ஸ்பரிசன் - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  ஸ்பரிசன்
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Feb-2018
பார்த்தவர்கள்:  2548
புள்ளி:  1409

என்னைப் பற்றி...

நிறைய இருக்கு...அப்பறமா பேசலாம்.

என் படைப்புகள்
ஸ்பரிசன் செய்திகள்
ஸ்பரிசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Dec-2022 4:45 pm

அன்பார்ந்த ரவிக்கு.

நீ நலமா? நலமாக இருப்பாய் என்று இப்போதும் நான் நம்புகிறேன். நம்பிக்கையின் வால்முனைதான் விதி என்று நீ அடிக்கடி சொல்வாய்.

நான் விஷயத்துக்கு நேரடியாக வருகிறேன்.

உனக்கு இரண்டு கடிதங்கள் எழுதி இருக்கிறேன்.

இரண்டும் என் அலுவலக நண்பன் சுந்தரிடம் கொடுத்து உனக்கு அனுப்பி வைக்க கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

அவன் தவறாது உனக்கு அனுப்பி வைப்பான் என்று நம்புகிறேன். அப்படி இரண்டும் உனக்கு கிடைத்து விட்டால் நான் உயிரோடு இல்லை என்பதையும் அதை உனக்கு உடனடியாக தெரிவிக்க நமக்கு பொதுவான நண்பர்கள் யாரும் இல்லை என்றும் புரிந்து கொள்ளவும்.

வாசித்து கொண்டிருக்கும் இதுதான் முதல் கடிதம்.

மேலும்

ஸ்பரிசன் அளித்த படைப்பில் (public) PRIYA G5ab5e9ea708bc மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
31-Aug-2022 9:42 am

உவப்பின் குறியீடுகளோடு
அடையாளமிட்ட கண்களால்
நீ உள்ளே செல்கிறாய்.

நடப்பதைக்கூட உன்
கால்கள் அறியாது இருக்க
நான் உன்னை தொடர்கிறேன்.

பழைய வீடு
பழைய அறை
எரியும் விளக்கொன்று இல்லை
ஆயினும், பழகிய அதே ஒளி.

சிகரத்தில் ஏறுவதுபோல்
எனக்கு தோன்றுகிறது.

தலையை பின்னே தள்ளி
என்னை பார்க்கிறாய்.
கருப்பு நிறத்தில் பிரா. உன்
பிங்க் நிற பிராவும் பிடிக்கும்.

ஏனோ ஒரு பெருமூச்சு.

இன்னும் ஒரு அறையை
கடந்ததும்...
அடுத்த அறையில்
அந்த மூலையில்
நீ எந்த கோணத்தில் நிற்பாய்
ஆடைகள் எப்படி நெகிழும்
என்பது எனக்கு தெரியும்.

பெரும் நூற்றாண்டுகள்
கடந்து செல்வதைபோல்
இருக்கிறது நாம் செல்வது.

மேலும்

பட்டுக்கோட்டை கவிதை எழுத மாட்டார்.. நாவல்தான். படித்து கடந்து விட்டேன். கொஞ்சம் நவீனமாக எழுதிப்பார்த்தேன். வேறு ஒன்றும் இல்லை. மிக்க நன்றிகள். 31-Aug-2022 4:49 pm
Vithyasamana kavithai...sparisanin konathil.....sinthika.... eluthiyatha....... 31-Aug-2022 1:41 pm
இது என்ன 'புதிய கோணத்தில் (கோணலில் !) கவிதை பட்டுக்கோட்டை பிரபாகர் கவிதை எழுதினால்....கொஞ்சம் சிந்தித்து பார்த்தேன்... 31-Aug-2022 11:21 am
ஸ்பரிசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Aug-2022 9:42 am

உவப்பின் குறியீடுகளோடு
அடையாளமிட்ட கண்களால்
நீ உள்ளே செல்கிறாய்.

நடப்பதைக்கூட உன்
கால்கள் அறியாது இருக்க
நான் உன்னை தொடர்கிறேன்.

