இதயம் விஜய் - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  இதயம் விஜய்
இடம்:  ஆம்பலாப்பட்டு
பிறந்த தேதி :  27-Apr-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Nov-2013
பார்த்தவர்கள்:  9949
புள்ளி:  1633

என்னைப் பற்றி...

அகமே யாக்கை அன்பே உயிர்


விழிகள் உறங்கினாலும் விதைகள் உறங்காது...
தமிழை விதைத்திடு தமிழோடு வாழ்ந்திடு...

இயந்திரவியல் படித்துள்ளேன்.கவிதை எழுதுவது மிகவும் பிடிக்கும். கவிதை, பாட்டு, ஓவியம் தனிமையான நேரங்களில் நான் விரும்பும் சொந்தங்கள்...

என் படைப்புகள்
இதயம் விஜய் செய்திகள்
இதயம் விஜய் - இதயம் விஜய் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Jul-2023 10:28 am

நேரிசை வெண்பா :

முண்மீறிக் காலேறும் முன்னில்லாச் செய்வெம்மை
தண்ணிழற் பூம்பொழிற் தான்காயும் - புண்மருண்டு
வீணிலைகாண் அல்லிமரை வெந்துலர் வேனிலில்
பாணிலத்துப் பெய்மழையாள் பார்.

முண்மீறி - முள் மீறி, செய் - வயல், வெம்மை - வெப்பம், தண் - குளிர்ச்சி, பொழில் - சோலை, காயும் - அழியும், புண்மருண்டு - புள் மருண்டு, புள் - பறவை, மருண்டு - மயங்கி, வீணிலை - வீழ் நிலை, மரை - தாமரை, வேனில் - வெயிற்காலம், பாணிலத்து - பாழ் நிலத்து, மழையாள் - மழைபோன்றவள்.

பொருள் :

வயல்வெளியில் நடந்து போகையில் நெருஞ்சி முட்களையும் மீறி, இதுவரை இல்லாத வெயில் கால்களைச் சுட்டு வருத்தும்.

குளிர்ந்த நிழலையும் பூவையும் உட

மேலும்

ஒற்றை வரியில் அழகிய கருத்து. என்றன் தமிழ் வேர்கள் மேன்மேலும் பூக்கள் பூத்து மணம் கமழ்வதற்குத் தங்கள் கார்முகில் மனத்தினால் கருத்து மழை பொழிந்ததில் மனம் மகிழ்ந்தேன். இதயம் நிறைந்த அன்பின் நன்றிகள் ஐயா 21-Jul-2023 12:01 pm
ஆம். ஐயா. பாழ்+நிலத்து இதன் புணர்ச்சியில் பாணிலத்து. என்றன் தமிழ் வேர்கள் மேன்மேலும் பூக்கள் பூத்து மணம் கமழ்வதற்குத் தங்கள் கார்முகில் மனத்தினால் கருத்து மழை பொழிந்ததில் மனம் மகிழ்ந்தேன். இதயம் நிறைந்த அன்பின் நன்றிகள் ஐயா 21-Jul-2023 12:00 pm
ஆகா கம்பன் காலத்திற்கே கொண்டு சென்றுவிட்டீர்கள் அருமை பாணிலத்துப் பெய்மழையாள் பார். ---ஆம் பார்த்தேன் ஓர் ஐயம் பாணிலத்து - பாழ் நிலத்து ---பொருளா புணர்ச்சியிலா ? 18-Jul-2023 6:30 am
முள்நிறைந்த பாலையில் பூத்த ஒற்றை ரோசாப்பூ போல் அவள் இதயம் விஜய்.....தரமான வெண்பா தந்து இதயத்தைப் பிடித்த புலவன்நீ இன்னும் இப்படி பாலபாடம் எழுதவும் ஆசிகள் 17-Jul-2023 6:23 pm
இதயம் விஜய் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jul-2023 10:28 am

நேரிசை வெண்பா :

முண்மீறிக் காலேறும் முன்னில்லாச் செய்வெம்மை
தண்ணிழற் பூம்பொழிற் தான்காயும் - புண்மருண்டு
வீணிலைகாண் அல்லிமரை வெந்துலர் வேனிலில்
பாணிலத்துப் பெய்மழையாள் பார்.

