இதயம் விஜய் - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  இதயம் விஜய்
இடம்:  ஆம்பலாப்பட்டு
பிறந்த தேதி :  27-Apr-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Nov-2013
பார்த்தவர்கள்:  10526
புள்ளி:  1635

என்னைப் பற்றி...

அகமே யாக்கை அன்பே உயிர்


விழிகள் உறங்கினாலும் விதைகள் உறங்காது...
தமிழை விதைத்திடு தமிழோடு வாழ்ந்திடு...

இயந்திரவியல் படித்துள்ளேன்.கவிதை எழுதுவது மிகவும் பிடிக்கும். கவிதை, பாட்டு, ஓவியம் தனிமையான நேரங்களில் நான் விரும்பும் சொந்தங்கள்...

என் படைப்புகள்
இதயம் விஜய் செய்திகள்
இதயம் விஜய் - Dr.V.K.Kanniappan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Apr-2025 12:32 pm

கட்டளைக் கலித்துறை

மேகத்தின் மீது மிதந்தெங்கும் செல்கிறேன் மின்னலென
மோகத்தின் இன்பமும் மொய்குழல் வண்டாய் முழங்கிநின்றேன்
தேகத்தி னின்பமாய்த் தேன்சுவை பெற்றதாய்த் தேர்ந்துநின்றேன்
ஏகமாய் ஓர விழிப்பார்வை காட்டுவாய் ஏந்திழையே!

- வ.க.கன்னியப்பன்

மேலும்

இனிமை. சிறப்பு ஐயா 28-Jun-2025 1:40 pm
கட்டளைக் கலித்துறை இனிமை அருமை 25-Apr-2025 10:00 pm
இதயம் விஜய் - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-May-2025 11:03 am

செங்கரும்புச் சாரும்இன் செவ்விள நன்நீரும்
திங்களாடும் பூமுகப் பூவிதழ் மீதோடும்
வங்கக் கடலலை மோதிடும் கூந்தலில்
தங்கியிளைப் பாறும்தென் றல்

மேலும்

மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி கவிப்பிரிய இதயம் விஜய் 28-Jun-2025 2:55 pm
நிலவாடும் முகத்தில் இன்னீராடும் இதழில் இனிதினிது ஐயா 28-Jun-2025 1:38 pm
அழகிய இனிமையான கருத்து மிக்க நன்றி கவிப்பிரிய பிரியா 25-May-2025 7:55 am
அழகு பதுமைக்கு உங்கள் வரிகள் மேலும் அழகு சேர்த்து இருக்கிறது கவின் அவர்களே... 24-May-2025 12:29 pm
இதயம் விஜய் - யாதுமறியான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Jun-2025 5:44 pm

உனதானேன் என்னுயிரே !

சிற்றூரில் பிறந்தவனைச்
சிறந்தவனாய் மாற்றிடவே
கற்றுத்தர வேண்டுவனக்
கற்பித்தார் தந்தையுமே !

நெளிவுகளைச் சுளிவுகளை
நேர்த்தியாக உணர்த்தியே
தெளிவாக்கி உலகினிலே
உயர்த்தியவள் அன்னையே !

தட்டுகெட்டுப் போகாமல்
தடுத்தாண்ட நட்புகளே
ஒட்டிவாழும் உன்னதமாய்
உடன்பிறந்த சொந்தங்களே !

இத்தனைக்கும் மத்தியிலே
இமைப்பொழுதில் தோன்றினாயே
மொத்தமாக இதயத்திலே
மோதியென்னைத் தாக்கினாயே !

அன்புயென்னும் ஆயுதத்தால்
அடியேனை வீழ்த்தினாயே
அன்றுமுதல் மீள்வதற்கு
ஆர்வமின்றி வாழ்கிறேனே !

தேனோடு பால்கலந்து
தெவிட்டாது இனிப்பதுபோல்
ஊனோடும் உளமோடும்
உனதானேன் என்னுயிரே !

-யாதுமறியான்.

