Deepan - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Deepan
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  23-May-1958
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Jun-2020
பார்த்தவர்கள்:  166
புள்ளி:  77

என்னைப் பற்றி...

ஓய்வு பெற்ற அரசு வங்கி மேலாளர். தமிழிலும் இசையிலும் ஆர்வம் உண்டு. சென்னை, நங்கநல்லூரில் "ஞாலம்" "ஏரிக்கரைஇலக்கிய வட்டம்", "திருக்குறள் பேரவை", "புழுதிவாக்கம் இலக்கிய மன்றம்" இவைகளில் உறுப்பினராக இருக்கிறேன். இந்த மன்றங்களில் கவிதைகள் வாசித்துள்ளேன். கவியரங்கத் தலைவராக இருந்துள்ளேன். "இன்பத் தமிழ்" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றியுள்ளேன்.

என் படைப்புகள்
Deepan செய்திகள்
Deepan - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jun-2021 9:58 am

மூத்தோனே, செட்டி மகனே
முத்தையா, உன்
விரல் நழுவிய வார்த்தைகள்,
நல் சரம் தழுவிய முத்தைய்யா.
உன் சிந்தை கொட்டும் சந்தங்கள்
என் உள்ளம் முட்டும் சொந்தங்கள்.
உன் கவிதைகள் அத்தனையும்
என் அறிவு மேடையில் தை தை
என நடனமாடும் விந்தை எப்படி?
அது கன்னல் பொதி வரிகளால்
முன்னம் நீ போட்ட வித்தைய்யா.

மெட்டுக்கு பாட்டென்றாலும்,
பாட்டுக்கு மெட்டென்றாலும்,
சட்டென்று கொட்டுகின்ற,
சந்தத் தமிழ் சொந்தக்காரன்.

வாழ்க உன் புகழ்


தீபன்
9443551706

மேலும்

Deepan - Deepan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Apr-2021 5:23 pm

இப்பொழுதெல்லாம்
பேரூந்தில்
ஆண்கள் எங்களை உரசுவதேயில்லை.
நன்றி கொரோனா!!!!


இப்படிக்கு,
ஒரு பெண்.

ச.தீபன்

மேலும்

மிக்க நன்றி...என் தமிழ்ச் சொந்தமே 21-Apr-2021 2:00 pm
கால பிம்பம் கவிதைக்குள்... வாழ்த்துகள்... 21-Apr-2021 1:37 pm
Deepan - Deepan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Apr-2021 8:25 pm

திட்டமான மருந்திலா நோய்க்கு,
திட்டம் போட்டு நோட்டு வாங்கும்,
பட்டம் பெற்ற டாக்டர்க்கெல்லாம்,
மட்டமான இந்தக் கொரோனா,
துட்டு கொட்டுகின்ற கொண்டாட்டம்.

பெத்த பெண்ணைக் கரையேத்த,
மொத்த பணம் மிச்சமென்றே
ஆத்தா அப்பன் மத்தியிலே,
சத்தியமாய்க் கொரோனா
ஒரு சந்தோஷக் கொண்டாட்டம்.

நோய் பயத்தால் கயவரெல்லாம்,
மேலே சாயாமல் ஒதுங்குகிறார்.
அதனால்,
தொற்று நோய்க் கொரோனா,
கற்றைக் குழல் பெண்களுக்கு
இது மாற்றம் தரும் கொண்டாட்டம்.

பத்திரமா வீட்டுக்குள்ளே,
தத்தளிக்கும் கணவர்களும்,
பத்துப் பாத்திரம் அத்தனையும்,
சுத்தமாக் கழுவி வச்சா,
கைப்பிடித்த மனைவியர்க்கு,
இகழ்ச்சியே தரும் கொரோனா,
மகிழ

மேலும்

மிக்க நன்றி 19-Apr-2021 1:45 pm
வேலையில்லா திண்டாட்டம் நாடெங்கும் வந்து விட்டால் வந்து விடும் எங்களுக்கு திண்டாட்டம் அருமை கொண்டாட்டம் 19-Apr-2021 8:52 am
Deepan - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Apr-2021 8:25 pm

திட்டமான மருந்திலா நோய்க்கு,
திட்டம் போட்டு நோட்டு வாங்கும்,
பட்டம் பெற்ற டாக்டர்க்கெல்லாம்,
மட்டமான இந்தக் கொரோனா,
துட்டு கொட்டுகின்ற கொண்டாட்டம்.

பெத்த பெண்ணைக் கரையேத்த,
மொத்த பணம் மிச்சமென்றே
ஆத்தா அப்பன் மத்தியிலே,
சத்தியமாய்க் கொரோனா
ஒரு சந்தோஷக் கொண்டாட்டம்.