முண்மீறி - முள் மீறி, செய் - வயல், வெம்மை - வெப்பம், தண் - குளிர்ச்சி, பொழில் - சோலை, காயும் - அழியும், புண்மருண்டு - புள் மருண்டு, புள் - பறவை, மருண்டு - மயங்கி, வீணிலை - வீழ் நிலை, மரை - தாமரை, வேனில் - வெயிற்காலம், பாணிலத்து - பாழ் நிலத்து, மழையாள் - மழைபோன்றவள்.

பொருள் :

வயல்வெளியில் நடந்து போகையில் நெருஞ்சி முட்களையும் மீறி, இதுவரை இல்லாத வெயில் கால்களைச் சுட்டு வருத்தும்.

குளிர்ந்த நிழலையும் பூவையும் உட

மேலும்

ஒற்றை வரியில் அழகிய கருத்து. என்றன் தமிழ் வேர்கள் மேன்மேலும் பூக்கள் பூத்து மணம் கமழ்வதற்குத் தங்கள் கார்முகில் மனத்தினால் கருத்து மழை பொழிந்ததில் மனம் மகிழ்ந்தேன். இதயம் நிறைந்த அன்பின் நன்றிகள் ஐயா 21-Jul-2023 12:01 pm
ஆம். ஐயா. பாழ்+நிலத்து இதன் புணர்ச்சியில் பாணிலத்து. என்றன் தமிழ் வேர்கள் மேன்மேலும் பூக்கள் பூத்து மணம் கமழ்வதற்குத் தங்கள் கார்முகில் மனத்தினால் கருத்து மழை பொழிந்ததில் மனம் மகிழ்ந்தேன். இதயம் நிறைந்த அன்பின் நன்றிகள் ஐயா 21-Jul-2023 12:00 pm
ஆகா கம்பன் காலத்திற்கே கொண்டு சென்றுவிட்டீர்கள் அருமை பாணிலத்துப் பெய்மழையாள் பார். ---ஆம் பார்த்தேன் ஓர் ஐயம் பாணிலத்து - பாழ் நிலத்து ---பொருளா புணர்ச்சியிலா ? 18-Jul-2023 6:30 am
முள்நிறைந்த பாலையில் பூத்த ஒற்றை ரோசாப்பூ போல் அவள் இதயம் விஜய்.....தரமான வெண்பா தந்து இதயத்தைப் பிடித்த புலவன்நீ இன்னும் இப்படி பாலபாடம் எழுதவும் ஆசிகள் 17-Jul-2023 6:23 pm
இதயம் விஜய் - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-May-2023 6:46 am

முத்துக்கள் உறவு
கொள்ளுமிடம்
உன் பளிச்சிடும் புன்னகை
முத்தக்கடல் உறவு
கொள்ளுமிடம்
உன் விழியின் நீலம்
புத்தகம்போல் விரிவதோ
உன் மௌன இதழ்கள்
சித்திரம் தோற்பதோ
உன் பொன்மேனி எழிலிடம்

மேலும்

Thank you sir . என் பெயர் ஹுமேரா பர்வீன் சார் . 17-Jul-2023 11:41 am
இலக்கிய ரசனையுடன் எழுதிய அழகிய கருத்து மிக்க நன்றி கவிப்பிரிய இதயம் விஜய் 17-Jul-2023 10:36 am
மிக இனிது ஐயா. அடுக்கி வைத்த ஒவ்வொர் அடுக்கிலும் சொட்டுகிறது உவமைத்தேன்... ❤ 17-Jul-2023 10:12 am
welcome ஹ்யூமார பர்வீன் ரசித்து எழுதிய கருத்து மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி கவிப்பிரிய ஹ்யூமார பர்வீன் 03-Jul-2023 7:53 am
இதயம் விஜய் - இதயம் விஜய் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jun-2023 10:33 am

நீ தாமரை என்பதால்
என் வாழ்வைச் சேறாக்கிச் சிரித்தாயோ?
நீ சூரியன் என்பதால்
என் வாழ்வை விறகாக்கி எரித்தாயோ?

