சுஜய் ரகு - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  சுஜய் ரகு
இடம்:  திருப்பூர்
பிறந்த தேதி :  27-Nov-1979
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  11-Oct-2014
பார்த்தவர்கள்:  982
புள்ளி:  1337

என் படைப்புகள்
சுஜய் ரகு செய்திகள்
சுஜய் ரகு - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Apr-2017 9:53 am

வேருக்கு என்ன தெரியும்
மண் மழை சுகிக்க
வெடிப்புறும் நிலம் சகிக்க
பூ மலர்த்த கனிகள் நவில
உதிர்தல் பொறுக்க
காற்றில் கிளையளாவ
வானளாவிகள் சிறகோய
சிற்றிடம் தர
மேய்பவற்றின் பசியாற்ற
துளையோடி வானளக்க
கூர்மினுங்கும் ஆயுதத்திற்கு
ஏதுவாக வளைந்து கொடுக்க
பின் மண்ணோடு மண்ணாய்
மக்கிப் போக
வேறொன்றும் தெரியும் வேருக்கு
ஒரு எளியோனின்
கவிதைக்கு வேராகவும்

மேலும்

சுஜய் ரகு - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Apr-2017 9:51 am

தினந்தோறும் நடந்து செல்லும்
வழியில் இன்றுதான்
அந்தக் கல்லறையைப் பார்க்கிறேன்
சிலகணங்கள் நின்று லயித்து
பழமையில் சிதிலமுற்ற அது
அருதியாகிவிட்டக் காட்டை
சொற்பமாய்த் தம்மைச் சுற்றிலும்
வளர்த்து வைத்திருக்கிறது
அந்திப் புழுதியோடு வேகமாய்
வந்த காற்று கூட
அதன் பேரமைதிக்கு பங்கமின்றிக்
கடந்தது ஆச்சர்ய தருணம்
என்றோ முடிந்த ஒரு
பெருவாழ்வு இன்னும் அங்கே
உயிர்த்திருக்கிறதை சட்டென்று
உணர்ந்த கணம் இதுவரை
கிட்டிவிடாத அலாதி
இனி அக்கல்லறையின்றி
ஒருபோது அவ்வழிப் பாதை கடக்காது
அறியாத ஒருவருடைய வாழ்வு
நிழல் போலத் தொடரும்
அது அமானுஷ்யமல்ல
என்னை எனக்கு உணர்த்தும்
இறந்த ஒரு வாழ

மேலும்

சுஜய் ரகு - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Dec-2016 4:24 pm

மழை மாலை வேளை
தெரு நனைந்து கொண்டிருந்தது
தண்ணீர் துறவிகளின் தவம்
வீதிதோறும்
மழைபோலில்லை எவர்க்கும்
ஈரம்
***
இன்றலர்ந்த பெருமழை
"நடா"வின் இயல்புதான்
எனினும்
தெரு வாசிகளின் முகத்தில்
நாசகால பீதி
***
குடைகளாய்க் காற்றாடி
நனைந்து நடந்தோம் நானும்
மனப்பிறழ்வாளனும்
அவன் பழைய கந்தல் குடை
நான் புதிய கந்தல் குடை
***
சாக்குப் பை போர்த்தி
சிறுநீர் கழிக்கும் சிறுவன்
கருங்குருவி ஒன்றின் ஓங்குகுரல்
நனைந்தொழுக நடக்கும்
மாட்டின் மணியோசை
சோவென மழையின் இசைமையும்
***
சாலையோரச் சிறுகுடிலில்
கூடைமுடையும்
வயோதிகத் தம்பதியரின்
"மும்மூரம்"
பெய்யும் மழையினிடத்தும்

மேலும்

சுஜய் ரகு - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Sep-2016 9:06 am

ஒரு செம்மறியை அதன் நேர்பார்வையில்
சந்திக்கிறேன் குழந்தைமை பேசுமதன்
கண்களின் மெல்லிய அழுத்தமும் கனிவும்
என்னவோ செய்கிறது என்னை
நன் கணம் கிளைத்த அப்பார்வையின்
ஈர டவல்கொண்டு மனம் ஒற்றுகிற தருணம்
அது மேயத் தலை தாழ்த்துகிறது
மீண்டும் அக்கண்களைச் சந்திக்க
முன்னெடுத்த பரீட்சையில்
நான் தோற்றுக் கொண்டிருக்க
எங்கிருந்தோ வந்த ஆட்டிடையன் அதை
ஓட்டிக்கொண்டு போய்விடுகிறான்
என்னுள் மேய்ந்து தணிகிறது ஆடு

மேலும்

அருமை 30-Nov-2017 10:20 am
வாழ்க்கை எனும் புல் தோட்டத்தை தரிசாக மாற்றுகிறது மேயும் சுமைகள் 24-Sep-2016 10:43 am
கவித்தாசபாபதி அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
03-Sep-2016 1:39 am

வழியெலாம் மறுத்த நியாயங்களை
வார்த்தை களின்றியே கற்பிப்பாள்;
மொழியெலாம் மறைத்த கவிதைகளை
மழலை இசையில் ஒப்பிப்பாள்;
அழைத்த குரலுக்கு வரமாட்டாள்
அம்மாவை அதட்ட துணைக்கிழுப்பாள்
குழைந்து கேட்டால் தரமாட்டாள்-பின்
குறும்பாய் முத்தக் கனி கடிப்பாள்;
பிரிய தேவதை என்றாலும்
பேய்க்கதை கேட்டு அடம் பிடிப்பாள் ;
பாதிக் கதையில் நான் தூங்க
போர்வையைத் தாயென போர்த்திவைப்பாள்;
கண்ணா மூச்சி ஆடவைத்து
கவலைப் பூச்சிகளைத் துரத்திவைப்பாள் -தினம் தினம்
காணாமல் தொலையும் வாழ்க்கையைக்
கண்ணோரம் காட்டி ரசிக்கவைப்பாள்;
சித்திரக் கூடம் அவள்சுவர்கள்
சொர்க்கங்கள் நிறையும் அவள்தடங்கள்
எத்தனை ந

மேலும்

மழலைகள் வாழ்க்கையில் அன்பெனும் உயிரோட்டமான காவியத்தை எழுதிடும் மொழிகளே! 04-Sep-2016 11:09 pm
மிக்க நன்றி 03-Sep-2016 4:30 pm
மிக்க நன்றி 03-Sep-2016 4:29 pm
எனக்கும் அது பிடித்திருந்தது மிகவும் மிக்க நன்றி ஐயா 03-Sep-2016 4:29 pm
நிலாகண்ணன் அளித்த படைப்பில் (public) Kalaracikan Kanna மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
04-Jul-2016 4:39 pm

நாம் எழுதிய
காதல் கவிதையை
இந்த சாதி
எத்தனை ஏளனத்தோடு
வாசித்தது
எத்தனை முறை
உமிழ்ந்தது.
எத்தனை
துண்டுகளாகக்கிழித்தது.
என்பதை
தண்டவாளத்துக்கு
தப்பிய நம் தலைகள் அறியும்
இத்தனை
வருடங்கள் கடந்தும்
அந்த கவிதையை
மனைவியறிய
மையூத்தி நானெழுதிக்கொண்டிருக்கிறேன்.
எங்கோ
கணவன் அறியாமல்
கண்ணீர் விட்டு நீயெழுதிக்கொண்டிருப்பாய்.
நம்மை அறியாமலே
நமக்கிடையே
ஓடும்
ஓற்றையுணர்வு இரயிலில்
தினமும் அடிபட்டு
இனிதே
செத்துக்கொண்டிருக்கும் நம்சாதிகளிரண்டும்

நிலாகண்ணன்

மேலும்

நன்றிகள் விஜய் 04-Aug-2016 12:14 pm
நன்றிகள் சர்பான் 04-Aug-2016 12:14 pm
நன்றிகள் ரகு 04-Aug-2016 12:13 pm
மிக்க நன்றியும் அன்பும் அஜீத் 04-Aug-2016 12:13 pm
நிலாகண்ணன் அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
04-Jul-2016 4:39 pm

நாம் எழுதிய
காதல் கவிதையை
இந்த சாதி
எத்தனை ஏளனத்தோடு
வாசித்தது
எத்தனை முறை
உமிழ்ந்தது.
எத்தனை
துண்டுகளாகக்கிழித்தது.
என்பதை
தண்டவாளத்துக்கு
தப்பிய நம் தலைகள் அறியும்
இத்தனை
வருடங்கள் கடந்தும்
அந்த கவிதையை
மனைவியறிய
மையூத்தி நானெழுதிக்கொண்டிருக்கிறேன்.
எங்கோ
கணவன் அறியாமல்
கண்ணீர் விட்டு நீயெழுதிக்கொண்டிருப்பாய்.
நம்மை அறியாமலே
நமக்கிடையே
ஓடும்
ஓற்றையுணர்வு இரயிலில்
தினமும் அடிபட்டு
இனிதே
செத்துக்கொண்டிருக்கும் நம்சாதிகளிரண்டும்

நிலாகண்ணன்

மேலும்

நன்றிகள் விஜய் 04-Aug-2016 12:14 pm
நன்றிகள் சர்பான் 04-Aug-2016 12:14 pm
நன்றிகள் ரகு 04-Aug-2016 12:13 pm
மிக்க நன்றியும் அன்பும் அஜீத் 04-Aug-2016 12:13 pm
நிலாகண்ணன் அளித்த படைப்பில் (public) Kalaracikan Kanna மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
04-Jul-2016 4:47 pm

நான் வளர்க்கும்
இரு நாய்குட்டிகள் சேர்ந்து
எங்கிருந்தோ
ஒரு நாய்குட்டியை தூக்கிக் கொண்டுவந்து நின்றனர்.