பழைய வீடு
பழைய அறை
எரியும் விளக்கொன்று இல்லை
ஆயினும், பழகிய அதே ஒளி.

சிகரத்தில் ஏறுவதுபோல்
எனக்கு தோன்றுகிறது.

தலையை பின்னே தள்ளி
என்னை பார்க்கிறாய்.
கருப்பு நிறத்தில் பிரா. உன்
பிங்க் நிற பிராவும் பிடிக்கும்.

ஏனோ ஒரு பெருமூச்சு.

இன்னும் ஒரு அறையை
கடந்ததும்...
அடுத்த அறையில்
அந்த மூலையில்
நீ எந்த கோணத்தில் நிற்பாய்
ஆடைகள் எப்படி நெகிழும்
என்பது எனக்கு தெரியும்.

பெரும் நூற்றாண்டுகள்
கடந்து செல்வதைபோல்
இருக்கிறது நாம் செல்வது.

மேலும்

பட்டுக்கோட்டை கவிதை எழுத மாட்டார்.. நாவல்தான். படித்து கடந்து விட்டேன். கொஞ்சம் நவீனமாக எழுதிப்பார்த்தேன். வேறு ஒன்றும் இல்லை. மிக்க நன்றிகள். 31-Aug-2022 4:49 pm
Vithyasamana kavithai...sparisanin konathil.....sinthika.... eluthiyatha....... 31-Aug-2022 1:41 pm
இது என்ன 'புதிய கோணத்தில் (கோணலில் !) கவிதை பட்டுக்கோட்டை பிரபாகர் கவிதை எழுதினால்....கொஞ்சம் சிந்தித்து பார்த்தேன்... 31-Aug-2022 11:21 am
ஸ்பரிசன் அளித்த படைப்பில் (public) sankaran ayya மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
30-Aug-2022 11:47 am

ஒவ்வொரு நாளும்
நீயாக வந்து
அவளாக கடந்து

தீயாக மோகமூட்டி
திரியாக எரிய வைத்து
மழையாக மாறி அவித்து

குத்தும் கூர்வேல்
சொல்லேந்தி ஊன் அவித்து
மரணமாய் புன்னகைத்து

மனமெங்கும் அரவமாய்
விடமூட்டி குளிர் காய்ந்து
பகை கொடுத்து விலகி

சொட்டு சொட்டாக
சேர்த்த உயிர் இதனில்
துயர் விதைத்து துயிலின்
நினைவொழித்து கடந்து

பாலை என்றானதும்
ஞானம் விதைத்து
இறப்பின் நாள் குறித்து

கலைந்து போகிறாய்
காற்றுக்குள் சிதறிய
பூஜ்யத்தின் நிழல்களை
உன் உயிரில் நிரப்பி.

மேலும்

நமது தத்துவம் நமது இந்து மதத்தோடு ஒட்டியது என்று சொல்லுவார் விவேகானந்தர் மேற்கத்திய philosophers ல் வேறுபட்டு நிற்பவர் நீட்ஸே இங்கே JK எனும் ஜே கிருஷ்ணமூர்த்தி பின்னால் ஏதாவது எழுதமுடிகிறதா பார்க்கிறேன் . விவாதிப்போம் 31-Aug-2022 2:59 pm
பழைய பாடல் என்றால் அது கண்ணதாசன் எழுதியதாக இருக்கலாம். எனக்கு கேட்ட நினைவுகள் இல்லை. இந்தியா உலகுக்கு அளித்த கொடை காமசூத்திரம் மற்றும் பூஜ்யம் என்று ஒரு ரஷியர் பாரிஸில் இருக்கும் என்னுடைய நண்பனிடம் சொல்ல அப்படியா என்று அவன் என்னிடம் கேட்டான். பூஜ்யத்தின் மகிமை குறித்து விளக்கத்தெரியாது போழ்தினும் காம சூத்திரம் பற்றி கூற தெரிந்து இருக்கிறது எனக்கு. மேலை தத்துவம்தான் ஆர்வத்தோடு வாசித்து வருகிறேன். நீட்ஷே வரை எஃகு பிடியாக இருக்கும் மேற்கத்திய தத்துவம் இருத்தலியம் நோக்கி போகும்போது கீழை சாயலை ஏற்றுக்கொண்டு மரணத்தையும் இருப்பையும் முன்வந்து விசாரிக்கிறது. எல்லாம் மாயை என்று ரிஷிகேஷ் (யார் அந்த தூயமுனி?) முனிவர் கூறினாலும் ஒரு ஹோட்டலில் உணவருந்தி அதையே சொல்லிவிட்டு வர முடியாதே? பூஜ்யம் என்ற ஒன்றும் இல்லை என்பார் ஜே. கிருஷ்ணமூர்த்தி. இலக்கங்கள் எப்படியோ இருக்கட்டும். அதன் மகிமையை நாம் உணரவோ ஏற்றுக்கொள்ளவோதான் வேண்டி இருக்கிறது. God is the tangential point between zero and infinity என்று alfreed jerry சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது. நகுலனின் கவிதையில் இருப்பதற்காக வருகிறோம், இல்லாமலேயே போகிறோம் கூட satire பூஜ்யம்தான். கவிதை காதலிக்கு எழுதியதுபோல் எனக்கு நானே எழுதி கொண்டதுதான். நான் யாருக்காக வாழ்கிறேன் என்பதும் எனக்காக யார் வாழ்கிறார்கள் என்பதும் யோசித்துப்பார்க்க பூஜ்ஜியம்தான் கிட்டும். கைகளை விரித்து காட்டிவிடலாம் ஒன்றும் இல்லை என்பதை அது சொல்லிவிடும். மனதில் ஒன்றும் இல்லை என்று சொல்ல முடியுமா? உடலை பஞ்ச பூதமாக்கிய இந்திய தத்துவ மரபில் தேவிபிரசாத் சட்டோபாத்யாயாவின் ஓரிரு புத்தகங்கள் வாசிக்க இன்னொரு பாதையும் புலப்படும். பூஜ்யம் எப்போதுமே ஆரம்பமாக இருப்பதை மறுக்க முடியாது அல்லவா? 31-Aug-2022 12:40 am
காதலின் மோகத்தின் வேறுபட்ட பரிமாணங்கள் ...என்னைப் போன்றோர்கள் புரிந்து கொள்ளும்படி எழுதியிருக்கிறீர்கள் பூஜ்யத்திற்குள் ஒரு ராஜ்ஜியம் வைத்து புரியாமலே இருப்பான் ஒருவன் ----என்று ஒரு பழைய பாடல் உண்டு Zero அல்லது பூஜ்யத்திற்கு கணித அறிவியலில் விளக்கங்கள் உண்டு நீங்கள் படித்திருப்பீர்கள் ZERO MEANS NOTHING AND EVERYTHING ! How ??? HINDU PHILOSOPHY யில் மூழ்கிப் பாருங்கள் பூஜ்யத்தின் நிழல்களை ---SHADOWS OF ZERO ---may be illusory world and its many manifestations பூஜ்யத்திலிருந்து வெளிப்பாடு கொண்ட நிழல்கள் அல்லது பிம்பங்கள் அப்படித்தானே பூடகக் கவி ஸ்பரிசரே பூஜ்யத்தின் நிழல்களை ---SHADOWS OF ZERO அருமையான phrase சொற்றொடர் தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் எழுதலாம் . ரொம்ப யோசிக்க வேண்டும் ரிஷிகேஷ் ஆசிரமத்தில் தூய முனிவரின் அருகமர்ந்து கேட்கவேண்டும். சாத்தியப்படலாம் 30-Aug-2022 7:03 pm
நல்லாருக்கு; சிறப்பு, தொடர்ந்து பதிவிடுங்கள் 30-Aug-2022 4:17 pm
ஸ்பரிசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Aug-2022 11:47 am

ஒவ்வொரு நாளும்
நீயாக வந்து
அவளாக கடந்து

தீயாக மோகமூட்டி
திரியாக எரிய வைத்து
மழையாக மாறி அவித்து

குத்தும் கூர்வேல்
சொல்லேந்தி ஊன் அவித்து
மரணமாய் புன்னகைத்து

மனமெங்கும் அரவமாய்
விடமூட்டி குளிர் காய்ந்து
பகை கொடுத்து விலகி

சொட்டு சொட்டாக
சேர்த்த உயிர் இதனில்
துயர் விதைத்து துயிலின்
நினைவொழித்து கடந்து

பாலை என்றானதும்
ஞானம் விதைத்து
இறப்பின் நாள் குறித்து

கலைந்து போகிறாய்
காற்றுக்குள் சிதறிய
பூஜ்யத்தின் நிழல்களை
உன் உயிரில் நிரப்பி.

மேலும்

நமது தத்துவம் நமது இந்து மதத்தோடு ஒட்டியது என்று சொல்லுவார் விவேகானந்தர் மேற்கத்திய philosophers ல் வேறுபட்டு நிற்பவர் நீட்ஸே இங்கே JK எனும் ஜே கிருஷ்ணமூர்த்தி பின்னால் ஏதாவது எழுதமுடிகிறதா பார்க்கிறேன் . விவாதிப்போம் 31-Aug-2022 2:59 pm
பழைய பாடல் என்றால் அது கண்ணதாசன் எழுதியதாக இருக்கலாம். எனக்கு கேட்ட நினைவுகள் இல்லை. இந்தியா உலகுக்கு அளித்த கொடை காமசூத்திரம் மற்றும் பூஜ்யம் என்று ஒரு ரஷியர் பாரிஸில் இருக்கும் என்னுடைய நண்பனிடம் சொல்ல அப்படியா என்று அவன் என்னிடம் கேட்டான். பூஜ்யத்தின் மகிமை குறித்து விளக்கத்தெரியாது போழ்தினும் காம சூத்திரம் பற்றி கூற தெரிந்து இருக்கிறது எனக்கு. மேலை தத்துவம்தான் ஆர்வத்தோடு வாசித்து வருகிறேன். நீட்ஷே வரை எஃகு பிடியாக இருக்கும் மேற்கத்திய தத்துவம் இருத்தலியம் நோக்கி போகும்போது கீழை சாயலை ஏற்றுக்கொண்டு மரணத்தையும் இருப்பையும் முன்வந்து விசாரிக்கிறது. எல்லாம் மாயை என்று ரிஷிகேஷ் (யார் அந்த தூயமுனி?) முனிவர் கூறினாலும் ஒரு ஹோட்டலில் உணவருந்தி அதையே சொல்லிவிட்டு வர முடியாதே? பூஜ்யம் என்ற ஒன்றும் இல்லை என்பார் ஜே. கிருஷ்ணமூர்த்தி. இலக்கங்கள் எப்படியோ இருக்கட்டும். அதன் மகிமையை நாம் உணரவோ ஏற்றுக்கொள்ளவோதான் வேண்டி இருக்கிறது. God is the tangential point between zero and infinity என்று alfreed jerry சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது. நகுலனின் கவிதையில் இருப்பதற்காக வருகிறோம், இல்லாமலேயே போகிறோம் கூட satire பூஜ்யம்தான். கவிதை காதலிக்கு எழுதியதுபோல் எனக்கு நானே எழுதி கொண்டதுதான். நான் யாருக்காக வாழ்கிறேன் என்பதும் எனக்காக யார் வாழ்கிறார்கள் என்பதும் யோசித்துப்பார்க்க பூஜ்ஜியம்தான் கிட்டும். கைகளை விரித்து காட்டிவிடலாம் ஒன்றும் இல்லை என்பதை அது சொல்லிவிடும். மனதில் ஒன்றும் இல்லை என்று சொல்ல முடியுமா? உடலை பஞ்ச பூதமாக்கிய இந்திய தத்துவ மரபில் தேவிபிரசாத் சட்டோபாத்யாயாவின் ஓரிரு புத்தகங்கள் வாசிக்க இன்னொரு பாதையும் புலப்படும். பூஜ்யம் எப்போதுமே ஆரம்பமாக இருப்பதை மறுக்க முடியாது அல்லவா? 31-Aug-2022 12:40 am
காதலின் மோகத்தின் வேறுபட்ட பரிமாணங்கள் ...என்னைப் போன்றோர்கள் புரிந்து கொள்ளும்படி எழுதியிருக்கிறீர்கள் பூஜ்யத்திற்குள் ஒரு ராஜ்ஜியம் வைத்து புரியாமலே இருப்பான் ஒருவன் ----என்று ஒரு பழைய பாடல் உண்டு Zero அல்லது பூஜ்யத்திற்கு கணித அறிவியலில் விளக்கங்கள் உண்டு நீங்கள் படித்திருப்பீர்கள் ZERO MEANS NOTHING AND EVERYTHING ! How ??? HINDU PHILOSOPHY யில் மூழ்கிப் பாருங்கள் பூஜ்யத்தின் நிழல்களை ---SHADOWS OF ZERO ---may be illusory world and its many manifestations பூஜ்யத்திலிருந்து வெளிப்பாடு கொண்ட நிழல்கள் அல்லது பிம்பங்கள் அப்படித்தானே பூடகக் கவி ஸ்பரிசரே பூஜ்யத்தின் நிழல்களை ---SHADOWS OF ZERO அருமையான phrase சொற்றொடர் தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் எழுதலாம் . ரொம்ப யோசிக்க வேண்டும் ரிஷிகேஷ் ஆசிரமத்தில் தூய முனிவரின் அருகமர்ந்து கேட்கவேண்டும். சாத்தியப்படலாம் 30-Aug-2022 7:03 pm
நல்லாருக்கு; சிறப்பு, தொடர்ந்து பதிவிடுங்கள் 30-Aug-2022 4:17 pm
ஸ்பரிசன் அளித்த படைப்பில் (public) sankaran ayya மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
21-Aug-2022 3:47 pm

இரவை பருகியபடி
வேங்கையின் பசியோடு
காத்திருக்கிறேன்...

நாட்களை உதிர்க்கும்
வனத்திலிருந்து  நான்
வெளியேறும் நாள் பார்த்து.

என் வாளின் ஒளிபட்டு
கண் சுருங்கும் வானம்.

என் நிலத்தின் மௌனம்
தீக்குளிக்கும் காட்சிகள்
நீ அறியாதது.

என் ஒவ்வொரு
தப்படியிலும்
அதிரும் உன் மரணம்.

நீ நிதமும் மிதித்து கொன்ற
பூக்கள் எழுதிய உயிலொன்றில்
நான்...

ஓசைக்குள் வீறிடும்
மனதின் அந்தகாரம்.

காலத்தின் விந்து
களிப்பின் கனல்
பூக்கள் தேக்கிய காற்று.
எரிமலையின் நாக்கு.
என் தாகத்துக்கு
உன் மரணமே மருந்து.

நெருப்பை சிந்தும்
நீல நயனங்களோடு
நிலவை எரிக்கும்
உன

மேலும்

இயற்கையில் ரோஜா முள்ளோடுதான் ...காதலில் சில ரோஜாக்கள் முள்ளோடு 30-Aug-2022 1:08 pm
சில துரோகம் தாங்க முடியவில்லை. அதுதான் கடும் சிக்கல்... 😊😊😊 30-Aug-2022 11:42 am
என்ன வெறுப்போ கவிதையின் வித்தியாசமான அணுகுமுறை ஸ்பரிசன் என்று அடையாளம் காட்டுகிறது 22-Aug-2022 7:05 pm
Arumai... 22-Aug-2022 3:18 pm
ஸ்பரிசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Aug-2022 3:47 pm

இரவை பருகியபடி
வேங்கையின் பசியோடு
காத்திருக்கிறேன்...

நாட்களை உதிர்க்கும்
வனத்திலிருந்து  நான்
வெளியேறும் நாள் பார்த்து.

என் வாளின் ஒளிபட்டு
கண் சுருங்கும் வானம்.

என் நிலத்தின் மௌனம்
தீக்குளிக்கும் காட்சிகள்
நீ அறியாதது.

என் ஒவ்வொரு
தப்படியிலும்
அதிரும் உன் மரணம்.

நீ நிதமும் மிதித்து கொன்ற
பூக்கள் எழுதிய உயிலொன்றில்
நான்...

ஓசைக்குள் வீறிடும்
மனதின் அந்தகாரம்.

காலத்தின் விந்து
களிப்பின் கனல்
பூக்கள் தேக்கிய காற்று.
எரிமலையின் நாக்கு.
என் தாகத்துக்கு
உன் மரணமே மருந்து.

நெருப்பை சிந்தும்
நீல நயனங்களோடு
நிலவை எரிக்கும்
உன

மேலும்

இயற்கையில் ரோஜா முள்ளோடுதான் ...காதலில் சில ரோஜாக்கள் முள்ளோடு 30-Aug-2022 1:08 pm
சில துரோகம் தாங்க முடியவில்லை. அதுதான் கடும் சிக்கல்... 😊😊😊 30-Aug-2022 11:42 am
என்ன வெறுப்போ கவிதையின் வித்தியாசமான அணுகுமுறை ஸ்பரிசன் என்று அடையாளம் காட்டுகிறது 22-Aug-2022 7:05 pm
Arumai... 22-Aug-2022 3:18 pm
ஸ்பரிசன் அளித்த படைப்பில் (public) PRIYA G5ab5e9ea708bc மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
19-Aug-2022 6:32 pm

காட்டைப்போல் விரியும்
தன் மனதுக்குள் ஒளிந்து
கனவுக்குள் குதித்தவள்
பூக்களில் மோதி
உயிரிழந்து போனாள்.

எங்கு திரும்பினாலும்
போன பாதையில் திரும்பியதும்
வந்த பாதையே வருகிறது
என்றவளின் காலில்
ஒட்டிக்கிடந்தது நரகம்.

கண்களை விழிக்க வைத்த
கனவுதனை பிரித்து பார்க்க
ஒலியின்றி தெரிந்த என்
முகத்தில் இறந்திருந்தது
அவளின் எதிர்காலம்.

ஒளியை உணர்வால்
எரித்துக்கொண்டிருக்கும்
விளக்கிலிருந்து வெளியேறும்
வண்ணத்துப்பூச்சியின் நிழல்.

நிழலின் முகத்தை நான்
மறைக்க மறைக்க
ஆவியாகிறது கண்ணீரின்

மேலும்

மிக்க நன்றி வாசிப்புக்கு.... 20-Aug-2022 6:56 pm
ஒளியை உணர்வால் எரித்துக்கொண்டிருக்கும் விளக்கிலிருந்து வெளியேறும் வண்ணத்துப்பூச்சியின் நிழல். அருமையான வரிகள் .... 20-Aug-2022 2:49 pm
இப்படி எழுதியே எனக்கு பழக்கம் ஆகி விட்டது. இதுவும் தமிழுக்கு அழகும் பொருளும் சேர்த்தால் நல்லது என்றுதான் தோன்றுகிறது. உங்கள் வாசிப்புக்கு மிக்க நன்றிகள் 20-Aug-2022 2:31 pm
கொஞ்சம் புரிய கொஞ்சம் புரியாது கொஞ்சம் இங்கும் அங்கும் புரிவதுபோல் இருக்கிறது உங்கள் வரிகள் இன்னும் ஏன் எத்தனை நாள் இப்படியே எழுதப் போகிறீர் கொஞ்சம் பாமரரும் புரிந்து ரசிக்கும் படி இதையே கொஞ்சம் மாற்றி எழுதுவீரோ ஸ்பரிசன் 20-Aug-2022 1:33 pm
ஸ்பரிசன் - ஸ்பரிசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Jul-2021 2:05 pm

அலையும் கடலுக்கு
தெரியாதிருக்கிறது தான்
அலைவது குறித்து.

மௌனப்பூச்சிகள்
என் பெயரில்
உன் பெயரை
ஒட்டிக்கொண்டு பறக்கிறது
கடலலையை விரட்டும்
காற்றை தன் குரலாக்கி.

நீ பேசுவதெல்லாம்
நீயே கேட்கிறாய்
நான் கேட்பதாக நினைக்கும்
நினைவின் கனவிலிருந்து.

நானோ...
நான் எங்கிருக்கிறேன்
என்பதறியாது போனதும்

காற்றுக்குள் தவிக்கும்
கடல் வாசனையின்
காலடித்தடம் தேடி
உன் கனவில் புகுந்து
என் கனவை
தனியே காண்கிறேன்.

என்னிடம் நான் பேச
எதுவுமின்றி போகிறது.

நாம் கடப்பது
கடல் அல்ல காலம்
என சொல்லிச்சொல்லி
கரை எங்கும் புரளும்
துயரமான இக்கடல்.

கடல்மேனியில் ஒட்டாத
மண்ணெல்லாம் திரண்டு

மேலும்

ஒருவனுக்கு எதிர்பதம் ஒருத்தியே - நன்றான புனைவு. 23-Jul-2021 11:10 am

தூய பாலில் வெண்ணை ஒளிந்திருப்பது
போல நமது இதயத்தில் உறையும்
ஆத்மாவில் இறைவன், பாலைக் கடைந்தால்
வெண்ணை திரண்டுவரும். அதுபோல்
பக்தியால் நம் மனத்தைக் கடைந்திட
இறைவன் நம் அகக் கண்ணில்

மேலும்

ஸ்பரிசன் - கவின் சாரலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Jun-2021 4:38 pm

வாடியிருந்த மலருக்கு
நீரூற்றினாள்
மலர் இதழ் விரித்து
மெலிதாய் சிரித்தது
பறித்துச் சூடிக்கொண்டால்
மகிழ்வேன் நன்றி சொல்வேன் என்றது !

மேலும்

ஆம் மிக்க நன்றி கவிப்பிரிய சக்கரை வாசன் 11-Jun-2021 7:58 pm
பூத்த பெண் போல பூவுக்கும் உணர்வு இல்லையா ஐயா 11-Jun-2021 6:25 pm
ஸ்பரிசன் - Dr.V.K.Kanniappan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Jun-2021 9:28 pm

நேரிசை வெண்பா

தாம்ரபர ணிப்புனலாற் சர்வசுரம் பித்துவிழித்
தூம்பிரமுட் காய்ச்சல் சுவாசநோய் - தேம்பிமிகக்
கக்குகய மென்புருக்கி கைகால் எரிவுடனே
மிக்குறுதா கங்களும்விள் போம்

- பதார்த்த குண சிந்தாமணி

இந்நீரைப் பருகினால் பலவிதமான சுரநோய்கள், பித்த தோடம், கண்புகைச்சல், உட்சுரம், சுவாசநோய், சயம், எலும்புருக்கி, கைகால் எரிவு, அதிதாகம் இவற்றைப் போக்கும்.

மேலும்

டாக்டர் அவர்களுக்கு வணக்கம் தமிர பரமி ஆறு ஒடிமிடத்து மண்ணில் தாஸ்மிரச் சத்துக்கள் உள்ளன.ஆற்றின் தண்ணீர் அந்த தாமிர மண்ணின் மருத்துவ குணங்களை கலந்து மக்களுக்கு கொடுக்கிறது இதைத் தெரிந்த diyhyhstksli இந்த ஆற்றிர்கு தாமிர பரணி என்று பெயர் வத்துள்ளர்கள் என்றி மக்கள் இன்று இப்பாடலின் மூலம் தெரிந்து கொள்வார்கள் நன்றி. 11-Jun-2021 10:33 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (259)

இவர் பின்தொடர்பவர்கள் (547)

இவரை பின்தொடர்பவர்கள் (261)

BABUSHOBHA

BABUSHOBHA

அவிநாசி,திருப்பூர்
மேலே