மேலும்

அழகு.. வாழ்த்துகள் சிறந்தவளா(னா)ய் சரி செய்யவும் 28-Jun-2025 1:26 pm
இதயம் விஜய் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jun-2025 1:46 pm

நேரிசை வெண்பா :

ஊர்க்குநிழல் புள்ளினம் உண்டுறைய ஊணுறையுள்
ஆர்த்தவுயிர்க் காற்றுநல்கும் ஆலமரம் - நீர்காத்து
யார்நெஞ்சும் வேண்டா நிழலணிந்(து) ஓங்கிவளர்
கார்புல்லில் வேர்கொள்ளும் காண்.

புள்ளினம் - பறவைகள், ஊணுறையுள் - ஊண் உறையுள், ஊண் - உணவு, ஆர்த்த - மிகுதியான, கார் - கருமை, கார்புல் - பனை.

பொருள் :

பரந்து விரிந்த ஓர் ஆலமரம் ஊரிலுள்ள மக்களுக்கும் அவர்கள் வளர்க்கும் விலங்குகளுக்கும் வெயிலில் இளைப்பாற பெருநிழலையும் பறவைகள் உண்பதற்குக் கனிகளையும் தங்குவதற்கேற்ற இடத்தையும் மற்ற மரங்களைவிட மிகுதியான உயிர்க்காற்றையும் தரும். இத்தகைய ஆலமரமானது நிலத்தடி நீரைக் காத்து உயரமாய் வளர்ந்து பிறர் தங்கிச்

மேலும்

இதயம் விஜய் - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-May-2025 6:42 pm

புன்னகைத் தாள்திறந்து பூவிதழ் வாசலிலே
என்னை வரவேற்கும் என்னெழில் காதலியே
கண்ணின் அசைவினில் சொல்லுவது என்னயேழு
வண்ணம்என் நெஞ்சினி லே

மேலும்

தங்கள் வரிகள் எழுதென்று என்னைத் தூண்டியது. ---இதை நான் விரும்புகிறேன் வெண்பாவிற்கு வெண்பா அருமை தேனள்ளி நீவாதோ? என்றால் தீயிதழ்கள் ? தேனிதழ்கள் எனலாம் தேனள்ளித் தூவாதோ தேனிதழ்கள் கருத்து யாப்புக் கவிதையுடன் மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி கவிப்பிரிய இதயம் விஜய் 28-Jun-2025 3:06 pm
மானவள் புன்னகைத்தாள் வானவில் என்னகத்தில் அழகழகு ஐயா. தங்கள் வரிகள் எழுதென்று என்னைத் தூண்டியது. மானவள் புன்னகைக்க வானவில் என்னகத்தில் தேனள்ளி நீவாதோ? தீயிதழ்கள் - கானடைந்த புள்ளினங்கள் செங்கதிர் பூக்குங்கால் போவதன்ன கொள்ளையெழில் காணுமுயிர்க் கூடு. 27-Jun-2025 1:41 pm
இதயம் விஜய் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Aug-2024 9:36 am

நேரிசை வெண்பா :

ஆனிழலீன் தாய்தந்தை நீத்தபின்சூல் கொள்தையற்
பானிலவன் மீணாட்குப் பார்துயிலாள் - வேனிற்கால்
பட்டுலரும் வேருயிர்சூழ் பைந்நிறமில் ஓரிறும்பின்
பொட்டற்கண் நுங்குதிர் போந்து.

ஆனிழலீன் - ஆல் நிழல் ஈன், ஆல் - ஆலமரம், ஈன் - தருதல், நீத்த - நீங்கிய, சூல் - கருவுற்றநிலை, தையல் - பெண், பானிலவன் - பால் நிலவன், மீணாட்கு - மீள் நாட்கு, நாட்கு - நாளுக்கு, பார் - உலகம், துயில் - தூக்கம், கால் - காலம், வேருயிர் - தாவரங்கள், பைந்நிறம் - பச்சைநிறம், இல் - இல்லை, இறும்பு - குறுங்காடு, பொட்டல் - வறட்சியான நிலம், போந்து - பனைமரம்.

பொருள் :

கடுமையான வெயில் காலத்தில் பசுமை நிறமில்லாக் குறுங்காட்டின

மேலும்

இதயம் விஜய் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jul-2023 10:28 am

நேரிசை வெண்பா :

முண்மீறிக் காலேறும் முன்னில்லாச் செய்வெம்மை
தண்ணிழற் பூம்பொழிற் தான்காயும் - புண்மருண்டு
வீணிலைகாண் அல்லிமரை வெந்துலர் வேனிலில்
பாணிலத்துப் பெய்மழையாள் பார்.