நோய் பயத்தால் கயவரெல்லாம்,
மேலே சாயாமல் ஒதுங்குகிறார்.
அதனால்,
தொற்று நோய்க் கொரோனா,
கற்றைக் குழல் பெண்களுக்கு
இது மாற்றம் தரும் கொண்டாட்டம்.

பத்திரமா வீட்டுக்குள்ளே,
தத்தளிக்கும் கணவர்களும்,
பத்துப் பாத்திரம் அத்தனையும்,
சுத்தமாக் கழுவி வச்சா,
கைப்பிடித்த மனைவியர்க்கு,
இகழ்ச்சியே தரும் கொரோனா,
மகிழ

மேலும்

மிக்க நன்றி 19-Apr-2021 1:45 pm
வேலையில்லா திண்டாட்டம் நாடெங்கும் வந்து விட்டால் வந்து விடும் எங்களுக்கு திண்டாட்டம் அருமை கொண்டாட்டம் 19-Apr-2021 8:52 am
Deepan - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Apr-2021 5:23 pm

இப்பொழுதெல்லாம்
பேரூந்தில்
ஆண்கள் எங்களை உரசுவதேயில்லை.
நன்றி கொரோனா!!!!


இப்படிக்கு,
ஒரு பெண்.

ச.தீபன்

மேலும்

மிக்க நன்றி...என் தமிழ்ச் சொந்தமே 21-Apr-2021 2:00 pm
கால பிம்பம் கவிதைக்குள்... வாழ்த்துகள்... 21-Apr-2021 1:37 pm
Deepan - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Apr-2021 5:22 pm

வெறுக்கிறேன்.

உன்னை வெறுக்கிறேன்.

வேண்டாமென ஒதுக்கிய
தீண்டாமை கொடுமையை,
மீண்டும் கொணர்ந்து
சீண்டும் கொரோனா,
உன்னை வெறுக்கிறேன்.

ஒரு நிம்மதி.......
இந்தத் தீண்டாமைக்கு,
சாதி மத பேதம் இல்லை.

ச.தீபன்

மேலும்

Deepan - Deepan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Dec-2020 1:49 pm

பட்ட துயரங்கள் போதுமென்று
பாட்டாலே நான் சாடுகின்றேன்
கிட்டத்தில் எட்டுகின்ற புத்தாண்டில்
கொட்டட்டும் வளமை என்று
பாடுகின்றேன்

புவியில் இன்பம் சத்தியம் புரளும்,
நான் பறை சாற்றுகிறேன்.
கவிஞன் சொல் நிச்சயம் வெல்லும்
புத்தாண்டை போற்றுகிறேன்

வரும் புத்தாண்டே, நல்முத்தாண்டே,
வறுமை சிறுமை இவையொழித்து, நீ
பெருமை கொள்ள ஏங்குகிறேன்.
வற்றாத செல்வம் பல தந்து,எமை
முற்றாக மீட்டெடுக்க உனை
வணங்குகிறேன்.

வரும் ஆண்டு நல்லாண்டாய்
மிளிர்ந்திடவே,
வந்தீண்டு புத்தாண்டே
நீ ஒளிர்ந்திடுவாய்.

ச.தீபன்
94435 51706

மேலும்

நம் வாழ்த்துக்களோடு 31-Jan-2021 9:55 am
வரவேற்போம் தங்களின் வாழ்த்துக்களுடனே. 31-Dec-2020 9:46 am
Deepan - Deepan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Jan-2021 7:23 pm

குப்பையில் போடத்தான் நீ
கர்ப்பப் பையில் சுமந்தாயா?
குப்பையிலே வாழ ஒத்திகை
கர்ப்பப்பையிலே தந்தாயா?

எச்சியிலை தஞ்சம் உண்டு.
பிச்சிப் பூ மஞ்சம் இல்லை.
உச்சி மோந்து கொஞ்சிட,
இங்கே
வச்சுப் போன தாயுமில்லை.

இரும்பாலான இதயம் உனக்கு.
அதுதான்
குப்பையிலே உதயம் எனக்கு.

ஊருக்குத் தெரியாமல்
உறவாடியதன் எச்சம்,
குறுக்குசாட்சி சொல்ல
கூண்டில் ஏறுமென்றா,
எச்சில் தொட்டியை நீ
என் கட்டிலாக்கினாய்.

பழுதான சமூகம் உன்னைக்
கழுவி ஊற்றுமென்றா
கழுவாமல் எனைக் கிடத்தி
மெதுவாக நழுவி விட்டாய்.

