சொல்லெதற்கு அதனைதுவம்சம் செய்யடா
மிச்சம்மீதம் ஏதுமின்றி வேரறுத்துத் தள்ளடா..!..!
பூலித்தேவன் வாழ்ந்த நாட்டில் புழுவின் தோற்றம் ஏனடா
பொய்யுலாவும் நாட்டினில்நீ புலியைப்போல மாறடா.. !
கோழை கோழை கோழையென்று ஓடஉன்னை ஓட்டுவார்
கொஞ்சம் நின்று நீவிரட்டக் கும்பிடுகள் போடுவார்..!
தாழ்ந்தசாதி என்று உன்னை நோகடிக்கும் ஊரடா
மனித சாதி நானுமென்று மார்நிமிர்த்திக் கூறடா..!
மூன்றுசாதி பாரில் உண்டு மூர்க்கசாதி தேவையோ
நோய்ப்பிடித்த சாதி கண்டு வாய்ப்பிடித்து மூடுவோம்..!
இந்தி மொ
#வானம் காணலாம் வாரீர்..!
எத்தனை எத்தனை வண்ணங்கள் வானத்தில்
எடுத்துக் கொட்டுவ தெவரோ..?
புத்தம் புதியன போலவே என்றும்
பூசும் கலைஞன் யாரோ..?
அந்தி வானம் ஆரஞ்சு வண்ணம்
அழகாய்ப் பூசிக் கொள்ளும்
மந்திர வானில் கதிரவன் மறைவு
மங்கிய ஒளியைத் தள்ளும்..!
மங்கிக் கிடந்த வெள்ளி நிலவு
மலர்ந்து புன்னகை பூக்கும்
அங்கும் இங்கும் குளிரை வீசி
அந்தி யணலைத் தாக்கும்..!
முகிலின் கூட்டம் முந்தானை விரித்து
முல்லை நிலவைப் போர்த்தும்
திகைத்த நிலவு
முகிலில் பிதுங்கி
முத்துப் பற்களைக் காட்டும்..!
கவிஞர் நினைவில் புகுந்து கலந்து
கற்பனை வளர்த்து பார்க்கும்
கவிதை புணைய வைத்து நிலவு
காதலி யாகு
#தேசத்தின் சுவாசம் நீ..
#எண்சீர் விருத்தம்
தேசத்தின் சுவாசத்தைத் திருடிக் கொண்டு
தேகத்தின் வலிமைதனைச் சுரண்டு கின்றார்
மோசந்தான் செய்கிறது முதலைக் கூட்டம்
மூச்சுவாங்கப் போராட்டம் நாளு
மிங்கே
நீசர்கள் அடிமைகளாய் ஆக்கி
நம்மை
நீங்காதத் துயரத்தில் தள்ளி விட்டார்
ஊசலாடும் தேசத்தின் சுவாச மெல்லாம்
உணர்வீர்கள் சுதந்திரமே யதனை மீட்போம். !
-------
#சொ.சாந்தி
பாட்டுக்கு நாயகன்
பாமரனின் தாயவன் கண்ணதாசன்..!
பொன்மாலைப் பொழுதென் னாளும்
பூரிப்பில் பொங்குதென் காலம்
என்விரலில் நீந்துகின்ற கானம்
இறக்குகிறேன் அதையிங்கு நானும்..!
கவியரசர் பாடலிலே மூழ்கிக்
களித்திருக்கும் காலம் சொர்க்கம்
புவியிதிலே பாடலுக் கரசர்
புரிவாரோ இதற்கே தர்க்கம்..!
முக்காலும் வாழும் கவியை
மூச்சுக்குள் இழுத்து வைத்தேன்
எக்காளம் போட்டுத் தானே
எதிர்நின்ற பாட்டைப்
பிடித்தேன்..!
கேட்டினை யோட்டும் பேயாய்
கிளர்ச்சியில் அவனின் பாட்டு
கேட்டாலே போது மன்றோ
கிழக்கொளி பாயும் வீட்டில்..!
நாற்றங்கால் பாட்டுக்கெல்லாம்
குரலிசையை ஊற்றி
வளர்த்தார்
ஏற்றத்தில் இன்னு
#விலைக்குறைப்பு..
கண்துடைப்பு.!
போராட்டம் விலைகுறைக்க
நடத்தினாலும்
பொல்லாத அரசாங்கக்.. .
குள்ளநரி
நாருரிக்கக் கல்தானே
நாமறிவோம்
நாணயந்தான் காணவில்லை
நரியிடத்தில்..!
பத்து ரூபாய் விலையேற்றி
பதைக்கச்செய்து
பாவிகள் குறைத் திடுவார்
ஒன்றிரண்டு
கத்தித்தான் ஓய்ந்து விட்டோம்
காலங்காலம்
கயவர்கள் மாறவில்லை
கள்ளம்மேலும்..!
மக்களின் உழைப்பினைச்
சுரண்டிநித்தம்
மாபணந்தான் சேர்த்துவிட்டார்
கார்ப்பரேட்டும்
சிக்கலில் உழலும் மக்கள்
விடுபட்டுத்தான்
சிறப்புடனே வாழும்நாள்
வந்திடனும்..!
பாதிவிலை மீதிவரி
பகற் கொள்ளையாய்
பாவிகளின் ஆட்சிதரு
அதிகாரத்தில்
மோதித்தான் பார்த்திடலாம்
கவி அரங்கில் கவிதை வாசிக்க விருப்பமுள்ளவர்களுக்காக....
"கவி ஓவியா" மாத இதழ் நடத்தும் கவி அரங்கம் நாளை சென்னையில் நடை பெற இருக்கிறது. விருப்பமுள்ள சென்னை வாசிகள் பங்கு பெறலாம். விவரங்கள் பின்வருமாறு.
நாள்--------------------------------------------> 15-03-2015
துவக்க நேரம்------------------------------> காலை 9.30 மணி
முகவரி---------------------------------------> வீரசுவர்கர் மேல்நிலைப் பள்ளி, B.B. ரோடு, பெரம்பூர் நெடுஞ்சாலை,
---------------------------------------------------> சென்னை (...)
https://www.youtube.com/watch?v=GV8E90p7xkg
பூக்களோடு ஒரு கைக்குலுக்கல் ....
=================================
(சர்னா கவிதை வாசிப்பு போட்டி - கவிதை )
நவீன உலகில் நவீனங்களின் இடையில்
நாமும் இயந்திரங்களோடு இயந்திரங்களாய்
சிறிதேனும் சிந்திக்க மறந்தவர்களாய்...
நாளும் சிரிப்பை இழந்தவர்களாய்..
பொருள் தேடும் குறிக்கோளே இலக்காகி
உறவுகளை உதறி... திசைக்கு ஒருவராய்
வாழாத வாழ்க்கை நிதமுமாய்....
வாழ்கிறோமா என்பதனை மறந்து!!!
நாளும் தொடரும் மூச்சிறைப்பு ஓட்டங்களில்
உறவுகளையு (...)
எண்ணங்கள் மீறிய வண்ணம்
தளம் நாளும் மிளிர்ந்திடும் திண்ணம்
உலா வரும் சோலை இது மணக்கும்
உலகத்தில் உள்ளோரை நாளுமே ஈர்க்கும்
"எழுத்தின்" சேவைகளுக்கு நன்றி
தமிழை அதில் ஊன்றி வளர்போர்க்கும் நன்றி!!!