ஸ்பரிசன் - சுயவிவரம்
(Profile)


தமிழ் பித்தன்
இயற்பெயர் | : ஸ்பரிசன் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-Feb-2018 |
பார்த்தவர்கள் | : 2442 |
புள்ளி | : 1395 |
நிறைய இருக்கு...அப்பறமா பேசலாம்.
அதியமானுக்கு நெல்லிக்கனியக்
கொடுத்தாள்
ஒளவைப் பாட்டி
அதிமதுரத்தை மருந்து என்று
தருவாள் நம்ம பாட்டி
அதிசிவப்பு சுந்தரியாக
எது என்று கேட்டாள் அருமைப் பேத்தி
அடி போடி பைத்தியக்காரி
இது தெரியாதா
உலகம் பூரா பிரசித்தி
அதைத்தான் நானும் பூசிக்கொள்கிறேன் என்றாள்
FAIR
என் முன்னே
ஒரு கோப்பை.
கோப்பைக்குள் காஃபி.
சர்வ ரகசியமும் அறிந்த
நீதான் அதனில்
ஆவியாக வெளியேறுகிறாய்.
அந்த நீராவியின்
கொடுங்கோன்மையை
அறிந்த நான்
சருகு போல் துடிக்க
எங்களை
தன்னுள் பிரதிபலிக்கும்
அக்கண்ணாடியில் நீ
மின்னி நகைக்கிறாய்.
நான் காஃபியுள்
ஒரு வாய்ப்பை
முழுக்க தவறவிட்ட
கோழையை போல்
நீந்தி செல்கிறேன்.
குவளை தள்ளாடி
சில துளிகள் தெறிக்க
தரையெங்கும் முளைத்தது
காஃபி செடிகள்.
ஒரு தாவரம் போல்
உன் யோனி அழைக்க
உன் யோனியின் வெயில்
எனக்கு கார்காலம்
என்கிறேன்.
கண்ணாடி வழியே
நீராவி பெருகுகிறது.
அது ஓடையை போல்
தவழ்கையில்
உன்
நிழல் சிவக்கிறது.
என் முன்னே
ஒரு கோப்பை.
கோப்பைக்குள் காஃபி.
சர்வ ரகசியமும் அறிந்த
நீதான் அதனில்
ஆவியாக வெளியேறுகிறாய்.
அந்த நீராவியின்
கொடுங்கோன்மையை
அறிந்த நான்
சருகு போல் துடிக்க
எங்களை
தன்னுள் பிரதிபலிக்கும்
அக்கண்ணாடியில் நீ
மின்னி நகைக்கிறாய்.
நான் காஃபியுள்
ஒரு வாய்ப்பை
முழுக்க தவறவிட்ட
கோழையை போல்
நீந்தி செல்கிறேன்.
குவளை தள்ளாடி
சில துளிகள் தெறிக்க
தரையெங்கும் முளைத்தது
காஃபி செடிகள்.
ஒரு தாவரம் போல்
உன் யோனி அழைக்க
உன் யோனியின் வெயில்
எனக்கு கார்காலம்
என்கிறேன்.
கண்ணாடி வழியே
நீராவி பெருகுகிறது.
அது ஓடையை போல்
தவழ்கையில்
உன்
நிழல் சிவக்கிறது.
புவியீர்ப்பு விசை குறித்து
ஆழ்ந்து சிந்திக்கும்
கடல் ஆமை மனதாய்
நெகிழும் என் வாழ்வில்
ஒரு நேர்கோடு போட
தவிக்கும் சிறுமியின்
எண்ணங்களில்
சிவப்பு பென்சிலாய்
ஊர்ந்து செல்கிறது
அந்த காதலும்.
அவள் பேசுகையில்
கோள்கள் அதிர்வுறும்
நாதஸ்வரத்தின் மூச்சில்.
அவள் பிரிகையில்
மின்னல் விரிசல்களில்
துவண்டு தளர்கிறது
கார்பன் காதல்.
வெளிச்சத்தில் படிந்து
இரவை உண்ணும்
நகரத்தின்
விளக்கொளியில் நின்று
வகிடெடுக்கும் இரவுக்கு
அவள் வருவதும்
பிரிவதும் தெரிகிறது.
அவ்விரவு அறிந்ததும்
அறியாததும் ஒன்றுதான்.
அவள்
அந்தியின் சாம்பலில்
கடலை தெளித்து
கனவை பொறித்து
உயிரை துடைக்கும்
க
உயிரை மட்டும்
ஒளித்து வைக்கிறேன்.
அவள்
சொல்ல விரும்புவது
எதுவென்றாலும்
அது என் உயிருக்கு
தெரியக்கூடாது.
புகை வழியே
அவளை பார்க்கிறேன்.
பார்க்கையில் அவள்
ஒடிந்த நிலவொளியால்
யாழ் ஒன்றை தீராது
இசைக்கிறாள்.
அவள் முத்தத்தின்
கதுப்பொன்றில்
நீந்தி களிக்கிறது
புத்தனின் தியானம்.
உயிர் ஒளிந்திருக்கும்
மந்திரச்சிமிழை
அவள் கனவில்
விதைத்து வைக்கிறேன்.
கனவு அவளோடு
கலைகிறது புகையாய்.
பூக்களின் மச்சங்கள்
தொகுத்து தன்
உயிருக்குள் கோலமிடும்
அவள் கைகளை
நனைக்கிறது என் உயிர்
கண்ணீர் விடுத்து.
எப்போதும்போல்
இப்போதும் அலைகிறேன்
மிச்ச உயிருக்குள்
அலையடிக்கும் அவள்
நினைவ
ஒரு திருப்பத்தில்
அவளை பார்த்தேன்.
பின் அவள்
சாலையானாள்.
சாலையில் வெறிதே
பயணம் நீண்டது.
என்னை அவளின்
நிழலும் _ அவளை
மரணத்தின் நிழலும்
ஊடாடி வந்தது.
அவள் நதியாய்
மாறிக்கொண்டாள்.
கடல் புக மறுத்து
வானம் நோக்கி
பாய்ந்தாள்.
அவள் நகரமாய்
ஜொலித்தாள்.
வனமாய் மின்னி
பாலையாய் கொதித்து
மலையாய் அடர்ந்து
பூவாய் மலர்ந்தாள்.
சாலை
நில்லாது நீண்டது.
வழியெங்கும் அவள்
பேச்சுக்குரல்.
ஒலிக்குள் மிதந்தது
ஆழியின் பெருமூச்சு.
அவளின்
இதயத்தின் துடிப்பு
காதுக்குள் கேட்டது.
பின்னர்
பயணத்தை
நிறுத்தி கொண்டோம்.
அவள் அவளாக
வந்து சேர்ந்தாள்.
அன்றுமுதல்
நாங்கள்
நடக்க நேர்ந்த
எனது மீசை குறித்து
அவள் கேட்கிறாள்.
அதை ஏன்
முறுக்கி இருக்கிறாய்?
காலத்தின் நரம்பில்
ஒரு வடு விழுந்த மீசை.
மீசைக்குள் அவள்
புகுந்துகொண்டாள்.
அங்கே
எதிர்ப்பட்ட ஒரு கப்பலில்
கோப்பர்னிகஸ் இருந்தான்.
அவளை கண்காணிக்க
தன்னை மறந்து தொடர்ந்து
ஆரம்ப தவறுகளை
செய்து முடித்தான்.
அவள் மீசைக்குள்
அலைந்து திரிந்தாள்.
ஒரு இரவை
தொகுத்தாள். ஒரு
பகலை இழைத்தாள்.
காலத்தின் முகத்தில்
விண்மீன்களை பதித்து
நிலவொளி சாந்தை அள்ளி
பூக்களின் வாசனைக்குள்
புகுத்தினாள்.
அவள் மார்புகளில்
என் மீசை உராய்ந்தது.
கப்பல் தள்ளாடியது.
அலைக்குள் தவறிய
கோப்பர்னிக்கஸ் பின்
மீட்கப்பட்டது யாரால்?
அலையும் கடலுக்கு
தெரியாதிருக்கிறது தான்
அலைவது குறித்து.
மௌனப்பூச்சிகள்
என் பெயரில்
உன் பெயரை
ஒட்டிக்கொண்டு பறக்கிறது
கடலலையை விரட்டும்
காற்றை தன் குரலாக்கி.
நீ பேசுவதெல்லாம்
நீயே கேட்கிறாய்
நான் கேட்பதாக நினைக்கும்
நினைவின் கனவிலிருந்து.
நானோ...
நான் எங்கிருக்கிறேன்
என்பதறியாது போனதும்
காற்றுக்குள் தவிக்கும்
கடல் வாசனையின்
காலடித்தடம் தேடி
உன் கனவில் புகுந்து
என் கனவை
தனியே காண்கிறேன்.
என்னிடம் நான் பேச
எதுவுமின்றி போகிறது.
நாம் கடப்பது
கடல் அல்ல காலம்
என சொல்லிச்சொல்லி
கரை எங்கும் புரளும்
துயரமான இக்கடல்.
கடல்மேனியில் ஒட்டாத
மண்ணெல்லாம் திரண்டு
தூய பாலில் வெண்ணை ஒளிந்திருப்பது
போல நமது இதயத்தில் உறையும்
ஆத்மாவில் இறைவன், பாலைக் கடைந்தால்
வெண்ணை திரண்டுவரும். அதுபோல்
பக்தியால் நம் மனத்தைக் கடைந்திட
இறைவன் நம் அகக் கண்ணில்
வாடியிருந்த மலருக்கு
நீரூற்றினாள்
மலர் இதழ் விரித்து
மெலிதாய் சிரித்தது
பறித்துச் சூடிக்கொண்டால்
மகிழ்வேன் நன்றி சொல்வேன் என்றது !
நேரிசை வெண்பா
தாம்ரபர ணிப்புனலாற் சர்வசுரம் பித்துவிழித்
தூம்பிரமுட் காய்ச்சல் சுவாசநோய் - தேம்பிமிகக்
கக்குகய மென்புருக்கி கைகால் எரிவுடனே
மிக்குறுதா கங்களும்விள் போம்
- பதார்த்த குண சிந்தாமணி
இந்நீரைப் பருகினால் பலவிதமான சுரநோய்கள், பித்த தோடம், கண்புகைச்சல், உட்சுரம், சுவாசநோய், சயம், எலும்புருக்கி, கைகால் எரிவு, அதிதாகம் இவற்றைப் போக்கும்.
நான் என்னை
நம்புவதற்கு சில சமயம்...
நீண்டதூரம் நடக்கவோ
எனக்குள் ஏதேனும் பாடவோ
மெள்ள சிரிக்கவோ
முன்முடியை ஒதுக்கவோ
செடியொன்று நடவோ...
என்னை நான்
நம்புவதற்கு சில சமயம்...
வான நுனியில் மிதந்து
இசைத்துளியில் சிதறி
பூக்களில் ஈரமாய் துளிர்த்து
கண்ணோரம் மிதக்கும்
காற்றுக்குள் ஒளியென படர்ந்து
மோனலிஸாவின் மூச்சில்
மின்னலை ஊன்றியபடி....
நீண்டதோர் மறதியில்
என்னை ரகசியமாய்
நம்புகிறேன் என்பதால்தான்...
குளிரில் கூடு கட்டி
மீன்களின் கனவில்
பூக்களை விதைத்து
ஆகாயத்தை நெய்கிறேன்.
நம்பிக்கைதான்...
சாளரம் மூடி அதன்
சாளரம் திறக்கும் சாவி.
===================________====