பாண்டியராஜன் - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/creator.png?v=6)
எழுத்தாளர்
இயற்பெயர் | : பாண்டியராஜன் |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 24-Feb-2015 |
பார்த்தவர்கள் | : 329 |
புள்ளி | : 76 |
கல்லூரியின் முதல் நாள்!
அனைவரும் ஒவ்வொருவராய் எழுந்து பெயர், பள்ளி, எதிர்காலக்கனவு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்!
அப்போது தெரியாது!
என் எதிர்காலக் கனவு நீ தான் என்று!
என் காதலை உன்னிடம் சொல்ல ஆசை தான்!
உன் கண்களைப்பற்றி மட்டுமே ஒரு மாமாங்கம் ஆகுமே?
பின்பு முழு காதலை எப்படி சொல்லி முடிக்க?
பேசாமல் கல்யாணம் செய்து கொள்.
வாழ்க்கை முழுவதும் சொல்கிறேன் .
பத்தவில்லையா மீண்டும் ஒரு பிறவி எடுப்போம்.
விட்டுப் போனதை தொடர!
கோவில் கொடைக்கு வரலயாடா என்று கேட்கும் அம்மாவிடம் என்ன சொல்ல?
கண்ணின் ஓரம் ததும்பும் நீர்த்துழிகள், குரலில் ஏற்படும் ஏக்கத்தை மறைக்க,
ஆள் வந்துட்டாங்கம்மா அப்புறம் பேசுறேன் என்று வைத்துவிட்டு ஓ என அழாத குறை தான்!
இந்த வெறுமையை போக்க ஒரே அருமருந்து தான்!
இளமை எனும் பூங்காற்று...............
தூங்கப் போகும் வரை ஒலித்துக் கொண்டிருந்தது
உன் வீட்டில் பூத்த ரோஜாக்களில் ஒன்றை மட்டும் சூடியுள்ளாய்!
உன் கைளால் பறித்து காதல் மரணம் அடைந்த பூ உன் தலையில் சிரித்துக் கொண்டிருக்கிறது!
உன் கைபடா பாவியாகிப்போன மற்ற பூக்கள் கண்ணீர் விட்டன,
அதை அறியாத மனிதர்கள் ரோஜாவின் மேல் பனித்துளி என நினைத்துக் கொண்டனர்!
இமைகள் வருடும் நெருக்கத்தில் , மூச்சு விட முடியா இருக்கத்தில் ஒரு முறை அணைத்து விடு .
வாழ்ந்து விடுவேன் இப்பிறவியை.
இமைகள் வருடும் நெருக்கத்தில் , மூச்சு விட முடியா இருக்கத்தில் ஒரு முறை அணைத்து விடு .
வாழ்ந்து விடுவேன் இப்பிறவியை.
உனக்கு ஞாபகம் இருக்கிறதா ?
முதல் முதலாய் எப்போது நான் உன்னிடம் பேசினேன் என்று?
பசுமரதத்தாணி போல இன்னும் ஞாபகம் இருக்கிறது!
பள்ளி நண்பனை போல் சிறந்த நண்பன் யாரும் வர போவதில்லை என நினைத்த எனக்கு , உன்னை போல தோழி யாரும் வர முடியாது என உணர வைத்தவள் நீ !
என் தாய் தங்கை போல, நீயும் நான் கூறாமல் என்ன நினைத்தேன் என சொல்ல தெரிந்தவள் !
கல்லூரிக்கு நீ மருதாணி வைத்து வந்தால் , கைகள் சிவக்கின்றதோ இல்லையோ அழகாக இருக்கின்றது என நான் கூறக் கேட்டு வெட்கததில் உன் கன்னங்கள் சிவக்கும் !
கடவுள் உனக்கு முட்டை கண்களை படைத்தது நான் முட்டைக் கண்ணி என அழைக்கத் தானோ என தோன்றும்!
எத்தனையோ இரவுகள் தூங்காமல் பேசி இர
காற்றோடு ஆடும் கார்மேகம் அழகா ,
உன் காதோராம் ஆடும் கருங்கூந்தல் அழகா ?
பௌர்ணமி வானின் நிலா அழகா,
கண்ணக் குழிகள் விழும் உன் முகம் அழகா?
மழை கண்ட மகிழ்ச்சியில் துள்ளி குதித்தாடும் மீன்கள் அழகா ,
என்னை கண்டும் காணாமல் நடிக்கும் உன் வேல் விழிகள் அழகா?
கார்மேகம் மழை பொழியாமல் காற்றோடு போகலாம்.
உன் கார்கூந்தல் வெளிறி வெண்மை ஆகலாம் !
பௌர்ணமி நிலா தேய்பிறை காணலாம்,
கண்ணக் குழிகள் மறைந்து கண்ணமே குழியாகும் வயதாகலாம்!
மழை இல்லா குளம் வற்றி மீன்கள் அங்கு மறையலாம் ,
உன் கண்கள் பொலிவு மாறலாம் காலங்கள் மாறும் போது!
என்றும் மாறாத , என்றும் மறக்காத நாம் காதலே அழகு !
நான் ஐந்து மாத கருவாக இருக்கும் போதும் ஐந்து மைல் நடந்து பட்டாசு ஆலையில் வேலை செய்தாய்!
என் கல்லூரி படிப்பிற்காக கண்டவரிடம் கடன் வாங்கி என்னை கம்ப்யூட்டர் என்ஞினியர் ஆக்கினாய்!
இந்த படிப்பினால் தானே உன்னை பிரிந்திருக்கிறேன் இன்று!
ஒரு வேளை படிக்காமல் இருந்திருந்தால் நம் ஊரில் நம் வீட்டில் உன்னுடன் இருந்திருப்பேன் இன்று !
"பாரம் எல்லாம் வலியில்,
காயம் எல்லாம் மனதில்,
எப்படியும் உழைத்து-தான் ஆகவேண்டும்...
"காலையோ, மாலையோ,
இரவோ, பகலோ, வரும் சிற்றுந்து,
இவைகளை நான் எதிர்ப் பார்த்தால்தான் என் பிள்ளைகளுக்கு நண்பகல்-விருந்து"..
"உடம்பில் எத்தனை மூட்டைகளையும் அடுக்குங்கள்
என் பிள்ளையின் பசியை மட்டும் அடைத்தால்-போதும் "
"என் இரு கைகளும் சிவந்துப்-போகும்,
ஆனாலும்
என் மனமோ அதை மறந்துப்-போகும்
என் பிள்ளையின் பசியை உணர்ந்து".
"என் முதுகெலும்பு என்னிடம் சொல்லும்
நான் உடைந்-தாலும்
நீ உருக்குலைந்து விடாதே
பின்பு உன் பிள்ளையின் பச
இவர் பின்தொடர்பவர்கள் (8)
இவரை பின்தொடர்பவர்கள் (8)
![முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்](https://eluthu.com/images/userthumbs/f3/qliou_30127.jpg)
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
![முனோபர் உசேன்](https://eluthu.com/images/userthumbs/f2/bwzky_28604.jpg)
முனோபர் உசேன்
PAMBAN (now chennai for studying)
![கவிபுத்திரன் எம்பிஏ](https://eluthu.com/images/userthumbs/f3/iozgk_30398.jpg)