முத்தரசு - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  முத்தரசு
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  31-May-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  12-Jul-2018
பார்த்தவர்கள்:  85
புள்ளி:  36

என்னைப் பற்றி...

உங்களின் ஊக்கத்தால் உயிர்பெறும் எனது கவிதைகளுக்கு உணர்வுகளை உரமிட்டு வளர்க்கிறேன்...

எனது கவிதைகள் உங்களைத் தின்று ஏப்பமிடும் எழுத்துப் பூதங்கள்...

தலைப்புகளால் பொறிசெய்து உலகின் உயிர்மேயச் செய்யும் அமானுஷ்யக் கவிஞன் நான்...

nகவிதை பூதங்கள் சாக்கிரதை...

~*~

என் படைப்புகள்
முத்தரசு செய்திகள்
முத்தரசு - எண்ணம் (public)
21-Oct-2022 10:13 am

விடிய விடிய

கொண்டாடித்தீர்த்துவிட்டு
விடிந்ததும் அயர்ந்து உறங்கச்செல்கின்றன
விண்மீன்கள்...

களைப்பு நீங்கி
மீண்டும் தொடங்கும்
கொண்டாட்டப் பெருவிழா
ஒவ்வொரு இரவிலும்...

நேற்று மண்ணிருந்தவன்
நாளை விண்சென்றும் களிக்ககூடும்...

விண்மீண்கள் ஒருபோதும்...
மண்ணோக்கி வருவதில்லை...

அவை உமிழும் ஒளி பட்டு
நாம் ஆறுதல் அடைகிறோம்...

சிலப் பொழுது ஆற்றாமை கொள்கிறோம்...

விண்மீன்களின் மரணம் என்பது 
பிரபஞ்சத்தின்
மகாப் பெருவிழாவாகவே நிகழும்...

மனிதனின் உயிர் மயிரளக்கும்முன்
நிகழுந்து முடிந்துவிடும்...

விண்மீன்களின் மரணம்
முடிவேதும் இல்லாது நித்திய
ஒளியாய் நில்லாது பயணிக்கும்...

நீ மடிந்து மறுபிறப்பெடுக்கும் காலச் சக்கரத்தின் சுழற்சியில்
மீண்டும் மீண்டும் நீ காணும் 
ஒரு மகாபேரொளி அந்நட்சத்திரத்தின்
வாழ்நாளின் ஒரு இமைப் பொழுதுக்கும்
குறைவென்பதை அறி... 

வாழ்வையும் சாவையும்
எப்படிக் கொண்டாட வேண்டும் என
கொண்டாடிக் கற்றுக்கொள்.... 

ஒவ்வொரு இரவிலும்
ஒரு விண்மீன் உன்னை
ஆசீர்வதிக்கட்டும்... 

உன் மிச்ச வாழ்வையேனும்
மெச்ச வாழ்... 

அன்பு... 

முத்தரசு மகாலிங்கம்
~*~


மேலும்

முத்தரசு - krishnan hari அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Sep-2022 10:37 am

சூரியன் அனைந்துவிட்டால்
நாட்கள் நகராது
கிழமைகள் இருக்காது
விடியும் என்ற சொல்லே
புழக்கத்தில் இருக்காது

பகல் கனவு பொய்யாகும்
இரவு கனவு நிஜமாகும்
வானம் இறந்து போகும்
வண்ணம் களையொழந்து போகும்

வேளாண்மை இறந்து போகும்
வெள்ளாமை மறந்து போகும்
இரவில் பயிர் செய்யும் பழக்கம் உருவாகும்
செய்யர்க்கை ஒளி கொண்டு எல்லாம் அரங்கேறும்

காலம் மூன்றாகும்
கணிப்புகள் காலம் வெல்லும்
ஜோசியம் பிரதான தொழிலாகும்

இரவில் நடந்த எல்லாம்
காலமின்றி அரங்கேறும்
அதுதான் இயல்பு என
பழக்கம் உருவாகும்

பகல் கனவு பழமொழியை
வழிமொழிய வாய்ப்பின்றி போகும்

கண்காணிப்பில் உலகம் வரும்
கண்ணயரும் நேரம் எல்லாம்

மேலும்

Nandri nanbaa 12-Nov-2022 10:42 pm
எவருக்கு எதிர்கவிதை என்பது தெரியுமெனக்கு... நீ நீடூ வாழ் வளர் வளமிகு பெரு வார்த்தை யுக்திசெய்... வாழ்த்துக்கள் 21-Oct-2022 7:17 am
முத்தரசு - முத்தரசு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Aug-2018 1:06 pm

எங்கிருந்து
வந்தார்களெனத்
தெரியவில்லை..

இவர்களுக்கு
எப்படித் தெரிகிறது
எனது மனதின் மொழி..

