krishnan hari - சுயவிவரம்
(Profile)


பரிசு பெற்றவர்
இயற்பெயர் | : krishnan hari |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 03-Apr-1981 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Jun-2010 |
பார்த்தவர்கள் | : 11476 |
புள்ளி | : 5705 |
உங்கள் கருத்து பகிர
rudhran198134@yahoo.com (or)
rudhran198134@rediffmail.com
rudhranhari198134@gmail.com
rudhrahari198134@sify.com
ஒரு துளி விஷமென்றாலும் அதன் வீரியம் அது காட்டும்
மனிதா ..........
உனக்குள் ஆயிரம் திறமை உண்டு அதில் ஒரு துளியேனும் நீ காட்டு .........
கண்ணான கண்மணியே
கலங்காம நீ உறங்கு
தாய் தந்த நமக்கில்லைன்னு
நினைக்காம நீ உறங்கு
உனக்குறவா(உனக்கா ) நானிருப்பேன்
உருகாம நீ உறங்கு
நமக்கும் நாளை நல்ல
விடியல் உண்டு நீ உறங்கு(2)
தாய்முகம் பார்க்கவில்ல
தந்தை பாசம் கேட்டதில்ல(2)
சோகம் கொண்டு தோள் சாய
சொந்தம்னு யாருமில்ல
வானவில்லும் நமக்குஉண்டு
வண்ணமது சொந்தமில்ல
சோகங்கள் எனக்குமுண்டு
சொல்லி அழ யாருமில்ல
யாருகிட்ட நான்
சொல்லி முடிக்க
நம்ம கதைய..
யாருகிட்ட நான்
சொல்லி முடிக்க
நம்ம கதைய..
கானல் நீர்போல
கண்ணிலே ஈரமில்ல(2)
மனதின் பாரமெல்லாம்
மலையின் எடைபோல
அழுகை நமக்கு உண்டு
ஆறுதல் ஏதுமில்லை
மனதின் ரணம் சொல்ல
வார்த
துணிந்தெழுடா தமிழா நீயும்
துணிந்தெழுடா தமிழா
நமக்கும் நாளை விடியுமென்று
துணிந்தெழுடா தமிழா(2)
நீ தோல்வி கண்டு துவளாமல்
வாழ்வின் நெறிமுறை மாறாமல்
போராடும் மனம்கொண்டால் தோல்வியில்லை
துணிந்தெழுடா(2)
பதவி புகழ் பணம் எல்லாம்
வாழ்வில் என்றும் நிரந்தரமில்லை
உண்மை நேர்மை உழைப்பு
வாழ்வில் என்றும் தோற்பதில்லை
(நீ தோல்வி)
(துணிந்தெழுடா)
மனைவி சொல்லை மறுக்கவில்லை
என் மனதை ஏனோ மதிக்கவில்லை
வருகின்ற செலவுகள் அவள் கவலை
வருமானம் வந்திட வழியுமில்லை
யோசித்தும் பலன்கள் இல்லை
யாசிக்க மனமுமில்லை
என்று விடியும் என் கவலை
முடியும் தேதி அறியவில்லை
ஆறுதல் சொல்லத்தெரியவில்லை
சொல்லும் ஆறுதல் நியாயமில்லை
தூக்கி நிறுத்த வேண்டிய நானே
சுமையாய் இருப்பதே என் கவலை
இருள் சூழும் நேரம்
இந்த கொரோனா காலம்
பகலான போதும்
பகட்டென்றே தோன்றும்
காற்றில் பரவி
காலன் உருவோடு
கலங்க செய்கிறதே
வாழ வழி இல்லையே
இனி எந்த தொழில் செய்ய
எங்கள் பசியாற
அழுதும் தீராது
எங்கள் குறை போக
கால்வயிற்று கண்டோம்
முன்னாளில் நாம்
கனவாகி போனதடா
உணவும் இந்நாளில் நமக்கு
வேலை ஏதும்மில்லை
வயிற்றுக்கு சோறும்மில்லை
உயிர் பிழைக்க வழியுமில்லை
நடுத்தர வர்க்கம் நாங்கள்
படைத்தவன் பார்த்துக்கொள்வான்
என்று பலவாறு தேற்றினாலும்
பசி மட்டும் தவறாது
வந்துபோகும் விருந்தாளியாய்
ஒருவேளை கஞ்சியுண்டு
ஒருவேளை நீர் அருந்தி
ஒவவொரு நாளும் கடத்த
ஒருபக்கம் பயமுண்டு
கொரோனா ஆட்கொல்லி வருமென்று
மருத்துவம் படித்தவன்
வலிகள் ஆயிரம் தீர்க்க
வழிகள்தான் தேடணும்
மனதின் நெருடலை
நேர்பட பேசினால்
காயங்கள் தோன்றுமே என
தயக்கம் நம்மை தடுக்குமே
தயக்கங்கள் தடுப்பினும்
சரியென இருந்திடின்
அதே காயங்கள் திரும்புமே
மனதினை கிழிக்குமே