நீரருந்த வழியின்றிப்
பறவைகள் எல்லாம் கிளம்புதே
தேனுறிஞ்ச முடியாமல்
வண்டுகள் எல்லாம் புலம்புதே

என்னுள் சிவந்து சிவந்து எழுகிறாய்
என்மேல் சிவந்து சிவந்து விழுகிறாய்

நாற்றத்தைச் சுமக்கிறேன்
வாசத்தை இழக்கிறேன்

கரையெங்கும் அலைகள் இறந்த மௌனம்
தரையெங்கும் இலைகள் உதிர்ந்து மரணம்

குப்பையாய் நான்
குப்பைக்குள் நான்

இந்தக் குளத்திற்கு
இந்த மரத்திற்கு
எப்போது பொழியுமோ?
ஓர் அடைமழை.

(உங/சா/உ0ருச)



(இருவர் உரையாடுவது போல் அமைத்துள்ளேன்.)


...இதயம் விஜய்...
..ஆம்பலாப்பட்டு..

மேலும்

என்றன் தமிழ் வேர்கள் மேன்மேலும் பூக்கள் பூத்து மணம் கமழ்வதற்குத் தங்கள் கார்முகில் மனத்தினால் கருத்து மழை பொழிந்ததில் மனம் மகிழ்ந்தேன். இதயம் நிறைந்த அன்பின் நன்றிகள் ஐயா 17-Jul-2023 10:04 am
அருமை நற் கவிஞனின் முத்திரை தெரிகிறது 25-Jun-2023 6:08 am
இதயம் விஜய் - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Jun-2023 7:59 am

புனையும் கவிதைக்கு
-உனது புன்னகை முன்னுரை
நினைவில் கவியும்
-அந்தி நீலவிழியின்
நன்கொடை
கனவினிலும் சலனிக்கும்
-உனது நினைவின்
நீரோடை
மனமெல்லாம் மௌனப்
-பார்வையின் காதல்
சுவடுகள்

மேலும்

ரசித்துப் படித்ததில் மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி கவிப்பிரிய இதயம் விஜய் 24-Jun-2023 1:51 pm
இனிதினிது. மனமெங்கும் மௌனப் பார்வையின் காதல் சுவடுகள்...! மிகவும் சுவைத்தேன் ஐயா. 24-Jun-2023 11:10 am
இதயம் விஜய் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jun-2023 10:33 am

நீ தாமரை என்பதால்
என் வாழ்வைச் சேறாக்கிச் சிரித்தாயோ?
நீ சூரியன் என்பதால்
என் வாழ்வை விறகாக்கி எரித்தாயோ?

நீரருந்த வழியின்றிப்
பறவைகள் எல்லாம் கிளம்புதே
தேனுறிஞ்ச முடியாமல்
வண்டுகள் எல்லாம் புலம்புதே

என்னுள் சிவந்து சிவந்து எழுகிறாய்
என்மேல் சிவந்து சிவந்து விழுகிறாய்

நாற்றத்தைச் சுமக்கிறேன்
வாசத்தை இழக்கிறேன்

கரையெங்கும் அலைகள் இறந்த மௌனம்
தரையெங்கும் இலைகள் உதிர்ந்து மரணம்

குப்பையாய் நான்
குப்பைக்குள் நான்

இந்தக் குளத்திற்கு
இந்த மரத்திற்கு
எப்போது பொழியுமோ?
ஓர் அடைமழை.

(உங/சா/உ0ருச)



(இருவர் உரையாடுவது போல் அமைத்துள்ளேன்.)


...இதயம் விஜய்...
..ஆம்பலாப்பட்டு..

