krishnan hari - சுயவிவரம்
(Profile)


பரிசு பெற்றவர்
இயற்பெயர் | : krishnan hari |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 03-Apr-1981 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Jun-2010 |
பார்த்தவர்கள் | : 11719 |
புள்ளி | : 5739 |
உங்கள் கருத்து பகிர
rudhran198134@yahoo.com (or)
rudhran198134@rediffmail.com
rudhranhari198134@gmail.com
rudhrahari198134@sify.com
ஒரு துளி விஷமென்றாலும் அதன் வீரியம் அது காட்டும்
மனிதா ..........
உனக்குள் ஆயிரம் திறமை உண்டு அதில் ஒரு துளியேனும் நீ காட்டு .........
மரணம் நெருங்கும் நேரம்
நெருங்கிய இதயத்தை தேடும்
கண்கள் ஏங்கியே சாகும்
வாழ்ந்த நாட்களை அசை போடும்
விட்டு கொடுக்கும் மனமின்றி
தட்டி பறிக்கும் குணமின்றி
பழி வாங்கிட துடிக்கும் சினமின்றி
பணத்தால் வந்திடும் பாசமின்றி
உண்மையாய் விரும்பும் ஓர் இதயம்
என்னில் உண்டு உன் உருவம்
முதல் பார்வையில் விழுந்த அந்த நொடி
அலுகாத காதல் சொல்லும் உந்தன் விழி
கடைசி நிமிடம் காதலடி
இமைகள் மூடாது என்விழி
உன்முகம் காணும்வரை
காதலோடு காத்திருப்பேன்
முழு முதல் கடவுள் தம்பியே
முழுதாய் வந்தோம் உன்னை நம்பியே
மனசெல்லாம் உன் நினைவே முருகா
மனதார வேண்டினேன் வா வா
அரோகரா என்று சொல்லி
அன்பாக உன்னை எண்ணி
கடும்பாரை கடந்து வந்தோம் முருகா
கும்பிட்டும் கைவிட்டா அழகா
எனக்காக ஓடோடி வா வா
உன் பெயரை தினம் ஒதி
ஷஷ்டி தினம் பாடி
உருகி உருகி உனை வேண்ட முருகா
என் கண்ணீரை துடைதிட வா வா
என்னோடு நீ இருந்தால் போதும்
வேறென்ன என் மனம் தேடும்.
கடைக்கண் பார்வை போதும்
என் ஜென்மம் அங்கேயே முடியும்
என்னை உன் மனம் அறியும்
வேறு யாருக்கு என் குறை புரியும்
என் உலகமே நீதானே தலைவா
உன் மகனுக்கு அருள் செய்ய வா வா
தென்கிழக்கு சூரியனே
எங்களுக்கு காவலனே
எங்களோடு வாழ்பவனே
கந்தையா முத்தையா வேல்லையா
சொன்ன சொல்லைக் காப்பவனே
சொல்லில் வாழும் நாயகனே
சுவாமிமலை ஆண்டவனே
கந்தையா முத்தையா வேல்லையா
உன்ன நம்பி நாங்க வந்தோம்
வேண்டுதலை சொல்ல வந்தோம்
எங்க குறை தீர்ப்பவனே
கந்தையா முத்தையா வேல்லையா
அன்பு கொண்ட மன்னவனே
ஆறுபடை கொண்டவனே
உலகையாளும் நாயகனே
கந்தையா முத்தையா வேல்லையா
கதிரருக்கும் வேலையில
வாய்க்கா வரப்பு ஓரத்துல
என்ன களவாடி போறவளே சின்ன புள்ள
கொஞ்சம் பொறு உன் கூட நானும் வரேன்
கதிரருக்கும் மாமனுக்கு
கஞ்சி கொண்டு வந்ததில்ல
வீச்சருவா வீரனுக்கு
வெட்டி கதை தேவையில்ல
பரிசம் போட்டா மாமனுக்கு
மொத்தமாய் சொந்தம் இந்த புள்ள
உன் விருப்பு வெறுப்பு தெரியாம
எப்படி நான் பரிசம் போட சொல்லு புள்ள
பிடிக்காம சிரிப்பேனா இல்லாம மறைப்பேனா
பொண்ணு மனசு புரியலையே இந்த
புத்தி கெட்ட மாமனுக்கு...
எங்க ஊரு வீரனுக்கு
இந்த வார்த்தை போதும் புள்ள
எனக்கு உன்ன பரிசம் போட
சீக்கிரமே நானும் வரேன்
தங்க தாலி செய்யப் போறேன்
காத்திருடி சின்ன புள்ள
கதிரருக்கும் வேலை முடி
வெளியே சொல்லாத சோகம்
வார்த்தை சொல்லாத பாசம்
விளக்க முடியாத ஊமைகனவு
அருகில் வராதா ஏக்க உணர்வு
உரிமையில் எடுக்கலாம்
உரிமையாய் எடுக்கலாம்
உரியவர் மறுக்கையில்
உறவுதான் மரிக்குமா
சொல்ல சொல்ல தீரல
சோகம் கொஞ்சமும் மறையல
ஆதங்கம் ஏனோ குறையல
முடிவு மட்டும் கிடைக்கல
என்றோ ஒருநாள் மாறுமோ
எந்தன் குறைதான் தீருமோ
மாற்றம் மட்டுமே மாறாது
மறுபடி ஏக்கம் தொடருதே...
எதையும் உண்ணிலிருந்து தொடங்கு
குறை என்பதெல்லாம்
மற்றவர் குற்றம் காணும்வரை
நிறை என்பதெல்லாம்
மற்றவர் உன்னை புகழும்வரை...
எதையும் ஏற்காமல்
எங்கும் பாராமல்
எவன் சொல்லும் கேளாமல்
உன்னில் நீ தொடங்கு
வெற்றியும் தோல்வியும்
காலம் சொல்லும்
வென்றிட அனுபவம்
பாடம் தரும்
உன்னை உலகம் உற்று
நோக்கும் காலம் வரும்
அதுவரை போராடு
உன்னில் இருந்து தொடங்கட்டுமே..
சூரியன் அனைந்துவிட்டால்
நாட்கள் நகராது
கிழமைகள் இருக்காது
விடியும் என்ற சொல்லே
புழக்கத்தில் இருக்காது
பகல் கனவு பொய்யாகும்
இரவு கனவு நிஜமாகும்
வானம் இறந்து போகும்
வண்ணம் களையொழந்து போகும்
வேளாண்மை இறந்து போகும்
வெள்ளாமை மறந்து போகும்
இரவில் பயிர் செய்யும் பழக்கம் உருவாகும்
செய்யர்க்கை ஒளி கொண்டு எல்லாம் அரங்கேறும்
காலம் மூன்றாகும்
கணிப்புகள் காலம் வெல்லும்
ஜோசியம் பிரதான தொழிலாகும்
இரவில் நடந்த எல்லாம்
காலமின்றி அரங்கேறும்
அதுதான் இயல்பு என
பழக்கம் உருவாகும்
பகல் கனவு பழமொழியை
வழிமொழிய வாய்ப்பின்றி போகும்
கண்காணிப்பில் உலகம் வரும்
கண்ணயரும் நேரம் எல்லாம்
க
நானும் தோழியும் பேசுகையில்
அவள்.....
எல்லாம் கவியாக்கி
என்னை அசர வைத்தாய்
என்னை பற்றி
ஒரு கவிதை சொல் என்றாள்
புன் சிரிப்பை உதிர்த்து விட்டு
சொல்கிறேன் என்றேன் சில நொடி
மௌனமாய் நின்றேன் --
அவள்.....
கவிதை வரவில்லையா
நான் ரசிக்கும் பொருளில்லையா
என்று கேட்டு சிரித்தாள்
கவிதைக்கு கவிதை சொல்ல
எப்படி நான் தொடங்க
என்று யோசித்தேன்
வார்த்தையை யாசித்தேன்
இயற்கை ஒரு கவிதை
நிலவும் ஒரு கவிதை
காதலும் ஒரு கவிதை
பெண்ணும் ஒரு கவிதை
மேற்சொன்னவை எல்லாம்
ஒவ்வொன்றும் ஒரு அழகு
என் தோழி நீ மட்டும்
எல்லாமே அழகு...
உன்னை பற்றி என்றால்
என் கவிதைகளின் தாயகம்
உன் நிழல் என நானும்
என் நிழல் என நீயும்
மனதில் எழும் ராகம்
சேர்ந்திட மனம் ஏங்கும்
தனிமையில் சில நேரம்
உன் முகம் வந்து போகும்
காதலில் பல நேரம்
தனிமையில் புலம்ப தோன்றும்
கண்களின் வார்த்தையை
மாற்றிட பார்க்கிறேன்
வாய்மொழி வந்திடுமா
உன் காதலை கேக்கிறேன்
உணர்வுகள் உண்டிடும்
பழக்கத்தை வாங்கினேன்
அதன்பேர் காதல்
என்றே மாற்றினேன்
என் நேசம் புரியுமா
என்று நான் கேட்கவே
பெண் பூவே உனக்கென
கவிதைகள் எழுதினேன்
கவிதையில் காதலை
சொல்வது பழமைதான்
இருந்தும் நான் சொல்கிறேன்
அனைத்துமே உண்மைதான்
உண்மைகள் கூடிய
காதல் என்னுடையது
என் கவிதைகள் அனைத்துமே
உனக்கென இருக்குது ......
படிக்கவும்
நண்பர்கள் (219)

சக்திவேல் சிவன்
சிங்கப்பூர்

சத்தியமூர்த்தி
சென்னை

அருணன் கண்ணன்
கிருஷ்ணகிரி

த-சுரேஷ்
திருவில்லிபுத்தூர்
