அ வேளாங்கண்ணி - சுயவிவரம்
(Profile)


பரிசு பெற்றவர்
இயற்பெயர் | : அ வேளாங்கண்ணி |
இடம் | : சோளிங்கர், தமிழ்நாடு |
பிறந்த தேதி | : 25-May-1977 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 06-Jan-2013 |
பார்த்தவர்கள் | : 37289 |
புள்ளி | : 7101 |
நான் நல்ல நண்பன்...
இருபது வருடங்கள் நாட்டுப்பணி முடித்து, தற்போது இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (மேல்பட்டி, வேலூர் மாவட்டம்) பணிபுரிந்து கொண்டுள்ளேன்....
திரு.அகன் ஐயா தொகுப்பாசிரியராக இருந்த "தொலைந்து போன வானவில்" எனும் நூலில் எனது கவிதை ஒன்று இடம்பெற்றுள்ளது....
மற்றும் தோழர்கள் கவிஜி மற்றும் தாகு என்னும் கனா காண்பவன் அவர்கள் தொகுத்தளித்த "மழையும் மழலையும்" எனும் நூலில் எனது இரண்டு கவிதைகள் இடம்பெற்றுள்ளன...
நிலாமுற்றம் என்ற முகநூல் குழுமம் வெளியிட்ட "சொல்லழகு" என்ற முதலாம் ஆண்டுவிழா கவிதைத் தொகுப்பு 2016 நூலில் எனது கவிதை "சந்திப்பு" இடம்பெற்றுள்ளது...
தமிழக எழுத்தாளர் குழும இரண்டாம் ஆண்டு விழாவில் (12.02.2017) வெளியிடப்பட்ட "தமிழக ஜோக்ஸ் பிரபலங்கள் (ஜோக்ஸ்)" எனும் திரு.திருமயம் பெ.பாண்டியன் மற்றும் திரு.வைகை ஆறுமுகம் ஆகியோரால் தொகுக்கப்பட்ட நூலில் எனது ஆறு நகைச்சுவைகள் இடம்பெற்றுள்ளது.
முக நூல் குழுமம் "கவியுலகப்பூஞ்சோலை"யின் ஆண்டுவிழாவான 01.05.2017 அன்று குழுமத்தின் வெளியீடான "ஆண்டு விழா மலரில்" எனது பாடல் ஒன்றும், மற்றொரு நூலான "மாற்றான் தோட்டத்து மல்லிகை"யில் எனது படைப்பு ஒன்றும் இடம்பெற்றுள்ளது.
30 ஆகஸ்டு 2017ல் முக நூல் குழுமம் படைப்பின் ஆண்டுவிழாவில் வெளியிடப்பட்ட ஆண்டு விழா மலரான "மௌனம் திறக்கும் கதவு" நூலில் ஒரு படைப்பும் மற்றும் படைப்பு குழும போட்டியின் தொகுப்பு நூலான "நதிக்கரை ஞாபகங்கள்" இதழில் ஒரு படைப்பும் இடம் பெற்றுள்ளன.
இதுவரை மூன்று கவியரங்கத்தில் கவிதை வாசித்துள்ளேன்.
இதுவரை "கல்கி" இதழில் ஒரு கவிதையும், ஒரு நொடிக் கதையும், "இனிய உதயம்" இதழில் மூன்று கவிதைகளும், "வாரமலர்" இதழில் பத்து குறுங்கவிதைகளும், ஒரு கவிதையும், இரண்டு சிறுகதைகளும், "அத்திப்பூ" இதழில் பதினான்கு கவிதைகளும், ஆறு சிறுகதைகளும், ஒரு நகைச்சுவையும்,"குங்குமம்" இதழில் இரண்டு கவிதைகளும், "ஆனந்தவிகடன்" இதழில் ஐந்து நகைச்சுவைகளும், "ராணி" இதழில் ஒரு நகைச்சுவையும், "குமுதம்" இதழில் நான்கு நகைச்சுவைகளும், "கல்கண்டு" இதழில் ஒரு நகைச்சுவையும், "பாக்யா" இதழில் எழுபத்தி ஏழு நகைச்சுவைகளும், ஒரு சிறுகதையும், ஏழு கவிதைகளும், "தினமலர் பெண்கள் மலரில்" ஒரு கவிதையும், இரண்டு நகைச்சுவையும், "தங்க மங்கை" இதழில் ஒரு கவிதையும், ஏழு நகைச்சுவைகளும், "ஜன்னல்" இதழில் இரண்டு கவிதைகளும், "தேவியின் கண்மணி" இதழில் ஒன்பது நகைச்சுவைகளும், "காமதேனு" இதழில் ஒரு கவிதையும், "பொதிகை மின்னல்" இதழில் இருபத்து இரண்டு குறுங்கவிதைகளும், ஐந்து நகைச்சுவைகளும், "இலக்கியச்சோலை" இதழில் ஒரு கவிதை, ஒரு வெண்பா, இரண்டு ஹைக்கூவும், "மின்னல் தமிழ்ப்பணி" இலக்கிய மாத இதழில் முப்பத்து ஆறு குறுங்கவிதைகளும், "பொதிகைச்சாரல்" இதழில் இரண்டு கவிதைகளும், "அச்சாரம்" இதழில் பதினைந்து கவிதைகளும், நான்கு நகைச்சுவைகளும், ஒரு சிறுகதையும், பதினான்கு எக்ஸ்பிரஸ் கதைகளும், "பாவையர் மலர்" இதழில் மூன்று சிறுகதைகளும், "படைப்பாளர்கள் குரல்" இதழில் ஒரு கவிதையும், "மாலைமதி" இதழில் பதினொரு கவிதைகளும், "வண்ணக்கதிர்" இதழில் ஒரு கவிதையும், "மக்கள் குரல்" நாளிதழில் ஒரு கவிதையும், மூன்று சிறுகதைகளும், "கொலுசு" மின்னிதழில் குறுங்கதை, குறுங்கவிதை மற்றும் சிறுகதைகளும், "சிறுவர்மலர்" இதழில் மூன்று சிறுவர் பாடல்களும், "சென்னை சிறுவர்மலர்" இதழில் ஒரு மொக்க ஜோக்கும், "சென்னை வாரமலர்" இதழில் ஒரு அர்ச்சனையும், "கோகுலம்" இதழில் மூன்று சிறுவர் பாடல்களும், "தினமணி" கவிதைமணியில் பல கவிதைகளும், "தி இந்து" தமிழ் தினசரியில் நாற்பத்தி ஏழு 'பஞ்ச்'களும், மூன்று கார்டூனும், மூன்று இகார்டூனும், அதன் சிறுவருக்கான இணைப்பான "மாயா பஜாரில்" ஒரு சிறுவர் கதையும் பிரசுரம் ஆகியுள்ளன..
(updated ஒன 20.01.2019 19.57)
======================================================================
https://www.facebook.com/velanganni77
======================================================================
https://m.facebook.com/groups/1695984020630329?view=permalink&id=1958171591078236
===========================================
எனது முதல் கவி அனுபவம்....
