ஸ்பரிசன் - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  ஸ்பரிசன்
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Feb-2018
பார்த்தவர்கள்:  2692
புள்ளி:  1424

என்னைப் பற்றி...

நிறைய இருக்கு...அப்பறமா பேசலாம்.

என் படைப்புகள்
ஸ்பரிசன் செய்திகள்
ஸ்பரிசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Mar-2024 5:46 pm

சொற்களை எப்படி
தேந்தெடுக்க?

அதில் வண்ணமோ அல்லது
வாசனையோ நிரப்புவதற்கு
எந்த துளையில் இருந்து
பயணிக்க வேண்டும்?

ஒடிந்த சொற்களை
எந்த நிலத்தில் புதைப்பது?

காலத்தில் புதையுண்டு போன
சொற்களில் வழியும் அர்த்தத்தை
எந்த சீசாவில் நிரப்புவது?

எண்ணங்கள் எனும் பெயரில்
சதா கடிக்கும் இந்த
வார்த்தைகளின் கொடுக்குகளை
கற்பனையால் பிய்ப்பது எங்ஙனம்?

குளிர் வெயிலுக்குள் நகரும்
சொற்களின் உருவங்களை
யாரைக்கொண்டு எப்படி வரைவது?

குப்பைத்தொட்டிக்குள்
தனித்து வாழும்
சொற்களை உழுது வரும்
கிருமிகளின் பாஷைக்குள்
எந்த சொல் பாடலாக மலரும்?

ஒரு சொல் மொழிக்கு
தரும் வாடகை எவ்வளவு?

சொல் தீண்ட

மேலும்

சொல் ஆராய்ச்சியா ? அருமை . அத்தி பூத்தாற்போல் வருகிறீர்கள் கவிஞன் ஷெல்லி ஒவ்வொரு சொல்லையும் தட்டி தட்டிப் பார்த்தபின்தான் பயன்படுத்துவானாம் அவனுக்கு சொல்லின் ஓசை மிகவும் முக்கியம் கதாசிரியர் ல ச ரா ஒரு சரியான சொல்லிற்காகாக மாதக்கணக்கில் யோசிப்பாராம் சொல்லே நீ நில்லாமல் ஓடினால் கவிதை நின்று பார்த்தால் காதல் அவனும் பார்க்க வேண்டும் அவளும் பார்க்க வேண்டும் கம்பன் கண்டு பிடித்தது சொல் குவிந்து கிடைக்குமிடம் அகராதி சொல்லில் ஆரோகணித்து சவாரி செய்பவன் சொற்குதிரை வீரன் சொல்லென்பது கடிவாளம் இல்லாத கற்பனைக் குதிரை 15-Mar-2024 6:12 pm
ஸ்பரிசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Aug-2023 6:03 pm

பலமுறை அல்ல
பற்பலமுறையேனும்
அவளை நான்
எனக்குள்..
நானும் என் மனதும்

நிர்வாணமாக்கி
ரசித்து ரசித்து பார்த்தோம்.

ஒருநாள்
அவள்...

முற்றும் நிர்வாணமாக
என்முன் நின்றபோது
அதிர்ச்சியால் வெட்டுண்டு போன

என் மனதில்
நான்
பிணமாய் விழுந்தேன்.

........

மேலும்

ஸ்பரிசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Aug-2023 6:24 pm

இந்த வீட்டில் அறை என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது. ஆனால், ஏழோ எட்டோ அறைகள் உள்ள வீடுதான்.

ஒவ்வொரு அறைக்குள்ளும் மெதுவாக நடந்து வீடை ஒருமுறை சுற்றி வருவதற்கு இருபது நிமிடங்கள் ஆகும்.

துள்ளலாய் ஓடினாலும் சிறிது நேரம் பிடிக்கும். அழகான வீடு என்று சொல்ல முடியாது. எல்லாம் சிதறி இருக்கும்.

இதுபோக தோட்டம் என்பதும் தனியே இருக்கிறது. செடி கொடிகள் தவிர ஓரிரு அரளி மரங்களும் இருக்கிறது. இந்த மரம் வீட்டில் வளர என்ன தேவை என்பது எனக்கு தெரியவில்லை.

வாசனை என்று எதுவும் வீட்டில் இல்லை. அதேசமயம் நாற்றம் இல்லை. ஒன்றுமே இல்லாத இந்த வீட்டில் இருக்கிறேன். நான் மட்டும் அல்ல, என்னோடு பிறந்த, நான் பெற்ற

மேலும்

ஸ்பரிசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Aug-2023 4:35 pm

Lie through your teeth and call it a novel. All will be well.

James Paddock.

அன்புள்ள ஸ்பரி…

ஒரு செய்தியில் அல்லது நமக்கு தேவையான விவரத்தில் நாம் உண்மையான கவனம் கொண்டு புதுப்புது தகவல்களை திரட்டும்போது நம்மெதிரில் மலையாய் குவியும் அத்தனை விவரங்களும் கற்க வேண்டிய அவசியம் உள்ளதா என நீங்கள் கேட்டதை நான் சில நிமிடங்கள் முதல் சில மணி நேரங்கள் வரையும் சிந்தித்து பார்த்தேன்.

கற்க வேண்டிய அவசியம் என்பது ஒரு நிர்பந்தமான செயலா அல்லது இயல்பான ஆர்வமா என்பதை நான் ஒரு பெண்ணாக இருந்து யோசிக்க யோசிக்க அது கால நேரங்கள் என்னும் அளவற்று செல்கிறது. ஒரு ஆணாக இருப்பின் இன்னும் வேறு அளவுகோள்கள் தேவைப்படல

மேலும்

ஸ்பரிசன் அளித்த படைப்பில் (public) DHAMU1966597c6fa2794ca மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
10-Aug-2023 1:44 pm

Writing - the act of one person giving a piece of their soul to another.

J. Spredemann.

*************

வணக்கம்.

நேரடியாக விஷயத்துக்கு வருகிறேன் என்றால் அது இன்னும் நான் எழுதி கொண்டிருக்கும் என்னை எழுத வைத்து கொண்டிருக்கும் “மினர்வா”வை பற்றியதாகவே இருக்கும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள நாம் அடுத்த இலக்கை நோக்கி இணைந்து பயணப்படுகிறோம் என்று ஆகிவிடும்.

நான் விரும்புவதும் அதுவே.

மாசற்ற எனது அன்பிற்குரிய வாசக அன்பர்களுக்கும் சலிப்பறியாத fake id களுக்கும் இனிய மாலை வணக்கம்.

மினர்வா நான் எழுத திட்டமிட்டு கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக இருக்கும் என்று நினைக்கிற

மேலும்

ஓகே படிக்கிறேன் 12-Aug-2023 7:37 am
இங்கே மெசேஜ் களம் திறக்க நிறைய நேரம் எடுக்கிறது. எனவே உடனடியாக பதில் கொடுக்க தாமதம் ஆகிறது. இன்று அடுத்த பாகம் போட்டேன் 12-Aug-2023 7:00 am
ஆஹா நிச்சயம் படித்து கருத்துச் சொல்கிறேன் வெயில் மிகுந்த மாலையில். திருவனந்தபுரத்திலிருந்து ----பின் பதிந்து விட்டீர்களா ? பார்க்கிறேன் 11-Aug-2023 2:53 pm
நானும் வாசித்து கொண்டிருக்கிறேன் 11-Aug-2023 2:42 pm
ஸ்பரிசன் - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Jul-2023 2:27 pm

எலி ஒன்று
பொறியில் அகப்பட்டுக் கொண்டது
தின்ற வடை சீரணித்திருக்கும்
புழுக்கைகள் அத்தாட்சி
ஆயினும் குறுக்கும் நெடுக்கும்
ஓடி ஓசை எழுப்பிக் கொண்டிருந்தது
எலியை வெளியே விட்டுவிட்டு வா
தாயின் ஆணை
நாவலை குப்புற போட்டுவிட்டு
வேண்டா வெறுப்பில் எழுந்தேன்
பொறியை எடுத்து வாசலில் வைத்து
திறந்து விட்டேன்
அந்த நீண்டவால் சுண்டெலி
வெளியே ஓடாமல் மீண்டும்
உள்ளே நுழைந்து
தாயின் காலடி வழியே ஓடி
வீட்டில் எங்கோ மறைந்தது

சாரிம்மா நான் அசடு வழிந்தேன்
உனக்குத் தெரியுமா
அகதா கிறிஸ்டியின் நாடகம்
MOUSE TRAP லண்டனில்
1952 லிருந்து 2020 வரை தொடந்து நடந்ததாம்
பிடித்த எலியை வெளியே விடத் தெரியவில

மேலும்

வடை விளக்கம் அருமை எல்லாம் நுழைந்து விட்டது வால் மட்டும் நுழையவில்லை என்ற பள்ளிக் கதைக்கு கதா நாயகனே / நாயகி யே எலி தான் யதார்த்தமாக நானும் யோசித்தேன் உங்கள் கதையால் மிக்க நன்றி கதைப்பிரிய ஸ்பரிசன் 20-Jul-2023 3:11 pm
வெளியே விட்ட எலி சுதந்திரம் கிடைத்தது என்று வெளியே ஓடாமல் ஏன் வீட்டுக்குளே மீண்டும் நுழைந்தது ? வடையின் வாசனை. அதுவும் திவச வடைகளை விரும்பி சாப்பிடும். திவசம் போட வாத்தியார் கிடைக்காத இந்த காலத்தில் டீக்கடை வடைகள் கூட தேவாம்ருதமாக இருக்கும். உங்கள் வீட்டு வடைகள் சுவை எப்படியோ? வால் அதன் பரிணாம குற்றம். என் கதை ரொம்ப குழப்பி விட்டதோ என்று அஞ்சுகிறேன். 20-Jul-2023 12:32 pm
ஸ்பரிசன் - ஸ்பரிசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Jul-2023 5:27 pm

ஐந்தா?

இல்லை அது இருபதுக்கும் மேல் இருக்கும்.

இல்லை இல்லை… ஐந்நூறு, ஆயிரம் கூட இருக்கலாம்.

கால்கள் காற்றுக்குள் ஓங்கி உதைத்து கொண்டிருந்ததே தவிர தப்பி ஓட முடியவில்லை.

ஓடினால், பிழைத்து கொள்ளலாம்.

பிழைத்து விடுவதால் என்ன செய்ய போகிறோம்?

ஆனாலும், அவைகள் கடித்து குதறி விடும். சதை துணுக்கல்களை தின்று விடும்.

எலிகள்.

எலிகள் ஒன்றின் மேல் ஒன்று ஏறி ஏறி குவிந்து குன்று போல் நிற்கும்போது…

அவற்றின் ஜோடி கண்கள் என்னை இல்லையில்லை என் உடலை ஆங்காரத்துடன் குறி வைத்தன.

நான் சாகப்போகிறேன் என்று நினைக்கவும் விழிப்பு வந்தது.

கனவு.

ஆயிரம் இல்லை என்றாலும் ஏழோ (அ) பதினைந்தோ எலிகள

மேலும்

இந்த ராஜ கிழட்டு சிங்கங்கள் எனக்கு கொடுத்த மன உளைச்சல் கொஞ்சம் நஞ்சம் அல்ல. எமர்சனை கூட துணைக்கு வைத்து கொள்ளுங்கள். ஆல்பர் காம்யூவும் பக்க பலமாக இருப்பான். இவர்களில் எல்லாம் ஒரு வெறுமை உருவாகி இருந்தால் கேனோ உபநிஷத் படித்து விட்டால் போதும். அதுதான் இவர்களை ஜீரணிக்க உதவும் பஞ்சரிஷ்டம். எப்படியோ உங்களை தொடர்பு கொள்வதை நீங்கள் தவிர்க்கும்போது இந்திய அமைச்சுபணியில் ஒரு உளவாளி போலவே தெரிகிறீர்கள். இதுவும் நன்றாக இருக்கிறது. 19-Jul-2023 10:42 am
உங்கள் எழுத்தை விட எனக்கு சிறந்த பரிசில்லை ரஸ்ஸல் நீட்ஸே புத்தகங்களை படித்துக் கொண்டிருக்கிறேன் மனிதனுக்கு அப்பாற்பட்ட அமானுஷ்யங்களை இவர்கள் ஏற்பதில்லை 18-Jul-2023 1:13 pm
மிக நீண்ட நாட்கள் ஆகி விட்டது. ஆயினும் உங்களுக்காக நான் சில புத்தகங்கள் பரிசளிக்க விரும்புகிறேன். Pdf வடிவத்தில்... எப்படி கொடுக்க முடியும்? நீங்களே சொல்லுங்கள்...😊😊😊 18-Jul-2023 8:36 am
வழக்கம் போல் வித்த்யாசமான அருமையான கதை நீங்கள் கதை சொல்லும் விதத்தை எப்போதும் ரசிப்பேன் அவள் பெண்கள் கல்லூரியிலும் நான் வெளியூரில் ஒரு கல்லூரியிலும்" ஒரு ஆழாக்கு பிரயோஜனம் இல்லாத" கோர்ஸை படித்து கொண்டிருந்தோம். ஒவ்வொரு கதையிலும் இது மாதிரி எதாவது சொல்லியிருப்பீர்கள் அது எனக்குப் பிடிக்கும் பாராட்டுக்கள் ஸ்பரிசன் 17-Jul-2023 8:40 pm
ஸ்பரிசன் - கே என் ராம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Jul-2023 4:43 am

காலைத் தேநீரும் சிதறிய சிந்தனையும்

கேரளாவில் நீங்கள் சாலைவழி பயணம் மேற்கொண்டால் அதில் உள்ள சுகமே தனியானது. பயணம் செய்யும் எல்லா சாலைகளுக்கு பக்கங்களில் பச்சைப்பசேல் என பயிர்களும் மரங்களும் இருக்கும். இயற்கை தன் அழகை விரித்து தலையாட்டும் காட்சி கண்களுக்குக் குளுமையானது. ஒரு கிராமத்தில் இருந்து இன்னொரு கிராமம் மாறுவது தெரியாமல் சாலைகள் செல்லும். நாம் எல்லையை கடப்பதை மைல் கல்லுகளால் தான் அறிவோம். மற்றும் ஒரு அடையாளம் அந்த எல்லைக் கல்லின் அடுத்து வரும் டீக் கடையைக் கூறலாம்.ஆம் எந்த நேரமும் தேநீர் கிடைப்பது இந்த நெடுஞ்சாலைகளில் தான். இந்தக் கடைகள் பயணம் செய்ப

மேலும்

தமிழ்நாட்டில் குடிக்கும் டீ க்கும் கேரளாவில் குடிக்கும் டீ க்கும் சுவையில் வித்தியாசம் இருக்கும் . அதே போல் தமிழ்நாட்டில் மலையாளிகள் கடையில் டீ குடிக்கும்போதும் சுவை கொஞ்சம் கூடுதலாய் இருக்கும். இது எனது அனுபவம் . மலைப்பகுதியில் வாழ்ந்தவர்கள் நாங்கள். அங்கு இருக்கும் குளிருக்கும் மழைக்கும் இவர்கள் டீ சுவையாக இருக்கும் . 18-Jul-2023 8:41 am
இது கதையா.... வெறும் அனுபவமா 17-Jul-2023 5:30 pm
ஸ்பரிசன் - ஸ்பரிசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Jul-2021 2:05 pm

அலையும் கடலுக்கு
தெரியாதிருக்கிறது தான்
அலைவது குறித்து.

மௌனப்பூச்சிகள்
என் பெயரில்
உன் பெயரை
ஒட்டிக்கொண்டு பறக்கிறது
கடலலையை விரட்டும்
காற்றை தன் குரலாக்கி.

நீ பேசுவதெல்லாம்
நீயே கேட்கிறாய்
நான் கேட்பதாக நினைக்கும்
நினைவின் கனவிலிருந்து.

நானோ...
நான் எங்கிருக்கிறேன்
என்பதறியாது போனதும்

காற்றுக்குள் தவிக்கும்
கடல் வாசனையின்
காலடித்தடம் தேடி
உன் கனவில் புகுந்து
என் கனவை
தனியே காண்கிறேன்.

என்னிடம் நான் பேச
எதுவுமின்றி போகிறது.

நாம் கடப்பது
கடல் அல்ல காலம்
என சொல்லிச்சொல்லி
கரை எங்கும் புரளும்
துயரமான இக்கடல்.

கடல்மேனியில் ஒட்டாத
மண்ணெல்லாம் திரண்டு

மேலும்

ஒருவனுக்கு எதிர்பதம் ஒருத்தியே - நன்றான புனைவு. 23-Jul-2021 11:10 am

தூய பாலில் வெண்ணை ஒளிந்திருப்பது
போல நமது இதயத்தில் உறையும்
ஆத்மாவில் இறைவன், பாலைக் கடைந்தால்
வெண்ணை திரண்டுவரும். அதுபோல்
பக்தியால் நம் மனத்தைக் கடைந்திட
இறைவன் நம் அகக் கண்ணில்

மேலும்

ஸ்பரிசன் - கவின் சாரலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Jun-2021 4:38 pm

வாடியிருந்த மலருக்கு
நீரூற்றினாள்
மலர் இதழ் விரித்து
மெலிதாய் சிரித்தது
பறித்துச் சூடிக்கொண்டால்
மகிழ்வேன் நன்றி சொல்வேன் என்றது !

மேலும்

ஆம் மிக்க நன்றி கவிப்பிரிய சக்கரை வாசன் 11-Jun-2021 7:58 pm
பூத்த பெண் போல பூவுக்கும் உணர்வு இல்லையா ஐயா 11-Jun-2021 6:25 pm
ஸ்பரிசன் - Dr.V.K.Kanniappan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Jun-2021 9:28 pm

நேரிசை வெண்பா

தாம்ரபர ணிப்புனலாற் சர்வசுரம் பித்துவிழித்
தூம்பிரமுட் காய்ச்சல் சுவாசநோய் - தேம்பிமிகக்
கக்குகய மென்புருக்கி கைகால் எரிவுடனே
மிக்குறுதா கங்களும்விள் போம்

- பதார்த்த குண சிந்தாமணி

இந்நீரைப் பருகினால் பலவிதமான சுரநோய்கள், பித்த தோடம், கண்புகைச்சல், உட்சுரம், சுவாசநோய், சயம், எலும்புருக்கி, கைகால் எரிவு, அதிதாகம் இவற்றைப் போக்கும்.

மேலும்

டாக்டர் அவர்களுக்கு வணக்கம் தமிர பரமி ஆறு ஒடிமிடத்து மண்ணில் தாஸ்மிரச் சத்துக்கள் உள்ளன.ஆற்றின் தண்ணீர் அந்த தாமிர மண்ணின் மருத்துவ குணங்களை கலந்து மக்களுக்கு கொடுக்கிறது இதைத் தெரிந்த diyhyhstksli இந்த ஆற்றிர்கு தாமிர பரணி என்று பெயர் வத்துள்ளர்கள் என்றி மக்கள் இன்று இப்பாடலின் மூலம் தெரிந்து கொள்வார்கள் நன்றி. 11-Jun-2021 10:33 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (260)

இவர் பின்தொடர்பவர்கள் (547)

இவரை பின்தொடர்பவர்கள் (262)

BABUSHOBHA

BABUSHOBHA

அவிநாசி,திருப்பூர்
மேலே