மீ மணிகண்டன் - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  மீ மணிகண்டன்
இடம்:  தமிழ்நாடு, இந்தியா
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Mar-2014
பார்த்தவர்கள்:  3612
புள்ளி:  1034

என்னைப் பற்றி...

எனது கற்பனையில் உதித்த கவிதைகளும் கதைகளும் இங்கே நிறைய. எண்ணங்களில் எமது ஒளிப் படப் பதிவுகள் நிறைய. நலமே விளைக நன்றே வாழ்க! ...மீ.மணிகண்டன்
புனைப்பெயர்: மணிமீ

என் படைப்புகள்
மீ மணிகண்டன் செய்திகள்
மீ மணிகண்டன் - எண்ணம் (public)
05-Aug-2022 10:54 am

வீட்ல விசேஷம் பாடல் மெட்டுக்கு மீ.மணிகண்டன் எழுதிய பாப்பா பாட்டு

நன்றி

மேலும்

மீ மணிகண்டன் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Aug-2022 7:43 am

கதையின் தலைப்பு: அந்த மூன்றாவது பயணி...
எழுதியவர்: மீ.மணிகண்டன்
நாள்: 24-Aug-2021

அந்த மூன்றாவது பயணி...

இரவுநேரப் பயணம் என்பதால் அந்தப் பேருந்தில் நவீன் மற்றும் இரண்டு நபர்கள் தவிர வேறு பயணிகள் இல்லை. நவீன் சன்னல் ஓரமாக அமர்ந்து குளுகுளு காற்றை சுகித்தவாறே இருட்டில் வேடிக்கை பார்க்க முடியாவிட்டாலும் இருட்டையே பார்த்துக்கொண்டு பழைய படப் பாடல்களை தனக்குமட்டுமே கேட்கும் வகையில் பாடிக்கொண்டிருந்தான். மற்ற இரு பயணிகளும் நல்ல உறக்கத்தில். மணியுர் பேருந்து நிலையம் சென்றடைய இன்னும் மூன்று மணிநேரம் ஆகும் இப்போது மணி இரவு 11:35. கண்டக்டர், தனியே ஒரு இருக்கையில் அமர்ந்து பயணசீட்டு வரவுக் கணக்கை

மேலும்

மீ மணிகண்டன் - மீ மணிகண்டன் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Sep-2021 11:18 am

கண்ணதாசன் எழுதிய சிவன் பாடல்  


மேலுள்ள வரியை க்ளிக் செய்யவும். நன்றி!

சிவன் பாடல். எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.

மேலும்

எழுத்தின் மீது செய்யவும். நன்றி 14-Nov-2021 11:29 pm
எங்கே யந்த .....பாடல்.... என்றே என்மனம். பாடலைத் தேடுதே ஆவலாய்த் த 15-Sep-2021 6:30 pm
மீ மணிகண்டன் - எண்ணம் (public)
14-Sep-2021 11:18 am

கண்ணதாசன் எழுதிய சிவன் பாடல்  


மேலுள்ள வரியை க்ளிக் செய்யவும். நன்றி!

சிவன் பாடல். எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.

மேலும்

எழுத்தின் மீது செய்யவும். நன்றி 14-Nov-2021 11:29 pm
எங்கே யந்த .....பாடல்.... என்றே என்மனம். பாடலைத் தேடுதே ஆவலாய்த் த 15-Sep-2021 6:30 pm
மீ மணிகண்டன் - கோவை சுபா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Feb-2021 10:59 am

என் தேவதையே
எந்தன் மனசிறையில் நீ
இருந்தாலும் ....!!

என் உள்ளத்தில் நீ
சுதந்திரமாக ...
சுற்றி வருவதற்கு
எந்த கட்டுப்பாடுமில்லை ..!!

இந்த கவிதையை
படிப்பவர்களின் மனதில்
ஒரே குழப்பம் ...!!

இருப்பது சிறையில் ..
சுதந்திரம் எப்படி ,,??

இந்த ரகசியம் யாருக்கும்
தெரிய வேண்டாம் ..!!
புரியாத புதிராகவே
இருக்கட்டும் ..!!
--கோவை சுபா

மேலும்

வணக்கம் மீ. மணிகண்டன் அவர்களே .. தங்களின் கருத்துக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி ... வாழ்த்துக்கள் ... வாழ்க நலமுடன் ..!! 12-Feb-2021 10:49 am
ரகசியம் அருமை வாழ்த்துகள்! 12-Feb-2021 10:45 am

குறை ஏதும் இல்லை தங்கத்தில்
தங்கத்தை உருக்க உருக்க தூய
தங்கமே கிடைக்கும் அது போல
தாயின் மனம் இறங்க அன்புதான்
தூய அன்பு மட்டுமே கிட்டும்

மேலும்

கருத்தில் மகிழ்ந்தேன் நன்றி நண்பரே மணிகண்டன் இனிய காலை வாழ்த்துக்கள் 13-Feb-2021 7:48 am
அன்பு அழகு! வாழ்க வளத்துடன்! 12-Feb-2021 10:42 am
மீ மணிகண்டன் - தாமோதரன்ஸ்ரீ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Feb-2021 12:36 pm

சிரிப்புத்தான் எத்தனை வகை

சிதறி தெறிக்கிறது
இளங்குமரியின் சிரிப்பு
அருகில் எங்கோ
அவளுக்கு பிடித்த
ஆண் மகன்
இருக்கவேண்டும்

பொக்கை வாயால்
பொங்கிய சிரிப்பு
ஓய்வு ஊதியம் அதிகம்
அதிகமாய் வருமென
செய்தி வந்துள்ளது

கெக்கலிட்டு அழைத்த
சிரிப்பு அம்மாவை
ஏமாற்றிய குழந்தை

எதிரே வந்தவன்
தடுக்கி விழ
தடுக்க முடியாத
தவித்திட்ட சிரிப்பு

அதிரவைத்த அதிரடி
சிரிப்பு எதிரே
திரையில் யாரோ
நகைச்சுவையாய் நடிக்கிறார்

அடுக்கடுக்கான சிரிப்பு
ஆனந்த சிரிப்பு
கண்களில் வழியும்
கண்ணீர் சிரிப்பு

சிரிப்பு மட்டும்
நம் வாழ்க்கையையும்
பிறர் மனதையும்
மாற்றும் மருந்து

மேலும்

சிரிப்புகள் சிறப்பு! வாழ்க வளத்துடன்! 12-Feb-2021 10:40 am
மீ மணிகண்டன் - மீ மணிகண்டன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Jan-2018 7:37 am

தமிழர் நாம் !
~~~~~~~~~~~~~~
அன்னம் விளைக்க ஏருழுவோம்
=== அனைவர் புசிக்கப் பயிரிடுவோம்
ஒன்றே குலமாய் யாமிருப்போம்
=== ஒற்றை வீட்டில் குடிவாழ்வோம்

மண்ணைத் தேடி வருவோரை
=== மனதைத் தொடவே அன்பேந்தி
திண்ணை நின்று வரவேற்போம்
=== திகட்டா தறுசுவை விருந்தளிப்போம்

புன்னை நிழலில் விளையாடி
=== புத்தகக் கதைகள் கலந்தாடி
சென்னல வாழ்வை தினம்வாழும்
=== சித்தர் வழிநாம் தமிழரென்போம் !

... மீ.மணிகண்டன்
#மணிமீ
10-Jan-2018

மேலும்

*** தமிழர் திருநாள் வாழ்த்துகள் *** தமிழர் திருநாளில் ஆயிரம் பார்வைகள் தாண்டி வனப்புடன் பயணித்துக் கொண்டிருக்கிறது இப்படைப்பு... படிப்போரும் படைப்போரே பார்வெல்லும் தமிழ் படைப் போரே வாழ்க வளமுடன் #மணிமீ 13-Jan-2018 6:07 pm
மீ மணிகண்டன் - Shyamala Rajasekar அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Dec-2016 8:37 pm

இயலிசை யோடு நாடக மென்ற
***இன்றமிழ் மூன்றினைப் போலே
மயக்கிடும் வேறு மொழியெது முண்டோ
***மதித்திடு தாய்மொழித் தமிழை !
சுயத்துடன் விளங்கும் செம்மொழி தன்னைச்
***சுத்தமாய்க் கலப்பட மின்றி
வியத்தகு வண்ணம் தனித்தமிழ் பேசி
***விளங்கிடச் செய்திடல் நன்றே !

மேலும்

அருமை அன்னையே வாழ்த்துக்கள்.... 03-Dec-2016 9:37 am
கவித்தாசபாபதி அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
19-Mar-2016 11:12 pm

வானம் நடத்தும் வாண வேடிக்கை
புதுமழை விழாவின் பூமத் தாப்பு
முத்துநூல் உதறல் ; முகில்துகில் கிழிசல்
கார்அ ரக்கனின் கோணற் சிரிப்பு
நீலச் சகதியில் நெளியும் வெண்புழு
மேகச் சாம்பலில் மின்னும் வெண்தணல்
உரைகலில் மின்னும் வெள்ளி இரேகை
வினாடியில் வற்றும் வெளிச்ச ஆறு
விண்தோட் டத்தின் வெள்ளிக் கொடிகள்
மழைச்செய்தி கூறும் செய்கை விளக்கு
கருமுகில் இமைகளின் கண்சி மிட்டல்
நீரில் பிறக்கும் நெருப்பு ; நம் இயற்கை
கிறுக்கு கின்ற சுருக்கெழுத் திதுவே





-அப்துல் ரகுமான்

மேலும்

இயற்கையின் சுருக்கெழுத்து. வெண்புழு யாவும் மிக அற்புதம். தான் ரசித்ததை படிக்க பகிரும் ரசிகனின் ரசனை பிரம்மாதம் 27-Mar-2016 10:26 am
அவர் கவிதைகளின் அழகை பாட இன்னும் ஆயிரம் கவிதை புத்தகம் எழுதலாம் 22-Mar-2016 11:52 am
சொல்லவும் வேண்டுமோ அழகை 21-Mar-2016 3:42 pm
மின்னலென ஒளிர்கிறது கவிக்கோ வின் கவிதை !! 21-Mar-2016 9:46 am
கவித்தாசபாபதி அளித்த படைப்பை (public) T. Joseph Julius மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
23-Mar-2016 3:31 pm

ஆடித் திங்கள் பதினெட்டு,
ஆடி யிங்கு கரைதொட்டு,
கூடி நின்ற சனந்தொட்டு,
பாடு தம்மா நதிமெட்டு !

ஊருந் தாண்டி உறவுகள்,
பேருந் தேறி வருவார்கள்,
யாரும் இங்கே இணைவார்கள்,
தேரைக் காண நிறைவார்கள் !

ஆடி நீந்திக் களிப்போடு,
சூட மேந்தி மலரோடு,
பாட நன்றிப் பரிவோடு,
நாடி வாரார் மனதோடு !

அத்தை அம்மான் விருந்தோம்பல்,
பூத்த பெண்மான் உடனாவாள்,
பார்த்து வார்த்தைப் பரிமாறல்,
வேர்த்து நாணும் விடலைகள் !

கம்பு சுற்றும் குதிரைக்கும்,
செம்புக் கம்பி வளவிக்கும்,
நோன்பி ருக்கும் சிறுவர்க்கும்,
தெம்பு சேர்க்கும் கடைக்கூட்டம் !

பச்சை நீலம் பவழத்தில்,
இச்சை கூட்டும் நகைப

மேலும்

அருமை அழகுக்கவி ! 27-Apr-2017 2:20 pm
வாராய் மீண்டும் பதினெட்டே அழகிய பாடல்.உள்ளத்தின் மீட்டல். வாழ்த்துக்கள் 27-Mar-2016 10:31 am
ஆம் ஐயா மணிகண்டனின் இந்த ஏழே கண்ணிகள் கொண்ட ஆடிப்பெருக்கு மனதில் திருவிழா நடத்துகிறது. உறவுகளின் சிலிர்ப்புகள் . மணிகண்டன் மின்னஞ்சல் அனுப்பி பகிர்ந்திருக்கிறார். தங்கள் கருத்தில் மகிழ்ச்சி அடைவார். நானும். 26-Mar-2016 4:30 pm
படிக்க இனித்தது வாயில். அடுத்ததாக வந்த இந்த வரிகள்: சேராய் எம்மை நதியாரே தாராய் நீயும் பதினாறே பேறாய் உன்னை வழிபட்டேன் வாராய் மீண்டும் பதினெட்டே ! -----------------ஏதோ பழைய நினைவுகளில் ஆழ்த்திவிட்டது என்னை! 26-Mar-2016 3:52 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (124)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
user photo

இரா இராஜசேகர்

வீரசிகாமணி , சங்கரன்கோவில
பிரகாஷ் வ

பிரகாஷ் வ

நாமக்கல்
செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (124)

Rajesh Kumar

Rajesh Kumar

கோயம்புத்தூர்
கீத்ஸ்

கீத்ஸ்

கோவை

இவரை பின்தொடர்பவர்கள் (125)

சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே