sarabass - சுயவிவரம்
(Profile)


தமிழ் பித்தன்
இயற்பெயர் | : sarabass |
இடம் | : trichy |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 21-Feb-2013 |
பார்த்தவர்கள் | : 3632 |
புள்ளி | : 3720 |
கவிஞர் ,கல்லூரிப் பேராசிரியர் மற்றும் பள்ளி முதல்வராகப் பணியாற்றியவர் .திருச்சியைச் சேர்ந்தவர் .கவிதை என் உயிர். எதைப் பார்த்தாலும் மனதில் நிலைநிறுத்தி கவிதை எழுதுவது எனது பொழுதுபோக்கு .இயற்கையின் காதலி நான் .படிப்பு ம். MSC .M PHIL (CHEMISTRY ),M .ED M .PHIL (EDUCATION ),P .G DGC
வாலிபக் கவிஞர் வாலி
வாலிபர்கள் நெஞ்சத்தில் வாலிக்கோ இடமுண்டு .
காலியாய் இருப்போரும் காதலில் விழுந்திடுவர் .
வேலியில்லாப் பயிர்போல வேகமுடன் பற்றிடுவர் .
காலில்லாக் காளையர்க்கும் காலாகும் இவர்பாக்கள் .
மல்லிகையும் மயங்குகின்ற மன்மதனாய் கவிகளிலே
பல்சுவையும் கூட்டுகின்றப் பாசமிகு கவிஞரிவர் .
மாதவியும் மயிலாகி மண்ணுலகில் தோகைவிரிப்பாள் .
ஏகாந்தம் மிக்குடைய ஏற்றமிகும் எழுத்தாணி .
புன்னகை மன்னனை பூவிழிக் கண்ணனை
வண்ணமிகு பாட்டினிலே வகையுறவே வடித்தவராம் .
தென்றலிலே மிதந்துவரும் தெம்மாங்கு கீதங்கள்
காற்றுவாங்கப் போனாலோ காலமெல்லாம் இசைக்குமே .
ஆண்டுக்கு ஆண
குழந்தைகளா கூலிகளா கொடுமையான அவலநிலை .
மழலைகளின் நிலையிதுவா மரணிக்கும் மனிதநேயம் .
கழனிமேடு செப்பனிடும் காலத்தின் கொடுமையிது .
பழங்கதையும் இதுவல்ல
வெண்பா மேடை -- 100
தமிழ் சிறப்பெழுத்து வெண்பா
வாழ்த்திடுவோம் முத்தமிழை வாழ்க தமிழ்த்தாயும்
தாழ்ந்திடுமா நம்மொழியும் தாழாது - வாழ்ந்திடும்
காழ்ப்புணர்ச்சி சூழாக் கமழ்கின்ற பைந்தமிழ்
மூழ்காதச் சூழலில் மூழ்கு .
சரஸ்வதி பாஸ்கரன்
வனைகின்ற சொற்களெல்லாம் வண்ணமாய்த் தீட்டப்
புனைகின்றேன் நற்கவிதை பூத்தே - எனையாளும்
செந்தமிழில் காட்டுகின்ற செப்பேடும் சான்றாகும்
உந்தும் படைப்புகள் ஊன்று .
கிராமிய கவிதைச் சிறப்பு சான்றிதழ் போட்டியாளர்
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்
வெள்ளாம வெளஞ்சிருக்கு கண்ணம்மா !
வெதச்ச நெல்லும் கதிராச்சு கண்ணம்மா !
வெந்த நெஞ்சும் மாறிடிச்சு கண்ணம்மா !
வெள்ளி மெட்டி வாங்கித்தாரேன் கண்ணம்மா !
தைமகளும் பொறந்திடுவா பொன்னம்மா !
தழைக்குமடி தரிசுகளும் பொன்னம்மா !
தரமான வெள நெலமும் பொன்னம்மா !
தந்திடுமே வெள்ளாம பொன்னம்மா !
நாத்துநட வாடிபுள்ள கண்ணம்மா !
நட்டு வெச்சா சோறுண்டு கண்ணம்மா !
நல்ல மழை பெய்யுமடி கண்ணம்மா !
நகரத்துக்குப் போவாதடி கண்ணம்மா !
கண்ணீரு வேணாமடி பொன்னம்மா !
தண்ணீரு வந்திடுமே பொன்
தரையிலும் கண்ணீர் !
தண்ணீரிலும் கண்ணீர் !
கரையிலும் கண்ணீர் !
கனவிலும் கண்ணீர் !
கடலே எங்கள் வாழ்க்கை !
கரையிலே எங்கள் குடும்பம் !
படகிலே ஓட்டை விழுந்தால்
பரதவர் வயிறு நிரம்புமா ?
தண்ணீரில் நீந்தக் கற்றோம்!
தரைதனில் கண்ணீர் விட்டோம் !
பாரினில் வாழவழி இல்லை ;
பலநாள் மீன்களாய்த் துடித்தோம் !
மீனவர் சொத்து மீன்தான் !
மீனவர் சொந்தம் மழைதான் !
மீனவர் இல்லம் படகுதான் !
மீனவர் உலகம் கடல்தான் !
இலங்கை எல்லையிலே
இயல்பாய் செல்லும் மீனவன்
நடுக்கடலிலே சிக்கி
நல்வாழ்வாம் உயிரை இழக்கின்றான் ;
சுழன்றடிக்கும் சுறாவளியோ!