முண்மீறி - முள் மீறி, செய் - வயல், வெம்மை - வெப்பம், தண் - குளிர்ச்சி, பொழில் - சோலை, காயும் - அழியும், புண்மருண்டு - புள் மருண்டு, புள் - பறவை, மருண்டு - மயங்கி, வீணிலை - வீழ் நிலை, மரை - தாமரை, வேனில் - வெயிற்காலம், பாணிலத்து - பாழ் நிலத்து, மழையாள் - மழைபோன்றவள்.

பொருள் :

வயல்வெளியில் நடந்து போகையில் நெருஞ்சி முட்களையும் மீறி, இதுவரை இல்லாத வெயில் கால்களைச் சுட்டு வருத்தும்.

குளிர்ந்த நிழலையும் பூவையும் உட

மேலும்

ஒற்றை வரியில் அழகிய கருத்து. என்றன் தமிழ் வேர்கள் மேன்மேலும் பூக்கள் பூத்து மணம் கமழ்வதற்குத் தங்கள் கார்முகில் மனத்தினால் கருத்து மழை பொழிந்ததில் மனம் மகிழ்ந்தேன். இதயம் நிறைந்த அன்பின் நன்றிகள் ஐயா 21-Jul-2023 12:01 pm
ஆம். ஐயா. பாழ்+நிலத்து இதன் புணர்ச்சியில் பாணிலத்து. என்றன் தமிழ் வேர்கள் மேன்மேலும் பூக்கள் பூத்து மணம் கமழ்வதற்குத் தங்கள் கார்முகில் மனத்தினால் கருத்து மழை பொழிந்ததில் மனம் மகிழ்ந்தேன். இதயம் நிறைந்த அன்பின் நன்றிகள் ஐயா 21-Jul-2023 12:00 pm
ஆகா கம்பன் காலத்திற்கே கொண்டு சென்றுவிட்டீர்கள் அருமை பாணிலத்துப் பெய்மழையாள் பார். ---ஆம் பார்த்தேன் ஓர் ஐயம் பாணிலத்து - பாழ் நிலத்து ---பொருளா புணர்ச்சியிலா ? 18-Jul-2023 6:30 am
முள்நிறைந்த பாலையில் பூத்த ஒற்றை ரோசாப்பூ போல் அவள் இதயம் விஜய்.....தரமான வெண்பா தந்து இதயத்தைப் பிடித்த புலவன்நீ இன்னும் இப்படி பாலபாடம் எழுதவும் ஆசிகள் 17-Jul-2023 6:23 pm
இதயம் விஜய் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jun-2023 10:33 am

நீ தாமரை என்பதால்
என் வாழ்வைச் சேறாக்கிச் சிரித்தாயோ?
நீ சூரியன் என்பதால்
என் வாழ்வை விறகாக்கி எரித்தாயோ?

நீரருந்த வழியின்றிப்
பறவைகள் எல்லாம் கிளம்புதே
தேனுறிஞ்ச முடியாமல்
வண்டுகள் எல்லாம் புலம்புதே

என்னுள் சிவந்து சிவந்து எழுகிறாய்
என்மேல் சிவந்து சிவந்து விழுகிறாய்

நாற்றத்தைச் சுமக்கிறேன்
வாசத்தை இழக்கிறேன்

கரையெங்கும் அலைகள் இறந்த மௌனம்
தரையெங்கும் இலைகள் உதிர்ந்து மரணம்

குப்பையாய் நான்
குப்பைக்குள் நான்

இந்தக் குளத்திற்கு
இந்த மரத்திற்கு
எப்போது பொழியுமோ?
ஓர் அடைமழை.

(உங/சா/உ0ருச)



(இருவர் உரையாடுவது போல் அமைத்துள்ளேன்.)


...இதயம் விஜய்...
..ஆம்பலாப்பட்டு..

மேலும்

என்றன் தமிழ் வேர்கள் மேன்மேலும் பூக்கள் பூத்து மணம் கமழ்வதற்குத் தங்கள் கார்முகில் மனத்தினால் கருத்து மழை பொழிந்ததில் மனம் மகிழ்ந்தேன். இதயம் நிறைந்த அன்பின் நன்றிகள் ஐயா 17-Jul-2023 10:04 am
அருமை நற் கவிஞனின் முத்திரை தெரிகிறது 25-Jun-2023 6:08 am
இதயம் விஜய் - மலர்91 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-May-2023 10:27 pm

வணக்கம் சோசியரே.
@@@@
வணக்கம், வணக்கம். வாய்யா முத்தய்யா. உன் மனவிக்கு குழந்தை பிறந்திருச்சா?
@@@@@
இரட்டைக் குழந்தைங்க ஐயா. இரண்டும் பெண் குழந்தைகள். நேற்றுக் காலைல எட்டு மணிக்கு. அவுங்க பிறந்த நேரம் ராசி பார்த்து பேரு வச்சு சாதக் குறிப்பு எழுதிக் குடுங்க ஐயா.
@@@@@@
(குறிப்பு எழுதி கணித்துப் பார்த்து):
குழந்தைகள் நல்ல நேரத்தில் பிறந்திருக்கறாங்க. அவர்கள் ராசிப்படி ஒரு குழந்தைக்கு 'சந்தியா'னு பேரு வை. இன்னொரு குழந்தையோட பேரு 'அந்தியா'.
@@@@@@
பேருங்களுக்கு பொருள் சொல்லறீங்களா ஐயா.
@@@@@@
பெயர் சூட்டு விழாவுக்கு வர்றபோது சொல்லறேன்.
@@@@@@
சுவீட்டு நேமுங்க ஐயா. நன்றிங்க ஐயா.
@@@@@@@@@@@@@@@

மேலும்

அருமையான விளக்கம். மிக்க நன்றி கவிஞரே. 16-May-2023 12:28 pm
அருமை பெயர் விளக்கம் சந்தியா ---மாலையும் இரவும் சந்திக்கும் பொழுது சந்தியா காலம் அந்தி --அந்திப் பொழுது ---பகலின் அந்தம் அல்லது அந்தி --முடிவு என்பதாக இருக்கலாம் சந்தி மருவி அந்தியாகி இருக்கலாம் சொல்ல்லராச்சியார் நீங்கள்தான் சொல்ல வேண்டும் சந்தி --இரண்டு சேருமிடம் --CUSP --- சொல்லுடன் சொல் புணரும் போது சந்தியில் --இடையில் எழுத்து மிகும் திரிபு பெற்று வரும் என்று புணர்ச்சி விதிகள் கூறும் அவ்வாறு எழுத்தாவிடின் சந்திப்பிழை என்பர் புது + கவிதை =புது கவிதை இல்லை புதுக் கவிதை .நீங்கள் அறிவீர்கள் மாலையும் இரவும் சந்திக்கும் இடத்தில் மயங்கிய ஒளியினைப் போலே மன மயக்கத்தைத் தந்தவளே ஓ ஓ ...வழியில் வந்தவள் நீயே ---PBS ன் பாடல் நினைவுக்கு வந்தது 15-May-2023 10:22 am
இதயம் விஜய் - மலர்91 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Jun-2023 10:30 am

பாட்டி, என் மனைவிக்கு பையன் பொறந்து மூணு நாளு ஆச்சு. நகரசபையில பேரைப் பதிவு பண்ண கேக்குறாங்க. மருத்துவமனையில் சொல்லிட்டாங்க. பையனுக்கு நீங்களே ஒரு பேரைச் சொல்லுங்க.
@@@@@###
உனக்கு இந்திப் பேரைத் தான் வைக்கணும்னு ஆகாயத்துக்கும் பூமிக்கும் குதிச்சு உன்னோட அப்பன் பிடிவாதமா உனக்கு 'ஆக்காசு'னு பேரு வச்சுட்டான்டா. ஒரு பிள்ளைக்குத் தகப்பன் ஆனபிறகும் தலை கால் புரியாம நீ எல்லா விசயத்திலும் அட்டகாசம் பண்ணீட்டு திரியற பயலா இருக்கிற. உம் பையனுக்கு 'அட்டாகாசு' (அட்டகாஷ்)னு வச்சிருடா. இந்திப் பேரு மாதிரியே இருக்கும்டா ஆக்காசு.
@@@@@@@@
அருமை. அருமை. 'அட்டகாஷ்' அருமையான பேரு பாட்டி. நம்ம சனங்கள் எல்லாம் "அட

மேலும்

இதயம் விஜய் - மலர்91 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Nov-2022 10:50 pm

பன்னி இங்க வா. பன்னி, சீக்கிரமா வா.

