இதயம் விஜய் - சுயவிவரம்
(Profile)
தமிழ் பித்தன்
இயற்பெயர் | : இதயம் விஜய் |
இடம் | : ஆம்பலாப்பட்டு |
பிறந்த தேதி | : 27-Apr-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 06-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 9949 |
புள்ளி | : 1633 |
அகமே யாக்கை அன்பே உயிர்
விழிகள் உறங்கினாலும் விதைகள் உறங்காது...
தமிழை விதைத்திடு தமிழோடு வாழ்ந்திடு...
இயந்திரவியல் படித்துள்ளேன்.கவிதை எழுதுவது மிகவும் பிடிக்கும். கவிதை, பாட்டு, ஓவியம் தனிமையான நேரங்களில் நான் விரும்பும் சொந்தங்கள்...
நேரிசை வெண்பா :
முண்மீறிக் காலேறும் முன்னில்லாச் செய்வெம்மை
தண்ணிழற் பூம்பொழிற் தான்காயும் - புண்மருண்டு
வீணிலைகாண் அல்லிமரை வெந்துலர் வேனிலில்
பாணிலத்துப் பெய்மழையாள் பார்.
முண்மீறி - முள் மீறி, செய் - வயல், வெம்மை - வெப்பம், தண் - குளிர்ச்சி, பொழில் - சோலை, காயும் - அழியும், புண்மருண்டு - புள் மருண்டு, புள் - பறவை, மருண்டு - மயங்கி, வீணிலை - வீழ் நிலை, மரை - தாமரை, வேனில் - வெயிற்காலம், பாணிலத்து - பாழ் நிலத்து, மழையாள் - மழைபோன்றவள்.
பொருள் :
வயல்வெளியில் நடந்து போகையில் நெருஞ்சி முட்களையும் மீறி, இதுவரை இல்லாத வெயில் கால்களைச் சுட்டு வருத்தும்.
குளிர்ந்த நிழலையும் பூவையும் உட
நேரிசை வெண்பா :
முண்மீறிக் காலேறும் முன்னில்லாச் செய்வெம்மை
தண்ணிழற் பூம்பொழிற் தான்காயும் - புண்மருண்டு
வீணிலைகாண் அல்லிமரை வெந்துலர் வேனிலில்
பாணிலத்துப் பெய்மழையாள் பார்.
முண்மீறி - முள் மீறி, செய் - வயல், வெம்மை - வெப்பம், தண் - குளிர்ச்சி, பொழில் - சோலை, காயும் - அழியும், புண்மருண்டு - புள் மருண்டு, புள் - பறவை, மருண்டு - மயங்கி, வீணிலை - வீழ் நிலை, மரை - தாமரை, வேனில் - வெயிற்காலம், பாணிலத்து - பாழ் நிலத்து, மழையாள் - மழைபோன்றவள்.
பொருள் :
வயல்வெளியில் நடந்து போகையில் நெருஞ்சி முட்களையும் மீறி, இதுவரை இல்லாத வெயில் கால்களைச் சுட்டு வருத்தும்.
குளிர்ந்த நிழலையும் பூவையும் உட
முத்துக்கள் உறவு
கொள்ளுமிடம்
உன் பளிச்சிடும் புன்னகை
முத்தக்கடல் உறவு
கொள்ளுமிடம்
உன் விழியின் நீலம்
புத்தகம்போல் விரிவதோ
உன் மௌன இதழ்கள்
சித்திரம் தோற்பதோ
உன் பொன்மேனி எழிலிடம்
நீ தாமரை என்பதால்
என் வாழ்வைச் சேறாக்கிச் சிரித்தாயோ?
நீ சூரியன் என்பதால்
என் வாழ்வை விறகாக்கி எரித்தாயோ?
நீரருந்த வழியின்றிப்
பறவைகள் எல்லாம் கிளம்புதே
தேனுறிஞ்ச முடியாமல்
வண்டுகள் எல்லாம் புலம்புதே
என்னுள் சிவந்து சிவந்து எழுகிறாய்
என்மேல் சிவந்து சிவந்து விழுகிறாய்
நாற்றத்தைச் சுமக்கிறேன்
வாசத்தை இழக்கிறேன்
கரையெங்கும் அலைகள் இறந்த மௌனம்
தரையெங்கும் இலைகள் உதிர்ந்து மரணம்
குப்பையாய் நான்
குப்பைக்குள் நான்
இந்தக் குளத்திற்கு
இந்த மரத்திற்கு
எப்போது பொழியுமோ?
ஓர் அடைமழை.
(உங/சா/உ0ருச)
(இருவர் உரையாடுவது போல் அமைத்துள்ளேன்.)