============================
1991... பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த வேளை... எப்படியாவது கவிதை எழுதிவிட வேண்டும் என்று தவித்துக் கொண்டிருந்தேன்.... வீட்டில் மாத, வார பத்திரிக்கைகள் பெரும்பாலும் வாங்கும் பழக்கம் இருந்ததால்... எங்கேனும் யாரேனும் கவிதை எழுதுவதைப் பற்றி எழுதியிருந்தால் உடனே படித்துவிடுவேன்.... ஆனால் எவ்வளவும் முயன்றும் ஒன்றும் எழுத வரவில்லை... எப்போதும் வானொலி கேட்கும் பழக்கமும் இருந்ததால்.. அதிலும் கவிதையைப் பற்றி ஏதேனும் ஒலிபரப்பினால் தவறாமல் கேட்டுவிடுவேன்.... இந்த வேளையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஓய்வு பெரும் நாள் வந்தது... அவருக்காக ஒரு பிரிவுரைக் கவிதை என்னை எழுதச் சொல்லி எங்கள் தமிழ் ஆசிரியை சொன்னார்கள்... ஆழ்ந்து யோசித்து நான் எழுதிக் கொடுத்த வரிகளை சிறிது திருத்தம் செய்து என்னை பள்ளியின் மேடையில் காலையில் வாசிக்கச் சொன்னார்கள்... அவ்வாறு ஆரம்பமாகியது... பின் பள்ளியில் ஒரு கவிதைப்போட்டி நடந்தது... அதில் மயில் எனும் தலைப்பில் நான் எழுதிய படைப்பு இரண்டாம் பரிசு பெற்றது... அதனை படித்த ஒரு ஆசிரியர் மிகவும் நன்றாக இருந்ததாகத் தெரிவித்தார்... அதுவரை நான் மயிலைப் பார்த்தது இல்லை.... பத்தாம் வகுப்பு விடுமுறையில் இயற்கையைப் பற்றி, விலங்குகளைப் பற்றி, கடவுளைப்பற்றி மிக அதிகமாக எழுதினேன்... அவை இன்றும் உண்டு பத்திரமாக...
சொந்தங்களின் குழந்தைகளுக்கு பிறந்த நாள் வாழ்த்து கவிதையாகவே எழுதி அனுப்புவேன் கடிதம் மூலமாக...
என் அண்ணன் ஒருவரின் திருமணத்தில் நான் கலந்து கொள்ள முடியாத சூழ் நிலையில் ஒரு திருமண வாழ்த்து மடம் எழுதி அனுப்பினேன்... அதனை எனது அப்பா மற்றும் சொந்தங்கள் ஒரு பத்திரிக்கையாக அடித்து அங்கு வந்த அனைவருக்கும் கொடுத்திருக்கின்றனர்... பின்பு நான் ஊருக்குச் சென்ற பொழுது நீ வராவிட்டாலும் உன் கவிதையை எல்லோரும் படித்துச் சென்றது நீ அங்கு வந்தது போலவே இருந்தது என்று சொன்னது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது...
அந்த கவிதைப்பயணம் இன்று எழுத்துத்தளத்தின் மூலமாகவும், முகப்புத்தகத்தின் படைப்பு, ஒரு கவிஞனின் கனவு, நிலாமுற்றம், தமிழ்பட்டறை, கவியுலகப் பூஞ்சோலை மற்றும் செய்யுட்கலை சூடிகை ஆகிய குழுமங்களின் மூலமாகவும் தொடர்ந்து கொண்டுள்ளது.. மேலும் அனைத்து இதழ்களுக்கும் தினமும் கவிதைகளை அனுப்பிக் கொண்டுள்ளேன்... என்றாவது என் எழுத்துக்கள் எல்லோருக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையில்...
*************************************************************
#தூண்டிலில்_சிக்காத_மீன்கள்
***** ***** ***** ***** ***** *****
சாதிக்க நினைப்போரை மலையும் தடுத்திடாது
தாண்ட நினைத்தோரை கல்லும் தடுக்கிடாது
போதிக்க ஊரிலே பெரியோர்கள் பலருண்டு
வீணாக இருந்தோமெனில் காணாமல் போயிடுவோம்
முதலடி வைத்ததுமே முள்ளும் குத்திடலாம்
வலிக்குதென நினைத்தோமெனில் வரும்வெற்றி மாறிடலாம்
முள்ளை மிதித்துநின்று வலியைப் பொறுத்தோமெனில்
முள்ளும் மலராகும் வான்மேகம் மலர்தூவும்
புயலது அடிக்குமெனில் இலைகள் உதிர்ந்திடலாம்
கடலது கோபம்கொள்ள கரைகள் அழுதிடலாம்
எரிமலை பொங்கிடவே தரையெல்லாம் கருகிடலாம்
லட்சிய வெறிகொண்டால் எதையும் எதிர்த்திடலாம்
முயற்சி செய்வதற்கான முயற்சியை எடுத்துவிட்டால்
அயர்ச்சி ஓடிவிடும் நம்பிக்கைவிதை மரமாகும்
பயிற்சி செய்துவந்து பந்தயத்தில் கலந்துகொள்ள
தளர்ச்சி தளர்ந்தோடும் கிளர்ச்சி மனம்கொள்ளும்
புழுவினைக் கட்டித்தூண்டில் மீனினைப் பிடிப்பதுபோல்
மயக்கும் காரணிகள் சுற்றிலும் பயமுறுத்தும்
எழுச்சியே கொள்கையென்று நினைக்கும் இதயத்திற்கு
தடைக்கல்லும் படிக்கல்லாகும் நாளையே விடியலாகும்
------------------------------------------------------------------------------------
அடி
====
அடியே அடி அடியே
அடி அடியா எடுத்து வச்சு
அடி மனசுல நுழைஞ்சுட்ட
அடிக்கடி உனை நினைக்கவச்சு
அடி என்னை வளைச்சுட்ட
அடிபட நான் விழுந்தவேள
அடி மருந்தென மாறிட்ட
அடி அடியா எழுதவச்சு
அடி கவிஞனா மாத்திட்ட
அடிக்கிற சுடும் வெயிலுல
அடிக்கிற பெரும் மழையும்நீ
அடிக்கிற கடும் புயலுல
அடி இதயத்து வயலின்நீ
அடிப்படை எதும் புரியாது
அடி எழுந்தது காதலே
அடிதடி அது நடந்தாலும்
அடி இருக்குமே காதலே
அ.வேளாங்கண்ணி
ஒரு கவிதை
=============
எழுத எழுத எப்போதும் வந்து போகும் வரிகள்
எழுதாத போதெல்லாம் ஏனென்று கேட்பதில்லை.
எழுத நினைத்தாலும் எழுத விடுவதில்லை
எப்போதும் சுற்றி வரும் வேலைப்பளு.
எழுதவேயில்லையென உள்ளுக்குள் உரைத்தாலும்
எழுதாமல் இருப்பதே வழக்கமாகிவிட்ட இந்நாட்களில்
எழுத அமரும் போது எப்படியோ வந்துவிடுகிறது
எப்போதும் போல ஒரு கவிதை!
(எங்கே கவிதையென கேட்டு விடாதீர்கள்.
அப்புறம் கவிதை கோபித்துக்கொள்ளும்)
அ.வேளாங்கண்ணி
உணவில் சுவையேதும் இல்லை
எதுவும் நிறைவாக இல்லை
பசியை உடனே போக்கிடுமே
அம்மா சோற்றினை ஊட்டிவிட்டால்..
வீட்டில் விளக்கேதும் இல்லை
நாளைக்கு வருமானம் இல்லை
நிம்மதி மனதில் வந்திடுமே
அம்மா கவளத்தை தந்துவிட்டால்..
நிலவைக் கொஞ்சம் தொட்டுக்குவோம்
நட்சத்திரம் கடித்து சுவைத்திடுவோம்
வானம் ஊத்தி குடித்திடுவோம்
அம்மா ஊட்டும் பிடிசோறில்..
வந்த பசியும் தங்கிடாது
எந்த பசியும் ஜெயித்திடாது
சொந்தக் கண்ணும் அழுதிடாது
உடலே திடமாய் ஆகிவிடும்
உப்புமா கூட சுவைத்திடுமே
பாகற் காயும் இனித்திடுமே
பழைய சோறும் பஞ்சாமிர்தமே
அம்மா அன்பாய் ஊட்டிவிட்டால்
அன்பால் உள்ளம் குளிர்ந்துவிடும்
வயிறும் முழ
அவனொரு பைத்தியக்காரன். பிழைக்க தெரியாதவன். வாழத்தெரியாதவன். விவரங்கெட்டவன். முன்னேறத்தெரியாதவன். எதற்குமே லாயக்கில்லாதவன்.
அவனது ஒரே குற்றம் எப்போதுமே உண்மையை மட்டுமே பேசுவான். அதனால் அவனுக்கு என்ன கஷ்டம் வந்தாலும் பரவாயில்லை. எதற்கும் கை நீட்ட மாட்டான். தான் உண்டு தன் வேலையுண்டு என்று தன் நேர்மையான வழியில் நாளும் நடப்பவன். நல்லவன். உலகமே கெட்டுப்போன பின்பு நல்லவர்கள் எல்லோருமே மற்றவர்களுக்கு இப்படித்தானோ...!
அவனோடு இருந்த, வேலை பார்த்த ஒவ்வொருவரும், அவர்களது வாழ்க்கையில், பொருளாதாரத்தில் முன்னேறிக்கொண்டிருக்க, இவன் மட்டும் அதே நிலையில் தொடர்ந்தான். மிகவும் சந்தோஷமாக இருந்தான்.
சில்லென்று பூத்த சிறுநெருஞ்சி தோட்டத்தினில் மலர்ந்த சிறுமலராய் சீனு என்னும் ஓர் இளைஞனவன் சிற்றூராம் சீரணியில் வசிக்க, அவன் வாழ்க்கை ஓடமது பெறு உலகாம் கடல்தனிலே அலைகளாகிய துன்ப அசைவினில் சிக்காமல், சீரான வாழ்க்கையினை சிறப்பாக வாழ்ந்து வர, துன்பமின்றி துயரமின்றி வாழ்க்கை ஓடம் தான் ஓட, சிறு தென்றலாய் அவனுடன் புதிதாய் வேலைக்கு சேர்ந்த கனகன் என்பவன் அவன் நண்பனாகி, மெல்ல ஓடிய அதாவது சிறிய மகிழ்ச்சியுடன் கூடிய வாழ்க்கை ஓடமது, பெறு மகிழ்ச்சியாய் மாறி, மன அமைதி கொடுத்து, சிறு தென்றலின் மலர் அசைவினை போல மென்மையாக மாறி வாழ்க்கை ஓடமானது செல்ல, தாய், தந்தை அற்ற சீனு, சிறு ஏழைத்தொழிலாளியாய் இருந்து கொண்டு,
காட்டுத்தீயும் மூன்று ரோஜாக்களும் 1
பாகம் ஒன்று
=============
நகரின் பிரதான வீதி.
'இளமதி' தொலைக்காட்சி நிறுவனத்தின் எட்டு மாடிக்கட்டிடம். வழக்கம் போல பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.
கட்டிடத்தின் முக்கியமான பல அறைகளில் அடுத்தடுத்த வாரங்களில் ஒளிபரப்பாக இருக்கின்ற பல கேம் ஷோக்கள், சமையல் நிகழ்ச்சிகள், குழந்தைகள் நிகழ்ச்சிகள், டான்ஸ் ஷோக்கள், காமெடி ஷோக்கள் இவற்றின் படப்பிடிப்புக்கான தயாரிப்புகள் விறுவிறுவென நடந்து கொண்டிருந்தன.
மற்றும் சில அறைகளில் படப்பிடிப்பு முடிந்தவற்றின் போஸ்ட் புரெடக் ஷன் வேலைகள் நடந்து கொண்டிருந்தன.
அப்பொழுது கட்டிடத்தின் நுழைவு வாயிலில் ஒரு புதுப்ப
வளைந்து நெளிந்து மலையேற
நன்றாகத் தெரிகிறது
அயர்ச்சி!
*****
சூரியன் வெள்ளையடிக்க
அதனைக் கொள்ளையடிக்கும்
இரவு!
*****
மேடையில் இருக்கும் வேளை
பெரும் ஆட்டம் ஆடுகிறது
நாக்கு!
*****
முடிவே இல்லாமல்
தொடர்ந்து கொண்டிருக்கிறது
காலம்!
==
வெட்டிய மரத்தால்
சிதைக்கப்படுகிறது
பறவைக்குடும்பம்!
==
காய்ந்த புல்
காற்றோடு சாரல்
மீட்சி!
*****
இருள் அதிகமாக
நன்றாகத் தெரிகிறது
மின்மினி!
*****
ஒளி வந்ததும்
வலி வருகிறது
கண்ணில் நீர்!