மேலும்

என்றன் தமிழ் வேர்கள் மேன்மேலும் பூக்கள் பூத்து மணம் கமழ்வதற்குத் தங்கள் கார்முகில் மனத்தினால் கருத்து மழை பொழிந்ததில் மனம் மகிழ்ந்தேன். இதயம் நிறைந்த அன்பின் நன்றிகள் ஐயா 17-Jul-2023 10:04 am
அருமை நற் கவிஞனின் முத்திரை தெரிகிறது 25-Jun-2023 6:08 am
இதயம் விஜய் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jun-2023 4:50 pm

வேலைமுடிந்த வெறுங்கையோடு
களைந்த அழுக்குத் துணிகளைக்
கல்லில் இரண்டு கும்மி கும்மி
குளித்து வீட்டிற்குள் நுழைகிறாள்

அடுப்பேற்றும் உலைப்பானைக்கு
நெருப்பு வைத்த நொடியிலே
சூடேறிக் கொதிக்கிறது நெஞ்சு
ஐயோ அரிசி இல்லையேயென்று

வீடுவீடாய் ஏறியிறங்கும் மனம்
ஒருவீட்டில் போய் நின்றதும்
நம்பிக்கையுடன் ஓடித் திரும்பி
உலையில் அரிசி போடுகிறாள்

முருங்கையின் போத்தொடித்துப்
பழுப்பற்ற கீரையை உருவியவள்
சிறிது புளியை ஊறவைத்த பின்
கொள்கலங்களை ஆராய்கிறாள்

ஊதா மஞ்சள் சிவப்பென்று
நெகிழி மூடிகளைத் திறந்துமூட
பருப்பு இல்லையென்றானதும்
சாம்பார் குழம்பாய் மாறுகிறது

எப்போதும் போல் ஏமாற்றாமல்
மல்லிமிளகாய்த் துணை நின்று
இர

மேலும்

மனந்திறந்த கருத்து. என்றன் தமிழ் வேர்கள் பூக்கள் பூத்து மணம் கமழ்ந்திட தங்கள் கார்முகில் மனத்தினால் கருத்து மழை பொழிந்ததில் மனம் மகிழ்ந்தேன். இதயம் நிறைந்த அன்பின் நன்றிகள் ஐயா 24-Jun-2023 10:38 am
தாய்க் கையில் சமைத்த வெறும் குழப்பு கூட அவள் பரிமாறுகையில் அமுதாய் மாறிடுமே இது வெறும் புகழ்ச்சி யல்ல எனனுபவம் சொன்ன உண்மைக்கு கருத்து மீண்டும் ஒரு 'சபாஷ்' விஜய்....கருத்துள்ள பாடல் படித்து மகிழ்ந்தேன் 22-Jun-2023 10:48 pm
இதயம் விஜய் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jun-2023 7:30 pm

"புன்னகையில் நீவரும் போதுபூ நாணிமூடும்"

கவின் சாரலன் ஐயா எழுதிய வெண்பாவின் முதலடி, எனை ஒரு வெண்பாவை எழுதத் தூண்டியது.

**************

நேரிசை வெண்பா :

பொன்னிலவாள் கண்மருளும் பொய்யிடையாள் உட்பறந்து
கன்மனத்தில் தேன்குடிக்கும் கார்விழியாள் - புன்னகைத்தாள்
மெய்வெளியில் புள்ளினங்கள் மென்சிறகில் பண்ணெழுப்பும்
வெய்யவனும் தண்ணளிப்பான் வீழ்ந்து.

மருளும் - மயங்கும், இடை - இடுப்பு, கன்மனம் - கல் மனம், கார் - கருமை, புள்ளினங்கள் - பறவைகள், பண் - இசை, வெய்யவன் - சூரியன், தண் - குளிர்ச்சி.

பொருள் :

அவள் பொன் நிலவைப் போன்று இருப்பவள். அவளுக்கு இடை இருக்கிறதா? இல்லையா? என்று, பார்க்கும் கண்களை மயங்க வ

மேலும்

என்றன் தமிழ் வேர்கள் பூக்கள் பூத்து மணம் கமழ்ந்திட தங்கள் கார்முகில் மனத்தினால் கருத்து மழை பொழிந்ததில் மனம் மகிழ்ந்தேன். இதயம் நிறைந்த அன்பின் நன்றிகள் 22-Jun-2023 5:00 pm
மிக அருமை... தங்களின் விளக்கம் கோனார் தமிழ் உரை கூட தோற்கும் அளவு மிகச் சிறப்பு. 22-Jun-2023 4:43 am
என்றன் தமிழ் வேர்கள் பூக்கள் பூத்து மணம் கமழ்ந்திட தங்கள் கார்முகில் மனத்தினால் கருத்து மழை பொழிந்ததில் மனம் மகிழ்ந்தேன். இதயம் நிறைந்த அன்பின் நன்றிகள் ஐயா. 18-Jun-2023 7:00 pm
என்றன் தமிழ் வேர்கள் பூக்கள் பூத்து மணம் கமழ்ந்திட தங்கள் கார்முகில் மனத்தினால் கருத்து மழை பொழிந்ததில் மனம் மகிழ்ந்தேன். இதயம் நிறைந்த அன்பின் நன்றிகள் ஐயா. 18-Jun-2023 7:00 pm
இதயம் விஜய் - மலர்91 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-May-2023 10:27 pm

வணக்கம் சோசியரே.
@@@@
வணக்கம், வணக்கம். வாய்யா முத்தய்யா. உன் மனவிக்கு குழந்தை பிறந்திருச்சா?
@@@@@
இரட்டைக் குழந்தைங்க ஐயா. இரண்டும் பெண் குழந்தைகள். நேற்றுக் காலைல எட்டு மணிக்கு. அவுங்க பிறந்த நேரம் ராசி பார்த்து பேரு வச்சு சாதக் குறிப்பு எழுதிக் குடுங்க ஐயா.
@@@@@@
(குறிப்பு எழுதி கணித்துப் பார்த்து):
குழந்தைகள் நல்ல நேரத்தில் பிறந்திருக்கறாங்க. அவர்கள் ராசிப்படி ஒரு குழந்தைக்கு 'சந்தியா'னு பேரு வை. இன்னொரு குழந்தையோட பேரு 'அந்தியா'.
@@@@@@
பேருங்களுக்கு பொருள் சொல்லறீங்களா ஐயா.
@@@@@@
பெயர் சூட்டு விழாவுக்கு வர்றபோது சொல்லறேன்.
@@@@@@
சுவீட்டு நேமுங்க ஐயா. நன்றிங்க ஐயா.
@@@@@@@@@@@@@@@

மேலும்

அருமையான விளக்கம். மிக்க நன்றி கவிஞரே. 16-May-2023 12:28 pm
அருமை பெயர் விளக்கம் சந்தியா ---மாலையும் இரவும் சந்திக்கும் பொழுது சந்தியா காலம் அந்தி --அந்திப் பொழுது ---பகலின் அந்தம் அல்லது அந்தி --முடிவு என்பதாக இருக்கலாம் சந்தி மருவி அந்தியாகி இருக்கலாம் சொல்ல்லராச்சியார் நீங்கள்தான் சொல்ல வேண்டும் சந்தி --இரண்டு சேருமிடம் --CUSP --- சொல்லுடன் சொல் புணரும் போது சந்தியில் --இடையில் எழுத்து மிகும் திரிபு பெற்று வரும் என்று புணர்ச்சி விதிகள் கூறும் அவ்வாறு எழுத்தாவிடின் சந்திப்பிழை என்பர் புது + கவிதை =புது கவிதை இல்லை புதுக் கவிதை .நீங்கள் அறிவீர்கள் மாலையும் இரவும் சந்திக்கும் இடத்தில் மயங்கிய ஒளியினைப் போலே மன மயக்கத்தைத் தந்தவளே ஓ ஓ ...வழியில் வந்தவள் நீயே ---PBS ன் பாடல் நினைவுக்கு வந்தது 15-May-2023 10:22 am
இதயம் விஜய் - மலர்91 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Jun-2023 10:30 am

பாட்டி, என் மனைவிக்கு பையன் பொறந்து மூணு நாளு ஆச்சு. நகரசபையில பேரைப் பதிவு பண்ண கேக்குறாங்க. மருத்துவமனையில் சொல்லிட்டாங்க. பையனுக்கு நீங்களே ஒரு பேரைச் சொல்லுங்க.
@@@@@###
உனக்கு இந்திப் பேரைத் தான் வைக்கணும்னு ஆகாயத்துக்கும் பூமிக்கும் குதிச்சு உன்னோட அப்பன் பிடிவாதமா உனக்கு 'ஆக்காசு'னு பேரு வச்சுட்டான்டா. ஒரு பிள்ளைக்குத் தகப்பன் ஆனபிறகும் தலை கால் புரியாம நீ எல்லா விசயத்திலும் அட்டகாசம் பண்ணீட்டு திரியற பயலா இருக்கிற. உம் பையனுக்கு 'அட்டாகாசு' (அட்டகாஷ்)னு வச்சிருடா. இந்திப் பேரு மாதிரியே இருக்கும்டா ஆக்காசு.
@@@@@@@@
அருமை. அருமை. 'அட்டகாஷ்' அருமையான பேரு பாட்டி. நம்ம சனங்கள் எல்லாம் "அட