...இதயம் விஜய்...
..ஆம்பலாப்பட்டு..
புனையும் கவிதைக்கு
-உனது புன்னகை முன்னுரை
நினைவில் கவியும்
-அந்தி நீலவிழியின்
நன்கொடை
கனவினிலும் சலனிக்கும்
-உனது நினைவின்
நீரோடை
மனமெல்லாம் மௌனப்
-பார்வையின் காதல்
சுவடுகள்
நீ தாமரை என்பதால்
என் வாழ்வைச் சேறாக்கிச் சிரித்தாயோ?
நீ சூரியன் என்பதால்
என் வாழ்வை விறகாக்கி எரித்தாயோ?
நீரருந்த வழியின்றிப்
பறவைகள் எல்லாம் கிளம்புதே
தேனுறிஞ்ச முடியாமல்
வண்டுகள் எல்லாம் புலம்புதே
என்னுள் சிவந்து சிவந்து எழுகிறாய்
என்மேல் சிவந்து சிவந்து விழுகிறாய்
நாற்றத்தைச் சுமக்கிறேன்
வாசத்தை இழக்கிறேன்
கரையெங்கும் அலைகள் இறந்த மௌனம்
தரையெங்கும் இலைகள் உதிர்ந்து மரணம்
குப்பையாய் நான்
குப்பைக்குள் நான்
இந்தக் குளத்திற்கு
இந்த மரத்திற்கு
எப்போது பொழியுமோ?
ஓர் அடைமழை.
(உங/சா/உ0ருச)
(இருவர் உரையாடுவது போல் அமைத்துள்ளேன்.)
...இதயம் விஜய்...
..ஆம்பலாப்பட்டு..
வேலைமுடிந்த வெறுங்கையோடு
களைந்த அழுக்குத் துணிகளைக்
கல்லில் இரண்டு கும்மி கும்மி
குளித்து வீட்டிற்குள் நுழைகிறாள்
அடுப்பேற்றும் உலைப்பானைக்கு
நெருப்பு வைத்த நொடியிலே
சூடேறிக் கொதிக்கிறது நெஞ்சு
ஐயோ அரிசி இல்லையேயென்று
வீடுவீடாய் ஏறியிறங்கும் மனம்
ஒருவீட்டில் போய் நின்றதும்
நம்பிக்கையுடன் ஓடித் திரும்பி
உலையில் அரிசி போடுகிறாள்
முருங்கையின் போத்தொடித்துப்
பழுப்பற்ற கீரையை உருவியவள்
சிறிது புளியை ஊறவைத்த பின்
கொள்கலங்களை ஆராய்கிறாள்
ஊதா மஞ்சள் சிவப்பென்று
நெகிழி மூடிகளைத் திறந்துமூட
பருப்பு இல்லையென்றானதும்
சாம்பார் குழம்பாய் மாறுகிறது
எப்போதும் போல் ஏமாற்றாமல்
மல்லிமிளகாய்த் துணை நின்று
இர
"புன்னகையில் நீவரும் போதுபூ நாணிமூடும்"
கவின் சாரலன் ஐயா எழுதிய வெண்பாவின் முதலடி, எனை ஒரு வெண்பாவை எழுதத் தூண்டியது.
**************
நேரிசை வெண்பா :
பொன்னிலவாள் கண்மருளும் பொய்யிடையாள் உட்பறந்து
கன்மனத்தில் தேன்குடிக்கும் கார்விழியாள் - புன்னகைத்தாள்
மெய்வெளியில் புள்ளினங்கள் மென்சிறகில் பண்ணெழுப்பும்
வெய்யவனும் தண்ணளிப்பான் வீழ்ந்து.
மருளும் - மயங்கும், இடை - இடுப்பு, கன்மனம் - கல் மனம், கார் - கருமை, புள்ளினங்கள் - பறவைகள், பண் - இசை, வெய்யவன் - சூரியன், தண் - குளிர்ச்சி.
பொருள் :
அவள் பொன் நிலவைப் போன்று இருப்பவள். அவளுக்கு இடை இருக்கிறதா? இல்லையா? என்று, பார்க்கும் கண்களை மயங்க வ
வணக்கம் சோசியரே.
@@@@
வணக்கம், வணக்கம். வாய்யா முத்தய்யா. உன் மனவிக்கு குழந்தை பிறந்திருச்சா?
@@@@@
இரட்டைக் குழந்தைங்க ஐயா. இரண்டும் பெண் குழந்தைகள். நேற்றுக் காலைல எட்டு மணிக்கு. அவுங்க பிறந்த நேரம் ராசி பார்த்து பேரு வச்சு சாதக் குறிப்பு எழுதிக் குடுங்க ஐயா.
