கா இளையராஜா - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : கா இளையராஜா |
இடம் | : பரமக்குடி |
பிறந்த தேதி | : 28-Jun-1981 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 20-Mar-2012 |
பார்த்தவர்கள் | : 2749 |
புள்ளி | : 420 |
M.A., B.Ed. M.Phil
TAMIL TEACHER.9600291485
எமது
எண்ணப்பதிவுகளை
சுமக்கும்
சுமைதாங்கியே
வெற்றிடத்தில்
விதைக்கிறேன்
விலைக்கு போக அல்ல
விரும்பி ஏற்போர்
உள்ளம் விருட்சமாக .
இளையகவி
abi-ilayakavithai.blogspot.com
rajailaya1981@gmail.com
rajailaya1891@gmail.com
இவ்வுலகில் நிரந்தரமானது எது? ஏன்?
அவ்வளவு
எளிதாக யாரிடமும் இருந்து
பிரிந்து விட
இயலவில்லை....
பிரிவு என்ற பெயரில்
கொஞ்சம்
ஒதுங்கி மட்டுமே இருக்க முடிகிறது
உனக்காக...
தன் மீதான
நியாயமான வாதத்தைக்
கூட நிறுத்திக் கொள்ளும்
பெண் கிடைத்தால்
ஒருபோதும் இழந்து விடாதே..
அலைகளில் கால்களை
நனைக்கும் சுகம்,
கப்பலில் கடல்
நடுவில்
பயணப்படும்போது
கிடைப்பதில்லை...
பேரின்பம் வேண்டாம்...
சிறுசிறு சந்தோஷங்கள்
போதும் வாழ்வை அனுபவிக்க.........
மழை நீரில் நனையாதே ஜலதோஷம் பிடித்துவிடும்
முழுவதும் நனைந்துகொண்டு முந்தானையால் என் தலை மூடும்
தாயிடம்
--உனக்கு ஜலதோஷம் பிடிக்காதா அம்மா .!
காலைக்கடன் கழிப்பதற்கு காட்டுக்கு போகும் போது
காலில் முள்ளு தைக்கும் முதுகினில் ஏறிக்கொள்-உப்புமூட்டை சுமந்தவளே
--உன் பாதம் முட்கள் துளைக்காதா அம்மா .
பிடியளவு சோறு தான் பானையில் இருந்தாலும்
பிள்ளை வயிறு பசி பொறுக்காது
என்பவளே
--உன் வயிறுக்கு பசிக்காதா அம்மா .!
வேதனை எனக்கென்றால்
விம்மி நான் அழுதால்
விடியும் வரை விழித்திருந்து
விழியில் உதிரம் வடிப்பாயே
--உன் விழிகள் வலிக்காதா அம்மா .!
தவறுகள் நான் செய்ய
தண்டனை நீ பெ
அவரது வியர்வையில்
யுகப் பூக்களும்
நீராடிப் போகிறது
அவரது புன்னகையில்
பறவைகளும்
பசியாறிப் போகிறது
அவரது கண்ணீரில்
எரிமலைகளும்
பனி மலைகளாகிறது
அவரது தூக்கங்கள்
ஓடுகின்ற நதிகளாய்
ஓய்வினை மறந்தது
அவரது காலடிகளை
உலகின் அதிசயமாய்
வரலாறு நினைக்கின்றது
அவரது சோகங்கள்
பிள்ளையின் முன்
மார்கழி நிலவானது
இறைவனிடம் இவர்
யாரென்று கேட்டேன்
'தாயின் அவதாரம்'
என பதிலுரைத்தான்
புரியவில்லை
இறைவா என்றேன்
ஆலயங்களில் உயர்ந்த
ஆலயம் என்றான்
மறுமுறையும்
புரியவில்லை இறைவா
உன் உதிரத்தின் உயிர்
ஓவியம் என்றான்
கண் கலங்கி நின்றேன்
நிழலில் அவர் முகம்
இறைவனை தே
மாணாட்கர் மனக்கண்
அறியாமை அகற்றும்
அற்புத பணி .
ஒழுக்கத்தை போதிக்கும்
உன்னத பணி .
கற்றலில்
கசடு களையும்
கண்ணிய பணி .
அகிம்சை உணர்வை
உள்ளத்தில் பதிக்கும்
உயரிய பணி .
துலாக் கோல் போல்
மாணாட்கரிடம் சமநிலை
நடத்தும் நுண்ணிய பணி .
சாதி ,மத வேறுபாடில்லா
சமத்துவத்தை போதிக்கும்
உயரிய பணி .
கற்றலை
அகத்தில் நிறுத்தி
புதுமையாய் ,எளிமையாய்
இன்முகத்துடன் அவன் வசம்
உட்புகுத்தும் நுட்பமான பணி .
வேற்றுமை நீக்கி
ஒற்றுமை உணர்வை
உள்ளத்துள் ஊட்டும்
உணர்வு பூர்வ பணி .
கற்றல் சுமைக்கண்டு
கலங்கும் நெஞ்சங்களை
தட்டிக்கொடுத்து
தடைகளை அகற்றும்
அழகிய பணி .
கடமை ,கண்ண
உலகம் போற்றும் உத்தமர் கலாம்
கனவு காணுங்கள்
மக்களின் ஜனாதிபதி
பூ உலகம் போற்றும் உத்தமர்
விண்ணுலகம் கண்ட வித்தகர்
நல் இதயம் கொண்ட நம்மவர்
ஏவுகனை நாயகன்
இந்திய மாணவர்களின் விடிவெள்ளி
இந்திய வல்லரசு நாயகன்
ஏவுகனை வித்தகர்
மாணவர்களின் சூப்பர் ஸ்டார் .
வித்தாய் மண்ணுள் புதைந்து
விரிச்சமாய் நீ வளர்ந்தாய்
மலர் தந்து மங்கையர் மனதில்
இடம் பிடித்தாய்
காயாகி கனியாகி உண்ண
விருந்தளித்தாய்
வீடற்று வீதியில் வாழ்வோருக்கு
வீடாய் வாழ இடமளித்தாய்
கோடை வெப்பத்தில்
பூமிதனில்
பாதம் பட மறுக்கும் கணத்தில்
கோடை நீக்கும் குற்றாலமாய்
குளிர் தந்து இடமளித்தாய்
உழுதுண்டு வாழ்வோர்
குழந்தைகளை உல்லாச
ஊஞ்சல் ஆட இடமளித்து
சுகம் அளிப்பாய்
சுமை பொறுப்பாய் .
உமது சேவை உணர்ந்தோ
தேசியக்கொடியில்
கீழ் நிறத்தில் நீ சொழிப்பாய்
உன்னால் மனிதன்
வாழ்கிறான் -விடுத்து
மனிதனால் நீ வாழ்வதில்லை
அந்திப்பொழுதில்
பாசமிகு பறவைகள்
பதுங்கும் பச்
அதிகாலைப் பொழுதினில்
வெறுங்காலால்
வெளுத்த வேட்டியுடன்
சேற்றில் கால் பதித்து
கட்டிளம் காளையை கைப்பிடித்து
நிலம் பிளந்து
விதைத்த விதை
வான்நோக்கி
விருட்சமாய் ................................
நெல்மணிகள் சுமை தாங்கமறுத்து
பெண்ணின் நாணமாய்
தரை தடவியது
அம்மணிகள் வீடு புகுவதற்குள்
அவன் புரண்டபாடு
உழவுக்கலப்பையும்
உருண்டிருக்காது
புரண்டிருக்காது .
கதிர் அறுக்கும் பெண்டிர்
கருவறை சுமந்த குழவியை
கருவேலை நிழல் கிடத்தி
கதிரறுக்கும் பொழுதினில்
கைப்பட்ட காயத்தை
களிமண்ணால் மருந்திட்டு
மதிய உணவுண்ணும் பொழுதினில்
உப்பிட்ட மிளகாய்
உரசிய காயத்தில்பட
புரண்ட க
பச்சை மெத்தைகள்
விரித்த புல்வெளிதளங்கள்.
வெள்ளை தாவணியை
விட்டெறியும் நீர்விழ்ச்சி.
கருப்பு மேனியில்
உயர்ந்த மரங்கள்.
சிவப்பு வெட்கத்தில்
அந்தி வானம்.
சிறகடித்த சில்மிஷ
சத்தத்தோடு காதல்பறவைகள்.
இப்படியான அழகான
இயற்கையான சொர்க்கம்.-இந்த
இனிமையான தனிமையில்
என்னோடு அவள்.
அவள் விரல்களோடு
பிணைந்த என் விரல்கள்.
தோள்கள் இரண்டும்
சிநேகம் கொள்ள
இதயங்கள் இரண்டும்
மெளன சங்கீதம் பாட..
இதழ்கள் சொல்ல துடிக்கும்
காதலை சொல்ல துணியாமல்
தயங்கி தயங்கி -மனம்
துடி துடித்திருந்த நேரம்
என்னை கேட்காமலே
எனது காதலுணர்வை
தூது அனுப்புகிறது
அவளின் கயல்விழியிடம்
எந்தன் காந்தவிழிகள்.
வ
நண்பர்கள் (637)

முகவியரசன்
திருநெல்வேலி

த-சுரேஷ்
திருவில்லிபுத்தூர்

ஆரோ
விழுப்புரம்,(சென்னை)

கவிஞர் செநா
புதுக்கோட்டை, தமிழ்நாடு