மேலும்

இதயம் விஜய் - மலர்91 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Nov-2022 10:50 pm

பன்னி இங்க வா. பன்னி, சீக்கிரமா வா.

@@@@
யாரும்மா பன்னியைத் கூப்படறது? எங்க கிராமத்தி யாரும் பன்றி வளர்க்கிறது இல்லம்மா. நீ வெளி ஊரு பெண்ணா? நீ எதாவது பயிற்சி கொடுத்த பன்றியைத் கூட்டிட்டு வந்திருக்கிறய? "பன்னி, இங்க வா"னு கூப்படற.

@@@@@
ஐயா, நான் ஹங்கேரி நாட்டிலிருந்து வர்றேன். என் கணவர் அங்கு வேலையில் இருக்கிறார். நான் உங்க பக்கத்து ஊரு. உங்க ஊரு மாரியம்மன் கோயிலில் சாமி கும்பிட வந்திருக்கிறேன்.
@@@@@
சந்தோசம்மா. 'பன்னி'-னு யாரைக் கூப்பிட்ட?
@@@@@@
அதோ பாருங்க. அந்த ஆலமரத்தில் விளையாடிட்டு இருக்கிறவள் எம் பொண்ணு. அவளைத் தான் கூப்பிட்டேன்.
#@@#@#
ஓ..‌‌‌‌‌... அந்தக் கொழுந்தை பேரு தான் பன்னிய

மேலும்

banni banni என்றால் கன்னடத்தில் வா வா என்று பொருள் Hungarian panni கன்னடத்தில் banni banni தமிழில் வா வா ஒரு ர் போட்டால் தமிழில் அழகான பெயர் கிடைக்கும் பன்னீர் மலர் ---பிடித்ததா ? ஆம் என்று உடனே சொல்ல வேண்டும் 11-Nov-2022 10:30 pm
இதயம் விஜய் - மலர்91 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Oct-2022 4:53 pm

ஏன்டி அசுவினி நல்ல அழகான பொண்ணு உன்னோட பொண்ணு. அவ பேரு என்னடி?
@@@@@
எம் பொண்ணுப் பேரு 'முண்டா".
@@@@@
என்னது உம் பொண்ணுப் பேரு 'முண்டா'வா? நல்ல வேளை 'அண்டா'னு பேரு வைக்கல. உனக்கும் உன் வீட்டுக்காரனுககும் கொஞ்சங்கூட அறிவில்லையா? அந்தப் பேரைக் காதில் கேக்கறங்க எல்லாம் ரொம்பக் கேவலமாகப் பேசுவாங்கடி.
@@@@@
பாட்டி, 'முண்டா'ங்கிற பேருக்கு அழகான அர்த்தம் இருக்குது. நானும் என் கணவரும் தேடிக் கண்டுபிடிச்சு வச்ச பேரு 'முண்டா'.
உங்களைத் தவிர இந்தப் பேரைக் காதில கேட்டவங்க எல்லாம் "முண்டா இந்திப் பேரு போல இருக்கு. இந்திப் பேருன்னாவே வெரி ஸ்வீட் நேம்"னு பாராட்டறாங்க பாட்டி.
நல்லவேளை என் குழந்தைக்கு தமிழ

மேலும்

யாரிந்த அசுவினி ? 26-Oct-2022 12:19 pm
நன்றி கவிஞரே. உங்கள் கருத்தை 'அசுவினி'க்குத் தெரிவிக்கலாம். 26-Oct-2022 11:49 am
சாமுண்டா என்று வைக்கலாம் மைசூர் சாமுண்டேஸ்வரி பெயரில் 25-Oct-2022 12:20 pm
மேலும்...
கருத்துகள்

மேலே