@@@@@@
(குறிப்பு எழுதி கணித்துப் பார்த்து):
குழந்தைகள் நல்ல நேரத்தில் பிறந்திருக்கறாங்க. அவர்கள் ராசிப்படி ஒரு குழந்தைக்கு 'சந்தியா'னு பேரு வை. இன்னொரு குழந்தையோட பேரு 'அந்தியா'.
@@@@@@
பேருங்களுக்கு பொருள் சொல்லறீங்களா ஐயா.
@@@@@@
பெயர் சூட்டு விழாவுக்கு வர்றபோது சொல்லறேன்.
@@@@@@
சுவீட்டு நேமுங்க ஐயா. நன்றிங்க ஐயா.
@@@@@@@@@@@@@@@
பாட்டி, என் மனைவிக்கு பையன் பொறந்து மூணு நாளு ஆச்சு. நகரசபையில பேரைப் பதிவு பண்ண கேக்குறாங்க. மருத்துவமனையில் சொல்லிட்டாங்க. பையனுக்கு நீங்களே ஒரு பேரைச் சொல்லுங்க.
@@@@@###
உனக்கு இந்திப் பேரைத் தான் வைக்கணும்னு ஆகாயத்துக்கும் பூமிக்கும் குதிச்சு உன்னோட அப்பன் பிடிவாதமா உனக்கு 'ஆக்காசு'னு பேரு வச்சுட்டான்டா. ஒரு பிள்ளைக்குத் தகப்பன் ஆனபிறகும் தலை கால் புரியாம நீ எல்லா விசயத்திலும் அட்டகாசம் பண்ணீட்டு திரியற பயலா இருக்கிற. உம் பையனுக்கு 'அட்டாகாசு' (அட்டகாஷ்)னு வச்சிருடா. இந்திப் பேரு மாதிரியே இருக்கும்டா ஆக்காசு.
@@@@@@@@
அருமை. அருமை. 'அட்டகாஷ்' அருமையான பேரு பாட்டி. நம்ம சனங்கள் எல்லாம் "அட
பன்னி இங்க வா. பன்னி, சீக்கிரமா வா.
@@@@
யாரும்மா பன்னியைத் கூப்படறது? எங்க கிராமத்தி யாரும் பன்றி வளர்க்கிறது இல்லம்மா. நீ வெளி ஊரு பெண்ணா? நீ எதாவது பயிற்சி கொடுத்த பன்றியைத் கூட்டிட்டு வந்திருக்கிறய? "பன்னி, இங்க வா"னு கூப்படற.
@@@@@
ஐயா, நான் ஹங்கேரி நாட்டிலிருந்து வர்றேன். என் கணவர் அங்கு வேலையில் இருக்கிறார். நான் உங்க பக்கத்து ஊரு. உங்க ஊரு மாரியம்மன் கோயிலில் சாமி கும்பிட வந்திருக்கிறேன்.
@@@@@
சந்தோசம்மா. 'பன்னி'-னு யாரைக் கூப்பிட்ட?
@@@@@@
அதோ பாருங்க. அந்த ஆலமரத்தில் விளையாடிட்டு இருக்கிறவள் எம் பொண்ணு. அவளைத் தான் கூப்பிட்டேன்.
#@@#@#
ஓ..... அந்தக் கொழுந்தை பேரு தான் பன்னிய
ஏன்டி அசுவினி நல்ல அழகான பொண்ணு உன்னோட பொண்ணு. அவ பேரு என்னடி?
@@@@@
எம் பொண்ணுப் பேரு 'முண்டா".
@@@@@
என்னது உம் பொண்ணுப் பேரு 'முண்டா'வா? நல்ல வேளை 'அண்டா'னு பேரு வைக்கல. உனக்கும் உன் வீட்டுக்காரனுககும் கொஞ்சங்கூட அறிவில்லையா? அந்தப் பேரைக் காதில் கேக்கறங்க எல்லாம் ரொம்பக் கேவலமாகப் பேசுவாங்கடி.
@@@@@
பாட்டி, 'முண்டா'ங்கிற பேருக்கு அழகான அர்த்தம் இருக்குது. நானும் என் கணவரும் தேடிக் கண்டுபிடிச்சு வச்ச பேரு 'முண்டா'.
உங்களைத் தவிர இந்தப் பேரைக் காதில கேட்டவங்க எல்லாம் "முண்டா இந்திப் பேரு போல இருக்கு. இந்திப் பேருன்னாவே வெரி ஸ்வீட் நேம்"னு பாராட்டறாங்க பாட்டி.
நல்லவேளை என் குழந்தைக்கு தமிழ