இதற்க்கு தீர்வுதான்
எதுவென தடுமாறும் மனதினை
கொஞ்சமாய் அழவிடு
கொஞ்சமாய் புலம்பிடு
கொஞ்சமாய் கதறிடு
கொஞ்சமாய் சிரித்திடு
பிறகு ஒரு பதில் வரும்
மனதினில் தெளிவுறும்
அப்போது முடிவெடு
அதில் தெளிவாய் இருந்திடு
கண்ணே என் கண்ணே
வா வா என் முன்னே
காதல் நீ சொல்ல
காத்திருப்பேன் நான் ....
என் நிலா பெண்ணே
என் நிழல் எங்கே
தேடி சொல்லிட வா
என் தேடல் நீயல்லவா
கனவை தந்து
உறக்கம் பறித்து
உடலை தந்து
உயிரை பறித்து
ஏன் மாயை செய்கிறாய்
மருதாணி சிவக்கும்
நேசத்தை குறிக்கும்
அளவெல்லாம் சொல்லி சென்றாயே
கொல்லாமல் என்னை கொன்றாயே
காதல் சொல்லுகின்ற வரையில்
மலையின் பாரம் உண்டு மனதில்
சொல்லிட வார்த்தை இல்லை எளிதில்
உன் காதலே என் சுவாசமாய்
தானாய் விரும்புகின்ற மனது
உன்னை கேக்கின்ற பொழுது
எனக்கும் சம்மதிக்கும் வயது
உன் சுவாசமாய் என் காதல் மாறுமா ???
இரண்டாம் கடைநிலை பார்வை - டைரி
=====================================
(அவளும் அர்த்தங்களும்)
எங்கிருந்தோ வந்தான்
அழகாய் சிரித்தான்
மென்மையாய் பேசினான்
என் கூடவே இருப்பேன் என
சத்தியமும் செய்தான்
எனக்காகவே வாழ்கிறேன் என்றான்
நம்பிக்கை அளித்தான்
அழுதான்
நீதான் வேண்டுமென்றான்
வாசனை மாறாத பூக்களை
எப்போதும்
பரிசாகக் கொடுத்தான்
அவன் வர்ணனையால்
என் இரவுகளை நிறமாக்கினான்
அவன் தாமதங்களுக்கு முன்னால்
மண்டியிடுவான்
கொஞ்சுவான் மசியமறுப்பேன்
அப்றம் கெஞ்சுவான்
நேரம் போவது தெரியாமல் சிரிக்கச் சொல்லிக் கொடுத்தான்,,
இதையெல்லாம், ஏன் செய்கிறாய் என்றேன்....
உன்னை எனத
நானும் தோழியும் பேசுகையில்
அவள்.....
எல்லாம் கவியாக்கி
என்னை அசர வைத்தாய்
என்னை பற்றி
ஒரு கவிதை சொல் என்றாள்
புன் சிரிப்பை உதிர்த்து விட்டு
சொல்கிறேன் என்றேன் சில நொடி
மௌனமாய் நின்றேன் --
அவள்.....
கவிதை வரவில்லையா
நான் ரசிக்கும் பொருளில்லையா
என்று கேட்டு சிரித்தாள்
கவிதைக்கு கவிதை சொல்ல
எப்படி நான் தொடங்க
என்று யோசித்தேன்
வார்த்தையை யாசித்தேன்
இயற்கை ஒரு கவிதை
நிலவும் ஒரு கவிதை
காதலும் ஒரு கவிதை
பெண்ணும் ஒரு கவிதை
மேற்சொன்னவை எல்லாம்
ஒவ்வொன்றும் ஒரு அழகு
என் தோழி நீ மட்டும்
எல்லாமே அழகு...
உன்னை பற்றி என்றால்
என் கவிதைகளின் தாயகம்
உன் நிழல் என நானும்
என் நிழல் என நீயும்
மனதில் எழும் ராகம்
சேர்ந்திட மனம் ஏங்கும்
தனிமையில் சில நேரம்
உன் முகம் வந்து போகும்
காதலில் பல நேரம்
தனிமையில் புலம்ப தோன்றும்
கண்களின் வார்த்தையை
மாற்றிட பார்க்கிறேன்
வாய்மொழி வந்திடுமா
உன் காதலை கேக்கிறேன்
உணர்வுகள் உண்டிடும்
பழக்கத்தை வாங்கினேன்
அதன்பேர் காதல்
என்றே மாற்றினேன்
என் நேசம் புரியுமா
என்று நான் கேட்கவே
பெண் பூவே உனக்கென
கவிதைகள் எழுதினேன்
கவிதையில் காதலை
சொல்வது பழமைதான்
இருந்தும் நான் சொல்கிறேன்
அனைத்துமே உண்மைதான்
உண்மைகள் கூடிய
காதல் என்னுடையது
என் கவிதைகள் அனைத்துமே
உனக்கென இருக்குது ......
படிக்கவும்
நண்பர்கள் (219)

சக்திவேல் சிவன்
சிங்கப்பூர்

சத்தியமூர்த்தி
சென்னை

அருணன் கண்ணன்
கிருஷ்ணகிரி

த-சுரேஷ்
திருவில்லிபுத்தூர்
