ஸ்பரிசன் - சுயவிவரம்
(Profile)
தமிழ் பித்தன்
இயற்பெயர் | : ஸ்பரிசன் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-Feb-2018 |
பார்த்தவர்கள் | : 2692 |
புள்ளி | : 1424 |
நிறைய இருக்கு...அப்பறமா பேசலாம்.
சொற்களை எப்படி
தேந்தெடுக்க?
அதில் வண்ணமோ அல்லது
வாசனையோ நிரப்புவதற்கு
எந்த துளையில் இருந்து
பயணிக்க வேண்டும்?
ஒடிந்த சொற்களை
எந்த நிலத்தில் புதைப்பது?
காலத்தில் புதையுண்டு போன
சொற்களில் வழியும் அர்த்தத்தை
எந்த சீசாவில் நிரப்புவது?
எண்ணங்கள் எனும் பெயரில்
சதா கடிக்கும் இந்த
வார்த்தைகளின் கொடுக்குகளை
கற்பனையால் பிய்ப்பது எங்ஙனம்?
குளிர் வெயிலுக்குள் நகரும்
சொற்களின் உருவங்களை
யாரைக்கொண்டு எப்படி வரைவது?
குப்பைத்தொட்டிக்குள்
தனித்து வாழும்
சொற்களை உழுது வரும்
கிருமிகளின் பாஷைக்குள்
எந்த சொல் பாடலாக மலரும்?
ஒரு சொல் மொழிக்கு
தரும் வாடகை எவ்வளவு?
சொல் தீண்ட
பலமுறை அல்ல
பற்பலமுறையேனும்
அவளை நான்
எனக்குள்..
நானும் என் மனதும்
நிர்வாணமாக்கி
ரசித்து ரசித்து பார்த்தோம்.
ஒருநாள்
அவள்...
முற்றும் நிர்வாணமாக
என்முன் நின்றபோது
அதிர்ச்சியால் வெட்டுண்டு போன
என் மனதில்
நான்
பிணமாய் விழுந்தேன்.
........
இந்த வீட்டில் அறை என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது. ஆனால், ஏழோ எட்டோ அறைகள் உள்ள வீடுதான்.
ஒவ்வொரு அறைக்குள்ளும் மெதுவாக நடந்து வீடை ஒருமுறை சுற்றி வருவதற்கு இருபது நிமிடங்கள் ஆகும்.
துள்ளலாய் ஓடினாலும் சிறிது நேரம் பிடிக்கும். அழகான வீடு என்று சொல்ல முடியாது. எல்லாம் சிதறி இருக்கும்.
இதுபோக தோட்டம் என்பதும் தனியே இருக்கிறது. செடி கொடிகள் தவிர ஓரிரு அரளி மரங்களும் இருக்கிறது. இந்த மரம் வீட்டில் வளர என்ன தேவை என்பது எனக்கு தெரியவில்லை.
வாசனை என்று எதுவும் வீட்டில் இல்லை. அதேசமயம் நாற்றம் இல்லை. ஒன்றுமே இல்லாத இந்த வீட்டில் இருக்கிறேன். நான் மட்டும் அல்ல, என்னோடு பிறந்த, நான் பெற்ற
Lie through your teeth and call it a novel. All will be well.
James Paddock.
அன்புள்ள ஸ்பரி…
ஒரு செய்தியில் அல்லது நமக்கு தேவையான விவரத்தில் நாம் உண்மையான கவனம் கொண்டு புதுப்புது தகவல்களை திரட்டும்போது நம்மெதிரில் மலையாய் குவியும் அத்தனை விவரங்களும் கற்க வேண்டிய அவசியம் உள்ளதா என நீங்கள் கேட்டதை நான் சில நிமிடங்கள் முதல் சில மணி நேரங்கள் வரையும் சிந்தித்து பார்த்தேன்.
கற்க வேண்டிய அவசியம் என்பது ஒரு நிர்பந்தமான செயலா அல்லது இயல்பான ஆர்வமா என்பதை நான் ஒரு பெண்ணாக இருந்து யோசிக்க யோசிக்க அது கால நேரங்கள் என்னும் அளவற்று செல்கிறது. ஒரு ஆணாக இருப்பின் இன்னும் வேறு அளவுகோள்கள் தேவைப்படல
Writing - the act of one person giving a piece of their soul to another.
J. Spredemann.
*************
வணக்கம்.
நேரடியாக விஷயத்துக்கு வருகிறேன் என்றால் அது இன்னும் நான் எழுதி கொண்டிருக்கும் என்னை எழுத வைத்து கொண்டிருக்கும் “மினர்வா”வை பற்றியதாகவே இருக்கும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள நாம் அடுத்த இலக்கை நோக்கி இணைந்து பயணப்படுகிறோம் என்று ஆகிவிடும்.
நான் விரும்புவதும் அதுவே.
மாசற்ற எனது அன்பிற்குரிய வாசக அன்பர்களுக்கும் சலிப்பறியாத fake id களுக்கும் இனிய மாலை வணக்கம்.
மினர்வா நான் எழுத திட்டமிட்டு கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக இருக்கும் என்று நினைக்கிற
எலி ஒன்று
பொறியில் அகப்பட்டுக் கொண்டது
தின்ற வடை சீரணித்திருக்கும்
புழுக்கைகள் அத்தாட்சி
ஆயினும் குறுக்கும் நெடுக்கும்
ஓடி ஓசை எழுப்பிக் கொண்டிருந்தது
எலியை வெளியே விட்டுவிட்டு வா
தாயின் ஆணை
நாவலை குப்புற போட்டுவிட்டு
வேண்டா வெறுப்பில் எழுந்தேன்
பொறியை எடுத்து வாசலில் வைத்து
திறந்து விட்டேன்
அந்த நீண்டவால் சுண்டெலி
வெளியே ஓடாமல் மீண்டும்
உள்ளே நுழைந்து
தாயின் காலடி வழியே ஓடி
வீட்டில் எங்கோ மறைந்தது
சாரிம்மா நான் அசடு வழிந்தேன்
உனக்குத் தெரியுமா
அகதா கிறிஸ்டியின் நாடகம்
MOUSE TRAP லண்டனில்
1952 லிருந்து 2020 வரை தொடந்து நடந்ததாம்
பிடித்த எலியை வெளியே விடத் தெரியவில
ஐந்தா?
இல்லை அது இருபதுக்கும் மேல் இருக்கும்.
இல்லை இல்லை… ஐந்நூறு, ஆயிரம் கூட இருக்கலாம்.
கால்கள் காற்றுக்குள் ஓங்கி உதைத்து கொண்டிருந்ததே தவிர தப்பி ஓட முடியவில்லை.
ஓடினால், பிழைத்து கொள்ளலாம்.
பிழைத்து விடுவதால் என்ன செய்ய போகிறோம்?
ஆனாலும், அவைகள் கடித்து குதறி விடும். சதை துணுக்கல்களை தின்று விடும்.
எலிகள்.
எலிகள் ஒன்றின் மேல் ஒன்று ஏறி ஏறி குவிந்து குன்று போல் நிற்கும்போது…
அவற்றின் ஜோடி கண்கள் என்னை இல்லையில்லை என் உடலை ஆங்காரத்துடன் குறி வைத்தன.
நான் சாகப்போகிறேன் என்று நினைக்கவும் விழிப்பு வந்தது.
கனவு.
ஆயிரம் இல்லை என்றாலும் ஏழோ (அ) பதினைந்தோ எலிகள
காலைத் தேநீரும் சிதறிய சிந்தனையும்
கேரளாவில் நீங்கள் சாலைவழி பயணம் மேற்கொண்டால் அதில் உள்ள சுகமே தனியானது. பயணம் செய்யும் எல்லா சாலைகளுக்கு பக்கங்களில் பச்சைப்பசேல் என பயிர்களும் மரங்களும் இருக்கும். இயற்கை தன் அழகை விரித்து தலையாட்டும் காட்சி கண்களுக்குக் குளுமையானது. ஒரு கிராமத்தில் இருந்து இன்னொரு கிராமம் மாறுவது தெரியாமல் சாலைகள் செல்லும். நாம் எல்லையை கடப்பதை மைல் கல்லுகளால் தான் அறிவோம். மற்றும் ஒரு அடையாளம் அந்த எல்லைக் கல்லின் அடுத்து வரும் டீக் கடையைக் கூறலாம்.ஆம் எந்த நேரமும் தேநீர் கிடைப்பது இந்த நெடுஞ்சாலைகளில் தான். இந்தக் கடைகள் பயணம் செய்ப
அலையும் கடலுக்கு
தெரியாதிருக்கிறது தான்
அலைவது குறித்து.
மௌனப்பூச்சிகள்
என் பெயரில்
உன் பெயரை
ஒட்டிக்கொண்டு பறக்கிறது
கடலலையை விரட்டும்
காற்றை தன் குரலாக்கி.
நீ பேசுவதெல்லாம்
நீயே கேட்கிறாய்
நான் கேட்பதாக நினைக்கும்
நினைவின் கனவிலிருந்து.
நானோ...
நான் எங்கிருக்கிறேன்
என்பதறியாது போனதும்
காற்றுக்குள் தவிக்கும்
கடல் வாசனையின்
காலடித்தடம் தேடி
உன் கனவில் புகுந்து
என் கனவை
தனியே காண்கிறேன்.
என்னிடம் நான் பேச
எதுவுமின்றி போகிறது.
நாம் கடப்பது
கடல் அல்ல காலம்
என சொல்லிச்சொல்லி
கரை எங்கும் புரளும்
துயரமான இக்கடல்.
கடல்மேனியில் ஒட்டாத
மண்ணெல்லாம் திரண்டு
தூய பாலில் வெண்ணை ஒளிந்திருப்பது
போல நமது இதயத்தில் உறையும்
ஆத்மாவில் இறைவன், பாலைக் கடைந்தால்
வெண்ணை திரண்டுவரும். அதுபோல்
பக்தியால் நம் மனத்தைக் கடைந்திட
இறைவன் நம் அகக் கண்ணில்
வாடியிருந்த மலருக்கு
நீரூற்றினாள்
மலர் இதழ் விரித்து
மெலிதாய் சிரித்தது
பறித்துச் சூடிக்கொண்டால்
மகிழ்வேன் நன்றி சொல்வேன் என்றது !
நேரிசை வெண்பா
தாம்ரபர ணிப்புனலாற் சர்வசுரம் பித்துவிழித்
தூம்பிரமுட் காய்ச்சல் சுவாசநோய் - தேம்பிமிகக்
கக்குகய மென்புருக்கி கைகால் எரிவுடனே
மிக்குறுதா கங்களும்விள் போம்
- பதார்த்த குண சிந்தாமணி
இந்நீரைப் பருகினால் பலவிதமான சுரநோய்கள், பித்த தோடம், கண்புகைச்சல், உட்சுரம், சுவாசநோய், சயம், எலும்புருக்கி, கைகால் எரிவு, அதிதாகம் இவற்றைப் போக்கும்.