அப்பா இத நாமளே
வளர்க்கலாம்பா
பாவம்பா
பேருகூட வச்சுட்டோம்பா
என்று அன்போடும்
மனித நேயத்தோடும்
இறைஞ்சி நின்றனர்
அவர்கள்
வைத்த பெயருக்காகவே
அதை வாழ்கைக்குள் சேர்த்துக்கொண்டோம்

என்ன பெயரென்று
கேட்காதீர்கள்.

ஏனென்றால்
அது
உங்களுடைய கடவுளுக்கு
நீங்கள் வைத்த
பெயராகவும் இருக்கலாம்.

- நிலாகண்ணன்

மேலும்

மிக்க நன்றிகள் தோழரே 04-Aug-2016 12:12 pm
மிக்க நன்றிகள் ரகு 04-Aug-2016 12:12 pm
மிக்க நன்றிகள் சர்பான் 04-Aug-2016 12:11 pm
மிக்க நன்றிகள் தோழரே 04-Aug-2016 12:11 pm
சுஜய் ரகு - நிலாகண்ணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Jul-2016 4:47 pm

நான் வளர்க்கும்
இரு நாய்குட்டிகள் சேர்ந்து
எங்கிருந்தோ
ஒரு நாய்குட்டியை தூக்கிக் கொண்டுவந்து நின்றனர்.

அப்பா இத நாமளே
வளர்க்கலாம்பா
பாவம்பா
பேருகூட வச்சுட்டோம்பா
என்று அன்போடும்
மனித நேயத்தோடும்
இறைஞ்சி நின்றனர்
அவர்கள்
வைத்த பெயருக்காகவே
அதை வாழ்கைக்குள் சேர்த்துக்கொண்டோம்

என்ன பெயரென்று
கேட்காதீர்கள்.

ஏனென்றால்
அது
உங்களுடைய கடவுளுக்கு
நீங்கள் வைத்த
பெயராகவும் இருக்கலாம்.

- நிலாகண்ணன்

மேலும்

மிக்க நன்றிகள் தோழரே 04-Aug-2016 12:12 pm
மிக்க நன்றிகள் ரகு 04-Aug-2016 12:12 pm
மிக்க நன்றிகள் சர்பான் 04-Aug-2016 12:11 pm
மிக்க நன்றிகள் தோழரே 04-Aug-2016 12:11 pm
நிலாகண்ணன் அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
04-Jul-2016 4:33 pm

நாம்மை
யாராவது
பார்த்துவிடுவார்களோ
என்ற பயத்திலே
நாம்
பேசிக்கொள்வதில்லை.!

காதல் கடிதங்களை
நம் நண்பர்களின்
கைகளில்
கட்டியனுப்பிக்
கொண்டோம்.

நீ கொடுத்தனுப்பும்
கடிதம் உன் தோழி வழி
என் தோழன் வழி
என்னைச்சேர
இரு நாட்கள் ஆகும்..

செல்போன் டவர்கள்
இல்லாத வானத்தை
நான்காய் மடித்து
அனுப்பிவைப்பாய் நீ.!

அந்தச் சதுர வானத்தை
சட்டைப்பையில்
வைத்துக்கொண்டு
பூமியில் மிதப்பேன் நான்.!

நிறைந்த கடிதங்களில்
ஒன்று உன்
அப்பாவை எட்டிப் பார்த்துவிட
இரண்டு துண்டானது
காதலும் கடிதமும்..

தாவணி
கட்டவே குறிப்பெழுதி
வைத்திருந்த உன்னை,
சேலையில் சுத்தி
பார்சல் செய்துவிட்டார்க

மேலும்

காலம் தான் காதலின் இருப்பையும் தீர்மானிக்கிறது 05-Jul-2016 5:27 am
அந்தச் சதுர வானத்தை சட்டைப்பையில் வைத்துக்கொண்டு பூமியில் மிதப்பேன் நான்.! மிக நல்ல வரிகள் நண்பா !! 04-Jul-2016 6:03 pm
செல்போன் டவர்கள் இல்லாத வானத்தை நான்காய் மடித்து அனுப்பிவைப்பாய் நீ.! அந்தச் சதுர வானத்தை சட்டைப்பையில் வைத்துக்கொண்டு பூமியில் மிதப்பேன் நான் !! ரசனை அருமை !! ரசித்து ரசித்து வாசித்து ருசித்தேன் !! வாழ்த்துக்கள் !! 04-Jul-2016 5:12 pm
சுஜய் ரகு - நிலாகண்ணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Jul-2016 4:33 pm

நாம்மை
யாராவது
பார்த்துவிடுவார்களோ
என்ற பயத்திலே
நாம்
பேசிக்கொள்வதில்லை.!