போர்த்தொடுக்கும் புயலோ
சிதற அடி
ஆண்மையது தவறினாலே
------ ஆண்மகனும் அழகில்லை .
ஆண்டவனால் தந்திட்ட
------- ஆளுமையை மாற்றாதீர் !
வேண்டுமெனில் கிட்டிடுமா !
------ வேதனைதான் மிஞ்சுமன்றோ !
மாண்புடையக் கற்புநெறி
------ மானிடர்க்குப் பொதுவன்றோ !!!
கள்வனாக வாழ்வதற்குக்
------- காளையர்கள் முற்பட்டால்
புள்ளிமான் போன்றதொரு
------- புவிமகளும் வரமாட்டாள் !
அள்ளியள்ளி அணைத்திடுங்கள்
------- அன்புடைய மனையாளை .
துள்ளுகின்ற மனத்தினிலே
------- தூய்மைநெறி சேரட்டும் !!!!
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்
தித்திக்கும் கவிப்பொங்கல் -- கதம்ப சாம்பார்
தமிழ் வணக்கம்
முத்தமிழே மூத்தவளே முழுதும் உன்னை
------- முத்தாய்ப்பாய் யான்வணங்கித் தொடங்கு கின்றேன் .
உத்தமமும் நீதானே என்றன் நாவில்
------- உறைபவளும் நீதானே மாற்ற முண்டோ .
எத்தனையோ மொழிகளிலும் சிறப்பும் நீயே
------- என்றனுடைக் கவிகளுக்குச் சின்னம் நீயே !
தத்துவத்தின் முத்திரையின் தலைவி நீயே !
------- தரணிதனை ஆண்டிடுவாய் தமிழே நீயே !!
அவையடக்கம் :-
அவைதனையே வணங்கிநானும் தமிழர் மாண்பில்
------- அவையடக்கம் வந்திங்கே சொல்லு கின்றேன்
சுவைபடவே கவியரங்கை நடத்து கின்ற
------- சொல்வேந்தர் தலைமைக்கும் வணக்கம் ச
ஆண்மையது தவறினாலே
------ ஆண்மகனும் அழகில்லை .
ஆண்டவனால் தந்திட்ட
------- ஆளுமையை மாற்றாதீர் !
வேண்டுமெனில் கிட்டிடுமா !
------ வேதனைதான் மிஞ்சுமன்றோ !
மாண்புடையக் கற்புநெறி
------ மானிடர்க்குப் பொதுவன்றோ !!!
கள்வனாக வாழ்வதற்குக்
------- காளையர்கள் முற்பட்டால்
புள்ளிமான் போன்றதொரு
------- புவிமகளும் வரமாட்டாள் !
அள்ளியள்ளி அணைத்திடுங்கள்
------- அன்புடைய மனையாளை .
துள்ளுகின்ற மனத்தினிலே
------- தூய்மைநெறி சேரட்டும் !!!!
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்
தரையிலும் கண்ணீர் !
தண்ணீரிலும் கண்ணீர் !
கரையிலும் கண்ணீர் !
கனவிலும் கண்ணீர் !
கடலே எங்கள் வாழ்க்கை !
கரையிலே எங்கள் குடும்பம் !
படகிலே ஓட்டை விழுந்தால்
பரதவர் வயிறு நிரம்புமா ?
தண்ணீரில் நீந்தக் கற்றோம்!
தரைதனில் கண்ணீர் விட்டோம் !
பாரினில் வாழவழி இல்லை ;
பலநாள் மீன்களாய்த் துடித்தோம் !
மீனவர் சொத்து மீன்தான் !
மீனவர் சொந்தம் மழைதான் !
மீனவர் இல்லம் படகுதான் !
மீனவர் உலகம் கடல்தான் !
இலங்கை எல்லையிலே
இயல்பாய் செல்லும் மீனவன்
நடுக்கடலிலே சிக்கி
நல்வாழ்வாம் உயிரை இழக்கின்றான் ;
சுழன்றடிக்கும் சுறாவளியோ!
போர்த்தொடுக்கும் புயலோ
சிதற அடி
கிராமிய கவிதைச் சிறப்பு சான்றிதழ் போட்டியாளர்
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்
வெள்ளாம வெளஞ்சிருக்கு கண்ணம்மா !
வெதச்ச நெல்லும் கதிராச்சு கண்ணம்மா !
வெந்த நெஞ்சும் மாறிடிச்சு கண்ணம்மா !
வெள்ளி மெட்டி வாங்கித்தாரேன் கண்ணம்மா !
தைமகளும் பொறந்திடுவா பொன்னம்மா !
தழைக்குமடி தரிசுகளும் பொன்னம்மா !
தரமான வெள நெலமும் பொன்னம்மா !
தந்திடுமே வெள்ளாம பொன்னம்மா !
நாத்துநட வாடிபுள்ள கண்ணம்மா !
நட்டு வெச்சா சோறுண்டு கண்ணம்மா !
நல்ல மழை பெய்யுமடி கண்ணம்மா !
நகரத்துக்குப் போவாதடி கண்ணம்மா !
கண்ணீரு வேணாமடி பொன்னம்மா !
தண்ணீரு வந்திடுமே பொன்
காலைக் கதிரவனைக் கண்டலர்ந்த தாமரையும்
மாலைச் சுடரால் மயங்குவதேன் ? - பாலையிலும்
சோலைப் பனித்துளியாய்ச் சொந்தங்கள் சேர்ந்திட
ஓலை அனுப்பிடுவோ மோம்பு .