இவர்களுக்கு
எப்படி கேட்கிறது
எனது மிகக் கச்சிதமான
ஆனந்தப் புன்னகைக்குள்
சொட்டும் துளிநீரின்
மாய அழுகையின் குரல்..

இவர்களால் எப்படி
உணரமுடிகிறது
மிகச் சத்தமான
எனது மௌனத்தின்
அப்பட்டமான அர்த்தம்..

இவர்களால் எப்படி
பேச முடிகிறது..
அத்தனை ஆவேச
அடிதடிச்சண்டைகளுக்குப்
பின்னும் அரட்டையத்து
அன்புபாராட்ட..

இவர்களால் எப்படி
பொறாமையின்றி
கொண்டாட முடிகிறது
அவர்களுடனான
போட்டியில் எனது
வெற்றியை..

இவர்களுக்கு
யார் சொல்லித்தந்தது
எத்தனை இடர்களிலும்
விட்டுவிடக்கூடாதென..

இவர்களுட்கு யார்
கற்றுத்தந்தது..
எனது சகோதர

மேலும்

நன்றி நட்பே 🙏 08-Sep-2018 12:37 pm
மிகவும் உண்மையான வரிகள் 12-Aug-2018 12:15 pm
நன்றி நட்பே 🙏 💐 🎉 06-Aug-2018 11:26 pm
நன்றி நட்பே 🙏 💐 🎉 06-Aug-2018 11:25 pm
முத்தரசு - முத்தரசு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Jul-2018 9:46 am

நீ எழுதப் படாத
புத்தகம்...

எனக்குமட்டும்
புரிந்த புதிர்...

ஏடேறாக்
கவிதை...

எட்டணாக்கு
மிட்டாய் தின்ற
கடைசி தலைமுறை...

எக்கச்சக்கமாய்
புழுகும்
சுட்டித் தங்கை...

ஏசி ரூமுக்குள்
குடியேறப் போகும்
குட்டிப் பூதம்...

குவளை நீர்
கேட்டாள்
குடத்தை
தூக்கிவரும்
எனக்கு இளய தாய்...

இல்லாத ஒன்றை
இருப்பதுபோல
காட்டும்
கோமாளிக் குழந்தை...

எதற்கெடுத்தாலும்
ஏக்கர் கணக்கில்
பொலம்பும்
எட்டு வயது தாண்டிய
ஏஞ்சல்...

பள்ளிக்குச்
செல்லாமலேயே
பாசாகும் பாசக்காரி...

எப்போது பார்த்தாலும்
கவிதை கேட்கும்
ஐந்தடித் தொல்லை...

அழகாக இருந்தாலும்
ஆப்பிள் போல
இல்லையே என
பொறாமைப்படும்
பொட்டுக்கடலை...

இந்தக் கவிதையைப

மேலும்

தோழமையே... எனக்கு உடன் பிறந்த சகோதரிகள் இல்லை... என்னை அண்ணாக ஏற்றுக்கொண்ட தங்கைக்காக அவள் மனம் சந்தோசப்படும்படி கேட்ட மாத்திரத்தில் எழுதிய கவிதை இது... எனினும் தவறுகளை திருத்திக் கொள்ள விழைகிறேன். நட்பிற்கு நன்றி... 17-Jul-2018 6:16 pm
உங்களின் படைப்பிற்கு கருத்து சொல்லும் தகுதி எனக்கிருக்கின்றதா என்று தெரியவில்லை... ஆனால் நன்றாக இருக்கின்றது... அதிலும் உங்களின் தங்கையின் குறும்புத்தனங்களை வருணிக்கும் போது தன் குழந்தையின் குறும்புத்தனங்களை சொல்லி மகிழும் தந்தையை போல உணரவைக்கின்கிறீர். நல்ல படைப்பு. வாழ்த்துக்கள் ஒரு சிறிய விண்ணப்பம், ஆங்கிலம் மற்றும் பிற மொழி சொற்களை தவிர்த்து எழுதினால் மிகவும் மகிழ்வேன். 17-Jul-2018 5:25 pm
முத்தரசு - முத்தரசு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Jul-2018 9:54 am

பின் தலையின்
அடி புதைந்த
ஏதோ ஒரு நரம்பின்
நுனிப் பிடித்திழுத்து
இதய வால்வுகளினிடையே
துளையிட்டு
இறுக்கமாய் தைத்து
இங்கிதம் மறந்து
எனை
சங்கீதம் பாடவைக்கும்
உனது விழிகளில்
வழிகிறது
வசிய
இரசவாதம்...

~☆~

மேலும்

நன்றி நட்பே 🙏 14-Jul-2018 4:45 pm
அருமை சகோ 14-Jul-2018 10:20 am
மேலும்...
கருத்துகள்

மேலே