krishnan hari - சுயவிவரம்
(Profile)


பரிசு பெற்றவர்
இயற்பெயர் | : krishnan hari |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 03-Apr-1981 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Jun-2010 |
பார்த்தவர்கள் | : 11741 |
புள்ளி | : 5747 |
உங்கள் கருத்து பகிர
rudhran198134@yahoo.com (or)
rudhran198134@rediffmail.com
rudhranhari198134@gmail.com
rudhrahari198134@sify.com
ஒரு துளி விஷமென்றாலும் அதன் வீரியம் அது காட்டும்
மனிதா ..........
உனக்குள் ஆயிரம் திறமை உண்டு அதில் ஒரு துளியேனும் நீ காட்டு .........
வார்த்தைகளால் சொல்லாத வலி
சுமக்கிறது நம் இதயம்
அதனால்தான் துடிக்கிறதோ ...
எல்லா வலியையும் பகிர முடிவதில்லை
அதனால்தான் என்னவோ
கவிஞர் உருவாக காரணமோ...
நமக்கு பிடித்தவர்களே
நம்மை பிடிக்காது எனும் போது
அர்த்தமற்று போகிறது நம் வாழ்க்கை
என்ன செய்தால் பிடிக்கும்
என யோசித்து முடிகிறது மிச்ச வாழ்க்கை
நாம் நேசிக்கும் ஒருவரின்
எந்த ஒரு வார்த்தையும்
எளிதாய் சாய்த்து விட்டு போகிறது நம்மை
நமக்கும் வலிக்கும் என்று
உணராதவரை தான்
நமக்கு பிடித்தவர் என்று
மார்தட்டி கொள்கிறோம் நாம்....
உன்னிடம் மட்டுமே சொல்ல
முடிந்த வலிகளை..
நீ உதாசீனப்படுத்துகையில் தான்
வலியின் வலி கூடுதடி.
அவரவர் கற்பனை ஏற்ப
நானும் வேறு படுகிறேன்
இன்றைய மனிதர்கள் போல்...
சில இடங்களில் ரொம்ப சின்னதாய்
முடிந்துவிடும் ஆனால்
ஆழ்ந்த அர்த்தம் கொண்டிருப்பேன்...
சில இடங்களில் பல பக்கம்
பேசியும் அர்த்தம் செறிவு குறைவுதான்
என்றே முடிக்கிறேன் நான்...
அகிலம் முழுதும் எண்ணில் அடக்கம்
இருந்தும் இன்னும் தீர்ந்து போகாமல் நான்
யாரோ ஒருவர் நினைவில்
வாழ்ந்து கொண்டே இருப்பேன் நான்
என்னை பெரும்பாலும் காதல் செய்கிறார்
காதலில் காதலை சொல்ல
வளைத்து வர்ணித்து
கொஞ்சம் அழகு செய்து
வாழ செய்கிறார் எல்லா காதலிலும்
சிலர் மண்ணுக்காய்
சிலர் பெண்ணுக்காய்
சிலர் மொழிகாய்
சிலர் நாட்டிற்காவும்
சி
எப்போதும் மனம் தேடும்
தலைசாய தினம் தோன்றும்
ஒற்றை மடி அன்னை மடி
என்றென்றும் வேண்டுமடி...
அம்மான்னு ஒரு தெய்வம்
எல்லோருக்கும் உடன் உண்டு
இருக்கும் வரை தெரியாது
அவள் தான் தெய்வம் என்று...
ஆறுதல் அவள் சொன்னால்
ஆதாயம் ஏதுமில்லை
அவள் அன்பு அளவைச் சொல்ல
ஆகாயம் போதவில்லை...
கண்களை விற்று ஓவியமா
சொல்லடி பெண்ணே சாத்தியமா
வலிகொடுத்தால் வழி கிடைக்குமா
தடையே உன் வலி தானம்மா
உலகமே எதிர்க்க துணிந்து நிற்பேன்
நீ ஒரு நொடி மறக்க உயிர் துறப்பேன்
கனவில் கூட காதலிப்பேன்
சொல்லடி எப்படி உன்னை மறப்பேன்
தாயை பிரியும் வலி கொடுத்தாய்
ஒரு சேய் போல் என்னை கதற விட்டாய்
புரிதல் நமக்குள் குறையும் வரை
என் பாசம் புரிய போவதில்லை...
கதிரருக்கும் வேலையில
வாய்க்கா வரப்பு ஓரத்துல
என்ன களவாடி போறவளே சின்ன புள்ள
கொஞ்சம் பொறு உன் கூட நானும் வரேன்
கதிரருக்கும் மாமனுக்கு
கஞ்சி கொண்டு வந்ததில்ல
வீச்சருவா வீரனுக்கு
வெட்டி கதை தேவையில்ல
பரிசம் போட்டா மாமனுக்கு
மொத்தமாய் சொந்தம் இந்த புள்ள
உன் விருப்பு வெறுப்பு தெரியாம
எப்படி நான் பரிசம் போட சொல்லு புள்ள
பிடிக்காம சிரிப்பேனா இல்லாம மறைப்பேனா
பொண்ணு மனசு புரியலையே இந்த
புத்தி கெட்ட மாமனுக்கு...
எங்க ஊரு வீரனுக்கு
இந்த வார்த்தை போதும் புள்ள
எனக்கு உன்ன பரிசம் போட
சீக்கிரமே நானும் வரேன்
தங்க தாலி செய்யப் போறேன்
காத்திருடி சின்ன புள்ள
கதிரருக்கும் வேலை முடி
எதையும் உண்ணிலிருந்து தொடங்கு
குறை என்பதெல்லாம்
மற்றவர் குற்றம் காணும்வரை
நிறை என்பதெல்லாம்
மற்றவர் உன்னை புகழும்வரை...
எதையும் ஏற்காமல்
எங்கும் பாராமல்
எவன் சொல்லும் கேளாமல்
உன்னில் நீ தொடங்கு
வெற்றியும் தோல்வியும்
காலம் சொல்லும்
வென்றிட அனுபவம்
பாடம் தரும்
உன்னை உலகம் உற்று
நோக்கும் காலம் வரும்
அதுவரை போராடு
உன்னில் இருந்து தொடங்கட்டுமே..
சூரியன் அனைந்துவிட்டால்
நாட்கள் நகராது
கிழமைகள் இருக்காது
விடியும் என்ற சொல்லே
புழக்கத்தில் இருக்காது
பகல் கனவு பொய்யாகும்
இரவு கனவு நிஜமாகும்
வானம் இறந்து போகும்
வண்ணம் களையொழந்து போகும்
வேளாண்மை இறந்து போகும்
வெள்ளாமை மறந்து போகும்
இரவில் பயிர் செய்யும் பழக்கம் உருவாகும்
செய்யர்க்கை ஒளி கொண்டு எல்லாம் அரங்கேறும்
காலம் மூன்றாகும்
கணிப்புகள் காலம் வெல்லும்
ஜோசியம் பிரதான தொழிலாகும்
இரவில் நடந்த எல்லாம்
காலமின்றி அரங்கேறும்
அதுதான் இயல்பு என
பழக்கம் உருவாகும்
பகல் கனவு பழமொழியை
வழிமொழிய வாய்ப்பின்றி போகும்
கண்காணிப்பில் உலகம் வரும்
கண்ணயரும் நேரம் எல்லாம்
க
நானும் தோழியும் பேசுகையில்
அவள்.....
எல்லாம் கவியாக்கி
என்னை அசர வைத்தாய்
என்னை பற்றி
ஒரு கவிதை சொல் என்றாள்
புன் சிரிப்பை உதிர்த்து விட்டு
சொல்கிறேன் என்றேன் சில நொடி
மௌனமாய் நின்றேன் --
அவள்.....
கவிதை வரவில்லையா
நான் ரசிக்கும் பொருளில்லையா
என்று கேட்டு சிரித்தாள்
கவிதைக்கு கவிதை சொல்ல
எப்படி நான் தொடங்க
என்று யோசித்தேன்
வார்த்தையை யாசித்தேன்
இயற்கை ஒரு கவிதை
நிலவும் ஒரு கவிதை
காதலும் ஒரு கவிதை
பெண்ணும் ஒரு கவிதை
மேற்சொன்னவை எல்லாம்
ஒவ்வொன்றும் ஒரு அழகு
என் தோழி நீ மட்டும்
எல்லாமே அழகு...
உன்னை பற்றி என்றால்
என் கவிதைகளின் தாயகம்
உன் நிழல் என நானும்
என் நிழல் என நீயும்
மனதில் எழும் ராகம்
சேர்ந்திட மனம் ஏங்கும்
தனிமையில் சில நேரம்
உன் முகம் வந்து போகும்
காதலில் பல நேரம்
தனிமையில் புலம்ப தோன்றும்
கண்களின் வார்த்தையை
மாற்றிட பார்க்கிறேன்
வாய்மொழி வந்திடுமா
உன் காதலை கேக்கிறேன்
உணர்வுகள் உண்டிடும்
பழக்கத்தை வாங்கினேன்
அதன்பேர் காதல்
என்றே மாற்றினேன்
என் நேசம் புரியுமா
என்று நான் கேட்கவே
பெண் பூவே உனக்கென
கவிதைகள் எழுதினேன்
கவிதையில் காதலை
சொல்வது பழமைதான்
இருந்தும் நான் சொல்கிறேன்
அனைத்துமே உண்மைதான்
உண்மைகள் கூடிய
காதல் என்னுடையது
என் கவிதைகள் அனைத்துமே
உனக்கென இருக்குது ......
படிக்கவும்
நண்பர்கள் (219)

சக்திவேல் சிவன்
சிங்கப்பூர்

சத்தியமூர்த்தி
சென்னை

அருணன் கண்ணன்
கிருஷ்ணகிரி

த-சுரேஷ்
திருவில்லிபுத்தூர்