*****
எறும்பின் பாதையில்
ஊர்ந்து கொண்டிருக்கின்றன
கண்கள்!
*****
சேறும் சகதியும்
சொல்லிச் செல்கிறது
உழவன் பாதை
==
அ.வேளாங்கண்ணி
செவப்பி
==========
அத்தியாயம் 1
===============
"வாங்க.. வாங்க.. வணக்கம்..."
"உங்க முகத்துல சில்லுனு காத்து படுதா.. அப்படியே ஒரு பச்ச மண்ணு வாசம் உங்க மூக்கு தொலைக்குதா.. அப்ப நீங்க பொய்கை ஆற்றங்கரையோரம் நிக்கறீங்கன்னு அர்த்தம்.."
"சுத்திமுத்தியும் பாருங்க.."
"எவ்வளவு மரம்...! எவ்வளவு வனம்...! எவ்வளவு பறவைங்க...! எப்படி சிரிச்சுகிட்டு கெடக்கு பாருங்க இந்த பூமி..!"
"அட.. அந்த வானத்தைப் பாருங்க.. எவ்வளவு பொலிவா இருக்குனு"
"அடடே! என்ன இது சத்தம்? கொய்யா முய்யா கொய்யா முய்யானு.."
"ஓ அப்படியே சேதி கேட்டுட்டே... பத்மாவதியம்மா வீட்டுக்கு வந்துட்டோமா..!"
உனக்கெதற்கு வேண்டாத வேளை!?
தினம் தினம்
புதுப்புது கவிஞர்களை பிறக்க வைக்கிறாய்..
வேண்டாமடி வேண்டாம்..
ஒழுங்காய் வீட்டுக்குள்ளேயே இரு..
இருக்கும் கவிஞர்கள் போதும்..!
அலை அடித்துக் கொண்டிருக்கிறது
பயம் அலைந்து கொண்டிருக்கிறது
நிலை குலைந்து கொண்டிருக்கிறது
நிஜம் வருத்திக் கொண்டிருக்கிறது
உயிர் பறந்து கொண்டிருக்கிறது
உலகம் தவித்துக் கொண்டிருக்கிறது
மூச்சு விழித்துக் கொண்டிருக்கிறது
பேச்சு நடுங்கிக் கொண்டிருக்கிறது
அன்பு கலங்கிக் கொண்டிருக்கிறது
உறவு ஆடிக் கொண்டிருக்கிறது
ஆரோக்கியம் திரும்பவரும் நாள்பார்த்து
ஜனமே தவமிருந்து கொண்டிருக்கிறது
ஏமாற்றக் கவிதை 3
===================
பத்தாம் வகுப்பு மாணவனாய்
நான் நகங்களை ஏனோ கடிக்கின்றேன்..
நீ இதற்குத் தானா பழகினாய்
காதல் தேசம் விட்டே விலகினாய்?
காதல் பட்டம் செய்திடவே
எத்தனை நாளாய் பாடு பட்டேன்..
நீ பறித்தது கூட அல்லாமல்
அதனை கிழித்துப் போட்டதும் ஏனடியோ?
காகிதக் கப்பல் ஒன்றுசெய்து
தூறும் மழை நாள் பார்த்திருந்தேன்..
நான் கண்கள் சொக்கும் வேளையிலே
அதனை பிடிங்கிச் சென்றதும் ஏனடியோ?
கரடி பொம்மைக் கேட்டழுது
வீட்டில் கொஞ்சிய படியே நானிருந்தேன்..
கத்தி கொண்டு அதைக் குத்தி
பஞ்சு பஞ்சாய் ஆக்கியது ஏன்?
பம்பரம் எனக்குப் பிடிக்குமடி
அதில் பலதிணுசுண்டு என் வீட்டிலடி..
அத்தனை பம்பரம் எடுத்துச்
நண்பர்கள் (455)

Deepan
சென்னை

வீரா
சேலம்

சக்திவேல் சிவன்
சிங்கப்பூர்

வேலாயுதம் ஆவுடையப்பன்
KADAYANALLUR
