C. SHANTHI - சுயவிவரம்
(Profile)


பரிசு பெற்றவர்
இயற்பெயர் | : C. SHANTHI |
இடம் | : CHENNAI |
பிறந்த தேதி | : 07-Jun-1963 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 10-Oct-2011 |
பார்த்தவர்கள் | : 11897 |
புள்ளி | : 5507 |
இலக்கியம் படிக்கவில்லை. இருந்தும் கவிதை எழுதும் ஆசையில் இங்கே என் கிறுக்கல்கள்....
#காற்றின் கண்ணாம்மூச்சி
நடமாடும் தென்றல்
கண்ணாமூச்சி ஆடுகிறது
பச்சை மரத்தில்..!
மேலெழுந்த காற்று
கண்ணாமூச்சி ஆடுகிறது
நூல்கொண்ட பட்டதில்..!
உள்ளும் வெளியுமான சுவாசத்தில்
கண்ணாமூச்சி ஆடுகிறது
மனித உயிர்களில்..!
மலர்களை வருடி அபகரித்து
கண்ணாமூச்சி ஆடுகிறது
நாசி தொடும் வாசத்தில்..!
ஒலியுடன் உறவாடி
கண்ணாமூச்சி ஆடுகிறது
மொழிகளில், இசையினில்..!
காற்றின் தனிமைக்கு
அடையாளங்கள் இல்லை
ஏதோ ஒன்றுடன் இழைகையில்
எப்படியெல்லாமோ வடிவங்களில்..!
காற்றின் கண்ணாமூச்சி
அழகுதான்
புயலாய் வீசாதவரை..!
#சொ.சாந்தி
மீள் பதிவு
வெல்வாய் பெண்ணே....!!!
கள்ளிப்பால் யாவையுமே கடந்தே வந்தாய்
காமுகரின் வாய் தப்பி நீயே வாழ்வாய்
வாழ்க்கைவழி இடர்தருமே பல வல்லூறு
வதம் செய்தழித்து பெண்ணே நீ படை வரலாறு....!!
காதல் என்ற சாகசத்தில் காம கூட்டங்கள்
வலைவீசி திரியுது பார் என்ன வேடங்கள்
இனங்கண்டு காதல் கொள்ள இல்லை தீமைகள்
ஒருவனுக்கு ஒருத்தி வாழ்வில் ஏக நன்மைகள்...!!
ஆண்டாண்டு காலங்களாய் அஞ்சி...அஞ்சி...
வாழ்ந்ததெல்லாம் போதும் நீ கெஞ்சி... கெஞ்சி...
ஆணிற்கு சமமானோம் கல்வி பதவி - பெண்ணே
வாழ்ந்திடுவாய் அடிமைத் தனத்தை புறமே தள்ளி...!!
இயலாது... இயலாது... எதுவும் உன்னால்
ஏளனந்தான் செய்திட்டார் உந்தன் பின்னால்
#நேரிசை வெண்பா
எண்ணத்தில் வல்லமை எப்போதும் கொண்டந்த
வண்ணத்தில் வாழ்வாங்கு வாழ்வாரே - விண்ணோடு
மண்ணகம் வாழ்த்திட மாண்புறுவார் நல்லோரும்
கண்ணென ஆற்றுங் கடன்.
#சொ.சாந்தி
மானுட நேயம் வளர்ப்போம்
நேர்மை கொண்டோர் வாருங்கள்
நேசக் கரத்தினை நீட்டுங்கள்
உதவிடத்தானே கரம் நமக்கு
உன்னதம் படைக்கட்டு மவைபிறர்க்கு..!
ஆதர வற்றோர் இல்லங்கள்
ஆனது யாரால் கூறுங்கள்
அன்பு செய்தால் ஒரு கூரை
அதனை விடுத்தால் பலகூரை..!
சுயநலம் உம்மில் உண்டென்றால்
சுடுகாட் டிற்கு விரட்டுங்கள்
நேயத்திற் கதுவே முதலெதிரி
நெஞ்சில் ஏற்றிச் செயல்படுவீர்..!
திறமை யிருந்தும் பலனில்லை
ஏழைக் கல்வி இறக்கத்திலே
ஏற்றிவைக்க இரங்கிடுவீர்
ஏணி யாகி உதவிடுவீர். !
குருதிக் கொட்டத் துடித்தாலும்
கொஞ்சமும் மனதில் ஈரமில்லை
கைபேசி வழியே படம்பிடிக்கும்
கல்மனத் தாரால் துன்பநிலை
விபத்தில் எவரும்
#கன்னடத்துப் பைங்கிளிக்குக்
கண்ணீர் அஞ்சலி😢😢😢
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி னாளே
கொள்ளை யழகுப் பைங்கிளி
வஞ்சம் வைத்துத் தூக்கி னானோ
வானு லக எமனடி..!
அபி நயத்தின் களஞ் சியமே
அவச ரந்தான் ஏனம்மா
சபிக்கி றோமே கூற்று வனை
சயன கதியில் நீயம்மா..!
கன்ன டத்துப் பைங்கி ளியே
கண் திறந்து பாரம்மா
உன்னை எண்ணி கதற விட்டு
உறக்க மின்னும் ஏனம்மா..?
அசைந்து நடக்கும் தேர் நீயே
அசை யாதிருக்கத் தாங்கல
கசை யடிதான் மரணச் செய்தி
காது வலித் தீரல..!
அழகை யுருட்டிச் செய்த சிலை
அழுகை தந்து போவதோ
பிழை செய்த எமனை எவர்
பிடித் திழுத்துக் கொல்வரோ?
நெஞ்சம் திருடிப் போன வளே
நினைவில் நின்று வாழுவாய்
கண்ணீர்
துன்பங்கள் உலுக்கி எடுக்கையில்
நாசி தொட்டு கன்னம் வருடும்
நேயம் மிக்க தோழன்..!
மகிழ்ச்சியை பறை சாற்றி
விழி விளிம்புகளில்
பட்டுத் தெறித்து
உடைந்து போகும்
கண நேர முத்துக்கள்..!
துன்பங்களின் போதெல்லாம்
கொதித்து வரிக்கோடிட்டும்
இன்பங்கள் போதெல்லாம்
குளிர்ச்சியுடன் சிதறியும்
நிலை மாறும் பச்சோந்தி......!
சிரிப்பிற்கும் அழுகைக்கும்
அரிதாரம் பூசும் வேடதாரி..!
ஆறாத மனக் காயங்களை
ஆற்றுப்படுத்தும்
அற்புத களிம்பு ..!
அவமானச் சின்னமென்று
ஆண் விழிகளில் சிந்த மறுக்கும்
அதிசய அருவி...!
கோழையானவர்களை
மறைவிடம் கூட்டிச்சென்று
குமுற வைக்கும்
#எப்பக்கத்தில் வந்து புகுந்துவிடும் இந்தி
எம்மொழி செம்மொழி
எங்கிலும் எங்கிலும்
எங்கும் நடமிடல் காணீர்
தெம்பினைத் தரும்மொழி
எங்களின் தமிழ்மொழி
என்பதில் பெருமையே கேளீர்..!
எட்டுத் திசைகளில்
இனிதாய் ஒலிக்குது
இடையினில் புகுமோ இந்தி
மெட்டினை இசைக்கும்
மேதினி யில்தமிழ்
வென்றிடும் என்றுமே முந்தி..!
அந்தென பலமொழி
ஆயிரம் வந்தென்ன
ஆயுத மெம்மொழி யேந்தும்
செந்தமிழ்த் தாக்கிட
சிதறும் வடமொழி
சில்லாய் நொறுங்கிய டங்கும்...!
ஆதிக்கம் செய்திடும்
ஆதி காலமொழி
ஆருளர் இதனை மறுக்க
போதி மரத்தமிழ்
பொன்னான நூல்களில்
போற்றுவர் தாமும் சிறக்க..!
வேலிகள் பலவாம்
வித்தகர் பலர
விதைப் பந்து..!
பிரபஞ்சத்தில் உலகத்தை
விதைத்தவனே கடவுள்
வெடிக்காத விதைக்குள்ளே
விளைபயிராய் பலஉயிர்கள்..!
மனிதவித்தின் மூலம்தான்
ஆதாமும் ஏவாள்
ஏராளம் எண்ணிக்கையில்
மனிதப்பயிர்கள் இந்நாள்..!
தந்தையவர் விதைப்பினில் நாம்
நடமாடும் செடிகள்
வளர்த்திடுதே கர்ப்பத்தில்
அன்னைத்தொப்புள் கொடிகள்..!
விரிந்தவானில் சூரியனை
விதைக்கிறதே வானம்
விளைச்சலில்தான் கிட்டிடுதே
வெளிச்சந்தான் நாளும்..!
சேமிப்பும் விதைப்பந்தே
ஆபத்தில் காக்கும்
சிக்கனதை விதைத்துப்பார்
சங்கடங்கள் தீர்க்கும்..!
சூட்சிகளை விதைத்தாரே
பிணங்கள்தான் விளைச்சல்
சகுனி வளர்த்த விதையினாலே
சகலருக்கும் உளைச்சல்..!
கவி அரங்கில் கவிதை வாசிக்க விருப்பமுள்ளவர்களுக்காக....
"கவி ஓவியா" மாத இதழ் நடத்தும் கவி அரங்கம் நாளை சென்னையில் நடை பெற இருக்கிறது. விருப்பமுள்ள சென்னை வாசிகள் பங்கு பெறலாம். விவரங்கள் பின்வருமாறு.
நாள்--------------------------------------------> 15-03-2015
துவக்க நேரம்------------------------------> காலை 9.30 மணி
முகவரி---------------------------------------> வீரசுவர்கர் மேல்நிலைப் பள்ளி, B.B. ரோடு, பெரம்பூர் நெடுஞ்சாலை,
---------------------------------------------------> சென்னை (...)
https://www.youtube.com/watch?v=GV8E90p7xkg
பூக்களோடு ஒரு கைக்குலுக்கல் ....
=================================
(சர்னா கவிதை வாசிப்பு போட்டி - கவிதை )
நவீன உலகில் நவீனங்களின் இடையில்
நாமும் இயந்திரங்களோடு இயந்திரங்களாய்
சிறிதேனும் சிந்திக்க மறந்தவர்களாய்...
நாளும் சிரிப்பை இழந்தவர்களாய்..
பொருள் தேடும் குறிக்கோளே இலக்காகி
உறவுகளை உதறி... திசைக்கு ஒருவராய்
வாழாத வாழ்க்கை நிதமுமாய்....
வாழ்கிறோமா என்பதனை மறந்து!!!
நாளும் தொடரும் மூச்சிறைப்பு ஓட்டங்களில்
உறவுகளையு (...)
எண்ணங்கள் மீறிய வண்ணம்
தளம் நாளும் மிளிர்ந்திடும் திண்ணம்
உலா வரும் சோலை இது மணக்கும்
உலகத்தில் உள்ளோரை நாளுமே ஈர்க்கும்
"எழுத்தின்" சேவைகளுக்கு நன்றி
தமிழை அதில் ஊன்றி வளர்போர்க்கும் நன்றி!!!