krishnan hari - சுயவிவரம்
(Profile)


பரிசு பெற்றவர்
இயற்பெயர் | : krishnan hari |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 03-Apr-1981 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Jun-2010 |
பார்த்தவர்கள் | : 11747 |
புள்ளி | : 5752 |
உங்கள் கருத்து பகிர
rudhran198134@yahoo.com (or)
rudhran198134@rediffmail.com
rudhranhari198134@gmail.com
rudhrahari198134@sify.com
ஒரு துளி விஷமென்றாலும் அதன் வீரியம் அது காட்டும்
மனிதா ..........
உனக்குள் ஆயிரம் திறமை உண்டு அதில் ஒரு துளியேனும் நீ காட்டு .........
அடியே சகியே
வா. வா என் அழகியே
என்னை ஏங்க விட்டவளே
என் நெஞ்சை தொட்டவலே
வானவில் வண்ணம் கொண்டு
என் வாழ்வில் வந்தவளே....
கரை தேடும் கப்பல் போல்
உனை தேடி அலைகின்றேன்
உன்னை நான் காணாமல்
நாள்தோறும் சிதைகின்றேன்
அலைபோல தொடர்கின்றேன்
அருவி போல் விழுகின்றேன்
எங்கெங்கோ உனை தேடி
என்னை நான் தொலைக்கின்றேன்
சிப்பிக்குள் முத்தை போல்
எனக்குள்ளே நீ வந்தாய்
எரிதனலாய் காதல் தந்து
எங்கேயோ பறந்து சென்றாய்
கூடு தேடும் பறவை போல்
உன் காதல் தேடும் பேதை நான்
என் காதல் பொறுத்த மட்டும்
சீதைகேற்ற ராமன் தான்...
வலி எது வலி எது சொல்லடி
அது விழிகள் பேசிடும் மொழியடி
சுகம் எது சுகம் எது சொல்லடி
சொல்லாத காதல் வலி தாணடி
புலம்பல் பிறக்குது தனிமை வலிக்குது
இளமை இழுகிது பொறுமை சிரிகிது
காதல் கணக்குதடி சொல்லிட துடிக்குதடி
மனம் தனியே தவிக்குதடி...
உன்னை நினைசபடி....
சொர்க்கமும் நரகமும் இரு துருவமடி
உன் காதல் உணர்த்தும் இரண்டுமடி
வாழ்வா சாவா தெரியாமல்
வாழ்கிறேன் நானும் விரக்தியில்
முதல் காதலா
முற்றும் கோணலா
நேசம் குறையுமா
பாசம் மாறுமா
விரும்பிடும் மனசு
மாறிடும் பொழுது
காதல் வாழுமா
இல்லை சாகுமா
உண்மை நேசத்தை
சேதம் ஆக்குமா
தன்மை என்பதே
தானாய் மாறுமா
கேள்விகள் ஆயிரம்
விளைந்தால் நியாமா
தர்க்கம் தொடர்ந்தால்
வாழ்க்கை இனிக்குமா
விருப்பம் மாறலாம்
விரும்பியது மாறுமா
திருப்பம் தருவதாய்
திரும்ப செல்வதா
தேடி வருவாயா
என்னை தேடி வருவாயா...
ஒரு நொடி போதுமடி நீ
என் தோள் சாய்ந்து கொள்ள
நீ காதலை மறுப்பதென்றால்
துணிவேன் என்னை மாய்த்துக் கொள்ள
உன்னை பார்த்த அந்த நொடி
என்னை தொலைத்தேன் அதே வினாடி
தொலைந்ததை தேடாமல்
உன்னை தேடி நின்றேன்
என்னை கண்டெடுக்க....
என் எதிர்கால கனவெல்லாம்
உன்னை தொடருதடி...
என் எதிர்காலம் நீயென்று
என் நெஞ்சம் சொல்லுதடி...
உனக்கும் கனவிருக்கும்
அதில் என் நினைப்பிருக்கும்
என்று கனவு கொண்டேன்
உன்மேல் காதல் கொண்டேன்....
நீ என் காதல் புரிந்து கொள்ள
என் கவிதை வாசித்து பார்
என் நேசம் உனக்கு புரியும்
காதலின் ஆழம் தெரியும்....
கதிரருக்கும் வேலையில
வாய்க்கா வரப்பு ஓரத்துல
என்ன களவாடி போறவளே சின்ன புள்ள
கொஞ்சம் பொறு உன் கூட நானும் வரேன்
கதிரருக்கும் மாமனுக்கு
கஞ்சி கொண்டு வந்ததில்ல
வீச்சருவா வீரனுக்கு
வெட்டி கதை தேவையில்ல
பரிசம் போட்டா மாமனுக்கு
மொத்தமாய் சொந்தம் இந்த புள்ள
உன் விருப்பு வெறுப்பு தெரியாம
எப்படி நான் பரிசம் போட சொல்லு புள்ள
பிடிக்காம சிரிப்பேனா இல்லாம மறைப்பேனா
பொண்ணு மனசு புரியலையே இந்த
புத்தி கெட்ட மாமனுக்கு...
எங்க ஊரு வீரனுக்கு
இந்த வார்த்தை போதும் புள்ள
எனக்கு உன்ன பரிசம் போட
சீக்கிரமே நானும் வரேன்
தங்க தாலி செய்யப் போறேன்
காத்திருடி சின்ன புள்ள
கதிரருக்கும் வேலை முடி
எதையும் உண்ணிலிருந்து தொடங்கு
குறை என்பதெல்லாம்
மற்றவர் குற்றம் காணும்வரை
நிறை என்பதெல்லாம்
மற்றவர் உன்னை புகழும்வரை...
எதையும் ஏற்காமல்
எங்கும் பாராமல்
எவன் சொல்லும் கேளாமல்
உன்னில் நீ தொடங்கு
வெற்றியும் தோல்வியும்
காலம் சொல்லும்
வென்றிட அனுபவம்
பாடம் தரும்
உன்னை உலகம் உற்று
நோக்கும் காலம் வரும்
அதுவரை போராடு
உன்னில் இருந்து தொடங்கட்டுமே..
சூரியன் அனைந்துவிட்டால்
நாட்கள் நகராது
கிழமைகள் இருக்காது
விடியும் என்ற சொல்லே
புழக்கத்தில் இருக்காது
பகல் கனவு பொய்யாகும்
இரவு கனவு நிஜமாகும்
வானம் இறந்து போகும்
வண்ணம் களையொழந்து போகும்
வேளாண்மை இறந்து போகும்
வெள்ளாமை மறந்து போகும்
இரவில் பயிர் செய்யும் பழக்கம் உருவாகும்
செய்யர்க்கை ஒளி கொண்டு எல்லாம் அரங்கேறும்
காலம் மூன்றாகும்
கணிப்புகள் காலம் வெல்லும்
ஜோசியம் பிரதான தொழிலாகும்
இரவில் நடந்த எல்லாம்
காலமின்றி அரங்கேறும்
அதுதான் இயல்பு என
பழக்கம் உருவாகும்
பகல் கனவு பழமொழியை
வழிமொழிய வாய்ப்பின்றி போகும்
கண்காணிப்பில் உலகம் வரும்
கண்ணயரும் நேரம் எல்லாம்
க
நானும் தோழியும் பேசுகையில்
அவள்.....
எல்லாம் கவியாக்கி
என்னை அசர வைத்தாய்
என்னை பற்றி
ஒரு கவிதை சொல் என்றாள்
புன் சிரிப்பை உதிர்த்து விட்டு
சொல்கிறேன் என்றேன் சில நொடி
மௌனமாய் நின்றேன் --
அவள்.....
கவிதை வரவில்லையா
நான் ரசிக்கும் பொருளில்லையா
என்று கேட்டு சிரித்தாள்
கவிதைக்கு கவிதை சொல்ல
எப்படி நான் தொடங்க
என்று யோசித்தேன்
வார்த்தையை யாசித்தேன்
இயற்கை ஒரு கவிதை
நிலவும் ஒரு கவிதை
காதலும் ஒரு கவிதை
பெண்ணும் ஒரு கவிதை
மேற்சொன்னவை எல்லாம்
ஒவ்வொன்றும் ஒரு அழகு
என் தோழி நீ மட்டும்
எல்லாமே அழகு...
உன்னை பற்றி என்றால்
என் கவிதைகளின் தாயகம்
உன் நிழல் என நானும்
என் நிழல் என நீயும்
மனதில் எழும் ராகம்
சேர்ந்திட மனம் ஏங்கும்
தனிமையில் சில நேரம்
உன் முகம் வந்து போகும்
காதலில் பல நேரம்
தனிமையில் புலம்ப தோன்றும்
கண்களின் வார்த்தையை
மாற்றிட பார்க்கிறேன்
வாய்மொழி வந்திடுமா
உன் காதலை கேக்கிறேன்
உணர்வுகள் உண்டிடும்
பழக்கத்தை வாங்கினேன்
அதன்பேர் காதல்
என்றே மாற்றினேன்
என் நேசம் புரியுமா
என்று நான் கேட்கவே
பெண் பூவே உனக்கென
கவிதைகள் எழுதினேன்
கவிதையில் காதலை
சொல்வது பழமைதான்
இருந்தும் நான் சொல்கிறேன்
அனைத்துமே உண்மைதான்
உண்மைகள் கூடிய
காதல் என்னுடையது
என் கவிதைகள் அனைத்துமே
உனக்கென இருக்குது ......
படிக்கவும்
நண்பர்கள் (219)

சக்திவேல் சிவன்
சிங்கப்பூர்

சத்தியமூர்த்தி
சென்னை

அருணன் கண்ணன்
கிருஷ்ணகிரி

த-சுரேஷ்
திருவில்லிபுத்தூர்