@@@@
யாரும்மா பன்னியைத் கூப்படறது? எங்க கிராமத்தி யாரும் பன்றி வளர்க்கிறது இல்லம்மா. நீ வெளி ஊரு பெண்ணா? நீ எதாவது பயிற்சி கொடுத்த பன்றியைத் கூட்டிட்டு வந்திருக்கிறய? "பன்னி, இங்க வா"னு கூப்படற.

@@@@@
ஐயா, நான் ஹங்கேரி நாட்டிலிருந்து வர்றேன். என் கணவர் அங்கு வேலையில் இருக்கிறார். நான் உங்க பக்கத்து ஊரு. உங்க ஊரு மாரியம்மன் கோயிலில் சாமி கும்பிட வந்திருக்கிறேன்.
@@@@@
சந்தோசம்மா. 'பன்னி'-னு யாரைக் கூப்பிட்ட?
@@@@@@
அதோ பாருங்க. அந்த ஆலமரத்தில் விளையாடிட்டு இருக்கிறவள் எம் பொண்ணு. அவளைத் தான் கூப்பிட்டேன்.
#@@#@#
ஓ..‌‌‌‌‌... அந்தக் கொழுந்தை பேரு தான் பன்னிய

மேலும்

banni banni என்றால் கன்னடத்தில் வா வா என்று பொருள் Hungarian panni கன்னடத்தில் banni banni தமிழில் வா வா ஒரு ர் போட்டால் தமிழில் அழகான பெயர் கிடைக்கும் பன்னீர் மலர் ---பிடித்ததா ? ஆம் என்று உடனே சொல்ல வேண்டும் 11-Nov-2022 10:30 pm
இதயம் விஜய் - மலர்91 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Oct-2022 4:53 pm

ஏன்டி அசுவினி நல்ல அழகான பொண்ணு உன்னோட பொண்ணு. அவ பேரு என்னடி?
@@@@@
எம் பொண்ணுப் பேரு 'முண்டா".
@@@@@
என்னது உம் பொண்ணுப் பேரு 'முண்டா'வா? நல்ல வேளை 'அண்டா'னு பேரு வைக்கல. உனக்கும் உன் வீட்டுக்காரனுககும் கொஞ்சங்கூட அறிவில்லையா? அந்தப் பேரைக் காதில் கேக்கறங்க எல்லாம் ரொம்பக் கேவலமாகப் பேசுவாங்கடி.
@@@@@
பாட்டி, 'முண்டா'ங்கிற பேருக்கு அழகான அர்த்தம் இருக்குது. நானும் என் கணவரும் தேடிக் கண்டுபிடிச்சு வச்ச பேரு 'முண்டா'.
உங்களைத் தவிர இந்தப் பேரைக் காதில கேட்டவங்க எல்லாம் "முண்டா இந்திப் பேரு போல இருக்கு. இந்திப் பேருன்னாவே வெரி ஸ்வீட் நேம்"னு பாராட்டறாங்க பாட்டி.
நல்லவேளை என் குழந்தைக்கு தமிழ

மேலும்

யாரிந்த அசுவினி ? 26-Oct-2022 12:19 pm
நன்றி கவிஞரே. உங்கள் கருத்தை 'அசுவினி'க்குத் தெரிவிக்கலாம். 26-Oct-2022 11:49 am
சாமுண்டா என்று வைக்கலாம் மைசூர் சாமுண்டேஸ்வரி பெயரில் 25-Oct-2022 12:20 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (99)

Deepan

Deepan

சென்னை
user photo

Fayas Ahamed

இலங்கை
user photo

வீரா

சேலம்
கவிஞர் விஜெ

கவிஞர் விஜெ

சேவூர்-ஆரணி

இவர் பின்தொடர்பவர்கள் (99)

இவரை பின்தொடர்பவர்கள் (100)

user photo

podiyan

mathurai
கார்த்திக்

கார்த்திக்

சுவாமிமலை

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே