பாண்டியராஜன் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : பாண்டியராஜன் |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 24-Feb-2015 |
பார்த்தவர்கள் | : 541 |
புள்ளி | : 100 |
தேவதைகள் எல்லா நேரமும் வெள்ளை உடை ரெக்கையுடனும் வர தேவையில்லை!
சில நேரங்களில் நைட்டியுடன் கூட வரலாம்
என கூறியது மார்கழியில் நீ கோலம் போட வர காத்திருந்த நிலா!
மாரீஸ்வரனுக்கு அன்று பள்ளி மதியம் மட்டுமே. பள்ளியின் வளாகத்தில் உள்ளயே அமைந்திருக்கும் பெண்கள் பள்ளியில் 12 வது படிக்கும் அக்காமார்களுக்கு முழு ஆண்டுத்தேர்வு. பள்ளி விடுமுறை என்பதால் காலையிலே 7 மணிக்கே குறுக்குப்பாதை மைதானத்திற்கு கிரிக்கெட் விளையாட சென்று விட்டான். விளையாண்டு விட்டு வீட்டுக்கு வந்தால் பாட்டி சமைத்துக் கொண்டிருந்தாள். காலை இட்லி தோசை எல்லாம் கிடையாது. காலையிலும் சோறு தான். அன்று என்ன கொழம்பு வைப்பது என்று பாட்டிக்கு புரியவில்லை. பானைக்குள் காய்ஞ்ச கறி என்று அவர்கள் கூறும் உப்புக்கண்டம் இருந்தது. அதை எடுத்து சுரைக்காய் மஞ்சள் உப்பு மிளகாய் கலந்து எளிய முறையில் ஒரு கொழம்பு. இது
தேசியப்பறவையை வீட்டில் வளர்ப்பது குற்றம் என்றால்,
உன் தாய் தந்தை மட்டும் எப்படி?
பேருந்து நிறுத்தத்திலே நின்ற உன்னைப் பார்த்து,
இந்த மயில் மழைக்காக காத்திருக்கிருது போல என நினைத்து சிறிது தூறிவிட்டு சென்றது மழை!
கதை மற்றும் கவிதை எழுதுவது எப்படி ?
இமைகள் வருடும் நெருக்கத்தில் , மூச்சு விட முடியா இருக்கத்தில் ஒரு முறை அணைத்து விடு .
வாழ்ந்து விடுவேன் இப்பிறவியை.
இமைகள் வருடும் நெருக்கத்தில் , மூச்சு விட முடியா இருக்கத்தில் ஒரு முறை அணைத்து விடு .
வாழ்ந்து விடுவேன் இப்பிறவியை.
உனக்கு ஞாபகம் இருக்கிறதா ?
முதல் முதலாய் எப்போது நான் உன்னிடம் பேசினேன் என்று?
பசுமரதத்தாணி போல இன்னும் ஞாபகம் இருக்கிறது!
பள்ளி நண்பனை போல் சிறந்த நண்பன் யாரும் வர போவதில்லை என நினைத்த எனக்கு , உன்னை போல தோழி யாரும் வர முடியாது என உணர வைத்தவள் நீ !
என் தாய் தங்கை போல, நீயும் நான் கூறாமல் என்ன நினைத்தேன் என சொல்ல தெரிந்தவள் !
கல்லூரிக்கு நீ மருதாணி வைத்து வந்தால் , கைகள் சிவக்கின்றதோ இல்லையோ அழகாக இருக்கின்றது என நான் கூறக் கேட்டு வெட்கததில் உன் கன்னங்கள் சிவக்கும் !
கடவுள் உனக்கு முட்டை கண்களை படைத்தது நான் முட்டைக் கண்ணி என அழைக்கத் தானோ என தோன்றும்!
எத்தனையோ இரவுகள் தூங்காமல் பேசி இர
காற்றோடு ஆடும் கார்மேகம் அழகா ,
உன் காதோராம் ஆடும் கருங்கூந்தல் அழகா ?
பௌர்ணமி வானின் நிலா அழகா,
கண்ணக் குழிகள் விழும் உன் முகம் அழகா?
மழை கண்ட மகிழ்ச்சியில் துள்ளி குதித்தாடும் மீன்கள் அழகா ,
என்னை கண்டும் காணாமல் நடிக்கும் உன் வேல் விழிகள் அழகா?
கார்மேகம் மழை பொழியாமல் காற்றோடு போகலாம்.
உன் கார்கூந்தல் வெளிறி வெண்மை ஆகலாம் !
பௌர்ணமி நிலா தேய்பிறை காணலாம்,
கண்ணக் குழிகள் மறைந்து கண்ணமே குழியாகும் வயதாகலாம்!
மழை இல்லா குளம் வற்றி மீன்கள் அங்கு மறையலாம் ,
உன் கண்கள் பொலிவு மாறலாம் காலங்கள் மாறும் போது!
என்றும் மாறாத , என்றும் மறக்காத நாம் காதலே அழகு !
நான் ஐந்து மாத கருவாக இருக்கும் போதும் ஐந்து மைல் நடந்து பட்டாசு ஆலையில் வேலை செய்தாய்!
என் கல்லூரி படிப்பிற்காக கண்டவரிடம் கடன் வாங்கி என்னை கம்ப்யூட்டர் என்ஞினியர் ஆக்கினாய்!
இந்த படிப்பினால் தானே உன்னை பிரிந்திருக்கிறேன் இன்று!
ஒரு வேளை படிக்காமல் இருந்திருந்தால் நம் ஊரில் நம் வீட்டில் உன்னுடன் இருந்திருப்பேன் இன்று !
இவர் பின்தொடர்பவர்கள் (8)
இவரை பின்தொடர்பவர்கள் (8)

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை

முனோபர் உசேன்
PAMBAN (now chennai for studying)