அரசாங்கத் தொட்டிலென்றால்
ஏதாவது
அடையாளம் தெரியுமென்றா,
அசிங்கத் தொட்டியிலே என்னை
அனாதையாய்ப் போட

மேலும்

மிக்க நன்றி ஐயா 30-Jan-2021 10:02 pm
மிக எழுச்சியான உணர்வுப்பூர்வமான ஆழ்ந்த கருத்துள்ள கவிதை அருமை அருமை அருமை. 30-Jan-2021 9:20 pm
Deepan - Deepan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Jul-2020 9:56 am

பாதை மாறி பாதியிலே
தொலைவதற்கு,
போதை தேடி வீதியிலே
அலைகின்றான்.

சாராயம் வாய் நுழைந்து,
சரம்சரமாய் வயிறிரங்கி,
செங்குருதி ஊடாய் நீந்திப்
போகும்.
செந்நிறப் பாதையில்
நங்கூரமிட்டு,
சிறிது சிறிதாய் நஞ்சு
பாய்ச்சும்.

பயணித்த நஞ்சின் வீரியத்தில்,
பஞ்சான கல்லீரல் கல்லாகும்.
கழிவகற்றும் உறுப்புகளை
களையெடுத்து,
கடைசி நாளைக் கல்லறையில்
குறித்து வைக்கும்.

மங்கையரும் மதுவருந்தி, இந்த
மண்ணின் நியதி மீறுகின்றார்.
காரிகை பருகும் தீங்கான மதுவாலே,
கருவான விதை நெல்லும் பழுதாகும்.

பண்பாடு, கலாச்சாரம் எல்லாம்,
இங்கே மண் போட்டு மூடிவிட்டார்.
சீரழியும் பண்பாட்டை சீரமைக்க,
ஓரணியில் ஒன்றுபட்டால் உண்டு.
கள்ளின் ம

மேலும்

அருமை ஐயா. நீங்கள் குறிப்பிட்ட பாடல்களை படிக்கிறேன். 19-Jul-2020 2:14 pm
அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்; கீழேயுள்ள பாடல் மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதியது. எழுத்து தளத்தில் அனைத்து பாடல்களையும் பதிவு செய்துள்ளேன். கலி விருத்தம் விளம் விளம் மா கூவிளம் (மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது) ஞானமெய்ச் சுகம்புகழ் நலம்பெ றத்தனந் தானமே செய்குவர் தகுதி யோரறி(வு) ஈனமெய் மறதிநோ யிழிவு றப்பொருள் வானென வழங்குவர் மதுவுண் போர்களே. 1 – மது மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல் பொருளுரை ”தகுதியுடையவர்கள் மெய்யுணர்வு, உண்மையான இன்பம், புகழ், உடல்நலம் பெறுவதற்குத் தம் நற்பொருளை நல்லவர்க்குத் தானம் செய்வர். மது உண்போர் அறிவின்மை, உடல்மறதி, நீங்கா நோய், சமுதாயத்தில் மரியாதை இழப்பு முதலியன பெறும் வகையில் தங்கள் பொருளை மழைபோல் வாரி இறைப்பர்” என்று மது உண்பதால் பெறும் இழப்புகளை இப்பாடலாசிரியர் 200 ஆண்டுகளுக்கு முன்பே தெரிவிக்கிறார். இன்று அரசே மதுபான வியாபாரம் செய்து குடிகாரர்களையும் பெருக்கி, அதனால் ஏற்படும் குற்றங்களும் பெருகி, ஈரல் முதலிய நோய்களால் ஏற்படும் மரணங்களுக்கும் காரணமாகி, அதனால் பெறும் வருமானத்தைப் பெருக்குவதைப் பறைசாற்றும் அவலம் நடந்தேறுகிறது! நேற்று தொலைக்காட்சியில் நாகேஷ் குணசித்திர வேடத்தில் அருமையாக நடித்த ’யாருக்காக அழுதான்’ என்ற திரைப்படம் பார்த்தேன். அதில் மது அருந்துவதால் ஏற்படும் பல விளைவுகளை மிக அருமையாக கதாசிரியர் காட்டியிருக்கிறார். 19-Jul-2020 1:58 pm
நிச்சயம் தோழரே 19-Jul-2020 1:46 pm
நன்றி. என் "கூண்டுக்கிளி" கவிதையும் படியுங்கள். 19-Jul-2020 11:27 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (44)

user photo

சக்திவேல் சிவன்

சிங்கப்பூர்
கீர்த்தி

கீர்த்தி

தமிழ்நாடு
மலர்91

மலர்91

தமிழகம்

இவர் பின்தொடர்பவர்கள் (94)

இவரை பின்தொடர்பவர்கள் (44)

மேலே