காதல் கடிதங்களை
நம் நண்பர்களின்
கைகளில்
கட்டியனுப்பிக்
கொண்டோம்.

நீ கொடுத்தனுப்பும்
கடிதம் உன் தோழி வழி
என் தோழன் வழி
என்னைச்சேர
இரு நாட்கள் ஆகும்..

செல்போன் டவர்கள்
இல்லாத வானத்தை
நான்காய் மடித்து
அனுப்பிவைப்பாய் நீ.!

அந்தச் சதுர வானத்தை
சட்டைப்பையில்
வைத்துக்கொண்டு
பூமியில் மிதப்பேன் நான்.!

நிறைந்த கடிதங்களில்
ஒன்று உன்
அப்பாவை எட்டிப் பார்த்துவிட
இரண்டு துண்டானது
காதலும் கடிதமும்..

தாவணி
கட்டவே குறிப்பெழுதி
வைத்திருந்த உன்னை,
சேலையில் சுத்தி
பார்சல் செய்துவிட்டார்க

மேலும்

காலம் தான் காதலின் இருப்பையும் தீர்மானிக்கிறது 05-Jul-2016 5:27 am
அந்தச் சதுர வானத்தை சட்டைப்பையில் வைத்துக்கொண்டு பூமியில் மிதப்பேன் நான்.! மிக நல்ல வரிகள் நண்பா !! 04-Jul-2016 6:03 pm
செல்போன் டவர்கள் இல்லாத வானத்தை நான்காய் மடித்து அனுப்பிவைப்பாய் நீ.! அந்தச் சதுர வானத்தை சட்டைப்பையில் வைத்துக்கொண்டு பூமியில் மிதப்பேன் நான் !! ரசனை அருமை !! ரசித்து ரசித்து வாசித்து ருசித்தேன் !! வாழ்த்துக்கள் !! 04-Jul-2016 5:12 pm
நிலாகண்ணன் அளித்த படைப்பை (public) நிலாகண்ணன் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
19-Jun-2016 9:38 am

அவ்வனத்தில்
பாடும் பறவையையோ

பேரிரைச்சலோடு
சோவெனக்
கொட்டிக்
கொண்டிருக்கும் அருவியையோ

பூ நகரும்
நதியினையோ
பின்தொடரும் வண்ணத்துப்
பூச்சியையோ

தொன்மத்தின் விழுதாடும் பெருமரங்களையோ

பெருமரங்கள் கொண்ட
சிறுகூடுகளையோ

கிளை
தாவிக்கொண்டிருக்கும்
என் உறவுகளையோ

நான் பேன்
பார்த்துக்கொண்டிருந்த
என் பேரன்பையோ

காடு சேர்த்த
இந்த கனவையோ

கனவு சேர்த்த
இந்த உறக்கத்தையோ

அவ்வனத்தின்
யவ்வனத்தையோ

வில(ள)ங்கிட
முடியாதுனக்கு

உன் விலங்கின்
நீளம் நீதரும் சுதந்திரத்தை விட

அக்கனவு
அவசியமாகிறது

- நிலாகண்ணன்

மேலும்

அருமையான கவிதை. 24-Sep-2016 7:55 am
படமும் கவியும் போட்டிபோட்டு ரசிக்கவைப்பதோடு சில கணங்கள் நின்று யோசிக்க வைக்கிறது !! அருமை !! 04-Jul-2016 6:01 pm
அழகான படைப்பு...! வாழ்த்துக்கள்....! 27-Jun-2016 10:28 pm
நலம் தம்பி .. நெறைய பேர மிஸ் பண்றேன்.. ! 21-Jun-2016 10:42 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (67)

கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.
ப திலீபன்

ப திலீபன்

பெங்களூரு
சகா சலீம் கான்

சகா சலீம் கான்

சென்னை/ஆர்.எஸ்.மங்கலம்
நரசிம்மன்

நரசிம்மன்

மயிலாடுதுறை
நிஷாந்த்

நிஷாந்த்

வேலூர்

இவர் பின்தொடர்பவர்கள் (67)

வடிவேலன்-தவம்

வடிவேலன்-தவம்

திருச்சி
சகா சலீம் கான்

சகா சலீம் கான்

சென்னை/ஆர்.எஸ்.மங்கலம்

இவரை பின்தொடர்பவர்கள் (68)

faheema

faheema

sri Lanka
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
ராம் மூர்த்தி

ராம் மூர்த்தி

ஹைதராபாத்

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே